Saturday 5 April 2014

தடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!- புலம்பெயர் அமைப்புக்கள்

இலங்கை அரசாங்கத்தின் தடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. இலங்கை அரசாங்கத்தினால் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், நாடு கடந்த தமிழீழ இராச்சியம் உள்ளிட்ட பதினாறு அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

தடை செய்யபபட்ட அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளன.

அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாக புலம்பெயர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தமது அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புக்களாக அடையாளப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கையை சர்வதேச சமூகம் நிராகரிக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியம் கோரியுள்ளது.

தமிழீழ இராச்சியத்தை பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் அனைவரினதும் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய தமிழர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் தடையை திட்டவட்டமாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.

ஜெயலலிதா பிரதமாரானால் இந்தியா வல்லரசாகும் : மதுரை ஆதீனம்

திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் உதயகுமாரை ஆதரித்து சின்னாளப்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் அதிமுகவுக்கு ஆதரவாக மக்களிடம் பேசினார்.

இதன் போது, ஜெயலலிதா இந்தியாவின் பிரதமரஆல் இந்தியா வல்லரசாகும். 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவே வேட்பாளர் என்ற எண்ணத்தில் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் பேசினார்.

ஆன்மிக பணி செய்ய வேண்டிய மதுரை குருமகா சன்னிதானம் இன்றைக்கு இரட்டை இலை சின்னத்தை காட்டி ஓட்டு கேட்கிறது என்றால், அதற்கு காரணம் உள்ளது. இந்த நாட்டின் குடிமகன், ஒரு வாக்காளன் என்ற முறையில் எங்களுக்கும் சமுதாயத்தின் மேல் அக்கறை உள்ளது. சமுதாயம் நன்றாக இருந்தால் தான் கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் நன்றாக இருக்கும். சமூகத்தில் வாழும் அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் ஒற்றுமையுடன் வாழ முடியும். ஆனால் இன்றைக்கு சமூகம் பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவிக்கிறது.

நாட்டில் பயங்கரவாதம், தீவிரவாதம் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இலங்கை, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இந்திய நாட்டை வெளிநாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்தும், சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்தும் காப்பாற்ற கூடிய திறனும், ஆளுமையும் உள்ள ஒரே தலைவி ஜெயலலிதா தான், ஜெயலலிதா பிரதமர் ஆனால் தான் இந்த நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும், வல்லரசாக ஆக்க முடியும் என்பதை உணர்ந்து தான் எங்களது சன்னிதானம் அ.தி.மு.க.வை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறோம்.

தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதா பிரதமரானால் கச்சத்தீவை மீட்டெடுப்பார், இலங்கை தமிழர்களை கொன்று குவித்த போர் குற்றவாளி ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை இந்திய பாராளுமன்றத்திலும் நிறைவேற்றுவார். தமிழ் மொழி உயர்ந்த மொழி என்பதையும் நிலைநாட்டுவார். தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பார்,. நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும், நதிகளை தேசியமயமாக்குவார். விலைவாசியை கட்டுப்படுத்த கூடிய திறனும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கூடிய தெம்பும் அவருக்கு தான் உண்டு.

இந்திய நாடு வளம் பெற, வளர்ச்சி பெற, அமைதி நிலவ ஒவ்வொரு தமிழனும், தமிழச்சியும், நாட்டை பாதுகாக்க, பொருளாதார சீர்குலைவை தடுக்க பயங்கர வாதம் ஒடுக்கப்பட, விலைவாசியை கட்டுப்படுத்த, 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவே வேட்பாளர் என்ற எண்ணத்தில் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு மதுரை ஆதினம் பேசினார்.

ராஜபக்சே நண்பர் படத்தில் விஜய் நடிப்பதா?

ழத்தமிழரைச் சித்தரிக்கும் சந்தோஷ் சிவனின் ’இனம்’ திரைப்படத்துக்கு தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க... மார்ச் 31-ம் தேதியுடன் அப்படத்தை வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவித்தார், படத்தின் தமிழக வெளியீட்டாளரான லிங்குசாமி. இந்த நிலையில், விஜய் நடிக்கும் "கத்தி' படத்தின் மூலம் இன்னொரு சர்ச்சை பெரிதாகியுள்ளது. 


ஈழ இனப் படுகொலையாளி ராஜபக்சேவுக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர்தான், "கத்தி' படத்தின் தயாரிப்பாளர் என்பது சர்ச்சைக்கான காரணம். பணத்துக்காக இனக் கொலையாளியின் கூட்டாளி படத்தில் விஜய் நடிக்கலாமா என பல நாடுகளிலும் தமிழின உணர் வாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  "துப்பாக்கி' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் முருகதாசும் விஜய்யும் இணைந்துள்ள படம் "கத்தி'. விநியோகஸ் தர்கள் மத்தியில் ஆர்வத் தைத் தூண்டிய இந்தப் படத்தை, ஈழத்தமிழர் நிறுவனமான ஐங்கரன் இண்டர்நேஷனல்தான் தயாரிப்பதாக முதலில்  அறிவிக்கப்பட்டது. ஆனால், கல்கத்தாவில் "கத்தி' ஷூட்டிங்கும் தொடங்கிவிட்ட நிலையில்... இன்னொரு ஈழத்தமிழர் நிறுவனமான ’லைக்கா மொபைல்’கம்பெனியும் இந்தப் படத் தயாரிப்பில் இணைவதாக அறிவிக்கப் பட்டது. ஈழத்தமிழர்கள் மத்தியில் இது கடும் அதிருப்தியையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. 

லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லி ராஜா என்பவர், இனப் படுகொலையாளி ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பது புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு நன்றாகவே தெரிந்தது தான். ராஜபக்சேவின் மூலம் இலங்கையில் 2007-ல் 2ஜி உரிமம் பெற்றது, லைக்கா கம்பெனியின் லைக்காஃப்ளை-க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தின் ஏஜென்சி வாங்கியது என அடுத்தடுத்து, அல்லிராஜா பலாபலன்களைப் பெற்றுவருகிறார் என்றும் இதற்காக சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட இங்கிலாந்து தமிழ் மாணவர் அமைப்புகளுக்கு மாதம் 5 ஆயிரம் பவுண்டுகள் தருகிறார் என்றும் விவரங்களை அடுக்குகிறார்கள், இன உணர்வாளர்கள்.


""எங்கட மக்களைக் கொன்னு குவித்த ராஜபக்சேவுக்குத் துணைபோகும் சுபாஷ்கரன் அல்லிராஜா, ஒரு தமிழன். அவருடைய தந்தையார் அரிசி ஆலை வைச்சிருந்தார். அவர் எங்கட மக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தை வலுப்படுத்த, நிதி திரட்ட பிரான்சுக்குப் போனார். போனவர் ஐரோப்பா முழுமைக்கும் தன்னோட வியாபாரத்தை விரிவுப்படுத்தினார். இனப்படுகொலைக்குப் பிறகே இலங்கைக்கு வந்தார். அரச பாதுகாப்போடு, இலங்கை அமைச்சர் சனத் ஜெயசூர்யாவோடு உலா வந்தார். அப்போதுதான் எங்களுக்குத் தெரிந்தது. எங்களால் வாழ்வு பெற்ற ஒருவர், எங்களின் அழிவுக்குக் காரணமான ஒருவரோடு வந்தார் என்றால் அவரும் இனத்துரோகியே! பத்தாத குறைக்கு, தமிழனாகப் பிறந்து ராஜபக்சேவிற்கு ஜால்ரா அடித்து வாழும் முத்தையா முரளிதரனுக்கு பாராட்டும், பணமும் கொடுத்தவர். எங்கள் இனத்திற்கு எதிராக யார் இருந்தாலும் அவருக்கு ஆதரவு தருவது அல்லிராஜாவோட வேலை. இப்போ விஜய்யை வைத்து படம் தயாரிக்கிறார். பணத்திற்காக துரோகியானவரின் தயாரிப்பில் விஜய் நடிக்கக்கூடாது. அவரின் படத்தில் விஜய் நடித்தால் அவரும் துரோகியே! பணம் தான் வேண்டுமென்றால் சொல்லுங்கள்... பிச்சை எடுத்தாவது கொண்டுவந்து கொட்டுகிறோம் என விஜய்க்கும் கடிதம் எழுதியுள்ளோம். படத்திலிருந்து விலகாவிட்டால் விஜய்க்கு எதிராக போராட்டம் நடத்துவோம்'' என்றார் இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கோயில் பூசகர், அம்பாறை நிரஞ்சன். 


லைக்கா நிறுவனத்தின் செயல் அலுவலர் ரவீந்திரனிடம் இதுபற்றி கேட்டதற்கு, ""எங்கள் குழுமத்தின் ஒரு அங்கம்தான், இந்த படத் தயாரிப்பு நிறுவனமும். சனத் ஜெயசூர்யா எங்கள் சேர்மனின் நண்பர், அவ்வளவே. எங்களை இனத்துரோகி என்று ஒரு சிலர்தான் சொல்கிறார்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஞானம் அறக்கட்டளை மூலம் அரசு தரப்போடு இணைந்து போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, உதவிகளைச் செய்துள்ளோம். இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை'' என்றார், கவனமாக. நடிகர் விஜய் தரப்போ, இந்தப் பிரச்சினையில் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!.


nakkheeran

அழகிரியை சந்தித்தது ஏன்? பரபரப்பு தகவல்களுடன் கனிமொழி

மு.க.அழகிரியுடன் பேசியது குறித்த விவரத்தை கனிமொழி வெளியிட்டுள்ளார்.

திமுக கட்சியிலிருந்து முக அழகிரி நீக்கப்பட்ட பிறது கனிமொழி அவரை சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அழகிரியுடன் பேசியது தொடர்பாக கனிமொழி அளித்த பேட்டியில்,

கேள்வி: கடந்த வாரம் மு.க.அழகிரி உங்களை சந்தித்தார். அதன் நோக்கம் என்ன?

பதில்: அவர் ஒரு சகோதரராக என்னை வந்து சந்தித்தார்.

கேள்வி: கட்சியில் இருந்து நீக்கப்பட்டது பற்றி விவாதித்தாரா?

பதில்: உடல்நலம் பற்றி மட்டுமே விசாரித்தார்.

கேள்வி: தேர்தல் கருத்து கணிப்புகளில் மற்ற கட்சிகளை விட அதிமுக தான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

பதில்: தேர்தல் கருத்து கணிப்பில் முதலில் அதிமுகவுக்கு 39 தொகுதிகள் கிடைக்கும் என்றார்கள். பின்னர் அது 18 அல்லது 20 ஆக குறைந்தது. திமுக தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்யத் தொடங்கியதும் அது மேலும் குறைந்து விடும்.

கேள்வி: 2 ஜிஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுபோல் திமுக முன்னாள் மத்திய மந்திரிகள் மீதும் புகார் கூறப்பட்டது. இதனால் இந்த தேர்தலில் திமுகவின் மதிப்பு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டுக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் உண்மை வெளியே வரும்.

இதில் திமுகவை மட்டும் ஏன் குறி வைத்து கேட்கிறீர்கள். பெங்களூர் விசேஷ கோர்ட்டில் நடைபெறும் சொத்து குவிப்பு வழக்கு என்ன ஆச்சு? மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும்.

கேள்வி: திமுக வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் கோடீஸ்வரர்கள், புதுமுகங்களாக இருக்கிறார்கள். பணத்தால் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று திமுக நம்புகிறதா?

பதில்: அது தவறு. ஒன்று அல்லது இரண்டு வேட்பாளர் வேண்டுமானால் வசதி படைத்தவர்களாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் எளிமையான பின்னணி கொண்டவர்கள். கட்சித் தலைமை அவர்களின் உழைப்பு, திறமையை எடை போட்டு வேட்பாளர்களாக தெரிவு செய்துள்ளது.

கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுகவின் நிலைப்பாட்டில் முரண்பாடுகள் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?பதில்:  இலங்கை பிரச்சினை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இருமுறை இந்தியா ஆதரித்து வாக்களித்துள்ளது.

இப்போது மத்திய அரசு புறக்கணித்துள்ளது. இது எதைக்காட்டுகிறது. மத்திய அரசில் இருந்தபோது திமுகவின் நெருக்குதல் காரணமாக இருமுறை ஆதரித்த இந்தியா இப்போது மாறி இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும் திமுக எப்போதும் போராடும்.

கேள்வி: நீங்கள் எதை மையமாக வைத்து பிரசாரம் செய்வீர்கள்?

பதில்:  தவறான நிர்வாகம், தமிழக அரசின் தோல்வி ஆகியவற்றை முன்நிறுத்தி பிரசாரம் செய்வேன். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 13 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைந்துள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலையும் மின்சார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் தமிழகத்துக்கு வர தயங்குகிறார்கள்.

கேள்வி: முந்தைய திமுக அரசின் தவறான செயல்பாடுகள் தான் தமிழ் நாட்டில் மின்சார பற்றாக் குறைக்கு காரணம் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளாரே?

பதில்:  திமுக ஆட்சியில் பல புதிய திட்டங்களை கருணாநிதி தொடங்கினார். தற்போதைய ஆட்சியில் எந்த திட்டம் தொடங்கப்பட்டது என்று சொல்ல முடியுமா? கடந்த 3 ஆண்டுகளில் எந்த மின்சார திட்டமாவது முழுமையாக செயல்படுத்தப்பட்டு உள்ளதா?

ஒரு அரசாங்கத்தின் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். ஆனால் அதிமுக அரசு முந்தைய திமுக அரசின் திட்டங்களையெல்லாம் நிறுத்தி வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

ஜெனிவா மனித உரிமை சபையில் கோமாளிகள் கும்மாளமும், நாசகாரவேலையும் - ச.வி.கிருபாகரன்

பல ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள், வாக்குவாதங்கள், நாசகார வேலைகளுடன், அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா மீதான கண்டனப் பிரேரணைக்கு சார்பாக 23 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும், நடுநிலையாக 12 வாக்குகளுடன் ஐ. நா. மனித உரிமை சபையின் 25வது கூட்டத் தொடரில் வெற்றிகரமாக நிறைவேறியது.

சார்பாக நிச்சயம் 23 வாக்குகள் கிடைக்குமென வாக்கெடுப்பிற்கு இரு தினங்களுக்கு முன்னர் ஒரு செவ்வியி;ல் குறிப்பிட்டிருந்தேன்.

இதேவேளை கடந்த ஜனவரி மாதத்திலேயே, இப் பிரேரணை நிச்சயமாக எவ்வித சந்தேகமும் இல்லாது வெற்றிபெறும் என ஆரூடம் கூறியிருந்தது சகலருக்கும் நினைவிருக்கலாம்.

இவ் தீர்மானம் பற்றி நாம் ஆராயுமிடத்தில், உண்மையில் இவ் தீர்மானத்திற்கு சார்பாக 23 வாக்குகள் அல்ல  25க்கு மேற்பட்ட நாடுகள் வாக்களித்திருக்க வேண்டும்.

ஆனால் கடந்த பாரளுமன்றத் தேர்தலில் மிகவும் படுதோல்வியடைந்த தமிழ் கட்சியை சார்ந்த நான்கு கோமாளிகள், ஜெனிவாவிற்கு வந்து செய்த கும்மாளத்தினாலும் நாசகார வேலைகளினாலும் 23க்கு மேல் எந்த நாடும் சார்பாக வாக்களிக்கவில்லை.

இத் தீர்மானத்தில் இவர்கள் நிலைப்பாடு என்பது, சிறிலங்கா அரசிற்கு உரம் சேர்த்தது மட்டுமல்லாது, சர்வதேச சமுதாயத்திடம் இந்த தீர்மானம் எந்த பிரயோசனமும் அற்றது எனக் கூறியதுடன், இத் தீர்மானத்தை முன்மொழிந்த அமெரிக்க, பிரித்தானியா போன்ற நாடுகளை ஏளனமும் செய்தார்கள்.

பிழை காண்பதே வேலை

இதில் வேடிக்கை என்னவெனில், இவர்களது மறைமுக நிலைபாட்டிற்கும், ஜனதிபதி ராஜபக்சவின் வெளிப்படையான நிலைப்பாடுகளிற்கு இடையில் எந்தவித வேறுபாடுகளையும் நாம் காண முடியாது.

காரணம், தமிழ் வாக்காளர்களில் 5000 பேர் தவிர்ந்த வேறு யாரும் தமக்கு வாக்களிக்காததினால், அவர்கள் தொடர்ந்து பல இன்னால்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமென்பதற்காக, தொட்டதற்கெல்லாம் சாட்டு போக்கு கூறுவதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிழை காண்பதையே இவர்கள் தமது கடமையாக கொண்டுள்ளனர்.

இவர்கள் தேர்தலில் தோல்வியுற்ற காலம் முதல் இன்று வரை தமிழ் மக்களுக்கு எதையும் உருப்படியாக செய்தது கிடையாது.

ஜனதிபதி ராஜபக்ச வெளிப்படையாக கூறுவது என்னவெனில், வடக்கு கிழக்கு வாழ் மக்கள் யாரும் எனக்கு வாக்களிக்கவில்லை, ஆகையால் நான் ஏன் அவர்களைப்பற்றி அக்கறை கொள்ள வேண்டும் என்பதே.

யாழிலிருந்து ஜெனிவா வந்த இக் கோமளிகள், ஐ. நா.வில் அடித்த கும்மாளத்திற்கும் செய்த நாசகார வேலைகளுக்கு பல சாட்சிகள் உண்டு. இது பற்றி எழுதுவதானால் பல பக்கங்கள் எழுதலாம்.

வேடிக்கைகள்

ஆங்கிலம் தெரிந்தவர்கள், சட்டம் படித்தவர்கள்,  படிப்பிப்பவர்கள் எல்லாரினாலும்,  ஐக்கிய நாடுகள் சபையினால் முன் வைக்கப்படும் பிரேரணைகளை புரிந்து கொள்ள முடிகிறதா என்பது சந்தேகத்திற்குரியது.

இவர்கள் ஜெனிவாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை குறை சொல்வதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரிவுபடுத்துவதற்கான வேலைகளையும் மேற்கொண்டார்கள்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ தீர்மானத்தை ஆதரிப்பதற்காக> இவர்கள் சில விசமத்தானமான குறைகளை கூறி தம்முடன் இத்தீர்மானத்தை எதிர்பதற்கென ஒரு குழுவை திரட்டீனார்கள்.

மக்களுக்கு சுயநிர்ணய உரிமையின் பாதுகாவலர்களாக முகம் காட்டும் இவர்களில் ஒருவர்> ஐ. நா. மனித உரிமை சபையின்> சிறுபான்மையினருக்கான உரிமை என்ற நிசழ்ச்சி நிரலுக்கு கீழ் உரையாற்றுவதற்கு தனது பெயரை பதிவு செய்து கொண்டார்.

இவ் நிகழ்ச்சி மனித உரிமை சபையில் காலம் கடத்தி 20ம் திகதி நடந்த காரணத்தினால்> கோமாளிகளது பத்திரிகையாளர் மாநாடு எனப்படும் பிரச்சார கூட்டமும்> சிறுபான்மை விடயமும் ஒரே நாளில் நடைபெற்ற காரணத்தினால்> இவர் சபையில் உரையாற்றுவதை தவிர்ந்து கொண்டார்.

தற்செயலாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் இச் செயலில் ஈடுபட முன்வந்திருந்தால்> சுயமாக சிந்திக்க முடியாத தமது சில புலம் பெயர் தேசத்து சகாக்கள் மூலம்> இவ் விடயத்தை காட்டு தீபோல் பரப்பி> தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு கரி பூச முனைந்திருப்பார்கள்.

இவர்கள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற் திட்டத்தில்> சுயநிர்ணய உரிமைக்கான விடயம் இல்லையென நொண்டிச் சாட்டு கூறி கூட்டமைப்பிலிந்து விலகியவர்கள்.

நாம் இவ்விடயம் மூலம்> மக்களது அரசியல் நிலைமைகளை அங்கு கூறுகிறோம் என்பதை நாம் மறைக்கவில்லை. ஆனால் நாங்கள் யாரும் சுயநிர்ணய உரிமையின் பாதுகாவலர்களாக மக்களுக்கு ஒரு பொழுதும் நடித்தது கிடையாது.

சர்வதேச பௌத்த நிறுவனம்

ஐ. நா. மனித உரிமை சபை நடைபெற்றவேளையில்> மார்ச் 20ம் திகதி> ராஜபக்சா அரசிற்கு ஆதரவான> “சர்வதேச பௌத்த நிறுவனம்” எனும் சிங்களவர்களினால் நடாத்தபடும் அமைப்பு> ஓர் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. இவ் கூட்டம் பற்றி> 25வது கூட்ட அமர்வு ஆரம்பமாகிய மார்ச் 3ம் திகதியே பலருக்கு தெரியும். ஆனால் இக்கூட்டம் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே> ஐ. நா.வின் விளம்பரம் மூலம் சகலரும் அறிவார்கள்.

ஆனால் இக் கோமாளிகள்> சர்வதேச பௌத்த நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட அதே தினத்தில் அதே நேரத்திற்கு> ஐ. நா. மண்டபத்திற்கு வெளியில் ஒரு பத்திரிகையாளர் மாநாடு எனப்படும்> தமது பிரச்சாரக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள்.

இதனால் மனித உரிமை சபையில் பங்கு கொள்ளும் ஏறக்குறைய 40 தமிழர்களில்> நான் உட்பட மூவர் மட்டுமே> சிங்களவர்களின் சர்வதேச பௌத்த நிறுவனத்தின் கூட்டத்திற்கு செல்ல முடிந்தது.
மனித உரிமை சபையில் கலந்து கொள்ளும் தமிழர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு> எமது அரசியல் விடுதலைப் போராட்டத்தின் உண்மைகளை சர்வதேச மேடையான ஐ.நா.வில் கூறவிடில்> தமிழர்கள் ஜெனிவா செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர்

உண்மையில்> வன்னியிலிருந்து ஜெனிவா வருகை தந்திருந்த பாரளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன்> இவ் கூட்டத்திற்கு வருவதற்கு சம்மதித்திருந்த பொழுதும்> அவ் கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்த காரணத்தினால்> இவர் அக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்து கொள்ளுமாறு வேண்டினேன்.

அக் கூட்டத்தில்> வழமைபோல் தமிழர்களது சரித்திரம் திரிவு படுத்தப்பட்டு> பொய்யான தகவல்கள் பொய்யான புள்ளி விபரங்களை கூறி> சிறிலங்கா அரசாங்கத்தையும் இராணுவத்தையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

இலங்கைதீவின் சரித்திரத்தையே முன்பு அறியாது அங்கு கலந்து கொள்ளும் வெளிநாட்டவர்கள்> தமிழீழ விடுதலைப் புலிகளையும்> தமிழ் மக்களையும் மிகவும் கொடியவர்களாகவே எண்ணுவார்கள்.
இவ்வேளையில் அங்கு சமூகமளித்திருந்த நாம் மூவரும்> தமிழர்களது சரித்திரம் விடுதலை போரட்டத்தின் உண்மைகளை அங்கு கூறி> நிலைமைகளை தெளிவு படுத்தியதும்> அங்கு ஓர் பூகம்பே வெடித்துவிட்டது.

இவ் கூட்டத்தில் சிங்களவர்களுக்கு ஆதரவாக> “கூலிக்கு மர்படிக்கும்” சுவிஸ்நாட்டில் வாழும் ஒட்டுக்குழுவை சார்ந்த ஒரு தமிழர்> தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சா அரசிற்காக தமிழில் வாக்காளத்து வாங்கினார். அங்கு கூடியிருந்தவர்களில் நால்வர் தவிர்ந்த வேறு யாருக்கு இவரது அரட்டையும் அலட்டலும் விளங்கவில்லை.

இதை தொடர்ந்து கொழும்பிலிருந்து வருகை தந்த ஓர் சிங்கள பத்திரிகையின் நிருபாருக்கும் எனக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இவரினால் விவாதம் செய்ய முடியாத காரணத்தினால்> இவர் மிகவும் கெட்ட வார்த்தையை அங்கு உபயோகித்தது மட்டுமல்லாது> “முடியுமனால் சிறிலங்காவிற்கு வா பார்ப்போம்? நீ அங்கு வந்தால் ஒன்றில் சிறைக்கு செல்வாய் அல்லது மிகவும் மோசமான நிலையை சந்திப்பாய்”என என்னை மிரட்டினார்.

மிகவும் வெட்கமான விடயம் என்னவெனில்> சிறிலங்கா அரசும்> ஜனதிபதி ராஜபக்சா அரசும் புலம் பெயர் வாழ் தமிழர்கள்> சிறிலங்காவின் வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டுமென கூறி சிறிலஙகவிற்கு வருமாறு அழைக்கும் அதேவேளை> இந்த இனத்துவேசி> “முடியுமனால் சிறிலங்காவிற்கு வா பார்ப்போமென சவால் விடுகிறார்.

நாசகார வேலை

யதார்த்தமான உண்மை என்னவெனில்,  ஐ. நா. மண்டபத்திற்கு வெளியில் பத்திரிகை மாநாடுகள், பிரச்சாரக் கூட்டங்கள் என்றும் விரும்பிய வேளைகளில் நடத்த முடியும். ஆனால் ஐ.நா. மண்டபத்திற்குள் அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டங்கள், மனித உரிமை சபை வேளைகளிலேயே நடத்த முடியும்.

அத்துடன், இவ்வேளைகளிலேயே, சர்வதேச மேடைகள் அற்ற தமிழர்களாகிய நாம், சிங்களவர்களினால் நடாத்தப்படும் “சர்வதேச பௌத்த நிறுவனம்” போன்ற அமைப்புக்களின் சிறிலங்கா அரச பிரசாரங்களை முறியடிக்க முடியும்.

இந்த நான்கு கோமாளிகள் முற்கூட்டி திட்டமிட்டபடி, எந்த தமிழர்களும், சிங்களவர்கள் நடத்திய இக் கூட்டத்திற்கு செல்ல முடியாது போயிருந்தால், சிங்களவர்கள் பெரும் வெற்றி கொண்டாடியிருப்பார்கள்.

இக் கோமாளிகளுக்கு இக் கால நேரம் உண்மையில் முக்கியமானதாகவிருந்தால், இவர்களது பிரச்சார கூட்டம் பற்றி எத்தனை சுவிஸ்நாட்டின் பத்திரிகையோ அல்லது வெளிநாட்டு பத்திரிகையோ செய்திகள் வெளியிட்டிருந்தன?.

மிக வேடிக்கையான விடயம் என்னவெனில், இவர்களது கூட்டம் சில தமிழ் ஊடகங்கள் மூலமாக நேரடி ஒளிபரப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இவ் வேளையில் பிரான்ஸின் கல்விமானும், பிரான்ஸ் அரசிடம் “செவளியே” பட்டம் பெற்ற காலாநிதி ஜோன்-மரி யூலியா (சுகிர்தராஜா), இவர்களது நிலைப்பாடுகள்,  நாட்டில் வாழும் மக்களது எதிர்காலம், இத் தீர்மானத்தை கைவிட்டு விட்டு வேறு என்ன செய்ய முடியும் போன்ற கேள்வி கணைகளை தொடுத்ததும், ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு யாவும் உடன் துண்டிக்கப்பட்டதுடன்,  பதிவு நாடாக்கள் யாவும் நிறுத்தப்பட்டது. அத்துடன் அங்கு எந்த கேள்வி பதில்களும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

அதேவேளை இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம், “இத் தீர்மானத்தை முன்வைத்துள்ள அமெரிக்காவிற்கு நாம் நன்றி கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளோமென” கூறியதும், இக் கோமாளிகளினால், இதுவும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தான் தமிழர் கூட்டமைப்பின் ஜனநாயகம் பற்றி குறை கூறுபவர்கள்!

குழப்ப நிலை

எது என்னவானாலும், தமிழரிடையே அமெரிக்க தீர்மான விடயத்திலும் ஐக்கியம் இல்லை என்பதை அரங்கேற்றும் நோக்குடன் ஜெனிவா வந்த கோமாளிகள், தமது திட்டத்தை திறம்பட நிறைவேற்றினார்கள்.

இதனால்; சில நாடுகள், சில தமிழர்களும் ஜனதிபதி ராஜபக்சவும் விரும்பாத இத் தீர்மனத்தில் தாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டுமென கூறி, இத் தீர்மானத்திற்கு சார்பாக தமது வாக்குகளை பதிவு செய்யவில்லை.

கடந்த தேர்தலில் இக் கோமாளிகளுக்கு 5000 வாக்குகள் தான் கிடைத்தது என்பதை இவ் நாடுகள் அறிந்திருக்கவில்லை. அதேவேளை புலம்பெயர் தேசங்களில் இவர்களை ஆதரிப்பவர்கள் மிக அண்மைகாலங்களில் பல நோக்குகளுடன் அரசியல் தெரியாது அரசியலுக்கு வந்தவர்களும், தாமாக சிந்திக்க முடியாதவர்களுமே.

மனித உரிமை சபையில் சிறிலங்கா மீதான வாக்கெடுப்பிற்கு முன்னர் - சீனா, பாகிஸ்தான், ரஷ்யா,  இந்தியா போன்ற நாடுகள் ஆற்றிய உரைகளை இவர்கள் ஒழுங்காக கேட்டிருப்பார்களென நம்புகிறேன்.

ஐ.நா.வில் கூடியிருந்த சில தமிழர் கூறியதாவது, இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் படுதோல்வி அடைந்தவர்கள், ஆகையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதை எதிர்ப்பதும்;, அவர்கள் எதிர்ப்பதை ஆதரிப்பதுமே இவர்களது கொள்கையாம்.

இன்றுவரை இவர்கள் தமிழர்களுக்கு நாட்டில் எதை உருப்படியா செய்தார்களென சிலர் வினவினார்கள்.

பத்தரிகையாளர் மாநாடு நடத்துவதும், தமிழர் தேசிய கூட்டமைப்பை குறை கூறுவதும், பிழைபிடிப்பதுமே இவர்களது நாளாந்த வேலைத்திட்டமென வேறு சிலர் கூறினார்கள்.

நடந்து முடிந்த 25வது கூட்டத் தொடரில் ஏறக்குறைய 40லிருந்து 50 வரையிலான தமிழர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களில் சிலர் சிறிலங்கா அரசிற்கும் ராஜபக்சவிற்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை செய்பவர்கள். இன்னும் சிலர், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தகவல், படங்கள் சேர்ப்பவாகளாக காணப்பட்டார்கள்.

தற்செயலாக அமெரிக்காவின் தீர்மானம் தோல்வியில் முடிந்திருந்தால், இக் கோமாளிகள் மக்களுக்கு என்ன ஆறுதலை, எதிர்காலத்திற்கான என்ன வழிமுறைகளை கூறியிருப்பார்கள்? இன்று வடக்கு கிழக்கு சிங்களமயமாகி வருவது இவர்கள் கண்களுக்கு தெரியவில்லையா?

தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள், “பேய்க்காட்டப்படுகிறவன் இருக்கும் வரை, பேய்க்காட்டுகிறவனும் இருப்பனாம்”.

இறையாண்மை

ஓரு நாட்டினுடைய இறையாண்மை பற்றி ஐ. நா. தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதோ இல்லையோ, இவற்றை மதித்தே பிரேரணைகள் நிறைவேற்றப்படுத்தப்படுகின்றன.

சிறிலங்கா மீதான அமெரிக்காவினுடைய தீர்மானத்தின் முன்னுரை பந்தியில் சிறிலங்காவின் இறையாண்மை பற்றி கூறப்பட்டுள்ளது.

இன்று ரஷ்யா, உக்கிரேனின் இறையாண்மையை மதிக்காது தனது படைகளை உக்கிரேனுக்குள் நகர்த்தியுள்ளது. இவ் நகர்வை சிறிலங்கா ஆதரிக்கிறது. இவ்வேளையில் சிறிலங்கா எப்படியாக தனது இறையாண்மை பற்றி பேச முடியும்?

மனித உரிமை சபையில் இத் தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை கண்டு - பல நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், சர்வதேச வல்லுனர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்

இவ்விடயத்தில சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கியூபா, வெனிசூலா ஆகிய நாடுகளுடன் இணைந்து இத் தீர்மானத்தை விவாதிக்கப்பட்டதெனவும்,  10வது பந்தியை நீக்க வேண்டுமென இந்தியா வாக்களிக்காததன் இரகசியம் என்ன?

இத் தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்துள்ளதற்கு மேலாக, வாக்களிப்பதற்கு முனனர், இந்தியா தூதுவரின் உரையில் பல உண்மைகள் மூடிமறைக்கப்பட்டுள்ளது.

இத் தீர்மானத்தை வெற்றியின் அடிப்படையில் ஆராயும் பொழுது, சீனா, இந்தியா,  பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதரவு இல்லாது, அப் பிராந்தியத்தில் அமெரிக்கா தன்னால் தனித்து நின்று வெற்றியடைய முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதா?

ச.வி.கிருபாகரன்
பிரான்ஸ்
05-04-2014

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை அமுலாக்க நடவடிக்கை – டேவிட் கெமரோன்

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை விரைவில் அமுலாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அமரிக்க பிரேரணையில் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டியது கட்டாயம்.
இற்கு அமெரிக்காவின் பிரேரணை முழுமையாக அமுலாக்கப்படவேண்டும்.

இந்த நிலையில் குறித்த பிரேரணையை முறையாகவும், முழுமையாகவும் நடத்துவதற்காக, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொதுநலவாய அமைப்புகள் போன்றவற்றின் உறுப்பு நாடுகளுடன் பிரித்தானியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

காணமல் போன விமானத்தின் கறுப்புப் பெட்டியைத் தேடும் பணிகள் தீவிரம்!

காணமல் போன மலேசிய விமானத்தின் கறுப்புப் பெட்டியைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 8ம் திகதி மலேசியாவிலிருந்து 239 பயணிகளுடன் சீனாவுக்குப் புறப்பட்ட மலேசிய விமானம் மாயமானது.  இந்த விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரமடைந்த நிலையில், விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று தெரிய வந்தது. இதை அடுத்து தெற்கு இந்தியப் பெருங்கடலில் விமானத்தைத் தேடும் பணிகள்  தீவிரமடைந்துள்ளன. இதற்கிடையில் பேட்டரி மூலம் இயங்கும் விமானத்தின் கறுப்புப் பெட்டி வெறும் 30 நாட்கள் மட்டுமே பேட்டரியில் இயங்கும் தன்மையுடையது  என்பதால், கறுப்புப் பெட்டியை விரைவில் மீட்க வேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கறுப்புப் பெட்டியை தேடுவதற்கு என்று சென்சார்  தொழில் நுட்ப கப்பல்கள் இரண்டு இந்தியப் பெருங்கடல் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், சிறப்பு விமானங்கள் என்று விமானத்தின் கறுப்புப் பெட்டியைத் தேடும் பணியிலிருக்க, இப்போது விஷேசமான சென்சார் தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த கப்பல் தொழில்நுட்ப உதவியால் நீரில் மூழ்கியிருக்கும் விமானத்தின் கறுப்புப் பெட்டியை ஒளி அலை மூலம் கண்டுபிடிக்க முடியும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு தொடர்பாகத் தேவயானி கொப்ரகடே மீது சிபிஐ வழக்கு?

ஆதர்ஷ் குடியிருப்பில் முறைகேடாக வீடு பெற்றது தொடர்பாக அமெரிக்காவுக்கான இந்திய முன்னால் துணைத் தூதர் தேவயானி கொப்ரகடே மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேவயானி கொப்ரகடேவும் அவரது தந்தையும் ஏற்கனவே வீடு இருப்பதை மறைத்து, மும்பையில் உள்ள அரசு ஆதர்ஷ் குடியிருப்பில் முறைகேடாக வீடு பெற்று இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னரே தகவல் வெளியாகியிருந்தது.

இதை அடுத்து சிபிஐ விசாரணையில் ஈடுபட்டது. இந்நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் தேவயானி மீதும், அவரது தந்தை மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் விசாரணையைத் துவக்க உள்ளதாகவும் தகவல் தெரிய வருகிறது. கடந்த சில மாதங்களாக அமெரிக்க அரசு தேவயானி மீது பணிப்பெண்ணுக்கு விசா பெறுவதில் மோசடி செய்தது தொடர்பாக வழக்குத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையும் நடைபெற்ற நிலையில், அமெரிக்காவிலிருந்து தேவயானியை அந்நாட்டு அரசு வெளியேற்றிய சம்பவம் குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றியுள்ளது: எம்.கே.சிவாஜிலிங்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்ததன் மூலம் இலங்கையிலுள்ள தமிழ் மக்களை இந்தியா மீண்டும் ஏமாற்றியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கையிலுள்ள தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வந்தாலும், தமிழ் மக்கள் இந்தியா மீது தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதனிடையே, ஏதோவொரு சந்தர்ப்பத்தில் இலங்கையில் இந்தியா நிலைகொள்ள வேண்டி ஏற்பட்டால் அதற்கு வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவு வேண்டும். அதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையை இயங்கவிடாமல் மத்திய அரசாங்கம் தடுக்கிறது: சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண சபையை சீராக இயங்கவிடாமல் இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகளில் மத்திய அரசாங்கம் ஈடுபடுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகத்துடன் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் வடக்கில் ஆங்கிலக் கல்வியை அபிவிருத்தி செய்யும் திட்டங்களுக்கு உதவி வழங்குவதற்காகவே வந்துள்ளார். அவர், அரசியல் பற்றி பேசுவதற்கு விரும்பவில்லை. ஆனாலும், வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு இலங்கையை ஆளும் மத்திய அரசாங்கம் விடுக்கும் இடையூறுகள் தொடர்பில் விளக்கியுள்ளேன் என்று சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இரு பெண் பத்திரிகையாளர்கள் மீது போலிசார் துப்பாக்கிச் சூடு!:ஒருவர் பலி

ஆப்கானிஸ்தானில் நாளை சனிக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியான கோஸ்ட் மாகாணத்தின் த்னாய் மாவட்டத்தில் இரு பெண் பத்திரிகையாளர்கள் மீது போலிஸ் கமாண்டர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியுள்ளார்.

இதில் ஒருவர் பலியானதுடன் மற்றவர் படுகாயம் அடைந்தார்.

இத்துப்பாக்கிச் சூட்டில் பலியான 48 வயதுடைய பெண் பத்திரிகையாளர் AP பத்திரிகை நிலையத்தின் புகைப்படவியலாளரான அஞ்சா நியெட்ரின்காவுஸ் எனவும் படுகாயமடைந்த மற்றையவர் 60 வயதுடைய பெண் நிருபரான கேத்தி கன்னொன் எனவும் அடையாளம் காணப் பட்டுள்ளனர். இப்பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்த கார் பாதுகாப்பு வளையத்துக்குள் நுழைய எத்தனித்ததால் போலிஸ் கமாண்டர் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் இத்தாக்குதலை மேற்கொண்ட குறித்த அதிகாரி தற்போது சரணடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. எனினும் இது திட்டமிட்டு மேற்கொள்ளப் பட்ட தாக்குதலா என்ற தகவல் இன்னமும் வெளிவரவில்லை.

இச்சம்பவத்தில் பலியான ஜேர்மன் புகைப்படவியலாளர் குவைத், ஈராக், லிபியா, காஸா மற்றும் வெஸ்ட் பேங்க் ஆகிய குழப்பம் நிலவிய பகுதிகளில் மிகத் திறமையாக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday 4 April 2014

இலங்கைக்கு எதிராக தமிழீழ அரசாங்கம் பட்டியல்!- போர்குற்றம், இன அழிப்பு புரிந்த அரசியல் தலைவர்கள், இராணுவ தளபதிகள் உள்ளடக்கம்! (விவரங்கள் இணைப்பு)

இலங்கைத்தீவில் தமிழினத்தின் மீது போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்ட சிறிலங்கா அரச தலைவர்கள்,  இராணுவ தளதிகள் ஆகியோரது பெயர்ப்பட்டியலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிடுகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்புத் தடுப்பும் விசாரணை முயற்சிகளுமான மையத்தினால் வெளியிடப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் 2001ம் ஆண்டு அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட 1373ம் இலக்க பிரேரணையின் தீர்மானத்தின் விதிகளுக்கு புறம்பாக, ஒர் இனத்தின் மீது திட்டமிட்ட வகையில்  இலங்கை அரசாங்கம் போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்டுள்ளது.

இச்செயலில் ஈடுபட்பட்ட சிங்கள அரச தலைவர்கள் மற்றும் இலங்கை இராணுவ தளதிகள் ஆகியோரது பெயர்ப்பட்டியலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கவுள்ளது.

இதேவேளை அனைத்துலக சட்டங்களுக்கு போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்ட குறித்த இந்த நபர்களது பெயர்விபரங்களை, அனைத்துலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதோடு, அவர்களது சொத்துக்களை முடக்குவதற்குமாறு கோருவதோடு, பயணத்தடைகளையும் இடுமாறும் அந்நாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோர இருக்கின்றது.

அழிப்பு புரிந்த அரசியல் தலைவர்கள், இராணுவ தளபதிகள் விவரங்கள் இணைப்பு

இலங்கை அரசின் வர்த்தமானி அறிவித்தல் எமக்கு உந்துசக்தியாக அமைகின்றது - வி.ருத்ரகுமாரன்

இலங்கை அரசின் வர்த்தமானி அறிவித்தலானது, எமது செயற்பாடுகளை இன்னமும் தீவிரமாக செயற்பட ஊக்குவிக்கின்றது. இலங்கை அரசு எமது விடுதலைக் கனலை முள்வேலி போட்டு ஒருபோதும் தடுத்து விட முடியாது என நாடுகடந்த தமீழீழ அரசாங்க பிரதமர் வி. ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு தடை விதிப்பது தொடர்பில் இலங்கை அரசு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில், புலம்பெயர் அமைப்புகளைச் சேர்ந்த நானூறுக்கும் மேற்பட்டோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரித்துள்ள பின்னணியில், புலம்பெயர் தமிழர் அமைப்புகள் 16ஐ தடை செய்வதாக அது அறிவித்திருந்தது.

இந்த அமைப்புகளின் பெயர்களைத் தாங்கி வெளியிடப்பட்டுள்ள அரசின் கெஜட் அறிவிப்பில், இந்த அமைப்பின் பெயர்களுடன், சுமார் 400க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசு வெளியிட்டுள்ள கெஜட் அறிவிப்பில் இருக்கும், இந்தத் தனி நபர்கள் பட்டியலில் உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழ அரசு போன்ற பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் இந்த தடையைப் பற்றி கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் இனரீதியான  மக்களை புற்க்கணிக்கும் கொள்கையினையும், எதார்த்த அதிகாரத்தையும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னர் இலங்கை அடைந்துள்ள கலக்கத்தினையும் தான் காட்டுகின்றது.

என்னுடைய பெயர் இடம்பெறாதிருந்தால் நான் அதைப்பற்றி யோசித்திருக்க வேண்டும். இடம்பெற்றபடியினால் அதனைக் கருத்தில் எடுக்கவில்லை. இந்த பட்டியலில் தடைசெய்யப்பட்டள்ள அமைப்புகளும் மற்றும் பட்டியலில் பெயர் இடப்பட்டுள்ளவர்களும் தமிழீழம் தொடர்பான எங்களுடைய வேலைத்திட்டங்களை மிகத் தீவிரமாக முன்னெடுக்க ஒரு உந்துசக்தியாக இப்பட்டியல் அமைகின்றது.

அத்துடன் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும், தாயகத் தமிழர்களுக்கும் இடையில் ஒரு விரிசலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தாயக் மக்களின் மனங்களிலும் புலம்பெயர்ந்துள்ள எமது மக்களின் நெஞ்சங்களிலும் விடுதலைக் கனல் எரிந்து கொண்டிருக்கின்றன. எனவே தாயக மக்களுடன் நாங்கள் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் கூட கொள்கை ஒரே நிலையிலிருப்பதால் இலங்கை அரசு எத்தனை முள்வேலிகளை போட்டாலும் அந்த விடுதலைக் கனலை  மக்களின் மனங்களிலிருந்து நீக்கிவிட முடியாது என்பதை தெட்டத்தெளிவாக தெரிவிக்கின்றேன்.

அதேவேளை புலம்பெயர் நாடுகளிலுள்ள எமது மக்களின் பெயர்கள் பட்டியலிட்டுள்ள போதும் அவர்கள் தாயகமான இலங்கைக்கு செல்கையில் அவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமிடத்து அவர்கள் புலம்பெயர் நாட்டு பிரஜா உரிமை பெற்றவர்கள் என்ற வகையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் அவர்களை பாதுகாக்கும் என்பதையும் கூறுகின்றேன்.

கூட்டமைப்பு தென்னாபிரிக்காவுக்கு திடீர் பயணம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் 5பேர் அடங்கிய குழுவினர் எதிர்வரும் 9ம் திகதி தென்னாபிரிக்காவிற்கு பயணமாகவுள்ளனர்.

இது குறித்து நடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்ததாவது,

இலங்கை தொடர்பிலான செயற்பாடுகளுக்கு ஆபிரிக்க தேசிய காங்கிரஸை சேர்ந்த சிறப்புத் தூதுவர் ஒருவர் தென்னாபிரிக்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் குறித்த தூதுவர் இலங்கைக்கு விரைவில் வருகை தரவுள்ளார். இதனை கவனத்தில் கொண்டு இலங்கையின் தூதுக்குழு ஒன்று கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்கா சென்று சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தது.

அதனடிப்படையில் இலங்கைக்கு வருகை தரமுன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் பேச்சுவார்த்ததை நடாத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி அவரின் அழைப்பின் பேரிலேயே நாம் அங்கு செல்லவுள்ளோம்.

அதன்படி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ சுமந்திரன் ஆகிய ஐவரும் செல்லவுள்ளோம்.

அதன்படி எதிர்வரும் 9ம் திகதி முதல் 12ம் திகதி வரை எமது உத்தியோக பூர்வ பயணம் அமைகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையின் போது தென்னாபிரிக்கா நடு நிலமை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் இயங்கி வரும் தமிழ் ஊடகங்களுக்கும் விரைவில் தடை!

வெளிநாடுகளில் இயங்கி வரும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுக்கு தடை விதித்த இலங்கை அரசாங்கம் அடுத்ததாக, வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்களுக்கும் தடைவிதிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான இரகசிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம் பெயர்ந்த மக்களின் தமிழ் தேசிய செயற்பாடுகளில், வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்கள் பெரும் பங்கினை வகித்து வருகின்றன.

இதன்அடிப்படையில் ஏற்கனவே குறிப்பிட்ட சில இணையத்தள செய்தி ஊடகங்களை இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் தடை செய்துள்ளது.

இந்த நிலையில் விரைவில் இவ்வாறான ஊடகங்களை உத்தியோகபூர்வமாக தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்குள் நுழையத் தடை! தடைசெய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் இணைப்பு

இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய புலம்பெயர் தேசத்தவர்கள் 424 பேரின் பெயர் விவரங்கள் கடந்த மார்ச் 21 ஆம் திகதியிட்டு விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த பெயர் விவரங்களின் பட்டியல் அடங்கிய வர்த்தமானி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் பின்னராக தலை மறைவாகியுள்ள பல போராளிகளது பெயரும் அவர்கள் எங்குள்ளார்கள் என்பது குறிப்பிடப்படாது அறிவிப்பினில் சேர்க்கப்பட்டுள்ளது.

பெயர் விபரங்கள் – இணைப்பை அழுத்திப் பார்க்கவும்

ஈழத் தமிழருக்கு காங்கிரஸ் துரோகமா?- ஜி.கே.வாசன் மறுப்பு

ஈழத் தமிழருக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்ததாக கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று சேலத்தில் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது, இரவு நேரத்தில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர்களை இருட்டில் சென்று சந்திக்கும் வழக்கம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது.

தேர்தல் ஆணையத்தின் நல்லெண்ண நடவடிக்கைகளை வரவேற்கும் அதே நேரத்தில் தேர்தல் செலவு குறித்த கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும்.

கட்சித் தலைவர்கள் பேசும் கூட்டத்திற்கான செலவை வேட்பாளர்கள் செலவில் சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈழ விவகாரத்தில் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்ததாக கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் அது உண்மையாகிவிடாது.

இலங்கைக்கு எதிரான செயல்பாடுகள் மூலம் திரையை மூடிக் கொண்டால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் ஏற்படும் என்றார்.

இந்தியா ஒடிசா கடற்பரப்பில் சிங்கள மீனவர்கள் நால்வர் கைது!

இந்தியா, ஒடிசா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நான்கு சிங்கள மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் அவர்கள் இந்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் படகில் இருந்து 4 டன் எடை கொண்ட டூனா வகை மீன்கள் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதான மீனவர்கள் தென்னிலங்கை மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தற்போது ஒடிசா மாநில காவற்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனது 159வது தேர்தலில் மோடியை எதிர்த்து களமிறங்கும் தமிழக சுயேட்சை வேட்பாளர்

இந்தியாவில் அதிக தடவை தேர்தல்களில் போட்டியிட்ட நபர் எனும் உலக சாதனையை படைக்க வேண்டும் என்பதற்காக தனது 159 வது தேர்தலில், நரேந்திர மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார் தமிழகத்தை சேர்ந்த டாக்டர்.கே.பத்மராஜன்.

மோடி போட்டியிடும் வதோதரா தொகுதியில் மோடியை எதிர்த்து களமிறங்குவதற்காக நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார் இவர். இதுவரை 158 தேர்தல்களில் பங்கேற்றிருக்கிறார். கடந்த 25  வருடங்களாக இப்பணியை மேற்கொள்கிறார். ஒரு முறை கூட இவர் தேர்தலில் வெற்றி பெற்றதில்லை. எனினும் அதிக தடவை தேர்தலில் எதிர்வேட்பாளராக களமிறங்கியவர் எனும் சாதனையை படைக்க வேண்டும் என்பதற்காக மாத்திரமே தொடர்ந்து வேட்பு மனுத் தாக்கல் செய்வதாக அவர் கூறுகிறார். இதுவரை அவர் தனது கடந்த கால தேர்தல்களில் அடல் பிஹாரி வாஜ்பேய், அப்துல் கலாம், பிரதீபா படேல் என பலரை எதிர்த்து ராஜ்சபா, குடியரசுத் தலைவர் தேர்தல், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் என பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறார். இதற்காக 1988ம் ஆண்டிலிருந்து ரூ 12 லட்சம் செலவழித்திருக்கிறார்.

தற்போது மோடியை எதிர்ப்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து குஜராத்திற்கு சென்றிருக்கிறார்.  இவர் இப்படி அதிக தடவை தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டே தனக்கான பிரபலத்தை பெற்றிருக்கிறார்.

மேட்டூர் தொகுதியில் இவர் சுயேட்சையாக கடந்த 2011ம் ஆண்டு போட்டியிட்ட போது 6,273 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இது தான் இவர் அதிக வாக்குகள் பெற்ற தேர்தல் ஆகும்.

மேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர்கள் பதவியேற்பு!

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கு அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது.

அதன் பிரகாரம், மேல் மாகாண முதலமைச்சரான பிரசன்ன ரணதுங்கவும், தென் மாகாண முதலமைச்சராக ஷான் விஜேலால் டி சில்வாவும் அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

முதலமைச்சர்களோடு, இரண்டு மாகாண சபைகளுக்கான அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் முன்னேற்றத்தை பொறுக்க முடியாதவர்களே சதி செய்கின்றனர்: மஹிந்த

சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் நாடும் (இலங்கை), மக்களும் முன்னேறி வருவதைப் பொறுத்துக் கொள்ளாதவர்களே இலங்கைக்கு எதிராக சதி செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

எமக்கு எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும், வெற்றிகொண்ட சுதந்திரத்தை பின்னுக்குத் தள்ள இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கும், பிள்ளைகளுக்கும் நாம் சுதந்திரத்தையும் அமைதியையும் பெற்றுக் கொடுத்துள்ளோம். பயம் சந்தேகமின்றி கல்வி கற்கும் சூழலை நாடெங்கிலும் ஏற்படுத்தியுள்ளோம். எங்கும் எவரும் சுதந்திரமாக பயணிக்கவும், அனைத்து மதத்தினரும் சுதந்திரமாக தமது சமயங்களை வழிபடவும் நாம் உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மோதல்களின் பின் வடக்கில் 98 வீதமானவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்: கோத்தபாய

வடக்கில் மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் குடியிருந்த 95- 98 வீதமான மக்கள், அவர்களின் சொந்தப் பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வடக்கில் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகள் தலைதூக்காமல் இருப்பதற்காகவே இராணுவம் நிலை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவின் கேப்பாப்பிலவு பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

லெபனானின் தஞ்சமடைந்துள்ள சிரிய அகதிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது!

சிரியாவிலிருந்து லெபனான் நாட்டுக்கு அகதிகளாக தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக உயர்ந்துள்ளது. இது சிரியாவின் சனத்தொகையில் நான்கில் ஒரு பங்காகும்.

சிரிய சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் அதாவது 9.5 மில்லியன் மக்கள் அந்நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர். இவர்கள் லெபனான், துருக்கி, ஈராக், ஜோர்தான்  ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் லெபனானில் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கையே தற்போது ஒரு மில்லியனைக் கடந்துள்ளது.

சிரிய மக்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை எமது மக்களிடம் இருக்கின்ற போதும், சிறிய நாடு என்பதனால் எமது கையிருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என சிரிய வெளிவிவகார அமைச்சர் அவசரமாக அறிவித்துள்ளார்.

அதாவது லெபனானின் சனத்தொகையில் நால்வருக்கு ஒரு அகதியை ஏற்கும் நிலை தோன்றியுள்ளது. அதாவது அங்கு ஒவ்வொரு நாளும் 2,500 சிரிய அகதிகள் புதிதாக பதிகின்றனர்.  ஒவ்வொரு ஒரு நிமிடத்திற்கும் ஒருவர் பதியப்படுகின்றார்.

சிரியாவிலிருந்து வெளியேறும் அகதிகளின் அத்தியாவசிய தேவைகளுக்கு என இதுவரை ஐ.நாவின் அகதிகள் கண்காணிப்பகம் கோரியிருந்த நிதித்தொகையில் 14% வீதமே கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில், தனது சுகயீனமான கணவர், நான்கு குழந்தைகளுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை எனக் கூறி அவர்கள் மீது தீவைத்து, தானும் தீக்குளித்து சாக முயற்சித்த தாயொருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் நடந்தது அகதி முகாம் ஒன்றில்.

இன்றைய நிலவரப்படி உலகில் அதிகளவு அகதிகளை உள்வாங்கியுள்ள நாடாக லெபனான் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஆஸி நோக்கி பயணித்த இலங்கையர்கள் 26 பேர் கைது!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த 26 இலங்கையர்களை அந்தமான் தீவுகளுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடலோரக் காவற்படை கைது செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

அந்தமான் தீவுகளுக்கு அண்மித்த கடற்பரப்பில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடலோரக் காவற்படையினரால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும், அந்தமான் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று வியாழக்கிழமை காலை இலங்கைக்கு விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த போது கைது செய்யப்பட்ட 26 இலங்கையர்களும், அவுஸ்திரேலியாவுக்கு வேலை வாய்ப்புக்களுக்காக பயணித்ததாகவும், அதற்காக கடத்தல்காரர்களுக்கு பெரும் தொகைப் பணத்தை செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு எந்தவொரு தருணத்திலும் தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படாது என்று அண்மையில் அறிவித்த அவுஸ்திரேலிய அரசாங்கம், சட்டவிரோத குடியேற்றவாசிகளை திருப்பி அனுப்பியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thursday 3 April 2014

டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது கொலைவெறித் தாக்குதல்! வைகோ கண்டனம்

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மீது கொலை வெறி நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

கற்பனை செய்வதற்குக்கூட முடியாத பெரும் பின்விளைவு பாதகங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கொடிய நோக்கத்தோடு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அவர் பயணித்த டெம்போ டிராவலர் வாகனத்தில் முன் இருக்கையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அமர்ந்திருந்த நிலையில், இரண்டு கிலோவுக்கு மேல் எடையுள்ள கூர்மையான கருங்கல் அவரைக் குறி பார்த்து வீசப்பட்டுள்ளது.

கண்ணாடியை உடைத்துக்கொண்டு கல் உள்ளே போய் விழுந்திருக்கிறது. இயற்கை அன்னையின் கருணையால் டாக்டர்அன்புமணி ராமதாஸ் அவர்கள் உயிருக்கு ஆபத்து நேரவில்லை.

இந்தக் கொலைவெறி வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் திட்டமிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு கைது செய்து கூண்டில் நிறுத்த வேண்டும்.

இரணகளமும் கலவரமும் ஏற்படட்டும் என்று எண்ணி திட்டமிட்டு தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

நெஞ்சம் கொதிக்கின்ற வேதனையை இச்சம்பவம் ஏற்படுத்திய போதிலும், பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தோழர்களும், பொதுமக்களும் அமைதி காக்க அன்புடன் வேண்டுகிறேன்.


MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி அனுப்பிய எஸ்.எம்.எஸ்!

மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம் கடத்தி, Diego Garcia என்ற தீவில் ஒளித்து வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் கசிந்து வந்தன. இந்த தீவு இந்திய பெருங்கடலில் உள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான இந்த தீவில் அமெரிக்க போர்விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீவில்தான் மலேசிய விமானம் இருப்பதாக, அந்த விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணி Phillip Wood என்பவர் தனது நண்பரும் பத்திரிகையாளருமான Jim Stone என்பவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. மேலும் பயணி ஒரு புகைப்படமும் அனுப்பியுள்ளதாகவும் ஆனால் அந்த புகைப்படத்தில் எந்த படமும் இல்லாமல் கருப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Phillip Wood என்பவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ் செய்தியில் “நாங்கள் அனைவரும் ஒரு ராணுவ அமைப்பால் கடத்தப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், நான் எனது ஐபோனை மர்ம உறுப்பில் மறைத்து கொண்டதாகவும், மற்றவர்களின் போன்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டதாகவும், கூறியுள்ள அவர், மேலும் தன்னை ஒரு தனிமைச்சிறையில் வைத்துள்ளதாகவும், அந்த இடம் இருட்டாக உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது உடலில் போதைபொருள் செலுத்தப்பட்டுள்ளதால் தன்னால் அதிக அளவு சிந்திக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். அவர் அனுப்பியுள்ள எஸ்.எம்.எஸ். இதுதான் ”

(“I have been held hostage by unknown military personal after my flight was hijacked (blindfolded). I work for IBM and I have managed to hide my cellphone in my ass during the hijack. I have been separated from the rest of the passengers and I am in a cell. My name is Philip Wood. I think I have been drugged as well and cannot think clearly.”)

Phillip Wood எஸ்,எம்.எஸ் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்ததோடு அனைவரது பார்வையும் தற்போது அமெரிக்க ராணுவம் மீது திரும்பியுள்ளது. ஆனால் அமெரிக்கா இதுகுறித்து எவ்வித விளக்கமும் இன்னும் கூறவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

மேலே உள்ள படத்தில் Diego Garcia தீவில் அமெரிக்க ராணுவ விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் கருப்பு நிறத்தில் இருப்பதுதான் MH 370 விமான பயணி அனுப்பிய புகைப்படம்.

இச்செய்தியின் ஆங்கில வடிவத்தைக் காண இங்கே அழுத்தவும்

கனடாவில் ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் நடிகை திரிஷா பங்கேற்பு? (படங்கள் இணைப்பு)

கனடாவில் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் தமிழக நடிகை திரிஷா கலந்த கொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத் தமிழர்களின் படுகொலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கண்டிக்கும் விதமாக, இலங்கைக்கு தமிழக நடிகர் நடிகைகள் போவதில்லை என ஏற்கனவே முடிவு எடுத்துள்ளனர்.

அத்துடன் இலங்கையில் நடக்கும் இசை விழாக்களிலும் கலந்து கொள்ளாது பின்னணி பாடகர்கள் புறக்கணித்து வருகின்றனர்.

அதேபோலவே வெளிநாடுகளிலும் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் நடத்தும் விழாக்களை தமிழ் திரையுலகினர் புறக்கணித்து வருகின்றனர்.

இதனை மீறி செல்வோருக்கு எதிராக கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழக நடிகை திரிஷா தடையை மீறி மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவாளர்கள் கனடாவில் நடத்திய விழாவில் பங்கேற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவில் நடைபெற்ற இந்த விழாவை அங்குள்ள தமிழர் அமைப்பு ஒன்று நடத்தி உள்ளது.

இந்த அமைப்பில் இருப்பவர்கள் ராஜபக்ஷக்கு அரசின் கூட்டணியில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் என ஏனைய தமிழர் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த விழாவில் திரிஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டமை தொடர்பில் தமிழ் அமைப்புகள் கண்டனங்களை வெளியிட்டுள்ளதாக இந்திய தமிழ் இணையத்தளமொன்று (maalaimalar.com) செய்தி வெளியிட்டுள்ளது.








வைகோ வீட்டிலுள்ள தேசியத் தலைவர் பிரபாகரனின் படத்தைப் பார்த்து மரியாதை செலுத்தினார் விஜயகாந்

மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் வைகோவை தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக்கழத் தலைவர் விஜயகாந் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

வைகோவின் வீட்டுக்குச் சென்ற விஜயகாந் மேதகு வே. பிரபாகரனின் படத்தைப் பார்த்து மரியாதை செலுத்தினார். அத்துடன் வைகோவின் தாயாரிடம் ஆசி பெற்றுள்ளார்.

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாஜாக ககூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பரப்புரைக்காக கலிங்கப்பட்டிக்கு சென்ற விஜயகாந் அங்கு வைகோவின் வீட்டுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மலேசிய விமானத்தைத் தேட புதியத் தொழில் நுட்பத்துடன் கூடிய கப்பல்!

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேட அமெரிக்காவிலிருந்து புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய கப்பல் இந்தியப் பெருங்கடலுக்கு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 8ம் திகதி 239 பயணிகளுடன் காணாமல் போன மலேசிய விமானத்தை கடந்த ஒரு வாரமாக இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் தேடியும் எந்தவித துப்பும் இன்னமும் கிடக்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய கப்பல் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலில் உள்ள நவீன தொழில் நுட்ப சாதனத்தில் கடலில் மூழ்கியிருக்கும் விமானத்தின் கறுப்புப் பெட்டியை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்றும் தெரிய வருகிறது.

விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டறியப்பட்டால் விமான விபத்துக்கான காரணம் தெரிந்துவிடும் என்கிற நிலையில், விமானத்தில் பயணித்த எவர் ஒருவர் மீதும் குற்றப்பின்னணி இல்லை என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

தமிழீழம் அமைப்பதற்கு பா.ஜ.க ஒருபோதும் உதவி செய்யாது! - வெங்கையா நாயுடு

இலங்கையில் தமிழீழம் அமைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு போதும் உதவி செய்யாது என்று, அந்த கட்சியின் சிரேஸ்ட தலைவர் வேங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்ற வை.கோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழீழம் பெற்றுத் தரப்படும் என்று உறுதியளித்துள்ளது. 

இந்த நிலையில் இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டை ஊடகங்கள் கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்று காணப்படுமாக இருந்தால், அது ஐக்கிய இலங்கைக்குள் நாடு பிளவுப்படுத்தப்படாமல் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு 1.7 மில்லியன் டொலர்களை வழங்கியது அமெரிக்கா

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கான உதவிகளை வழங்குவதற்கான நிதியினை அமெரிக்க அரசாங்கம் இந்த முறையும் வழங்கியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி இந்த வருடம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகளின் நலன்திட்டங்களுக்காக 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் இலங்கை அகதிகளின் மத்தியில் பால்நிலை சமத்துவத்தை ஏற்படுத்தல், சுகாதர மற்றும் கல்வி வசதிகள், உட்கட்டுமான வசதிகள் என்பன வழங்கப்படவுள்ளன.

அத்துடன் உரிய ஆவணங்கள் அற்ற மக்களுக்கான ஆவண வழங்கல்களும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மீது சர்வதேச விசாரணை நடந்தே தீரும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடந்தே தீரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்க வேண்டுமாயின் அரசாங்கம், சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் சர்வதேச விசாரணையை இலங்கை அரசாங்கத்தினால் தவிர்க்க முடியாது. ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு அதிகாரிகள் இலங்கையில் விசாரணைகளை முன்னெடுப்பார்கள். அப்படியில்லை என்றால், வெளியிலிருந்தாவது விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்ற ஆதாரங்கள் மற்றும் நாற்பதிற்கும் அதிகமாக பெண்கள் இலங்கை இராணுவத்தினரால் பாலியற்பலாத்காரம் செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிடம் இருக்கின்றது. அந்த ஆதாரங்களே சர்வதேச விசாரணைக்கு முக்கியமானதாக அமைந்துள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் யாரும் வாக்களிக்க வரக்கூடாது!: மாவோயிஸ்ட் எச்சரிக்கை!

மக்களவைத் தேர்தலின் போது வாக்களிக்க யாரும் வாக்குச் சாவடிகளுக்கு வரக்கூடாது என்று, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எச்சரிக்கை

விடுத்து எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளனர்.

பீகார் மாநிலத்துக்கு வருகிற 10ம் திகதி மக்களவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அங்கு கயா உள்ளிட்ட 3 மாவட்டங்களில்  மக்கள் தேர்தலில் வாக்களிக்க வாக்குச் சாவடிகளுக்கு வரக்கூடாது என்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை, மக்களில் சிலருக்கு என்று குறுஞ்செய்தி அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேர்தலின் போது கொரில்லாத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளனர்.

இந்த குறுஞ்செய்தியை மாவோயிஸ்ட் செய்தித் தொடர்பாளர் செல்போனில் இருந்து அனுபப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Wednesday 2 April 2014

பொய் சொல்வது நாங்களா? அல்லது நீங்களா? ஜெயலலிதாவுக்கு கலைஞர் கேள்வி!

திமுக தலைவர் கலைஞர் 02.04.2014 புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜெயலலிதா கோவையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியன்று, தொழில் வளர்ச்சி பற்றி அவருக்கே உரிய பாணியில் பேசியிருக்கிறார். தமிழகத் தொழில் அதிபர்கள் கர்நாடகாவுக்குப் போய் விட்டார்கள் என்று நானும், பொருளாளர் தம்பி ஸ்டாலினும் பொய்ப் பிரச்சாரம் செய்வதாகக் கூறியிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவே, அந்தப் பேச்சில் கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ் நகரில் தொழில் துவங்க வருமாறு கர்நாடக முதலமைச்சர் அழைப்பு விடுத்தார் என்றும், இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த தொழில் அதிபர்கள் கலந்து கொண்டார்கள் என்றும் தொடர்ந்து தெரிவித்திருக்கிறாரே தவிர, நல்லவேளையாக அதை மறுக்கவில்லை.

இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்க, கர்நாடக மாநில முதலமைச்சர் தமிழகத்திலே உள்ள ஒரு நகரில், தமிழகத்திலே உள்ள தொழில் அதிபர்களை யெல்லாம் அழைத்து கர்நாடகாவில் வந்து தொழில் தொடங்குங்கள் என்று அழைக்கிறார் என்றால், அதற்கு என்ன அர்த்தம் என்பதை சாதாரண ஒரு தொழில் அதிபர் கூடப் புரிந்து கொள்ள முடியும். நாளேடு ஒன்றில் ஜனவரி 22ஆம் தேதி ஒரு செய்தி வந்தது. அதன் தலைப்பே, "தள்ளி விடும் தமிழகம்; கவர்ந்திழுக்கும் கர்நாடகம் - கை நழுவிய 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு" என்பதாகும். அந்தச் செய்தியில், "கொங்கு மண்டலத் தொழிலதிபர்களின், 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் கர்நாடகாவிற்குச் செல்ல உள்ளன.

தமிழகத்தில் மோசமாகி வரும் முதலீட்டு சூழல்தான் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த நிலை தொடர்ந்தால், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், வேறு மாநிலங்களுக்கு தொழில்கள் இடம் பெயர வாய்ப்பு உள்ளது. தமிழக - கர்நாடகா எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், 1,400 ஏக்கரில் தொழில் மண்டலம் அமைக்கப் பட்டு வருகிறது. இதற்கு முதலீட்டாளர்களை இழுக்கும் வகையில், கோவையில், கடந்த, 20ம் தேதி சாம்ராஜ் நகர் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா "கர்நாடகாவில் தொழில் துவங்க வாருங்கள், அனைத்து வசதிகளையும் செய்து தருவோம்" என்று தமிழக தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள் ளார். இந்த மாநாட்டின் விளைவாக, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் தொழில் நடத்தும் ஏறத்தாழ 200 தொழில் அதிபர்கள், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சாம்ராஜ் நகரில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்" என்றெல்லாம் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு மாநாடு நடைபெற்றதாக நானோ, ஸ்டாலினோ கூறவில்லை. நாளேடுகளிலும் இந்தச் செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் கோவையில் போய் முதலமைச்சர் ஜெயலலிதா நாங்கள் ஏதோ பொய் கூறிவிட்டதாகப் புலம்பியதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

தங்கள் மாநிலத்திலே தொழில் தொடங்க வாருங்கள் என்று கர்நாடக முதல் அமைச்சர் நம்முடைய மாநிலத்திற்கு வந்து மாநாடு நடத்து கிறார். அதற்காக வெட்கப்பட வேண்டாமா? தமிழ்நாடு என்ன செய்கிறது? தமிழக முதலமைச்சர் என்ன செய்கிறார்? இவர்களுக்கு தொழில் வளர்ச்சியில் அக்கறை இருந்தால், பெங்களூரில் சென்று மாநாடு நடத்தி, அங்கே யுள்ள தொழில் அதிபர்களையெல்லாம் தமிழகத் திற்கு வாருங்கள் என்று அழைக்க வேண்டியது தானே? அதை விட்டு விட்டு, எங்கள் மீது ஜெயலலிதா பாய்ந்து குதறுவது ஏன்? இந்த அரசுக்கு எதிராக எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக நாங்களா இந்தச் செய்தியைச் சொன்னோம். இந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகைகளை விட்டு விட்டு, அவ்வாறு பத்திரிகையிலே வந்திருக்கிறது என்று நாங்கள் கூறியது குற்றமா?

இந்த மாநாட்டிற்குப் பிறகு, கர்நாடகா தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் உதவிச் செயலாளர், விஜயகுமார் என்பவர், கோவையில் நடத்தப்பட்ட மாநாடு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஒரே நாளில், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவுக்கு சாம்ராஜ் நகர் தொழில் மண்டலத்தில் முதலீடு செய்ய முன்வந்திருப்பது பெரிதும் மகிழ்ச்சியை அளித்துள்ளது" என்று கூறி, அதுவும் நாளேட்டில் அப்போதே வெளி வந்தது. ஜெயலலிதா ஏன் அப்போதே அந்தச் செய்தியை மறுக்கவில்லை?

குறிப்பாக, "திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்று, 2000 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளது. கோவையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர், அந்தத் தொழில் மண்டலத்தில், 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்" என்று செய்தி வந்ததா? இல்லையா? இதுபற்றி ஜெயலலிதா கோவையில் ஏன் வாய் திறக்கவில்லை?

மாறாக, கூட்டம் முடிந்தவுடன் தொழிலதிபர்கள், "எங்களை அழைத்தார்கள், வந்தோம், அவ்வளவு தான். எந்தச் சூழ்நிலையிலும் சாம்ராஜ் நகரில் தொழில் தொடங்க நாங்கள் தயாராக இல்லை" என்று சொன்னதாக அனைத்து நாளிதழ்களிலும் வந்துள்ளது என்று ஜெயலலிதா சொல்லியிருக் கிறார்.

தொழில் முனைவோர் சிலர், "யாரும் இங்கிருந்து தொழிலை அங்கு இடம் மாற்ற வில்லை, தங்கள் தொழிலை அங்கு விரிவாக்கம் செய்கின்றனர். கிரானைட் பாலிஷிங் தொழிலுக்கு கர்நாடகா மாநிலம் சிறப்பான இடம். அதேபோல உணவு பதப்படுத்துதல், காற்றாலை மின் உற்பத்தி போன்ற தொழில்களை அங்கே விரிவாக்கம் செய்ய, நல்ல வாய்ப்பு உள்ளது" என்றெல்லாம் கூறியதாகத் தான் ஒரு நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும், அந்த இதழ், "இவை கூடுதல் முதலீடுகள் என்றாலும், தமிழகத்திற்கு இவை கிடைத்திருந்தால், இங்கு வேலை வாய்ப்பு அதிகரித்து இருக்கும். ஆனால், தமிழகத்தில் மின்வெட்டு, அரசு நிர்வாகக் கோளாறு, உள்கட்டமைப்புப் பற்றாக்குறை, ஆட்சியாளர்களைச் சந்திக்க முடியாத சூழல் உள்ளிட்ட காரணங்களால், முதலீட்டுச் சூழல் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது என்பதே உண்மை. இதனால், தமிழக தொழில் முனைவோர், சத்தீஸ்கர், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். சாம்ராஜ் நகர் முதலீட்டாளர் மாநாடு, கொங்கு மண்டலத் தொழில் வரலாற்றில் ஒரு குறிக்கப்பட வேண்டிய சகாப்தமாக மாறலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்" என்றெல்லாம் எழுதியிருக்கிறதே, முதலமைச்சர் ஜெயலலிதா அந்த ஏட்டிற்கு அல்லவா விளக்கம் அளித்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, அந்த இதழில் இவ்வாறு செய்தி வந்திருக்கிறது என்று சொன்னால், நாங்கள் சொல்வது பொய்ப் பிரச்சாரமா? கோவையில் முதல்வர் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிரித்திருக்க மாட்டார்களா?

தமிழகத்திலிருந்து இவ்வாறு தொழில் முதலீடுகள் வெளி மாநிலங்களுக்குச் செல்ல என்ன காரணம் என்பது பற்றியும் பலரிடம் பேட்டி கண்டு ஒரு நாளேடு 24-1-2014 அன்று அரைப் பக்க அளவிற்குச் செய்தி வெளியிட்டது. அந்தச் செய்திக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்தாலே நிலைமையைப் புரிந்து கொள்ள முடியும். என்ன தலைப்பு தெரியுமா? "தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் லஞ்சம், மின்வெட்டு, நில மதிப்பு - மேற்கு மாவட்ட முதலீடுகள் கர்நாடகா செல்லும் மர்மம் இதுதான்!" - இப்படியெல்லாம் நாளேடுகளில் வருகின்ற செய்திகளைப் பார்த்து உண்மையைப் புரிந்து கொள்ளாமல், நாங்கள் பொய் கூறுகிறோம் என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினால் என்ன அர்த்தம்? "தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் லஞ்சம்" என்றே தலைப்புச் செய்தி வெளியிட்டு, எத்தனை நாட்களாகிறது? தமிழக அரசு அதற்குப் பதிலளித்திருக்க வேண்டாமா? முதல் அமைச்சர் ஜெயலலிதா நம்மீது கோபப்படுவதற்குப் பதிலாக நாளேடுகளைப் படித்து அவருடைய ஆட்சி பற்றி மக்களிடம் என்ன கருத்து இருக்கிறது, பத்திரிகைகள் என்ன எழுதுகிறார்கள், உண்மை என்ன என்பதைப் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். ஹெலிகாப்டரிலேயே பறந்து கொண் டிருந்தால், கீழே நடப்பது புரியாது! கீழே இறங்கி வரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

முதலமைச்சர் ஜெயலலிதா கோவையில் பேசும்போது, அவருடைய மூன்றாண்டு கால ஆட்சியில் 33 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் 31,306 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட 33 நிறுவனங்களில், இதுவரை எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிலைத் தொடங்கியிருக்கின்றன என்ற விவரத்தைத் தெரிவிக்க முடியுமா? புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல நிறுவனங்களுடன் போடலாம். உண்மையில் தொழில் தொடங்கினால்தானே பயனளிக்கும்.

முதலமைச்சர் நேற்று பேசிய கூட்டத்திலேயே; 31,706 கோடி ரூபாய்க்கு 34 மாதங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டதில், 10,660 கோடி ரூபாய் முதலீடுகள் தான் கிடைக்கப் பெற்றதாக அவரே தெரிவித்திருக்கிறார். ஆனால் முதல் அமைச்சர் ஜெயலலிதா பேரவையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றியெல்லாம் விளக்கமாக நீண்ட நேரம் பேசி, அதற்கு நான் 6-2-2014 அன்றே விளக்கமாகப் பதில் கூறிவிட்டேன். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா அந்தப் பதிலைப் படிக்காத காரணத்தால், பேரவையிலே பேசியதையே கோவைக் கூட்டத்திலும் பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பற்றியும், முதலீடுகள் எவ்வாறு வெளி மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றன என்பது பற்றியும், நாங்கள் பொய் சொல்வதாக கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் பேசி யிருக்கிறாரே; இந்த ஆட்சியின் தொழில் வளர்ச்சிக்குச் சான்றாக மேலும் ஒரு உதாரணம் கூறுகிறேன்.

தி.மு. கழக ஆட்சியில் தொழிற்சாலைகளில் பணியாற்றிய பெண்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 93 ஆயிரம் ஆகும். ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற பெண்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 78 ஆயிரம். வேலை வாய்ப்பினை இழந்த பெண்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 15 ஆயிரம் ஆகும். இதுதான் தொழில் வளர்ச்சிக்கான அடையாளமா?

மற்றுமோர் உதாரணம்! தமிழக அரசு இரண்டு சிமெண்ட் தொழிற்சாலைகளை ஆலங்குளத் திலும், அரியலூரிலும் நடத்தி வருகிறது. ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையில், 2010-2011ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியில் உற்பத்தி 2 இலட்சத்து 3 ஆயிரத்து 40 டன்கள். அ.தி.மு.க. ஆட்சியில், 2011-2012ஆம் ஆண்டில் அங்கே சிமெண்ட் உற்பத்தி 1 இலட்சத்து 34 ஆயிரத்து 640 டன்கள். 68 ஆயிரத்து 400 டன்கள் குறைவு. அதுபோலவே அரியலூர் அரசு சிமெண்ட் தொழிற் சாலையில் கழக ஆட்சியில் உற்பத்தி 4 இலட்சத்து 90 ஆயிரத்து 35 டன்கள். அ.தி.மு.க. ஆட்சியில் உற்பத்தி 3 இலட்சத்து 88 ஆயிரத்து 55 டன்கள். கழக ஆட்சியை விட 1 இலட்சத்து ஓராயிரத்து 980 டன்கள் குறைவு. தொழில் வளர்ச்சி என்றால் உற்பத்தியும் தொடர்ந்து அதிகரித்திருக்க வேண்டாமா? இதுதான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகியிருப்பதற்கான அடையாளமா?

ஏன்? அம்மையாருக்கு அவ்வப்போது மிக வேண்டியவர் சுப்பிரமணியம் சுவாமி! அவர் அம்மையாரின் ஆட்சி பற்றி என்ன சொல்லி யிருக்கிறார் தெரியுமா? முதலமைச்சருக்குப் படிக்க நேரம் இருந்திருக்காது. இப்போது அவர் கூறியதை நான் மீண்டும் நினைவுபடுத்துகிறேன். "தொழில் வளம், பொருளாதார வளம் எதுவுமே இல்லை. தமிழகம், கர்நாடகம் என பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. ஆனால், இங்கிருக் கும் தொழில் அதிபர்களை, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தங்கள் மாநிலத்துக்குக் கவர்ந்து போயிருப்பதாக அறிந்தேன். தமிழகத்தில் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகள், கர்நாடகத்துக்குப் போயிருப்பதற் கான காரணம், அதை இங்கேயே தக்க வைக்க, தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்காததே! கடுமையான மின் பற்றாக்குறையும், அரசு அதிகாரிகளின் ஒத்துழையாமையும் எல்லா நிலைகளிலும் இருப் பதால், வெளி மாநிலங்களில் இருந்து யாரும் தமிழகத்தில், முதலீடு செய்ய முன்வரவில்லை. தகவல் தொழில் நுட்பத் துறையில், தமிழகம், நாட்டிலேயே முதன்மை யான மாநிலமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலை மாறியிருக்கிறது.

அதற்குக் காரணம், மாநில அரசு நிர்வாகம் சரியில்லாததே" என்று தெரிவித்திருக்கிறார் என்றால், முதலமைச்சர் ஜெயலலிதாவே, பொய் சொல்வது நாங்களா? அல்லது நீங்களா? இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

அனந்திக்கு எதிரான சூழ்ச்சி ஆரம்பம்!

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிரான அரசியல் சூழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதன் அடிப்படையில் இன்றையதினம் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அனந்தி சசிதரனுக்கு எதிரான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

இதில் அனந்தி இலங்கையின் சமாதானத்தை குழப்பும் வகையில் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது அனந்தியை எதிர்காலத்தில் கைது செய்வதற்கான ஒரு கட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அவரை ஏற்கனவே கைது செய்யவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி பின்னர் சர்வதேச மனித உரிமைகள் மாநாட்டின் நிமித்தம் அரசாங்க தரப்பினரால் மௌனமாக்கப்பட்டது. 

இந்த நிலையில் மீண்டும் அவரை கைது செய்வதற்கான சூழ்ச்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை இந்த சூழ்ச்சியின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய புள்ளி ஒருவர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

காணாமல் போன விமானம் குறித்த மர்மம் கண்டுபிடிக்கப்படாமலே போகலாம்: மலேசியா புதிய எச்சரிக்கை

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய விமானம் குறித்த மர்மம் கண்டுபிடிக்கப்படாமலே போகலாம் என மலேசியா தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஆஸ்திரேலியாவுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டிருப்பதுடன், விரைவில் ஆஸ்திரேலிய பிரதமர் டானி அபோட் மற்றும் முன்னாள் ஓய்வு பெற்ற இராணுவ உயர் அதிகாரி ஆங்குஸ் ஹாஸ்டன் ஆகியோரை சந்தித்து காணாமல் போன விமானம் குறித்து கலந்துரையாடவுள்ளார். 

கடந்த மார்ச் 8ம் திகதி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பீஜிங் நோக்கி சென்று கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 239 பயணிகளுடன் திடீரென வழி நடுவே காணாமல் போனது. இன்றுவரை பத்து விமானங்கள் 9 கப்பல்கள், இங்கிலாந்தின் ஒரு நீர் மூழ்கி கப்பல் என்பன தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகின்றன.

தென் இந்து சமுத்திரத்தில் காணாமல் போன விமான உதிர்ப் பாகங்களை ஒத்த பல பொருட்கள் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்த போதும் அவை எதுவும் விமானப் பாகங்களா என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் நேற்று மலேசிய அரசு ஒரு ஆச்சரியமான தகவலை வெளியிட்டிருந்தது. குறித்த விமானம் காணாமல் போயிருப்பதாக தீர்மானிப்பதற்கு முன்பதாக இறுதியாக விமானத்திலிருந்து கிடைத்த ஒலிப்பதிவில் ''Good Night Malaysian Three Seven Zero" என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதனை விமானிகள் சொல்லவில்லை எனவும் யார் இதனைச் சொன்னது மர்மமாகௌள்ளது என்பதுமே அத்தகவல்.

இலங்கை மீது நிறைவேற்றப்பட்டுள்ள ஐ.நா. தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்க பான் கீ மூன் வலியுறுத்தல்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மீதான தீர்மானம் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூற பணிக்கும் அதேவேளை, அதற்கான தீர்வுகளையும் நிறைவேற்றும். அத்தோடு நம்பகத்தன்மை, நிரந்த சமாதானம் மற்றும் ஒற்றுமையை ஊக்குவிப்பதாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இலங்கையின் இறுதி மோதல்களின் பின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் தொடர்பிலும் பான் கீ மூன் இலங்கை அரசாங்கத்திடம் ஞாபகப்படுத்தியுள்ளதாக பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளரான பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை நவிபிள்ளையால் பிடிவாதமாக செயற்படுத்த முடியாது: தினேஷ் குணவர்த்தன

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முனைப்பில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிடிவாதமான முறையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரான நவநீதம்பிள்ளையால் செயற்படுத்த முடியாது என்று இலங்கை அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் வரைமுறைகளை மீறியே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தியாவும் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலையில், அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முடியாது என்று இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா