Saturday 19 November 2011

தாய் அடித்து கொலை : வெறிபிடித்த வாலிபர் கைது

புதுக்கடை அருகே பெண்களிடம் அத்துமீறியதை கண்டித்த தாயாரை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கள்ளியோடு பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேலு. இவரது மனைவி பொன்நேசம்(65). இவர்களுக்கு 5 மகன்கள் உண்டு. குழந்தை வேலு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.


இதனால் பொன்நேசம் காய்கறி வியாபாரம் செய்து 5 மகன்களையும் படிக்கவைத்துள்ளார். இவரது மூத்த மகன் ரவி மற்றும் 2ம் மகன் பாபு ஆகியோர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள். 3ம் மகன் சுரேஷ் பெயிண்டராக உள்ளார். 4ம் மகன் ராஜன். இவர் டிபார்ம் படித்துள்ளார். 5ம் மகன் சேம். கூலித்தொழிலாளி.


இதில் ராஜன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. போதையில் இருக்கும் போது பெண்களிடம் தவறாக நடந்து கொள்வாராம். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் தனது அண்ணன் சுரேஷின் மனைவி குளிப்பதை ராஜன் மறைந்திருந்து பார்த்துள்ளார்.


இதை கண்டித்த சுரேஷை, ராஜன் கொடூரமாக அடித்து கொலை செய்தார். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அவரது தாய் பொன்நேசம் மகனுக்கு மனநிலை பாதிப்பு எனக் நீதிமன்றத்தில் மனு செய்தார்.


இது குறித்து விசாரணை நடத்திய கோர்ட் தண்டனையின்றி ராஜனை விடுவித்தது. சிறையில் இருந்து வெளிவந்த ராஜன் அடிக்கடி தனது தம்பி சேமிடம் தகராறு செய்துள்ளார். தன்னை அண்ணன் கொலை செய்து விடுவார் என பயந்த சேம் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.


சமீபகாலமாக ராஜன் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். அங்கும் உடன் வேலை பார்க்கும் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து மருத்துவனை நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்துள்ளது. மகனின் நடவடிக்கையால் மனவருத்தம் அடைந்த பொன்நேசம், ராஜனை கண்டித்துள்ளார்.


இதில் ஆத்திரமடைந்த ராஜன் நேற்று இரவு தாயார் பொன்நேசத்தை அடித்து கொலை செய்தார். பின்னர் அவரது சடலத்தை வீட்டு சமையலறையில் தூக்கில் தொங்க விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.


இதுகுறித்து உறவினர்கள் புதுக்கடை போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

பொன்நேசத்தின் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காப்புக்காடு பகுதியில் பதுங்கியிருந்த ராஜனை கைது செய்தனர். கொலைகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம்:நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்


பல நூற்றாண்டுக் காலமான தமிழினத்தின் மீது அரசியல் ரீதியாகவும், ஆட்சிமையின் வலிமையிலினாலும் பூட்டப்பட்ட அடிமைத் தளையை உடைத்தெறிய மாபெரும் மக்கள் விடுதலைப் போராட்டத்தை ஆயுதம் தாங்கி முன்னெடுத்து வெற்றிகண்டு சுதந்திரமான தமிழீழ தேசம் என்றொன்று உண்டு என்பதை உலக நாடுகளுக்குப் பறைசாற்றிய தமிழர் எழுச்சியின் தலைவர், தமிழ்த் தேசிய இனத்தின் முகமாகவும், முகவரியாகவும், அடையாளமாகவும், வீரமாகவும், உயிராகவும் திகழும் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26ஆம் நாளையும், தமிழினத்தின் விடுதலைக்காக தங்கள் இளமை, வாழ்க்கை, கனவு, உறவு என்றணைத்தையும் துறந்து, இன்னுயிர் ஈந்த தமிழின மாவீரர்களின் நினைவைப் போற்றும் நவம்பர் 27ஆம் நாளையும் உள்ளடக்கி நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை தமிழர் எழுச்சி வாரமாக தமிழின சொந்தங்களும், நாம் தமிழர் கட்சியினரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழர் விடுதலையையும், உரிமைகளையும் வென்றெடுக்க தமிழினம் தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் தமிழரின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வீர விளையாட்டுக்களான சிலம்பம், கபடிப் போட்டிகள், ஓவியம், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், மகளிர் பங்கேற்கும் கோலம் போடுதல், கும்மியாட்டம், நடனப் போட்டிகள், இளம் சிறார்களுக்கு திருக்குறள், பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

ஓவியம், கவிதை, பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் சிறந்த விளஙகுவோருக்கு ‘வெற்றித் தமிழர்’ விருதும், ‘வீரத் தமிழர் விளையாட்டு, அதில் வென்று மானத்தை நிலைநாட்டு’ என்ற முழக்கத்துடன் நடத்தப்படும் சிலம்பம், கபடி போன்ற வீர விளையாட்டுக்களில் சிறந்து விளங்குவோருக்கு ‘வீரத் தமிழர்’ விருதும், கோலம், கும்மியாட்டம் திருக்குறள், பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகளில் சிறந்து விளங்கும் இளையோருக்கும் பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.

‘கலையை மீட்பதும், கலைஞர்களைக் காப்பதும் நமது கடமை’ என்ற வழிகாட்டுதலுக்கு ஏற்ப, மாலைப் பொழுதில் கலை, இலக்கிய நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. இவற்றை நாம் தமிழர் கட்சியின் கலை பண்பாட்டுப் பாசறை ஒழுங்கு செய்யும். இதில் பறையாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் ஆகியன இடம் பெற வேண்டும். இதன் பிறகு மாலை 7 மணி முதல் பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். இக்கூட்டத்தில் உரையாற்றுவோர் இனத்தின் விடுதலைக்காக தம் இன்னியிரை ஈந்த மாவீரர்கள் போன்றுவோம் என்ற இலக்குடன் இக்கூட்டங்கள் நடைபெறும்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் 20ஆம் தேதி நாகை மாவட்டம் கீழ்வேளூர், 21ஆம் தேதி திருப்பெரும்புதூர், 22ஆம் தேதி இராமநாதபுரம், 23ஆம் தேதி சிவகங்கையிலும், 24ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலும், 25ஆம் தேதி கோவையிலும், தேசியத் தலைவர் பிறந்த நாளான 26ஆம் தேதி நாமக்கல் நகரிலும், மாவீரர் தினமான 27ஆம் தேதி கடலூர் மாவட்டம் மஞ்சக் குப்பத்திலும் பேரணி, பொதுக் கூட்டங்கள் நடைபெறும். 28ஆம் தேதியன்று தமிழர் எழுச்சி வார நிகழ்வு நாகை மாவட்டம் திருக்கடையூரில் நடைபெறுகிறது. இந்நிகழ்வுகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துகொள்கிறார்.

26ஆம் தேதி நாமக்கல்லிலும், 27ஆம் தேதி மஞ்சக் குப்பத்திலும் நடைபெறும் பேரணியில், தங்கள் மாவட்டத்தில் தமிழர் எழுச்சி வார விழாவை முடித்துவிட்ட நாம் தமிழர் தோழர்களும், தமிழ்ச் சொந்தங்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்.

நாளை 19ஆம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் உரையாற்றுகிறார். கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக மிக முக்கியத் தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும்.

'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படத்தைப் பார்த்த தமிழகத் தலைவர்கள்



மட்டகளப்பு சிறுமி புனிதவதியின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வை வைத்து உருவாக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த் திரைப்படமான உச்சிதனை முகர்ந்தால் வெளியாக தயாராக உள்ளது என்பது யாவரும் அறிந்ததே. வருகிற 25 ஆம் நாள் வெளியாகும் இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சி இன்று சென்னையில் நடைபெறுகிறது. இக்காட்சிக்கு தமிழ்நாட்டின் தலைவர்களான நெடுமாறன் ஐயா, திரு. வைகோ, திரு. நல்லக்கண்ணு, திரு. மகேந்திரன், திரு. கொளத்தூர் மணி, திரு. சீமான், திரு. தமிழருவி மணியன், திரு.தியாகு, திரு. மணியரசன், திரு. சு.ப.வீரபாண்டியன், திரு. வேல்முருகன், திரு. ஜவகருல்லாஹ், திரு. கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்கள் வருகை தர இருக்கிறார்கள்.



ஏற்கனவே நடைபெற்ற சிறப்பு காட்சியின் பொழுது தமிழச்சி தங்கப்பாண்டியன், கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் சல்மா, வன்னியரசு, ஓவியர் வீரசந்தானம், வேல்முருகன், பேராசிரியர் நாகநாதன், முன்னாள் மேயர் கணேசன் ஊடகவியலாளர்கள் டி.எஸ்.எஸ். மணி, அய்யநாதன் மற்றும் ஏகலைவன் ஆகியோர் கலந்துகொண்டதோடு புனிதவதியாக நடித்த சிறுமியின் உச்சியில் முகர்ந்து அவள் காட்டிய இயல்பான நடிப்பை மெய் சிலிர்த்து பாராட்டினார்கள். அதோடு, எம் இனத்தின் பிறந்த ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் என்பதையும் யூத இனப்படுகொலைக்கு பிறகு ஆயிரக்கணக்கான படங்கள் வெளியானது என்றும் முள்ளிவாய்க்கால் பெரும் சோகத்திற்கு பிறகு வரும் முதல் படம் இதுவே என்றும் இப்படத்தின் வெற்றி மட்டும் இன்னும் பல ஆயிரம் படைப்புகள் வர காரணமாய் இருக்கும் என்பதையும் தெரிவித்தார்கள்.



அது மட்டும் அல்லாது உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் முதல் முறையாக தமிழ்த் திரைப்படம் ஒன்றிற்கு பாடல் எழுதியிருக்கிறார். அவரின் ' உச்சிதனை முகர்ந்தால்' மற்றும் 'இருப்பாய் தமிழாய் நெருப்பாய்' பாடலும் தமிழக இல்லங்களிலும் அலைபேசிகளிலும் ஒழித்துக் கொண்டு இருக்கிறது என்பது சிறப்பம்சம். கவிஞர் கதிர்மொழி எழுதிய சுட்டிப் பெண்ணே பாடலின் காட்சி அமைப்பு அப்படியே மட்டக்களப்பை உங்கள் கண் முன்னே காட்டும் என்பதை நீங்கள் திரையில் பார்க்கு பொழுது தெரியும். அவரின் ஏனோ ஏனோ இது ஏனோ என்ற பாடல் எம் இனத்தின் சோகத்தை நாளே வரிகளில் சொல்லும் அளவிற்கு அழுத்தம் வாய்ந்தவை.



Global Media Invest As நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தை ஜெமினி வெளியிடுகிறது என்பது மிகவும் பெருமையான விடயமாகும். உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் இசை வெளியீடு லண்டன் மாநகரிலும் சென்னையிலும் நடைபெற்று மக்களின் பெரும் ஆதரவினை திரட்டி இருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.



100 படையினரைப் பழிவாங்கத் அரசு திட்டம் .நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை



2009 மே மாதம் முடிவுக்கு வந்த போரின் போது அனைத்துலகச் சட்டங்களை மீறிய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் பாதுகாப்பதற்காக, மேஜர் தரத்துக்கு மேற்பட்ட மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 100 வரையான சிறிலங்காப் படையினரை போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று சிறிலங்கா அரசாங்கம் தண்டிக்கவுள்ளது.



போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மோசமான குற்றச்செயல்களுக்கு இவர்களைப் பொறுப்புக் கூற வைப்பதன் மூலம், சிறிலங்கா அதிபரும் அவரது சகோதரரும் தமது ஆட்சியை அனைத்துலக நெருக்கடிகளில் இருந்து பாதுகாக்க முடியும் என்று நம்புகின்றனர்.



மென்போக்கான அறிக்கை ஒன்றை நல்லிணக்க ஆணைக்குழு சமர்ப்பிக்குமாயின், சிறிலங்கா அதிபர், பாதுகாப்புச் செயலர் உள்ளிட்ட மூத்த அரச மற்றும் இராணுவ அதிகாரிகளின் தனிப்பட்ட சொத்துகளை முடக்கவும், பயணத்தடைகளை விதிக்கவும் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் முடிவு செய்யலாம் என்று கருதப்படுவதால், ஒரு முற்போக்கான நடவடிக்கை போன்று காட்டும் வகையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தின் மூலம் அதிபர் செயலகத்தினால் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படவுள்ளது.



நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை திருப்திகரமானதாக அமையாது போனால், சுதந்திரமான- நம்பகம் வாய்ந்த விசாரணைகளுக்கு அனைத்துலக அழைப்பு விடுக்கப்படும் என்று அண்மையில பிரித்தானிய வெளிவிகாரப் பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் கூறியிருந்தார்.



அமெரிக்க, அவுஸ்ரேலிய, கனேடிய வெளிவிவகார அமைச்சர்களும் இதே கருத்தையே வலியுறுத்தி வருகின்றனர்.



இந்தநிலையில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் பணிப்பின் பேரில், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வு ஆலோசகர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவும் அவரது சிறப்புப் பிரிவு உதவியாளர்களும் சனல்-4 வெளியிட்ட ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் மற்றும் உலகத்தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்ட விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேசை விசாரணை செய்யும் காட்சி அடங்கிய காணொலி ஆகியவற்றில் காணப்படும் சிறிலங்காப் படையினரை அடையாளம் காணும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.



மனிதஉரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் வகையில் குற்றம்சுமத்தப்படவுள்ள படையினரில் இவர்களும் உள்ளடக்கப்படவுள்ளனர்.



நல்லிணக்க ஆணைக்குழு தமது அறிக்கையில் காணொலிகளில் அடையாளம் காணப்பட்ட இந்தப் படையினரை சட்டத்தின் முன் நிறுத்த பரிந்துரை செய்யவுள்ளது.



இதன்மூலம் சனல்-4 உள்ளிட்ட ஊடகங்கள் சிறிலங்காவுக்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள முடியும் என்று மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நம்புகிறது.



இராணுவக்காவலில் இருந்தபோது காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கு இலவசமாக வீடு மற்றும் கொடுப்பனவுகளை வழங்கவும் ஆணைக்குழு பரிந்துரை செய்யவுள்ளது.



காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்வதில் சிறிலங்கா அரசாங்கம் எந்தளவுக்கு மோசமாக நடந்து கொண்டது என்பதை நல்லிணக்க ஆணைக்குழு நன்றாகவே அறிந்துள்ளது.



தீவிரவாத அமைப்பு ஒன்றின் பிடியில் இருந்து பெரும் எண்ணிக்கையான பொதுமக்களை வெற்றிகரமாக மீட்டெடுத்தாக சிறிலங்கா இராணுவத்துக்கு நல்லிணக்க ஆணைக்குழு புகழாரம் சூட்டவுள்ளது.



அறிக்கையின் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இராணுவத்தில் உள்ள கடும்போக்காளர்களை திருப்திப்படுத்தவே இவ்வாறு கூறப்படவுள்ளது.



தண்டிக்கப்படவுள்ள படையினரின் குடும்பங்களை சிறிலங்கா அரசாங்கமே கவனித்துக் கொள்ளும் என்றும், அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்றும் மூன்றாவது தரப்பின் மூலம் அந்தப் படையினருக்கு கூறப்பட்டுள்ளது.



தெரிவு செய்யப்பட்டு ஒருமுறை தண்டிக்கப்படும் சிறிலங்காப் படையினருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும், பின்னர் வெசாக் பண்டிகையின் போது இவர்களில் பெரும்பாலானோருக்கு சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்வார் என்றும் இவர்களுக்கு சிறிலங்கா அதிபர் செயலகம் வாய்மொழி மூலம் உறுதிமொழி அளித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.



நாடெங்கும் உள்ள இரகசியமான இராணுவச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளை பகிரங்க நீதிமன்றத்தில் நிறுத்தவும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்யவுள்ளது.



அத்துடன் குற்றம்சாட்டப்பட்டு ஒருமுறை தண்டிக்கப்பட்ட போராளிகளில் ஒருபகுதியினருக்கு சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாகவும் அறியப்படுகிறது.



இது புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கையாகும்.



புலம்பெயர் தமிழர்களால், தான் மிகப்பெரிய தலைவலியை எதிர்கொள்வதாக தனது நெருங்கிய சகாக்களிடம் சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.



அத்துடன் அவரது மனைவியும், தனது நெருங்கிய நண்பர்களிடம், புலம்பெயர் தமிழர்கள் இல்லாத நட்புநாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளின் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அதிபருக்கு அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன், சிறிலங்கா அதிபர் அதனை ஏற்றுக்கொண்டு படிப்பினைகளில் இருந்து பாடம் கற்பதாக வாக்குறுதியும் கொடுக்கவுள்ளார்.



பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்கள் மீதோ அல்லது மருத்துவமனைகள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்று இந்த அறிக்கையில் கூறப்படவுள்ளது.



அத்துடன் போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் போதிய உணவு மருந்துப் பொருட்களை பொதுமக்களுக்கு அனுப்பி வைக்காதது குறித்தும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படமாட்டாது.



குற்றங்களுக்குப் பொறுப்பு கூறும் விவகாரத்தை சிறிலங்கா அதிபரோ அவரது சகோதரர்களோ தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.



சரணடைந்தாலும் கூட விடுதலைப் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார் என்று பசில் ராஜபக்ச கூறியதன் ஒலிப்பதிவு தம்மிடம் உள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதன் பின்னரே சிறிலங்கா அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

Friday 18 November 2011

பிரிகேடியர் கொஸ்த்தா கோப்பாய் மக்களின் தெய்வமாம்

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் இராணுவதினராலோ, பொலிஸாரினாலோ பொதுமக்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லையாம்.511 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கொஸ்த்தா அந்தப்பகுதி மக்களின் தெய்வமாம்.



கோப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே இவ்வாறு கூறப்பட்டது.ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சில்வெஸ்திரி அலன்ரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்மக்கள் பாதுகாப்பு, பொலிஸ் திணைக்களம், மனித உரிமைகள் நிலையம், மத்தியஸ்தர் சபை, சிறுவர் பாதுகாப்பு என ஒவ்வொரு விடயமாகப் பரிசீலனை செய்யப்பட்டது.



இவ்வேளையில் பிரிகேடியர் கொஸ்த்தா இந்தப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புத் தொடர்பாகவும், மக்களின் அபிவிருத்திக்கு இராணுவத்தினரின் பங்களிப்புத் தொடர்பாகவும் விளக்கினார்.



அதேபோன்று கோப்பாய் மற்றும் அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளும் தமது செயற்பாடுகளைத் தெரிவித்தனர்.இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதேச செயலாளர் ம.பிரதீபன் இராணுவத்தினரும், பொலிஸாரும் தமது தரப்புத் தொடர்பாகக் கூறிவிட்டனர். பொதுமக்கள் என்ற வகையில் இராணுவத்தினராலும், பொலிஸாராலும் உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் கூறுங்கள் என்று மக்களிடம் கேட்டார்.

பிரிகேடியர் கொஸ்த்தாவும் தனது பங்கிற்கு நீங்கள் பயப்படாமல் கூறலாம், எங்கள் மீது முறைப்பாடுகள் இருந்தாலும் தெரிவிக்கலாம் என்றார்.



பொதுமக்கள் எவ்விதமான கருத்தையும் கூறாமல் அமைதியாக இருந்தனர். இதனை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின் பிரச்சினைகளே இல்லையா? அல்லது அமைதியாக இருக்கின்றீர்களா? என்றார்.பொதுமக்கள் பகுதியில் இருந்து ஒருவர் மெதுவாக வாய் திறந்தார். கொஸ்த்தா ஐயா எங்கள் காவல் தெய்வம். இப்பொழுது எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

இளையராஜாவுடன் மீண்டும் இணையாதது ஏன்? - பாரதிராஜா


அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் இளையராஜாவுடன் மீண்டும் இணையாதது ஏன் என்ற கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் இயக்குநர் பாரதிராஜா.

தேனி அல்லி நகரத்தில் தனது குல தெய்வமான வீரப்ப அய்யனார் கோயிலில் கிடா வெட்டி அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கு பூஜைபோட்ட பாரதிராஜா, மாலையில் தேனி நகரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை என் படம் தொடர்பாகச் சந்திக்கிறேன்.

இதுவரை தேனி அல்லிநகரம் பகுதியில் எந்த விழாவிலும் நான் பங்கேற்றதில்லை. தேனி மாவட்டத்தில் சின்னமனூர், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் பேசி இருக்கிறேன். ஆனால் 35 ஆண்டுகளில் என்னை என் பகுதி மக்களும், பள்ளித்தோழர்களும் வரவழைத்து விழா நடத்தவில்லை என்ற கோபம்தான் காரணம்.

இப்போது இந்த படத் தொடக்க விழாவின் மூலம் நானே என்னை வரவழைத்துக் கொண்டேன். நான் இங்கிருந்து சினிமாத்துறைக்கு சென்று அங்கிருந்து சினிமாவை இங்கு கொண்டு வந்து இருக்கிறேன்.

அன்னக்கொடியும் கொடி வீரனும் ஒரு மனிதனின் 60 ஆண்டுகால வாழ்க்கையைச் சொல்லும் படம். ஐம்பதுகளில் தொடங்கும் இந்தப் படம் இந்த சமகாலம் வரை நடந்த நிகழ்வுகளின் நெகிழ்ச்சியான பதிவு. இது எனது 49வது படம். இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு பதிவாக இருக்கும்.

இயக்குநர் அமீர் கட்டுவிரியன் என்ற முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு முக்கிய வேடத்தில் லட்சுமணன் என்ற இளைஞரை, என் நண்பனின் மகனை அறிமுகப்படுத்துகிறேன். சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத இளைஞன் அவன். அன்னக்கொடியாக, நான் அறிமுகப்படுத்திய ராதாவின் மகள் கார்த்திகா நடிக்கிறார். ராதா மகளை மட்டுமல்ல, கார்த்திகா மகளையும் இயக்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இன்னொரு முக்கிய வேடத்தில், மல்லாங்கிணறு மங்காதாத்தா என்ற பாத்திரத்தில் இனியா நடிக்கிறார். மீனாள், பாண்டி ஆகியோரும் முக்கிய வேடமேற்றுள்ளனர். மற்ற பாத்திரங்கள் குறித்து பின்னர் சொல்கிறேன்," என்றார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

குற்றப்பத்திரிகை படத்தின் கதைதான் இந்த அன்னக்கொடியும் கொடிவீரனும் படக்கதையா?

குற்றப்பரம்பரை கடந்த ஏழு ஆண்டுகளாக நான் சொல்லிவரும் படம். அந்தக் கதை பலரும் அறிந்தது. அதை எடுக்கத் தேவையான ஒவ்வொரு விஷயங்களாக சேகரித்து வருகிறேன். எனது அடுத்த படைப்பாக குற்றப்பரம்பரை வரும்.

பார்த்திபன் - அமீர் விவகாரத்தில் நடந்தது என்ன?

என்னடா இன்னும் கேக்கலையேன்னு பார்த்தேன். நீங்க நெனக்கிற மாதிரி எதுவும் நடக்கலை. பார்த்திபன் நல்ல நடிகர். மிக வித்தியாசமான சிந்தனைக்காரன். அவனது திறமைக்கு ஏற்ற உயரம் இன்னும் கிடைக்கவில்லை என்பேன். ஆனால் இந்தக் கதையைப் பொறுத்தவரை, இந்த மண்ணின் மைந்தனாக வாழ வேண்டும். பார்த்திபன் அதை செய்துவிடுவார்தான். ஆனால் அதற்கு முன்பயிற்சி தேவை.

ஆனால் அமீரைப் பார்த்ததும், இந்த வேடத்துக்காகவே பிறந்தவன் மாதிரி தெரிந்தது. அதனால் அவரை தேர்வு செய்துவிட்டேன். குறுகிய காலத்தில் முடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு. எனவே பார்த்திபனுக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைக்காமல், அமீரையே நாயகனாக்கிவிட்டோம். இது பார்த்திபனுக்கும் தெரியும். நானே அவரிடம் பேசிவிட்டேன்.

அமீரின் அர்ப்பணிப்பு உணர்வு, அந்தப் பாத்திரமாகவே மாறிப் போகும் தீவிரத்தன்மை எனக்கு பிடித்துவிட்டது. கருத்துவேறுபாடுகளைத் தாண்டி நாங்கள் இணைந்தது அதனால்தான்.

நான் என்ன சொன்னாலும் அப்படியே செய்கிறார் அமீர். ஒரு நாள் அவரது உடல் அமைப்பையே இந்தப் படத்துக்காக வேறு ஷேப்புக்கு கொண்டு வர வேண்டும் என்றேன். அடுத்த இரண்டு நாட்களில் நான் பார்த்த அமீர், என் கதைக்கு தேவையான அளவு மாறியிருந்தார்.

அதனால்தான் அமீரைத் தேர்வு செய்தேன்.

உங்கள் பட ஹீரோக்கள் இருவருமே கறுப்பு நிறமுடையவர்கள். ஆனால் ஹீரோயின்கள் மட்டும் சிவப்பாக இருப்பது ஏன்?

அது ஒண்ணுமில்லை... மேக்கப்தான். அதை கழுவிட்டா அவங்களும் ஒரே நிறம்தான்!

இது பீரியட் படமா....

அதெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மா அப்படி சொல்லி ஏமாற்ற விரும்பவில்லை. பீரியட் படம் என்றால் 400 வருஷத்துக்கு முந்தைய கதையாக இருக்க வேண்டும்.

இது ஒரு 60 ஆண்டு கால வாழ்க்கைப் பதிவு. நான் வாழ்ந்த வாழும் காலத்திய நிகழ்வுகளைப் பதிவு செய்கிறேன். இது எப்படி பீரியட் படமாகும்?

இளையராஜாவுடன் இந்தப் படத்தில் இணையாதது ஏன்?

எத்தனை முறை இதற்கு பதில் சொல்வது... இந்தப் படத்தில் அவருடன் இணைவேன் என்று எப்போதாவது சொன்னேனா... ஒரு கட்டத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றினோம். அதன் பிறகு எனக்கு வேறு அனுபவங்கள் தேவைப்பட்டது. அதனால் ரஹ்மான், தேவா, ஜீவி பிரகாஷ் என மாறினேன். ஒவ்வொரு முறையும் புதுப்புது அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன. இன்னொன்று இதுபற்றி நானும் இளையராஜாவும் அல்லவா பேச வேண்டும்... மீடியா ஏன் பேசுகிறது!

ஆனால் உங்கள் ரசிகர்களைப் பொறுத்தவரை இளையராஜா - பாரதிராஜா இணைந்தபோது வந்த பாடல்களின் தரம் வேறு படங்களில் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் இணைவார்களா என எதிர்ப்பார்க்கிறார்கள்... இந்தக் கேள்வி அடிக்கடி பிறக்கிறது...

அதற்குக் காரணம், சின்ன வயதில் அந்தப் படங்களைப் பார்த்து பாடல்கள் கேட்டதால் வரும் உணர்வுதான். அந்தப் பாடல்கள் அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு ரசிகர்களுக்கு. ஏன்... நானும் ரஹ்மானும் இணைந்த கிழக்குச் சீமையிலே பாடல்கள் நன்றாக இல்லையா... கருத்தம்மா பாடல்கள் எப்படி...

இன்னொன்று வெற்றிபெற்ற ஜோடி, பிரிந்த பிறகு மீண்டும் இணைந்தால் அதே வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. எம்எஸ்வி பண்ணாத சாதனைகளா? ராமமூர்த்தியைப் பிரிந்த பிறகும் எம்எஸ்வி பெரிய வெற்றிகளைக் கொடுத்தார். ஆனால் மீண்டும் இணைந்தபிறகு அவர்களால் அந்த வெற்றியைத் தர முடிந்ததா?

சின்ன வயதில் அம்மாவோடு நெருக்கமாக இருப்போம். பிரியமுடியாமல் ஒட்டிக் கொண்டே இருப்போம். ஆனால் வயது ஏற ஏற புதிய உறவுகளைத் தேடுவதில்லையா... அதுபோலத்தான்.

இந்தப் படத்தின் மூலம் என்ன சொல்லப் போகிறீர்கள் இந்த சமூகத்துக்கு...

இதுவரை நான் என்ன சொல்லியிருக்கிறேன்... அதேதான் இந்தப் படத்திலும்!

-இவ்வாறு பாரதிராஜா பதிலளித்தார்.

-தேனியிலிருந்து நமது சிறப்பு நிருபர்..

அஜீத் நடிக்கும் பில்லா -2-ல் மீனாட்சி தீக்ஷித் குத்தாட்டம்!


அஜீத் நடித்து வரும் பில்லா-2 படத்தில் குத்தாட்டம் போடுகிறார் மீனாட்சி தீக்ஷித்.

பில்லா -2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜுலை மாதம் தொடங்கியது. இப்படத்தை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்குகிறார். பார்வதி ஓமனக்குட்டன் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தில் தெலுங்கு திரைப்பட உலகில் 'தூக்குடு' படத்தின் மூலம் பிரபலமான மீனாக்ஷி தீக்ஷித் அஜித்துடன் சேர்ந்து ஒரு குத்தாட்டம் ஆடியுள்ளார். பில்லா படத்தில் யுவன் சங்கர் இசையில் நமீதா ஆடிய ‘ஏதாவது செய்’ என்ற குத்துப்பாடல் மெகா ஹிட்டானது.

அதேபோல் பில்லா 2 விலும் மீனாக்ஷி தீட்சித் ஆடிய குத்தாட்டம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை பிர்லா குழுமத்தின் இன் எண்டர்டெயின்மெயின்டும், சுரேஷ் பாலாஜியும் இணைந்து தயாரிக்கின்றனர்.

நயனதாராவின் கடைசிப் படம் ஸ்ரீராம ராஜ்ஜியம் இன்று ரிலீஸ்


பிரபுதேவாவை 2ம் தாரமாக மணக்கப் போகும் நடிகை நயனதாரா நடித்துள்ள கடைசிப் படமாக கருதப்படும் ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற தெலுங்குப் புராணப் படம் இன்று திரைக்கு வருகிறது.

ரமலத்துடன் குடித்தனம் நடத்திக் கொண்டே நடிகை நயனதாராவை பக்கவாட்டில் காதலித்து வந்தார் பிரபுதேவா. இந்தக் காதல் ரமலத் வாழ்க்கையில் பெரும் புயலைக் கிளப்பியது. இருவருக்கும் பெரும் மோதல் மூண்டது. பின்னர் ரமலத் கோர்ட்டை நாடினார். இதனால் இவர்களுக்குள் நடந்து வந்த பிரச்சினை தெருவுக்கு வந்தது.

பின்னர் கோர்ட்டில் முறைப்படி ரமலத்தும், பிரபுதேவாவும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து நயனதாராவைக் கல்யாணம் செய்யும் வேலையில் பிரரபுதேவா மும்முரமாக உள்ளார். இடையில் இவர்களுக்குள்ளும் கூட மோதல் வந்ததாக செய்திகள் வெளியாகின. இதை நயனதாரா மறுத்தார்.

இருப்பினும் ரமலத்துடன் தான் குடும்பம் நடத்தியதன் அடையாளமாக பிறந்த குழந்தைகளை பிரபுதேவா பார்க்க நயனதாரா தடையாக இருப்பதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் நயனதாரா கடைசியாக நடித்த தெலுங்குப் படமான ஸ்ரீராம ராஜ்ஜியம் படம் இன்று திரைக்கு வருகிறது. இது ஒரு புராணப் படமாகும். ராமன் கதையைக் கூறும் படம். இதில் ராமராக என்டிஆர் பாலகிருஷ்ணாவும், சீதையாக நயனதாராவும் நடித்துள்ளனர். ரூ. 45 கோடியில்உருவாகியுள்ளது இப்படம்.

இந்தப் படத்தில் சீதை வேடத்தில் நயனதாரா நடிக்க ஒப்புக் கொண்டபோதுதான் அவருக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் மூண்டது. அப்போது ரமலத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் பிரபுதேவா. இதையடுத்து இந்து அமைப்புகள், கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நடந்து கொள்ளும் நயனதாரா சீதாப் பிராட்டி வேடத்தில் நடிப்பதா என்று போராட்டங்களையும் நடத்தினர். இருப்பினும் அதையும் மீறி பாலகிருஷ்ணா, நயனதாராவை தனது படத்தில் நடிக்க வைத்தார்.

இந்தப் பின்னணியில் ஸ்ரீராம ராஜ்ஜியம் இன்று ஆந்திராவிலும், சென்னையிலும் திரைக்கு வருகிறது.

ஐஸ்வர்யா மகள் பாடகியாவாரா?


ஐஸ்வர்யா, அபிஷேக் தம்பதியருக்குப் பிறந்துள்ள பெண் குழந்தை என்னவாக வருவார் என்ற கேள்வி இப்பொழுதே பட படக்க ஆரம்பித்துவிட்டது. குழந்தையின் பிறந்த எண்ணை கணக்கிட்டுப் பார்த்த பிரபல எண்ணியல் நிபுணர் தாய்வாக்ன சர்மா, இந்த குழந்தை சிறந்த பாடகியாக வருவார் என்று கணித்துள்ளார்.

ஐஸ்வர்யா, அபிஷேக் தம்பதியருக்கு கடந்த திங்கட்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை பிறந்த தேதியை கணக்கிட்ட எண்ணியல் வல்லுநர் தாய்வாக்ன சர்மா, அந்த குழந்தை மிகச்சிறந்த பாடகியாக வருவார் என்று கணித்துள்ளார்.

கூடும் எதிர்பார்ப்பு

பிரசித்தி பெற்ற நாளிதழ் ஒன்று இதனை ஆமோதித்து கருத்து வெளியிட்டுள்ளது. ஐஸ், அபிஷேக் தம்பதியரின் மகள், அவரது பாட்டனார் அமிதாப் பச்சனைப் போல சிறந்த பேச்சாற்றல் திறமை கொண்டவராகவும் வர வாய்ப்புள்ளதாக அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது முப்பாட்டனார் அதாவது அமிதாப்பின் தகப்பனார் ஹரிவன்ஸ் ராய் பச்சனைப் போல சிறந்த எழுத்தாளராக வருவாரா என்றும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதற்கும் பெட் உண்டா?

அமிதாப் பச்சன் தனது பேத்தியை மிகவும் பிரசித்தி பெற்ற கல்வி சாலையில் படிக்க வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார். கலைத்துறை சார்ந்த படிப்பில் பேத்திக்கு விருப்பம் இருந்தால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை என்றும் அவர் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். குட்டிக்குழந்தைக்கு ஐஸைப் போலவே அழகிய கண்கள் அமைந்திருப்பதில் பெற்றோர்களும், தாத்தா , பாட்டியும் பெருமிதம் கொண்டுள்ளனர்.

எது எப்படியோ அந்த குழந்தை உருவானது முதல் பிறக்கும் வரை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது தற்போது பிறந்து சில நாட்களிலேயே என்னவாக வரப்போகிறது என்ற கேள்விகள் வலம் வரத் தொடங்கியுள்ளது. பிறப்பதற்கு பெட் கட்டியவர்கள் இதற்கும் பெட் கட்டுவார்களோ என்னவோ ?

'வொய் திஸ் கொலை வெறிடி'!


வேறு ஒன்றிமில்லை... இது தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் '3' படத்தில் தனுஷே பாடியுள்ள ஒரு பாடலின் ஆரம்ப வரி.

இந்தப் பாடல் மட்டும் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது.

பாடலின் விசேஷம்... இது முழுக்க தமிங்கிலீஷில் எழுதப்பட்டிருப்பதுதான். எழுதிய பாடலாசிரியர் - தனுஷ்.

இந்தப் பாட்டு வெளியான கையோடு படு பாப்புலராகிவிட்டது. யு ட்யூப், பேஸ்புக் என சமூக வலை தளங்களில் சக்கைப் போடு போடுகிறது.

அனிருத் என்ற புதிய இசையமைப்பாளர் இசையில், தனுஷ் பாட, இடையிடையே ஸ்ருதி ஹாஸனும், ஐஸ்வர்யாவும் குரல் கொடுத்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் கட்டமாக இந்த ஒரு பாடலை மட்டும் வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா, மற்ற பாடல்களை அடுத்த விழாவில் வெளியிடுகிறார்.

சமீபத்தில்தான் சினிமாவில் தமிழை வளர்ப்பது கடினம் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். இல்லை, இல்லை வளர்க்க வாய்ப்புள்ளது என்று பதிலளித்திருந்தார் வைரமுத்து. இந்த வரிகளைப் பார்க்கும்போது இரண்டு பேரும் இப்போது என்ன பதிலளிப்பார்கள் என்ற யோசனை வருகிறது!

மறுபடியும் ஜெய் - அஞ்சலி!


ஜெய் - அஞ்சலி இருவரும் ஏற்கெனவே இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து, நிஜத்திலும் செம ஜோடி என்ற பெயரைச் சம்பாதித்துள்ளனர்.

'இருவருக்குள்ளும் காதல்... ஜெய்யோடு எப்போதும் இணைபிரியாமல் சுற்றுகிறார் அஞ்சலி," என்றெல்லாம் சமீப காலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இருவரும் மீண்டும் ஜோடி சேருகிறார்கள்... இது ஏஜிஎஸ் தயாரிக்கும் புதிய படத்துக்காக.

மாசிலாமணி, வேலூர் மாவட்டம் போன்ற படங்களை இயக்கிய ஆர்என்ஆர் மனோகர் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த இரு படங்களைத் தயாரித்ததும் கூட ஏஜிஎஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் எங்கேயும் எப்போதும் படம் வந்த பிறகும் ஜெய்க்கு வாய்ப்புகள் இல்லை. அஞ்சலியின் பெயர் இப்போது வாய்ப்பு பெற்றுத்தரும் சக்தியாக மாறியுள்ளது.

நல்லாருந்தா சரி!

முத்திரையைத் தவிர்க்கத் துடிக்கும் 'மல்லாங்கிணறு மங்காத்தா'!


எடுத்த எடுப்பிலேயே பாரதிராஜாவின் கலைக்கையில் சிக்கியுள்ள மகிழ்ச்சியில் படு குஷியாக காணப்படுகிறார் இனியா.

முதல் படமான வாகை சூட வாவில் இவரது இனிய நடிப்பு அத்தனை பேரையும் கவர்ந்திழுத்து விட்டது. உணர்ச்சிகளை படு அழகாக தனது முகத்தில் கொண்டு வந்த விதம், இனியாவை பெரிய நடிகைகள் வரிசையில் ஏற்றி வைக்கப் போகிறது என்பது அனைவருக்குமே புரிந்து விட்டது. இதோ, அதற்கான அங்கீகாரமாக பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தில் மல்லாங்கிணறு மங்காத்தா என்ற முக்கிய கேரக்டரில் நடிக்கப் போகிறார் இனியா.

பாரதிராஜாவின் படத்தில் நடிக்கும் பாக்கியம் கிடைத்தது பெரிய சந்தோஷம் மட்டுமல்ல, பெரிய அங்கீகாரமும் கூட என்று கூறும் இந்த மலையாளத்து பட்டுவண்ணச் சிட்டு, ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கக் காத்திருக்கிறாராம்.

எனக்கென்று எந்த இமேஜையும் விரும்பவில்லை. எதைக் கொடுத்தாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அனைவரின் மனதிலும் விதைக்க ஆர்வமாக உள்ளேன். என் மீது எந்த முத்திரையும் விழுந்து விடாமல் கவனமாக இருக்கப் போகிறேன். இவருடன்தான் நடிப்பேன், அவருடன் நடிப்பேன் என்றெல்லாம் கூற மாட்டேன்.

எனது 2வது படத்திலேயே பெரிய இயக்குநரான அமீருடன் ஜோடியாக நடிக்கப் போவது பெருமையாக இருக்கிறது. படத்தின் கதை குறித்துக் கூற முடியாது.

இப்படத்திலும் நான் பாவாடை தாவணிதான், ஜாக்கெட் இல்லாமலும் நடிக்கப் போகிறேன். மாட்டு வண்டி கூட ஓட்ட வேண்டியிருக்கும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். கேட்கவே திரில்லாக உள்ளது. கோபக்காரி கேரக்டரில் வருகிறேன்... அய்யய்யோ, கதையை சொல்ல ஆரம்பிச்சுட்டேனே...இதுக்கு மேல சொல்ல முடியாது என்று கூறி ஓடினார் இனியா.

நடிப்பில் மட்டுமல்ல, பேச்சிலும் கூட இனிமைதான்!

மகளுடன் விரைவில் வீடு திரும்புவார் ஐஸ்வர்யா ராய்-அமிதாப் தகவல்


ஐஸ்வர்யா ராய்க்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை அப்படியே அம்மாவைப் போல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஐஸ்வர்யாவுக்கு உள்ளதைப் போலவே ஓவியம் போன்ற அழகிய கண்களாம் குழந்தைக்கு.

முதலில் சிசேரியன் பண்ணுவதாகத்தான் டாக்டர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஐஸ்வர்யாதான்,அதெல்லாம் வேண்டாம், சுகப் பிரசவமாகவே இருக்கட்டும் என்று கூறி விட்டாராம். இதனால் சுகப் பிரசவமாகவே தனது முதல் மகளைப் பெற்றெடுத்துள்ளார் ஐஸ்வர்யா. பிரசவத்தின்போது அவர் மிகவும் மனோ திடத்துடன் இருந்ததை தங்களது பிளாக்குகள் மூலம் கணவர் அபிஷேக் பச்சனும், மாமனார் அமிதாப் பச்சனும் உருகி உருகி எழுதி வருகின்றனர்.

இந்த நிலையில், குட்டிப் பாப்பாவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற ஆலோசனைகள் பச்சன் வீட்டில் சூடு பிடித்துள்ளதாம். இருப்பினும் தற்போதைக்கு பேட்டி பி என்று செல்லமாக பெயரிட்டுள்ளனராம்.

இதற்கிடையே, ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ள அமிதாப் பச்சன் இருவரும் விரைவில் வீடு திரும்ப தயாராகி வருவதாக தனது பிளாக்கில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தாயும், மகளும் மிக மிக நன்றாக உள்ளனர். விரைவில் வீடு திரும்புவார்கள் என்று கூறியுள்ள அமிதாப் தனது ஸ்டைலில், ஷோலே படப்பிடிப்பின்போது ஜெயாபாதுரியும் கூட கர்ப்பமாக இருந்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் தனது பேத்தியுடன் ஒரு நாளை செலவிட்டதாகவும் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார் அமிதாப். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு நாள் முழுக்க அந்தக் குட்டிக் குழந்தையுடன் இருந்தேன். அதன் அசைவுகளை வேடிக்கை பார்ப்பதே சுவாரஸ்யமானது. மிகவும் அமைதியான குழந்தை. அதற்காகவே பிரத்யேகமாக வாங்கப்பட்ட பிறந்த குழந்தைகளுக்கான உடையில் அழகாக படுத்திருந்தது. கண்களை எப்போதும் மூடியே வைத்திருக்கிறாள். எப்போதாவது திறக்கிறாள். லேசான புன்னைகையும் கூட அவ்வப்போது வருகிறது. இந்தப் புதிய உலகம் குறித்த கனவோ, என்னவோ என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.

மழை நீரில் தத்தளித்த நாய்க்குட்டியைக் காப்பாற்றிய ஷ்ரேயா!


தேங்கிக் கிடந்த மழை நீரில் நடுங்கியபடி தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு நாய்க்குட்டியை மீட்ட நடிகை ஷ்ரேயா அந்த நாய்க்குட்டியை எடுத்துக் கொண்டு கால்நடை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை கொடுத்து உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

அத்தோடு நில்லாமல் அந்த நாய்க்குட்டியை தனது வீட்டுக்குக் கொண்டு போய் வளர்த்தும் வருகிறார். அந்த குட்டி நாய்க்கு த்ரு என்று பெயரிட்டுள்ளாராம் ஷ்ரேயா.

பிராணிகள் மீது அதீத பாசம் வைத்துள்ளவர்கள் நம்மில் நிறையப் பேர் உண்டு. குறிப்பாக நடிகர், நடிகைகள் பலரும் பிராணிகள் மீது நல்ல பாசம் வைத்துள்ளனர். பழைய நடிகை அமலா பிராணிகள் மீது மகாப் பிரியமாக இருப்பவர். அதேபோல திரிஷாவுக்கும் நாய்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.

அந்த வகையில் நடிகை ஷ்ரேயாவும் நாய்கள் மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருக்கிறார். சமீபத்தில் தனது நாய்ப்பாசத்தை அவர் வெளிப்படுத்திய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

சமீபத்தில் காரில் போய்க் கொண்டிருந்தாராம் ஷ்ரேயா. அப்போது சாலையோரமாக தேங்கிக் கிடந்த மழை நீரில் ஒரு குட்டி நாய் தத்தளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.

உடனடியாக காரை நிறுத்திய ஷ்ரேயா நாய்க்குட்டியை நெருங்கிப் பார்த்தபோது அதன் உடலில் புண்ணாக இருந்துள்ளது. மிகவும் பரிதவிப்புடன் காணப்பட்ட அந்த நாய்க்குட்டியை பரிவுடன் தூக்கிய ஷ்ரேயா உடனே ஒரு கால்நடை மருத்துவமனைக்கு வண்டியை விட்டார். அங்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

பின்னர் தனது வீட்டுக்குத்திரும்பிய ஷ்ரேயா அந்த நாய்க்குட்டியை தற்போது தானே வளர்த்து வருகிறார். நாய்க்குட்டிக்கு த்ரு என்று பெயரிட்டு செல்லமாக கவனித்தும் வருகிறாராம்.

பாராட்டுக்குரியவர்தான் ஷ்ரேயா.

பார்த்திபனின் வித்தகன் இன்று ரிலீஸ்!


பார்த்திபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து இயக்கியுள்ள வித்தகன் படம் இன்று வெளியாகிறது.

பார்த்திபன் - பூர்ணா நடித்துள்ள இந்தப் படத்தை செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரித்துள்ளார். போலீஸ் அதிகாரியின் கதை இது.

பார்த்திபன் ஏற்கெனவே உள்ளே வெளியே, வாய்மையே வெல்லும் போன்ற படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். கடமை தவறாத, கண்டிப்பான துணை கமிஷனராக அவர் நடித்துள்ளார். இது தவிர, மேலும் இரண்டு கெட்டப்புகளிலும் அவர் நடித்துள்ளார்.

பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தில் நடித்துள்ளார். மிலிந்த் சோமன் வில்லனாக வருகிறார்.

ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடைசியாக பார்த்திபன் இயக்கி நடித்த படம் பச்சக்குதிரை. 2006-ல் வெளியானது. அதன் பிறகு இப்போதுதான் அவர் படம் இயக்குகிறார்.

கனடா York பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு 2011 (படங்கள் இணைப்பு)

மாவீரர் எழுச்சி வாரத்தின் இரண்டாவது நாளான புதன் கிழமை நேற்று யோர்க் (York) பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட மாவீரர் தின நிகழ்வு 16 ம் திகதி புதன்கிழமை மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிவரை நடைபெற்றது.

கனேடிய தேசியக்கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து தமிழீழ கொடிக்கீதம் இசைக்கப்பட்டது. அடுத்த தாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அதன்பின் அங்கு வருகைதந்திருந்த மாணவர்கள் மலர்தூவி மாவீர்ர்களுக்கு தமது அஞ்சலியையும் வணக்கத்தையும் தெரிவித்தனர். இதன் பின்னர் மாணவர்களால் ஓழுங்குசெய்யப்பட்ட எழுச்சி நடனங்கள் பேச்சுக்கள் பாடல்கள் மற்றும் நாடகங்கள் இடம்பெற்றன.

பெருமளவு மாணவர்களின் பங்களிப்புடன் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீர்ர் தின நிகழ்வு. இந்த நிகழ்வானது புலம்பெயர் வாழ் தமிழ் இளைஞர்களின் விடுதலை உணர்வு நீர்த்துப்போகவில்லை என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது.

இதனை தொடர்ந்து பின்வரும் நாட்களில் பல்கலைகழகங்கள் மாவீரர் நாட்களை முன்னெடுக்கவுள்ளன...

நவம்பர் மாதம் 18 ஆம் திகதி University of Toronto Mississauga

நவம்பர் மாதம் 20 ஆம் திகதி Canadian High Schools

நவம்பர் மாதம் 21 ஆம் திகதி McMaster University

நவம்பர் மாதம் 23 ஆம் திகதி Durham College/University of Ontario Institute of Technology

நவம்பர் மாதம் 23 ஆம் திகதி University of Toronto St. George

நவம்பர் மாதம் 23 ஆம் திகதி University of Waterloo

நவம்பர் மாதம் 25 ஆம் திகதி

அனைத்து கனடிய பலகலைகழகங்கள், கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளுடன் இணைந்து தமிழ் இளையோர் அமைப்புமுன்னெடுக்கும் மாபெரும் அரங்கில் மாவீரர் நினைவெழுச்சி வார தொடக்க நாள் நிகழ்வு ஏற்பாடு செய்யபட்டுள்ளது குறிப்பிடதக்கது.







வெள்ளைக்கொடி வழக்கில் சரத்துக்கு முன்றாண்டு சிறைத் தண்டனை (படங்கள் இணைப்பு)

வெள்ளைக்கொடி வழக்கு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட சரத் பொன்சேகாவுக்கு முப்பத்தாறு மாத சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பு நீதியற்றது எனவும் அதனை தான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

வெள்ளைக்கொடியுடன் சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்களை சுடுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டதாக சண்டே லீடர் பத்திரிகைக்கு சரத் பொன்சேகா அளித்த செவ்வி தொடர்பில் பொன்சேகா மீது வழக்கு தொடரப்பபட்டிருந்தது.

வழக்கு விசாரணைகள் நடைபெற்று முடிவுற்ற நிலையில் தீர்ப்பு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் வழங்கப்பட்டது.

அதன்படி குற்றஞ்சாட்டப்பட்ட சரத் பொன்சேகா குற்றவாளி எனவும் அத்துடன் அவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனையையும் விதிகத்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழுவில் ஒருவர் சரத் பொன்சேகா குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்தார். ஏனைய இருவரும் சரத் பொன்சேகா குற்றவாளி என அறிவித்தனர்.

இதன் அடிப்படையில் அவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன், 5000 ரூபா அபராத தொகையும் விதிக்கப்பட்டது. அபராத தொகை விதிக்கப்படாத பட்சத்தில், தண்டனைக் காலம் மேலும் 6 மாதங்களால் அதிகரிக்கும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தால் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பினை தானும் மக்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த தீர்ப்பு நியாயமற்றது. எனவும் இத்தீர்ப்பால் மக்களின் எதிர்ப்பார்ப்பு சீர்குலைந்துள்ளது. இவ்வாறானதொரு தீர்ப்பினை வழங்கிய நீதிமன்றத்தின் சுயாதீனம் வெளிப்படையாகியுள்ளது. இதனால் நீதிமன்றுக்கு எதிர்காலத்தில் கரும்புள்ளி விழப்போகிறது எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

அதேவேளை சரத் பொன்சேகாவிற்கு மேல்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை ஆட்சேபித்து எதிர்வரும் திங்கட்கிழமை மேன்முறையீடு தாக்கல் செய்யவுள்ளதாக பொன்சேகாவின் வழக்கறிஞர் நலின் லத்துவஹெட்டி தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமக்கு எழுத்து மூலமாக வழங்கப்படும் பட்சத்திலேயே திங்கட்கிழமை மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.




மக்கள் நலப்பணியாளர் பணிநீக்க அதிர்ச்சியால் மரணம் (படங்கள் இணைப்பு)

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் யூனியன் நெடுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் மக்கள் நலப்பணியாளர் முத்தையாசாமி. இவருக்கு வயது 46. அவர் அந்த யூனியனின் நெடுவயல் ஊராட்சியின் மக்கள் நலப்பணியாளராக ஆரம்பத்திலிருந்தே பணிபுரிந்து வருபவர்.

இதனிடையே தமிழக அரசு திடீரென 13,500 மக்கள் நலப்பணியாளர்களைப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்ட செய்தியை அறிந்ததிலிருந்து வேலை போய் விட்டதே என்ற அதிர்ச்சியில் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கடந்த ஒருவாரமாக மன அழுத்தம், பரிதவிப்பால் உழண்ட முத்தையாசாமி திடீரென மாரடைப்பால் இறந்து போனார்.

வேலை பறிபோயிறுச்சி. இனிமே குடும்பத்த எப்படிக் காப்பாத்தப் போறேன்னு தவிப்பிலேயும், மனவாட்டத்திலயும் இருந்த எங்கப்பாவுக்கு திடீர்னு நெஞ்சுவலி வந்திருச்சு. கடையநல்லூர் தனியார் ஆஸ்பத்திரியில சிகிச்சைக்குக் கொண்டு போனோம். வைத்தியம் பண்ணியும் பிரயோசனமில்ல. எங்கப்பா உயிர் போயிடுச்சே. இனிமே நாங்க என்ன பண்ணுவோம் புரியலியே. கண்ணீர் வழியசொன்னார் மகள் பாலசண்முகத்தாய்.

முத்தையாசாமிக்கு ஆனந்தி என்கிற நோய் வாய்ப்பட்ட மனைவியும் உள்ளார். முத்தையாசாமி குடும்பத்தினருக்கு தென்காசி பகுதி மக்கள் நலப்பணியாளர்கள் ஆறுதல் கூறினர்.




முதல்வர் ஜெயலலிதாவின் கொக்கரிப்பு செல்லாக்காசு!

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை கைகட்டி வேடிக்கை பார்க்கமுடியாது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொக்கரிப்புக்கு இலங்கை அஞ்சாது என்பதுடன், அவரின் கொக்கரிப்பு இலங்கையில் செல்லாக்காசாகவே கருதப்படும். இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் முடிவுகள் பற்றி கருத்து வெளியிடும்போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

இந்திய மீனவர்கள் அத்துமீறி எமது கடல் எல்லைக்குள் புகுந்து சட்டவிரோத உபகரணங்களைப் பாவித்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இதனால் எமது நாட்டு கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன் எமது நாட்டு மீனவர்களுக்கும் இது பேரிடியாக அமைந்துள்ளது.

ஏனைய நாட்டினது கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடியில் ஈடுபடுவது சட்ட விரோதம். அந்த வரையறைகளை மீறி மீனவர்கள் செயற்படும்போது கடற்படையினர் நடவடிக்கை எடுக்க நேரிடுமே தவிர, அதனைக் கைகட்டி வேடிக்கை பார்க்கமுடியாத நிலையே உருவாகும்.

எமது நாட்டு மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் சென்றால் அந்நாட்டு கடற்படையினர் கைதுசெய்கின்றனர். கைது செய்வதையோ அல்லது தண்டனை வழங்குவதையோ தாக்குதல் எனக் கூற முடியுமா?

தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கைக்கு எதிரான கடும் போக்குடையவர். எதையும் ஆராயாமல் அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிடுகின்றார்.

தமிழகத்தில் இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பேசினால் மட்டும் அரசியல் பிழைப்பு நடத்தமுடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்தக் கோட்பாட்டுக்கிணங்கவே சிலர் செயற்படுகின்றனர்.

நாம் ஒன்றைத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை மத்திய அரசுக்கும் இடையில்தான் கொடுக்கல் வாங்கல். நாம் தமிழக அரசுடன் அரசியல் நடத்தவில்லை.

எனவே, ஜெயலலிதாவின் கொக்கரிப்புக்கு இலங்கை அஞ்சாது என்பதுடன், அவரின் கொக்கரிப்பு இலங்கையில் செல்லாக்காசாகவே கருதப்படும் என்றார் அவர்.

சரத் பொன்சேகா 36 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு


ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத கால சிறைத் தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று கொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மேல் நீதிமன்றக் கட்டடத்தில் அறிவிக்கப்பட்டது.

நீதவான் தீபாலி விஜேசுந்திர தலைமையிலான ட்ரயல் எட் பார் நீதவான் குழாம் இந்த வழக்கை கடந்த ஒன்றரை வருட காலமாக விசாரணை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிக் கட்ட போரின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்திருந்ததாக ஆங்கில ஊடகமொன்றுக்கு சரத் பொன்சேகா நேர் காணல் வழங்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பாதுகாப்புக் செயலாளருக்கும், நாட்டுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் சரத் பொன்சேகா தகவல்களை வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதவான் குழாம், சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இதற்கு முன்னர் இராணுவ நீதிமன்றினால் சரத் பொன்சேகாவிற்கு 30 மாத சிறைத்தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தில் கடமையாற்றிய போது அரசியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

படையினருக்கோ, நாட்டுக்கோ களங்கம் ஏற்படும் வகையில் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை என நான்கு நட்சத்திர ஜெனராலாக பதவி வகித்த சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரிக்கா போலியாக தம்மீது குற்றம் சுமத்துவதாகவும் தம்முடனான நேர்காணல் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

மேற்படி வெள்ளைக்கொடி வழக்கினால் நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு நீதவான் சரத் பொன்சேகா குற்றமற்றவர் என தெரிவித்தார்

வெள்ளைக் கொடி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றமற்றவர் என விசாரணையின்போது ஒரு நீதவான் தெரிவித்துள்ளார்.

மேல் நீதிமன்ற நீதவான்களான தீபாலி விஜேசுந்தர, சுல்பியர் ராசின் மற்றும் வேரவௌ ஆகிய மூவர் ஆகியோர் இந்த வழக்கு விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதில் நீதவான் தீபாவலி விஜேசுந்தர மறறும் சர்பிக் ராசின் ஆகியோர், மூன்று குற்றச்சாட்டுக்களில் ஒன்றில் சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளனர்.

வழக்கை விசாரணை செய்த பி. வேரவௌ என்னும் நீதவான் சரத் பொன்சேகா மூன்று குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளி கிடையாது என அறிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது பிடிக்காத தரப்பினர் தம்மை சிறையில் அடைக்க வேண்டுமென விரும்புவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நீதிமன்ற வளாகத்தில் தெரிவித்துள்ளார்.

Thursday 17 November 2011

இலங்கை ஜெயலலிதாவின் கொக்கரிப்புக்கு அஞ்சாதாம்


இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை கைகட்டி வேடிக்கை பார்க்கமுடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தமிழக முதல்வரின் கொக்கரிப்புக்கு இலங்கை அஞ்சப்போவதில்லை என்றும் சீறிப் பாய்ந்துள்ளது.


இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள் உடன் தீர்க்கப்படவேண்டுமானால் இருநாட்டு மத்திய அரசுகளும் பொதுவானதொரு உடன்படிக் கையை இந்த விடயத்தில் கையாளவேண்டும் என்று அந்த இயக்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் முடிவுகள் பற்றி "உதயனு"க்குத் கருத்து வெளியிடும்போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:
இந்திய மீனவர்கள் அத்துமீறி எமது கடல் எல்லைக்குள் புகுந்து சட்டவிரோத உபகரணங்களைப் பாவித்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இதனால் எமது நாட்டு கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன் எமது நாட்டு மீனவர்களுக்கும் இது பேரிடியாக அமைந்துள்ளது. ஏனைய நாட்டினது கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடியில் ஈடுபடுவது சட்ட விரோதம். அந்த வரையறைகளை மீறி மீனவர்கள் செயற்படும்போது கடற்படையினர் நடவடிக்கை எடுக்க நேரிடுமே தவிர, அதனைக் கைகட்டி வேடிக்கை பார்க்கமுடியாத நிலையே உருவாகும்.

எமது நாட்டு மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் சென்றால் அந்நாட்டு கடற்படையினர் கைதுசெய்கின்றனர். கைது செய்வதையோ அல்லது தண்டனை வழங்குவதையோ தாக்குதல் எனக் கூற முடியுமா?
தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கைக்கு எதிரான கடும் போக்குடையவர். எதையும் ஆராயாமல் அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிடுகின்றார்.

தமிழகத்தில் இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பேசினால் மட்டும் அரசியல் பிழைப்பு நடத்தமுடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்தக் கோட்பாட்டுக்கிணங்கவே சிலர் செயற்படுகின்றனர். நாம் ஒன்றைத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை மத்திய அரசுக்கும் இடையில்தான் கொடுக்கல் வாங்கல். நாம் தமிழக அரசுடன் அரசியல் நடத்தவில்லை. எனவே, ஜெயலலிதாவின் கொக்கரிப்புக்கு இலங்கை அஞ்சாது என்பதுடன், அவரின் கொக்கரிப்பு இலங்கையில் செல்லாக்காசாகவே கருதப்படும் என்றார் அவர்.

சேகுவேரா உயிரோடு இருந்தால் தமிழர் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியிருப்பார்.எழுத்தாளர் றொன


சிறிலங்கா பிளவுபடுதல், தனித் தமிழ் தாய்நாடு உருவாதல் ஆகியவற்றிற்கான மிகப் பலமான நிலைப்பாட்டை உருவாக்குதல் தொடர்பாக எந்தவொரு எதிர்க் கருத்துக்களும் இல்லை என்று இடதுசாரி எழுத்தாளரான றொன் றைடினோர் (Ron Ridenour) கடந்த வாரம் சென்னையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.

“பல பத்தாண்டுகளாக இடம்பெற்ற கசப்பான வரலாற்றின் பார்வையில் தமிழீழம் என்பது அவசியமானதாக இருந்துள்ளது. புரட்சிகர வீரரான சேகுவரா தற்போது உயிருடன் இருந்திருந்தால், தமிழர் போராட்டத்திற்கு அவர் தனது ஆதரவை வழங்கியிருப்பார்“ என றொன் குறிப்பிட்டார்.

“புரட்சிகர இயக்கம் என்பது புரட்சிகரத்தின் கருத்தியல் ரீதியான உந்துசக்தியாகும். புரட்சிவீரர் ஒருவர் தனது பாட்டாளி வர்க்க அனைத்துலகவாதம், தன்னால் தலைமை தாங்கப்படும் புரட்சி போன்றவற்றை மறந்தால், இந்தப் புரட்சிவாதி ஏகாதிபத்தியம் என்ற ஆடம்பரமான வசதி மிக்க மயக்கத்திற்குள் மூழ்கிவிடுவார்.

இதனால் இந்தச் சந்தர்ப்பத்தை எமது எதிரி நன்கு பயன்படுத்துவான். பாட்டாளிவர்க்க அனைத்துலகவாதம் என்பது எமது கடமையாகும், அத்துடன் புரட்சிகர அடிப்படையில் அவசியமானதுமாகும்.

ஆகவே நாங்கள் எமது மக்களுக்கு கல்வியை வழங்க வேண்டும்' என 'சோசலிசமும் மனிதனும்“ என்ற நூலில் சேகுவராவால் குறிப்பிடப்பட்ட கோட்பாட்டை றொன் எடுத்து விளக்கினார்.

“சேகுவேராவின் இந்தக் கோட்பாடுகள் சிறிலங்காத் தமிழர்கள் விடயத்தில் மிகப் பொருத்தமானதாக உள்ளது. சேகுவேரா இருந்திருந்தால் நீங்கள் உங்களது சமஉரிமையைப் பெற்றுக் கொள்வதற்காகப் போராடுவதை ஏற்றுக் கொண்டிருப்பார் என்றே நான் நம்புகின்றேன்.

சிறிலங்காவின் ஆதிக்க சக்திகளுடன் போராடி இதனைப் பெற்றுக் கொள்ள முடியாவிட்டால் நீங்கள் உங்களது சொந்த நாட்டைப் பெற்றுக் கொள்வதற்காகப் போராடுவதை சேகுவேரா விளங்கிக் கொண்டிருப்பார்“ என றொன் தெரிவித்தார்.

'குறுக்குப் பாதைகளுக்கு அப்பால் கியூபா' மற்றும் 'கடலில் கியூபா' ஆகியன உள்ளடங்கலாகப் பல புத்தகங்களை எழுதி வெளியிட்ட றொன் லத்தீன் அமெரிக்க விவகாரங்கள் தொடர்பாகவும் எழுதியுள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல் தொடர்பாக லத்தீன் அமெரிக்கர்கள் தமது கவனத்தைச் செலுத்தவில்லை எனத் தெரிவித்துள்ள றொன், 'சிறிலங்காவில் வாழும் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல, அங்கு வாழும் முஸ்லிம் மக்கள், சுதேசிகள், சிங்களப் பணியாளர்கள், ஏழைகள் போன்றோருக்கு எதிராகவும் மனிதஉரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் மக்களாகிய நீங்கள் மிகக் கொடுமையாக நடத்தப்பட்டதால் உங்களது போராட்டத்திற்கு நான் ஆதரவாக இருந்துள்ளேன்“ என சிறிலங்காவில் இடம்பெற்ற ஈழப் போராட்டம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோது றொன் இவ்வாறு குறிப்பிட்டார்.

'தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக பல இன்னல்களை எதிர்நோக்கிய தமிழர்கள் அதன் பின்னரே ஆயுதங்களைத் தூக்கியதுடன் தொடர்புபட்ட வரலாற்றை கியூபர்கள் புரிந்து கொள்ளவில்லை' எனவும் றொன் தெரிவித்தார்.

“முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் அமைதிவழியில் போராடியிருந்தனர், ஆனால் அமெரிக்காவில் இருந்த கறுப்பினத்தவர்களுக்கு எதிராகவும், இஸ்ரேலியர்களால் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளை விட சிறிலங்காவில் வாழ்ந்த தமிழர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டனர்“ எனவும் றொன் நினைவுபடுத்தினார்.

லத்தீன் அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளிலுள்ள சமூகவாதிகள், பொதுவுடமைவாதிகள், உள்நாட்டு அமைப்புக்கள் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டு ஈழப் போராட்டம் தொடர்பாக அவர்களுக்கு விளக்கம் கொடுக்குமாறு தமிழ் ஆதரவு சக்திகளை றொம் கோரியுள்ளார்.

“உங்களுடைய வரலாறு தொடர்பாக நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அதாவது ஏன் நீங்கள் ஆயுதம் தூக்கினீர்கள், தனிநாட்டுக்காக ஏன் போராடினீர்கள், சுதந்திர தேசம் ஒன்று உங்களுக்கு ஏன் தேவை என்பது தொடர்பாக நீங்கள் அவர்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்.

அவர்கள் உங்களுடைய துன்பங்களை, கடினங்களை, தமிழீழம் ஏன் அவசியமானது போன்றவை தொடர்பாக அவர்கள் கேட்டறிய வேண்டியுள்ளனர்“எனவும் றொம் தெரிவித்தார்.

தமது நாட்டில் வாழும் சுதேச மக்களுக்கு சம உரிமையை வழங்கியதன் மூலம் பொலிவியா, வெனிசுலா, ஈக்குவேடார் போன்ற நாடுகளில் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கங்கள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான வாக்களிப்பில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளனர்.

'புதிய அரசியல் சாசனத்தின் பிரகாரம் பொலிவியாவில் நான்கு மொழிகள் தேசிய மொழிகளாக்கப்பட்டுள்ளன. இதில் மூன்று மொழிகள் சுதேச மக்களுக்குச் சொந்தமானதாகும்.

இதேபோன்ற சில மாற்றங்கள் லத்தீன் அமெரிக்க சோசலிச ஆதரவு அரசாங்கங்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என றொன் சுட்டிக்காட்டினார்.

'இந்த நாட்டு மக்கள் உங்களது பிரச்சினைகள் தொடர்பாக அறிந்து கொள்வார்களானால், நீங்கள் மிக இலகுவாக இவ்வாறான சம உரிமைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் நீங்கள் கூறும் கருத்துக்களை செவிமடுத்து சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்திக் கொள்வார்கள்' எனவும் அவர் தெரிவித்தார்.

'உலகெங்கிலும் வாழும் நாங்கள் ஒன்றாக இணைந்து சிறிலங்கா அரசாங்கத் தலைவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனிதஉரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சுதந்திரமான அனைத்துலக விசாரணை ஒன்றை நடத்துவதற்கான அழுத்தத்தை மேற்கொள்ள வேண்டும்' எனவும் எழுத்தாளர் றொன் தெரிவித்தார்.

இந்நூல் வெளியீட்டு விழாவில் றொன் எழுதிய 'சிறிலங்காவில் தமிழர் தேசம்' என்ற நூல் வெளியிடப்பட்டது.

எனது தந்தை விட்ட தவறு காரணமாகவே தமிழர்களுக்கு இந்த அவலம்!

எனது தந்தையார் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க கொண்டுவந்த தனிச்சிங்களச் சட்டமே இலங்கை இனப்பிரச்சினையின் மூலத்தவறாக அமைந்துவிட்டது. இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.

அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

தனிச்சிங்களச் சட்டத்தால் தமிழ் மக்களுக்கும் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கும் சொல்லமுடியாத அளவுக்குப் பாதிப்புக்கள் ஏற்பட்டன. அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றை அடைந்துகொள்வதில் தனிச்சிங்களச் சட்டம் பெரும் தடையாக அமைந்தது. குறிப்பாக தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செல்வதைச் சிக்கலுக்குள்ளாக் கக்கூடிய சட்டங்கள் அனைத்தையும் ஆட்சியில் இருந்தவர்கள்நான் உட்பட கொண்டுவந்தனர்.

இது இனமுரண்பாடுகளை இன்னும் அதிகரிக்கச் செய்தது. இனத்துவ அடையாள அரசியல் ஒரு தவறான பாதையாகும். சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனில் பன்மைத்துவமே பயன்படுத்தக்கூடிய சிறந்த தெரிவாகும். போர் முடிந்த பின்னரும்கூட தாம் எதிர்பார்த்த எதுவுமே நடைபெறாததால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். இளைய தலைமுறையினரிடமிருந்து உருவாகக்கூடிய புதிய அரசியல் தலைமை மூலமே போருக்குப் பின்னான காலத்திலாவது இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காணமுடியும்.

இலங்கையின் இனப்பிரச்சினை காரணமாக அங்குள்ள மக்கள் எப்படி ஒரு சொர்க்கத்தை இழந்தார்கள் என்பதைத்தான் நீங்கள் (அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள்) எம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம் 7)

ஈழத்தமிழருக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் 1987 ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி முதல் ஒரு புதிய பரிணாமத்தைப் பெற ஆரம்பித்திருந்தது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக அதுவரை இராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளையே மேற்கொண்டுவந்த இந்தியா அன்றைய தினம் முதல் ஈழத்தமிழருக்கு எதிரான படுகொலைகள் என்ற ஒரு புதிய அத்தியாயத்தை வரைய ஆரம்பித்தது.

ஈழத்தமிழர்களைக் காப்பாற்றப் போவதாகக் கூறி இலங்கை வந்த இந்தியப் படை வீரர்கள் கண்களில் அகப்பட்ட தமிழர்களையெல்லாம் சுட்டுத்தள்ளிய ஒரு கொடூர செயலைப் புரிய ஆரம்பித்திருந்தார்கள்.

புலிகளின் பூரண முற்றுகைக்குள் அகப்பட்ட நிலையில் யாழ் பிரம்படி ஒழுங்கையில் தளம் அமைத்திருந்த இந்திய பராக் கொமாண்டோக்கள் தமக்கு மேலிடத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவுகளின்படி கண்களில் அகப்பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

திருமதி விஸ்வலிங்கம் என்பவருடைய வீட்டில் தங்கியிருந்த பத்துப் பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு அந்த வீட்டை அவர்கள் தமது தற்காலிக தளமாக ஆக்கிக்கொண்டு அங்கு நிலை எடுத்திருந்தார்கள்.

காயப்பட்ட நிலையில் மணியம் என்பவர் தெரியாமல் அந்த வீட்டினருகே வந்து குடிக்கத் தண்ணீர் கேட்டார். அவரை உள்ளே அழைத்த இந்தியப் படைவீரர்கள் அங்கு அவரைச் சுட்டுக் கொன்றார்கள்.

மதிய வேளையில் தனது உறவினர் ஒருவரைத் தேடி அங்கு வந்த சோமசுந்தரம் என்பவரும் சுடப்பட்டார். தெரிந்தோ தெரியாமலோ திருமதி விஸ்வலிங்கத்தின் வீட்டைக் கடந்து சென்றவர்கள் அனைவருமே ஈவிரக்கம் இன்றிச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ஸ்ரீலங்காப் படைகள் வழங்கிய உதவிகள்:

இதற்கிடையில் முற்றுகைக்குள் அகப்பட்ட இந்தியப் பராக் கொமாண்டோக்களுக்கு உதவியாக யாழ் கோட்டையில் இருந்து பரவலாக செல் தாக்குதல்கள் ஆரம்பமாகி இருந்தன. யாழ் கோட்டையில் இருந்து தொடர்ச்சியாக எறிகணைகள் ஏவப்பட்டபடியே இருந்தன.

புலிகளின் கவனத்தைத் திசை திருப்பவும் புலிகளுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தவும் செல்தாக்குதல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டபடியே இருந்தன. அந்த செல் மழையில் பல தமிழ் உயிர்கள் கொல்லப்பட்டன. பல வீடுகள் சேதமாக்கப்பட்டன. பலர் அங்கவீனமானார்கள்.

இந்த செல் தாக்குதல் விடயத்தில் வெளிவராத ஒரு உண்மையும் இருந்தது.

அதாவது இப்படியான ஒரு செல்தாக்குதலை மேற்கொண்டிருந்தவர்கள் கோட்டையில் இருந்த ஸ்ரீலங்காப் படையினர் என்பது பின்நாட்களிலேயே தெரியவந்தது.

யாழ் கோட்டையினுள் தங்கியிருந்த இந்தியப்படையினரிடம் செல்கள் ஏதும் இருக்கவில்லை. அதேவேளை முற்றுகைக்குள் உள்ளாகி இருந்த இந்தியப்படையினரை உற்சாகப்படுத்த அப்பிரதேசத்தில் செல் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளுவதும் இந்தியப்படைத் தரப்புக்கு அவசியமாக இருந்தது. அதனால் இந்தியப்படை அதிகாரிகள் ஸ்ரீலங்காப் படையினரிடம் அந்த உதவியைக் கோரி இருந்தார்கள்.

"ஒப்பரேஷன் லிபரேசன் ”நடவடிக்கையைத் தொடருவதற்கு உதவியாக ஏற்கனவே பெருமளவு செல்களை கோட்டையில் இருந்த ஸ்ரீலங்காப் படைகள் தமது களஞ்சியங்களில் சேமித்து வைத்திருந்தார்கள். இந்தியப் படைகளின் வருகையைத் தொடர்ந்து அவற்றைப் பாவிக்கும் நல்ல தருணம் கிடைக்காமல் அவர்கள் பொருமிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆவலைத் தீர்த்துவைக்கும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை இந்தியப் படைத்துறைத் தலைமை வழங்கியதைத் தொடர்ந்து அவர்களது செல் தாக்குதல்கள் மிகுந்த உற்சாகத்துடன் மீண்டும் ஆரம்பமாகின.
யாழ்ப்பாணம் மீண்டும் செல்-வந்த(?) நாடாக மாற ஆரம்பித்தது.

புதிய திட்டம்:

புலிகளின் முற்றுகைக்குள் அகப்பட்ட நிலையில் நகரமுடியாதபடி பிரம்படி வீதியில் தற்காலிகத் தளம் அமைத்து தங்கியிருந்த இந்தியப்படை பராக் கொமாண்டோக்களை மீட்பதற்கு என்று ஒரு புதிய திட்டம் இந்தியப் படை அதிகாரிகளால் வகுக்கப்பட்டது.

அந்த திட்டத்தின் விபரங்கள் சங்கேத வார்த்தைகளினுடாக பராக் கொமாண்டோக்களுக்கும் அறிவிக்கப்பட்டன. பராக் கொமாண்டோக்களை மீட்கும் பணி 12.10.1987ம் திகதி அதிகாலை 2 மணிக்கு ஆரம்பமானது.

அதிகாலை திடீரென்று வானில் தோன்றிய இந்தியப் படைக்குச் சொந்தமான ஹெலிக்கொப்டர்கள் 50 மி.மீ. இயந்திரத் துப்பாக்கியால் சகட்டுமேனிக்கு சுட்டுக்கொண்டு இங்கும் அங்கும் பறந்து திரிந்தன. ஹெலிக்கொப்டர்களில் இருந்து செல்களும் ஏவப்பட்டன.

இந்தியப் படையினர் ஒரு புதிய தரையிறக்கத்தை மேற்கொள்வதான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கான அனைத்து எத்தனங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியப் படையினரின் தொலைத்தொடர்புச் சாதனங்களும் பிரம்படி ஒழுங்கைக்கு அருகில் உள்ள வீதிகளின் பெயர்களையும் தரையிறக்கத்தை மேற்கொள்ளுவதற்கு தோதான தரை அமைப்பைக் கொண்ட இடங்களின் பெயர்களையும் அடிக்கடி குறிப்பிட்டு இந்தியப் படையினர் மற்றொரு தரையிறக்கத்தை மேற்கொள்ள இருப்பதாக புலிகளை நம்பவைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருந்தன.

இந்தியப் படையினரின் ஆரவாரங்களையும் பரிமாறப்பட்ட அவர்களது தொலைத்தொடர்பு பரிவர்த்தனைகளையும் அவதானித்த புலிகள் இந்தியப் படையினரின் புதிய தரையிறக்கம் ஒன்றை எதிர்கொள்ளுவதற்கு தம்மைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில் இந்தியப் படையினர் தங்கியிருந்த கோட்டை முகாமில் இருந்தும் இந்தியப் படையினர் ஒரு நகர்வினை மேற்கொள்ள ஆரம்பிப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டார்கள். அந்த நகர்வினை எதிர்கொள்ளவும் புலிகளின் ஒரு அணி அங்கு அனுப்பிவைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் கவனத்தை பல திசைகளிலும் திருப்பிவிட்டு இந்தியக் கமாண்டோக்களை மீட்பதற்கான ஒரு உண்மையான நகர்வினை மிகவும் இரகசியமாக இந்தியப் படையினர் மேற்கொண்டார்கள்.

புலிகள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அந்த நகர்வு அமைந்திருந்தது.

இந்தியப் படையின் மேஜர் அனில்கவுல் என்பவர் தலைமையில் இந்தியப் படைக்குச் சொந்தமான இரண்டு யுத்தத் தாங்கிகள் (main Battle tanks) காங்கேசன்துறை தளத்தில் இருந்து புறப்பட்டு தெற்கு நோக்கி நகர ஆரம்பித்திருந்தன. நள்ளிரவில் டாங்கிகளின் இரைச்சல் யாழ் மக்களுக்கு புதிதாக இருந்தது. புலிகளின் வாகன இரைச்சலாக இருக்கலாம் என்று எண்ணி மக்கள் அவ்வளவு அக்கறை காண்பிக்கவில்லை.

காங்கேசன்துறையில் இருந்து புகையிரதப் பாதை வழியாகவே பயணம் மேற்கொண்ட அந்த இரண்டு யுத்தத்தாங்கிகளும் சந்தடியின்றி பிரம்படி ஒழுங்கையை வந்தடைந்தன.

ஏற்கனவே சங்கேத பாஷையின் மூலம் பரிமாறப்பட்டிருந்த அந்த மீட்பு நடவடிக்கை பற்றிய விபரத்தை அறிந்திருந்த இந்தியப் பராக் கொமாண்டோக்களும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தம்மைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

அப்பாவித் தமிழ் மக்களின் இரத்தத்தில் இந்தியக் கொமாண்டோக்களின் அடுத்த கட்ட நடவடிக்கை மெதுமெதுவாக – அதேவேளை மிகவும் அழுத்தமாக எழுதப்பட்டது.

இரகசிய நடவடிக்கை

யாழ்ப்பாணம் பிரம்படி வீதியில் ஒரு தற்காலிக தளத்தை அமைத்து நிலைகொண்டபடி புலிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டிருந்த பராக் கொமாண்டொக்களை மீட்பதற்காக இந்தியப் படையினரின் இரண்டு யுத்த தாங்கிகள் காங்கேசன்துறை இராணுவ முகாமிலிருந்து புறப்பட்டன. வீதிகளில் புலிகள் சென்றி அமைத்து நிலைகொண்டபடி அனைத்து திசைகளிலும் இருந்து முன்ஆற ஆரம்பித்திருந்த இந்தியப் படைகளின் பல்வேறு அணிகளையும் எதிர்த்துக் கடுஞ்சமர் புரிந்து கொண்டிருக்கையில் யுத்த தாங்கிகளின் மீட்பு நகர்வு மிகவும் இரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டன.

அதேவேளை இந்த இரகசிய நடவடிக்கை பற்றிய விபரங்கள் சங்கேத மொழிகளில் தொலைத்தொடர்பு கருவிகளின் ஊடாக பராக் கொமாண்டோக்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அவர்களும் டாங்கிகளின் வருகையை எதிர்பார்த்து ஒரு பாதையில் நிலைகொண்டபடி தயார் நிலையில் இருந்தார்கள்.

காங்சேன்துறையில் இருந்து ரயில் பாதை வழியாக மெல்ல மெல்ல நகர்ந்த அந்த இரண்டு யுத்ததாங்கிகளும் பிரம்படி ஒழுங்கைக்கு அருகில் வந்ததும் திடீரென்று ஊருக்குள் திரும்பின.
நள்ளிருட்டு இந்த தாங்கிகளின் வருகையை மறைத்துவிட்டிருந்தது.

பல்வேறு திசைகளில் இருந்தும் யாழ்ப்பாணத்தை நோக்கிய இந்திய இராணுவத்தின் முற்றுகை நகர்வுகள் ஆரம்பமாகி விட்டிருந்த நிலையில் புலிகளின் கவனம் முழுவதும் அந்த முன்நகர்வுகளை எதிர்கொள்வதிலேயே இருந்தன.

வானில் வட்டமிட்டபடி சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளிக்கொண்டிருந்த ஹெலிக்காப்டர்களை எதிர்கொண்டு சண்டையிடவேண்டிய தேவையும் புலிகளுக்கு உருவாகி இருந்தது.

யாழ் கோட்டையில் இருந்து நிமிடத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் பொழியப்பட்டுக்கொண்டிருந்த செல் மழையில் இருந்து தப்பவேண்டிய கட்டாயமும் புலிகளுக்கு இருந்தது.

ஏற்கனவே யாழ்க்குடாவில் ஆரம்பமாகி இருந்த மக்கள் இடப்பெயர்வுக்கு உதவவேண்டிய நெருக்குதல்களும் புலிகளது உறுப்பினர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

அடுத்ததாக வானில் இருந்து மற்றுமொரு தரையிறக்கம் திடீரென்று இடம்பெறலாம் என்று எதிர்பாத்து புலிகளின் சில படையணிகள் பரவலாகவும் நிலைகொண்டு காத்திருந்தன.

புலிகளின் முக்கிய படையணிகளின் கவனம் பல்வேறு திசைகளிலும் திரும்பியிருந்த சந்தர்ப்பத்தில் சந்தடியில்லாமல் நகர்ந்து பிரம்படி ஒழுங்கையை வந்தடைந்த யுத்த தாங்கிகள் அங்கு தமது ருத்திர தாண்டவத்தை ஆரம்பித்தன.

ரயில் பாதையை அண்டி கட்அவுட் நிலை எடுத்திருந்த புலிகளின் ஒரு சிறு அணியால் முற்றிலும் இரும்பினாலான அந்த யூத்த தாங்கிகளின் நகர்வை எந்த விதத்திலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர்களின் துப்பாக்கி வேட்டுக்கள் அனைத்தும் கடினமான உருக்கு இரும்பினாலான அந்த தாங்கிகளின் உடம்பில் பட்டுத் தெறித்தனவே தவிர பாதிப்பு எதனையும் ஏற்படுத்தவில்லை.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தாங்கி வந்து சேர்ந்த இடம் எது என்று பார்ப்பதற்காக தனது தலையை வெளியே நீட்டிய மேஜர் அனில் கவுல் என்ற அதிகாரி சூட்டுக் காயத்திற்கு உள்ளாகி இருந்தார். அவரது ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது. மற்றப்படி அந்த மீட்பு நடவடிக்கை இந்தியப் படையினருக்கு வெற்றிகரமானதாகவே அமைந்திருந்தது.

மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படையினர்

தமது உயிர்களைக் கைகளில் பிடித்தபடி பிரம்படி வீதிச் சுற்று வட்டாரத்தில் நிலையெடுத்திருந்த இந்தியப் பராக் கொமாண்டோக்கள் தமது மீட்பு உறுதியாகிவிட்ட சந்தோஷத்தில் அதுவரை அடக்கி வைத்திருந்த தமது கோபத்தை அப்பிரதேச மக்களின் மீது செலுத்த ஆரம்பித்தார்கள்.

அங்கிருந்த வீடுகளை எரித்தார்கள். கண்களில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினார்கள்.

பிரம்படி வீதியை வந்தடைந்த யுத்த தாங்கிகள் சுமார் 40 நிடங்கள் வரை அப்பிரதேசத்தில் நின்றன. கொல்லப்பட்ட எட்டு இந்தியப் படைவீரர்களின் உடல்கள் மற்றும் படுகாமடைந்த ஆறு படைவீரர்கள் யுத்த டாங்களினுள்ளே ஏற்றப்பட்டும்வரை அங்கு கொடூரச் சம்பவங்கள் பல இடம்பெற்றன.

இந்திய இராணுவ வீரர்களால் தமது பாதுகாப்பிற்கென பணயக்கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டிருந்த பலரும் கயிற்றினால் பிணைக்கப்பட்டு தாங்கிகளின் சங்கிலிச் சில்லுகளின் கீழே கிடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் உடல்கள் நசுங்கிச் சிதைந்தன.

ஏற்கனவே இந்தியப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டவர்கள் மற்றும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களும் டாங்கிகளால் மிதித்து சிதைக்கப்பட்டார்கள். இந்தியப் படைக்கொமாண்டோக்களை ஏற்றிக்கொண்டு திரும்பிய டாங்கிகள் அங்கிருந்த சில வீடுகளையும் கட்டிடங்களையும் குண்டு வீசித் தகர்த்துவிட்டும் சென்றன.

பிணக் குவியல்களில் புலர்ந்த பொழுது:

மறுநாள் பொழுது பிணக் குவியல்களின் காட்சியாகவே புலர்ந்தது.

டாங்கிகள் வந்து சென்ற வீதிகள் முழுவதுமே பிணங்கள் சிதைவடைந்து சிதறிக் காணப்பட்ட காட்சி யாழ் மக்களுக்கு புதிதான ஒன்றாகவே இருந்தது.

ஸ்ரீலங்காப் படைகளுடனான இத்தனை வருட கால கொடிய யுத்தத்திலும் இதுபோன்ற ஒரு காட்சியை யாழ் மக்கள் காணவில்லை.

ஸ்ரீலங்கா விமானங்களின் குண்டு வீச்சுக்கள், படுகொலைகள், சுற்றிவழைப்புக்கள், இனஅழிப்பு நடவடிக்கைகள் என்று எத்தனையோ அழிவுக் காட்சிகளை யாழ் மக்கள் பார்த்து அனுபவித்திருந்த போதிலும் அன்றைய நாளில் டாங்கிகளால் சிதைக்கப்பட்ட நிலையில் மனித உடல்கள் சிதறிக்கிடந்ததான அந்தக் காட்சி அவர்களுக்கு அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்துவதாகவே இருந்தது.

அதுவும் தங்களைக் காப்பதற்கென்று வந்திருந்த இந்தியப் படையினர் இப்படி ஒரு அட்டூழியத்தைச் செய்திருந்தார்கள் என்பதை அவர்களால் ஜீரணிக்கமுடியாமல் இருந்தது.
அப்பிரதேசத்தில் 40 இற்கும் மேற்பட்ட உடல்கள் டாங்கிகளினால் ஏற்றப்பட்டு சிதைந்து சின்னாபின்னமாகிப்போய் காணப்பட்டன.

அங்கும் இங்கும் சிதறிக்கிடந்த அந்த உடல்கள், உடலின் பாகங்கள் எஞ்சியிருந்த பிரதேசவாசிகளினாலும் சில விடுதலைப் புலி உறுப்பினர்களாலும் சேகரிக்கப்பட்டு ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு ஏரியூட்டப்பட்டன.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்தியப் படையினரின் படுகொலைகள் அன்றுடன் முடிந்துவிடவில்லை. இந்தியப் படைகள் ஈழ மண்ணில் நிலைகொண்டிருந்த அந்த இரண்டு வருட காலப்பகுதிகளிலும் அவை தொடரவே செய்தன.

அன்று எரிக்கப்பட்ட அந்தப் பிணக் குவியல்கள் அடுத்த சில நாட்களில் இந்தியப் படையினர் ஈழ மண்ணில் ஆட இருந்த கோரதாண்டவம் பற்றிய செய்தியை முன் அறிவித்தபடி எரிந்துகொண்டிருந்தது.

தொடரும்...

nirajdavid@bluewin.ch

மயக்கம் என்ன ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை- தயாரிப்பாளர் அறிவிப்பு


மயக்கம் என்ன ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை என்றும், முன்பு அறிவித்தபடி நவம்பர் 25-ம் தேதியே வெளியாகும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட மயக்கம் என்ன படம், பல்வேறு காரணங்களால் தள்ளிப் போடப்பட்டது. இறுதியாக நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் வரும் டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிப் போனதாக இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் கூறியிருந்த நிலையில், இப்போது மீண்டும் வெளியீட்டுத் தேதி நவம்பர் 25-தான் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையில் அனைத்துப் பாடல்களையும் தனுஷ் மற்றும் செல்வராகவனும் இணைந்து எழுதியுள்ளனர்.

'கண்டாங்கி'ச் சேலையில் கலக்கப் போகும் நமீதா!


நமீதாவைப் பார்த்து பல நாட்களாகி விட்டதே என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. புதுப் படம் ஒன்றில் புக் ஆகியுள்ளார் நமீதா - ஆனால் தமிழில் அல்ல, தெலுங்கில்.

ரமணா மோகிலியின் இயக்கத்தில் ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நமீதா நடிக்கிறார். இதற்கான பூஜையை சமீபத்தில் ஹைதராபாத்தில் போட்டனர். அதில் நமீதா வழக்கம் போல 'உடை பாதி, உடல் மீதி' என்ற ரேஞ்சுக்கு கவர்ச்சிகரமாக வந்திருந்தார்.

இப்படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் வருகிறாராம் நமீதா. இதன் மூலம் கிராமத்து சேலைக்கட்டில் ஜில்லென்று தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியின்போது நமீதா பேசுகையில், எனக்கு இந்தக் கதையை இயக்குநர் சொன்னபோதே பிடித்துப் போய் விட்டது. இதுவரை கவர்ச்சி பாத்திரங்கள், போலீஸ் என்று நான் செய்துள்ளேன். ஆனால் இந்தப்படத்தில்தான் கிராமத்து பெண் வேடத்தில் வரப் போகிறேன். என்னைச் சுற்றி நடப்பது போல கதையை வைத்துள்ளனர். பெண்களுக்கான படம் இது. ஆக்ஷனும் படத்தில் உண்டு.

எனது திறமையை முழுமையாக வெளிக் கொணரும் வகையிலான கதை இது என்பதால் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

இந்தப் படத்தை தெலுங்கில் எடுத்தாலும் கூட தமிழிலும் டப் செய்து வெளியிடுவார்கள் என்று நம்புவோமாக...!

தனுஷே எழுதிப் பாடிய '3' பாட்டு 'லீக்' ஆயிருச்சு!


தனுஷ், ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்க, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 3 படத்தின் பாடல் இன்டர்நெட்டில் லீக் ஆகி விட்டதாம். அந்தப் பாடலை தனுஷே எழுதிப் பாடியதாம்.

அனிருத் என்ற புதுமுக இசையமைப்பாளர்தான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் பாடல் தமிழ் மற்றும் ஆங்கில வரிகளைக் கொண்டது, இளைஞர்களைக் குறி வைத்து எழுதப்பட்ட பாடலாம்.

இந்தப் பாடல் இன்டர்நெட்டில் வெளியாகி விட்டதால், இந்தப் பாடலை மட்டும் தனி ஆடியோவாக வெளியிட தீர்மானித்துள்ளனராம். சமீப காலமாக இப்படி ஒரே ஒரு பாடலை மட்டும் சிங்கிள் டிராக் ஆக வெளியிடும் ஸ்டைல் அதிகரித்து வருகிறது. அஜீத்தின் மங்காத்தா சிங்கிள் பாடல் ஹிட் ஆன பின்னர் அதே பாணியை எல்லோரும் காப்பி அடிக்க ஆரம்பித்துள்ளனர்.

கமல் மகளும், ரஜினி மகளும் இணைந்து பணியாற்றும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு பெரும் கிராக்கியும், எதிர்பார்ப்பும் உள்ளது. இப்போது பாட்டு லீக் ஆகி விட்டதால் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அப்பாக்கள் பெயரை பிள்ளைகள் காப்பாற்றுவார்களா என்பது படம் வந்த பிறகு தெரியும்.

பாரதிராஜா - வைரமுத்து தொடங்கும் அல்லிநகர கல்வி அறக்கட்டளை!


இயக்குநர் பாரதிராஜாவும் கவிஞர் வைரமுத்துவும் தங்களின் சொந்த ஊர் மக்களின் கல்வி வளர்ச்சிக்காக புதிய கல்வி அறக்கட்டளை தொடங்குகிறார்கள்.

இந்தக் கட்டளைக்கு பாரதிராஜா - வைரமுத்து கல்வி அறக்கட்டளை என்று பெயர் சூட்டியுள்ளனர். தேனி மாவட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்காக இந்த அறக்கட்டளை உதவும் என்று அறிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை அல்லி நகரம் வீரப்ப அய்யனார் கோயிலில் நடந்த பாரதி ராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் தொடக்க விழாவில் இந்த அறிவிப்பை இருவரும் வெளியிட்டனர்.

வைரமுத்து கூறுகையில், நாங்கள் பிறந்த இந்த மண்ணுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். அதற்காக பாரதிராஜா - வைரமுத்து கல்வி அறக்கட்டளையை ஆரம்பிக்க விரும்புகிறேன். இதற்கு ஆரம்ப நிதியாக நான் என் சொந்த பணத்திலிருந்து ரூ 5 லட்சம் தருகிறேன். மேலும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கு நான் பாடல் எழுத தரப்படும் சம்பளத்தையும் தருகிறேன்," என்றார்.

அடுத்துப் பேசிய பாரதிராஜா, தன் பங்குக்கு ரூ 10 லட்சத்தை இந்த அறக்கட்டளைக்கு தருவதாகக் கூறினார். ஆனால் வைரமுத்துவுக்கு சம்பளம் என எதுவும் தரமாட்டேன் என்றும், அவர் விலை மதிப்பில்லாதவர் என்பதால், அவர் பாடலுக்கு சம்பளமாக எதையும் நிர்ணயிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்த அறக்கட்டளைக்கு பாலு மகேந்திரா ரூ 10000-ஐ நன்கொடையாகத் தருவதாக அறிவித்தார்.

ஈரானை அழிக்க பங்கர் குண்டுகளை சேகரிக்கும் அமெரிக்கா


ஈரானின் அணு ஆயுதக் கனவுகளை தரைமட்டமாக்கும் வகையில் அதன் அணு ஆயுத கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களைத் தகர்ப்பதற்காக அமெரிக்கா பங்கர்களை அழிக்கும் குண்டுகளை ஆயத்தப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிக அபாயகரமான இந்த குண்டுகள் அதல பாதாளத்தில் அமைக்கப்பட்டுள்ள, மிகுந்த பாதுகாப்புடன் கூடிய, எந்த வகையான ரகசிய இடங்களையும் கூட தரைமட்டமாக்கி விடும் தன்மை படைத்தவை.

Massive Ordnance Penetrator எனப்படும் இந்த வகை குண்டுகளை அமெரிக்கா தனது அதி நவீன B-2 குண்டு வீச்சு விமானத்தில் பொருத்தக் கூடிய வகையில் ஆயத்தப்படுத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

அணு ஆயுத கட்டமைப்புகள், ஆயுதக் கிட்டங்கிகள் என ஈரானின் முக்கிய நிலைகளை அழித்தொழிப்பதற்காகவே இந்த வேலையில் அமெரிக்கா இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் இஸ்ரேல்தான் இந்த வேலைகளைச் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஈரான் அணு ஆயுத திட்டங்களை ஆரம்ப நிலையியேலே அழித்து விட இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாகவும், தாக்குதலை நடத்தி ஈரானை நிலைகுலையச் செய்ய அது முயல்வதாகவும் தகவல்கள் கூறின.

இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஈரான் மீது யாராவது கைவைத்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று ரஷ்யா எச்சரித்திருந்தது.

இந்த நிலையில்தான் அமெரிக்கா, பங்கர் அழிப்பு குண்டுகளை தயார்படுத்தும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டுகளை வாங்குவதற்காக போயிங் நிறுவனத்துடன் அமெரிக்க விமானப்படை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாம்.

முதலில் 20 குண்டுகள் வாங்கப்படவுள்ளதாம். அதில் முதல் டெலிவரி கடந்த செப்டம்பரில் நடந்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஆனால் அது ஈரானை குறி வைத்து வாங்கப்படவில்லை என்றும் பென்டகன் விளக்கியுள்ளது.

இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், பங்கர்கள் அழிப்பு குண்டுகள் வாங்கப்படுவது உண்மைதான். ஆனால் எந்த நாட்டையும் குறி வைத்து அதை நாங்கள் வாங்கவில்லை. எங்களது திறமையை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவே இதை நாங்கள் செய்கிறோம்.

ஒரு எதிரியை அழிக்க, எதிரியின் ஆயுத பலத்தை அழிக்க இந்த வகை குண்டுகள் அவசியம். குறிப்பாக மக்களை கொத்துக் கொத்தாக பெருமளவில் அழிக்க வகை செய்யும் வைத்திருக்கும் எதிரிகளை அழிக்க இந்த வகை குண்டுகள் நமக்குத் தேவை என்றார் அவர்.

'போதிதர்மரை'க் குறி வைக்கும் ஆமீர்கான், சல்மான் கான்


ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஆமீர் கானும், சல்மான் கானும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பாலிவுட்டில் பிரபலமாக உள்ள 3 கான்கள் அதாவது ஆமீர், சல்மான், ஷாருக்கிற்கு மத்தியில் எப்பொழுதும் போட்டி தான். அவர்கள் 3 பேருக்கும் தென்னிந்திய படங்கள் மீது புது ஆர்வம் வந்துள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் எடுத்த கஜினி படம் இந்திக்குப் போனது. அங்கு ஆமீர் கான் நடித்தார். அது சூப்பர், டூப்பர் ஹிட்டானது.

மலையாளம், தமிழில் வெற்றி பெற்ற பாடிகார்ட் படம் இந்தியில் சல்மான் நடிப்பில் ரீமேக்காகி பெரும் வெற்றி பெற்றது. அதேபோல சல்மான் நடிப்பில், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் பிரபுதேவாவின் போக்கிரி இந்தியில் வாண்டட் என்ற பெயரில் எடுத்து வெற்றி கண்டார். தொய்ந்து போய்க் கிடந்த சல்மானுக்கு இந்த படம் புத்துயிர் அளித்தது என்று கூட சொல்லலாம்.

இப்படி தென்னிந்திய படங்கள் அதிலும் தமிழ் படங்களை இந்தியில் எடுக்க கான்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி நடித்த ஏழாம் அறிவைப் பார்த்த ஆமீரும், சல்மானும் அந்த படத்தின் உரிமையை எப்படியாவது வாங்கி நடித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். யார் வாங்குகிறார்கள் என்று பார்ப்போம் என்பது போன்று இருவரும் போட்டி போடுகின்றனர்.

யார் போதி தர்மராகப் போவது என்று பொறுத்திருந்து பார்ப்போம்...!

அனுஷ்கா வீட்டில் ஐடி ரெய்ட்?


ஹைதராபாத்: முன்னணி நடிகை அனுஷ்கா ஷெட்டியின் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது.

தெலுங்கிலும், தமிழிலும் கொடி கெட்டிப் பறக்கும் நடிகை அனுஷ்கா. அம்மணியின் சம்பளத்தைக் கேட்டாலே ஆ என்று வாயைப் பிளக்க வேண்டும். இந்நிலையில் ஹைதராபாத்தில் ஜுபிளி ஹில்ஸில் உள்ள அனுஷ்கா வீட்டிற்கு நேற்று மதியம் 2 மணிக்கு வருமானவரித் துறையினர் வந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் அந்த வீட்டையே புரட்டிப் போட்டு சோதனை நடத்தினர்.

இந்த சோதனை நடந்தபோது அனுஷ்காவும், அவரது பெற்றோரும் வீட்டில் இருந்தனர். இந்த சோதனையின் போது ரொக்கம், வங்கி பாஸ்புக்குள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு அனுஷ்கா வீட்டில் நடந்த இரண்டாவது வருமானவரி சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவின் மேனேஜர் ரகுவைத் தொடர்பு கொண்டு என்னப்பா வீட்டில் ரெய்டாமே என்று கேட்டதற்கு, அப்படி எல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. அனுஷ்கா பக்கத்து வீட்டில் கிரானைட் தொழில் அதிபர் உள்ளார். அவர் வீட்டில் தான் ரெய்டு நடந்தது என்று கூறினார்.

பொய் வழக்கு போட்டுட்டாங்க-நடிகர் ஜே.கே. ரித்தீஸ்


வேலூர்: அதிமுக ஆட்சியில் திமுகவினர் பொய் வழக்கு போடுவதாக நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் ஜே.கே.ரித்திஸ் குமார் தெரிவித்துள்ளார். போலீசாரை கொண்டு பொய் வழக்கு போடுவதால் திமுகவினரை அடிபணிய வைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த மணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரித்தீஷ். சினிமா தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வந்த அவர், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுரை அடுத்த பாப்பாங்குழி கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு என்ற விவசாயி ஜே.கே. ரித்தீஷ் மீது நிலம் அபகரிப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீசாரும், நில அபகரிப்பு விசாரணை பிரிவு போலீசாரும் புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சென்னை மைலாப்பூரில் உள்ள வீட்டில் இருந்த ரித்தீஷை கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

ரித்தீஷ் எம்.பி. மீது இந்திய தண்டனை (சட்டம் 465 போலி ஆவணம் தயாரித்து ஏமாற்றுதல்), 467 போலி ஆவணம் தயாரித்தல்), 468 (போலி ஆவணத்தை உண்மை என்று காட்டுதல், 471 (நம்பிக்கை மோசடி) 420 (மோசடி), 109 (குற்றச்செயல் புரிதல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணைக்குப்பின் பகல் 12 மணி அளவில் ஸ்ரீ பெரும்புதூர் மாவட்ட மாஜிதிரேட்டு கோர்ட்டில் ரித்தீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 30ந் தேதி வரை 15 நாட்கள் வேலூர் ஜெயிலில் காவலில் வைக்கும்படி மாஜிஸ் திரேட்டு அப்துல் மாலிக் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வேலூர் ஜெயிலுக்கு ரித்தீஷ் கொண்டு செல்லப்பட்டார். வேலூர் சிறை வாசலில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :

அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் திமுக நண்பர்கள் பலரை கைது செய்துள்ளது. போலீசாரை கொண்டு பொய் வழக்கு போடுவதால் திமுகவினரை அடிபணிய வைக்க முடியாது. பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் நானும் ஒருவன். சட்டத்தின் முன் நின்று பொய் வழக்கை உடைத்து வெளியே வருவேன். திமுக தலைவருக்காக உயிரை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார். இதன் பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அல்லி நகரம் அய்யனார் கோயிலில் இன்று அன்னக்கொடியும் கொடிவீரனும் துவக்கம்!


பாரதிராஜாவின் கனவுப் படம் என வர்ணிக்கப்படும் அன்னக்கொடியும் கொடிவீரனும் இன்று தேனி அல்லி நகரத்தில் தொடங்குகிறது.

பாரதிராஜாவின் குலதெய்வமான அய்யனார் கோயிலில் கிடாவெட்டி பொங்கல் வைத்து இந்த படத்தின் தொடக்கவிழாவை நடத்துகிறார் பாரதிராஜா.

பொம்மலாட்டம் படத்துக்குப் பிறகு பாரதிராஜா இயக்கும் இந்தப் படத்தில், இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்கிறார். இனியா, கார்த்திகா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

தொடக்கவிழாவுக்கு, இயக்குநர்கள் கே பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம், நடிகரும் மத்திய அமைச்சருமான நெப்போலியன், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்ஏ சந்திரசேகரன் உள்பட பலரும் பங்கேற்கின்றனர்.

படத் தொடக்கவிழாவையொட்டி, அல்லி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

துபாய் போகும் ஆர்யா - அமலா பால்!


மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடிக்கும் வேட்டை படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

லிங்குசாமி இயக்க, அவரது சகோதரர் பொறுப்பில் உள்ள திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை யுடிவி நிறுவனம் வாங்கியுள்ளது.

தூத்துக்குடி, சாலக்குடி உள்ளிட்ட பகுதிகள் தொடர்ந்து 40 நாட்கள் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்துகிறார் இயக்குநர் லிங்குசாமி. இங்கு ஆர்யா - அமலா நடிக்கும் பாடல் காட்சி ஒன்று படமாகிறது.

இன்னொரு பாடலுக்காக ரூ 60 லட்சம் செலவில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போடப்பட்டு படமாக்கப்படுகிறது.

யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் இசைவெளியீட்டு விழாவை வரும் டிசம்பர் 2-ம் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா