Saturday 17 December 2011

அபகரிக்கப்படும் தமிழர் காணிகள்!நிர்க்கதியில் முல்லைத்தீவு மக்கள்


முல்லைத்தீவுப் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் சிங்கள மக்கள் குடியேறி வருவதாக அப் பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள அனைத்துப் பாகங்களிலும் சிங்களக் குடியேற்றத்தை மேற்கொள்ள திடசங்கற்பம் பூண்டுள்ள அரசு இதற்குத் துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

முல்லைத்தீவு முகத்துவாரம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் காணிகள் தொடர்ந்தும் தெற்கில் இருந்து வந்த சிங்களவர்களால் அபகரிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப் பகுதியில் 240 ற்கும் மேற்பட்ட சிங்கள குடும்பங்கள் குடியேறியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு முகத்துவாரம் பகுதியில் உள்ள காணிகள் அனைத்தும் பூர்வீகமாகத் தமிழர்கள் வாழ்ந்த காணிகள் என அந்த மக்கள் கூறுகின்றனர். அதற்கு அரசினால் வழங்கப்பட்ட சட்ட ஆவணங்களும் தம்மிடம் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிங்களக் குடும்பங்களே தொழில் நிமித்தம் முகத்துவாரம் பகுதியில் தங்கியிருந்தன. எனினும் தற்போது நீர்கொழும்புப் பகுதியைச் சேர்ந்த 240 ற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் முகத்துவாரம் பகுதியில் உள்ள தமிழர்களின் காணிகளை அபகரித்து அடாத்தாகக் குடியமர்ந்துள்ளன.

அத்துடன் முகத்துவாரம் கடற்பகுதியையும் அவர்கள் முழுமையாகத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அங்கு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கு நீர்கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளிலும் சொந்தமான வீடுகள், காணிகள் என்பன உள்ளன.

தமிழரின் நிலங்களைத் திட்டமிட்டு ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே இந்த மக்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளனர். இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே இது குறித்து உடனடிக் கவனம் செலுத்தி பிரச்சினைகள் ஏற்படுவதைச் சம்பந்தப்பட்டோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதிகளில் இதுபோன்ற குடியேற்றங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Friday 16 December 2011

கொலவெறி டீமின் மேலும் நான்கு பாடல்கள் வெளியீடு!



தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம் என உலகை தன் பக்கம் திசை திருப்பிய “ ஒய் திஸ் கொலவெறி?” பாடல் இடம்பெற்ற 3 படத்தின் இசைவெளியிட்டை இத்தனை சீக்கிரம் அறிவிப்பார்கள் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சோனி மியூசிக் நிறுவனம் டிசம்பர் 23-ஆம் தேதி 3 படத்தின் இசையை வெளியிட முடிவு செய்திருகிறார்கள். 
இதை அந்தப் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகார பூர்வமாக அறிவித்திருகிறார். " மிகவும் பிஸியாக பணியாற்றி வருகிறோம். 3 படத்தின் இசை வெளியீட்டு விழாவை மாறுபட்ட விழாவாக நடத்தை திட்டமிட்டு வருகிறோம். 23-ஆம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெறும். " என்று தெரிவித்துள்ளார். 

இந்த விழாவில் ரஜினி, சூர்யா, அஜித் கலந்து கொள்வது உறுதி தனுஷ் வட்டாரத்தில் தெரிவிக்கப் படுகிறது. கொலவெறி பாடலை பாடியபடி தனுஷ், மேடையில் ஆடவும் இருகிறாராம். 3 படத்தில் கொலவெறி உட்பட மொத்தம் 5 பாடல்கள். அதில் ஒன்று தீம் இசையாம். உலக அளவில் ரீமிக்ஸ் செய்யப்பட்ட கொலவெறி பாடல்களின் ஆடியோ விஷுவலும் நிகழ்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது!

சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்கும் வாய்ப்பு அதிகரிப்பு - சட்ட விதிகள் மாற்றம்?


இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சச்சின் டென்டுல்கருக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு காரணம் மத்திய அரசு பாரத ரத்னா விருது தொடர்பான சட்ட திட்டங்களில் திருத்தங்கள் மேற்கொண்டுள்ளமையாகும் என தெரியவருகின்றதுஇதற்கு காரணம் மத்திய அரசு பாரத ரத்னா விருது தொடர்பான சட்ட திட்டங்களில் திருத்தங்கள் மேற்கொண்டுள்ளமையாகும் என தெரியவருகின்றது.

இதுவரை கலை, இலக்கியம், அறிவியல், பொது வாழ்வில் சிறந்த நபர்கள் என்ற துறைகளில் மட்டும் வழங்கப்பட்டு வந்த பாரத ரத்னா விருது மாற்றம் செய்யப்பட்ட சட்டத்திட்டங்களுக்கு அமைய விளையாட்டுத் துறை வீரர்களுக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னர் அன்னா ஹசரே உட்பட, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், மற்றும் அரசியல்வாதிகள் பலரும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் விளையாட்டுத் துறையில் பாரத ரத்னா விருது பெறுவதற்கு சச்சின் மட்டுமில்லாமல் ஏராளமான வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா – இந்தியா – சீனா: மாற்றமுறும் விசை இயக்கமும் எழுச்சிபெறும் இரு முனை உலகமும்


இக்கட்டுரை தமிழ்நேசன் இணையத்தளத்தின் திரு நடேசன் சத்தியேந்திரா அவர்களால் US – India – China: Changing Dynamics & an Emerging Bi Polar World ? – a Ten Minute Read என்னும் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம். இந்தியா (தமிழ்நாடு) உட்பட பல நாடுகளில் இருந்து பலரின் வேண்டுகோளை ஏற்று மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது.
“சீனாவுடனான எமது (அமெரிக்கா) தொடர்பு உலகில் இந்த நூற்றாண்டில் இரு நாடுகளுக்கிடையேயான மிக முக்கிய உறவாக அமையும். அமெரிக்காவும் சீனாவும் ஒருவரிடம் இருந்து மற்றவர் பயன் பெறவும் ஒருவரின் வெற்றிக்கு மற்றவர் பங்களிக்கவும் முடியும் என நாம் நம்புகிறோம். எம் இருவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனைகளிலும், நாம் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்புக்களிலும் கடுமையாக உழைப்பது எமது நலன்கள் சம்பந்தமானவையாகும்” அமெரிக்க அரச செயலாளர் கிலாரி கிளின்ரன். (US Secretary of State Hillary Clinton)
1983 ஆம் ஆண்டு எதிர்பாராதவாறு கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சர்வதேச உறவுகள் சம்பந்தமான விரிவுரை ஒன்றில் நான் கலந்துகொண்டிருந்தேன். யேர்மனியில் இருந்து வந்த அதிதிப் பேராசிரியர் ஒருவரால் இந்த விரிவுரை நிகழ்த்தப்பட்டது. அவரின் பெயரை நான் மறந்துவிட்டேன். ஆனாலும் அவரால் சொல்லப்பட்ட சிலகாரியங்கள் கடந்த பல ஆண்டுகளாக என்னோடு நிலைத்துவிட்டது.
“இருமுனை உலகு, முடிவில் ஒருமுனை உலகாக மாறும் என வரலாறு காட்டுகிறது. அதன்பின் ஒருமுனை உலகு பலமுனை உலகிற்கு இட்டுச் செல்லும். அந்தப் பலமுனை உலகில் இருந்து ஒரு புதிய இருமுனை உலகு உருவாகும். அதன்பின் அந்த இருமுனை உலகானது இன்னொரு ஒருமுனை உலகிற்கு வழிவிடும் ….இப்படியாக” எனக் கூறினார்.
1983 இல் அவர் பேசியபோது நாம் அமெரிக்கா, சோவியத்யூனியன் என்னும் இரு வல்லரசுகளைக்கொண்ட இருமுனை உலகில் வாழ்ந்துகொண்டிருந்தோம். மற்றைய நாடுகள் தம்மை “அணிசேரா நாடுகள்” எனக் கூறிக்கொண்டாலும்சரி கூறாவிட்டாலும்சரி தமக்கு ஆதரவாக இரு வல்லரசுகளில் ஒன்றில் குறைந்த அளவோ கூடிய அளவோ சார்ந்திருந்தனர்.
1991 இல் சோவியத்யூனியனின் உடைவுடன் உலகின் ஏக வல்லரசான அமெரிக்காவுடனான ஒருமுனை உலகின் வெளிப்பாட்டினை நாம் கண்டோம். புதிய அமெரிக்க நூற்றாண்டிற்கான 2000 ஆம் ஆன்டுத் திட்டம் .( The Project for the New American Century, 2000) அந்த ஒருமுனை உலகில் அமெரிக்காவின் ஆட்சி, ஆதிக்கம் செலுத்தும் என்னும் காட்சியை வெளிப்படுத்தியது.
“அமெரிக்கப் புவிசார் அரசியலின் முதன்மைக்கு அமெரிக்க இராணுவ மேலாண்மைக்கான தரைப்படை வலுமை அந்தச் சங்கிலியின் முக்கியமான இணைப்பாகும். தென்கிழக்கு ஆசியாவில் ஐதாகப் பரந்துள்ள அமெரிக்கப் படையினர் அங்கு எழும் பாதுகாப்புத் தேவைகளை போதுமான அளவில் பூர்த்திசெய்ய முடியாது. தென்கிழக்கு ஆசியாவிற்கான எமது பாதுகாப்பு உத்தரவாதம் தொடர்பற்றதாகவும் அமெரிக்க இராணுவத்தின் இருப்பு தவணை சார்ந்ததாகவும் அமையின் அமெரிக்காவின் பிராந்தியத் தலைமைக்கான, சீனாவின் அச்சுறுத்தலை எந்தவிதமான அமெரிக்க வியூகத்தாலும் கட்டுப்படுத்த முடியாது. இதற்காகத் தென்கிழக்கு ஆசியாவில் கூடிய அளவிலான கடற்படை அத்தியாவசியமாயினும் அதுமாத்திரம் போதாது. நடைமுறைக் காரணிகளுக்காகவும் அரசியல் காரணிகளுக்காகவும் விரைவாக இயங்கக்கூடிய தரைப்படை மற்றும் வான்படையின் இருப்பு வேண்டப்படுகிறது.
இன்றைய சமாதானம் அமெரிக்காவின் அதி முதன்மையின் ஒரு தனித்துவமான ஒரு பொருளாக இருப்பதால், அந்த ஒப்புயர்வற்ற நிலைப்பாட்டை பாதுகாக்கத் தவறின் மற்றவர்களுக்கு, அமெரிக்காவின் நலன்களுக்கும் கொள்கைகளுக்கும் முரணான வகையில் உலகை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பைக் கொடுப்பதாக அமையும். உலகத்திற்கு தலைமைதாங்குவது என்பது, எங்களின் மனநிலைக்கேற்ப அல்லது எங்களின் அடிப்படைத் தேசிய பாதுகாப்கபுக்கான நலன்கள் நேரடியான அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, ஓய்வு நேரத்தில் செய்யப்படும் காரியம் ஒன்றல்ல. அவ்வாறு இடம் பெறுமாயின் அது மிகவும் பிந்திய காரியமாகும். மாறாக அமெரிக்காவின் புவிசார் அரசியலுக்கான தலைமையைப் பெற்றுக்கொள்வதற்கும் அமெரிக்க சாமாதானத்தை பாதுகாப்பதற்குமான அமெரிக்க இராணுவத்தின் முதன்மையை நிலை நிறுத்துவதா இல்லையா என்ற தெரிவே இது.”
2001 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ஜோர்ஸ் .டபிள்யூ. புஷ் ,அமெரிக்க இராணுவ முதன்மையையும் அமெரிக்க புவிசார் அரசியலுக்கான தலைமையையும் நிரந்தரமாகப் பெற்றுக் கொள்வதற்கான அமெரிக்க மேலாதிக்கக் கொள்கைகளை வலியுறுத்தினார்.
“ஜனாதிபதி புஷ் அவர்களின் நிர்வாகத்தினால் ஏற்படுத்தப்பட்ட வீறார்ந்த வியூகம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கும் அப்பாற்பட்டது. அது ஒருமுனை உலகில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவக் கொள்கை பற்றிய தீவிரமான மறுபரிசீலனை பற்றியது. அமெரிக்க உயர் அதிகாரிகள் விளக்குவதுபோல் தமக்கு ஒப்பான போட்டியாளர் எழுச்சி பெறுவதை தடுப்பதற்கான கொள்கைகளை வகுப்பதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் அமெரிக்கா மூர்க்கமாக உள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புச் சம்பந்தமாக வழமையாகக் கையாளும் யதார்த்தமான அணுகுமுறையை தூக்கி வீசிவிட்டு ஜனாதிபதி புஷ் தனது மிக முக்கியமான வெளியுறவுக் கொள்கை பற்றி யூன் 2002 இல் வெள்ளை மாளிகையின் மேற்குப் புள்ளியில் உரையாற்றும்போது எடுத்து உரைத்தார். இதன்போது அவர் சர்வதேச பாதுகாப்புச் சம்பந்தமாக அமெரிக்க மேலாதிக்க அல்லது நவ ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை எடுத்து விளக்கினார். இதன்படி கூட்டான பாதுகாப்பிற்கான உத்தரவாதத்திற்கு அமெரிக்கா பெரும் சக்திகளின் கூட்டான ஆதரவினை இனிமேலும் எதிர்பார்க்காது என்பதுடன் அச்சுறுத்தல்களுக்கு அப்பால் அமெரிக்க இராணுவ வலுவை தக்கவைத்திருப்பதற்காக தனக்கு எதிராக உலகில் ஆற்றல்வாய்ந்த வேறு நாடுகள் எதுவும் எழுச்சி பெறுவதை தடுப்பதிலும் அது கவனமாக உள்ளது.” The US Power Complex: What”s New – Tom Barry, November 2002
ஆனால் 9/11 இன் நிகழ்வுகளும் , ஆப்கானிஸ்தான் யுத்தமும் ஈராக் மீதான வீரப்பிரதாபமும் அமெரிக்க வலுவின் எல்லைகளை விரைவாக அம்பலப்படுத்தியது.
“…..மிகையான உற்பத்தியின் விளைவான உலகத்தின் பிரச்சனையானது அமெரிக்காவின் உண்மைப் பொருளாதாரத்தில் உள்ள அடிப்படையான பலவீனங்களை வெளிக்காட்டுகிறது. இதன் விளைவாக அமெரிக்காவின் வர்த்தக மற்றும் பட்ஜட் (பாதீடு) என்பவற்றின் பற்றாக்குறை பெருகிச்செல்கிறது. உலகின் சேமக் கையிருப்புக்கான நாணயமாக அமெரிக்க டொலருக்குப் பதிலாக ஈறோ தகுந்த மாற்றீடாக தன்னைக் காட்டிக்கொள்கிறது. இது அமெரிக்கா தன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உலகத்தின் சேமிப்பை உறிஞ்சி எடுப்பதற்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஈராக்கை கைப்பற்றியமை அத்தோடு அந்தப் பிராந்தியத்திற்கு அது கொண்டுள்ள எவையாயினும் தனது கூட்டுத்தாபனங்களுக்கு (எண்ணை, ஆயுதங்கள், பொறியியல்வேலைகள், நிதி என்பன சம்பந்தமான) நேரடியான அனுகூலங்களைத் தரும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. மற்றைய ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள தன் கூட்டுத்தாபனங்களை அது மூடினாலும் இந்த அனுகூலங்கள் கிடைக்கும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. அத்தோடு பெற்றோலியத்திற்கான மொத்த வர்த்தகத்தை ஈறோ நாணயத்தில் நடத்துவதை தடுப்பதில் அமெரிக்கா முனைந்து நிற்கிறது. இதன் மூலம் டொலறின் மேலாண்மையை தக்கவைக்க முயல்கிறது. ” The Invasion of Iraq: Oil & the Euro – Aspects of India”s Economy – December 2002
ஈராக் மீதான படையெடுப்பின் பின்னான ஆண்டுகளில் அமெரிக்க மேலாதிக்கத்தின் ஒருமுனை இயக்கம் முடிவடைந்துவிட்டது என்கிறார் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரிமதி ஹாட்ரன் Timothy Garton Ash, Professor of European Studies, University of Oxford wrote in 2007, -
“…. அதிகாரம் என்பது எங்கு இருந்தது, எப்படி இருந்தது என்பதல்ல இனிமேல் கேள்வி. (அது மேற்கில் குவிந்திருந்தது, அதிலும் குறிப்பாக வெள்ளை மாளிகையின் மேற்கு இறகில்). அது இப்போ செங்குத்தாகவும் கிடைக்கோடாகவும் சிதறியுள்ளது. செங்குத்தாக என்று கூறும்போது நாடுகளின் அரசாங்கங்களிடம் ஒப்பீட்டளவில் குறைந்த அதிகாரங்களே உள்ளன. கிடைக்கோடாக என்று கூறும்போது அதிகாரம் என்பது சக்திவாய்ந்த பல நாடுகளிடையே பரவலாக பகிரப்பட்டுள்ளது என்பதாகும். அதிகார வரைப்படம் பல அடுக்குகளையும் பல முனைகளையும் கொண்டுள்ளது.”
இன்று உலகப் பொருளாதார நெருக்கடி இன்னொரு பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இது அன்னிய (சீனாவின் என வாசிக்கவும்) சேமிப்பில் தங்கிவாழும் அமெரிக்காவின் (கடன் வாங்கும் நாடு) நிலையை தெளிவாகக் காட்ட வைத்துள்ளது. இவர்கள் விசித்திரமான கூட்டாளிகளாக சிலருக்கு படலாம். ஆனால் இதுதான் உண்மை. சராசரி 40 ஆயிரம் டொலர் வருமானத்தைக் கொண்ட அமெரிக்கா கடன்வாங்கும் ஒரு நாடு. ஆணால் சராசரி 2 ஆயிரம் டொலர் வருமானத்தைக்கொண்ட சீனா கடன் கொடுக்கும் ஒரு நாடு. கடந்த ஒரு தசாப்தமாக அல்லது அதற்கும் மேலாக அமெரிக்காவின் கடன் வீக்கத்தை சீனாவே செய்துள்ளது.
“…வியப்புக்குரிய ஒன்றின் அறைகூவலூடாக நாம் வாழந்துகொண்டிருக்கின்றோம். Moritz Schularick அவர்களும் நானும் இதனை ” சிமெறிக்கா ” (சீனா அமெரிக்கா) என கிறீஸ்தவநாமம் சூட்டியுள்ளோம். இந்தப் பார்வையில் கடந்த தசாப்தமாக உலகப் பொருளாதாரத்தை விளங்கிக்கொள்ள சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான தொடர்பின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். சிமெறிக்கா என்னும் ஒரு பொருளாதாரத்தை எண்ணிப் பார்ப்பீர்களாயின் அந்த உறவு உலகத்தின் நிலப்பரப்பில் ஏறத்தாள 13 சதவீதத்தை கொண்டுள்ளது. அது உலகின் 25 சதவீத சனத்தொகையையும் உலகின் மொத்த உற்பத்திப் பொருளில் ஏறத்தாள மூன்றில் ஒரு பங்கையும் கொண்டுள்ளது. அத்தோடு கடந்த ஆறு ஆண்டுகளாக உலகின் பொருளாதார வளர்ச்சியில் 50 சதவீதத்திற்கு மேலான பங்கையும் சிமெறிக்கா கொண்டுள்ளது.
ஒரு நேரத்தில் இந்த உறவானது இணைத்திறமாக சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்போல் இருந்தது. சாதாரணமாகச் சொல்வதாயின் ஒருபாதி சேமிக்க மறுபாதி செலவழித்தது. மொத்தத் தேசிய வருமானத்தின் ஒரு பங்காக நிகர தேசிய சேமிப்பை ஒப்பிடும்போது 1990 களில் 5 சதவீதமாக இருந்த அமெரிக்கரின் சேமிப்பு 2005 அளவில் சைவராகியது. அதேசமயம் சீனரின் சேமிப்பு 30 சதவீதத்திற்கு கீழாக இருந்து கிட்டத்தட்ட 45 சதவீதமாகப் பெருகியது. இந்த சேமிப்பு பழக்கத்தில் காணப்பட்ட வித்தியாசம் அமெரிக்காவில் கடன் பெருக்கத்திற்கு வழியிட்டது. ஆசியரின் அதிமிகையான சேமிப்பு அமெரிக்க வீட்டினர் கடன் பெறுவதை மிகவும் இலகுவாக்கியது. அதேசமயம் குறைந்த சம்பளத்தைக் கொண்ட சீனரின் உழைப்பு பணவீக்கத்தை கட்டுப்பாட்டுள் வைத்திருந்தது.
சிமெறிக்காவின் இரு பகுதியையும் ஒன்றாக வைத்திருக்கும் முக்கிய கருவியாக நாணயத் தலையீடு அமைந்தது. றென்மின்பியை (அதன்மூலம் சீனாவின் ஏற்றுமதியை) போட்டிபோடக்கூடியதாக வைத்திருப்பதன் பொருட்டு அமெரிக்க டொலருக்கு எதிராகத் தமது நாணயத்தின் மதிப்பு உயர்வு பெறுவதை தடுப்பதற்காக பீக்கிங்கில் உள்ள அதிகாரிகள் தலையிட்டவண்ணம் இருந்தனர். இதன் விழைவாக சீனாவின் மத்திய வங்கியில் டொலர்களின் ஆதிக்கம் மிக்க பெருந்தொகையான நாணயச் சேமிப்பு குவியலாயிற்று. இதன் மூலம் சீனா அமெரிக்க திறைசேரியாலும் அமெரிக்க அரசின் முகவர்களான Fannie Mae and Freddie Mac. என்பவர்களாலும் வெளியிடப்பட்ட கடன்பத்திரங்களை வைத்திருப்போராக மாறியது. அமெரிக்கர் கடன்பட சீனா கருவியாக இல்லாது இருந்திருப்பின் அமெரிக்க வட்டிவீதம் உயர்வாக இருந்திருக்கும். What “Chimerica” Hath Wrought – Niall Ferguson, Laurence A. Tisch Professor at Harvard University, 2009
2002 இல் ஈராக் யுத்தத்துடன் ஒருமுனை உலக இயக்கத்தின் முடிவு ஆரம்பமானதுபோல், நாம் இன்று பலமுனை உலக இயகத்தின் முடிவிற்கான ஆரம்பத்திற்குச் சாட்சியாக உள்ளோம். உலகப் பொருளாதார நெருக்கடியானது, எழுச்சிபெறும் இருமுனை உலகிற்கான மேடையை அமைத்துள்ளது.
இதுவே 2008 இல் “சீனாவுடனான எமது (அமெரிக்கா) தொடர்பு உலகில் இந்த நூற்றாண்டில் இரு நாடுகளுக்கிடையேயான மிக முக்கிய உறவாக அமையும்.” என கிலாரி கிளின்ரனை சொல்ல வைத்தது.
இதுவே அவரை கடந்த வாரம்:
“அமெரிக்காவும் சீனாவும் ஒருவரிடம் இருந்து மற்றவர் பயன் பெறவும் ஓருவரின் வெற்றிக்கு மற்றவர் பங்களிக்கவும் முடியும் என நாம் நம்புகிறோம். எம் இருவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனைகளிலும், நாம் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்புக்களிலும் கடுமையாக உழைப்பது எமது நலன்கள் சம்பந்தமானவையாகும்” எனச் சொல்ல வைத்தது.
ஒபாமா யுகத்துடன் இந்தியா போராடிவெற்றிபெற முயலல் என்னும் தலைப்பில் பெப்பிரவரி 2009 இல் இந்தியாவின் துறைசார் இராசதந்திரியான எம்.கே பத்திரகுமார் இதன் தாக்கம் பற்றி கூறுவது சரியானதாகும்:
“…. புதுடெல்கியின் உயர்குழாத்தினரிடையே ஒரு சலிப்பான மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது. ஜோர்ஸ் புஷ்சிற்காக ஏங்கும் ஒரு நிலை. புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள் இந்தியா தென் ஆசியாவில் ஒரு பெரும் சக்தி என்றும் அது சீனா இராணுவரீதியில் பலம் பெறுவதை தடுப்பதற்கான ஒரு கருவியாகவும் இருக்கும் என்ற பார்வையைக் கொண்டிருந்தனர். ஒபாமாவின் சீனக் கொள்கை இந்தியாவின் இந்த விய+கக் கணிப்பை தகர்த்துள்ளது. ஆசியாவில் அமெரிக்கா ,யப்பான்,அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நால்வரைக் கொண்ட அணி ஒன்றின் கூட்டிற்கு இந்தியாவை சேர்க்க புஷ் நிர்வாகம் ஊக்கம் அளித்து இரண்டு, மூன்று வருடங்கள்கூட ஆகவில்லை. இந்தக் கூட்டு இப்பிராந்தியத்தில் சீனாவின் நடத்தைக்கான விதிகளை விதிக்க முற்பட்டது.
கிலரி கிளின்ரனின் உத்தியோக பூர்வமான முதல் விஜயத்தில் இந்தியாவையும் சேர்த்துக்கொள்ள அமெரிக்க அரசாங்கத் திணைக்கள அதிகாரிகள் முதலில் பிரேரித்து இருந்ததாகவும் ஆயின் கிலரி அதை நீக்கி விட்டதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. இப்ப உள்ள நிலையில் கிளின்ரன் “சீனாவுடனான எமது (அமெரிக்கா) தொடர்பு உலகில் இந்த நூற்றாண்டில் இரு நாடுகளுக்கிடையேயான மிக முக்கிய உறவாக அமையும்.” என தனது வெளிநாட்டு விபகாரம் என்னும் கட்டுரையில் எழுதியதையே அவர் நடைமுறைப்படுத்துகிறார்.
ஆசியாவிற்கான தனது பெரிய விஜயத்தை மேற்கொள்ள முன்னர் நியூயோக்கில் உள்ள ஆசியாக் கழகத்தில் கடந்த வெள்ளியன்று அவர் ஆற்றிய முக்கியமான உரையில்
“அமெரிக்காவும் சீனாவும் ஒருவரிடம் இருந்து மற்றவர் பயன் பெறவும் ஓருவரின் வெற்றிக்கு மற்றவர் பங்களிக்கவும் முடியும் என நாம் நம்புகிறோம். எம் இருவருக்கும் பொதுவான பிரச்சனைகளிலும், நாம் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்புக்களிலும் கடுமையாக உழைப்பது எமது நலன்கள் சம்பந்தமானவையாகும்” எனக் கூறியுள்ளார். இவர் சீனாவுடன் ஒரு விரிவான உரையாடல் வேண்டும் எனவும் பரந்த நிகழ்ச்சி நிரல் வேண்டும் எனவும் வாதிட்டார்.
சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்காவிற்கு கூடிய வாய்ப்புக்கள் அளிக்கப்பட வேண்டும். டொலர் யுவான் நாணயங்கள் சம்பந்தமாக ஒரு யதார்த்தமான நாணய மாற்றிற்கு பீக்கிங்கை இணங்கச் செய்ய வேண்டும். அத்தோடு சீனா தன் பணத்தை தொடர்ந்தும் அமெரிக்காவில் முதலிட நம்ப வைக்கவேண்டும். ஆயின் நெருக்கடியில் இருவரும் சமமான பங்காளராக மாறும், ஒருவரில் ஒருவர் தங்கி இருக்கும் பரஸ்பர உறவானது கட்டவிழ்வது ஒரு வியப்பான கதையாகும். இது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
தேசிய உளவுத்துறையின் டைறக்ரராகப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட டெனிஸ் பிளயர் (Dennis Blair) உளவுத்துறை சம்பந்தமான அமெரிக்க செனற் குழுவின்முன் ஜனவரி 22 இல் சாட்சியம் அளிக்கையில் சீனா அமெரிக்கா உறவுபற்றி நல்ல நிலைப்பாடு ஒன்றை தெரிவித்தார். அவர் இது பற்றிக் கூறுகையில்:
சீனாவின் இராணுவக் கட்டுமான வளர்ச்சிபற்றி (அதன் விரிவு, அதன் தொழல்நுட்ப சிக்கல், அதன் பலவீனங்கள் உட்பட்ட) அமெரிக்கா கரிசனை கொள்வதுடன் நிற்காது நாம் இருவரும் பயன்பெறும் அளவில் ஆசியாவில் இருவருக்கும் இடம் உண்டு என நம்பும் சீனாவின் தலைவர்களுடன் எமது உளவுத்துறை ஒத்துழைக்க வேண்டும். இதனால் இரு நாடுகளும் நலன்பெறுவதுடன் பொது நன்மைக்காக பங்களிக்கவும் முடியும். இங்குதான் இந்தியாவிற்கு கடுமையான பிரச்சனை ஏற்படுகிறது. இந்தியாவின் பார்வையில் தென் ஆசியாவும் இந்து சமுத்திரமும் இந்தியாவும் சீனாவும் பகிர்ந்தகொள்வதற்கு போதியதல்ல.”
ஆனால் இந்தவிதமான உலகப்பார்வையை மாற்றும்படி இந்தியா நிற்பந்திக்கப்படலாம். அத்தோடு அக்ரோபர் 2008 இல் (புஷ் நிர்வாகம் நிலவியபோது) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட கருத்தையும் மீள் பரிசீலனை செய்ய வேண்டி வரலாம்.
“சிறீலங்காவுடன் எமக்கு மிகவும் புரிந்துகொள்ளக்கூடிய விரிவான உறவு உண்டு. தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எமது அங்கலாய்ப்பில் இலங்கைத் தீவில் இந்தியாவிற்குள்ள கேந்திர முக்கியத்துவத்தை நாம் மறந்துவிடக்கூடாது. அதிலும் முக்கியமாக பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகள் இலங்கைத் தீவில் தமது கேந்திர நலன்களுக்காக கால்பதிக்க முயுற்சிக்கும்போது நாம் விழிப்பாக இருக்கவேண்டும். நாம் கொழும்பிற்கு அவர்களின் பாதுகாப்பிற்கான நலன்களை கவனித்துக் கொள்வோம் எனக் கூறியுள்ளோம். ஆனால் கொழும்பு எம்மைவிட்டு மற்றவர்களிடம் அதற்காகப் போகாது விடவேண்டும். இந்தியாவின் கொல்லைப் புறத்தில் சர்வதேச நாடுகளுக்கு ஒரு விளையாட்டு மைதானத்தை அமைக்க நாம் அனுமதிக்கலாகாது.”
எழுச்சி பெறும் இருமுனை உலகத்தையும், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தித்தின் கேந்திர முக்கியத்துவத்தையும் இந்தியா விளங்கிக் கொள்ளவேண்டி இருக்கலாம். இலங்கைத் தீவில் பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகள் தமது கேந்திர நலன்களுக்காக கால்பதிப்பதை தடுக்கும் வல்லமை புதுடெல்கிக்கு இல்லாது இருக்கலாம். புஷ் நிர்வாகத்திலும் இதுதான் விசயமாக இருந்திருக்கலாம். ஆனால் உள்ளாரரந்த சக்தியுடைய எதிரிகளான சீனாவும் றஸ்சியாவும் இந்தப் பிராந்தியத்தில் செல்வாக்குப் பெறுவதை தடுக்கும் வகையில் இந்தியாவின் இராணுவ வலுவை வளர்க்க அமெரிக்கா உதவும் என்ற வகையில் இது அமைந்திருந்தது.
“… களைப்புறும் வரை இப்போ ஓடும் இந்திய அமெரிக்க அணுவாயுத உடன்படிக்கை , அதிகரித்துச் செல்லும் பொருளாதார ஒத்துழைப்பு , அத்தோடு (மிக முக்கியமாக) கூட்டான இராணுவப் பயிற்சி , இந்தியாவால் செய்யப்பட்ட கொள்வனவு மற்றும் கூட்டு நடவடிக்கை என்பவற்றின் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது இந்தப் பிராந்தியத்தில் வல்லமையுள்ள எதிரிகளான சீனாவையும் றஸ்சியாவையும் கட்டுப்படுத்த அமெரிக்கா இந்திய இராணுவ வலுவை கட்டி எழுப்புகிறது எனக் கூறலாம். ஆனால் ஏகாதிபத்தியம் பெரும் வல்ரசுகளைக் கட்டி எழுப்புவது இல்லை. அவர்கள் தங்களுக்காக வாடிக்கைகாரரையும் தங்களில் சார்ந்திருப்போரையும்தான் உருவாக்குவார்கள்” Empires Don”t Build Rivals – Justin Podur , 5 August 2008
இந்தியாவின் சோனியா காந்தி மன்மோகன் சிங் நிர்வாகத்தினர் அமெரிக்காவின் வாடிக்கையாளர் பாத்திரத்தை வகிப்பதில் திருப்திப் படினும் இதற்கான ஆதரவு அவர்களுக்கு இந்திய அரசியலின் பெரும் பகுதியினரிடம் இருந்து இல்லாது போகலாம். அதிலும் தேர்தல் காலம் ஒன்றில். எழுச்சி பெறும் இருமுனை உலகில் இந்தியா தனது பழைய அணிசேரா வெளியுறவுக் கொள்கை அணுகு முறைக்குத் திரும்பலாம். அதேசமயம் தனது பழைய நண்பனான றஸ்சியாவுடனான தனது தொடர்பை பலப்படுத்தலாம். இந்த அணுகுமுறை இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெறும்.
இலங்கைத் தீவில் இடம்பெறும் முரண்பாடு சம்பந்தமாக, நாடுகளுக்கு நிரந்தர நலன்களே உண்டு நிரந்தர நண்பர்கள் இல்லை என்னும் முதுமொழி இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றச் செய்யலாம். அத்தோடு டெல்கியில் உள்ள, அபிவிருத்தியடையும் சமூகங்களின் கற்கைக்கான மையத்தில் அதிதிப் பேச்சாளராகக் கலந்து கொண்ட டாக்டர் எம்.எஸ்.எஸ் பாண்டியன் அக்ரோபர் 2008 இல் கூறியதை மனங்கொள்ளலாம்.
“இந்திய அமைப்பில் இருந்து பிரிந்து செல்வதற்கான கோரிக்கையை தமிழ்நாடு வைத்த வரலாறு ஒன்று உண்டு. இருந்தபோதும் காலப்போக்கில் (இந்திய) தேசிய நீரோட்டத்தில் தன்னை முழுமையாக இணைத்துக்கொள்ள அது முடிவு செய்தது. சிறீலங்கா மீதான தனது கொள்கையில் நியூடெல்கி மாற்றத்தை செய்யாதுவிடின், தமிழ்நாடு தன் பிரிவினைக் கொள்கைக்கான வரலாற்றை மீட்பிக்கலாம். அது இந்தியாவின் துர்அதிஸ்டமாகும்.”
தனது நல்ல முயற்சிகளின் பின்னரும் சிங்கள சிறீலங்காவில் (தனது கொல்லைப்புறம் என நியூடெல்கி கருதும்) அமெரிக்காவினதும் சீனாவினதும் தொடர்ச்சியான இருப்பை நியூடெல்கியால் தடுக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முன்வரலாம். அத்தோடு எழுச்சிபெறும் இருமுனை உலகில் இந்தியாவின் கேந்திர நலன்ளைப் பாதுகாக்க சுதந்திர தமிழீழம் உருவாவதன் மூலமே முடியும். அதை தடுப்பதன் மூலம் அல்ல என்பதையும் உணர முற்படலாம். தற்போதுள்ள அரசுகளின் ஆட்புல ஒருமைப்பாடு மீறப்படமுடியாதவை என அடம்பிடிப்பது ஒழுங்கான உலக நியதிக்கான மார்க்கம் அல்ல. அதுவம் இந்த அரசுகள் எப்படி எப்போது உருவாக்கப்பட்டவை என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். மக்களால் மதிக்கப்படும் உண்மையான விழுமியங்களை ஆதரிப்பது அவசியமாகும். இந்த விழுமியங்கள் அவர்களின் உள்ளங்களில் இருந்து அந்த மக்களின் உள்ளங்களை நோக்கிப் பேசப்படுவதாகும்.
விடுதலைக்கான ஒரு மக்களின் போராட்டம் ஆற்றல் வாய்ந்த ஒரு சக்தியாகும். இந்தியப் பிராந்தியத்தில் சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டங்கள் சார்ந்து இந்தியா மெய்மைத் தத்துவம் சார்ந்த அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். இதைவிட்ட ஒரு குறுகிய அணுகுமுறை எந்த வெளிச் சக்திகளின் அழுத்தங்களை நியூடெல்கி தவிர்க்க முற்படுகிறதோ அந்த சக்திகளுக்கு உள் நுழைய ஊக்கம் அளிப்பதாக முடியும்.
தமிழாக்கம்: ம.தனபாலசிங்கம்
சிட்னி, அவுஸ்திரேலியா
நன்றி: “தமிழ்நாதம்

முல்லைப் பெரியாறு : என்ன நடக்கிறது?

முல்லைப் பெரியாறு என்ன நடக்கிறது? இந்தப் பிரச்சனையின் சூத்திரதாரிகள் யார்? என்பதை விரிவாக இக் கட்டுரை குறிப்பிடுகிறது. சில அரசியல் சூழ்ச்சிகள் குறித்து தமிழர்கள் அனைவரும்


தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கருதி,  முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்! என்ற தலைப்பிலான இக் கட்டுரையை வெளியிட்டுள்ள வினவுதளத்துக்கும், கட்டுரையாளருக்குமான நன்றிகளுடன் மீள்பதிவு செய்கின்றோம். -4Tamilmedia Team
முல்லைப் பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதென உச்சநீதிமன்றம் உட்பட பல நிபுணர் குழுக்களும் ஆய்வு செய்து அவ்வப்போது அறிவித்தாலும், கேரளாவில் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் கிளப்பும் பீதி ஓய்ந்தபாடில்லை. தற்போது அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைத்தும், பின்னர் கூடிய விரைவில் அதை இடித்து புதிய அணை கட்ட வேண்டுமெனவும் அவர்கள் கேரளாவில் சூடு பறக்க பேசியும், ஆர்ப்பாட்டம் செய்தும் வருகிறார்கள். கேரள ஊடகங்களும் அதையே செய்து வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்த வரை அனைத்து அரசியல் கட்சிகளும் கேரள அரசு, அரசியல் கட்சிகளின் நிலையை எதிர்த்து வருகின்றன. இதில் துரோகம் செய்த திராவிடக் கட்சிகளும், அகில இந்தியக் கட்சிகளும் அடக்கம். இதைக் கண்டு கொள்ளாத தமிழின ஆர்வலர்களோ ஒரு படி மேலே போய் கேரள சமாஜம், கேரள பேருந்துகளை எதிர்த்து வருகின்றனர். முல்லைப் பெரியாறு விசயத்தில் தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் உள்ளது என்பதை ஒத்துக் கொள்பவர்கள் இதில் குறிப்பாக எதிர்க்க வேண்டிய சக்திகள் எது என்பதில் குழப்பத்தோடு இருக்கிறார்கள்.
இதில் நாம் கேரள மக்களை பகைத்துக் கொள்வதிலோ, அவர்களை எதிர்ப்பதிலோ பலனில்லை. அது இரு மாநில மக்களின் இனவெறிச் சண்டையாகத்தான் போய் முடியும். ஒரு வேளை கேரள மக்கள் அனைவரும் கேரள அரசியல்வாதிகளின் பொய்ப்பிரச்சாரத்தில் சிக்குண்டிருந்தாலும் நாம் அவர்களை மீட்டெடுப்பதற்கு குறிப்பான எதிரிகளை தனிமைப்படுத்தி தாக்குவது அவசியம். அந்தக் குறிப்பான எதிரிகள் யார்?
அவர்கள்தான் இந்தக்கட்டுரை தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் மும்மூர்த்திகள். ஆம். கேரளாவில் இந்த மூன்று கட்சிகளும்தான் மக்களிடையே பீதியூட்டி அதை அரசியல் ஆதாயம் பெறுவதற்கு போட்டி போட்டுக் கொண்டு செய்து வருகின்றன.
சமீப நாட்களாக கேரள இளைஞர் காங்கிரசு குண்டர்கள் முல்லைப்பெரியாறு அணையின் தேக்கடி மதகில் நின்று கொண்டு அதை இடிப்போமெனவும், பா.ஜ.க குண்டர்கள் அணைக்கு அருகில் உள்ள பேபி டேமில் அத்துமீறி நுழைந்து இடிப்போமெனவும் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். போலீக் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரை அச்சுதானந்தன் தலைமையில் புதிய அணை கட்டுமாறு உண்ணாவிரதம் நடத்துகிறார்கள். இதை போக மக்கள் போராட்டம் என்ற பெயரில் இக்கட்சிகளே பின்னணியில் இருந்து இயக்குகின்றன.
கேரள மாநில நீர் வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் இதற்காக தில்லி பிர்லா இல்லத்தில் ஒருநாள் உண்ணாவிரம் இருக்கிறார். ஆக முல்லைப்பெரியாறு அணை ‘இடிந்து’ போனால் யார் காப்பாற்றப் போகிறார்கள் என்பதில் அங்கு ‘கொலவெறி’ போட்டியே நடக்கிறது.
இந்திய ஒற்றுமை பேசும் இந்த மூன்று கட்சிகளும் ஒற்றுமையாக ஊளையிடுவதின் பலனாக கேரள மக்களும் இந்த அவதூறு பிரச்சாரத்தில் பலியாகியிருக்கின்றனர். உண்மையில் முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறதா என்று எப்படி சோதித்தறிவது? அது பலமாக இருப்பதாக உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுவே உத்தரவாதமளித்தாலும் இவர்கள் ஏற்பதாக இல்லை. அதைக் கண்டிக்க வக்கற்ற மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் மீண்டும் மீண்டும் நிபுணர் குழு, பேச்சு வார்த்தை என்று இழுத்தடிக்கிறார்கள்.
ஒரு கட்டிடம் அல்லது அணை பலமாக இருக்கிறதா என்பதை அறிவியல் ரீதியாக சோதனை செய்து ஒரு முடிவைத்தான் தர முடியும். அறிவியலுக்கு கேரளா, தமிழ்நாடு என்று பிரிவினையும், உணர்ச்சியும் இருக்க முடியுமா என்ன? மேலும் தமிழக பொறியாளர்கள் தயாரித்திருக்கும் வீடியோவில் முல்லைப் பெரியாறு அணை முற்றிலும் இடியாது, கற்பனையாக இடிந்து போவதாக வைத்துக் கொண்டாலும் அந்த அணையின் முழுநீரும் மதகு வழியாக இடுக்கி அணைக்குத்தான் வருமே அன்றி மூன்று மாவட்ட மக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது என்று அறிவியல் ரீதியாக நிரூபித்திருக்கிறார்கள்.
மேலும் 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி அழுத்தமானி கருவி கொண்டு அளந்தால் அது பாதுகாப்பான அழுத்தத்தில் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும். இதன்றி அணையின் பாதுகாப்பை எப்படி நிரூபிப்பது?
உண்மை இவ்வாறிருக்க பொய்யை ஆரவாரத்துடன் இந்த மூன்று கட்சிகளும்தான் போட்டி போட்டுக் கொண்டு பேசுகிறார்கள் என்பதிலிருந்து இவர்களின் குற்றத்தை புரிந்து கொள்ள முடியும். இவர்களின் நோக்கம் தாங்கள்தான் கேரள மக்களின் நலனை காப்பாற்றும் ஹீரோக்கள் என்று காட்டுவதுதான். அதற்காக தமிழக விவசாயிகள் நலனை கொல்வதற்கு இந்தக் கயவர்கள் துணிந்து விட்டார்கள்.
ஹீரோயிசம்தான் பிரச்சினை என்றால் அரபிக் கடலோரம் இருக்கும் கேரளமாநிலத்தை சுனாமி வந்தால் கடல் முழுவதும் முழுங்கிவிடும் என்று வீடியோ கிராபிக்ஸ் மூலம் தயாரித்து பிரச்சாரம் செய்யலாமே? அரபிக் கடலை வில்லனாக்கினால் அதனால் யாருக்கும் பிரச்சினை இல்லையே? இப்படி தேவையின்றி தமிழக விவசாயிகளின் வாழ்வோடு ஏன் விளையாட வேண்டும்?
இப்படி இல்லாத பிரச்சினையை கிளப்பியிருப்பதோடு, அந்த இல்லாத பிரச்சினையை தீர்ப்பதற்கு தடையாக இருப்பதோடு, அந்த தடை மூலம் இரு மாநில மக்களிடம் முரண்பாட்டை முற்றவைக்கவும் செய்கிறார்கள். அந்த வகையில் இவர்களது கிரைம் ரேட் தொடர்ந்து எகிறிக் கொண்டே இருக்கிறது.
இந்த மும்மூர்த்திகள் தமிழகத்திலும் இருக்கிறார்கள். தொட்டெதுக்கெல்லாம் இந்திய ஒற்றுமை, தேசப்பற்று, பாரதப் பண்பாடு, பயங்கரவாதம், என்று இவர்கள்தான் கூப்பாடு போடுவார்கள். தமிழக இளைஞர் காங்கிரசு தலைவர் யுவராஜும், பா.ஜ.க தலைவர் பொன் இராதாகிருஷ்ணனும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். தற்போது இந்த உரிமையை தட்டிப்பறித்தது யார்? பாக்கிஸ்தானா, இல்லை ஐ.எஸ்.ஐயா, இல்லை வங்கதேச அகதிகளா அல்லது சீனத்து சதியா?
இவர்களது கேரள பங்காளிகள்தானே அந்த உரிமையை தட்டிப் பறித்திருக்கிறார்கள். கண்டிப்பதாக இருந்தாலும், தண்டிப்பதாக இருந்தாலும் அவர்களைத்தானே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்க வேண்டும்? அதை விடுத்து இவர்கள் யாரிடமிருந்து உரிமையை வாங்கித் தரப்போகிறார்கள்? சூடு, சொரணை, உண்மை, நியாயம் இருந்தால் தத்தமது அகில இந்தியக் கட்சிகளின் அமைப்பிலிருந்து விலகிக் கொள்வதாக மிரட்டியிருக்கலாம். இல்லை டெல்லி தலைமை அலுவலகத்தை முற்றுகை இட்டு கேரள கட்சி அமைப்புகளை கலைக்குமாறு கோரியிருக்கலாம். அதையெல்லாம் செய்யத் துப்பில்லாத ஜென்மங்கள் இங்கே தமிழனுக்காக அழுகிறது என்றால் யாரை ஏய்க்கிறார்கள?
ஆக இந்த இந்திய தேச ஒற்றுமை பேசும் கட்சிகளின் நோக்கம் அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களின் சென்டிமெண்டுக்கு ஜால்ரா போட்டு அதிகாரத்தை கைப்பற்றுவதே. இதை காவிரிப் பிரச்சினையின் போது கார்நாடகாவிலும் பார்த்திருக்கிறோம். இப்போது கேரளாவில் பார்க்கிறோம். மேலும் தமிழக காங், பா.ஜ.க கும்பல் இரண்டுமே தமது கேரள பிரிவையோ, அரசையோ இதுவரை கண்டிக்கவில்லை. அவர்களுக்கு பாரத ஒற்றுமை குறித்த டியூஷனும் எடுக்க வில்லை. அந்த வகையில் கேரளாவில் சண்டித்தனம் செய்யும் காங், பா.ஜ.க பெருச்சாளிகளுக்கு தீனி போட்டு அடை காப்பது தமிழக பெருச்சாளிகள்தான். இந்த பெருச்சாளிகளை அடித்து விரட்டினால் கேரள பெருச்சாளிகளின் கொழுப்பு பறிக்கப்படும்.
அந்த வகையில் தமிழன ஆர்வலர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் சத்தியமூர்த்தி பவன், கமலாலயம் இரண்டையும் முற்றுகை இட்டு அவர்களை தமிழகத்தில் இருந்து வெளியேறுமாறு செய்ய வேண்டும். அந்தக் கட்சிகளின் தலைவர்கள் வீட்டை விட்டு வெளியேறாதவாறு சிறையில் அடைக்க வேண்டும். காங்கிரசு, பா.ஜ.க கொடிகளோ, கிளை அலுவலகங்களோ இல்லாதவாறு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அது இந்தக் கட்சிகளின் டெல்லித் தலைமைக்கு ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டு அது கேரளா வரை எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்லும்.
இதை விடுத்து அப்பாவி மலையாள மக்களை எதிர்ப்பதில் என்ன பயன்? அவர்களா தினந்தோறும் அறிக்கை விட்டோ இல்லை அணைக்கு சென்றோ ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்? அப்படி மக்களே நடத்தினாலும் அதன் பின்னணி இவர்கள்தானே? ஆனால் தமிழகத்தில் இரு கட்சிகளுக்கும் செல்வாக்கு துளியுமில்லாத நிலையில் அகில இந்திய தலைமை செல்வாக்கு உள்ள கேரளாவின் பக்கம்தான் சாயுமென்பது தமிழகப் பெருச்சாளிகளுக்கு தெரியாதா என்ன?
இதில் தமிழக போலிக் கம்யூனிஸ்டுகளின் நிலை மிகவும் சந்தர்ப்பவாதமானது. இவர்கள் ஒரு பேச்சுக்கு கூட முல்லைப் பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் உரிமை பற்றி பேசமாட்டார்கள்.
இந்தியாவில் அரசியல்ரீதியாக காலாவதியாகி வரும் போலிக் கம்யூனிஸ்டுகளின் பரிதாபத்திற்குரிய தமிழக இணைய அவதாரமான மாற்று இணைய தளம் இந்தப் பிரச்சினை குறித்து, ” முல்லைப் பெரியாறு: பகைமை வேண்டாம்!” என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது.
அதில், “முல்லைப் பெரியாறு அணை விஷயத்தை முன்னிறுத்தி தமிழக, கேரளா மாநிலங்கள் இருதரப்பிலிருந்தும் அறிக்கைகளும், போராட்டங்களுமாய் இருக்கின்றன. தத்தம் நிலைபாட்டிலிருந்தே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து வருகின்றன. ஒரு சுமூகமான தீர்வை எட்டுகிற பார்வையில்லாமல் ஆத்திரத்தைத் தூண்டுவிதமாக ஒருவரையொருவர் குற்றம் சுமத்துவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். இது இரு மாநில உறவுகளையும், மாநில மக்களிடையே இருக்கும் இணக்கத்தையும் கெடுக்கவே செய்யும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதாக பலரும் பேசிக்கொண்டு இருப்பதாலேயே, சற்று நிதானமாக இவ்விஷயத்தை அணுக வேண்டியதிருக்கிறது.” என்று குறிப்பிடுகிறது. (அழுத்தம் எம்முடையது)
மேலும், இதில் மார்க்சிஸ்டு கட்சி இரு கோட்பாடுகளின் அடிப்படையில் வழிகாட்டுகிறதாம். ஒன்று தமிழகத்திற்கு தொடர்ந்து நீர் வரவேண்டுமாம், இரண்டு கேரள மக்களின் அச்சத்தை போக்க வேண்டுமாம், அதன்படி உச்சநீதிமன்றம் அளிக்கப் போகும் தீர்ப்பின்படி இரு மாநில அரசுகளும் பகைமை இன்றி பேசித் தீர்க்க வேண்டுமாம்.
அட, வெளக்கெண்ணெய் வெண்ணைகளா! இதில் இருமாநிலமும் பகைமையுடன் ஈடுபடுகின்றன என்பதில் இருந்தே உங்களது வண்டவாளம் பல்லிளிக்கிறதே! முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகம் எப்போது, என்ன தவறிழைத்திருக்கிறது அல்லது சண்டை போட்டிருக்கிறது? அணை பாதுகாப்பாக இல்லை என்று ஒரு புரளி கிளம்பியதும், தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவழித்து அணையை பலப்படுத்தியிருக்கிறது. பின்னர் உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு அணை பலமாக இருக்கிறது என்று தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதி அளித்திருக்கிறது. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்?
ஆனால் உச்சநீதிமன்ற உத்திரவை மதிக்காமல் 136 அடிதான் வைத்திருக்க வேண்டுமென்றும், தற்போது 120 அடிதான் முடியும், பிறகு அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என்று யார் கோரியது?
எல்லாம் உங்கள் அச்சுதானந்தன் ஆட்சியில்தானே புழுதி கிளப்பி பிரச்சாரம் செய்யப்பட்டது?
அதன்படி பகைமையை கிளப்பிவிட்டதே உங்களது தோழர்கள்தானே? இதில் ஏன் இரு மாநிலம் என்று குற்றமிழைத்தவனையும், குற்றமிழைக்கப்பட்டவனையும் ஒரே தராசில் நிறுத்துகிறீர்கள்? இதுதான் நீங்கள் பின்பற்றி வரும் மார்க்சியமா இல்லை சந்தர்ப்பவாதமா? இவ்வளவு செய்த பிறகும் தமிழகம் சும்மா இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
இனவெறியை கிளப்பும் கேரள கம்யூனிஸ்டுக் கட்சிகளை கண்டிப்பதற்கு வக்கற்ற நீங்கள் அதை மடை மாற்றி இருமாநில மக்களும், கட்சிகளும் சுமூகமாக பேச வெண்டும் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லை? சோற்றில் உப்புப் போட்டு சாப்பிடுகிறீர்களா, இல்லை சந்தர்ப்பவாதத்தையே ஃபுல் மீல்சாக முழுங்குகிறீர்களா?
தமிழகத்தில் இருக்கும் காங்கிரசு, பா.ஜ.க கும்பல்களாவது தமிழக மக்களின் நலனை விட்டுத்தரமுடியாது என்று நாடகமாடவாவது செய்கின்றன. அந்த ‘தரம்’ கூட இல்லாத வெத்து வேட்டாக போயிருக்கும் உங்கள் முட்டாள்தனத்தை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்தாவது புரிந்து கொள்வீர்களா?
உங்கள் நோக்கம் புதிய அணை கட்டும் கோரிக்கைக்கு தமிழகத்தை தயார்படுத்துவதுதான். அப்படி அந்த அணை கட்டும்பட்சத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் இல்லை, காற்று கூட வராது என்பதை பொறியாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அப்படி தமிழகத்திற்கு நீர் வராத பட்சத்தில் நீங்களும் தமிழகத்திலிருந்து காலி செய்து விட்டு உங்கள் கேரள தோழர்களோடு சேர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு கம்யூனிஸ்டுக் கட்சி இனவெறியுடன் செயல்படக்கூடாது என்பது சரிதான். மேலும் இங்கே எழுந்திருப்பது இன முரண்பாடு அல்ல. இது கேரள ஓட்டுப்பொறுக்கிகளின் அவதூறுப்பிரச்சாரம். அதை முறியடிப்பதுதான் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் வேலையாக இருக்க முடியுமே அன்றி, அந்த அவதூறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுவது அல்லை. அந்த வகையில் தமிழக போலிக் கம்யூனிஸ்டுகள்தான் கேரள கட்சிகளின் ஊளையை ஆதரித்து இருமாநில மக்களிடையே முரண்பாட்டை வளர்ப்பதற்கு உதவி புரிகிறார்கள்.
இந்த இலட்சணத்தில் பகைமை வேண்டாம், சுமூகமாக பேசுவோம், நீதிமன்றத்தை மதிப்போம் என்ற உபதேசம் யாருக்கு பயன்படும்?
ஒருவேளை கேரள மக்கள் அவர்களது ஓட்டுப் பொறுக்கிகளின் பொய்ப் பிரச்ச்சாரத்திற்கு பலியாகி இருந்தாலும் அங்கே இருக்கும் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தன் நியாயத்தை சொல்லித்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதனால் அங்கே அவர்களது செல்வாக்கு குறையுமென்றாலும் நீண்ட கால நோக்கில் அது மாறும்.
புரட்சி கூட தனிப்பட்ட நலன்களை விடுத்து ஒட்டு மொத்த நாட்டின் நலனை வைத்துத்தானே நடக்க முடியும்?அப்போது அதற்கு ஆதரவாக வரும் மக்கள் முல்லைபெரியாறு விசயத்தில் தமிழகத்தின் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்வார்கள். அது வேறு இது வேறு அல்ல.
ஆனால் புரட்சி நடத்துவதை என்றோ தூக்கி எறிந்திருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் இன்றைய நோக்கம் சில பல எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுக்கள் கிடைத்து அணிகளுக்கு மாலை நேரத்து மயக்கத்தை காட்டுவதுதான்.
அதிலும் அவர்கள் ஏற்கனவே கேரளாவில் ஆட்சியில் இருந்திருப்பதாலும், அங்கேதான் ஒரளவுக்கு செல்வாக்கு இருப்பதாலும் அதை தக்க வைத்துக் கொள்வதற்கு முல்லைப் பெரியாறு விசயத்தில் இப்படி போட்டி போட்டுக் கொண்டு பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள்.
இங்கே அம்மா தயவில் ஒரு சில எம்.எல்.ஏக்களை பெற்றிருப்பதைத் தாண்டி வேறு ஒன்றும் பிடுங்க முடியாது. ஆனால் அகில இந்திய அளவில் வங்கத்தைப் பார், கேரளாவைப்பார் என்று அணிகளிடம் பீலா விடுவது முக்கியம். அதிலும் வங்கம் பஞ்சராகியும், கேரளம் பிரேக் டவுணாகியும் இருக்கும் நிலையில் அப்படி ஒரு பிரேக் டவுன் வண்டியாவது இருக்கிறதே என்று சீன் காட்ட வேண்டிய துர்பாக்கிய நிலைமையிலிருந்துதான் போலிகளின் முல்லைப்பெரியாறு சந்தர்ப்பவாதம் பொங்கி வழிகிறது.
அந்த வகையில் முல்லைப்பெரியாறு விசயத்தில் துரோகம் புரிந்திருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளையும் நாம் குறிவைத்து எதிர்க்க வேண்டும்.
கேரள மக்களிடையே இந்த மூன்று கட்சிகளும்தான் பீதியை கிளப்பி விட்டு தமிழத்தின் உரிமையை மறுக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே பாடம் புகட்ட வேண்டியது மிகவும் அவசியம். இதுதான் நமது குறிப்பான போராட்ட இலக்காக இருக்க வேண்டும்.
ஆனால் இந்த மூன்று கட்சிகளையும் தமிழின ஆர்வலர்கள் பல்வேறு சந்தர்ப்பத்தில் ஆதரித்திருக்கிறார்கள். ஈழப் பிரச்சினைக்காக பா.ஜ.க இல கணேசனை மேடையேற்றியவர் பழ நெடுமாறன். அதற்காக பால்தாக்கரேவிற்கு பல்லக்கும் தூக்கியிருக்கிறார். மன்மோகன் சிங், வாஜ்பாயி இருவரையும் முதுகில் சுமந்தவர் வைகோ. போலிக்கம்யூனிஸ்டுகளை இங்கே யாரும் சீந்துவாரில்லை என்றாலும் இவர்களும் சில சமயம் தமிழின ஆர்வலர்களுக்கு இனிப்பான நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.
இத்தகைய சூழலில்தான் மும்மூர்த்திகளின் சந்தர்ப்பவாதம் இங்கே கண்டிக்கப்படாமல் வேடிக்கை பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் பாராமுகமும் இங்கே போராட்டம் என்ற அளவில் கூட கண்டிக்கப்படவில்லை.
சுருங்கக் கூறின் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நமது உடனடிக் கவனம் இந்த மும்மூர்த்திகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதின் மீதே இருக்க வேண்டும். இவர்களுக்கு கொடுக்கிற அடி கேரளாவில் நிச்சயம் எதிரொலிக்கும்.

இரைச்சலான இசை எனக்குப் பிடிக்காது : ஜி.வி.பிரகாஷ்


ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமான படத்தின் தலைப்புதான் வெயிலே தவிர இசை பனிக்குழைவாக ரசிகர்களின் செவிகளை ஜில்லிட வைத்தது.
வெயிலில் தொடங்கி 26 படங்களைத் தாண்டிவிட்ட ஜி.வி பிரகாஷூக்கு தற்போது இருபத்தாறு வயது. இந்திய சினிமாவின் மிக இளமையான இந்த இசையமைப்பாளரின் பலம் மெலடி! பாலா, பாரதிராஜா படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கும் தருணத்தில் 4தமிழ்மீடியாவுக்காக ஜி.வி.பிரகாஷ் பிரத்தியேகமாக அளித்த நேர்காணல் இது.
பாலா படத்துக்கு இசை, பாரதிராஜா படத்துக்கு இசை, என்று தமிழின் மிக உயரிய படைப்பாளிகளுக்கு இசையமைக்கிறீர்கள்? இந்த கணத்தில் எப்படி உணர்கிறீர்கள்?
இது எனக்கு மிக முக்கியமான தருணம். கோல்டன் மூவ்மெண்ட் என்று சொல்ல வேண்டும். பாரதிராஜா- இளையராஜா கூட்டணியில் அமைந்த படங்களை இரண்டு மூன்றுமுறை பார்த்து பின்னனி இசை நுனுக்கங்கள் பற்றி என் இசை நண்பர்களோடு டிஸ்கஸ் செய்திருகிறேன். இப்போது அவர்களது படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு எனது மடியில் விழுந்திருப்பதில் எனக்கே எக்ஸைட்டிங்காக இருக்கிறது. அதேபோல பாலிவுட்டில் நான் நேசிக்கும் கிரியேட்டர் ராம் காஷ்யாப் படங்களுக்கு அடுத்தடுத்து இசையமைப்பது என்னை பாலிவுட்டில் தனித்து அடையாளம் காட்ட உதவி இருகிறது. அதையும் பெருமையாகவே கருதுகிறேன்.
தெய்வத்திருமகள் படத்தின் இசை ஹிட்! ஆனால் அதில் காப்பி செய்யப்பட்ட இசை இருப்பதாக பேசப்பட்டதே?
இரண்டு பாடல்களை இயக்குனரின் விருப்பத்தின் பேரில் அடாப்ட் செய்தேன். ஆனால் எனக்கான சுதந்திரத்தில் தலையிடாதபோது ஒரிஜினலான இசையைக் கொடுத்திருகிறேன். எனது வெற்றிபெற்ற பாடல்களே இதற்கு சாட்சி.
தற்போது எத்தனை படங்களுக்கு இசையமைத்து வருகிறீர்கள்?
‘வட சென்னை, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்களின் பாடல்கள் கம்போஸிங் முடிந்து விட்டது. செல்வராகவனின் மாலைநேரத்து மயக்கம் படத்துக்கான பின்னனி இசையமைப்பு வேலைகள்தான் இப்போதைய பணி. இது முடிந்ததும் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் கண்ணன் இயக்கி வரும் கரிகாலன் படத்துக்கு கம்போஸிங் தொடங்குகிறேன். அடுத்து விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம், ஜீவா நடிக்கும் அடலேறு ஆகிய படங்களுக்கான கம்போஸிங் ஆரம்பிக்க வேண்டும். இதன்பிறகே பாலா சார் படம் தொடங்குகிறது. பாலாவுக்கு முடித்து விட்டு என்னிடம் வா என்று பாரதிராஜா சார் சொன்னார். இரண்டு பேருமே போதிய சுதந்திரம் கொடுப்பவர்கள். அதுதான் ஒரு இசையமைப்பாளருக்கு வேண்டும்.
நட்சத்திரங்களை, தொடர்ந்து பாட வைப்பது ஏன்?
இதில் எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. இயக்குனர்களுக்கு வேண்டுமானல் இருக்கலாம். இயக்குனர்கள் விரும்புவதாலும், பாடலின் சூழ்நிலைக்கு மாறுபட்ட குரல் தேவைப்படுவதாலும் பாட வைக்கிறோம். இதில் எனது முடிவு மட்டுமே கிடையாது.
காளை படத்தில் சிம்பு, மம்தா மோகன்தாசை பாட வைத்தேன். மதராசபட்டினம் படத்தின் மழைப்பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன், விக்ரம், நாசர் பாடினார்கள். விக்ரம் சாரை தெய்வத்திருமகளிலும் பாட வைத்தேன். இது நானே எடுத்த முடிவுதான். காரணம் கதைசொல்லப் போறேன் பாடலை, சூழ்நிலைபடி விக்ரம் சாரின் கிருஷ்ணா கேரக்டர் வாய்ஸில் பாடவேண்டும். அதுதான் நம்பகத்தன்மையோடு இருக்கும். அதனால்தான் விஜய் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கும் படத்திலும் விகரம் ஒரு பாடலை பாட இருகிறார். பெண் பாடர்கர்களில் தொடர்ந்து ஆண்ட்ரியா பாடுகிறார். ரசிகர்களை இழுக்கும் குரல் எங்கே இருந்தாலும், பயன்படுத்திக் கொள்ளவேண்டியது ஒரு இசையமைப்பாளரின் வெற்றிக்கு மிக முக்கியம்.
தற்போது நீங்களும் ஒரு பாடகராக உங்களை முன் நிறுத்திக் கொள்கிறீர்களே?
இதற்கு நான் வெற்றிமாறனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்! ஆடுகளம் படத்தில் இடம்பெற்ற ”யாத்தே யாத்தே பாடலை பைலட் டிராக்காக நான் முதலில் பாடியிருந்தேன். இது பாட வரும் பாடகர்களுகான ஒரு டேமோ வாய்ஸ்தான். என்னை விட அந்தப் பாடலை இரண்டு முன்னனிப் பாடர்கள் நன்றாகப் பாடியிருந்தார்கள். ஆனால் வெற்றிமாறனும் தனுஷும் எனது குரல்தான் அந்த காட்சியின் மனநிலை, கதாபாத்திரத்தின் மனநிலை இரண்டுக்கும் பொருத்தமாக இருப்பதாகச் சொல்லி பைலட்டு டிராக்கையே பயன்படுத்தச் சொன்னார்கள். நான் இன்று பாடத்தொடங்கியதற்கு அவர்கள்தான் மூலகாரணம்.
சைந்தவி உங்கள் இசையில் மிக மென்மையான பாடல்களை பாடுகிறாரே? உங்கள் திருமணம் எப்போது?
உண்மைதான்! எனது மெலடிக்கள்தான் அவரது முதன்மையான தேர்வு. என்றாலும் பெப்பியான பாடல்களை பாடும் திறமை அவருக்கு நிறையவே இருக்கிறது. எனது முதல் க்ரிட்டிக், முதல் ரசிகை எல்லாமே சைந்தவிதான். உங்களுக்குச் சொல்லாமல் திருமணம் எப்படி? இப்போதைக்கு பெரிய இயக்குனர்களுக்கு கதைக்கான இசையைத் தருவதில் மும்முரமாக இருக்கிறேன். அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அல்லது இறுதியிலோ அழைப்பிதளோடு உங்களை சந்திப்பேன்!
நீங்கள் ரீமிக்ஸ் செய்வதற்கு எதிரான இசையமைப்பாளரா?
மற்றவர்களை நான் தடுக்க முடியாது! ஆனால் ரீமிக்ஸ் செய்வதில் எந்த க்ரியேட்டிவிட்டியும் இல்லை என்பது என் கருத்து! ஆயிரத்தில் ஒருவன் படத்தில், ‘அதோ அந்த பறவை போல’ பாடலுக்கு ரீமிக்ஸ் செய்தால் கதையை நகர்த்திச் செல்ல உதவியாக இருக்கும் என்றார் செல்வராகவன். அதனால் அதைத் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு எந்தப் படத்திலும் நான் ரீமிக்ஸ் செய்ய ஒத்துக்கொண்டது இல்லை. இனி ரீமிக்ஸ் இங்கே எடுபடாது.
வெற்றிமாறன் உங்களை ஹீரோவாக நடிக்க வரும்படி அழைத்தது உண்மையா?
வெற்றிமாறன் என்றில்லை. எனக்கு நெருக்கமான இயக்குனர்கள் கூட, ஹீரோவாக நடிக்க கேட்டனர். அன்புடன் மறுத்து விட்டேன். ஒரு பாடலில் சில ஷாட்டுகளில் முகம் காட்டுவதில் ஆட்சேபனை இல்லை. அதையும் கூட அடிக்கடி செய்தால் ரசிகர்கள் வெறுத்து விடுவார்கள்.
முக்கியமாக எனது தாத்தா, அம்மா, மாமா , என எல்லோரும் இசைத்துறையை சேர்ந்தவர்கள். நானும் அவர்கள் வழியைப் பின்பற்றவே விரும்புகிறேன். தெரிந்த தொழிலைச் செய்வோம், அதிலும் சிறப்பாக செய்வோம் என்பதே என் பாலிஸி. இசைத்துறையில் சாதிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. நடிப்பு எனக்கு சரிப்பட்டு வராது. ஏனென்றால் எனக்கு நடிப்பு தெரியாது.
உங்கள் மாமா ஏ.ஆர்.ரஹ்மான் பானியிலிருந்து விலகிவிட்டீர்கள் இல்லையா?
ஆமாம்! எனது முதல் மூன்று படங்களில் மாமாவின் சாயல் இருக்கும். ஆனால் அதன்பிறகு எனக்கான பானியை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். என்னை மிகவும் பாத்தித்தவர் மாமாதான் என்றாலும், ராஜா சார், எம்.எஸ்.வி சார் இவர்களின் இசைச் சாரம் என்னையும் அறியாமல் எனக்குள் இருக்கிறது. எனது இசையில் வாத்தியங்கள், வார்த்தைகள் இரண்டுமே தெளிவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இரைச்சலான இசை எனக்குப் பிடிக்காது!

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா