இலங்கை இராணுவப் புலனாய்வு அதிகாரியான லெப்.கேணல் முத்தலிப்பை, சக இராணுவ அதிகாரி ஒருவரே புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
வன்னியில் கண்டுபிடிக்கப்பட்ட புலிகளின் இரகசிய ஆவணம் ஒன்றையடுத்து இந்தக் கொலையில் தொடர்புடைய சந்தேகநபரான இலங்கை இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த போது கிருலப்பனையில் வைத்து லெப்.கேணல் முத்தலிப் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
வன்னியிலும் கிழக்கிலும் விடுதலைப் புலிகளின் மீது இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகளால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல்களுக்கு இவர் பொறுப்பாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், லெப்.கேணல் முத்தலிப் மீதான தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தியதாக இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டியிருந்தது.
இந்தநிலையில், வன்னியின் கிழக்குப் பகுதியில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் இரகசியப் புலனாய்வு ஆவணங்களில் ஒன்றில், லெப்.கேணல் முத்தலிப்பை படுகொலை செய்வதற்கு இலங்கை இராணுவ அதிகாரி ஒருவருக்கு புலிகள் 1.5 மில்லியன் ரூபாவை வழங்கியது தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே அந்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அதேவேளை இலங்கை அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மீது தாக்குதல் நடத்தினால், குறிப்பிட்ட அதிகாரிக்கு மேலும் 1.5 மில்லியன் ரூபாவை வழங்குவதாகவும் புலிகள் வாக்குறுதி அளித்திருந்த தகவலும் அந்த இரகசிய ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த இரகசிய ஆவணங்கள் பொலித்தீனால் சுற்றப்பட்டு கொள்கலன் ஒன்றில் போட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கை இராணுவத்தினரினால் மீட்கப்பட்டுள்ளன.
வன்னியில் கண்டுபிடிக்கப்பட்ட புலிகளின் இரகசிய ஆவணம் ஒன்றையடுத்து இந்தக் கொலையில் தொடர்புடைய சந்தேகநபரான இலங்கை இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த போது கிருலப்பனையில் வைத்து லெப்.கேணல் முத்தலிப் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
வன்னியிலும் கிழக்கிலும் விடுதலைப் புலிகளின் மீது இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகளால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல்களுக்கு இவர் பொறுப்பாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், லெப்.கேணல் முத்தலிப் மீதான தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தியதாக இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டியிருந்தது.
இந்தநிலையில், வன்னியின் கிழக்குப் பகுதியில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் இரகசியப் புலனாய்வு ஆவணங்களில் ஒன்றில், லெப்.கேணல் முத்தலிப்பை படுகொலை செய்வதற்கு இலங்கை இராணுவ அதிகாரி ஒருவருக்கு புலிகள் 1.5 மில்லியன் ரூபாவை வழங்கியது தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே அந்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அதேவேளை இலங்கை அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மீது தாக்குதல் நடத்தினால், குறிப்பிட்ட அதிகாரிக்கு மேலும் 1.5 மில்லியன் ரூபாவை வழங்குவதாகவும் புலிகள் வாக்குறுதி அளித்திருந்த தகவலும் அந்த இரகசிய ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த இரகசிய ஆவணங்கள் பொலித்தீனால் சுற்றப்பட்டு கொள்கலன் ஒன்றில் போட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கை இராணுவத்தினரினால் மீட்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment