சிம்பவுக்கும், தனுஷுக்கும் ஏழாம் பொருத்தமாகத் தான் உள்ளது. தனுஷுடன் சுள்ளானில் நடித்த சிந்து துலானியை சிம்பு தனது மன்மதன் படத்தில் விலைமாதாக்கினார். சிம்புவுடனான காதல் முறிந்த பிறகு நயன்தாராவுடன் தனுஷ் யாரடி நீ மோகினியில் நடித்தார். தனுஷ் ஒய் திஸ் கொலவெறிடி பாட சிம்பு பதிலுக்கு ஒரு பாட்டை பாடி யூடியூப்பில் விட்டார். பாட்டு பஞ்சராகிப் போனது.
இவர்கள் ராசியாகவே மாட்டார்களா என்று கேட்டால் அது இப்போதைக்கு நடக்கிற மாதிரி தெரியவில்லை. இந்நிலையில் சிம்பு நடிக்கும் வாலு படத்தில் அவரைப் பார்த்து ஹன்சிகா ஒரு சில பசங்கள பாக்க பாக்கத் தான் பிடிக்கும். ஆனா உன்ன மாதிரி பசங்கள பாத்த உடனே பிடிச்சிடும் என்று டயலாக் விடுகிறாராம்.
படிக்காதவன் படத்தில் தனுஷ் தன்னைப் பார்த்தாலே முகம் சுளிக்கும் தமன்னாவைப் பார்த்து என்ன மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிக்காது. பாக்கப் பாக்கத் தான் பிடிக்கும் என்று சொன்னார் என்பது நினைவிருக்கலாம்.
தனுஷ், சிம்பு ரசிகர்கள் வார்த்தை போர் நடத்த இந்நேரம் வரிந்து கட்டி தயாராகியிருப்பார்கள். இந்த இருவர் பிரச்சனையை தீர்த்து வைக்க ஆளே இல்லையா?
அள்ளி முடியக் கொண்டையி்ல்லையாம், ஆனா பேச்சுக்கு குறைச்சல் இல்லையாம்.. அந்தக் கதையாவுல்ல இருக்கு...!
No comments:
Post a Comment