கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவரது பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சமயமே குறித்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈ.சரவணபவன் இது தொடர்பாக தெரிவிக்கையினில் குறித்த அழைப்பு எனது கையடக்கத் தொலைபேசிக்கு மேற்கொள்ளப்பட்டிருந்தது. தமிழில் உரையாடிய ஒரு நபர், நீங்கள் தற்போது எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் எவ்வாறு போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேருகிறீர்கள் என்று பார்ப்போம் என்று அச்சுறுத்தும் பாணியில் பேசினார். 0779908892 என்ற இலக்கத்தில் இருந்தே அந்த அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது'' என்று தெரிவித்தார்.
எனினும் வடக்கிலிருந்து செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியலாளர்கள் நாள் தோறும் இத்தகைய கொலை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டே செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈ.சரவணபவன் இது தொடர்பாக தெரிவிக்கையினில் குறித்த அழைப்பு எனது கையடக்கத் தொலைபேசிக்கு மேற்கொள்ளப்பட்டிருந்தது. தமிழில் உரையாடிய ஒரு நபர், நீங்கள் தற்போது எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் எவ்வாறு போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேருகிறீர்கள் என்று பார்ப்போம் என்று அச்சுறுத்தும் பாணியில் பேசினார். 0779908892 என்ற இலக்கத்தில் இருந்தே அந்த அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது'' என்று தெரிவித்தார்.
எனினும் வடக்கிலிருந்து செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியலாளர்கள் நாள் தோறும் இத்தகைய கொலை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டே செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment