யாழ்.மாநகர சபை ஆளுங்கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி மாநகரசபை நிர்வாகத்தைக் கைப்பற்ற இலங்கை சுதந்திரக்கட்சி பலத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாக யாழ்.மாநகர சபை ஆளுங்கூட்டணிக்குள் குழப்பங்களும் அதிருப்திகளும் ஏற்பட்டுள்ளதைதயடுத்து அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு சுதந்திரக்கட்சி உயர் பீடம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.
அதன் அடுத்த கட்டமாக ஆளும் ஈ.பி.டி.பி மற்றும் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆறு உறுப்பினர்கள் கட்சி தாவி சுதந்திரக்கட்சியுடன் இணைந்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் ஏற்கனவே அதிருப்தி காரணமாக கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்துச் செயற்பட்டு வரும் நிசாந்தனுடன் கட்சி தாவவுள்ள உறுப்பினர்களையும் இணைத்து தற்போதைய ஆளுங்கட்சியான ஈ.பி.டி.பிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை சுதந்திரக்கட்சி, கொண்டு வரவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
கட்சி தாவவுள்ள அறுவரையும் நிசாந்தனையும் சேர்த்து யாழ்.மாநகர சபையில் சுதந்திரக்கட்சியின் பலம் ஏழாக அதிகரித்து மேலும் சிலரையும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் முயற்சியும் இடம்பெறுவதாக தெரியவருகிறது.
கட்சிதாவவுள்ள உறுப்பினர்களுள் யாழ்.மாநகர சபையின் ஆளும் ஈ.பி. டி.பி. கட்சியைச் சேர்ந்த மங்களநேசன் உட்பட நால்வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இருவரும் அடங்குவதாகவும் இவ் விடயம் தொடர்பாக சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கயன் மாநகரசபை ஆளும் கூட்டணியலிருந்து ஏற்கனவே விலகிய நிசாந்தன் ஆகிய இருவரும் இரகசியப் பேச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் சுதந்திரக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநகரசபை முதல்வர் தன்னிச்சையாகச் செயற்பட்டு வருவதுடன் அவரது நிர்வாகத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் குற்றஞ்சாட்டி ஈ.பி.டி.பி உறுப்பினர் மங்களநேசன் ஆளுந்தரப்பில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.
தற்போது யாழ்.மாநகர சபையில் ஆளும் கூட்டணியில் ஈ.பி.டி.பி சார்பில் எட்டு உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒன்பது உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 4 உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்நிலையில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் நால்வரும், கூட்டமைப்பு உறுப்பினர்களுள் இரண்டு உறுப்பினர்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்தால் நிசாந்தனுடன் சேர்த்து சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பலம் ஏழாக அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
அத்துடன் மேலும் சிலரையும் இணைத்து அவர்கள் ஆளுங்கட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் தற்போது ஆளுஞகூட்டணி கவிழும் நிலை ஏற்படும். இதனால் யாழ். மாநகர சபையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளது.
Tamil seithigal Tamil seithi Tamil seithi vasantham nalaya seithi Tamil movie online Tamil cinema seithigal nalaya seithi Tamil movie Tamil news Tamil newspaper Tamil news online 4 Tamil news video Tamil news paper daily thanthi.Tamil seithigal Tamil seithi Tamil seithi vasantham nalaya seithi Tamil movie online Tamil cinema seithigal nalaya seithi Tamil movie Tamil news Tamil newspaper Tamil news online 4 Tamil news video Tamil news paper daily thanthi
Friday 9 December 2011
யாழில் 15 வயதுச் சிறுமி 1 மாதகாலம் பாலியல் வல்லுறவு ! 21 வயது இளைஞன் கைது!!
இச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தனது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை குறித்த நகருக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
இதனை அடுத்து பொலிஸாரின் தேடுதலில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு யாழ் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.
குறித்த இளைஞனை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறும் சிறுமியை மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தி பாதுகாப்பாக சிறுவர் பராமரிப்பு நிலையதத்pல் ஒப்படைக்குமாறு யாழ் நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்!
உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் நச்சு இனவெறிச் சிங்கள ஆட்சியாளரை வெளிச்சத்தில் நிறுத்தி தோல் உரிக்கிறது. அடக்குமுறைச் சிங்கள இனவெறியர்களின் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை மட்டுமல்ல- அக்கொடுமைகளின் மிகக்கொடிய விளைவுகளையும் இத்திரைப்படம் அலசுகிறது. தென்தமிழ் ஈழமான மட்டக்களப்பில் பிறந்த புனிதவதி- சிங்கள படைவெறியர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டாள் என்பது உண்மைச் செய்தி. அனால் அவள் வாழ்க்கை பின்பு என்ன ஆகி இருக்கும் என்னும் கேள்வியை இயக்குனர் புகழேந்தி தங்கராசா திரைப்படம் ஆக்கித் தந்திருக்கிறாரே- இது சிங்கள இனவெறியர் கொடுமை அல்ல- அக்கொடுமையின் பொல்லா விளைவு. தேம்பித் தேம்பி நம்மை அழவைக்கும் திரை ஒவியம்.
Is Paris Burning (பாரீசு நகரம் எரிகிறது) என்னும் திரைப்படம் எப்படி இனவெறியன் இட்லரின் கொடிய முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதோ- Omar Muktar (உமர் முக்தார்) என்னும் திரைப்படம் எப்படிக் கொடுங்கோலன் முசோலினியின் முகமூடியைக் கிழித்து எரிந்ததோ- அப்படி- உச்சிதனை முகர்ந்தால் என்னும் திரைப்படம் சிங்கள இனவெறியன் மகிந்த ராஜபக்சேவின் கொடிய கொலைவெறி முகத்தை உடைத்தெரிகிறது.
தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய முதல் திரைப்படத்தை (காற்றுக்கு என்ன வேலி) உருவாக்கியவ்ர் புகழேந்தி தங்கராசா. இப்போது அவர் உருவாக்கி தந்துள்ள உச்சிதனை முகர்ந்தால் தொடர்நது தமிழீழ விடுதலைப் போரில் அவர் கொண்டுள்ள ஈடுபாட்டையே காட்டுகிறது.அவர் படைப்புகளான இந்த இரு திரைப்படங்களுக்கும் நிகராக தமிழ்நாட்டில் இதுவரை ஈழம் குறித்த திரைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை என்பது பச்சை உண்மை. படை மட்டுமல்ல- ஒரு படமும் தமிழீழத்திற்காக போராட முடியும் என்பதை இயக்குனர் புகழேந்தி தங்கராசா தன் திரைப் படைப்பினால் நிறுவியிருக்கிறார்.
உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் ஒவ்வொரு கட்டமும் தமிழீழ விடுதலைக்கான உரத்த போர் முழக்கமே அன்றி வேறில்லை. கடல்நீர் தமிழ்நாட்டையும் தமிழீழத்தையும் பிரிக்கலாம்- ஆனால், தமிழனின் கண்ணீர் இவ்விரு நாடுகளையும் எப்போதும் இணைக்கும் என்பதையும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் நமது கவனத்தை பதிக்கிறது. கொடுமைக்கு இரையாகும் ஒரு பெண்ணாக அல்ல. கொடுமைக்கு இரையாகும் ஒரு தேசிய இனமாக புனிதவதி இத்திரைப்படத்தில் வடிவம் கொள்கிறாள். உலகெங்கும் வாழும் தமிழீழ மக்கள் தங்கள் உரிமைப் போராட்ட உணர்வினை மேலும் கூர் தீட்டிக்கொள்ள உச்சிதனை முகர்ந்தால் நிச்சயமாக உதவும். தமிழீழ மக்களின் கண்ணீரை இத்திரைப்படம் நெருப்பாக்கும். தமிழீழ மக்களின் பெருமூச்சை இத்திரைப்படம் புயலாக்கும்.தமிழருவி மணியன் இயல்பான-சூடான திரை உரையிலும், இசையமைப்பாளர் இமானின் நெஞ்சைப் பிழியும் தமிழிசையிலும் உச்சிதனை முகர்ந்தால் தனி மிடுக்குடன் தமிழுலகில் உலா வருகிறது.
ஈழவிடுதலையில் எப்போதும் தனி ஆர்வம் கொண்டுள்ள நடிப்பின் செல்வர் சத்யராஜ் இத்திரைப்படத்தில் ஈடிணையற்ற பங்களிப்பினை நல்கி உள்ளார்.சீமான், சங்சீதா, நாசர்,லட்சுமி போன்றோரின் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பை சீராட்டாமல் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நீக்கமற திரைப்படம் பார்த்த தலைவர் நெஞ்சிலும் நிறைந்திருக்கிறாள் புனிதவதியாக நீநிகா.
உலக விருது பெறும் இத்திரைப்படம் என்று உறதியாக கூறலாம். புகழ் அனைத்தும் புகழேந்திக்கே.
காசி ஆனந்தன்.
சென்னை. தமிழ்நாடு.
அமைப்புகளும் ஒன்றுகூடியது - பிரித்தானியாவில் மீண்டும் ஒற்றுமை!
கடந்த மாவீரர் தினத்தில் நடந்த குழுவாதங்களும் போட்டி மவீரர் தினங்களாலும் மக்கள் பலர் குழம்பிப்போய் இருந்தனர். ஆனால் நேற்றைய கூட்டத்டொடரில் அனைத்து அமைப்புகளும் ஒன்றாக இணைந்து மனித உரிமை தினத்தில் தமிழ் மக்களுக்காக ஒன்றாகக் குரல்கொடுப்போம் எனக் கூறியிருந்தது பெரும் வரவேற்க்கத்தக்க விடையமாகும்.
முக்கியமாக வருகின்ற வருடம் மார்ச் மாதம் ஐநாவின் மனித உரிமை பேரவையின் அமவிர்க்கு முன்னர் நாங்கள் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பாக இக் கூட்டத்தில் ஆரயப்பட்டது. இதில் பிரித்தானிய தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானிய உறுப்பினர்கள், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள், பிரித்தானிய தமிழ் கொன்சவற்றி , பிரித்தானிய தமிழ் லேபர், தமிழ் பிரண்ஸ் ஒப் லிப்ரெம் மற்றும் சர்வதேச தமிழ் ஊடகவியளாளர் சங்கம்(IATAJ) ACT NOW ஆகிய அமைப்புக்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் தகவல் மையம், தமிழ் தேசிய கூட்டமைப்பு-பிரித்தானிய கிளை, ஆகிய அமைப்புக்கள் கலந்து கொள்ளமுடியாமைக்கு வருத்தம் தெரிவித்திருந்தனர். மேலும் சில செயல் அமர்வுகள் நடைபெறவிருக்கின்றது என்ற செய்தியையும் ஏற்பாட்டாளர்கள் அதிர்வுக்கு தெரிவித்திருந்தனர்.
அதிர்வு
12ஆம் தேதி உண்ணாவிரதம்: 5 மாவட்டங்களில் மனித சங்கலி: திமுக செயற்குழுவில் முடிவு
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து தமிழகம் முழுவதும் வரும் 12ஆம் தேதி திமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 15ஆம் தேதி மனித சங்கலி போராட்டம் நடைபெறும் என்றும் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
"அரசு முடிவின்படி செயல்படுவோம்'' - திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம்
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களுக்கு பல சங்கள் உள்ளன. இதில் முக்கியமான அமைப்பு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம். இதன் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் இரு தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது "முல்லைப்பெரியாறு பிரச்சினைக்காக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் வருகிற சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து சினிமா காட்சிகளையும் ரத்து செய்வது," என்று முடிவு எடுத்துள்ளதாக அறிவித்தார்.
இப்போது திரையரங்கு உரிமையாளர்களுக்காக இயங்கும் இன்னொரு அமைப்பான தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அபிராமி ராமநாதன் தலையில் செயல்படும் இந்த சம்மேளனத்தின் சிறப்பு கூட்டம் சென்னையில் உள்ள பிலிம்ஸ் சேம்பரில் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், "முல்லைப்பெரியாறு பிரச்சினை மட்டுமின்றி, வேறு எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும், தமிழக மக்களின் நன்மைக்கே என்ன செய்ய வேண்டும் என்பது அனுபவம் வாய்ந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியும். ஆதலால் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் தமிழக அரசுடன் ஒருங்கிணைந்த செயல்படுவோம்.
திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உற்ற துணையாக இருந்து அவர் வழிகாட்டியபடி நடப்போம்," என்று தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
கூட்டத்தில், சம்மேளனத்தின் செயலாளர் சத்தியசீலன், துணைத்தலைவர் சாந்தி வேணுகோபால், பொதுச் செயலாளர் கணபதிராம் உள்பட ஏராளமான திரையரங்க உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
ஒஸ்தி- சினிமா விமர்சனம்
ஆனால் பாருங்கள், ஒரு காட்சி கூட படத்தில் ஈர்ப்புடன் இருக்கவில்லை என்ற உண்மையை முதலிலேயே சொல்லியாக வேண்டும்.
உலகிலேயே அற்பமான சமாச்சாரம் எது தெரியுமா... சுயதம்பட்டம்தான்!. தமிழ்நாட்டில் மட்டும் அதற்கு தன்னம்பிக்கை என்று பெயர் வைத்துவிட்டார்கள், டி ராஜேந்தரும் அவர் மகன் சிம்புவும். படம் முழுக்க தான்தான் உலகத்திலேயே ஒஸ்தி என்கிற ரேஞ்சுக்கு 'ஒஸ்தி வேலன், ஒஸ்தி வேலன்...' என தாங்க முடியாத சுயபுராணம்!.
'காமெடி என்ற பெயரில் கோபத்தைக் கிளப்பாதடா' என்று அடிக்கடி மயில்சாமியைப் பார்த்து சந்தானம் கூறுவார். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இதையே சிம்பு வரும் காட்சியில் திருப்பிக் கூறுகிறார்கள்!
கதை என்று சொல்ல இந்தப் படத்தில் ஒன்றுமே இல்லை. தடி எடுத்த தண்டல்கார போலீஸ் கதை இது. அவ்வளவுதான். மற்ற கேரக்டர்கள் எல்லாம் ஊறுகாய்.
படம் முழுக்க மொத்த வசனமும் சிம்புவுக்குதான். ஹீரோயினுக்கு மிஞ்சிப் போனால் 5 வரிகள்!
பேச்சோடு நிற்காமல், படம் முழுக்க பறக்கிறார், குதிக்கிறார், தாவுறார், கத்துறார், நெல்லை பாஷை என்ற பெயரில் தமிழைக் குத்திக் குதறியெடுக்கிறார்... துப்பாக்கியில் சுடுவது கூட நின்றபடியல்ல... வானத்தில் பறந்தபடிதான் சுடுகிறார். இதெல்லாம் போக எங்கோ ஓரிரு காட்சிகளில் அவர் நடப்பது போலவும் காட்டுகிறார்கள். தியேட்டரில், இதைக் காணச் சகிக்காமல் பலரும் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தது தனிக் கதை!
படத்தில் பார்க்கும்படி இருப்பவர் ஹீரோயின் ரிச்சாதான். ஆனால் அவர் முகத்தைக் கொஞ்ச நேரம், தொப்புளை மீதி நேரமும் காட்டிக் கொண்டே இருக்கிறார்களே தவிர, நடிக்க துளியூண்டு சந்தர்ப்பம் கூட தரவில்லை. அட... டூயட்டில்கூட சிம்புதான் குதிக்கிறார், ரிச்சா அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்!
தபாங் என்ற படம் உத்தரப் பிரதேச வட்டார இந்தி வசனத்துடன் வெளியானது. அதில் சுல்புல் பாண்டே என்ற பெயரில் சல்மான் கான் தனக்கு நன்கு தெரிந்த இந்தி வழக்கு மொழியை சரளமாகப் பேசியிருப்பார். ஆனால் இந்தப் படத்திலோ, அத்தனை கேரக்டர்களும் திருநெல்வேலித் தமிழ் என்ற பெயரில் ரசிகர்களை படுத்தி எடுக்கிறார்கள். யாருக்குமே அந்த வழக்கில் பேசத் தெரியவில்லை. இந்த பாவத்தைச் செய்யாத ஒரே ஆள் சந்தானம் மட்டுமே!
இன்னொரு விஷயம், இந்திக்காரர்களுக்கு தடாலடி போலீஸ் கேரக்டர் படங்கள் ரொம்ப புதுசு. அதனால் தபாங்கிற்கு அபார வரவேற்பு அங்கே.
தமிழில் நாம் பார்க்காத போலீஸ் கதையா... மூன்று முகம் ரஜினி, இதுதாண்டா போலீஸ் ராஜசேகர், சாமி விக்ரம் என விதவிதவிதமான அதிரடி போலீஸ் கதைகளை நாம் பார்த்துவிட்டோம். அந்தக் கதைகளுக்கு முன் இந்த ஒஸ்தி... ப்ச்!
படத்தில் உண்மையிலேயே பெரிய உழைப்பைக் கொடுத்திருப்பவர் இளம் இசையமைப்பாளர் தமன். ஆனால் அதுகூட பாடல்களில் மட்டும்தான்... பின்னணி இசையில் ஒஸ்தி ஒஸ்தி என்று கத்தி காதை பதம் பார்க்கிறது கோரஸ்.
சினிமா என்பது பொழுதுபோக்கு சமாச்சாரம்தான். அந்த பொழுதுபோக்கை பார்ப்பவர்களுக்கு சங்கடமில்லாத வகையில் இதமாகத் தருவது ஒரு கலை. தில், தூள், கில்லியில் அதை அற்புதமாகச் செய்திருந்தார் தரணி.
அந்த தரணி இயக்கிய படமா இது என்று கேள்வி படம் பார்த்துவிட்டு வந்த பிறகும் நெடு நேரம் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது!
பிரசாந்த் படத்துக்கு தடை கோரும் மம்பட்டியான் மகன்!
சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில், சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த நல்லப்பன் தாக்கல் செய்த மனுவில், "என் தந்தை மம்பட்டியான் என்ற அய்யாத்துரையை முன்விரோதம் காரணமாக கருப்பன் என்பவர் 1964-ம் ஆண்டும் கொலை செய்தார். ஆனால் போலீசார்தான் என் தந்தை மம்பட்டியானை பற்றி தவறான தகவல்களை வெளியிட்டனர். தான் சார்ந்த சமுதாயத்துக்காக பாடுபட்டவர் அவர்.
தமிழக அரசு என் தந்தையை பிடிக்க மலபார் போலீஸ் உட்பட பல தனிப்படையை அமைத்தது. என் தந்தை மம்பட்டியான், தமிழகத்தில் பிரபலமானவர். லட்சக்கணக்கான மலைசாதியினராலும், சமுதாயத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவர்களாலும் தலைவனாக போற்றப்படுபவர் அவர்.
இந்த நிலையில் என் தந்தையை பற்றிய உண்மைக்கு புறமான தகவலுடன் லட்சுமி சாந்தி மூவிஸ் உரிமையாளர் தியாகராஜன் சினிமா எடுப்பதாக தெரிகிறது. என் தந்தையை பற்றி தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் அது ஏற்படுத்திவிடும்.
இதனால் என்னையும், எங்களது குடும்பத்தினரையும் இந்த சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் சூழ்நிலை ஏற்படும். எந்த தவறும் செய்யாத நானும், என் குடும்பத்தாரும் பாதிக்கப்படக்கூடும். எங்கள் சொத்துக்களை பிறர் சேதமடையச் செய்யக்கூடும்.
'மம்பட்டியான்' சினிமாவை வியாபார நோக்கத்துடன் தியாகராஜன் எடுத்து வருகிறார். இந்தப் படம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. அவர் எங்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதியை பெறாமலேயே எனது தந்தையின் பெயரில் அவரைப் பற்றி படம் எடுத்து வருகிறார்.
எனவே தியாகராஜன் தயாரிப்பில், நடிகர் பிரசாந்த் நடிக்கும் `மம்பட்டியான்' படத்தை வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும். என் தந்தை மம்பட்டியானின் பெயர் அல்லது அவரது வாழ்க்கை பற்றிய எந்த அடையாளங்களையும் வைத்துக்கொண்டு அந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு சென்னை 8-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி வினோபா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 12-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி தியாகராஜனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
நாளை சந்திர கிரகணம் : விஞ்ஞானிகள் தகவல்!
அன்று மாலை 6 .16 மணி முதல் இரவு 9 .48 மணி வரை சந்திர கிரகணம் நிகழும் என்றும், சரியாக இரவு 8 மணி ஒரு நிமிடத்தின் போது, முழு சந்திர கிரகணத்தையும் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவை 15 நாள் இடைவெளியில் நிகழ்வது குறிப்பிடத்தக்கது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆசியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் சந்திரகிரகணம் தொடங்கி, முடியும் வரை, முழுவதையும் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்கா மற்றும் அன்டார்டிகா நாடுகளில் கிரகணம் தெரியாது என்றும் கூறப்பட்டுள்ளது. சந்திரகிரணகத்தின் அனைத்துக் கோணங்களையும் பார்க்கும் வகையில் இந்தியா அமைந்தள்ளது.
மேலும் இது ஆண்டின் மையப்பகுதியான ஜுன் மாதம் ஏற்படும் கிரகணத்தைப் போல் இருக்கும் என்றும் கிட்டத்தட்ட 5மணி நேரம் இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சந்திர கிரகணத்தை பார்க்க விரும்பும் பொதுமக்களுக்கு, வசதியாக டிசம்பர் 10-ம் தேதி பெங்களூர் ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
முல்லை பெரியாறு அணை விவகாரம்... வாய் திறப்பாரா விஜய்!
சிங்கள இன வாதம் ஒழுக்கமானது- பிரதமர்.!
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் சிலரின் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியவை என பிரதமர் டி.எம். யெயரட்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் அளவிற்கு எந்தவொரு அரசாங்கமும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை எனவும் 30 ஆண்டுகளாக மக்களின் வாழும் உரிமை பறிக்கப்பட்டிருந்தது அந்த மாபெரும் பிரச்சினைக்கு இந்த அரசாங்கமே முற்றுப் புள்ளி வைத்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எந்த இடத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சத்திலேயே மக்கள் வாழ்ந்து வந்ததாகவும் கொடூரமான பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக யெனாதிபதி தலைமையிலான படையினர் மனிதாபிமான மீட்புப் பணிகளை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் நகைப்புக்குரியது. படையினர் எல்லா நேரங்களிலும் ஒழுக்கத்துடன் செயற்பட்டனர் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகள் சிறிய நாடுகளின் மக்களது மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்படுகின்றன.
பலம்பொருந்திய நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் தவறில்லை, சிறிய நாடுகளின் தலைவர்கள் மேற்கொண்டால் அதுவே தவறு என்ற நிலை உருவாகியுள்ளது.
உலக நாடுகளின் இந்த இரட்டை நிலைப்பாட்டுக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் யெயரட்ன தெரிவித்துள்ளார்.
திராட்சைப்பழக் கழிவுகளைப் பசுக்களுக்கு வழங்குவதன் மூலம் அதிகமான பாலைப் பெறமுடியுமென விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்
இக்கழிவுகளை உணவாக வழங்குவதன் மூலம் பசுக்களின் சாணத்தின் அளவு 20% குறைவடைவதாகவும், அவை வழங்கும் பாலின் அளவு 5% அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றை உணவாக உட்கொண்ட பசுக்கள் வழங்கும் பாலானது சாதாரண பசுக்கள் வழங்கும் பாலை விட ஆரோக்கியமான 'என்ச்டி ஒக்சிடன்ஸை' (Anti-oxidants) கொண்டதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஆராய்ச்சியாளர்கள் வைன் தயாரிக்கப் பயன்பட்ட திராட்சைப் பழங்களின் கழிவுகளை சுமார் 37 நாள் வரை பசுக்களுக்கு வழங்கியுள்ளனர்.
பின்னர் இவற்றை உண்ட பசுக்களும், வேறு உணவுகள் வழங்கப்பட்ட பசுக்களும் வழங்கிய பாலின் அளவினையும், அவற்றின் தரத்தினையும் வைத்தே இம்முடிவிற்கு வந்துள்ளனர்.
இவ் ஆராய்ச்சியை மேலும்விரிவாக மேற்கொள்ளவுள்ளதாக இம்முடிவினை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றிய அமெரிக்க விமானத்தினை உலகிற்கு காட்டியது ஈரான்
இந்நிலையில் ஈரான் கைப்பற்றிய அதி நவீன உளவு விமானத்தின் காணொளியை அந்நாட்டு தொலைக்காட்சிச் சேவையொன்று ஒளிபரப்பியுள்ளது.
அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட நவீன ஆர்.கியூ- 170 என்ற விமானமே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை உளவு பார்க்கும் நடவடிக்கையில் மேற்படி விமானங்களே ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
அக் காணொளியில் அந்நாட்டு அதிகாரிகள் இருவர் அருகில் இருந்து விமானத்தினை ஆராய்வது போலவும் அக் காணொளியில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
மேலும் விமானத்தில் "அமெரிக்காவினால் ஒன்றும் செய்ய முடியாது" என்ற ஈரானிய முன்னாள் தலைவர் அயத்துல்லா ருஹொல்லா கொமேனியின் வாசகம் எழுதப்பட்ட பெனர் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
ஈரான் இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்தியது என்பது தொடர்பில் சர்ச்சை நிலவுகின்றது. காரணம் பொதுவாக இத்தகைய ஆளில்லா உளவு விமானங்கள் எதாவது தொழிநுட்ப கோளாறு அல்லது தாக்குதலுக்குள்ளாகும் வேளையில் தமது நிலைக்குத் திரும்பவோ அல்லது தானாகவே அழித்துக்கொள்ளும் படியே தயாரிக்கப்படுகின்றன.
எனினும் ஈரான் இதனைக் கைப்பற்றியுள்ளமையானது பலரை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
___
அமெ. மூத்த அதிகாரி இந்தியா விரைவு இலங்கை நிலவரம் குறித்து ஆராய்வு
எதிர்வரும் திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவுத்துறைச் செயலர் ரஞ்சன் மாத்தாய் ஆகியோருடன் முக்கிய பேச்சுகளை அவர் நடத்தவுள்ளார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை குறித்து அவர் இந்தியத் தரப்புடன் விரிவாக ஆராய்வர் என்றும், இலங்கையின் அரசியல் போக்குகள் பற்றியும் இதன்போது பேசப்படும் என்றும் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து கவலை கொண்டுள்ள அமெரிக்கா, அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இரகசியமாக இராணுவ பலத்தை அதிகரிக்கக் கூடாது சீனாவுக்கு அமெ. அறிவுரை
பிரசாந்துடன் இணைந்துள்ள வைகைப் புயல் வடிவேலு
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பிரசாந்துடன் மம்பட்டியான் திரைப்படத்தில் நடித்துள்ளார். |
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த 11 மாதங்களுக்குப் பின்பு தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் நடிகர் பிரசாந்துடன் மம்பட்டியான் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். மம்பட்டியான் திரைப்படம் வருகிற 16 ஆம் திகதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்தப் திரைப்படத்தில் பிரசாந்த் உடன் முழுக்க நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். இதற்கு முன்பு தியாகராஜன் நடித்து வெளிவந்த மலையூர் மம்பட்டியானில் கவுண்டமணி நடித்த மைனர் வேடம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரசாந்தும், வடிவேலும் இணைந்து நடித்த வின்னர் திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. |
முன்செல்ல |
Thursday 8 December 2011
கிளிநொச்சியில் 46 வயது பெண் பாலியல் வல்லுறவு! சந்தேகத்தில் இருவர் கைது
டேம் 999 படத்தில் பென்னிகுயிக்கை ஊழல்வாதியாக சித்தரித்தது நன்றி கெட்ட செயல்- தங்கர்பச்சான்
முல்லைப்பெரியாறு அணையை, தனது சொத்துக்களை விற்று கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பொன்னி குயிக்கை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் வகையில், அவரது உருவப்படம் சென்னை வண்ணார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள காமராஜ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் கே.ராஜன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தங்கர்பச்சான் கலந்து கொண்டார். கூட்டத்திற்குப் பின்னர் தங்கர்பச்சான் பேசுகையில்,
முல்லைப்பெரியாறு அணையின் மூலம் தமிழகத்தில் உள்ள 6 மாவட்ட விவசாய நிலம் பயன்பெற்று வருகிறது. இந்த அணையை பென்னி குயிக் என்ற ஆங்கிலேய பொறியாளர், தனது சொத்தை விற்று கட்டினார் என்ற வரலாற்றை கேட்கும்போது நமக்கு பெருமையாக இருக்கிறது.
எனவே, பென்னி குயிக்கின் வரவாற்றை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் பெயரை பென்னி குயிக் என்று மாற்றி வைத்து, அந்த வரலாற்று சின்னத்தை எக்காலமும் பாதுகாக்க வேண்டும்.
சமீபத்தில் `டேம் 999' என்ற படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அந்த படம் திரைக்கு வந்தது. அந்தப்படத்தில், தமிழர்களை விரோதிபோல சித்தரித்தும், அணையை கட்டியவரை ஊழல்வாதி என்றும் காட்டியுள்ளனர். இது நன்றி கெட்ட செயல்.
எனக்கு யாராவது நிதியுதவி அளிக்க முன்வந்தால், இருமாநில மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முல்லைப்பெரியாறு அணை பற்றிய கதையை படமாக எடுக்க தயாராக உள்ளேன்.
முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழக அரசியல் தலைவர்களின் குரல் மட்டும் ஒன்றாக உள்ளது. ஆனால், செயல் வடிவில் ஒன்று சேர வேண்டும். அவர்கள் சேர்ந்து குரல் கொடுப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் இதற்கு முன்பு அவர்கள் தங்களது சுய நலத்தைக் கருதியே செயல்பட்டனர். இப்போதும் அப்படித்தான் செயல்படுகின்றனர். அதை விட்டு விட்டு மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் நின்று என்றைக்கு குரல் கொடுக்கிறார்களோ, அப்போதுதான் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். மத்திய அரசும் தனது கவனத்தை திருப்பும்.
தற்போது, நடந்து வரும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு கேரள அரவை கண்டித்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை அமைதிகாக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக அய்யப்ப பக்தர்களும் கேரள எல்லையில் அடிவாங்க மாட்டார்கள் என்றார் அவர்.
நடிகர் மகேஷ்பாபு வீட்டில் வருமானவரி சோதனை!
பிரபல தெலுங்கு நடிகர் - தயாரிப்பாளர் கிருஷ்ணாவின் மகனுமான மகேஷ்பாபுவின் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த 'திடீர்' சோதனை நடந்தது.
மகேஷ்பாபு இப்போது நடித்துவரும் தி பிஸினஸ்மேன் படத்தின் தயாரிப்பாளர் வீடுகள், பட அலுவலகம் என பல இடங்களிலும் இந்த சோதனை நடந்தது.
மகேஷ்பாபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றாலும், பல கோடி ரூபாய் மதிப்பு மிக்க ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனையின் போது, மகேஷ்பாபு, ஒரு படப்பிடிப்பில் இருந்தார்.
தகவல் அறிந்து, அவர் உடனடியாக வீட்டுக்கு விரைந்தார். தெலுங்கு சினிமாவில் மிக அதிகமான சம்பளம் பெறுபவர் மகேஷ்பாபு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்துலகம் ஆதரவா? ஆணைக்குழு முன் சாட்சியமளித்தவர்களை கொல்லும் சிறிலங்கா இராணுவம்
தமிழர்கள் வாய்மூடி மவுனிகளாக உள்ள வேளை சிங்கள இனவெறி அரசு தமிழரை கொன்று குவித்து அதனை சர்வதேச விசாரணைக்கு ஒத்துளைக்காமல் தன்னைத்தானே நீதிபதிகளாகவும் நீதியாளர்களாகவும் கருணை கொண்டவர்களாகவும் காண்பிக்கும் அதே நேரத்தில் தமிழரை படுகொலை செய்த இனவெறி சிங்கள அரசு தமிழரின் படுகொலைக்கு சாட்சிகளாகவுள்ள சாட்சியம் அழித்த தமிழர்களை அழித்தொழிக்கும் திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது.
கட்டுவனை சேர்ந்த இடுயஇஞர் ஒருவரை சுண்ணாகத்தில் திருடியதாக கூறி விசாரணைக்கு என அழைத்து சென்ற சிங்கள இனவெறி காவல்துறை அவரை சிங்கள இனவெறி இராணுவத்திடம் ஒப்படைத்தது. இராணுவத்திடம் ஒப்படைத்த இளைஞரை சிங்கள இனவெறி இராணுவம் மேலதிக விசாரணை என்ற பெயரில் சிங்கள இனவெறி புலயெயய்வாளர்கள் முன் ஒப்படைத்தது. சிங்கள புலயெயய்வாளர்கள் விசாரணை செய்த இடத்தில் மேலதிகமாக மூன்று இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற போது இராணுவத்துக்கு எதிராக நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் கொடுத்த நீங்கள் இன்னும் ஏதாவது ஆணைக்குழு வந்தாலும் சாட்சியம் அழிப்பீர்களா என்று கேட்டு கேட்டு தாக்கினர்.தாக்கிய பின் சாட்சியம் அழித்த எந்த ஒரு தமிழரும் உயிருடன் இருக்க கூடாது என்பதுவே எங்கள் சிங்கள அரசின் நிலைப்பாடு என்று கூறியதுடன் இளைஞசமயடுஇன் கை நிகங்கள் பிடுங்கப்பட்டு வன்னி குளத்தில் போடப்பட்டார்.
தாய் தந்தையரை இழந்த இந்த இளைஞன் அவர்களது உறவுகளுடன் வாழ்ந்து வந்தார்.இவரது உறவினர் வீட்டுக்கு சென்ற சிங்கள இனவெறி காவல் துறை இளைஞர் தப்பி ஓடமுற்பட்டதால் சுடப்பட்டதாகவும் ஆனால் நீரில் அமிழ்ந்து இறந்ததாக உறவினர்களிடம் கையொப்பத்தை பெற்று சாட்சியம் வழங்க முற்பட்டால் இதே நிலை தான் வரும் என எச்சரித்து சென்றுள்ளனர்.
இளைஞருடைய தாய் தந்தை முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதுடன் இவரது மூத்த சகோதரணை சிங்கள இனவெறி இராணுவம் இவரது கண்முன்னால் சுட்டு கொன்றது.சாட்சியமளித்த இவரை போல் தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள வரணி, இயற்றாலை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சி.சுஜீவனா (வயது 15) என்ற பெற்றோரை இழந்த இம்மாணவியும் நல்லிணக்க ஆணைக்குழு முன் தனது தாய் தந்தையரின் படுகொலைக்கு இராணுவமே காரணம் என கூறியிருந்தார்.இவரின் கொலையும் தற்கொலையாக சிங்கள இனவெறி அரசின் பொலிசார் விசாரணையை முடித்துள்ளனர்.
தமிழர்களே நீங்கள் தூங்கும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் எமது சொந்தங்கள் அழிக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள் அதனால் மூடிய சிறையில் வைத்து சிங்களம் இன்னும் ஒரு முள்ளிவாய்க்காலை அரங்கேற்றிவருகிறது.கொலைசெய்யப்பட்ட இளைஞரின் செயலை ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிலையத்துக்கு அனுப்புவதற்கான (சாட்சிகளுடன்) ஈடுபடுகின்றவர்களுக்கு ஊக்கத்தை கொடுத்து தமிழினத்தை புலம்பெயர்ந்த உங்களால் தான் காக்கமுடியும் என்பதை மறவாதீர்கள்.
அனைத்துலகம் விசாரணையை சிங்களத்திடம் ஒப்படைத்தது இதற்காகவா என்ற சந்தேகமும் நடுநிலையாளர்கள் என்று சமாதானம் பேச வந்த அனைத்துலகம் தமிழரை அழிக்க துடிக்கிறதா?? அனைத்துலக மக்களிடம் நீதி வேண்டி போராட தயாராகுங்கள்.
வடக்கு கிழக்கு இணைப்பு.பொலிஸ்.காணி அதிகாரம் கிடையாது ஆனால் பேசுவதற்கு வாருங்கள்;அழைக்கிறார் கெஹலிய
இனப்பிரச்சினைத்தீர்வுப் பேச்சில் அரசால் நிராகரிக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளைக் கேட்டுப் பிடிவாதமாக நிற்காமல் தமிழர்களின் ஏனைய பிரச்சினைகள் குறித்துக் கூட்டமைப்பு பேசுவதற்கு முன்வரவேண்டும். தமிழ் மக்களுக்கு அந்த மூன்று விடயங்கள் மட்டுமல்ல, பட்டியலிட்டுக்காட்டும் அளவுக்குப் பிரச்சினைகள் உள்ளன என்று தெரிவிக்கிறார் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல.
அத்துடன், பேச்சு மேசையில் ஒரு கருத்தையும், வெளியே இன்னொரு கருத்தையும் கூறித் திரியும் கூட்டமைப்பினர் இனப்பிரச்சினைப் பேச்சை முறிவுக்குட்படுத்துமளவுக்கு நடந்துகொள்கின்றனர் எனவும் குற்றஞ்சாட்டிய அமைச்சர், நாடாளுமன்றத் தெரிவுக்குழு குறித்துக் கூட்டமைப்பு இதுவரை தெளிவான முடிவை அரசுக்கு அறிவிக்கவில்லை என்றும் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது அரசு கூட்டமைப்பு பேச்சுகளில் காணப்படும் விரிசல் நிலைமை குறித்து அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.
கேள்வி: கடந்த 16 ஆம் கட்டப் பேச்சில் கூட்டமைப்பின் 3 அம்சக் கோரிக்கைகளான வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரம் ஆகியவற்றை அரசு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன?
பதில்: ஆம். அந்த மூன்று கோரிக்கைகளையும் அரசு நிராகரித்திருக்கிறது. ஏனென்றால், அக்கோரிக்கைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவற்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விளக்கியுள்ளோம். இந்தியாவை ஒப்பிட்டு அவர்கள் பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் என்பவற்றைப் பேசுகிறார்கள். அதனைச் சற்றுச் சிந்திக்கவேண்டும்.
அத்துடன், பொலிஸ் அதிகாரம் வழங்கப்படும் பட்சத்தில் அது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
தமிழ் மக்களுக்கு இந்த மூன்று கோரிக்கைப் பிரச்சினைகளை விடவும் இன்னும் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. அவற்றைப் பட்டியலிட்டும் காட்டலாம். ஆனால், அவை அனைத்தையும் கூட்டமைப்பு புறந்தள்ளிவிட்டு இம்மூன்று அம்சக் கோரிக்கைகளில் பிடிவாதத்தனத்தைக் காட்டி நிற்கிறது.
எனவே, அவற்றை ஓரங்கட்டிவிட்டு ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசுவதற்கு முன்வரவேண்டும்.
கேள்வி: நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கிறது. அதில் கலந்துகொள்ள மாட்டோம் என்றும் அறிவித்திருக்கிறது. அதுமட்டுமன்றி, ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியனவும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், இத்திட்டம் எவ்வாறு சாத்தியப்படும்?
பதில்: இனப்பிரச்சினைத் தீர்வுத்திட்டத்திற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் அரசின் யோசனைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை தங்களது தெளிவான பதிலை அரசிடம் அறிவிக்கவில்லை. இப்படியிருக்க, பேச்சு மேசையில் நன்றாகப் பேசிவிட்டு,வெளியே சென்று பல்வேறு கருத்துகளைப் பரப்பிவரும் கூட்டமைப்பு, தீர்வுப் பேச்சுகளை முறிவுக்குட்படுத்தும் வகையில் நடந்துகொள்கிறது. ஆனால், அரசு எவ்வழியிலாவது தீர்வைப் பெற்றுக்கொடுக்கவே முயற்சி செய்து வருகிறது. அனைத்துக்கும் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்தால் நாங்கள் என்ன செய்வது? அத்துடன், அரசின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுத் திட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் இதுவரை எழுத்துமூலமான எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.
கேள்வி: நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்காக அரச தரப்பில் பெயர் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளதா?
பதில்: ஆம். இதுவரை 19 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். பெயர் விவரங்களை வெளியிட சற்று கால அவகாசம் தேவை. இப்படிக் கூறினார் அமைச்சர்.
அமைச்சர் கெஹலியவின் இந்தக் கருத்துக் குறித்து கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனைத் தொடர்புகொண்டு கேட்ட போது,
அரசியல் தீர்வு தொடர்பாக முழுமையானதொரு தீர்வுத்திட்ட யோசனையை அரச தரப்பு பேச்சுக்குழுவிடம் நாம் கையளித்தது மட்டுமின்றி, நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாகத் தமது உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதிக்குக் கூட அறிவித்துவிட்டோம். இந்த விடயங்கள் தொடர்பாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதுவும் தெரியாவிட்டால் அவர்களின் பேச்சுக் குழுவிடமும், ஜனாதிபதியிடமும் முதலில் கேட்டறிய வேண்டும்.
இனப்பிரச்சினைக்கு எவ்வாறானதொரு தீர்வு காணப்படவேண்டும் என்பது குறித்து எமது தரப்பு யோசனைகளை முன்வைத்து முழுமையானதொரு தீர்வுத்திட்டத்தை அரச தரப்பு பேச்சுக் குழுவிடம் கையளித்துள்ளது. நாம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாகத் தொடர்ந்தும் பேசி வருகின்றோம். கடந்த பேச்சின்போது வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரம் உட்பட மூன்று விடயங்கள் தொடர்பாகப் பேசினோம். அடுத்த சுற்றுப்பேச்சின்போதும் இந்த விடயங்கள் குறித்து ஆராய அரசு தரப்பு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பிட்டதொரு விடயத்தைத் தெரிவுசெய்து நாம் பேசவில்லை. முழுமையானதொரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்துள்ளோம்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாட்டை அரச தரப்பு பேச்சுக்குழுவிடம் நாம் தெரிவித்துவிட்டோம். ஜனாதிபதியிடமும் கூட எமது நிலைப்பாட்டை உறுதியாக அறிவித்துள்ளோம். இந்த விடயங்கள் தொடர்பாக அமைச்சருக்கு எதுவும் தெரியாவிட்டால் முதலில் அது குறித்து அவர்களின் பேச்சுக்குழுவிடமும், ஜனாதிபதியிடமும் தெளிவாகக் கேட்டறிய வேண்டும் என்றார் அவர்
ஈரானின் மர்மத் தாக்குதல்: திக்குத் தடுமாறியுள்ள அமெரிக்கா!
அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. யின் மிகத் துல்லியமான, மற்ரும் அதிக பெறுமதிமிக்க இந்த விமானத்தை ஈரானிடம் எவ்வாறு அமெரிக்கா இழந்தது? அதி நவீன தொழில் நுட்ப்பம் கொண்ட இந்த விமானம் உருமறைப்பு மற்றும் தான் பறக்கும் இடத்தை ராடர் திரைகளில் வேறு இடத்தில் பறப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா இழந்துள்ள RQ- 170 மாடல் விமானம், வெளிநாடுகளை உளவு பார்ப்பதற்காக சி.ஐ.ஏ. ரகசியமாக உபயோகித்த விமானம். பாகிஸ்தானில் பின்லேடன் மறைந்திருந்த கம்பவுண்டை வானில் இருந்து மாதக் கணக்கில் உளவு பார்த்து தகவல் கொடுத்த விமானமும் இதுவே. இந்த விமானத்தில் இருந்து கிடைத்த லைவ் வீடியோ ட்ரான்ஸ்மிஷனை வைத்தே, பின்லேடனின் நடமாட்டம் அந்த கம்பவுண்டுக்குள் உள்ளது என்பதை சி.ஐ.ஏ. உறுதி செய்து கொண்டது. பின்லேடன் கொல்லப்பட்டு ஒரு மாதத்தின் பின்னரே, அந்த ஆபரேஷனுக்கு RQ-170 உளவு விமானம் உபயோகிக்கப்பட்ட தகவலை சி.ஐ.ஏ. வெளியிட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் ஒரு தொழில்நுட்ப தந்திரம் செய்யப்பட்டதாக உளவுத்துறை வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. குறிப்பிட்ட விமானத்தில் இருந்து வருவது போன்ற போலியான சிக்னல்களை சி.ஐ.ஏ. ஏற்படுத்தியதாகவும், அந்த சிக்னல்களின்படி விமானம் ஆப்கானிஸ்தானுக்கு மேலாக அமெரிக்க ராணுவ நடவடிக்கை ஒன்றுக்காக பறந்து கொண்டிருப்பது போன்ற செயற்கைத் தோற்றம் ஏற்படுத்தப் பட்டிருந்ததாகவும் கூறுகிறார்கள்.
அடிக்கடி இந்த விமானம் தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பதும் யாவரும் அறிந்த ஒன்றே. இதனை ஈரானிய ராடர்களும் கண்டறிய முடியாது. ஏன் எனில் ஈரான் நாட்டு ராடர் திரைகளில் அது ஆப்கானிஸ்தானுக்கு மேலாக பறப்பது போலவே தோன்றியிருக்கும். ஆனால் இதனை ஈரான் எவ்வாறு கண்டறிந்தது? அதுமட்டுமல்லாது துல்லியமாக அதனை சுட்டு பாரிய சேதம் எதுவும் இன்றி அதனைக் கைப்பற்றியும் உள்ளது .
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானிலுள்ள ஐ.எஸ்.ஏ.எஃப் (International Security Assistance Force), இதே விமானம் பற்றி தமது செய்திக் குறிப்பில் ஒரு தகவல் வெளியிட்டிருந்தது. மேற்கு ஆப்கான் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ற்Q௧70, காலநிலை காரணமாக திசைமாறிச் சென்றுவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் குறிப்பு வெளியாவதற்கு முன்னரே, விமானம் ஈரானால் கைப்பற்றப்பட்டதாக இப்போது தெரிய வருகின்றது. இந்தத் திசைதிருப்பலை ஈரான் எப்படிக் கண்டுபிடித்தது என்பதும், பறந்து கொண்டிருந்த விமானத்தை எப்படி தரைக்கு கொண்டு வந்தது என்பதும் இந்த நிமிடம்வரை மர்மமாகவே உள்ளது! அமெரிக்கா நினைப்பது போல ஈரான் நாடு இல்லை என்பது மட்டும் தற்போது புரிந்திருக்கும்!
அதிர்வு
தமிழக சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி மீது எப்.ஐ.ஆர்.
திருச்சையைச்சேர்ந்த டாக்டர் ராணி, மு.பரஞ்சோதியை தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்றும், அவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்றும், தன்னிடம் பணம், நகைகளை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார். என்னுடனான தொடர்பை துண்டித்துவிட்டார் என்று புகார் கூறினார். இந்த புகாரை பரஞ்சோதி மறுத்தார்.
இதையடுத்து ராணி, பரஞ்சோதி தனது கணவர் என்பதற்கும், தான் பரஞ்சோதியின் மனைவி என்பதற்கும் உரிய ஆதாரங்களை போலீஸ் ஸ்டேஷனில் சமர்ப்பித்தார்.
இதன்பிறகும் பரஞ்சோதி மீது நடவடிக்கை எடுக்காததால், ராணி கோர்ட்டுக்கு சென்றார்.
திருச்சி மே.எம். நீதிமன்றத்தில் ராணியின் மனு மீதான விசாரணை நடந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, பரஞ்சோதி மீது இன்னும் வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அவர் மேலும், நாளை (9. 12.11) பரஞ்சோதி குறித்து விசாரணையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
தீர்ப்புக்கு பின்னர் போலீசார், பரஞ்சோதி மீது 294B, 323, 406, 420, 493, 506/2 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகத்தின் எதிர்காலம் அர்த்தமற்றுப் போகப்போகிறது - பான் கி மூன்
காலநிலை மாற்றம், வெள்ளப் பெருக்கு, துருவப் பனிமலைகள் கரைதல், கடல்மட்ட உயர்வு என்று புவிமீது நடைபெறும் தாக்கங்கள் எல்லை மீறிவிட்டன. இந்தப் புவி மீது மக்கள் வாழ்வே அர்த்தமற்று போகப்போகிறது. மக்கள் மனதில் வளர்த்துள்ள கனவுகளை எல்லாம் இந்தப் பேரழிவு குலைத்து நாசம் செய்யப்போகிறது.
புவியின் எதிர் காலம் குறித்த நம்பிக்கை மொழிகளை ஐ.நாவால் வழங்க முடியாத அவலம் இருப்பதை அவருடைய உரை சுட்டிக்காட்டியது. அதேவேளை உலகப் பொருளாதார நெருக்கடியும் மக்களுடைய கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்ட மறுக்கவில்லை. மக்கள் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராமல் வரும் இயற்கைப் பேரழிவுகள் மனித குலத்தின் ஆனந்தமான கனவுகளையே சிதைத்துவிட வல்லது.
புவியை அதிகமாக வெப்பமாக்கும் நாடுகள் அதனுடைய பாதிப்பை அடைவதற்கு முன்னரே ஏழை நாடுகளை அது பாதித்துவிடுகிறது. தாய்லாந்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அந்த நாட்டின் ஏழு முக்கிய பகுதிகளை வெள்ளத்தில் ஆழ்த்தியது.
ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள பஞ்சமும் வரட்சியும் முழு உலகுக்குமே சவாலாகியுள்ளது. எனவே அழகான இந்த உலகத்தை பயன்படுத்தி ஒரு தனிமனிதன் தன்னுடைய கனவுகளை நிறைவேற்ற முடியாதளவுக்கு எங்கும் இறுக்கம் நிறைந்து கிடக்கிறது. இப்படியாக புவியை வெப்பமாக்கி, போரால் சூடாக்கி, நாசம் பண்ணும் அரசியல் தலைவர்களும், உலக அரசுகளும் உலக மக்களுக்கு வரப்பிரசாதமா இல்லை சாபக்கேடா என்ற கேள்விக்கு ஐ.நா செயலர் இப்போதுதான் சரியான பதிலை கொடுத்துள்ளார். ஆனால் வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது, அவருடைய பேச்சு சுடலை ஞானமே என்பதை மறுக்க இயலாது.
பென்னி குயிக் படத்திறப்பு விழா தங்கர்பச்சான் ஆவேசப்பேச்சு
தென் மாவட்ட தமிழர்கள் வறட்சியில் படும் கஷ்டத்தையும் அதே நேரம் பெரியாறு அணையின் தண்ணீர் கடலில் அநியாயமாக விழுந்து வீணாவதையும் , ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பார்த்த பென்னி குயிக் என்ற வெள்ளைக்கார மனிதன் மனம் நெகிழ்ந்து, அன்றைய ஆங்கில அரசின் எதிர்ப்பையும் மீறி , இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துகளை விற்று, தென் மாவட்டத் தமிழர்களைக் கொண்டு சென்று ஏராளமான ஆபத்துகளையும் உயிரிழப்புக்களையும் சந்தித்து தனது பணம், பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பிணம் இரண்டையும் இணைத்து இழைத்துக் கட்டிய அணை முல்லைப் பெரியாறு அணை.
பென்னி குய்க் உருவ படத்தை திறந்து வைத்த இயக்குனர் தங்கர்பச்சான் செய்தியாளர்களிடம் பேசும்போது,
‘’ ஓட்டு பிச்சைக்காக அணை பலவீனமாக இருக்கிறது என்ற பொய்யான பிரச்சாரம் செய்கிறது கேரள அரசு.
அணை பலவீனமானால் அதை சரி செய்து கொள்ளலாம், ஆனால் மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவு பவலவீனமானால் அதை சரி செய்ய முடியாது என்று கேரள அரசை எச்சரித்தார்.
கேரளாவில் எப்படி அணைத்துக் கட்சியும் ஒன்று சேர்ந்து போராடுகிறதோ அதே போல் தமிழகத்திலும் அணைத்துக் கட்சிகளும் ஒன்று சேரர்ந்து முல்லை பெரியாறு விஷயத்தில் போராட வேண்டும்’’ என்றார்.
அவர் மேலும், முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக் பற்றிய குறிப்புகளை பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் கேரள அரசுக்கும் வேண்டுகோள் வைத்தார்.
யாழில் இடம்பெற்ற மாமனிதர் ரவிராஜின் ஐந்தாவது ஆண்டு நினைவு நிகழ்வு!
இந்த நிகழ்வில் வன்னியில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் சுயதொழிலை ஊக்கிவிக்கும் முகமாக உதவித் தொகைகளும் வழங்கப்பட்டது.
குறிப்பாக ஏழ்மையிலும் யுத்தத்திலும் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திருமதி பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன் , யாழ்.மாநாகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் மரிய கொறற்றி மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னர் சாவகச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மாமனிதரும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினருமான அமரர் நடராஜா ரவிராஜனின் 5 வது ஆண்டு நினைவு தினம் அரச புலனாய்வாளர்களினால் குழப்பப்பட்டது குறிப்பிடத்தகது.
ஜெர்மனி, பிரான்ஸ் தீர்வுகள் வேண்டாம் : ஐரோப்பிய கவுன்சில் தலைவர் புதிய பரிந்துரை
அந்தத் திருத்தங்களுக்கு, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் தங்கள் பார்லிமென்ட்டில் அங்கீகாரம் அல்லது பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இதற்கு காலம் ஆகும். ஆனால், புதிய தீர்வுகள் மார்ச் மாதத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என, இரு நாடுகளும் கால வரையறை செய்துள்ளன.
இந்நிலையில், நேற்று ஐரோப்பிய கவுன்சிலின் அறிக்கை ஒன்றை ஐரோப்பிய பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. அதில், இரு நாடுகளின் புதிய தீர்வுகளுக்குப் பதிலாக, ரோம்பி, நிதி ஒப்பந்தம் ஒன்றை பரிந்துரைத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற நாடுகளின் பார்லிமென்ட் அங்கீகாரம் அல்லது பொது ஓட்டெடுப்பு தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், லண்டன் மாநகரின் நிதி நலன்களுக்குப் பாதுகாப்பு கிடைக்காத வரை, புதிய தீர்வுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
அதேபோல், யூரோ கடன் மீட்புக்காக, சர்வதேச நிதியத்திற்கு (ஐ.எம்.எப்.,) கூடுதல் நிதி எதுவும் அளிக்க முடியாது என, அமெரிக்க நிதியமைச்சர் டிமோதி கெய்த்னர் கூறியுள்ளார்.
இராணுவம் கடத்தி விசாரிக்க அனுமதி உண்டா.?
இன்று வரை இளைஞரைக் கடத்திச் சென்றதாக படையினர் ஒத்துக் கொண்டதில்லை. மாறாக கடத்தியதாக முறைப்பாடு கொடுப்பவன் உயிரோடு அடுத்த நிமிடம் வாழ்வதில்லை. இது காலம் காலம் அனுபவத்தில் உள்ள அரக்கர்களின் அடக்குமுறைகள்.
இன்று இளைஞரைக்கடத்திச்சென்றாதாகப்படையினர் ஒத்துக்கொண்டு உள்ளனராம். இந்தச்சம்பவம் முல்லைத்தீவில் நடந்தேறியது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை என்ற எங்கள் தாயக மண்ணில் - காட்டு விநாயகர்புரம் என்ற நில வளம் நீர் வளம் தென்னை பனை மா என இளமை கொடுத்த பகுதியில் மணல் ஏற்றிச் செல்லும் தொழிலில் ஈடுபட்டுவந்த 23 வயதுடைய கணேசமூர்த்தி ரதன் என்ற இளைஞர் என்பவரை படையினரால் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு (06.12.2011) 7 மணியவில் அவருடைய வீட்டுக்கு வந்த சிலர் தம்மை தீவிரவாத தடுப்புப் பிரிவினர் எனக்கூறி மிரட்டத்தனமாக தனது மகனை அழைத்துச் சென்றதாக கடத்தப்பட்டவரின் தாய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு காவல்துறைக்கு முறைப்பாடு செய்தபோது, முல்லைத்தீவு காவல்துறையினர் தீவிரவாத தடுப்புப் பிரிவினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,
கணேசமூர்த்தி ரதன் என்பவர் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தற்போது வவுனியா யோசப் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவை இப்படி இருக்கயில் இந்த விசாரணைகள் என்பது யாருக்கு அதிகளவு உரிமை..?
காவல் துறை என்ற அர்த்தங்கள் என்ன என்பது இலங்கையில் மட்டும் இல்லை. அவை ஒரு காவாலித்துறையினர் என்ற அர்த்தங்களுக்கு பொருள் கொடுக்கும் அளவுக்கு தங்களை தாங்களே அசிங்கப்படுத்திக்கொண்டு வருகின்றனர்.
சரி -
இராணுவம் என்றவர் எதற்கு என்ன பணி...?
இராணுவம் என்பது அடக்கு முறைகளாகிய ஆயுதங்களால் எப்போதும் எதிரியுடன் போர் செய்யும் எல்லைக்காவல்ப்படைகள் என்று தானே உலகத்தில் மதிக்கப்படுகின்றனர்.
வீசாரணை என்பது இராணுவத்தின் கடமையில் உள்ள பொறுப்பான முறை அணுகலா..?
இராணுவம் ஏன் எதற்கு ..?
காவல் துறை எதற்கு..? என்ற கேள்விகள் இல்லாத நாடு இலங்கை என் அரக்க நாட்டைச்சாரும் தானே...?
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவொன்று சிறிலங்கா வருகை
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலைமை தொடர்பாக நேரில் ஆராய்வதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.
அடுத்த மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலைமை தொடர்பாக நடத்தப்படவுள்ள விவாதம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கே இந்தக் குழுவினர் கொழும்பு வந்துள்ளதாக சிறிலங்கா அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குழுவினர் சிறிலங்கா அதிபரின் மனிதஉரிமைகளுக்கான சிறப்பு தூதுவரும், அமைச்சருமான மகிந்த சமரசிங்கவைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
இதன்போது போருக்குப் பிந்திய சூழலில் மனிதஉரிமைகளை பாதுகாப்பதற்கும், ஊக்கவிப்பதற்கும், புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கும் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தேசியத் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதாக மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் றிச்சட் ஹொவிற், டேவிட் மாட்டின், அன்னா கோமிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை கொழும்பு வந்த இவர்கள் நாளை புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
இந்தக் குழுவினர் வடக்கின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணங்களை மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்து வருகின்றனர்.
இன்று மெனிக்பாம் இடைத்தங்கல் முகாமுக்குச் செல்லும் இவர்கள், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
தனது பிறந்த நாளை விளம்பரம் செய்த அரசியல் வாதி.!.
எங்களுடைய நாட்டில் பலவிதமான அரசியல்வாதிகள் தோ்தல் மூலம் தெரிவு செய்த வாதிகளே மக்களை அடிமைகளாக நடத்தி, தங்கள் அரசியல் பலத்தை நிலைநாட்டுவதிற்கு எனப் பலவிதமான அரசியல்வாதிகள் நம் நாட்டிலும் வாழ்கின்றனர்.
ஆனால் மிகவும் வேதனை தரும் செய்தி தான் இது எனினும் அர்த்தங்கள் எப்படி என்பது ஊடகத்தின் உதவியைத்தவிர மக்களுக்கு எந்த வகையாலும் நன்மை பயக்கப்போவதில்லை.
அந்த வகையில் தமிழ் அரசியல்வாதிகள் என்று சொல்லும்போது, அவர்கள் ஒரு அடி எடுத்து வைத்தாலும் அதில் தானும் தான் சார்ந்தவர்களுக்கும் ஏதாவது பயன் உள்ளதா.?
என்பதை நன்கு ஆராய்ந்த பின்பே அவர்களின் செயற்பாடுகள் அமையும். அல்லவா..?
அந்த வகையில் திருகோணமலை நகரசபையின் தலைவர் க.செல்வராயாதான் விதிவிலக்கானவராக விமர்சிக்கப்படவுள்ளார்.
அவருடைய 56 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருக்கோணமலை பேருந்தெரு விக்கினேசுவரா மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் க.பொ.த உயர்தர மாணவர்கள் 4 பேருக்கு அவருடைய வேதனப் பணத்தில் என்று சொல்கின்றார் அவர் வேலை என்ன ..?
மக்கள் அரசியல்.
அவை யாருடையது என்பதை விட தனது பணத்தையாம் அதைத்தான் இரு சில்லு மிதி வண்டிகளை அன்பளிப்புச் செய்துள்ளாராம்.
இப்படி செய்வது எந்த வகையில் தென்படுகின்றது...?
இந்தச் செயற்பாடு பாராட்டத்தக்கதாக இருந்தாலும், எமது அரசியல்வாதி என்ற வகையில் இதிலும் ஒரு உள் நோக்கம், சுயநலம் இருப்பது தெட்டத்தெளிவாக சந்தேகம் உள்ளது அல்லவா...?
சரி நாங்கள் இதை சந்தேகிப்பதின் விம்பத்தையும் பாருங்கள்..
இவ்வாறு இரு சில்லு மிதி வண்டிகளை அன்பளிப்புச் செய்த நகரசபைத் தலைவர்
அங்கு உரையாற்றினார்.
இது தனது பிறந்த நாளை வெகு விமர்சியாக செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அரங்கை நிறப்ப பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர் உதவி ஆட்கள் முன் சிறப்பித்தாராம். அவர் உரை எப்படி இருந்தது தெரியுமா...?
நாம் தேசிய பற்றுள்ளவர்களாக விளங்க வேண்டும்.
நாம் தமிழர் எமது மொழி தமிழ் என்ற எண்ணம் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும்.
நாம் சத்தியத்தின் வழி நடப்போம்.
அது என்றோ ஓர் நாள் எமக்கான பாதையை பெற்றுத்தரும்.
வறுமை வளமின்மைகள் இருப்பினும் அதையும் தாண்டி படைக்கும் சாதனைக்கு சொந்தக்காரர்களாக நீங்கள் மாற வேண்டு்ம்.
வறுமை நிலைக்குப் பயந்து விடாதே
திறமை இருக்கும் மறந்துவிடாதே என்றார் பட்டுக்கோட்டையார்.
இருந்தும் வறுமையிலும் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கின்ற எமது மாணவச் செல்வங்களை தூக்கி விடவேண்டிய கடமை நம் எல்லோரிடமும் இருக்கவேண்டும்.
பின்தங்கிய அல்லது ஒதுக்கப்படுகின்ற இனக் குடும்பங்களில் இருந்துதான் உலகம் வியங்கும் மனிதர்கள் உருவாகியிருக்கின்றார்கள்.
அங்கு விளைகின்ற சாதனைக்கு விலை அதிகம்.
ஆகவே மாணவர்களே ..
நீங்கள் சாதனைபடைக்கின்றவர்களாக மாறவேண்டும்.
அத்தகைய பெருமைக்குரிய பதிவுகள் இந்தபாடசாலைக்குண்டு என நான் நினைக்கின்றேன்.
அது செழுமை பெற வேண்டும் எனவும் வாழ்த்துகின்றேன் என்றார்.
இப்படி உரை நிகழ்த்தியது தனது பிறந்த நாளில் தான். என்ற போது சரி அதை விடுவித்த மனதுடன் கவனித்தால்..?
இரு சில்லு மிதி வண்டிகளை அன்பளிப்பு செய்ய தேர்வு செய்த அதிபர் இணைந்த ஆசிரிய குழுவில் கல்விக்கு தரம் பார்த்து நான்கு பேருக்கு மட்டும் அன்பளிப்பை செய்தார்.
நிகழ்வு.
உண்மையில் மக்களுக்காகப் பணியாற்றுவதாயின், மாணவர்களுக்கு அன்பளிப்புப் பொருட்கள் வழங்குவதாக இருந்தால் அங்கு சென்று நான்கு மாணவர்களுக்கு உங்கள் அன்பளிப்புக்களை வழங்கியிருக்க வேண்டும்.
அதைவிடுத்து பத்திரிகையாளர்களை அழைத்துப் படங்களுக்குப் முகம் கொடுத்து செய்யும் இவ்வாறான அன்பளிப்புக்கள் சுயநலத்திற்காகச் செய்யப்படும் அன்பளிக்காகவே இருக்கும் அல்லவா...?
உண்மையில் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் அன்பளிப்புச் செய்வதாயின் ஒரு கையால் வழங்குவது மறுகைக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதே.
ஆனால் ஊடகங்களுக்கு அறிவித்து, நான்கு துவிச்சக்கர வண்டியுடன் உங்களை விளம்பரப்படுத்தும் அன்பளிப்புக்கள் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை.அத்துடன் பத்திரிகை மற்றும் அனைத்து ஊடகத்தின் கண்ணுக்குள் தன்னை பெரும் தன்மையான அரசியல் வாதி என விளம்பரச்சிரிப்பை விதைப்பது போல் தானே உள்ளது.?
சரி இந்தச்செயலானது தனது பிறந்த நாளில் தான் செய்ய வேண்டுமா..?
எத்தனையோ ஆயிரக்கணக்கில் தமிழின உறவுகள் இறந்து விட்டனர் இன்றும் அவர் எதுகும் இல்லாத அனாதைகளாக தவிக்கினறர். இதை இந்த அரசியல் வாதி அறியாத வெளி நாட்டுக்காரா..?
இப்படி தவிக்கும் உள்ளங்களுக்கு ஒரு நேர உணவுகள் இல்லாது கண்ணீர் விட்டுக்கதறிக்கொண்டு சாகின்றனர்.
இதை இது வரை அறியாத அரசியல் வாதி தன்னம்பிக்கை ஊட்டி விடுகின்றார்.
நாட்டை சுறண்டு வது சிங்களவன் அல்ல தமிழின அரசியல் வாதிகளும் நாட்டில் உள்ள குடிகளை அடக்கி அழிப்பதில் சிங்களவன் என எம் உறவும் நம்பியே ஏமாறுவது காலத்தின் சாபங்களாக சித்திரங்களாகவே வெளி வருகின்றது.
தமிழக தலைமைச் செயலாளரிடம் விளக்கம் அளிக்க டேம் 999 இயக்குநருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி டேம் 999 என்ற பெயரில் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரியான சோஹன் ராய் என்பவர் படம் எடுத்துள்ளார். இந்தப் படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து படத்தைத் திரையிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். மேலும் தமிழக அரசும் படத்தைத் திரையிட தடை விதித்தது. இதை எதிர்த்து சோஹன் ராய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தப் படத்தை ஏன் தடை செய்யக் கூடாது என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்குமாறு சோஹன் ராய்க்கு உத்தரவிட்டனர்.
மேலும் இந்தப் படத்தை ஏன் வெளியிடக் கூடாது என்பது குறித்து தமிழக அரசும் தனது விளக்கத்தை வருகிற 16ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இன்று வரை கிடைத்த கணக்கு..!
அரக்க வெறியர்களால் பல்லாயிரம் மக்களை கொன்று குலைத்த பின்னர் வடக்கில் 707 சிறுவர்கள் காணாமற்போயுள்ளதாக யுனிசெவ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவர்களில் 374 ஆண் சிறுவர்களும், 333 பெண் சிறார்களும், அடங்குகின்றனர் எனவும், காணமற் போனவர்களில் 116 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்டவர்களில் 31 சிறுவர்கள் அவர்களது குடும்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், 22 சிறுவர்களை குடும்பத்தினருடன் இணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் யுனிசெவ் கூறியுள்ளது.
மேலும், 63 சிறுவர்களுடைய பெயர் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இந்தச் சிறுவர்களை அடையாளப்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் யுனிசேவ் அமைப்புத் தெரிவித்துள்ளது.
2011 ஆடி மாதம் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 16 – 18 வயதிற்குட்பட்ட 676 சிறுவர்கள் காணமற்போயுள்ளனர்.
இதேவேளை காணமற்போன சிறுவர்களின் மொத்த எண்ணிக்கையில் 30 சதவீதமானவர்கள் யுத்தம் முடிவுற்ற பின்னர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இறுதியாகக் காணப்பட்டதாகவும், 60 வீதமான சிறுவர்கள் விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் காணமற் போயுள்ளதாகவும், பதிவாகியுள்ளதாக யுனிசெவ் சுட்டிக்காட்டியுள்ளது.
மேற் கூறப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும் யுனிசேவ் அமைப்பினால் மட்டும் இதுவரை சேகரிக்கப்பட்டு வடபகுதி மீள் இணைவாக்க அலகிடம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காதல் பிரச்சினையால் துப்பாக்கிச் சூடு! காதலன் உட்பட ஒரே குடும்பத்தில் 3பேர் பலி
இடதுசாரிக் கட்சியின் விவாதம் தொடர்கதையா...?
ஆர்பாட்டங்களும் அக்கிரமும் அடவாடித்தனமும் குறையாத நாடு என்ற பட்டியலில் இலங்கையும் முதன்மை அடைகின்றது.
அந்த வகையில் இன்று எதிர்கட்சியை விக்கர பாகு எதிர் வாதிடும் மோதல் தான் என்ன..?
அரசுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கும் தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது எனவும் இதில் தமிழர்கள் பிரச்சினைகள் எது வும் உள்வாங்கப்படவில்லை என்பதால் அவ்வாறான ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணிப்பதற்கு இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன எனவும் தெரிய வருகிறது.
இசையமைப்பாளர் தேவா, எல்.ஆர்.ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது
மஸ்கட்டில் உள்ள குரும் அரைவட்ட அரங்கில், மஸ்கட் தமிழ் சங்கம் சார்பாக 'கீதம் சங்கீதம்' என்ற மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் வகுப்பு மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. மஸ்கட் தமிழ் சங்க தலைவர் ஜானகிராமன் தலைமை உரையாற்றினார். தமிழ் சங்கத்தின் கலாச்சார மற்றும் இலக்கியச் செயலாளர் பஷீர் முகமது நிகழ்ச்சியில் தொகுப்பு உரையாற்றினார். தமிழ் சங்க துணைத் தலைவர் அகமத் ஜமீல் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர் கார்த்திக், பாடகிகள் சுசித்ரா, சைந்தவி, சென்னை சாதகப் பறவைகள் இசைக் குழுவினர் இணைந்து 4 மணி நேரம் திரை இசைப் பாடல்களை பாடி அரங்கில் கூடிய இருந்த 6,000 தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர்.
விஜய் டிவி புகழ் சிவகார்த்திகேயன் தனது வழக்கமான நகைச்சுவை மற்றும் மிமிக்ரியுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் தேனிசைத் தென்றல் தேவா பாடிய 'கவலைப்படாதே சகோதரா' என்ற பாடல் ரசிகர்களிடையே கைத்தட்டலை பெற்று தந்தது.
எல்.ஆர். ஈஸ்வரி பாடிய 'காதோடுதான் நான் பாடுவேன் என்ற பாடல் அரங்கில் இருந்த மூத்த ரசிகர்களுக்கு இளமைக்கால நினைவுகளை ஏற்படுத்தியது. அதன்பிறகு பாடப்பட்ட 'எலந்தப் பழம்... எலந்தப் பழம்' பாடல் பார்வையாளர்களை குதுகலப்படுத்தியது. பாடகர்கள் கார்த்திக்கும், சுசித்ராவும் பாடிய பாடல்கள், இளம் பார்வையளர்களை ஆனந்தப்படுத்தியது.
சினிமா துறையில் இசையமைப்பாளர் தேவா மற்றும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரின் சாதனைகளை பாராட்டி மஸ்கட் தமிழ் சங்கம் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் விளையாட்டுச் செயலாளர் ரகுமுத்து குமார் நன்றியுரை வழங்கினார்.
Wednesday 7 December 2011
'உச்சிதனை முகர்ந்தால்'... - சிங்கள வெறியர்களால் சிதைக்கப்பட்ட ஒரு ஈழத்துச் சிறுமியின் கதை!
பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல் மடிந்த சோகங்கள் சொல்லி முடியாதவை.
அத்தகைய சோகக் கதைகளில் ஒன்றுதான் உச்சிதனை முகர்ந்தால் என்ற தலைப்பில் படமாக வருகிறது. தமிழ் உணர்வாளரும் காற்றுக்கென்ன வேலி போன்ற மாற்று சினிமா படைப்பாளியுமான புகழேந்தி தங்கராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
தமிழீழத்தில் சிங்கள ராணுவத்தால் சூறையாடப்பட்ட 13 வயது தமிழ்ச் சிறுமியின் கதைதான் இந்தப் படம். நீனிகா என்ற சிறுமி இந்த வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த தம்பதியர்களாக சத்தியராஜும் சங்கீதாவும் நடித்துள்ளனர். சீமான், நாசர், லட்சுமி ராமகிருஷ்ணன் என தேர்ந்தெடுத்த நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களைச் செய்துள்ளனர்.
ஈழத்தின் துயரங்களுக்கு இந்தியாவும் ஒரு காரணம் என்பது படத்தில் மறைபொருளாக சுட்டிக்காட்டப்பட்டிருப்பதால், இந்தப் படம் சென்சாருக்குப்போனபோது, ஏகப்பட்ட பிரச்சினைகள், வெட்டுக்களைச் சந்திக்க நேர்ந்தது. இறுதியில் யு ஏ சான்றுடன் வெளியாக அனுமதிக்கப்பட்டது.
இதையெல்லாம் விட மிக முக்கியம், இந்தப் படத்துக்கு வணிக சினிமாவில் முன்னணியில் உள்ள ஜெமினி பிலிம் சர்க்யூட் ஆதரவளித்திருப்பது. படத்தை தங்கள் பேனரிலேயே ஜெமினி நிறுவனம் விநியோகிக்கிறது.
வரும் 16-ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளி்ல் உச்சிதனை முகர்ந்தால் படம் வெளியாகிறது.
தன் இனத்துக்கு நேர்ந்து கொடுமைகளை திரும்ப நினைத்துப் பார்ப்பது, அந்த சோகத்தை நினைத்து கண்ணீர் விட மட்டுமல்ல, இனவிடுதலையின் அடுத்த நகர்வு குறித்த விழிப்புணர்வையும் கோபத்தையும் நீர்த்துப் போகாமல் இருக்கச் செய்யவுமே.
அந்த வகையில் உச்சிதனை முகர்ந்தால் தமிழர் வாழ்வில் முக்கிய சினிமாவாக அமையும் என்கின்றனர் தமிழ் உணர்வாளர்கள்!
பதினோரு மாத இடைவெளிக்குப் பின் பிரசாந்துடன் கலக்க வரும் வடிவேலு!!
பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மம்பட்டியான் படத்தில் வடிவேலு மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
நீண்ட காலம் அதிமுக அனுதாபியாக இருந்த போதும், பின்னர் கலைஞர் பக்கம் வந்த பிறகும், இருக்கிற இடம் எதுவாக இருந்தாலும் மிக விசுவாசமானவர் என்ற பெயர் தியாகராஜனுக்கு உண்டு.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வடிவேலுவை தங்கள் படங்களில் நடிக்க வைக்கக் கூட எந்த இயக்குநரும் முன்வராத நிலையில், அவரை வைத்து படம் எடுக்கக் கூடாது என சில அதிகாரமிக்கவர்கள் வாய்மொழி உத்தரவு போட்டிருந்தும்கூட, அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் வடிவேலுவை தான் இயக்கும் மம்பட்டியான் படத்தில் தொடர வைத்தார் (திமுக ஆட்சியிலேயே தொடங்கப்பட்ட படம் இது).
இப்போது வரும் டிசம்பர் 16-ம் தேதி மம்பட்டியான் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்தில் பிரசாந்த் உடன் படம் முழுக்க நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் வருகிறார் வடிவேலு. ஒரிஜினல் படமான மலையூர் மம்பட்டியானில் கவுண்டமணி செய்த மைனர் வேடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசாந்தும் வடிவேலும் இணைந்து நடித்த வின்னர் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் பார்வையாளர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வடிவேலுவுடன் நடித்தது குறித்து பிரசாந்த் கூறுகையில், "மம்பட்டியான்’ல படம் முழுக்க என்னோடு வடிவேலு வருவார். இத்தனை நாள் இடைவேளைக்கும் சேர்த்து அன்லிமிடெட் ஃபுல் மீல்ஸ் விருந்து வெச்சிருக்கார் மனுஷன். 'சிங்கம்தான்யா’னு வாய்விட்டுப் பாராட்டுற அளவுக்கு மிரட்டி எடுத்திருக்கார்," என்றார்.
நாகிரெட்டி நினைவு இலவச மருத்துவமுகாம்... ஏவி எம் சரவணன் பங்கேற்பு
கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த மருத்துவ முகாம் விஜயா மருத்துவமனையில் நாகிரெட்டியின் பிறந்த நாளன்று நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு விழா என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஏவி எம் சரவணன் பேசுகையில், "நாகிரெட்டியின் பல்வேறு சேவைகள் மற்றும் சாதனைகளை நினைவு கூர்ந்தார்.
50 மருத்துவர்கள் பங்கேற்ற இந்த முகாமில் 850க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. கலந்து கொண்டவர்களுக்கு எக்ஸ் ரே, இசிஜி என அனைத்தும் இலவசமாகவே எடுத்துத் தரப்பட்டது.
நிகழ்ச்சியில் நாகிரெட்டி அறக்கட்டளையின் நிர்வாகி பி வெங்கட்ராம ரெட்டி, சிஇஓ பி பாரதி ரெட்டி, பொது மேலாளர் ராம்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழர் பிரச்சினை உள்வாங்கப்படாத ஐ.தே.கவின் இனவாத எதிர்ப்புப் பேராட்டம்
அரசுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கும் தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது எனவும் இதில் தமிழர்கள் பிரச்சினைகள் எதுவும் உள்வாங்கப்படவில்லை என்பதால் அவ்வாறான ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணிப்பதற்கு இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன எனவும் தெரியவருகிறதுஐக்கிய தேசியக் கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் சிரால் லக்திலக்கவின் இல்லத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் இரவு இடம் பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்றுள்ளன. கட்சித் தலைவர்கள் சிலர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பும் செய்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் கொள்கை இன வாதத்தை அடிப்படையாகக் கொண் டுள்ளது என இதன்போது கடும் எதிர்ப்பை வெளியிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களான விக்கிரம பாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய ஆகியோர் தமிழர் விடயங்க ளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் களில் முதன்மை வகிக்க வேண் டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் விக்கிரமபாகுக்கும் இடையே இக்கூட்டத்தின்போது கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனால் சஜித் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
"சிங்களபௌத்த கூட்டமே அங்கு நடைபெற்றது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து விட்டு கூட்டத்திலிருந்து வெளியேறினேன்'' என்று ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
அதேசயம், எதிர்க்கட்சிகளின் இந்த கலந்துரையாடல் தொடர்பில் கலாநிதி விக்கிமபாகு கருணாரட்ன கூறியவை வருமாறு:
ஐக்கிய தேசியக் கட்சி, சிங்கள இனவாதப் போக்கைக் கடைப்பிடிக்கின்றது. அதனை முன்வைத்தே அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவே அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அரசியல் தீர்வு விவகாரம், மீள்குடியேற்றம் உட்படத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகிய விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என நான் உறுதியாகக் கூறினேன்.
சரத் பொன்சேகாவின் விடுதலையைப் பிரதானமாகக் கொண்டே நாம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்தக் கூட்டத்தில் கூறினார்.இதற்கு நான் கடும் எதிர்ப்பை வெளியிட்டேன். இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டால் அது சிங்கள இனவாத ஆர்ப்பாட்டமாகவே கருதப்படும் எனச் சுட்டிக்காட்டினேன்.
எனது கருத்தை ஏற்க மறுத்த சஜித் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். அவரும் ஜாதிக ஹெல உறுமயவின் அரசியல் கொள்கையைக் கடைப்பிடித்தே செயற்படுகின்றார் என்று நான் சாடினேன்.
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே ஐக்கிய தேசியக் கட்சிக்கு அமோக ஆதரவு வழங்கியுள்ளனர். அதனை மறந்து பிரதான எதிர்க்கட்சி செயற்படக் கூடாது.
அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் தமிழர் விவகாரங்களும் உள்ளடக்கபட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு என்றும் நான் வலியுறுத்திக் கூறினேன்.
இந்தக் கூட்டத்தின்போது, சரத்பொன்சேகாவின் விடுதலைக்கு உதவுமாறு கட்சித் தலைவர்களிடம் அனோமா பொன்சேகா கோரிக்கை விடுத்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் எனது கருத்தை ஆதரித்துக் கருத்து வெளியிட்டனர் என்றார் விக்கிரமபாகு.
இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன், ஐதே.க. உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, புத்திக பத்திரண,ரோஸி சேனநாயக்க மற்றும் அர்ஜூன ரணதுங்க எம்.பி. உட்பட பல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
முல்லைக் கடலில் காவியமான கடற்கரும்புலிகள் நினைவு நாள் இன்று
இத்தாக்குதலில் லெப்.கேணல் கார்வண்ணன், மேஜர் யாழ்வேந்தன், மேஜர் இசைக்கோன் மற்றும் கப்டன் கானவன் ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
இக்கரும்புலி வீரர்களின் தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு கடுமையாக சேதமடைந்ததுடன் அதிலிருந்த கடற்படையினர் நால்வர் கொல்லப்பட்டும் மேலும் பலர் காயமடைந்திருந்தனர்.
விடுதலைப் போருக்கு வலுச்சேர்க்க கொண்டுவரப்பட்ட பொறுமதி வாய்ந்த போர்க் கருவிகள் மற்றும் வெடிபெருட்கள் இக்கரும்புலி வீரர்களின் உயிர்க்கொடையினால் பத்திரமாகக் கரைசேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழீழத் தாய் மண்ணின் விடிவிற்காய் தம்மை வெடியாக்கி வித்தாகிப் போன இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கத்தை செலுத்துகின்றோம்.
Labels
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா