Saturday 10 March 2012

கடற்படைசிப்பாய் பாலியல் துஷ்பிரயோகம்- அவரின் ஆணுறுப்பை அறுத்த பெண்!


தனது வீட்டில் தனிமையில் இருந்த குடும்பப் பெண்ணொருவரை சிறிலங்கா கடற்படையை சேர்ந்த ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த போது அவரின் ஆணுறுப்பை அப்பெண் அறுத்து எடுத்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றுமுன்தினம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் தம்புழுகமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஆணுறுப்பை பறிகொடுத்த கடற்படை வீரர்(?) திருகோணமலை கடற்படை தளத்தில் பணியாற்றுபவராவார்.
இரத்தம் ஓட ஓட கந்தளாய் வைத்தியசாலையின் ஏழாவது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 22 வயதான இந்த கடற்படை வீரர் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்றிருந்த போது பின் கதவால் உள்நுழைந்து இந்தப் பெண்மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த போதே மேசையில் இருந்த கத்தியை எடுத்து இவரது ஆணுறுப்பைஅந்தக் குடும்பம் பெண் வெட்டியுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற கடற்படை வீரர் குறித்து பொலிஸ் அவசர சேவைக்கு தகவல் வழங்கி விட்டு கந்தளாய் வைத்தியசாலைக்கு ஓடிச்சென்றுள்ளார்.
பொலிஸார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தியதுடன் அறுத்து வைத்திருந்த ஆணுறுப்பையும் அப்பெண்ணிடம் பெற்றுக்கொண்டனர். இதன் பின்னர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கடற்படை வீரரை பொலிஸார் கைது செய்தனர்.

எங்கள் ஊரில் ஒரு கோட்டை


ஒல்லாந்தரால் இறுதிவடிவம் கொடுக்கப்பட்ட இக்கோட்டையானது நட்சத்திரவடிவில் அதன் அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இக்கோட்டையின் தோற்றக்காலத்தை யாழ்ப்பாணத்தின் மீதான பராந்தகச்சோழனின் ஆட்சிக்காலத்துடன் இணைக்கப்படக் கூடியதாகவுள்ளது. இக்கோட்டை அமைந்துள்ள நிலப்பரப்பின்
  • மேலும் தொடர்க
  • ஈரான் மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படும்: இஸ்ரேல்


    ஈரானின் அணு சக்தி நிலையங்கள் மீது மிக விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதென்யாஹு தெரிவித்துள்ளார்.
    ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன.

    இந்நிலையில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் கூறுகையில், ஈரான் அணு சக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்கான காலகட்டம் ஆண்டுக்கணக்கில் இல்லை, வார அல்லது நாள் கணக்கில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஈரானை விட்டு மிகத் தொலைவில் உள்ளது, இஸ்ரேலோ ஈரானுக்கு மிக அருகில் உள்ளது. ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் இஸ்ரேலுக்கே மிக அதிகம். எனவே தாக்குதல் நடத்தப்படுவது குறித்து மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    ஈரான் முதன் முறையாக மேலைநாடுகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கின்றது. ஆனால் இன்னும் அதற்கான இடமும், நாளும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இருவழிப் பாதைகளாக மாற்றப்படும் கிளிநொச்சி ஏ-9 வீதி _


      கிளிநொச்சி நகரின் இரண்டரைக் கிலோ மீற்றர் நீளமான ஏ-9 வீதி இருவழிப் பாதைகளாக புனரமைக்கப்பட்டு வருகிறது. ஏ-9 வீதியில் தற்போது புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

    வட மாகாணத்திலுள்ள முக்கிய வீதிகளில் சுமார் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அரசின் நிதி உதவியுடனேயே இந்த வீதிகள் புனரமைக்கப்படுகின்றன.

    இதில் ஏ-9 வீதியின் கிளிநொச்சி நகரை அண்டிய இரண்டரைக் கிலோமீற்றர் தூரம் இருவழிப் பாதைகளாகப் புனரமைக்கப்பட்டு வருவதுடன் நீர் வடிகாலமைப்புக் கால்வாய்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் 153 கிலோமீற்றர் நீளமான கிராமிய வீதிகளிலும் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

    ரஹ்மான் இசையில் தனுஷ்

    படத்துக்குப் பிறகு தனுஷ் எந்தப் படத்தில் நடிக்கிறார் என்ற கேள்விக்கு ஆச்ச‌ரியமான பதில் கிடைத்திருக்கிறது.

    கொலை வெறி புகழ் தனுஷை நார்த் இந்தியா வரை கொண்டு சேர்த்திருக்கிறது. தனுஷின் புதிய படத்தை இயக்குகிறவர் பரத்பாலா. ரஹ்மானின் ஜன கண மன ஆல்பத்தை இயக்கியவர். 

    இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். சர்வதேச புராஜெக்ட்களில் பிஸியாக இருக்கும் ரஹ்மான் மணிரத்னத்தின் கடல், கௌதமின் இதுவரை தொடங்கப்படாத படமான யோஹன் அத்தியாயம் ஒன்று போன்ற சொற்பப் படங்களுக்கு மட்டுமே இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்போது பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம்.

    ரஹ்மான் இசையில் தனுஷ் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது

    குற்றவாளிக் கூண்டில் இலங்கை! களம் இறங்கிய அமெரிக்கா!! - ஜூனியர் விகடன்

    கதறக் கதறக் கொலைகள் செய்த சிங்கள அரசு முதன்முத​லாகக் கதறு​கிறது. சாட்சிகளை அழித்து​விட்டால், கேட்பதற்கு நாதி இல்லை என்று நினைப்பில், மிகமோசமான இன அழிப்பு இலங்கையில் நடத்தப்பட்டது.

    இனஅழிப்புக்கு எதிராக உலகநாடுகள் ஒன்று சேர்ந்த அடையாளம்தான், கடந்த 7-ம் தேதி அமெரிக்கா கொண்டு​வந்துள்ள தீர்மானம்.

    ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிராகக் களம் இறங்கி உள்ளது அமெரிக்கா.

    இதைக் கண்டு பயந்துபோன இலங்கை, தனக்கு நெருக்கமான நாடுகளிடம் ஆதரவு கேட்டு கையேந்தி நிற்கிறது.

    47 நாடுகளை உள்ளடக்கிய இந்த சபையில் 24 நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு வாக்களித்தால், தீர்மானம் நிச்சயம் நிறைவேறும்.

    இது அமெரிக்காவின் நம்பிக்கை மட்டும் அல்ல... முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கண்டு வெதும்பிக் கண்ணீர் வடித்த மனிதர்களின் நம்பிக்கை!

    அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானத்​தில், அழுத்தமான பல வார்த்​தைகள் உள்ளன.

    'சட்டத்துக்கு நேர் எதிராகப் பல்வேறு படுகொலைகள் இலங்கையில் நடந்துள்ளன.

    இவை குறித்தும் 'காணாமல் போதல்கள்’ குறித்தும் எவ்வித பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளுதல் வேண்டும்.

    வடக்கு மாகாணம் முழுவதும் இருக்கும் இலங்கை இராணுவத்தை விலக்க வேண்டும்.

    நிலம் தொடர்பான பிரச்னை​களைத் தீர்க்க வேண்டும்.

    சிவில் சமூகக் கட்டமைப்புகளை வலிமைப்படுத்த வேண்டும்.

    மாகாணங்களுக்கு அதிகாரங்​களைப் பரவலாகப் பகிர்ந்து அளிக்க வேண்டும். இதன் மூலமாக இனப்பிரச்னைக்கு சரியான தீர்வு காண வேண்டும்.

    அனைவரது கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்,

    சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்றவை சார்ந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    நடந்த நிகழ்வுகள் குறித்து இலங்கை அமைத்த ஆய்வுக்குழுவின் அறிக்கை, சர்வதேச சட்ட விதிமீறல்கள் தொடர்பாக முழுமையாக எதையும் தெளிவுபடுத்தவில்லை.

    சர்வதேச சட்ட விதிமுறைகள் அதிகப்படியாக இலங்கையில் மீறப்பட்டது தொடர்பாக, ஐ.நா. மனித உரிமை சபைக்கு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்'' என்று, இலங்கைக்கு எதிரான தன் தீர்மானத்தில் அமெரிக்காவின் குரல் ஓங்கி ஒலித்துள்ளது!

    இது, புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்,

    'ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா சமர்ப்பித்து உள்ள தீர்மான அறிக்கையை பலவீனப்படுத்தி, தோல்​வியுறச் செய்யும் முயற்சிகளை இலங்கை முன்னெடுக்கும். தமிழர்களின் உறுதியான நிலைப்பாடு, இலங்கை மீது பகிரங்கமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். அத்தகைய தெளிவான உள்ளடக்கத்தை நாங்கள் அமெரிக்காவிடம் எதிர்பார்க்கிறோம்'' என்று சொல்லி இருக்கிறார்.

    கனடிய தமிழ் காங்கிரஸின் தேசியப் பேச்சாளர் டேவிட் பூபால​பிள்ளையிடம் கேட்டபோது,

    பாரதிதாசன் பாடிய, 'எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டேன்!’ என்ற பாடலைப் போல தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதும், முதல்வர் ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி போன்றோர் அமெரிக்கா கொண்டு​வரக்கூடிய தீர்மானத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஒருமித்த குரலோடு பேசுவதும் எங்களுக்கு மன நெகிழ்வை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தியா எங்களுக்குத் தந்தை நாடு. எங்களுக்கான அரசியல் இந்தியா இல்லாமல் அமையாது. எங்களுக்கான சுயாட்சியை இந்தியாவே பெற்றுத்தர வேண்டும். அதே போல் அமெரிக்கா கொண்டுவரக்கூடிய தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என இந்தியாவின் கைகளை இறுகப் பற்றிக் கேட்கிறோம். ஐ.நா. மனித உரிமை சபையில் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் சார்பில் கேள்விகள் கேட்க எங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இலங்கை கொண்டுவரக்கூடிய போலிச் சாக்குகளை எங்கள் கேள்விகளால் பொய்ப்​பித்து இலங்கையின் முகத்திரையைக் கிழிப்போம்.

    டக்ளஸ் தேவானந்தா இலங்கையிலேயே ஒரு குற்றவாளி என்று அரசு கமிஷனில் பல காலங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டவர். இலங்கை அரசாங்கமே அவரைக் குற்றவாளி என்று அறிவித்துவிட்டு எப்படி நல்லிணக்க அறிக்கையை செயல்படுத்த போவதாக ஐ.நா-வுக்கு அவரை அழைத்து வருகிறீர்கள் என்று இலங்கை அரசிடம் கேட்ட கேள்விக்கு, அவர்களிடம் பதில் இல்லை.

    தமிழர்களுக்கான சுயாட்சி உரிமையை அரசியல் மட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பது இன்று எம் மக்கள் வாழும் சூழ்நிலையில் கட்டாயம்'' என்று தெரிவித்தார்.

    அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்​தின் மீது ஒவ்வொரு நாடும் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்து விடும்.

    ஜூனியர் விகடன்

    இலங்கையின் கொலைக்களம், தண்டிக்கப்படாத குற்றங்கள் காணொளிக்கான பரப்புரை

    இலங்கையின் கொலைக்களம், தண்டிக்கப்படாத குற்றங்கள் என்னும் மற்றொரு காணொளியை, சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் எதிர்வரும் 14ம் திகதி வருகின்ற புதன்கிழமை இரவு 10.55 மணிக்கு காட்சிப்படுத்துகின்றது.

    புதைகுழிக்குள் புதைந்து கிடக்கும் உண்மைகளை உலகறியச் செய்வதோடு அதற்குக் காரணமானவர்களை ஏன் இன்னமும் தண்டிக்கப்படவில்லை என உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பும் காணொளியை சனல் 4காட்சிப்படுத்த உள்ளது.

    இலங்கையின் கொலைக்களம் காட்சிப்படுத்தப்படும் போது பிரித்தானியாவில் வாழும் பெரும்பாலான மக்கள் அவற்றை பார்வையிடவேண்டும் அதற்காக விழிப்புணர்வு துண்டுப்பிரசுர விநியோகப் பரப்புரை ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

    பிரித்தானிய தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்படும் சர்வதேச சுயாதீன விசாரணைக்கான பரப்புரையின் ஒர் அங்கமாக நடைபெறவுள்ள இத்துண்டுப்பிரசுர விநியோகம் மத்திய லண்டன் தொடரூந்து நிலையங்கள், மற்றும் மக்கள் செறிவாகக் கூடும் இடங்கள் ஆகியவற்றில் நடைபெற்ற உள்ளது.

    எமது மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளை வெளிக்கொண்டுவரும் சனல் 4 நிறுவனத்திற்கு தமிழர்கள் நன்றி உடையவர்களாக இருக்கின்றார்கள். உண்மையை உலகிற்கு இடித்துரைக்கும் சனல் 4 அண்மைக்காலமாக பல விருதுகளைப் பெற்றுவருவது பெருமிதத்துக்குரியது.

    இக் காணொளியை பார்க்க அனைவரையும் ஆர்வப்படுத்துவதோடு, பிரித்தானிய அரச இணையத்தில் பதியப்பட்டுள்ள மின் விண்ணப்பத்தில் கைச்சாத்திடுமாறு அனைவரையும் அறிவுறுத்த வேண்டும்.

    இந்த காணொளியை பார்வையிடுமாறு நாம் அனைவரும் எமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுப்பதோடு அதனை பிரித்தானிய பிரதமரும் பார்க்க ஆர்வப்படுத்துமாறு அவர்களை கேட்க வேண்டும் அதற்கான பொறிமுறை இணைக்கப்பட்டுள்ளது. (http://iiicampaign.com/welcome/request-mp)

    பிரித்தானிய தமிழர் பேரவை

    ஜெனிவா பிரேரணை! மகிந்த கடும் அதிர்ச்சி! அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்து

    ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த புதன்கிழமை ஜெனிவாவில் இந்த தீர்மான வரைவு சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அனைத்து பொது நிகழச்சிகளையும் கடந்த வியாழக்கிழமை ரத்துச் செய்திருந்தார்.

    பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை ஆரம்பமான அனைத்துலக துறைமுக கழக்கத்தின், ஆசிய- ஓசியானியா பிராந்திய 12வது மாநாட்டை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்றுமுன்தினம் காலை 10 மணியளவில் தொடக்கி வைத்து உரையாற்றவிருந்தார்.

    ஆனால் அவர் அந்த நிகழ்வுக்குச் செல்லவில்லை.

    இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உடல் நலக்குறைவினால் இந்த மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை என்று இலங்கை அமைச்சர் ஒருவர், நிகழ்வில் பங்கேற்ற அனைத்துலகப் பிரதிநிதிகளுக்கு அறிவித்தார்.

    ஆனால் இலங்கை ஜனாதிபதி உடல்நலக்குறைவினால் பாதிக்கப்படவில்லை என்றும் ஜெனிவா தீர்மானம் குறித்து அறிந்ததும் குழப்பமடைந்த அவர் கண்டியில் உள்ள அதிபர் மாளிகைக்கு ஓய்வெடுக்கச் சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கண்டியில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று முன்தினம் அவர் அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டினிஸை சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, நேற்றும் இலங்கை ஜனாதிபதி வழக்கமான நிகழ்வுகள் எதிலும் பங்கேற்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முதல்வர் ஜெயலலிதா வருகை: ஹெலிபேடு தயார்

    இடைத்தேர்தலுகாக அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா தனது கட்சியின் வேட்பாளர் முத்துச்செல்வியை ஆதரித்து, சங்கரன்கோவில் தொகுதியில் வரும் 14.03.2012 பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார்.

    இதற்காக குருவிக்குளம் யூனியன், சங்கரன்கோவில் மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் நகரம் உள்ளிட்ட 10 இடங்களில் பேச இருக்கிறார்.

    பிரச்சாரத்திற்காக வரும் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு வசதியாக திருவேங்கடம் தேவர்குளம் ஆகிய பகுதிகளில் சுமார் ரூபாய் 40 லட்சம் செலிவில் ஹெலிபேடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அவைகள் தற்போது போலீசாரின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    மு.க.அழகிரி - குஷ்பு சந்திப்பு


    வரும் மார்ச் 18ஆம் தேதி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து நடிகை குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக தென்மண்டல திமுக அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை சந்தித்தார்.

    அதிமுக அரசுக்கு தோல்வி பயம்: நடிகை குஷ்பு

    அதிமுக அரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் 32 அமைச்சர்கள் சங்கரன்கோவிலில் முற்றுகையிட்டுள்ளனர் என்று நடிகை குஷ்பு பேசினார்.

    வரும் மார்ச் 18ஆம் தேதி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து நடிகை குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசுகையில்,

    அதிமுக அரசு பதவியேற்று 10 மாதங்கள் ஆகியும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் திமுகவினரை பழிவாங்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது. சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவித்த நாளில் இருந்தே, அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையே. தமிழக மக்கள் புத்திசாலிகளாச்சே. நாம இதுவரைக்கும் எதுவுமே செய்யவில்லையே என்ற பயம். இதனால் தான் அதிமுக அமைச்சர்கள் 32 பேர் சங்கரன்கோவிலில் முற்றுகையிட்டுள்ளனர்.

    அதிமுக அமைச்சர்கள் பஞ்சாயத்து தலைவர்களாக ஆகிவிட்டார்கள்: பண்ருட்டி ராமச்சந்திரன்

    பாவம், தமிழக அமைச்சர்கள் எல்லாம் சங்கரன்கோவில் பஞ்சாயத்து தலைவர்களாக ஆகிவிட்டார்கள் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.

    வரும் மார்ச் 18ஆம் தேதி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் அங்கு முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


    தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து பேசிய அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், திராணி இருக்கிறது என்பதை நிரூபிக்கத்தான் தேமுதிக சங்கரன்கோவிலில் போட்டியிடுகிறது.

    முதல் அமைச்சருக்கு கோபம் வந்ததுக்கு காரணம், உண்மையை சொல்லப்போனது தான். பாவம் அதிமுக அமைச்சர்கள் எல்லாம் இன்று சங்கரன்கோவில் பஞ்சாயத்து தலைவர்களாக ஆகிவிட்டார்களே என்று நான் பரிதாபப்படுகிறேன் என்றார்.

    கனடியத் தமிழர் சுயாதீன சர்வதேச விசாரணைக்குத் தொடர்ந்து வலியுறுத்தல்!

    ஐக்கிய நாடுகளின் 19வது மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் அமெரிக்க அரசானது இலங்கை தொடர்பாகக் கொண்டுவந்த வரைவு பிரேரணையும் அதன்பின்னர் கூட்டப்பட்ட மாநாட்டில் பன்நாட்டுப் பிரதிநிதிகளின் கருத்துக்களும் அடிப்படையில் இலங்கை அரசின் படிப்பினைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் மேலும் சில பயன் தரத்தக்க பரிந்துரைகளையும் அடக்கி இருந்தன. இவை அனைத்தையும் நாம் சர்வதேச மட்டத்தில் இலங்கை தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட சிறு மாற்றம் ஒன்றாகவே பார்க்கின்றோம்.

    தொடர்ந்து நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 19வது அமர்வின் கூட்டத் தொடரில் மனித உரிமை அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளின் ஆதரவின் மூலம் அமெரிக்க அரசு கொண்டுவந்த பிரேரணையானது அங்கீகரிக்கப்படுவதற்குரிய சந்தர்ப்பம் அதிகம் உண்டு என நம்புகின்றோம்.

    அமெரிக்க அரசானது இப்பிரேரணையைக் கொண்டுவந்ததற்காக அமெரிக்க அரசுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

    கடந்த 64 ஆண்டு காலமாக தொடர்ந்து நடாத்தப்பட்டுவரும் தமிழின இனப்படுகொலையும் இன்றுவரையும் நிறுத்தப்படாமல் தமிழினத்திற்கு நடாத்தப்பட்டுவரும் மனிதவுரிமை மீறல்களும் 2009ம் ஆண்டின் பாரிய இனப்படுகொலை மூலம் இழைக்கப்பட்ட பாரிய போர்க்குற்ற மீறல்களும், ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பில் சாவதேச சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு தமிழரின் நீதியானதும் நியாயமானதுமானகோரிக்கையான சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து முளுமையானதொரு அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமென உலகத் தமிழர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் சர்வதேசத்தை வேண்டி நிற்கிறது. கடந்த மார்ச் 5. 2012 திங்கட்கிழமை ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் முன்றலில் நடைபெற்ற மிகப் பாரிய தமிழ் மக்களின் எழுச்சிப் பேரணியும் அதில் வைக்கப்பட்ட கோரிக்கையும் வலுச்சேர்ப்பதாக உள்ளது.

    கனடியத் தமிழர் தேசிய அவை

    தொலைபேசி: 1 866 263 8622 - 416 646 7624
    மின்னஞ்சல்: www.ncctcanada.ca
    இணையத்தளம்: info@ncctcanada.ca

    ரேரணை மீதான வாக்கெடுப்பினை தவிர்ப்பதற்கு இலங்கை கடும் பிரயத்தனம்!

    ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடாது அதனை பேரவையிலிருந்து நீக்கிவிடும் பகீரத முயற்சியில் இலங்கை தூதுக்குழுவினர் ஈடுபடவுள்ளதாக தெரியவருகின்றது.

    அந்த வகையில் ஜெனீவா செல்லவுள்ள இலங்கை தூதுக்குழுவினர் பொதுக் கூட்டங்கள், தனிப்பட்ட சந்திப்புக்கள், இருதரப்பு சந்திப்புக்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் உப நிகழ்வுகள் என்பனவற்றின் ஊடாக மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பிரேரணையை நீக்குவது குறித்து பாரிய முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளனர்.

    அந்த வகையில் தற்போது ஜப்பான் சென்றுள்ள மனித உரிமைகள் விவகாரம் குறித்த ஜனாதிபதியின் விசேட தூதுவரான மஹிந்த சமரசிங்க இன்று சனிக்கிழமை ஜெனீவா விரையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    முன்னதாக இலங்கை வந்து இங்கிருந்து ஜெனீவா செல்வதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது ஜப்பானிலிருந்து நேரடியாக ஜெனீவா செல்லவுள்ள அமைச்சர் சமரசிங்க மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும், பிரேரணை மீதான வாக்கெடுப்பும் அவசியமில்லை என்று வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக் கப்படுகின்றது.

    மேலும் சில தினங்களில் இலங்கையிலிருந்து செல்லவுள்ள இலங்கை தூதுக்குழுவின் ஏனைய உறுப்பினர்களும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் இணைந்து இலங்கையின் நிலைப்பாட்டை உறுப்பு நாடுகளுக்கு விளக்கும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளனர்.

    அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணைக்கு ஏற்கனவே சில நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இலங்கை தூதுக்குழுவினர் பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    அத்துடன், பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய அம்சங்களில் திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என சில நாடுகள் கோரியுள்ளதாகவும் எனவே அந்த நாடுகளுடன் பேச்சு நடத்தி ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இலங்கை தூதுக்குழு அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிகின்றது.

    அந்த வகையில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரின் அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் 20 ஆம் திகதிக்கு முன்னர் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் பின்னணியிலேயே அமெரிக்காவின் பிரேரணையை வாக்கெடுப்புக்கு உட்படுத்தாமல் அதனை பேரவையிலிருந்து நீக்கிவிடுவதற்கான முயற்சியில் இலங்கை தூதுக்குழுவினர் ஈடுபடவுள்ளனர்.

    இதேவேளை இவையத்துக்கும் அப்பால் அமெரிக்காவின் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதனை தோற்கடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதாகவும் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய விடயங்களையும் நீக்கிவிட்டு புதிய அம்சம் ஒன்றை உள்ளடக்குவது குறித்து ஆராயய தயாராக இருப்பதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

    சர்வதேச ராஜதந்திரத்துக்கும், சங்கரன்கோவில் அரசியலுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது:ஜெயலலிதா ராஜபக்ஷேவுக்கு (தெரியாமல்) செய்துவிட்ட ‘பகீர்’ உதவி!


    இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் ஒரு ட்ராக்கில் ஓடிக்கொண்டிருக்க, மற்றொரு ட்ராக்கில் சர்ச்சைக்குரிய கடிதம் ஒன்றை பிரதமருக்கு எழுதியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
    “எதிர்காலத்தில் இலங்கை பிரமுகர்கள் அடிக்கடி தமிழகத்துக்கு வருவதை மத்திய அரசு ஊக்குவிக்காமல் இருந்தால், பாராட்டுக்குரியதாக இருக்கும்” என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    இந்தக் கடிதம், ராஜதந்திர வட்டங்களில் முறுகலை ஏற்படுத்தக்கூடியது. இலங்கை அரசு இந்தக் கடிதத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதை ஜெயலலிதா அறியாமல் இருப்பாரா என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
    இலங்கையில் இருந்து அரசியல் பிரமுகர்கள் தமிழகம் வரும்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் சமீபகாலமாக நடைபெறுவது அதிகமாகியுள்ளது. சமீபத்தில் இலங்கை ஜனாதிபதியின் உறவினர் திருக்குமரன் நடேசன் ராமேஸ்வரம் வந்தபோது அவரைத் தாக்க முயற்சி நடந்தது. இதுபோல இதற்கு முன்னரும் வேறு இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வந்தபோது தாக்க முயற்சிகள் நடைபெற்றிருந்தன.
    தமிழகத்தில் உணர்ச்சிகள் எப்படியிருந்தாலும், உலக அளவில் தமிழகத்தின், மற்றும் இந்தியாவின் இமேஜைக் குறைக்கும் சந்தர்ப்பங்களாகவே அவை அமைந்திருந்தன. இன்டநேஷனல் பாலிடிகல் ரெபுடேஷன் உடைய மீடியாக்கள் இந்தச் சம்பவங்களை இந்தியா தொடர்பான லேசான கிண்டலுடன் விமர்சித்திருந்தன.
    அதைவிட, ராஜதந்திர வட்டங்களில் இவை இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய சம்பவங்களாக அமைந்திருந்ததை, லோக்கல் நியூசில் யாரும் கவர் பண்ண மாட்டார்கள். இதன் முக்கியத்துவம் பற்றியும் யாரும் வாய் திறந்ததில்லை.
    இப்படியான தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு, Diplomatic immunity என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஒரு மாநிலத்தின் முதல்வருக்கும் அது என்னவென்று தெரியாதது ஆச்சரியமானது.
    ஒரு நாட்டின் பிரமுகர்கள், மற்றைய நாட்டுக்கு, அது கொள்கை ரீதியாக எதிரி நாடாக இருந்தாலும், தங்கு தடையின்றி செல்வதற்கு சர்வதேச சட்டம் (international law) வழிவகுக்கிறது. ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் 1961-ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து (இந்தியா உட்பட) ஏற்றுக்கொண்ட சர்வதேச ராஜதந்திர கொள்கை அது. Vienna Convention on Diplomatic Relations (1961) என்று இதைச் சொல்வார்கள்.
    இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையொப்பம் இட்டிருக்கிறது.
    வியன்னா கன்வென்ஷன் ப்ரொடெக்ஷன் இல்லாவிட்டால், இஸ்லாமபாத்திலும், கராச்சியிலும் இன்னும் சில நகரங்களிலும் உள்ள இந்திய தூதரகங்கள் தூள்தூளாகியிருக்கும். இந்திய ராஜதந்திரிகள் கையில் மாவுக் கட்டுடன்தான், டில்லி திரும்பியிருப்பார்கள்.
    இதில் ராஜதந்திரிகள் என்று குறிப்பது யாரை? அவர்களை எப்படி அடையாளம் காண்பது? மிகச் சுலபம். எந்தவொரு நபர், நாட்டுக்குள் வரும்போது டிப்ளமட்டிக் பாஸ்போர்ட்டில் பயணம் செய்கிறாரோ, அவர் ராஜதந்திரி.
    பிரதமர், அமைச்சர்கள், உயரதிகாரிகள் மட்டுமே டிப்ளமட்டிக் பாஸ்போர்ட்டில் பயணம் செய்வதில்லை. எதிர்க்கட்சி தலைவர்களும் அதே பாஸ்போர்ட்டில் பயணிக்கிறார்கள். நாட்டின் வி.ஐ.பி.கள் பலருக்கும் அதே பாஸ்போர்ட வழங்கப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கியானி ஜெயில்சிங்கின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, இன்னமும் டிப்ளமட்டிக் பாஸ்போர்ட் உள்ளது.
    இந்த நபர் வெளிநாடு செல்லும்போது, அந்த நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துக்கு அறிவித்துவிட்டே செல்கிறார். அங்கே அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அது இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தும் ஒருவருக்கு ஏற்பட்ட அசம்பாவிதமாக பார்க்கப்படும். இந்தியாவிடம் அந்த நாடு மன்னிப்பு கேட்டுக் கொள்ளும்.
    கேட்க நன்றாக இருக்கிறதல்லவா? ஆனால், அதேபோல, மற்றொரு நாட்டின் டிப்ளமட்டிக் பாஸ்போர்ட்டில் இந்தியா வருபவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், இந்தியா மன்னிப்பு கோர வேண்டியிருக்கும். அதுதான் சர்வதேச மரபு.
    இப்போது தமிழக முதல்வரின் கடிதத்தை பாருங்கள். “எதிர்காலத்தில் இலங்கை பிரமுகர்கள் அடிக்கடி தமிழகத்துக்கு வருவதை மத்திய அரசு ஊக்குவிக்காமல் இருந்தால், பாராட்டுக்குரியதாக இருக்கும்” என்று இவர் சும்மா எழுதியிருக்கலாம். ஆனால், இது ஒரு சீரியஸ் விஷயம்.
    இலங்கையில் ஹம்பாந்தோட்ட என்று ஒரு இடம் உள்ளது. இங்கு பெரிய துறைமுகம் ஒன்றை அமைத்து வருகிறது சீனா. அதே நகரில் தமது நாட்டு தூதரகம் ஒன்றையும் அவர்கள் நிறுவியுள்ளனர். இந்தத் துறைமுகத்தால் இந்தியாவுக்கு பல விதங்களில் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால்தான், இந்தியாவும் அங்கே தமது துணை தூதரகம் ஒன்றை இயக்க விரும்புகிறது.
    அந்த ஏரியாவில் இந்தியர்களே இல்லை எனலாம். அப்படியொரு இடத்தில் இந்தியா தூதரகம் அமைக்க விரும்பும் காரணமே, சீனா என்ன செய்கிறது என்பதை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்கே!
    இந்த ஹம்பாந்தோட்ட என்ற இடம், இலங்கையின் தெற்கு மாகாணத்தில் (Southern Province) உள்ளது. அதற்கு ஒரு மாகாண முதல்வரும் உள்ளார். அவரின் பெயர் ஷான் விஜயலால் டி சில்வா. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்.
    தமிழக முதல்வர் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியதுபோல, இலங்கையின் தெற்கு மாகாண முதல்வர், இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினால் என்னாகும்?
    இந்தியர்களே இல்லாத இடத்தில் இந்தியாவுக்கு ஏன் துணைத் தூதரகம் என்று அவர் அந்தக் கடிதத்தில் கேட்டால் என்னாகும்?
    சீனாவில் ஒரு கண் வைத்திருப்பதற்காக, ஹம்பாந்தோட்ட ஏரியாவில் இந்திய டிப்ளமட்டிக் பாஸ்போர்ட்டுடன் உலாவும் நபர்களின் (றோ அதிகாரிகள் உட்பட) எண்ணிக்கை எவ்வளவு என்று தமிழக முதல்வருக்கு மத்திய அரசில் இருந்து யாராவது சொன்னார்களா? அவர்கள் அந்தப் பக்கம் வருவதை இலங்கை அரசு தடுக்க தொடங்கினால் என்னாகும்?
    முதல்வர் ஜெயலலிதா தெரிந்தோ, தெரியாமலோ தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதற்கு, ராஜதந்திர பரிபாஷையில் (diplomatic terminology), ஒரு சொற்தொடர் உண்டு. Travel restrictions on diplomatic travel.
    உங்களுக்கு Indian Foreign Service (IFS) அதிகாரி யாரையாவது தெரிந்தால், விசாரித்துப் பாருங்கள். இந்த ரிஸ்ட்ரிக்ஷன் எப்போது போடப்படும் என்றால், ஒரு நாட்டுடன் ராஜதந்திர உறவை முறித்துக் கொள்வதற்கு முதல் கட்டம் இதுதான்! அதைத்தான் கோரியிருக்கிறார் முதல்வர்.
    இங்குள்ள மற்றொரு முக்கிய விஷயம். இப்படியொரு கடிதம் எழுதப்பட்ட விஷயத்தை இலங்கை அரசு தூக்கிப் பிடித்து, அதை பெரிய விஷயமாக்கினால் (செய்ய சான்ஸ் இருக்கிறது), என்னாகும்? அதையும் யாராவது, IFS அதிகாரியிடம் விசாரித்துப் பாருங்கள்.

    பொதுவாக இப்படியான விஷயங்களை அமுக்க, மற்றைய நாட்டின் ஏதாவது கோரிக்கையை சம்மந்தப்பட்ட நாடு நிறைவேற்றி விடுவது வழக்கம்.

    ஐ.நா.வில் இந்தியாவின் உதவி தேவை என்ற நிலையில் இலங்கை இருக்கையில், தமிழக முதல்வர் இப்படியொரு கடிதத்தை எழுதிய டைமிங்கை என்னென்று சொல்ல? கொழும்பு இதை வைத்தும் டில்லிக்கு அழுத்தம் கொடுக்குமே!
    சர்வதேச ராஜதந்திரத்துக்கும், சங்கரன்கோவில் அரசியலுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

    -விறுவிறுப்பு.காமுக்காக, ரிஷி.

    ராஜிவ் கொலை வெடிகுண்டுக்கு தேவையான பெட்டரி கிடைத்தது!


    ராஜிவ் கொலை வெடிகுண்டுக்கு தேவையான பெட்டரி கிடைத்தது!



    ராஜிவ் காந்தி கொலைக்கு, வி.பி.சிங் பொதுக்கூட்டத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது மே 7-ம் தேதி அதிலிருந்து இரண்டு தினங்களில், மே 9-ம் தேதி காலை, யாழ்ப்பாணத்தில் இருந்து சிவராசனுக்கு தகவல் ஒன்று வந்தது.
    “முருகனை தொடர்ந்தும் தமிழகத்தில் தங்க விட வேண்டாம். உடனடியாக அவரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கவும்” என்று இருந்தது அந்த தகவல்.
    இந்த தகவல் சிவராசனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. காரணம், முருகனும் நளினியும் நெருக்கமாக பழகுகின்றனர் என்ற தகவலை சிவராசன்தான் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவின் தலைவருக்கு அனுப்பியிருந்தார். அப்படியான சூழ்நிலையில், இயக்க ரகசியங்கள் முருகன் மூலம் நளினிக்கு தெரிய வந்து விடலாம் என்ற சாத்தியம் இருந்தது.
    அதனாலேயே, முருகனை சென்னையில் இருந்து அகற்றும் முடிவு யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்டது. முருகனை வேதாரண்யம் செல்லுமாறும், அங்கேயிருந்து முருகனை அழைத்துச் செல்ல இலங்கையில் இருந்து ஒரு படகு அனுப்புவதாகவும் சிவராசனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
    மே 9-ம் தேதி காலையே முருகனை யாழ்ப்பாணத்துக்கு போகுமாறு சிவராசன் சொல்லிவிட்டார். மறுநாள் மாலை சென்னையில் இருந்து கிளம்பிச் செல்வதாக முருகனும் கூறிவிட்டார். இந்தியர்களாக அறிவு, பாக்கியநாதன் ஆகிய இருவருக்கும், “முருகன் ஒரு அவசர வேலையாக இலங்கை செல்கிறார்” என்ற தகவல் மட்டும் கூறப்பட்டது. (மற்றொரு இந்தியரான முத்துராசா, ஏற்கனவே யாழ்ப்பாணம் சென்றுவிட்டார்)
    பாக்கியநாதனும், அறிவும், பேபி சுப்பிரமணியத்துக்கு முருகன் மூலம் பரிசுப் பொருட்களைக் கொடுத்தனுப்பினார். விடுதலைப் புலிகளுக்காக சென்னையில் தாம் செய்து வரும் பணி விவரங்கள் பற்றிய சுருக்கத்தை எழுதி அனுப்பினார் பாக்கியநாதன்.
    இவற்றைத் தவிர, வேறு முக்கியமான இரு கடிதங்களும் முருகனிடம் கொடுக்கப்பட்டன. அவை மனித வெடிகுண்டாக மாறி ராஜிவ் காந்தியை கொல்வதற்காக அழைத்து வரப்பட்ட தனு எழுதிய கடிதங்கள். முருகன் யாழ்ப்பாணம் செல்வதால், அவரிடம் அந்தக் கடிதங்கள் கொடுத்து விடப்பட்டன.
    மே 11-ம் திகதி கடலோரப் பகுதிக்குப் புறப்பட்டுச் சென்ற முருகன், இரண்டு நாட்கள் அங்கே காத்திருந்தார். தமிழகத்தின் தெற்கு கரையோர நகரங்களில், புலிகளுக்கு பாதுகாப்பான வீடுகள் அந்த நாட்களில் இருந்தன. அவை பெரும்பாலும், புலிகளுக்கு பொருட்களை கடல் மூலம் அனுப்பி வைக்கும் கடத்தல்காரர்களுக்கு சொந்தமானவை.
    அப்படியொரு வீட்டில்தான் தங்கியிருந்தார் முருகன். அவர் வந்து இரு தினங்கள் ஆகியும், அவரை அழைத்துச் செல்வதற்காக இலங்கையில் இருந்து வரவேண்டிய விடுதலைப் புலிகளின் படகுகள் வரவில்லை. படகு எப்போது வருகிறது என்று விசாரிக்க ஒயர்லெஸ் செட் ஏதும் அவரிடம் இருக்கவில்லை. (அந்த நாட்களில் செல்போன் கிடையாது)
    முருகன் அதற்கு மேலும் சில தினங்கள் தாமதித்து படகு வருகிறதா என்று பார்த்திருந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.
    இரண்டாவது நாள் படகு வரவில்லை என்றவுடன், தாம் சென்னை திரும்ப போவதாக வீடு கொடுத்த கடத்தல்காரரிடம் கூறினார் முருகன்.
    “சென்னை திரும்பி, படகு வரும் தேதியை உறுதி செய்துகொண்டு மீண்டும் வருகிறேன். நான் கொண்டுவந்த ட்ராவலிங் பேக் இங்கேயே இருக்கட்டும்” என்று கூறி, யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக சென்னையில் இருந்து கொண்டுவந்த ட்ராவலிங் பேக்கை கடத்தல்காரரிடம் ஒப்படைத்துவிட்டு, சென்னைக்கு கிளம்பிவிட்டார் முருகன்.
    இந்த கடத்தல்காரரிடம் ஏற்கனவே விடுதலைப்புலிகளின் சில பொருட்கள் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறி கொடுத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அவர், கரையோரக் கிராமத்தின் தோப்பு ஒன்றில் புதைத்து வைத்திருந்தார். முருகன் தனது ட்ராவலிங் பேக்கை விட்டுவிட்டு செல்லவே, அதையும் அதே தோப்பில் கொண்டுபோய் புதைத்து வைத்தார் கடத்தல்காரர்.
    இந்த பேக்கினுள் முருகனின் ஓரிரு உடைகள், பாக்கியநாதனும், அறிவும், பேபி சுப்பிரமணியத்துக்கு கொடுத்து அனுப்பிய பரிசுப் பொருட்கள் ஆகியவற்றுடன், ராஜிவ் காந்தியைக் கொல்லப்போகும் தனு எழுதிய இரு கடிதங்களும் இருந்தன.
    ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பின், இந்த ட்ராவலிங் பேக் புலனாய்வுக் குழுவின் கைகளில் சிக்கிக் கொள்ளப்போகிறது என்றோ, அவர்களது விசாரணைக்கு முக்கிய ஆதாரங்களை கொடுக்கப் போகிறது என்றோ முருகனுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால், அந்த பேக்கை விட்டுவிட்டு சென்றிருக்க மாட்டார்.
    அது மட்டுமல்ல. இரு நாட்கள் படகுக்காக காத்திருந்துவிட்டு முருகன் சென்னை திரும்பிய தினத்துக்கு மறுநாள் இரவு, அவரை அழைத்துச் செல்ல வேண்டிய படகு இலங்கையில் இருந்து வந்து சேர்ந்தது.
    முருகன் கரையில் தயாராக இல்லாத காரணத்தால், படகு உடனடியாகவே திரும்பிச் சென்றுவிட்டது.
    இரண்டு நாட்கள் காத்திருந்த முருகன், மூன்றாவது நாளும் படகுக்காக வெயிட் பண்ணியிருந்தால், அவர் அன்று இந்தியாவை விட்டே வெளியேறியிருப்பார். ராஜிவ் கொலை கேஸில் கைதாகியிருக்க மாட்டார். இப்போது தமிழகத்தில் ஒரு தூக்கு தண்டனை கைதியாகவும் இருந்திருக்க மாட்டார்.
    24 மணி நேரத்தில் வாழ்க்கையே மாறியதுதான், அவரது விதி!
    முருகனை இந்தக் காட்சிக்குள் கொண்டுவந்தவர் நிக்சன். முத்துராஜா இலங்கைக்கு புறப்பட்டு செல்லுமுன், நிக்சன் என்பவரை பாக்கியநாதனுக்கு அறிமுகம் செய்து வைத்தது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தோம் (அத்தியாயம் 21). இந்த நிக்சன் விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவின் தலைவர் பொட்டம்மானின் நம்பிக்கைக்குரிய முக்கிய தளபதி. அவரால் பாக்கியநாதனுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு நபர், காந்தன் என்பதையும் அதே அத்தியாயத்தில் எழுதியிருந்தோம்.
    இந்த காந்தனும், புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்தான். காந்தன் ராஜிவ் காந்தி ஆபரேஷனில் இல்லை.
    காந்தனும் பாக்கியநாதனை அவ்வப்போது சந்தித்து வந்தார். அவர் பாக்கியநாதனை சந்திக்க வரும்போது, மற்றொரு இளைஞரையும் தம்முடன் அழைத்துவர தொடங்கினார். ரமணன் என்று அந்த புதிய இளைஞரை அறிமுகம் செய்து வைத்தார். ரமணனுக்கும் யுத்தத்தின்போது ஏற்பட்ட காயத்தால் ஒரு கண் பாதிக்கப்பட்டிருந்தது.
    இந்த ரமணன்தான், அந்த நாட்களில் சென்னைக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்த புலிகளின் தொலைத் தொடர்பு மையத்துக்கும் இடையே, ஒயர்லெஸ் ஆபரேட்டராக இருந்தவர்.
    காந்தனும், ரமணனும், சென்னையில் வசித்து வந்த இலங்கைப் பிரஜையான ராபர்ட் பயஸ் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தனர். ராபர்ட் பயஸ் புலிகளின் நேரடி உறுப்பினர் அல்ல. ஆனால், தன்னுடன் தங்கியிருந்தவர்கள் யார் என்பது அவருக்கு தெரிந்திருந்தது. காந்தன், ரமணன், பயஸ் ஆகிய மூவரும் பாக்கியநாதன் வீட்டுக்கும், நளினி அலுவலகத்துக்கும் அடிக்கடி சென்று வந்தனர்.
    புலிகளின் உளவுப் பிரிவில் காந்தன், ரமணன், ஆகிய இருவரையும் விட உயர்ந்த பதவிநிலையில் இருந்த சிவராசன், இவர்களுடன் வருவதில்லை. பாக்கியநாதனையும் அறிவுவையும் தனியே வந்துதான் சந்திப்பார். காரணம், அவர் ‘ராஜிவ்’ ஆபரேஷனில் இருந்தார். காந்தன், ரமணன் ஆகியோர் வேறு ஆபரேஷனில் இருந்தனர். (கடைசியில் எல்லோரையும் ராஜிவ் கொலை வழக்கில் தொடர்பு படுத்தியது சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழு)
    பாக்கியநாதனை சிவராசன் ஒருதடவை சந்தித்தபோது, சென்னையில் தான் சென்று வருவதற்கு ஒரு மோட்டார் சைக்கிளும், வேறு பணிகளுக்காக ஒரு கார் பெட்டரியும் தேவை என்று கூறியிருந்தார். சென்னையில் பாக்கியநாதனும், அறிவும், தமக்கு தெரிந்தவர்கள் ஊடாக சிவராசனுக்காக ஒரு ‘கவாஸாகி பஜாஜ்’ மோட்டார் சைக்கிள் வாங்க உதவி செய்தனர்.
    சிவராசன்  பணம் கொடுத்த போதிலும், மோட்டார் சைக்கிள் அறிவு பெயரில், பத்மாவின் முகவரி குறிப்பிட்டு வாங்கப்பட்டது. ஒரு கார் பெட்டரியையும் அறிவு வாங்கி சிவராசனிடம் அளித்தார்.
    பின்னாட்களில் ராஜிவ் கொலை விசாரணையின்போது, புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்பு கொள்வதற்காகவே கார் பெட்டரி வாங்கப்பட்டது என்பது தெரியவந்தது. சிவராசன் இலங்கையிலிருந்து வரும்போது, லேட்டஸ்ட் ஒயர்லெஸ் கருவி ஒன்றை தம்முடன் எடுத்து வந்திருந்தார். அதை இயக்குவதற்காகத்தான் இந்த கார் பெட்டரி வாங்கப்பட்டது என்பது பின்னர் தெரியவந்தது.
    ஆனால், குறிப்பிட்ட பெட்டரி எதற்காக வாங்கப்படுகிறது என்பது அறிவுக்கோ, பாக்கியநாதனுக்கோ தெரியாது. இருந்தபோதிலும், கார் பெட்டரி வாங்கிக் கொடுத்ததும் ஒரு குற்றமாக, அறிவு பேரில் சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் பதிவாகியது.
    அதேபோல, வேறு ஒரு விஷயத்திலும் அறிவு தம்மை அறியாமல் சிக்கிக் கொண்டார். சிவராசன், கோல்டன் பவர் 9 வோல்ட் பெட்டரிகள் வாங்க வேண்டும் என்று சொன்னபோது, அதை வாங்கிக் கொடுத்ததும் அறிவுதான். 9 வோல்ட் பெட்டரிகளை சென்னையில் எந்த மின்சார உபகரணங்கள் விற்கும் கடையிலும் சிவராசனே வாங்கியிருக்க முடியும். ஆனால், அறிவு சிவராசனிடம் பணத்தை வாங்கிச் சென்று பெட்டரிகளை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தார் என்பதும் விதிதான்.
    காரணம், கோல்டன் பவர் 9 வோல்ட் பெட்டரிகள்தான், தனு தனது உடலில் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் கருவிக்கு மின்சக்தி ஊட்டப் பயன்படுத்தப்பட்டது.
    இந்த கோல்டன் பவர் 9 வோல்ட் பெட்டரிகள் வாங்கிய விவகாரமும் ராஜிவ் கொலை வழக்கில் அறிவுக்கு எதிராக பதிவாகியது.
    ராஜிவ் கொலை நடந்த பின்னர் சிவராசனை புலனாய்வுக் குழு தேடத் தொடங்கியபோது, கவாஸாகி பஜாஜ் மோட்டார் சைக்கிளை பாக்கியநாதனிடம் விட்டுச் சென்றுவிட்டார் சிவராசன். இந்த மோட்டார் சைக்கிளை பாக்கியநாதனின் பி.பி.எல். ஆல் ரவுண்டர்ஸ் அச்சக வளாகத்திலிருந்து புலனாய்வுக் குழு கைப்பற்றியது.
    மோட்டார் சைக்கிளை வைத்திருந்த குற்றம் பாக்கியநாதன் மீது விழுந்தது.
    ராஜிவ் காந்தி மே 21, 1991-ல் கொல்லப்பட்டார். அதற்கு முன் தினம், சிவராசன் இறுதி ஏற்பாடுகளை சரிபார்க்க தொடங்கினார்.
    மே 20-ம் தேதி, பாக்கியநாதன், அறிவு, நளினி, ஹரிபாபு ஆகியோர் பாக்கியநாதன் இல்லத்தில் சிவராசனைச் சந்தித்தனர். போட்டோக்கள் எடுப்பதற்காக, ஹரிபாபுவிடம் கோடக்ஃ பிலிம் ரோல் அளிக்கப்பட்டது. அடுத்த நாள், ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ்காந்தி பேசவிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், அங்கு முக்கிய நிகழ்வு ஒன்று நடக்கலாம் என்றும் தெரிவித்தார் சிவராசன்.
    போட்டோ எடுப்பதற்காக ஹரிபாபு மட்டும் தம்முடன் வந்தால் போதும் எனவும், பாக்கியநாதன், அறிவு ஆகியோர் வரத் தேவையில்லை என்றும் கூறிவிட்டார். ஏதோ நடக்கப் போகிறது என்பதைத் தவிர அவர்கள் இருவருக்கும் வேறு ஏதும் தெரியாது.
    ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ்காந்தி பேசவிருக்கும் பொதுக்கூட்டம் மே 21-ம் தேதி இரவு நடக்கவிருந்தது. பாக்கியநாதன், அறிவு ஆகிய இருவரும் நைட் ஷோ சினிமா பார்க்க சென்றுவிட்டனர். மறுபுறம், முருகன் இரவு உணவை முடித்துக்கொண்டு உறங்கச் சென்றுவிட்டார்.
    சினிமா பார்த்துவிட்டு திரும்பும்போது, ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்ததையும், ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்டதையும் பாக்கியநாதனும், அறிவும் அறிந்து கொண்டனர். வீட்டுக்குச் சென்றதும் முருகனை எழுப்பி இந்தச் செய்தியைத் தெரிவித்தனர்…. (தொடரும்)

    -பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், மற்றும் ரிப்போர்ட்களுடன், ரிஷி.

    ராகுல் டிராவிட்... சூரியன்கள் மறைத்த நட்சத்திரம்!



    சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லியிருக்கிறார், ராகுல் டிராவிட். ஓய்வுபெறும் முடிவையும் அவரது பாணியிலேயே அறிவித்திருக்கிறார்!
    பொதுவாக நட்சத்திர வீரர்கள் மைதானத்தின் நடுவே ரசிகர்கள் கைத்தட்டலோடு விடைபெற வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால், ராகுல் டிராவிட் அவரது ஆட்டத்தைப் போலவே அழகாக திட்டமிட்டு, முன்கூட்டியே செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து, கோட் சூட் அணிந்தபடி கண்ணியமாகவும் கம்பீரமாகவும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
    இது தான் டிராவிட்!
    எப்போதும் ஒரு நிதானத்தை, பதற்றமோ பரப‌ரப்போ இல்லாத உறுதியை, திட்டமிட்டு கவனமாக அடியெடுத்து வைக்கும் தன்மையை அவரிடம் பார்க்கலாம். ஆடுகளத்திலும் சரி, ஆடுகளத்துக்கு வெளியேயும் சரி.. கிரிக்கெட்டில் அடிக்கடி சொல்லப்படுவதை போல் அவர் நிஜமாகவே ஜென்டில்மேன் தான்!
    16 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் டிராவிட் ஏற்ற இற‌க்கங்களைப் பார்த்திருக்கிறார்; சோதனைகளைச் சந்தித்திருக்கிறார்; சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் ஒருபோதும் அவர் மனம் தளர்ந்து போனதில்லை. எங்கேயும் எப்போதும் நிதானமாகவே இருந்திருக்கிறார்.
    டிராவிட்டின் இந்த நிதானமும், மன உறுதியுமே கடந்த 16 ஆண்டுகளாக இந்திய அணியின் பக்கபலமாக இருந்துவந்திருக்கிறது. இந்திய பேட்டிங் நெருக்கடிக்கு ஆளான நேரங்களில் எல்லாம் அவரே இந்திய அணியை தாங்கிப் பிடித்திருக்கிறார்.
    இந்திய அணியை பொருத்தவரை, டிராவிட்தான் ஆபத்பாந்தவன். அனல் வீசும் வேகப்பந்து வீச்சில் இந்திய பேட்டிங் தடுமாறி நின்றபோதும், விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியின் விளிம்பில் நின்றபோதும் அவரது உறுதியான ஆட்டமே கைகொடுத்திருக்கிறது.
    இந்திய அணிக்கு சிக்கல் என்றால், ரசிகர்கள் நம்பியதும் டிராவிட்டை தான். எதிர் அணியினர் குறிவைத்ததும் டிராவிட்டை தான்!
    எத்தனையோ போட்டிகளில் அவர் இந்திய அணிக்கும் தோல்விக்கும் இடையே நின்றிருக்கிறார். அதனால்தான் "இந்தியப் பெருஞ்சுவர்" எனப் பாராட்டப்பட்டார். நிதானமும் நிலையான தன்மையும் கொண்ட அவருக்கு
    இந்தப் பெயர் எத்தனை கச்சிதமாக பொருந்துகிறது. அதே அள‌வுக்கு வெற்றிக்கும் பங்களிப்பு செலுத்தியிருக்கிறார்.
    டிராவிட் தாங்கி நிற்கும் விழுப்புண்கள் அதிகம். தங்கத்தை நெருப்பில் இட்டால்தான் பிரகாசிக்கும் என்பது போல டிராவிட்டின் ஆற்றலை சோதனைகளும் சவால்களுமே வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. அதற்கேற்ப டிராவிட்டின் சாதனைகளும் வியக்க வைக்கின்றன.
    டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலுமே 10,000 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் ' மெதுவாக ஆடுகிறார்.. எனவே ஒருநாள் போட்டிக்கு ஒத்துவரமாட்டார் ' என்று விமர்சிக்கப்பட்டதை மீறி, ஒருநாள்போட்டிகளில் பத்தாயிரம் ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார்.
    டெஸ்ட் போட்டிகளில் எல்லா நாடுகளுக்கு எதிராகவும், எல்லா நாடுகளிலும் சதம் அடித்திருக்கிறார். 88 முறை டெஸ்ட் போட்டிகளில் ஜோடியாக 100 ரன்களை குவித்துள்ளார். வேறு எந்த வீரரையும்விட அதிகமாக 31,258 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக கேட்சுகளை பிடித்திருக்கிறார் (210).
    சாதனைகளையும் ஆட்டத்திறமையையும் மீறி, ராகுல் டிராவிட் தனக்கான முழு அங்கீகார‌த்தையும் பெற்றதேயில்லை என்பது தான் கொஞ்சம் விசித்திரமானது.
    ஒரு விதத்தில் இது புரிந்துகொள்ளக்கூடியதே. சாதனை மன்னன் சச்சின் டெண்டுல்கர், கொல்கத்தா இளவரசர் கங்குலி, டெல்லி சூறாவளி சேவாக் என புகழ் வெளிச்சத்தை தங்கள் பக்கம் திருப்பி கொள்ளும் ஆற்றல் படைத்த சூரியன்கள் நிரம்பிய இந்திய அணியில், பல நேரங்களில் டிராவிட்டின் சாதனைகள் பிரகாசம் குறைந்துபோனது மறுக்க முடியாத உண்மை.
    கடந்த 1996-ல் அவரும் கங்குலியும் லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தனர். அந்தப் போட்டியில் டிராவிட் அபாரமாக விளையாடி, 95 ரன்கள் குவித்தார். ஆனால் அதே போட்டியில் நேர்த்தியாக‌ ஆடி சதம் அடித்த கங்குலி பற்றி தான் எல்லோரும் பேசினார்கள்.
    தொடர்ந்து, டிராவிட் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியபோதும், சச்சினோ சேவாக்கோ புகழப்பட்ட அளவுக்கு அவர் பாராட்டப்பட்டதில்லை; கொண்டாடப்பட்டதில்லை.
    ஒருவிதத்தில் டிராவிட்டின் நிதானமான ஆட்டமும் அமைதியான குணமும் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் ஒன்று... புகழ் மாலைகள் வந்து விழாத‌து கண்டு டிராவிட் மனம் புழுங்கியதுமில்லை; வேதனைப்பட்டதும் இல்லை! மாறாக, 'என் கடன் ரன் குவிப்பதே...  அணியின் வெற்றிக்கு உறுதுணைபுரிவதே' என்பது போல தனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இதுவே அவரை சிறந்த டீம் மேனாக மாற்றியது.
    ஆனால், இந்திய அணி சோதனைக்கு ஆளான போதெல்லாம் அவர் சுமைதாங்கியாக மாறி தனது ஆட்டம் பற்றி பேச வைத்தார்.
    கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் லக்ஷ்மனோடு சேர்ந்து அவர் ஆடி சதம் அடித்து அந்த போட்டியையே தலைகீழாக மாற்றி, வெற்றிக்கு வழி வகுத்ததை யாரால் மறக்க முடியும். அதே போல பாகிஸ்தானின் ராவல்பிண்டியில அவர் அடித்த 270 ரன்களையும் மறந்துவிட முடியாது!
    இதேபோல ஆஸ்திரேலிய மண்ணிலும் மேற்கிந்திய தீவுகளிலும் அவர் ஆடிய பல இன்னிங்க்ஸ்கள் கிரிக்கெட் காவியம் தான்.
    தன்னிடம் அணி எதிர்பார்ப்பது என்ன என்பதை உணர்ந்து, அதற்கேற்ப ஆடிய தன்னலமற்ற வீரர் டிராவிட். புகழின் பின்னே அவர் ஓடியதும் இல்லை. சவால்களை கண்டு ஓடியதும் இல்லை.
    "எப்போதுமே எல்லாவற்றையும் அணிக்கு தரும் வகையில் விளையாடுவதே எனது கிரிக்கெட் அணுகுமுறையாக இருந்துள்ளது," என்று டிராவிட் ஓய்வு முடிவை அறிவித்தபோது பெருமையோடு குறிப்பிட்டுள்ளார்.
    "சில நேரங்களில் தோல்வியை சந்தித்திருந்தாலும், ஒருபோதும் முயற்சிக்காமல் இருந்ததில்லை," என்றும் அவர் பெருமிதத்தோடு கூறியுள்ளார்.
    நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தைகள்.
    டிராவிட்டின் ஆட்டத்திலும் சரி, கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரி.. டைமிங் கச்சிதமாக இருக்கும். கேப்டன் பதவி அவரை தேடிவந்தாலும், அவர் அதனை சில ஆண்டுகளில் ராஜினாமா செய்து விட்டார். எதிர்கால கேப்டனான டோனியை அடையாளம் காட்ட இது உதவியது. அதேபோல தான் இப்போது மூத்த வீர்ர்கள், இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டும் என்று பேசப்படும் நிலையில் அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
    ஆனால், தனது ஆட்டத்தாலும் அணுகுமுறையாலும் இளம் வீரரகளுக்கான வழிகாட்டியாக விளங்குகிறார்!
    இந்தியப் பெருஞ்சுவர் இன்று தனது ஓய்வை அறிவித்தபோது உதிர்த்தது, 'sad but proud' என்று.
    எங்களுக்கும்தான் டிராவிட்!
    - சைபர்சிம்மன்

    இலங்கைக்கு எதிரான யு.எஸ். தீர்மான வரைவு வலுவற்றதா?


    இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிககவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் வரைவு அறிக்கை, எதிர்பார்த்த அளவில் வலுவானதாக இல்லை என்ற கருத்து எழுந்துள்ளது.

    அந்தத் தீர்மான வரைவில், இலங்கை அரசுக்கு எதிராக குறிப்பிடத்தக்க விமர்சனம் ஏதும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

    முன்னதாக, அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தின் வரைவு என்ற பெயரில் லீக் ஆன அறிக்கையில், இலங்கைக்கு எதிரான அம்சங்கள் தீவிரத் தன்மை மிகுந்து காணப்பட்டதும் இங்கே கவனத்துக்குரியது. (நகல்கள் - கீழே தரப்பட்டுள்ளது)

    அமெரிக்க தீர்மானத்தின் விவரம்:

    பயங்கரவாத்ததுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அந்தக் குறிப்பிட்ட நாடு, மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனம், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாடுகள், அகதிகள் மற்றும் மனிதநேய சட்டங்கள் மற்றும் அதுதொடர்பான பிற சட்டங்களுக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும் என்று தனது தீர்மான வரைவில் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

    'இலங்கை அரசால் அமைக்கப்பட்ட 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் (LLRC) பரிந்துரைகள், அந்நாட்டின் தேசிய நல்லிணக்கத்துக்கு உதவக் கூடும்.

    சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் நடந்தது; பலவந்தமாக கடத்தப்பட்டு காணமல் போவது போன்றவை தொடர்பாக நம்பகத் தன்மை வாய்ந்த விசாரணை வேண்டும்; வடக்குப் பகுதியில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ள வேண்டும்; அத்துடன், அதிகாரப் பகிர்வு அளித்து அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் ஆணைக் குழு அளித்த பரிந்துரைகளை வரவேற்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

    அதேவேளையில், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளது குறித்த விஷயங்களை, இலங்கை அரசால் அமைக்கப்பட்ட LLRC சரியாக ஆராயவில்லை என்று அமெரிக்கா தனது தீர்மான வரைவில் கவலை வெளியிட்டுள்ளது.

    1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும். இலங்கை மக்கள் அனைவருக்கும் நீதி, சமத்துவம், பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கம் கிடைப்பதை உறுதி செய்யக் கூடிய சட்டரீதியான கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

    2. அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டது குறித்து ஆராயவும் இலங்கை அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இனி எடுக்க முடிவு செய்துள்ள நடவடிக்கைகள் பற்றி இலங்கை அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    3. இத்தகைய் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகளை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் வழங்க வேண்டும். அதனை, இலங்கை அரசு ஏற்கவேண்டும் என்று இந்தத் தீர்மானம் கேட்கிறது. அத்துடன், அத்தகைய உதவி வழங்குவது குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 22-வது கூட்டத்தொடரில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை கவுன்சிலை அமெரிக்கா கோருகிறது.

    வரைவு அறிக்கை வலுவற்றதாக திருத்தப்பட்டதா? 

    அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்தில் மேற்குறிப்பிட்ட 3 அம்சங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படிருக்கலாம் என இலங்கைத் தமிழர் ஆதரவு ஊடகங்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

    அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தனது தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கு முன்பாக, இரண்டு வாரங்களுக்கு முன்னர், அந்தத் தீர்மான வரைவின் விவரம், சில ஊடங்களால் 'லீக்' செய்யப்பட்டது.

    அப்படி கசியவிடப்பட்ட அந்தத் தீர்மான வரைவில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமானதும் நம்பகத்தன்மையானதுமான விசாரணைகளை, அந்நாட்டு அரசு மேற்கொள்ளவில்லை என்று அமெரிக்கா தனது ஏமாற்றத்தை அழுத்தமாக பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும், தற்போது அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானத்தின் வரைவு அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழுகின்றன வடக்குப் பகுதியை மட்டுமே குறிப்பிட்டுள்ளதே தவிர, கிழக்குப் பகுதி சுட்டிக்காட்டப்படவில்லை என்றும் குறைகூறப்படுகிறது. அத்துடன், இலங்கையின் அரசியல் தீர்வுக்கும், போர்க்குற்ற விசாரணைக்கும் உரிய அழுத்தங்களை அமெரிக்கா பதிவு செய்யவில்லை என்றும் தமிழர்களால் ஏமாற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'இலங்கைக்கு எதிரான தீர்மானமல்ல'

    அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்தரன் கூறுகையில், "ஜெனிவாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமெரிக்காவின் தீர்மானம், இலங்கை அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை அமல்படுத்துவது தொடர்பாகவே பேசுகிறது. இது, இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் அல்ல," என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதேவேளையில், மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் புரிந்த இலங்கை அரசை, சர்வதேச சமூகம் முன்பு நிற்கவைத்துள்ள வகையில், அமெரிக்காவின் தீர்மானத்தை வரவேற்றே ஆகவேண்டும் என்றும் தமிழர்கள் மத்தியில் வலுவான கருத்து நிலவுகிறது.

    'தீர்மானத்தை வலுப்படுத்தவும் வாய்ப்புண்டு'

    ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் குறித்து நாடு கடந்த தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் கருத்து தெரிவிக்கையில், "இந்தத் தீர்மான வரைவை, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் உறுப்பு நாடுகளால் வலுப்படுத்தவோ அல்லது பலவீனப்படுத்தவோ முடியும்," என்றார்.

    இந்தத் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வது அல்லது முறியடிப்பதற்கு இலங்கை அரசு முயற்சி செய்து வருவதாக குறிப்பிட்ட அவர், சுதந்திரமான அனைத்துலக விசாரணையை வலியுறுத்தும் வகையிலான தீர்மானத்தையே தாங்கள் எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இன்னும் 2 நாடுகளின் ஆதரவே தேவை... 

    ஜெனிவா மாநாட்டில் தமக்கு எதிரான தீர்மானத்தை முறியடிக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    அதேவேளையில், இந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றுவதற்காக அமெரிக்க அரசும் துரிதம் காட்டி வருகிறது.

    தற்போதையச் சூழலில், அமெரிக்காவின் தீர்மானத்தை தாங்கள் ஆதரிப்பதாக 22 நாடுகள் கூட்டாக பகிரங்கமாக ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளுள், 24 நாடுகளின் ஆதரவு இருந்தால், இந்த் தீர்மானம் நிறைவேறும் என்பதால், இன்னும் 2 நாடுகளின் ஆதரவு கிடைத்தாலே போதுமானதாக தெரிகிறது.

    இந்த நிலையில், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளபோதிலும், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து மத்திய அரசு இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது.
    அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்த தீர்மான வரைவின் நகல்:


    அமெரிக்கா தயாரித்துள்ளதாக 2 வாரங்களுக்கு முன்பு வெளியானதாக கூறப்படும் 'லீக்' ஆன வரைவின் நகல்:
    -Vikatan

    இந்திய ஆதிக்கத்தை மட்டுப்படுத்தவா இலங்கையுடன் சீனா நெருக்கம்

    essayஉலக நாடுகள் மத்தியில் இன்று நிலவும் பொருளாதார, சமூக, கலாசார தொடர்புகள் கடும் சிக்கல் நிலைக்கு உள்ளாகியுள்ளன . ஒரு நாட்டின் இயக்கத்துக்கு உலகின் ஏனைய நாடுகளின் உதவி மற்றும் ஒத்துழைப்பு மிக்க அவசியமானதொன்றாக மாறியுள்ளது.

    இலங்கையின் இன்றைய அரசியலில் சர்வதேச சமூகம் என்ற வார்த்தை பெருமளவில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்தத்தில் சர்வதேச சமூகம் என்ற வார்த்தை யாரை அடையாளப்படுத்துகிறது என்பதை எம்மில் பெரும்பாலானோர் அறிந்திலர். உலகின் சகல இன மக்களையும் உள்ளடக்கிய மக்கள் கூட்டமே சர்வதேச சமூகம் என்றாகிறது. இதைவிடுத்து குறிப்பிட்ட ஒரு நாட்டையோ அல்லது சில நாடுகளையோ மட்டும் சர்வதேச சமூகம் என்ற பெயரால் அடையாளப்படுத்த இயலாது. அந்த வகையில் இலங்கையர்களாகிய நாமும் கூட சர்வதேச சமூகத்துள் உள்ளடக்கமே. சர்வதேச சமூகம் என்ற கோட்பாட்டை நிர்வகிக்க, ஏற்கப்பட்ட பொதுச் சட்டக்கோவையொன்று நடைமுறைப்படுத்தப்படாத போதிலும்  பெரும்பாலான இனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாய நடைமுறைகளால் அது நிர்வகிக்கப்படுகிறது.
     
    குறிப்பிட்டதொரு அமைப்பு வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட வேண்டுமானால், அதன் உறுப்பினர் அவ்வமைப்பின் நோக்கங்களை எட்டுவதற்காக தம்மிடையே ஒன்றி ணைந்து செயற்பட்டாக வேண்டும். அமைப்பின் பொது நோக்கங்களைப் புறம்தள்ளி உறுப்பினரொருவர் செயற் படுவாரானால் குறிப்பிட்ட அந்த உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளும் உரிமை அந்த அமைப்புக்கு உள்ளது. அதேபோன்று ஏற்கப்பட்ட உலகப் பொதுநோக்கமொன்றுக்கு எதிராக ஒரு நாட்டின் அரசு செயற்படுமானால் குறிப்பிட்ட அந்த உறுப்பு நாட்டுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் உரிமை சர்வதேச சமூகம் என்ற பெயருக்குள் அடங்கும் ஏனைய நாடுகளின் அரசுகளுக்கு உள்ளது. அத்தகைய நடவடிக்கை "தடை" என்ற விதத்தில் அடையாளப்படுத்தப்படும்.
     
    சர்வதேச சமூகம் என்ற பெரும்  ஜலசமுத்திரத்தில் இலங்கை ஒரு நீர்த்துளிக்கு ஒப்பானதே. எனவே இலங்கை  சர்வதேச சமூகத்துடன் தொடர்புகளைப் பேணும் அ÷தவேளை, எமது அண்டை நாடான இந்தியா அதில் முக்கிய பாத்திரம் வகிக்கிறது. இந்தியா ஒரு பெரு விருட்சம் எனக் கொண்டால் இலங்கை அந்த விருட்சத்தில் பூத்திருக்கும் ஒரு மலரை ஒத்ததே. விருட்சத்திலிருந்து மலர் உதிர்ந்து விழும் வேளை அது தன் முக்கியத்துவத்தை இழப்பது போன்று இந்தியாவுடனான இணக்கப்பாடு அற்றுப்போகுமானால் இலங்கை தனது முக்கியத்துவத்தை இழக்க நேரிடும்.
    இலங்கையுடன் ஒப்பிடும்போது இந்திய சகல துறைகளிலும் தன்னிறைவு மட்டத்தை எட்டியுள்ளது. இலங்கைப் பொதுமக்களது முக்கிய உணவுப் பாவனைப் பொருள்களில் பெரும்பாலானவை இந்தியாவிலிருந்தே இறக்குமதியாகின்றன. இலங்கையில் பாதுகாப்புப் படையினரின் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய யுத்த உபகரணங்களில் பெரும்பாலானவை இந்தியத் தயாரிப்புக்களே. யுத்த வலுவிலும்கூட இந்தியா அணுத்திறன் கொண்ட பல நிலையில் உள்ளது. அதுமட்டுமன்றி இலங்கை பூகோள ரீதியில் இந்தியாவுக்கு மிக அண்மையில் இருப்பதால் தேவையானால் இந்தியாவால் இலங்கைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வாய்ப்பும் உள்ளது.
     
    இலங்கை சர்வதேச சமூகத்துடன் தொடர்புகளைப் பேணும் வேளை இந்தியாவுடனும் நட்புறவைப் பேண வேண்டியுள்ளதன் அவசியம் இதன் மூலம் தெளிவாகிறது. ஆனால் இலங்கையின் வெளியுறவுக்கொள்கை ஒருபோதும் பக்கச்சார்பான வகையில் அமைதல் ஆகாது. அந்த வகையில் இலங்கை, வெளியுறவுக் கொள்கை விடயத்தில் நடுநிலைத் தன்மையைப் பேண வேண்டியது முக்கியமானதாகும். குறிப்பிட்டதொரு முக்கியமான சர்வதேசச் சிக்கலொன்றில் இலங்கை ஒரு தரப்புச் சார்ந்து செயற்பட வேண்டிய அவசியம் ஏற்படுமானால் குறிப்பிட்ட சிக்கலுடன் சம்பந்தப்பட்ட மறு தரப்பின் பகையைத் தேடிக்கொள்ள நேர்வது இயற்கையே. அந்த நிலையில் தேவைப்படுபவை கிட்டும்  வேளை, வேறு சிலவற்றை இழக்கும் நிலை உருவாகும். சர்வதேச ரீதியிலான தொடர்புகளைப் பேணும் வேளையில் நாட்டின் ராஜதந்திரிகள் எதிர்கொள்ள நேரும் சிக்கல்கள் இவையேயாகும். இத்தகைய வேளைகளில் ஆகக் குறைந்த அளவில் நட்டத்தை எதிர்கொண்டு அதியுச்ச இலாபத்தை ஈட்டும் விதத்திலான ராஜதந்திரச் செயற்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவது பயன்விளைவிக்க வல்லதாகும்.
    குறிப்பிட்டதொரு நாடு எமக்குச் சார்பானதா? அல்லது எதிரானதா? என்பதை ஒரு தரப்பால் மட்டும் தீர்மானித்து விட இயலாது. சம்பந்தப்பட்ட நாட்டின் விருப்பமும் இதில் முக்கியத்துவம் பெறுகிறது. திருமணம் குறித்து முடிவெடுக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டும் வழங்கப்படுமானால் சகல ஆண்களும் ஐஸ்வர்யா ராயையே மணப்பதென முடிவெடுக்கக் கூடும். ஆதலால் முடிந்த அளவுக்கு இரு தரப்பு உறவுகளைப் பேணுவதன் மூலம் பிற நாடுகளுடனான நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டியது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் அரசுகளுக்கு மிக அவசியமாகும்.
     
    இன்றைய அரசியலரங்கில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் மற்றொரு முக்கிய விடயம் இலங்கையுடனான சீனாவின் நெருக்கமாகும். சீனாவின் இலங்கை மீதான தலையீடு குறித்து ஆராயும் போது சீனா அரசியல் இலாப மீட்டும் நோக்கில் இலங்கையுடன் கடும் நெருக்கத்தைப் பேணுவதாகக் கருத முடியாதுள்ளது. பிராந்திய நல்லிணக்கம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலேயே சீனாவும் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதாகக் கருதமுடிகிறது. அந்த நோக்கத்தின் உள்ளக எத்தனம் சில வேளை பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்துவதாக இருக்கக்கூடும்.
     
    இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்க உதவி வழங்கிய சீனா, பாகிஸ்தானின் துறை முக நிர்மாணத்துக்கும் உதவி வருகிறது. இதன் மூலம் சீனா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவைச் சுற்றி வளைத்து தனது கடற்பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் நோக்குடன் செயற்பட்டு வருவதாகத் தோன்றுகிறது. இதன் விளைவு கடைசியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பெரும் போர் ஒன்றுக்கும் வழிவகுக்கலாம். ஆதலால் இலங்கை பின்பற்றும் வெளியுறவுக் கொள்கை நடுநிலையானதாக அமைய வேண்டியுள்ளது என்பது பல சர்வதேச அரசியல் விமர்சகர்களது கருத்தாகும்.
     
    சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளால் ஐம்பது ஆண்டுகளுக்குள் அபிவிருத்தி அடைந்த  நிலையை எட்ட முடிந்தது. ஆனால் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற அடைமொழியுடன் இருந்து வருகிறது. இன்னமும் அபிவிருத்தி அடைந்த நாடு என்ற நிலையை இலங்கையால் எட்டமுடியவில்லை. இந்தப் பின்னடைவுக்குக் காரணமாக நாடு சுதந்திரம் அடைந்த நாள்முதல் இன்றுவரை பதவியிலிருந்த அரசுகள் பின்பற்றி வந்த தவறான வெளியுறவுக் கொள்கையைக் குறிப்பிட இயலும். எனவே நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் நாட்டின் ராஜதந்திர விற்பன்னர்களின் உதவியுடன் இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்ததொரு நாடு என்ற நிலைக்கு இட்டுச் செல்லும் நோக்குடனான வெளியுறவுக் கொள்கையை வகுத்து  செயற்படவைக்க முயலவேண்டும். அத்தகைய நோக்கத்தை எட்டும் விதத்தில் சர்வதேச சமூகத்துடனான நல்லிணக்க, நட்பு ரீதியிலான தொடர்புகளைப் பேண வழி வகை செய்யப்படுதல் இன்றைய காலத்தின் தேவையாகும். ஆட்சி யாளர்கள் இது குறித்து அக்கறை காட்டிச் செயற்பட முன்வருவார்களா?     
    logonbanner-1

    காங்கிரஸுக்கு துரோகம் இழைக்க மாட்டோம்: மம்தா

    மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதில்லை என்று கூறியுள்ள மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மத்திய அரசைக் கவிழ்ப்பதற்கு தாங்கள் துரோகிகள் அல்ல என்று தெரிவித்திருக்கிறார்.

    உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்‍குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்‍கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தது, மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது.

    அக்‍கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ரயில்வே அமைச்சருமான தினேஷ் திரிவேதி அளித்த பேட்டியில், 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வரலாம் எனத் தெரிவித்தார். 

    மேலும், மத்திய அரசு முடமாகிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியது, காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக தெரிகிறது. 

    இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலிடம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாக, கொல்கத்தாவில் இருந்து வெளியாகும் வங்க மொழி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

    அதில், "நாங்கள் துரோகிகள் அல்ல; மத்திய அரசை நிலைகுலையச் செய்ய மாட்டோம். மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை நாங்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக்கொள்ளவும் விரும்பவில்லை," என்று மம்தா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், தினேஷ் திரிவேதி கூறியது, அவரது சொந்தக் கருத்து என்று காங்கிரஸிடம் மம்தா விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை! முல்லை. வள்ளிபுனத்தில் சம்பவம்


    முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வள்ளிபுனம் கிராமத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
    நேற்று முன்தினம் வியாழக்கிழமை 10. 00 மணியளவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
    அன்றைய தினம் வீட்டிலிருந்து குறித்த இளம் குடும்பஸ்தர் உணவு உட்கொண்டிருந்த வேளை புகுந்த இனந்தெரியாத நபரொருவர் இவரை கத்தியால் வெட்டியுள்ளார்.
    கத்தி வெட்டுக்கு ஆளான குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலைலயில் கிளிநொச்சி அரச வைத்தியாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
    இந்த நிலையில் இவர் இடைவெளியில் உயிழந்துள்ளார்.
    கொல்லப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தாமி மகேந்திரன் (வயது 32) என்பவராவார்.
    இவரது சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    இச்ம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

    Labels

    ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
    தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
    tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
    * Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

    * Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
    tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

    தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா