சென்னை: கோலிவுட்டின் சாய்னா என்று செல்லப் பெயர் பெற்ற நடிகை ஷாலினிக்கு நாகர்கோவிலில் நடந்த பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.
நாகர்கோவிலில் சமீபத்தில் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி நடந்தது. இதில் ஷாலினியும் கலந்து கொண்டார். ஷாலினி ஒரு சிறந்த பேட்மிண்டன் வீராங்கனை. சமீப காலமாக அவர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு ஆடி வருகிறார்.
நாகர்கோவிலில் நடந்த போட்டியில் அவர் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் கலந்து கொண்டார். இதில் இரண்டிலும் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
போட்டியின் இறுதியில் நடந்த பரிசளிப்பு விழாவில் அவர் பரிசினை பெற்றுக் கொண்டார். தனக்கான பரிசை தனது மகள் அனுஷ்கா மூலமாக பெற்றார் ஷாலினி.
No comments:
Post a Comment