Tuesday 13 March 2012

தலைவரின் இருப்பை அறியும் முயற்சி - ஏகன்


இது ஒரு பல்கூட்டு முயற்சி. முடிந்துபோய்விட்டதாக சிறீலங்காஅரசு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரும் அந்த இயக்கத்தின்மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை கொஞ்சம்கூட குறைந்து போய்விடவில்லை.

அந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் கடந்த 34 மாதங்களாக பகிரங்கமாக எதுவுமே நடைபெறாத போதும் இன்னும் தமிழ் மக்கள் அந்த இயக்கத்தின்மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிறிதளவேனும் குறைந்ததாக இல்லை. இன்றும்கூட அந்த இயக்கத்தின் மீள்வருகையையும் அதன் போராளிகளின் முகங்களையுமே தமிழ் மக்கள் வழிமேல் விழிவைத்து பார்த்து இருக்கின்றார்கள்.



இந்த உளவியல் உறுதியை என்றுமே கணக்கெடுக்கவும் கணித்துவிடவும் ஆளும் தரப்பால், ஆக்கிரமிப்பாளர்களால் முடிந்ததில்லை. முடிவதுமில்லை. இதற்கு ஒரு முடிவு காணும் முயற்சியாக சில நடவடிக்கைகளை, சில காட்சிப்படுத்தல்களை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்குள் சிறீலங்கா இனவெறி அரசும், அதனுடைய பங்காளிகளான பிராந்திய வல்லாதிக்கமும் தள்ளப்பட்டுள்ளது.

மேற்கு நாடுகளுக்கும் இதனை ஒத்த தேவைகளும் இருக்கின்றன. மேற்கின் கதவுகளை இப்போது ஜனநாயக முறைப்படி தட்டிக்கொண்டிருக்கும் தமிழர்கரங்கள், அந்த வேண்டுகோள்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால் இதே மென்முறையிலேயே தொடர்வார்கள் என்பதற்கு எந்தவொரு உறுதிப்பாடும் இல்லை. மேற்குலகுக்கும் இந்த உணர்வை சிதைக்கவேண்டிய கட்டாயமும் அவசியமும் மிக அதிகமாகவே தேவை.

இவர்களுடைய தேவைகைள் ஒருபுறம் இருக்க. இன்னொரு பக்கத்தில் ஊடகத்தின் தேவை என்றும் ஒன்றுள்ளது. ஊடகம் தன்னை நடுநிலையாளனாக காட்டுவதற்காக தமிழர் தரப்பையும் குற்றஞ்செய்ததாகவும் காட்டவேண்டிய தேவை உள்ளது. அப்போதுதான் அவர்களுக்கு நடுநிலை ஊடகம் என்ற நற்சான்றிதழ் (?) கிடைக்க வாய்ப்பிருக்கும்.

இது முழுக்க முழுக்க ஊடகம் தன்னை தக்க வைத்துக்கொள்ளவும் தன்னுடனான போட்டி தொலைக்காட்சிகளை வென்றுவிடவும் செய்யும் பலவித முயற்சிகளில் ஒன்று. இசைப்பரியாவின் படுகொலையை கடந்தமுறை காட்சிப்படுத்திய தொலைக்காட்சி அதன்போது இசைப்பிரியாவின் உயிரற்ற உடலை காட்டியதுடன் அடுத்த காட்சியில் இசைப்பிரியா உயிருடன் இருந்த காலத்தின் காட்சி ஒன்றை ஒளிபரப்பும்போது இசைப்பிரியா கரும்புலி உடையுடன் பாடல் பாடுவதாகவே காட்டி இருந்தது.

இசைப்பிரியா புடவையுடன் செய்தி வாசிக்கும் காட்சிகளும், சாதாரண பெண்போல இருக்கும் காட்சிகளும் ஏராளம் இருக்கும்போது கரும்புலி உடையுடன் காட்சிப்படுத்தவேண்டிய தேவை என்ன? எந்தவொரு மேற்கின் ஊடகமும் முழுக்க முழுக்க எமக்கும் எமது சுயநிர்ணய உரிமை போராட்டத்துக்கும் ஆதரவானதாக இருந்ததில்லை. இருக்கபோவதுமில்லை. சில வேளைகளில் எமக்கு ஒரு சில மனித உரிமை தளங்களில் உதவக்கூடியவர்களாக இருப்பார்கள். அவ்வளவுதான்.

அத்துடன் தலைவரின் இருப்பை பற்றிய எந்தவொரு தகவலும் இன்னும் வெளிவராத நிலையில் தலைவரை பற்றிய கீழ்தரமான காட்சிப்படுத்தலை வெளிப்படுத்துவதன் மூலம் அதற்கு மறுப்பாக தலைவரின் இருப்பு சம்பந்தமான ஒளிப்பதிவு ஏதும் வெளிவரக்கூடும் என்றும் முகர்ந்து திரியும் வல்லாதிக்க புலனாய்வின் முயற்சிதான் தலைவரை பற்றிய பிழையான தகவல் கசிவுகள்.

இந்த ஒரு காட்சிப்படுத்தலின் விளைவாக ஒரு தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்த்து பல சக்திகள் காத்திருக்கின்றன. வரப்போகும் காட்சிப்படுத்தலை பார்த்துவிட்டு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு முகம்புதைத்து கிடக்கப்போகின்றோமா? இல்லை.

நந்திக்கரை ஓரத்தில் 2009 மே மாதத்தில் சிங்களஅரசு காட்டி எதனை சாதிக்க நினைத்ததுவோ அதனை இப்போது சில புலம்பெயர் தமிழ் பினாமிகளை வைத்து தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்து அதன் மூலம் மீண்டும் சாதிக்க எடுக்கும் முயற்சி என்று புரிந்துகொண்டு எழப்போகின்றோமா?

கேள்வி எழுப்பும் பிரபாகரனின் மரணம்: புதிய ஆவணப்படம் - பிரித்தானிய நாளேடு


"முதலாவது சூடு மேற்கொள்ளப்பட்ட பின்னர் சிறுவன் பாலச்சந்திரன் தரையில் விழுந்து கிடப்பதைப் பார்க்கும் போது – சுட்டவர் சிறுவனுக்கு மேலே நின்றவாறே தாக்குதல் நடத்தியுள்ளார். ஆகவே இது ஒரு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை"

இவ்வாறு சனல்4 வெளியிடவுள்ள புதிய காணொலி தொடர்பாக பிரித்தானியாவின் டெய்லி மெயில் நாளேட்டில் Claudia Joseph என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.



12 வயதேயான சிறுவன் ஒருவன் தரையில் கிடக்கிறான், அவனது இடுப்பில் சுடப்பட்டுள்ளது, அவனது மார்பில் ஐந்து துப்பாக்கிச் சூட்டுத் துவாரங்கள் காணப்படுகின்றன.

இந்தச் சிறுவன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் ஆவார்.

இச்சிறுவன் கொலை செய்யப்பட்ட, அதிர்ச்சி தரும் இக்காட்சியானது, இவ்வாரம் திரையிடப்படவுள்ள 'சிறிலங்காவின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற புதிய ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிநாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, ஜோன் ஸ்னோ தயாரித்த 'சிறிலங்காவின் கொலைக் களங்கள்' என்ற ஆவணப்படம் சனல்- 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டு ஒரு ஆண்டின் பின்னர், சிறிலங்காத் தீவில் இடம்பெற்ற யுத்தகால மீறல்களின் மேலதிக பதிவுகள் மற்றும் காட்சிகளுடனும் 'சிறிலங்காவின் கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற இந்த ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில், மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு யார் பொறுப்பாளிகள் என்பதை ஆராய்ந்து, அவற்றுடன் தொடர்புபட்ட ஆனால் மறைக்கப்பட்ட, இன்னமும் வெளிவராத பல புதிய காட்சிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இவ் ஆவணப்படத்தில், இதன் தொகுப்பாளரான ஸ்னோ நான்கு விடயங்களை முக்கியப்படுத்தியுள்ளார்.

அதாவது யுத்தகால மீறல்களை நேரில் பார்த்த சாட்சியங்கள், அவை தொடர்பான ஒளிப்படங்கள், இவை தொடர்பாக வெளிவந்துள்ள ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள், கானொலிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஸ்னோ இப்புதிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்புதிய ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மிகப் பயங்கரமான காட்சிகளுள், துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகிய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் 12 வயது நிரம்பிய மகனான பாலச்சந்திரன் பிரபாகரனின் இறந்த உடலமும் ஒன்றாகும்.

ஐந்து தடவைகள் வரை இந்தச் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டுள்ளதை, டுன்டே பல்கலைக்கழகத்தின் தடயவியல் வல்லுனரான பேராசிரியர் டெறிக் பௌண்டர் உறுதிப்படுத்தியுள்ளார்.

"இந்தச் சிறுவனின் மார்பில் உள்ள பொட்டுப் போன்ற பகுதியில் பச்சை குத்தப்பட்டது போன்ற அடையாளம் காணப்படுகின்றது.

இதனால் இந்தச் சிறுவனின் மார்பிலிருந்து இரண்டு அல்லது மூன்று அல்லது அதற்குக் குறைவான அடி தூரத்திலேயே, சுடப்பட்ட துப்பாக்கியின் குழல்வாய் இருந்துள்ளது" என பேராசிரியர் டெறிக் பௌண்டர் உறுதிப்படுத்துகிறார்.

"இதனால் இந்தச் சிறுவன் தன்னை நோக்கி நீட்டப்பட்டிருந்த துப்பாக்கியைத் தொடும் நேரத்தில், இவன் மீது துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டிருக்கலாம்.

முதலாவது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட பின்னர் இந்தச் சிறுவன் பின்புறமாக விழுந்திருக்கலாம். அதன் பின்னர் அச்சிறுவன் மீது மேலும் இரு துப்பாக்கி வேட்டுக்கள் சுடப்பட்டிருக்கலாம்" எனவும் தடயவியல் வல்லுனரான பேராசிரியர் டெறிக் பௌண்டர் மேலும் தெரிவித்துள்ளார்.

"முதலாவது சூடு மேற்கொள்ளப்பட்ட பின்னர் இச்சிறுவன் தரையில் விழுந்து கிடப்பதைப் பார்க்கும் போது இவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் இச்சிறுவனுக்கு மேலே நின்றவாறே தாக்குதலை நடத்தியுள்ளார்.

ஆகவே இது ஒரு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை" எனவும் பேராசிரியர் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க, தற்போது வெளியிடப்படவுள்ள ஆவணப்படத்தில், இந்தச் சிறுவனின் தந்தையான வேலுப்பிள்ளை பிரபாகரன் தலையில் காயம்பட்ட நிலையில் இறந்து கிடப்பது போன்ற காட்சியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது உண்மையில் உத்தியோகபூர்வமற்ற முறையில் கிடைக்கப் பெற்ற ஆவணக்காட்சியாகும்.

பிரபாகரனின் உடல் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட போது, அவரது தலை துணியொன்றினால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது.

இந்தக் காட்சியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இதற்கப்பால் பிரபாகரன் முதலில் புலிகளின் சீருடையில் இறந்து கிடப்பது போன்றதொரு ஒளிப்படமும், பின்னர் நிர்வாணமான நிலையில் கிடப்பதைக் காண்பிக்கும் ஒளிப்படம் ஒன்றும், இறுதியில் இவரது உடலம் சேறு பூசப்பட்ட நிலையில் இருப்பதைக் காண்பிக்கும் ஒளிப்படமும் தற்போது திரையிடப்படவுள்ள 'சிறிலங்காவின் கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' என்ற புதிய ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

"இவரது தலையில் காணப்படும் காயத்தை நன்கு ஆராய்ந்து பார்க்கும் போது, விசை கூடிய [கனரக] துப்பாக்கி ஒன்றினால் சுடப்பட்ட அடையாளமாகவே இது காணப்படுகிறது" எனவும், இதனால் இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதையும் பேராசிரியர் பௌண்டர் மீளவும் உறுதிப்படுத்துகிறார்.

"ஆயுதப் போர் நடைமுறைகளின் படி, தலையில் தனிச்சூட்டுக் காயம் ஒன்று அதிக விசையுடன் மேற்கொள்ளப்படுவதென்பது அசாதாரணமானது. இலக்கு வைக்கப்படும் குறிப்பிட்ட நபரொருவர், அசையா நிலையிலேயே இவ்வாறான தலைச்சூடொன்றை மேற்கொள்ள முடியும்" எனவும் பேராசிரியர் கருதுகிறார்.

சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீறல்களை அனைத்துலக சட்ட விதிமுறைகளுக்கேற்ப சிறிலங்கா வெளிக்கொண்டு வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி அமெரிக்கா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ள நிலையிலேயே சனல் 4 தொலைக்காட்சி புதிய ஆவணப்படத்தை திரையிடவுள்ளது.

"சிறிலங்கா அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்களை வெளிக்கொண்டு வருவதற்கான புதிய சாட்சியங்களை இந்தத் தடயவியல் விசாரணையானது வெளிப்படுத்தி நிற்கின்றது" என ஸ்னோ தெரிவித்துள்ளார்.

"ஆனால் இவ் ஆவணப்படமானது சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்த கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டிய நிலையிலுள்ள, அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்கள் யாரென்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.

அத்துடன் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்த இரத்தக் கறைபடிந்த இராணுவத் தாக்குதல்களை வழிநடாத்திய இரணுவத் தளபதிகள் தொடக்கம் நாட்டின் அதிபர் மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலர் வரை அவர்கள் எவ்வகையில் பொறுப்புக் கூறவேண்டும் என்பதையும், உண்மையில் இவர்கள் மீது இன்னமும் சரியான, முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டும் விதமாக ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது" எனவும் ஸ்னோ மேலும் தெரிவித்துள்ளார்.

"இவ்வாறான சாட்சியங்களை வெளிக்கொண்டு வரவேண்டியது ஊடகவியலாளர்களாகிய எமக்கான கடமையாகும்.

இந்த வகையில் இப் புதிய சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு உரிய விசாரணைகளை மேற்கொள்வதுடன், தமது வாழ்வை இழந்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீதியை வழங்க வேண்டிய முக்கிய பொறுப்பு ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்திற்குரியதாகும்.

இதேபோன்ற சிரியப் படுகொலைகள் தொடர்பாக நாம் ஆவணக் காட்சிகளைத் தயாரிக்கும் போது அது எமக்கான முக்கிய பணியாக உள்ளது" எனவும் ஸ்னோ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள், ஆடைகள் களையப்பட்டு தலையின் பின்புறமாகச் சுடப்பட்டவர்கள் போன்ற காட்சிகளை உள்ளடக்கிய கானொலியைப் பார்க்கும் போது, சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இனப்படுகொலை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பதை தெட்டத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும் என நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

"சிறிலங்கா இராணுவத்தின் அதியுச்ச அதிகாரத்தை அதிபர் ராஜபக்சவே கொண்டுள்ளார்" என அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய நிகழ்ச்சித் திட்ட இயக்குனர் சாம் சரீப் தெரிவித்துள்ளார்.

"ராஜபக்ச சிறிலங்கா இராணுவத்தின் பிரதம தளபதியாக உள்ளார். அத்துடன் பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்ச தான் எவ்வாறு இராணுவ மூலோபாயங்களை வகுப்பதில் பங்கேற்றுக் கொள்கிறேன் என்பதை பெருமையுடன் பகிரங்கப்படுத்தி வருகிறார்.

ஆகவே இந்நிலையில் இராணுவ அதிகாரபீடத்தை தம்வசம் வைத்திருக்கும் இவ்விருவரும் யுத்த மீறல்கள் தொடர்பிலும் பொறுப்புக் கூற வேண்டும்" எனவும் சாம் சரீப் மேலும் தெரிவித்துள்ளார்.

"ஆகவே யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்லா மீறல்களுக்கும் இவ்விருவருமே பதில் கூறவேண்டும். குருதி தோய்ந்த, எதிர்பார்க்கப்பட்ட படி இரத்த ஆறு ஒடக் காரணமாக இருந்த சிறிலங்காவின் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், இறுதி வாரங்களில் வழங்கப்பட்ட கட்டளைச் சங்கிலியை ஆராய்ந்து பார்த்தால், மேற்கொள்ளப்பட்ட மீறல்களுடன் அது ஏதோவொரு விதத்தில் காரணமாக அமைந்திருக்கும்" எனவும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய நிகழ்ச்சித் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களில் தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் சிறிலங்கா அரசாங்கத்தால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள் தொடர்பாக ஐ.நா வால் வெளியிடப்பட்ட நம்பகமான அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களையும் ஸ்னோ தான் தொகுத்துள்ள புதிய ஆவணப்படத்தில் உள்ளடக்கியுள்ளார்.

அத்துடன் இறுதி யுத்தத்தின் போது அகப்பட்டுக் கொண்ட பொதுமக்கள் மீது உணவுத்தடையைப் போடுவதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் அந்த மக்களின் எண்ணிக்கையை குறைத்து அறிவித்ததாக கொழும்பிலிருந்த அமெரிக்கத் தூதரகத்தின் இரகசியத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யுத்த வலயத்திற்குள் இருந்த பொதுமக்கள் திட்டமிட்ட ரீதியில் இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக ஐ.நா வால் ஆராயப்பட்ட செய்மதி மூலம் பெறப்பட்ட ஒளிப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன.

அதேவேளை, சனல் 4 தொலைக்காட்சி வெளியிடும் 'மிகக் கொடிய யுத்தக் குற்றங்களை' தாம் அடியோடு நிராகரிப்பதாக பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா உயர்ஆணையகம் தெரிவித்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி தொடர்ந்தும் சிறிலங்கா விவகாரம் தொடர்பில் போலியான, விரோதமான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், சிறிலங்கா அரசாங்கத்தின் ஆட்சி பீடத்திலுள்ள உள்ளவர்களையும் இராணுவத் தளபதிகளையும் குற்றம்சாட்டும் பாணியில் தொடர்ந்தும் பொய்யான, ஏற்றுக் கொள்ள முடியாத சாட்சியங்களை முன்வைப்பதாகவும், சிறிலங்கா உயர் ஆணையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சனல் 4 தொலைக்காட்சி 'சிறிலங்காவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தத்துக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள்' தொடர்பான தகவல்களை வெளியிடுவதை தவிர்த்து வருவதாகவும், இவ்வாறான நடவடிக்கை 'சிறிலங்காவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மிகப் பயனுள்ள, உறுதிப்பாடான மீளிணக்கப்பாட்டு முயற்சிக்கு' பங்கம் விளைவிப்பதாக அமையும் எனவும் உயர் ஆணையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கதை விவாதத்தில் கே.வி ஆனந்த்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினி உடல்நிலை சரியான பிறகு நடிக்க இருக்கும் படம் 'கோச்சடையான்'. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரஜினியுடன் தீபிகா படுகோன், சரத்குமார்,ஷோபனா, நாசர், ருக்மணி, ஆதி, ஜாக்கி ஷெரஃப் மற்றும் பலர்  ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மாற்றான் படத்தை இயக்கியபடி, ரஜினியை வைத்து இயக்கும் படத்துக்கான கதை விவாதத்திலும் பங்கேற்று வருகிறார் கே.வி ஆனந்த்.


ஷங்கரின் புது டீம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இயக்குனர் ஷங்கருக்கு சுஜாதாவின் வசனம் என்றால் மிக ப்ரியம். தற்போது அவர் மறைவிற்கு பிறகு, நண்பன் படத்தில் தானே வசனகர்த்தா ஆகிய ஷங்கர் தன்னுடன் கார்கியும் சேர்த்து கொண்டார். இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் சுபா வசனகர்த்தாவுடன் விரைவில் இணைய உள்ளார். சுபா என்பவர்கள் ஒருவர் அல்ல இருவர். சு-சுரேஷ், பா-பாலகிருஷ்ணன் இதன் சுருக்கமே சுபா. இவர்கள் இருவரும், இயக்குனர் கே.வி,ஆனந்திடம் திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்றி வருகின்றனர். கனா கண்டேன், அயன், கோ போன்ற படங்களே சுபாவின் சிறந்து சான்றுகள். இவர்களது உழைப்பு ஷங்கருக்கு பிடித்துப்போக அடுத்தப் படத்தில் நாம் இணைந்து பண்ணலாம் என்று ஷங்கர் கூறியிருக்கிறார்.


ஏர்போர்ட் அதிகாரிகளுடன் நடிகை சோனா வாக்குவாதம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரெடிமேட் துணிகளுக்கு சுங்கத் தீர்வை செலுத்துவது தொடர்பாக, விமான நிலைய அதிகாரிகளுடன் நடிகை சோனா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தாய் ஏர்லைன்ஸ் விமானம் பாங்காக்கில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள், தீவிர சோதனை நடத்தினர். அந்த விமானத்தில் பிரபல நடிகை சோனாவும் வந்தார். அவரது உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதித்தபோது அதில் ஏராளமான ரெடிமேட் துணிகள் இருந்தன. அதிகாரிகள் அதற்கு சுங்கத் தீர்வை செலுத்த வேண்டும் என்றனர். ஆனால் நடிகை சோனா, ''நான் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு உட்பட்டுத்தான் பொருட்கள் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் எப்படி எனக்கு வரி போடுவீர்கள்'' என்று வாக்குவாதம் செய்தார்.

ஆனால் சுங்க அதிகாரிகள், ''நீங்கள் கொண்டு வந்துள்ள ஆடைகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை வரி செலுத்த வேண்டும்'' என்றனர். இதனால் சோனாவுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் நீண்ட நேரம் கடும் வாக்குவாதம் நடந்தது. பின்னர் நடிகை சோனா, ''என்னிடம் சுங்கத் தீர்வை செலுத்துவதற்கான பணம் இல்லை. எனது உடைமைகளை இங்கேயே விட்டுச் செல்கிறேன். நாளை என் உதவியாளர் யாரையாவது அனுப்பி சுங்கத் தீர்வை செலுத்திவிட்டு பெற்றுக் கொள்கிறேன்'' என்று கோபமாக கூறிவிட்டு சென்றார்.


Monday 12 March 2012

வடமராட்சி கிழக்கில் அத்துமீறும் சிங்கள மீனவர்கள்!


தென்னிலங்கையிலிருந்து வருகைதந்து வடமராட்சி கிழக்கில் அத்துமீறில் தொழில் செய்யும் சிங்கள மீனவர்களால் தாம் கடற்றொழில் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளதாக, அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.இவர்கள் வெற்றிலைக்கேணி இராணுவத்தினரது பாதுகாப்புடன் இராணுவ முகாமிற்கு அருகில் தங்கியுள்ளனர் என்றும் 25 படகுகளை தற்போது வைத்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

குறித்த மீனவர்களின் நடவடிக்கையினால், வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, தாளையடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இராணுவத்தினருக்கு பொது மக்கள் தெரியப்படுத்தியபோது, ஜந்து நாட்களில் அவர்கள் சென்று விடுவார்கள் என்று இராணுவத்தினர் கூறியுள்ளனர். எனினும், அவர்கள் தொடர்ச்சியாக அங்கு தங்கியிருக்கின்றனர் என தமிழ் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில், தாம் சம்பந்தப்பட்ட சகலருக்கும் தெரியப்படுத்தியபோதும், இதுவரையில் நடவடிக்கைகள் இல்லையென்றும் இதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளாது விட்டால் இங்குள்ள மீனர்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையே தோன்றும் என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் மேரி கொல்வினின் இறுதி நிகழ்வில் பங்கேற்ற புலம்பெயர் தமிழர்கள்


சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களுக்குச் சாட்சியாக இருந்தவரும், சிரியாவில் செய்தி சேகரிப்பின் போது அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டவருமான ஊடகவியலாளர் மேரி கொல்வினின் இறுதிநிகழ்வு நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் புலம்பெயர் தமிழர்களும் கலந்து கொண்டு இறுதி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

‘துணிச்சல்மிக்க ஊடகவியலாளர்களின் முடிசூடா ராணி‘ என்று புலம்பெயர் தமிழர்கள் மேரி கொல்வினுக்குப் புகழாரம் சூட்டியுள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புலம்பெயர் தமிழர்களின் குழுவொன்று பெரியதொரு அமெரிக்க கொடியை ஏந்தியபடி இறுதி ஊர்வலம் ஆரம்பமான நியுயோர்க்கில் Oyster Bay இல் உள்ள மேரி கொல்வினின் வீட்டின் முன் திரண்டிருந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

பின்னர் சென்.டொமினிக்கன் றோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற பிரார்த்தனைகளை அடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.



மேரி கொல்வினின் இறுதி நிகழ்வில பங்கேற்ற புலம்பெயர் தமிழர்களில் ஒருவரான சீதாராம் சிவம், மேரி கொல்வின் தமிழர்கள் மீதான வன்முறைகளை பத்தாண்டுகளுக்கு முன்னர் உலகின் கவனத்துக்கு கொண்டு வந்தவர் என்றும் அவருக்கு இறுதி வணக்கத்தைச் செலுத்த வேண்டியது தமது கடமை என்றும் கூறியுள்ளார்.

மிகவும் நெருக்கடியான சூழலில் போர் வலயங்களுக்குச் சென்ற அவர், தமிழர்களின் நிலை பற்றிய உண்மைகளை உலகிற்குக் கூறியவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஊடகவியலாளர் மேரி கொல்வினின் இறுதி நிகழ்வில் பெருந்திரளான ஊடகத்துறையினரும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

பாலச்சந்திரன் படுகொலை: வீடியோ ஆதரங்கள் வெளியானது !


தேசிய தலைவர் பிரபாகரனின் கடைசி மகனை இலங்கை இராண்வம் கொலைசெய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சனல் 4 தொலைக்காட்ச்சி இதனை நாளை மறுதினம் வெளியிட உள்ள நிலையில், இது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 மெய்பாதுகாப்பாளர்களோடு சரணடைந்த பாலச்சந்திரனை இராணுவம் ஈவிரக்கம் இன்றி நெஞ்சில் 5 முறை சுட்டுள்ளது. இரத்தத்தை உறையவைக்கும் இக் காட்சிகளை சனல் 4 தொலைக்காட்ச்சி புதன்கிழமை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இந்தக் காணொளியைக் காணமுடியாத நிலை உள்ளது. காரணம் சனல் 4 தொலைக்காட்ச்சியின் இணையம் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.








அமெரிக்கா ஈழப்போராட்டத்தை நடத்தி வருகிறது குணதாச குமுறல் இந்தியாவும் எமக்கு உதவாது


பிரேரணையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி தமிழீழத்தை இலங்கையில் அமைத்து விட்டால் அமெரிக்காவோ ஏனைய மேற்குலக நாடுகளோ எவ்விதமான குற்றச்சாட்டுக்களையும் முன் வைக்கப் போவதில்லை. இன்று புலிகளுக்கு பதிலாக அமெரிக்கா இலங்கையில் தனிநாட்டுக்கான போராட்டத்தை நடத்தி வருகின்றது என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கூறுகையில்,

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா முன் வைத்துள்ளது. இதனை எதிர்கொள்ள அரசாங்கம் இந்தியாவின் உதவியை நாடிச் செல்கின்றது. ஆனால் இந்தியா சுயநலவாத நாடாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஜெனீவாவில் வைத்து உதவி செய்யாது.

பயங்கரவாதத்தை நாட்டில் முற்றாக ஒழித்துள்ள போதிலும் அதனை அனுபவிக்கக் கூடிய சூழலை வெளிநாட்டு சக்திகளும் பிரிவினைவாத கொள்கை வாதிகளும் விடுவதில்லை. இதன் ஒரு வெளிப்பாடே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையும் இங்கு இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுமாகும். இவை அனைத்துமே போலியானவை.

வடக்கு கிழக்கை தனிநாடாக்கினால் சகல விதமான மனித உரிமைகள் பிரச்சினையும் மௌனித்து விடும். எவ்வாறாயினும் தற்போது நாட்டை பாதுகாக்க பங்களிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. அரசாங்கம் ஜெனீவாவில் இந்தியாவை நம்பாது மாற்று உத்திகளைக் கையாள வேண்டும் என்றார்.

சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்திடம் தலைவர் குறித்த’பரபரப்பான’வீடியோவும் சிக்கியுள்ளது?


லண்டனைச் சேர்ந்த சனல் 4 டிவி நிறுவனத்திடம் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த பரபரப்பான வீடியோவும் கிடைத்துள்ளதாக டெய்லி மெயில் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மிகக் கொடூரமான முறையில் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்தரின் மிக மிக நெருக்கமான முறையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும், அதுதொடர்பான வீடியோ காட்சியை புதன்கிழமையன்று (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை) ஒளிபரப்பப் போவதாக சானல் 4 நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அந்த வீடியோ காட்சியில் பிரபாகரன் குறித்த பரபரப்புக் காட்சியும் இடம் பெற்றிருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.
Sri Lanka’s Killing Fields என்ற பெயரில், 2 ஆண்டுக்கு முன்பு, இலங்கையில் நடந்த ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள், படுகொலைகள் குறித்த ஆவணப்படத்தை சனல் 4 ஒளிபரப்பி உலகையே அதிர வைத்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக Sri Lanka’s Killing Fields: War Crimes Unpunished என்ற பெயரில் புதிய ஆவணப்படத்தை அது தயாரித்துள்ளது.

இதில்தான் பாலச்சந்திரன் படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது. அதிலேயே பிரபாகரன் குறித்த காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் தற்போது தகவல்கள் கூறுகின்றன.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடக் கூடிய இந்த புதிய வீடியோவில், உள்ள காட்சிகள் குறித்து இந்த வீடியோ காட்சிகளின் நம்பகத்தன்மையைப் பரிசோதித்து இவை உண்மைதான் என்று தெரிவித்துள்ள தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பெளன்டர் கூறுகையில், சனல் 4 நிறுவனத்திற்கு பாலச்சந்திரன் படுகொலைச் சம்பவம் தவிர்த்து அவனது தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த ஒரு படமும் கிடைத்தது.

அதில் பிரபாகரனின் தலையில் மிக பலத்த காயம் காணப்பட்டது. அவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பதாக உணர்கிறோம். இந்த வீடியோ காட்சி அதிகாரபூர்வமானதல்ல என்றும் நாங்கள் உணர்கிறோம்.

பிரபாகரனும், பாலச்சந்திரன் பாணியில் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதாக உணர்கிறோம். அவரது தலையில் பாய்ந்துள்ள குண்டுக் காயத்தைப் பார்க்கும்போது மிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவர் சுடப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு ஆயுதப் போரின்போது ஒருவரை ஒரே ஒரு துப்பாக்கிச் சூட்டில் கொல்வது என்பது இயலாத காரியம். அது சாத்தியமும் அல்ல. ஆனால் பிரபாகரன் கொல்லப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது அவரை உயிருடன் பிடித்துப் பின்னர் கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். மேலும் அசையாத நிலையில் ஒருவரை சுடும்போது எப்படிப்பட்ட குண்டுக் காயம் ஏற்படுமோ அதே போலத்தான் இந்த குண்டுக் காயமும் தெரிகிறது. எனவே பிரபாகரனையும் கூட கட்டி வைத்து சுட்டுக் கொன்றிருக்கலாம்.

இந்த வீடியோ காட்சிகளில் கொல்லப்பட்டுள்ள பலரும் கண்களை மூடியும், கைகள் கட்டப்பட்ட நிலையிலும், ஆடைகளின்றியும் காணப்படுகின்றனர். இதை வைத்துப் பார்க்கும்போது பிடிபட்ட அத்தனை தமிழர்களையும் திட்டமிட்டு படுகொலை செய்திருப்பதாக தெரிகிறது. நிச்சயம் அரசின் உயர்மட்டத்தின் அனுமதி இல்லாமல் இதைச் செய்திருக்க முடியாது என்பது எங்களின் கருத்தாகும் என்றார்.

ஈழப் போர் முடிந்த ஓரிரு நாட்களில் இதுதான் பிரபாகரன் பிணம் என்று கூறி ஒரு வீடியோக் காட்சியையும், புகைப்படங்களையும் இலங்கை இராணுவம் வெளியிட்டது. நந்திக் கடல் பகுதியிலிருந்து பிரபாகரன் உடல் மீட்கப்பட்டதாகவும் அது கூறியது. அந்தப் படத்தில் பிரபாகரன் என்று கூறப்பட்டவரின் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்தது. மேலும், அந்தப் படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன.

முதலில் சீருடை அணிந்த நிலையில் பிரபாகரன் உடல் என்று காட்டினர். பின்னர் உடைகள் இல்லாமல் ஒரு உடலைக் காட்டினர். பிறகு சேறு படிந்த நிலையில் ஒரு உடலைக் காட்டினர். மேலும் பிரபாகரன் மரணச் சான்றிதழையும் இதுவரை இலங்கை அரசு இந்தியாவுக்கு கொடுக்கவில்லை. இதனால் பிரபாகரன் உண்மையில் உயிரிழந்து விட்டாரா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எங்குமே இல்லை. இந்த நிலையில் சனல் 4 பட வீடியோக் காட்சிகள் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பது அதைப் பார்த்த பிறகுதான் கூற முடியும்.

இந்த ஆவணப்படத்தை தயாரித்தவரான ஜான் ஸ்னோ கூறுகையில், புதிய ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அனைத்தையும் நாங்கள் தீவிர தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவை அனைத்தும் உண்மையானவை, திரிக்கப்பட்டவை அல்ல என்பது தெரிய வந்தது.

இந்த மிகப் பெரிய போர்க்குற்றச் செயலில் இலங்கை அரசும், இராணுவமும் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த செயல்களுக்கு இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச, அவரது தம்பி கோத்தபாய ராஜபக்ச, அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோர்தான் நேரடிப் பொறுப்பாவார்கள். சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்த படுகொலைகளை நடத்திய ராணுவத்தினர் அத்தனை பேருமே மிகப் பயங்கர கொலைக் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். இராணுவ அதிகாரிகள் முதல் அதிபர் வரை, அவரது தம்பிவரை அனைவருமே இதுவரை விசாரிக்கப்படாமல் உள்ளது வியப்பளிக்கிறது.

ஒரு பத்திரிக்கையாளராக நடந்த உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டியது எங்களது கடமை. இனி ஐ.நா சபையும், சர்வதேச சமுதாயமும்தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதுதான் பரிதாபமாக உயிரிழந்து போன ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் மரணத்திற்கு நியாயமானதாக அமையும்.

நாம் தற்போது சிரியாவைப் பற்றி அதிகம் பேசுகிறோம், கவலைப்படுகிறோம். எனவே இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்தும் நாம் கண்டிப்பாக கவலைப்பட்டாக வேண்டும். அது முக்கியமானது என்றார்.

இந்த வீடியோ குறித்து ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆசியா பிராந்தியத்துக்கான இயக்குநர் சாம் ஜாப்ரி கூறுகையில், இலங்கை இராணுவத்தின் உயர்ந்தபட்ச தலைவர் அதிபர் ராஜபக்சதான். இராணுவத்தின் தலைமை கமாண்டரும் அவர்தான். அதேபோல ஈழப் போரின்போது இராணுவ உத்திகளை தான்தான் வகுத்து செயல்படுத்தியதாக அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவும் பலமுறை பெருமை பொங்கக் கூறியுள்ளார்.

எனவே நடந்த சம்பவங்கள் குறித்து குறிப்பாக பாலச்சந்திரன், பிரபாகரன் குறித்து இவர்கள் இருவரும் நிச்சயம் விசாரிக்கப்பட்டாக வேண்டும். ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மிகப் பெரிய அளவில் போர்க்குற்றம் நடந்தது என்பதில் சந்தேகமே இல்லை. மிகக் குறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய அளவிலான மனிதப்படுகொலைகள் நடந்துள்ளன என்றார்.

ஸ்னோ தொடர்ந்து கூறுகையில், ஐ.நா. வின் பாதுகாக்கப்பட்ட இரகசிய அறிக்கையில் சில முக்கியத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது பாதுகாப்பு வளையப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த அப்பாவி பொதுமக்களை வேண்டும் என்றே திட்டமிட்டு குண்டு வீசிப் படுகொலை செய்தனர். இது அரசுக்குத் தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல பாதுகாப்பு வலயப் பகுதியில் தஞ்சமடைந்த மக்கள் குறித்த உண்மையான எண்ணிக்கையை இலங்கை அரசு மறைப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை பட்டினி போட்டுக் கொல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் குறி வைத்துக் கொல்லப்பட்டதாக ஐ.நா. நிபுணர் குழுவும் தெரிவித்துள்ளது. எனவே இதுகுறித்தெல்லாம் விசாரிக்கப்பட்டாக வேண்டும் என்றார்.

Oneindia.in

கண்டியில் புலிக்கொடியும் அமெரிக்ககொடியும்.


இலங்கை அரசானது தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து, அதனை யுத்தத்தில் வெற்றி கொண்டமைக்காக நாடெங்கும் உள்ள விகாரைகளில் விசேட பூஜைகள் மேற்கொள்ளவுள்ளதாம். இதனடிப்படியில் விசேடமாக, கண்டி மாவட்டத்தில் உள்ள பல விகாரைகளில் பல்வேறு சமய வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை மறைமுகமாக எதிர்க்கவே இது நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்த பிரசாரச் சுவரொட்டிகள் கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் சுவரொட்டிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியும் அமெரிக்கக் கொடியும் இணைக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தூதரகத்தை மேலும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக இது அமையலாம் எனக் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா விவகாரமூடாக ஜெயலலிதாவை வளைத்துப்போடத் திட்டம்!

இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் அமெரிக்கா ஒரு பிரேரணையை முன்வைக்க இருப்பதும், அதனை முறியடிக்க இலங்கை ஒருபக்கம் படாத பாடு பட்டுக்கொண்டு இருக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் அது நடந்துவிடவேண்டும் என இலங்கை அரசு செய்ய முடியாத பல காரியங்களைச் செய்துவருகிறது. ஆனால் இந்த சைக்கிள் காப்பில் சோனியா காந்தி மட்டும் தனது நரித்தனத்தைக் காட்டத் தவறவில்லை.

சமீபத்தில் நடந்த தேர்தல் சிலவற்றில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது யாவரும் அறிந்ததே. இதனை ஈடுகட்டவும், தற்போது தமிழ் நாட்டில் மிகுந்த செல்வாக்கோடு இருக்கும் செல்வி ஜெயலலிதாவை தன் பக்கம் இழுக்கவும் சோனியா புதிய திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளார்.

செல்வி ஜெயலலிதா ஈழத் தமிழர் தொடர்பான தனது நிலைப்பாட்டை சற்று மாற்றியுள்ளமை யாவரும் அறிந்ததே. இதற்கு சனல் 4கின் காணொளியும் ஒரு காரம் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு மனம் மாறியுள்ள செல்வி ஜெயலலிதா அவர்கள், சமீபத்தில் தமிழ் நாட்டிற்கு இலங்கையைச் சேர்ந்த பிரமுகர்கள் வருவதாயின் தனக்கு இந்திய அரசு முன்கூட்டியே அறிவிக்கவேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதனை உடனே தாம் கருத்தில் கொள்வதாகவும், மற்றும் இதனை ஒரு பாரிய விடையமாக எடுத்து, படு முக்கியத்தும் கொடுத்து எஸ்.எம்.கிருஷ்ணா செய்திகளை வெளியிட்டிருந்தார்.

அதுபோக இப்போது, ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணையை இந்தியா எதிர்க்கக்கூடாது என மற்றுமொரு கடிதத்தை செல்வி ஜெயலலிதா டெல்லிக்கு அனுப்பியுள்ளார். இதனையும் காங்கிரஸ் அரசு ஒரு பெரியவிடையமாக்கி படு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இது குறித்து பேசுவதற்கும் காங்கிரஸ் தயாராக உள்ளதாக சில சமிஞ்சைகள் விடுக்கப்பட்டுள்ளதாம்.

காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் இது குறித்து தாம் ஜெயலலிதாவோடு பேச முற்பட்டுள்ளனர். ஆனால் அதற்கு முன் உஷாரான ஜெயலலிதா இதனைத் தட்டிக் கழித்துள்ளார் என சில செய்திகள் தற்போது கசிந்துள்ளது. செல்வி ஜெயலலிதாவோடு எப்படியாவது சமரசம் பேச ஏதாவது ஒரு கதவாவது திறக்காதா என காங்கிரஸ் ஏங்கி நிற்கிறது... இதிலும் ஈழப் பிரச்சனையை ஈனத்தனமாக அது பயன்படுத்த நினைக்கிறது !

படுகொலைகளைப் பார்த்து பராக் ஒபாமா அதிர்ச்சி!

ஆப்கான் கந்தகார் பகுதியில் வீறு கொண்ட அமெரிக்கப் படையினன் ஒருவன் நடாத்திய வெறியாட்டத்தில் கந்தகார் பகுதியில் 16 அப்பாவிப் பொது மக்கள் கொன்று வீசப்பட்டது தெரிந்ததே. இந்த விவகாரம் தொடர்பாக ஆப்பான் அதிபர் ஹர்மீட் கார்சாயுடன் தொலைபேசி வழியாக உரையாடிய அமெரிக்க அதிபர் தமது வருத்தங்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு குர்ரான் எரிப்புப் போராட்டத்தால் உருவேறியுள்ள ஆப்கானில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல நிலமைகளை மோசமாக்கியுள்ளது. ஆப்கான் பிணக்குழியாக மாறப்போகிறது என்று தலபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். உடனடியாக போதிய விளக்கம் தரவேண்டுமென ஆப்கான் அதிபர் கேட்டாலும், நிகழ்வை பொதுமைப்படுத்தி பார்க்க வேண்டாம் என்று அமெரிக்கா கேட்டுள்ளது. நடந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட படையினனின் செயல் அவன் கைதாகியுள்ளான் விசாரணைகள் தொடர்கின்றன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த 2003ம் ஆண்டில் இருந்து முடிவே இல்லாமல் தொடரும் போர் நேட்டோ படைகளுக்கு பலத்த நம்பிக்கை வரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையே அங்கிருந்து அடுத்தடுத்து வரும் அவல நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. மேலும் ஆப்கான் படைகளுக்கு பயிற்சி கொடுத்தாலும் அதனால் யாதொரு பயனும் கிடையாது என்பது தற்போது கள யதார்த்தமாக உள்ளது. ஆப்கான் படைகளை தனியே அனுப்பினால் கொள்ளை, கொலை போன்றவற்றை சர்வ சாதாரணமாக செய்யும் ஒழுக்கம் கெட்டவர்களாக உள்ளார்கள். இப்போது அவர்களை கண்காணித்தபடி நேட்டோ படைகள் போகிறது. ஆகவே ஆப்கானில் இருந்து இறுதிவரை வெற்றியுடன் வெளியேற முடியாது என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்துள்ளது. நேட்டோ செயலர் ஆனஸ் போ ராஸ்முசனோ 2014 ல் ஆப்கானில் இருந்து நேட்டோ வெளியேறும் என்ற உறுதியை இனி தம்மால் தர முடியாது என்று சற்று முன்னர் கூறியுள்ளார்.

அதேநேரம் சிரியா சென்ற கொபி அனான் முன்னரே எதிர்பார்த்தபடி பேச்சுக்களில் வெற்றிபெற தவறியுள்ளார். நேற்று ஞாயிறு 26 சிறு பிள்ளைகளும் 21 பெண்களும் கோம்ஸ் நகரத்தில் கழுத்தறுத்தும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவர்கள் மீது பெற்றோல் ஊற்றி கொழுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 58 பேரை நேற்று மட்டும் கொன்று தள்ளியது ஆஸாட் படைகள். இவர்களில் 12 போராளிகளும் அடக்கம். சிரியா உலகப் பொருளாதாரத்தை மேலும் மோசமடைய செய்யப் போகிறது என்பது தெரிகிறது. சிரியாவுடன் போரை ஆரம்பித்தால் உலகப் பொருளாதாரம் மறுபடியும் ஒரு பாதாள வீழ்ச்சியை சந்திக்கும். இப்போது டபிள் டிப்பில் விழுந்துள்ள உலகப் பொருளாதாரம் றிபிள் டிப்பில் விழும்.

இதற்குள் பிரான்சில் அதிபர் தேர்தல்கள் களைகட்ட ஆரம்பித்துள்ளது. வரும் மே நடைபெறவுள்ள இறுதிச்சுற்றுக்கு முன்னோடியாக ஏப்ரல் முதற்கட்ட வாக்களிப்புக்கள் நடைபெறவுள்ளன. நேற்று புதன் தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய தற்போதைய அதிபர் ஸார்கோஸி யாருக்கு எச்சரிக்கைவிடுவதென தெரியாது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் வரும் வகை தொகையற்ற அகதிகளை கட்டுப்படுத்தத் தவறினால் பிரான்சை ஐரோப்பிய ஒன்றிய செங்கன் உடன்படிக்கையில் இருந்து விலத்திவிடுவேன் என்று எச்சரித்தார். செங்கனில் இருந்து பிரான்சை வெளியேற்றினால் கடுமையாக கடவுச் சீட்டு பரிசோதனைகள் இடம் பெறும் அகதிகளை கட்டுப்படுத்தலாம் என்பது கருத்தாகும்.

இதுபோல டென்மார்க்கின் வெளிநாட்டவருக்கு எதிரான டேனிஸ் மக்கள் கட்சி எல்லைப் புறங்களை கண்காணிக்க வேண்டும் என்று கூறியபோது வெகுண்டெழுந்த ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து அங்கத்துவ நாடுகளுக்கும் கடுமையான எச்சரிக்கை கொடுத்து கடிதம் அனுப்பியிருந்தது. அதில் செங்கன் ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டுமெனவும் கேட்டிருந்தது. இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் கதாநாகனான ஸார்கோஸி செங்கனை உடைக்கப் போவதாக மிரட்டியிருப்பது கொலகொலத்துக் கிடக்கும் ஐரோப்பிய ஒன்றிய கோட்டையை தகர்க்கும் ஒரு வேலையாகவே அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தவறாக ஊழல் செய்து தேர்தலில் வென்றதாகக் கூறப்படும் புற்றினை வாழ்த்திய ஸார்கோஸி இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தை சாடியுள்ளார். யார் நண்பன் யார் பகைவன் என்று தெரியாத குழப்பத்தில் தடுமாறுகிறார் ஸார்கோஸி.

பழைய பிரான்சிய அதிபர் ஜாக் ஸிராக் பாணியில் அகதிகள் வெளிநாட்டவரை வெறுத்து, இன வெறுப்பு வாத அரசியல் செய்து ஆட்சிக்கு வந்த ஸார்கோஸி மறுபடியும் அதே பாணியைக் கடுமையாக்கி தேர்தல் களம் புகுந்துள்ளார். ஆனால் இவர் சுமார் இரண்டு வீத வாக்குகளால் தோல்வியடைவார் என்று கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. பிரான்சின் பொருளாதார பின்னடைவை இவருடைய வலதுசாரி இன, நிற வெறுப்புக் கருத்துக்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது தெரிந்ததே.

அலைகள்

கண்டியில் புலிக்கொடிக்கும் அமெரிக்கக் கொடிக்கும் முடிச்சு!


இலங்கை அரசானது தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து, அதனை யுத்தத்தில் வெற்றி கொண்டமைக்காக நாடெங்கும் உள்ள விகாரைகளில் விசேட பூஜைகள் மேற்கொள்ளவுள்ளதாம். இதனடிப்படியில் விசேடமாக, கண்டி மாவட்டத்தில் உள்ள பல விகாரைகளில் பல்வேறு சமய வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை மறைமுகமாக எதிர்க்கவே இது நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்த பிரசாரச் சுவரொட்டிகள் கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் சுவரொட்டிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியும் அமெரிக்கக் கொடியும் இணைக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தூதரகத்தை மேலும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக இது அமையலாம் எனக் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமைச் சபையில் தமிழர் தரப்பு இராஜதந்திரச் செயற்பாடுகளை தமிழீழ அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது

இலங்கை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில், தமிழர் தரப்பின் இராஜதந்திரச் செயற்பாடுகளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் இனஒழிப்பு, போர்க்குற்றங்கள் குற்றவிசாரணைக்கும், தடுப்புக்குமான விவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்....

சர்வதேச சட்டவாளரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவின் அங்கத்துவருமான கரன் பார்கர் அம்மையார் தலைமையில், வள அறிஞர் குழுவொன்று ஐ.நா மனித உரிமைச் சபையில் பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆகிய Joan Ryan அவர்களும், ஜரோப்பிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், முன்னாள் பிரித்தானியாவுக்கான ஐரோப்பிய பாராளுமன்ற முன்னாள் தலைவருமான Robert Evans அவர்களும் அரச சார்பற்ற நிறுவனத்தின் முன்னாள் இணைப்பாளருமாகிய Stewart Blake அவர்களும் பிரித்தானியாவில் இருந்து ஜெனீவாவுக்குச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் இருந்து பேராசிரியர் மணிவண்ணன் மற்றும் பேராசிரியர் பொல் நியூமன் ஆகியோரும் ஜெனீவாவைச் சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல், வெளிவிகாரத்துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர் மற்றும் அவைத்தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்கனவே முன்னெடுத்திருந்த தமிழர் தரப்பு இராஜதந்திரச் செயற்பாடுகளின் தொடர்சியாக, தற்போது ஜெனீவாவுக்கு சென்றுள்ள வள அறிஞர் குழுவின் பணிகள் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணை! இந்தியா எடுக்கவுள்ள முடிவு என்ன?

ஜெனிவா, ஐ.நா.மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும்போது இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது பற்றிய வாதப் பிரதிவாதங்கள், இந்தியா, இலங்கை என்ற எல்லைகள் கடந்து வேறுபல நாடுகளிலும் அதுபற்றி ஆராயப்படும் அளவிற்கு நிலைமை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இலங்கை அரசிற்கு எதிராக ஜெனிவாவில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதத்திற்கு மேல் கடிதம் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

இதனிடையே ஒட்டுமொத்த தமிழகமும் ஜெனிவாவில் இலங்கை அரசிற்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றன.

நிலைமை இப்படியாக இருக்கையில்,இந் திய மத்திய அரசு என்ன முடிபை எடுக்கும் என் பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களிக் குமாக இருந்தால் அது ஆளும் கட்சிக்காரர்களுக்கு தீராப் பழியைத் தரும்.

எட்டுக்கோடி தமிழ் மக்களினதும் விருப்பத்தை ஆளும் காங்கிரஸ் உதாசீனம் செய்துவிட்டது என்ற கோச­ம் ஒலிக்கும். இது காங்கிரஸ் கட்சி வட இந்தியாவில் சந்தித்து வரும் தேர்தல் தோல்விகளை இந்தியா முழுவதற்கும் விஸ்தரிக்க வழியமைத்துவிடும்.

அதேசமயம் இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும். ஆக, இலங்கைத் தமிழர்களின் மிகத் துன்பகரமான சூழ்நிலையில் இந்தியா இப்படி நடந்து கொண்டது என்ற பழிச்சொல்லை எந்தக் காலத்திலும் நீக்க முடியாமல் போகும்.

மாறாக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்குமாயின், இலங்கை - இந்திய உறவு கெடும். அத்துடன் சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவை இலங்கை வேகமாக வளர்த்துக் கொள்ளவும் செய்யும்.

இந்நிலைமையானது தமிழ் மக்களுக்கு சாதகத் தன்மையையே ஏற்படுத்தும். எதுவாயினும், இந்தியா நடுநிலை வகித்தல் என்ற முடிவை எடுக்கக்கூடிய வாய்ப்புகளே அதிகமாக இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கூறிக் கொள்கின்றனர்.

இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் நிலையில், இந்திய -அமெரிக்க உறவு பலப்படுவதற்கும், அதன் மூலம் இலங்கையை அதட்டி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வைப்பதற்குமான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இலங்கையை அதட்டும்போது அந்த அதட்டல் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான இலங்கை உறவை வெட்டுவதாகவும் அமையலாம். நிலைமை எப்படியாக அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சனல்- 4 காணொளி அடிப்படையற்றது: இலங்கை

பிரிட்டனின் சனல்- 4 ஊடக வலையமைப்பினால் எதிர்வரும் புதன் கிழமை வெளியிடப்பட உள்ள இலங்கை தொடர்பான, இரண்டாம் காணொளி அடிப்படையற்றது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சனல்- 4 ஊடகம் அடிப்படையற்ற வகையில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்னிலைப்படுத்தி மற்றுமொரு கணொளி ஒன்றை வெளியிட உள்ளதாக பிரிட்டனுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பான செய்தி அறிக்கையிடலின் போது, சனல்- 4 ஊடகம் ஒரு பக்கச்சார்பான கொள்கைகளை பின்பற்றி வருகின்றது.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை நெருக்கடியில் ஆழ்த்தும் நோக்கில் சனல்- 4 ஊடகம் காணொளிகளை வெளியிட்டு வருகின்றது.

இதே வேளை, போரின் பின்னர் நாட்டில் பல சாதகமான நிலைமைகளை சனல்- 4 ஊடகம் கண்டுகொள்ளத் தவறியுள்ளதாகவும் பிரிட்டனுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் முழு அளவிலான நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கும் எனவும் உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

ஜெனீவாவில் அமெரிக்காவிற்கு எதிராக களம் இறங்குகிறது சீனா?!

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்கு அமெரிக்கா தீவிரமாகக் களமிறங்கியுள்ள தற்போதைய சூழ்நிலையில், இலங்கைக்கு ஆதரவான பிரேரணையொன்றை சீனா முன் வைத்து அதை நிறைவேற்றுவதற்காக அவசர மந்திராலோசனைகளை நடத்திவருகிறது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன

ஜெனிவாவில் தமக்கு இக்கட்டானதொரு நிலைமை வரப்போகின்றது என்பதை உள்ளூர அறிந்து வைத்துள்ள இலங்கை அரசு, சீனாவிடம் மண்டியிட்டு விடுத்த அவசர வேண்டு கோளையடுத்தே இவ்வாறு இலங்கைக்கு ஆதரவான பிரேரணை ஒன்றை சீனா தாக்கல் செய்வதற்கு ஆலோசித்து வருகின்றது எனவும் அந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள பிரேரணை எதிர்வரும் 22 ஆம் அல்லது 23 ஆம் திகதிகளில் வாக்கெடுப்புக்கு விடப்படலாம் என்பதால் அதற்கு முன்னர் இந்தப் பிரேரணையைக் கொண்டுவந்து இலங்கைக்கு ஆதரவைத் தேடிக்கொடுக்கும் முயற்சியிலேயே சீனா இறங்கும் எனக் கூறப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடொன்று சபை அமர்வில் பிரேரணை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டுமாயின் மாநாடு நிறைவடைவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னரே அறிவிக்க வேண்டும். அந்த அடிப்படையில் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னரே இலங்கைக்குச் சார்பான பிரேரணையை சபையில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு போரின் பின்னர் இலங்கை அரசு முன்னெடுத்துவரும் நல்லிணக்க செயற்பாடுகள், மனித உரிமைகள் மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட கொழும்பு அரசுக்குச் சார்பான பல விடயங்களை பீஜிங் அந்தப் பிரேரணையில் முன்வைப்பதற்கு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

அதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையைக் கடந்த புதன்கிழமை அமெரிக்கா சமர்ப்பித்தமை தெரிந்ததே

ஜெனீவாவில் விலைமாதர் விடுதிக்கு சென்று கடவுச்சீட்டை தொலைத்த மகிந்தவின் ஊடக பிரதானிகள்!


ஐ.நா. மனித உரிமைப் பேரவை நிகழ்வுகளை அறிக்கையிடுவதற்கு மகிந்த அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஜெனீவா அனுப்பிவைக்கப்பட்ட ஊடக பிரதானிகள் குட்டையைக் குழப்பிக் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்குலக நாடுகளின் அழுத்தங்களை உள்நாட்டில் மகிந்த அரசிற்கான ஆதரவை அதிகரிக்கும் வகையில் பிரசாரத்தை மேற்கொள்வதற்காகவே இந்த ஊடகவியலாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். எனினும், இவர்களது பணியை உரிய முறையில் செய்யவில்லையென மகிந்த ராஜபக்‌ஷ ஆத்திரமடைந்துள்ளார்.

சிறீலங்கா ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர, லக்பிம பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ராஜ்பால் அபேநாயக்க ஆகிய இரண்டு சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், ஜெனீவாவில் விலைமாதர் விடுதிக்குச் சென்றமை அம்பலமாகியது.

இவர்கள் விலைமாதர் விடுதிக்குச் சென்று தமது கடவுச் சீட்டையும் தொலைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் இவர்கள் தற்காலிக கடவுச் சீட்டின் மூலமே இலங்கை செல்ல நேரிட்டுள்ளது. இந்த விடயங்களை சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, நேஷன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மாலிந்த செனவிரத்னவிடம் கூறியுள்ளார்.

ஜெனீவாவிலிருந்து எவ்வாறான ஊடக பிரசாரத்தை மேற்கொள்வதற்கு மாலிந்தவை அனுப்பிவைக்கத் தீர்மானித்த மகிந்த ராஜபக்‌ஷ, அவரை அழைத்து விளக்கமளிக்கும்போதே மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளார்.

சனல்-4 காணொலி: சிறிலங்காவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் சங்கடம்.. இந்திய நாளேடு



சனல்-4 வெளியிடப் போகும் அதிர்ச்சி தரும் புதிய காணொலி, ஜெனிவாவில் சிறிலங்காவை மட்டுமன்றி இந்தியாவையும் கூட சங்கடப்படுத்துவதாக அமையும் என்று இந்திய நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.



இதுதொடர்பாக, அந்த நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது-



பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சியின் அதிர்ச்சி தரும் புதிய காணொலி, சிறிலங்காவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும்.



அது, ஜெனிவாவில் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்து துணிவுடன் போராடும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரையும் கூட, சிறிலங்கா படையினரின் கொடூரங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்தக் கோரும் வகையில் அமையக் கூடும்.



2009 மே 18ம் நாள் எடுக்கப்பட்ட வெளிப்படையான காட்சிகள் வரும் புதன்கிழமை இரவு 10.55 மணியளவில் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் [இந்திய நேரம் வியாழன் அதிகாலை 4.25 மணி] ஒளிபரப்பாகவுள்ளது.



இது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்கா பிரதிநிதிகளை மட்டும் சங்கடத்தில் ஆழ்த்தப் போவதில்லை.இந்தியாவையும் கூட சங்கடத்தில் ஆழ்த்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா