Saturday 12 November 2011

நாட்டில் 30+ வீதத்தினர் மனநோயாளர்கள்

நாட்டில் முப்பது சதவீதமானோர் மனநோயாளர்களாக இருப்பதுடன் இவர்களில் இரண்டு சதவீதமானோர் மனநோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கொடை மனநல சுகாதார ஆய்வு நிலையத்தின் தலைவர் வைத்தியர் ஜெயமென்டிஸ் தெரிவித்தார்.

இதனைத் தவிர மேலும் பத்து வீதமானோர் ஓரளவு மனநல பாதிப்புக்கு இலக்காகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Friday 11 November 2011

குழந்தைகள் சத்துக் குறைபாடு விழிப்புணர்வு பிரச்சாரம்: ரஜினியைச் சந்தித்த மத்திய அரசு அதிகாரிகள்!


சென்னை: குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் தொடர்பாக, நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினியை மத்திய அரசு அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.

சத்துக்குறைபாட்டால் குழந்தைகள் இறப்பதும் பாதிப்புக்குள்ளாவதும் இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது. குழந்தைகளுக்கு சிறு பிராயத்திலிருந்தே சத்தான உணவுகளைத் தருவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நாடு தழுவிய பெரிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொள்ள உள்ளது.

இதற்காக மக்களின் அபிமானம் பெற்ற முன்னணிக் கலைஞரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இந்த அமைச்சகம் கைகோர்க்கிறது. இந்தி நடிகர் ஆமீர்கானும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

எண்பதுகளில் போலியோ ஒழிப்புப் பிரச்சாரத்துக்கான விளம்பரப் படத்தில் நடித்த ரஜினி, அதன் பிறகு இப்போது மீண்டும் குழந்தைகளுக்கான முக்கிய விளம்பரப் படத்தில் நடிக்கிறாரா. வட இந்திய நகரங்களில் அவர் இதுகுறித்து பிரச்சாரம் செய்யவும், கருத்தரங்குகளில் பங்கேற்கவும் சம்மதித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த பிரச்சாரத்தை எப்படி மேற்கொள்வதென ஆலோசனை செய்வதற்காக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் நேற்று ரஜினியைச் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினியை நேற்று எங்கள் அமைச்சக உயர் அதிகாரிகள் சந்தித்துப் பேசினார்கள். அவரது ஒவ்வொரு வார்த்தையும் சர்வதேச அளவில் மக்களை வேகமாக சென்றடையும் சக்தி மிக்கவை. அவர் உண்மையான சாதனையாளர். அவர் எங்களுடன் இணைந்து செயல்படும்போது, இந்த பிரச்சாரத்துக்கே புதிய வேகம் கிடைத்துவிடும்," என்றார்.

நான்கு புதிய ஜோடிகள் அறிமுகமாகும் 'செ‌ங்‌கா‌டு'!


செங்காடு என்ற புதிய படத்தில் நான்கு ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர்.

எச்‌.எம்‌.டி‌. பி‌க்‌சர்‌ஸ் நி‌றுவனம் சா‌ர்‌பி‌ல்‌ வி‌.இரா‌வணன்‌ தயா‌ரி‌த்‌துள்‌ள படம் 'செ‌ங்‌கா‌டு'. இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ கதை‌, தி‌ரை‌க்‌கதை, வசனம்‌ எழுதி‌ இயக்‌கி‌ உள்‌ளா‌ர்‌ அறி‌முக இயக்‌குநர்‌ ரமே‌ஷ்‌ ரா‌மசா‌மி.

இந்தப் படத்தில் மொத்தம் நான்கு ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர்.

பு‌துமுகங்‌கள்‌ அருண்‌பி‌ரகா‌ஷ்‌ - ரூபா‌, சுரே‌ஷ்‌‌ - நகி‌னா‌, உத்‌தம்‌ - வி‌மலா‌, வி‌க்‌கி‌ - ப்‌ரி‌யா‌ என நா‌ன்‌கு ஜோ‌டி‌களுடன்‌ முத்‌துக்‌கருப்‌பன்‌, அன்‌பழகன்‌, வே‌ணுகோ‌பா‌ல், ரகுநா‌த்‌ ஆகி‌யோ‌ரும்‌ நடி‌த்‌துள்‌ளனர். இதி‌ல்‌ ரூ‌பா‌, ஐந்‌து தெ‌லுங்‌கு படங்‌களி‌ல்‌ கதா‌நா‌யகி‌யா‌க நடி‌த்‌தவர்‌ என்‌பது குறி‌ப்‌பி‌த்‌தக்‌கது.

ஜெ‌ரோ‌ம்‌ பு‌ஷ்‌பரா‌ஜ்‌ இசை‌யமை‌க்‌க, பா‌டல்‌களை‌ இளை‌யகம்‌பன்‌ எழுதி‌ உள்‌ளா‌ர். மணி‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌ய, பீ‌ட்‌டர்‌ பா‌பி‌யா‌ எடி‌ட்‌டி‌ங்‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌. நி‌ர்‌மல்‌ நடனம் அமைக்க, கலையை பூ‌பதி‌ கவனிக்கிறார். பாலன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

இது வரை‌ சினிமா படப்‌பி‌டி‌ப்‌பு‌ என்றால் என்னவென்றே தெரியாத தஞ்‌சா‌வூ‌ர்‌, ஒரத்‌தநா‌டு, மன்‌னா‌ர்‌குடி‌, வே‌தா‌ரண்‌யம்‌ பகுதியில் உள்ள அழகிய கிழகி‌ய கி‌ரா‌மங்‌களி‌ல்‌ செங்காடு படப்பிடிப்பு நடந்தது.

செங்காடு குறித்து இயக்குநர் ரமேஷ் ராமசாமி கூறுகையில், "இது நா‌ன்‌கு நண்‌பர்‌களுக்‌குள்‌ நடக்‌கும் கா‌தல் கதை. நண்‌பர்‌களுக்‌குள் துரோ‌கம் நடந்‌தா‌ல்‌ அது என்‌ன மா‌தி‌ரி‌ வி‌ளை‌வு‌களை‌ ஏற்‌படுத்‌தும்‌ என்‌கி‌ற அழுத்‌தமா‌ன தி‌ரை‌க்‌கதை‌தான் இந்தப் படத்துக்கு முக்கிய பலம்.

கா‌தல், கவர்‌ச்‌சி, நட்‌பு, பா‌சம், சென்‌டி‌மெ‌ண்‌ட், நகை‌ச்‌சுவை, என எல்‌லா‌ உணர்‌வு‌களை‌யு‌ம் வெ‌ளி‌ப்‌படுத்‌தும்‌ ஜனரஞ்சகப் படமா‌க செங்காடு அமை‌ந்‌தி‌ருக்‌கி‌றது. மற்‌ற மொ‌ழி‌களி‌லும்‌ வெ‌ளி‌யி‌டுகி‌ற அளவு‌க்‌கு இது கமர்‌சி‌யல்‌ படமாக உருவா‌கி‌ உள்‌ளது.

பு‌தி‌ய கோ‌ணத்‌தி‌ல் தி‌ரை‌க்‌கதை அமை‌த்‌து சி‌னி‌மா‌த்‌தனம்‌ இல்‌லா‌த சி‌னி‌மா‌வா‌க உருவா‌கி‌ உள்‌ளது. ஒரு இடத்‌தி‌ல்‌ கூட போ‌ரடி‌க்‌கா‌மல்‌, கா‌ட்‌சி‌க்‌கு கா‌ட்‌சி‌ அடுத்‌து என்‌ன நடக்‌கும்‌ என்‌று யூ‌கி‌க்‌க முடி‌யாத சம்‌பவங்‌களோ‌டு படு‌‌ வேகமா‌ன தி‌ரை‌க்‌கதை‌, பரபரப்‌பு‌ம்‌, வி‌றுவி‌றுப்‌பு‌ம் கொ‌ண்‌ட கா‌ட்‌சி‌கள்‌, எதி‌ர்‌பா‌ரா‌த க்‌ளை‌மா‌க்ஸ்‌ என படம் ரசி‌கர்‌களை இருக்‌கை‌யி‌ல்‌ கட்‌டி‌ப்‌போ‌டும்‌ அளவுக்கு உருவா‌கி‌ உள்‌ளது..." என்‌றார்.

பு‌துமுகங்‌களை‌ வை‌த்‌து படம்‌ இயக்‌க கா‌ரணம் என்ன‌? என்‌று அவரி‌டம்‌ கே‌ட்‌டதற்‌கு, "இந்‌த கதை‌யில் யா‌ர் நடி‌த்‌தா‌லும்‌ சுவரா‌ஸ்‌யம்‌ குறை‌யா‌து. இதி‌ல்‌ கதை‌தா‌ன்‌ ஹீ‌ரோ‌. பி‌ரபல கதா‌நா‌யகர்‌களை‌ தே‌டி‌ச்‌ செ‌ன்‌று நான்‌கு கதா‌நா‌யகர்‌களை‌ இணை‌த்‌து படமெ‌டுப்‌பது இந்‌த கா‌லகட்‌டத்‌தி‌ல்‌ சா‌த்‌தி‌யமா சொல்லுங்க.... அதனா‌ல்‌ பு‌துமுகங்‌கள்‌ நடித்தால் சரி‌யா‌க இருக்‌கும் என்‌று நி‌னை‌த்‌தே‌ன்‌. எல்‌லோ‌ரும் நன்‌றாக பயி‌ற்‌சி‌ எடுத்‌துக்‌ கொ‌ண்‌டு நடி‌த்‌தா‌ர்‌கள்‌. அவர்‌கள்‌ பு‌துமுகங்‌கள்‌ என்‌பதை‌ வி‌ட அந்‌தப்‌ பா‌த்‌தி‌ரத்‌துக்‌கு பொ‌ருத்‌தமா‌க இருந்‌தா‌ர்‌கள். படமும்‌ பா‌ர்‌ப்‌பதற்‌கும்‌ பு‌துசா‌க இருக்‌கும்.

அதே‌ போ‌ல யதா‌ர்‌த்‌தம்‌ இருக்‌க வே‌ண்‌டும்‌ என்‌று கி‌ரா‌மங்‌களை‌ நோ‌க்‌கி‌ச் செ‌ன்‌றே‌ன்‌. அதுவு‌ம்‌ படத்‌தி‌ற்‌கு பெ‌ரி‌ய ப்‌ளஸா‌க அமை‌ந்‌தி‌ருக்கி‌றது. கற்‌பனை‌ கதை‌யா‌க இருந்‌தா‌லும்‌ யதா‌ர்‌த்‌தம்‌ அதன்‌ அழகு கெ‌டா‌மல்‌ இருக்‌கும்‌. இப்‌போ‌து படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ வே‌லை‌கள்‌ முடி‌வடை‌ந்‌து பி‌ன்‌னணி‌ இசை‌ சே‌ர்‌ப்‌பு‌ வே‌லை‌கள்‌ நடை‌பெ‌ற்‌று வருகி‌ன்றன. இம்மாத இறுதி‌யி‌ல்‌ பா‌டல்‌ இசை‌ வெ‌ளி‌யி‌டுகி‌றோ‌ம்‌. அதன்‌ பி‌றகு படத்‌தை‌ வெ‌ளி‌யி‌ட தி‌ட்‌டமி‌ட்‌டுள்‌ளோ‌ம்‌...," என்றார்.

'தலைவலி' இல்ல.. 'ரெண்டாவது படம்'!


தமிழ்ப் படம் இயக்கிய சி எஸ் அமுதன் இயக்கும் அடுத்த படத்துக்கு 'ரெண்டாவது படம்' என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழில் வெளிவந்த படங்களைக் கிண்டல் அடித்து வெளிவந்தது 'தமிழ் படம்'. மிர்ச்சி சிவா, திஷா பாண்டே நடிக்க, அமுதன் இயக்கி இருந்தார். 'க்ளவுட் நைன்' நிறுவனம் தயாரித்திருந்தது. ரஜினி, கமல், பாக்யராஜா என ஒருவரை விடாமல் கிண்டலடித்த இந்தப் படம் ஓஹோவென ஓடியது.

இந்த நிலையில் இவரது இரண்டாவது படத்துக்கு தலவலி என்று பெயரிட்டிருப்பதாகவும், இதில் அஜீத், விஜய்யை கிண்டலடித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கடுப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது தனது இரண்டாவது படத்துக்கு 'ரெண்டாவது படம்' என்றே பெயரிட்டுள்ளனர்.

இதில் விமல், அரவிந்த், ரிச்சர்ட் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தியை படத்தின் பிஆர்ஓ மவுனம் ரவி இன்று வெளியிட்டுள்ளார்.

ஸ்கிரீன் க்ராப்ட்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

கண்ணன் இசையமைக்க, விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளிவரும் இந்தப் படம் விஞ்ஞானமும் சரித்திரமும் இணைந்த காதல் படம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதுவே பெரிய ஸ்பூப்தானே!

ஸ்ரீகாந்த் - ஜனனி அய்யர் நடிக்கும் 'பாகன்'!


பெரிய இடைவெளிக்குப் பிறகு, அடுத்தடுத்த படங்கள் வர ஆரம்பித்திருக்கிறது ஸ்ரீகாந்துக்கு. சமீபத்தில் அவர் நடித்த சதுரங்கம் படம் வெளியாகி நல்ல பெயரை வாங்கித் தந்தது.

இப்போது ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவாவுடன் இணைந்து நண்பன் படம் நடித்து வருகிறார். இந்த நிலையில் புதிதாக ஒரு படத்தில் தனி ஹீரோவாக நடிக்கிறார்.

பாகன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீகாந்தின் ஜோடியாக நடிக்கிறார் ஜனனி அய்யர்.

முகமது அஸ்லம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல இயக்குநர்கள் சேரன், அமீர், ராதா மோகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் முகமது அஸ்லம். தனது முதல் படத்திலேயே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, எடுக்கிறார் அஸ்லம்.

பாகன் படம் குறித்து அவர் கூறுகையில், "காமெடி கலந்த ஜனரஞ்சகப் படம் பாகன். காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட், வயிற்றைப் பதம் பார்க்கும் அளவுக்கு காமெடி என பக்கா பொழுதுபோக்குப் படம் இது. ஸ்ரீகாந்துக்கு சந்தேகமே இல்லாமல் ஒரு சிக்ஸர் இந்தப் படம். காட்சிக்குக் காட்சி காமெடியில் பின்னிப் பெடலெடுத்துள்ளார் ஸ்ரீகாந்த். அவருக்குள் இத்தனை பெரிய நகைச்சுவை கலைஞர் ஒளிந்திருந்தாரா என எல்லாருமே கேட்கும் அளவுக்கு காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. ரஜினி சாருக்கு ஒரு தில்லுமுல்லு மாதிரி, ஸ்ரீகாந்துக்கு இந்தப் பாகன் அமையும்," என்றவரிடம் படத்தின் கதை குறித்து கேட்டோம்.

"உருவத்தில் பெரிய யானையை சிறிய உருவம் கொண்ட பாகன் அடக்கி ஆள்கிறான். அதுபோல பிரச்சினைகள் நிறைந்த இந்த பெரிய வாழ்க்கையை சமாளித்து வாழ்பவனே ஹீரோ. வாழ்க்கையில் அதிகம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வெளிமாநிலம், வெளிநாடு செல்லுவோர் மத்தியில், வாய்ப்புக் கிடைத்தும் வெளிநாடு செல்லாமல் தன் சொந்த மண்ணில் உழைத்து முன்னேறுகிறான் இந்த பாகன். இந்த மண்ணின் மீது அவ்வளவு காதல்.

என் படத்தில் என் குருநாதர்கள் சேரன், அமீர், ராதா மோகன் பாதிப்பு இருக்கும். காரணம், அவர்களைப் பிடித்துப் போய், அவர் படங்களை ரசித்து அவர்களுடன் பணியாற்றியவன் நான். அதனால் என் படைப்பிலும் அவர்களின் பாதிப்பு இருக்கும். அது தவறும் அல்ல," என்றார் முகமது அஸ்லம்.

ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக அவன் இவன் படத்தில் நடித்த ஜனனி அய்யர் நடிக்கிறரா். ஸ்ரீகாந்தின் அம்மாவாக கோவை சரளாவும், அப்பாவாக மதராசப்பட்டினம் ஜார்ஜும், நண்பர்களாக வெண்ணிலா கபடி குழு சூரி, அங்காடித் தெரு பாண்டியும் நடிக்கின்றனர்.

ஜேம்ஸ் வசந்தன் இசை அமைக்கிறார். வெண்ணிலா கபடி குழு, குள்ளநரிக் கூட்டம் படங்களில் பணியாற்றிய லஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆன்டனியின் உதவியாளர் கெவின் இந்தப் படம் மூலம் எடிட்டராக அறிமுகமாகிறார். ஸ்டன்ட் சுப்ரீம் சுந்தர், பாடல்கள்- யுகபாரதி, சூர்யா, அறிமுகம் விருச்சிகா. பிஆர்ஓ ஜான்.

முருகானந்தம் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். விபி புரொடக்ஷன்ஸ் சார்பில் இணைந்து தயாரிக்கின்றனர் விஸ்வாஸ் யு லாட் மற்றும் வி புருஷோத்தம்.

மும்பையின் லோனாவாலா, பொள்ளாச்சி மற்றும் வெளிநாடுகளில் படமாகிறது பாகன்.

பொட்டம்மான் படுகாயம்! அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம் 6) (படம் இணைப்பு)

போர் என்பது ஒரு இலக்கின் மீது, அந்த இலக்கை அழித்துவிடும் நோக்கில் அல்லது அந்த இலக்கை வெற்றிகொண்டு ஆக்கிரமிக்கும் நோக்கில் வலிந்து மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை. ஆனால் போராட்டம் என்பதோ,

தம்மீது நிர்ப்பந்திக்கப்படும் ஆக்கிரமிப்பில் இருந்து தம்மை மீட்டுக் கொள்வதற்கும், தம்மீது திணிக்கப்படும் போரில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்கும், ஒரு தரப்பு மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கை.

விடுதலைப் புலிகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டைகளைப் பொறுத்தவரையில், இந்தியப் படையினர் மேற்கொண்டது போர் நடவடிக்கை.

விடுதலைப் புலிகள் மேற்கொண்டதோ போராட்ட நடவடிக்கை.

இந்தியப் படைகள் புலிகள் மீது, அவர்களை அழித்தொழிக்கும் வகையிலான ஒரு போரை திணித்திருந்தார்கள்.

புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைந்து அவர்களை நிராயுதபாணிகளாக்கி அவர்களை நிர்க்கதிக்குள்ளாக்கவும், அவர்களை அழித்தொழிக்கவும், இந்தியப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைதான் புலிகளுக்கு எதிரான அவர்களது போர் நடவடிக்கை.

அதேவேளை விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் இந்தியப் படையினரின் யுத்த முனைப்புக்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், இந்தியாவின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் இருந்து தம்மை மீட்டுக் கொள்வதற்கும், அவர்கள் வேறு வழியில்லாது மேற்கொண்ட அந்த தற்காப்பு நடவடிக்கையை 'போராட்டம்' என்று குறிப்பிடலாம்.

போரும், போராட்டமும்:

இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு, ஈழத்தமிழர் மீது இந்தியா திணித்திருந்த போரைப் பற்றி கடிதம் எழுதியிருந்தார். இந்தியா ஈழத்தமிழர்கள் மீது திணித்திருந்த யுத்தத்தில் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றும்படியும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவர் தனது கடிதத்தில், ஆயிரக்கணக்கான போராளிகள் யுத்தத்தில் மடியும் அதேவேளை பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களும் இந்தியா திணித்துள்ள இந்தப் போரில் சிக்குண்டு மடியும் அபாயம் உருவாகியுள்ளது. விடுதலைப் புலிகள் என்பவர்கள் மக்களில் இருந்து அன்னியப்பட்டவர்கள் அல்ல. ஈழத் தமிழர்களில் ஒரு அங்கமே விடுதலைப் புலிகள். இது ஒரு மக்கள் அமைப்பு. மக்கள்தான் புலிகள்! புலிகள்தான் மக்கள்.

எனவே எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத ஒரு யுத்தத்தை இந்தியா ஈழத்தமிழ் மக்கள் மீது திணித்துள்ளது. இந்த அநியாயத்தை இந்திய மக்கள், குறிப்பாக தமிழ் நாட்டுத் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து தடுத்து நிறுத்த முன்வரவேண்டும். தமிழ் நாட்டு மக்கள் மாத்திரம் இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் எழுப்பினால், எம் இனத்திற்கு எதிரான இந்தியாவின் அழித்தொழிப்பு யுத்தத்தை நிறுத்திவிடமுடியும்.

எனவே உண்மை நிலையை தமிழ் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து, எமது மக்களின் போராட்டத்திற்கு சார்பான அலையை தமிழ் நாட்டில் உருவாக்கி எமது மக்களை இந்திய அரசின் அழித்தொழிப்பு போரில் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று எழுதியிருந்தார்.

இந்தியப் படைகள் புலிகளுக்கு எதிரான போரை ஆரம்பித்த மூன்று நாட்களுக்குள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இரண்டு அவசரக் கடிதங்களை அனுப்பி வைத்திருந்தார்.

அந்தக் கடிதங்களில், இந்தியப் படைகள் ஈழத் தமிழர்கள் மீது திணித்திருந்த போரினால் 150 ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 500 ற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அமைதியையும், சமாதானத்தையும் நிலைநாட்டவென ஈழ மண்ணில் வந்திறங்கிய இந்தியப் படைகள் ஈழத் தமிழருக்கு எதிராக முழு அளவிலான யுத்தமொன்றில் இறங்கியுள்ளது பற்றி தனது கவலையையும், அதிருப்தியையும் அவர் தனது கடிதங்களில் வெளியிட்டிருந்தார்.

விடுதலைப் புலிகள் மீது இந்தியா திணித்திருந்த போரை எதிர்த்து போராடுவரைத் தவிர தமக்கு வேறு எந்த வழியும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன், அப்பாவி மக்கள் மீது இந்தியப்படை நடாத்தும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

விடுதலைப் புலிகள் மீது என்று கூறி, ஈழத் தமிழர்கள் மீது இந்தியா தொடுத்திருந்த யுத்தத்தின் ஆரம்பத்திலேயே, விடுதலைப் புலிகளின் தலைவர் எழுதியிருந்த அந்தக் கடிதங்கள், தம்மீது திணிக்கப்பட்டிருந்த போரை விலக்கிக்கொள்ளும்படி அக்கடிதங்களில் அவர் விடுத்திருந்த வேண்டுகோள்கள் அனைத்துமே, விடுதலைப் புலிகள் இந்தியப் படையினருடனான யுத்தத்தை விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றது.

புலிகள் விரும்பாத ஒரு போரை இந்தியா புலிகள் மீது திணித்ததினாலேயே, வேறு வழி எதுவும் இல்லாமல் அந்தப் போரை எதிர்கொண்டு போராடவேண்டிய கட்டாயம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டிருந்தது.

புலிகளின் இழப்பு:

இந்தியாவிற்கு எதிராக விடுதலைப் புலிகள் நடாத்திய போராட்டம் என்பது, புலிகளைப் பொறுத்தவரையில் அவ்வளவு இலகுவான ஒன்றாக இருக்கவில்லை.

ஏற்கனவே, விடுதலைப் புலிகளை களமுனையில் வழி நடாத்திக்கொண்டிருந்த சிரேஷ்ட தளபதிகளான பொன்னம்மான், கிட்டு, புலேந்திரன், குமரப்பா, திலீபன் என்று பல முக்கிய போராளிகள் இல்லாத நிலையிலேயே புலிகள் இந்தியாவுடனான யுத்தத்தைச் சந்தித்திக்கவேண்டியிருந்தது.

யுத்தம் ஆரம்பமான முதலாவது நாளிலேயே, புலிகள் தரப்பு பல இழப்புக்களை சந்திக்க ஆரம்பித்திருந்தது.

இந்தியப் படையினருக்கு எதிராகப் போராடக் களமிறங்கிய பெண்புலிகள் தனது முதலாவது இழப்பைச் சந்திக்க நேர்ந்தது.

ஒக்டோபர் 10ம் திகதி, கோப்பாய் வழியாக முன்னேற முயன்ற இந்தியப் படையினரை இடைமறித்துத் தாக்குதல் மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் பெண்கள் அணி, இரண்டாவது லெப்டினட் மாலதி (மன்னாரைச் சேர்ந்த பேதுறு சகாயசீலி) என்ற போரளியை இழந்து நின்றது. விடுதலைப் புலிகளின் வரலாற்றில் மாவீரரான முதலாவது பெண் போராளி மாலதி என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மற்றொரு மோதலில் புலிகள் அமைப்பின் மற்றொரு முக்கிய தளபதியான லெப்டினட் கேணல் சந்தோசமும் வீரமரணம் அடைந்திருந்தார். யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த விஞ்ஞானபீட மாணவராக இருந்த இவர், புலிகள் அமைப்பில் இருந்த மிகச் சிறந்த போராளிகளுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று ஒக்டோபர் 11ம் திகதி நள்ளிரவில் யாழ் மருத்துவபீட மைதானத்தில் தரையிறக்கப்பட்ட இந்தியப் படையினருடன் நடைபெற்ற சண்டையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரான பொட்டு அம்மான் படுகாயம் அடைந்திருந்தார்.

இதேபோன்று புலிகள் அமைப்பின் பல முக்கிய போராளிகளும், இந்தியப் படையினருடனான சண்டைகளில் கொல்லப்பட்டும், காயமடைந்தும் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டிருந்தார்கள்.

ஆனால் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் ஒரு விடயத்தில் மட்டும் தெளிவாக இருந்தார்கள். எக்காரணம் கொண்டும், இந்தியப் படையினரிடம் சரணடைவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

இந்தியப் படையினரிடம் தமது ஆயுதங்களை ஒப்படைத்து, அவமானப்பட்டு மரணிப்பதைவிட, மானத்துடன் போராடி வீரமரணம் எய்துவது மேல் என்று ஒவ்வொரு புலி உறுப்பினரும் கங்கணம் கட்டிக்கொண்டு யுத்தமுனைக்குச் சென்றார்கள்.

அவர்கள் எதிர்பார்த்த யுத்தமுனை வெகு விரைவில் அவர்களைத் தேடி வந்துகொண்டிருந்தது...

இந்தியப் படையின் ஆரம்ப கட்ட இழப்பு

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் ஆரம்பமான தினத்திலேயே இந்தியப் படையினருக்கு ஏற்பட்டிருந்த பாரிய இழப்பானது, ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொள்ள இருந்த முழு நடவடிக்கையின் வெற்றியையுமே கேள்விக்குள்ளாக்கியிருந்தது.

எந்த ஒரு போர் நகர்விலும் முதலாவது வெற்றி என்பது மிகவும் முக்கியமானது என்றே அனைத்து போரியல் நிபுணர்களும் குறிப்பிடுகின்றார்கள். யுத்தம் ஆரம்பான முதல் தினங்களில் ஏற்படுகின்ற வெற்றிகள், தோல்விகள் என்பன, அந்த யுத்த நடவடிக்கையின் இலக்கையும் இறுதி முடிவையும் நிர்ணயித்துவிடுவதாக போரியல் ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.

போராடும் படையினருக்கு உளவியல் ரீதியில் உற்சாகத்தையும், தைரியத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் இலகுவாக வெற்றிகொள்ளக்கூடிய ஒரு இலக்கைத் தேர்ந்தெடுத்து, அதனைக் குறிவைத்துத்தான் எந்த ஒரு தலைவனும் தனது முதலாவது தாக்குதல் திட்டத்தை வகுப்பது வழக்கம்.

ஏனெனில் எந்த ஒரு யுத்த நடவடிக்கைக்கும், முதல் ஓரிரு நாட்களில் ஏற்படுகின்ற தோல்விகள், அந்த நடவடிக்கையின் இறுதி வெற்றிக்குப் பாரிய பின்னடைவைத் தந்துவிடும் என்பதே போரியல் யதார்த்தம்.

இந்தியப் படையினர் ஈழ மண்ணில் மேற்கொண்ட ஒப்பரேஷன் பவான்| (Operation Pawan) இராணுவ நடவடிக்கையும் படுதோல்வியில் முடிவடைவதற்கு ஆரம்பத்தில் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள்தான் காரணம் என்று போரியல் அறிஞர்கள் சுட்டிக் காண்பிக்கின்றார்கள்.

இந்தியப் படையினர் தமது தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்த தினமே பாரிய இழப்புக்ளைச் சந்தித்திருந்தார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடிப்பதற்கு என்று யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் தரையிறக்கப்பட்ட துருப்பினர் அனைவருமே ஒட்டுமொத்தமாக புலிகளினால் அழிக்கப்பட்ட நிகழ்வானது, தொடர்ந்து உற்சாக மனோபாவத்துடன் போராட முடியாத வகையில் இந்தியப்படையினரின் மனநிலையைச் சிதைj;துவிட்டிருந்தது.

அதுவும், இந்திய இராணுவத்தின் அதி உச்சப் பயிற்சியைப் பெற்றவர்கள் என்றும், இந்திய இராணுவத்தின் சிறந்த, சாகாசம் புரியக் கூடிய வீரர்கள் என்றும், ஒவ்வொரு இந்தியப் படையினனது மனங்களிலும் குடியிருந்த இந்தியப் பராக் கொமாண்டோக்கள் (Para Commandos), புலிகளின் பொறியில் மாட்டி தடுமாறிய சம்பவம், பரிதாபமாக உயிரை இழந்திருந்த சோகம் என்பன, ஒவ்வொரு இந்தியப் படையினனது மனங்களிலும் கிலேசத்தை ஏற்படுத்தியிருந்தது.

புலிகளை இலகுவாக வெற்றிகொண்டுவிடலாம், இன்னும் ஓரிரு நாட்களுக்குத்தான் இந்தச் சண்டைகள், அதன் பின்னர் புலிகள் சரனடைந்து விடுவார்கள், என்றெல்லாம் தமது தளபதிகள் கூறியதை நம்பி உற்சாகத்துடன் களமிறங்கியிருந்த இந்தியப் படை வீரர்களுக்கு, தாம் நினைத்தபடி களமுனை இலகுவான ஒன்றாக இருக்கப்போவதில்லை என்று முதன்முதலில் புரிய ஆரம்பித்திருந்தது.

சாதாரண இந்தியப் படை ஜவான்களின் மனங்களில் ஏற்பட ஆரம்பித்திருந்த இந்த வகை மனவோட்டம், களமுனைகளில் இந்தியத் தரப்பிற்கு மிகப்பெரிய பின்னடைவை பெற்றுத் தந்திருந்தது.

தொடர்ந்து நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ள முடியாமல் போனதற்கும், ஆரம்பத்தில் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வியே பிரதான காரணம் என்று கூறப்படுகின்றது.

இந்தியாவின் யுத்த வரலாற்றில், அது தனது யுத்த தந்திரங்களை மாற்றியமைக்கவேண்டிய அவசியத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவமாகவும், யாழ் பல்கலைக்கழக தரையிறக்கம் இந்தியப் படைத்துறைத் தளபதிகளுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்திருந்தது.

அதுமட்டுமல்ல, பின்நாட்களில் ஈழ மண்ணில் இருந்து இந்தியப் படைகள் பின்வாங்கிய பின்னரும் கூட, இந்தியப் படைத்தளபதிகளும், இராஜதந்திரிகளும் தமக்குள் பொருமிக்கொண்டும், தம்மிடையே சண்டைகள் பிடித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டும் இருப்பதற்கு காரணமாக அமைந்த ஒரு சம்பவமாக, அன்றைய அந்தத் தரையிறக்கத் தோல்விகள் அமைந்திருந்தன.

குறிக்கோள் எதுவும் இல்லாத யுத்தம்:

புலிளுடனான தாக்குதலை- குறிப்பாக புலிகளிடம் அடிவாங்கிய யாழ் பல்கலைக்கழக மைதான தரையிறக்க நடவடிக்கையை நெறிப்படுத்திய இந்தியப் படை அதிகாரியின் பெயர் மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங்.

இந்தியப் படை நடவடிக்கை பற்றி பின் நாட்களின் அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருந்தார். அவர் கூறுகையில்,

முதலில் புலிகளுடன் நாம் எதற்காக மோதுகின்றோம் என்று எந்தவித குறிக்கோளும் எமக்கு இருக்கவில்லை. எந்த ஒரு தாக்குதலுக்கும், யுத்தத்திற்கும் ஏதாவது ஒரு குறிக்கோள் இருப்பது அவசியம். ஆனால் புலிகளுடன் நாம் ஆரம்பித்த யுத்தத்தைப் பொறுத்தவரையில் எந்தவித குறிக்கோளும் எமக்கு இருக்கவில்லை.

அன்று தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்ட தினத்தில் எனக்கு ஒன்பது ஹெலிகாப்டர்கள் தேவை என்று கேட்டிருந்தேன். தரையிறங்கிய துருப்பினருக்கு வானில் இருந்து தேவையான சூட்டாதரவை வழங்குவதற்கென்று இதனை நான் கோரி இருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் அவை மறுக்கப்பட்டிருந்தது.

முக்கியமாக இந்திய அமைதிகாக்கும் படையின் யுத்த நடவடிக்கைகளை வெறும் அரசியல் இராஜதந்திரியான தீட்ஷித் நெறிப்படுத்த ஆரம்பித்ததுதான் அனைத்தும் பிழையாகிப் போவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது. இவ்வாறு ஹரிகிரத் சிங் தெரிவித்திருந்தார்.

கொமாண்டரின் முட்டாள்தனம்:

புலிகளை வழைத்துப் பிடிப்பதற்கு என்று கூறி இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட அந்த தரையிறக்கம் பற்றி பின்நாட்களில் கருத்து தெரிவித்த முன்நாள் இந்தியத் தூதுவர் ஜே.என்.தீக்ஷித், அது இந்தியப் படை கொமாண்டரது முட்டாள்தனமான நடவடிக்கை என்று விமர்சித்திருந்தார். மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் மேற்கொண்ட முட்டாள்தனமான தரையிறக்க நடவடிக்கையினால்தான் இந்தியப் படையினர் அதிக இழப்புக்களைச் சந்திக்கவேண்டி ஏற்பட்டது. பூரண நிலவில், புலிகள் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் ஹெலிக்கொப்டர் தரையிறக்கத்தை மேற்கொள்வதை, முட்டாள்தனம் என்று குறிப்பிடாமல் வேறு எவ்வாறு கூறமுடியும்? இந்தியப் படையினரின்; திட்டத்தை தொலைத் தொடர்பு பரிமாற்றங்களின் போது புலிகள் நிச்சயம் ஒட்டுக்கேட்டிருப்பார்கள் என்பதை இந்தியப் படை அதிகாரிகள் புரிந்துகொண்டிருக்கவேண்டும். மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் ஒரு நல்ல அதிகாரி கிடையாது. இலங்கையில் இந்தியப் படைக்கு கிடைத்த முதலாவது ஜெனரல் ஒரு முட்டாள் என்பது எமக்கு ஒரு பெரிய பின்னடைவே என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலதிகாரிகளிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை.

புலிகள் மீது இந்தியப் படைகள் மேற்கொண்ட திடீர் தாக்குதல் முயற்சி பற்றி ஜெனரல் கல்கட் பின்நாட்களில் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியில்,

யாழ் குடாவை கைப்பற்றுவதற்கான திட்டம் தீட்டப்படும்போது நானும் அங்கிருந்தேன். உண்மையிலேயே அது நல்லதொரு திட்டமாகவே இருந்தது. அதேவேளை நடவடிக்கைகள் பிழைத்தது பற்றி நான் கருத்துக் கூறுவது அவ்வளது நல்லதாக இருக்கமாட்டாது. ஏனெனில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்போது நான் அங்கு இருக்கவில்லை.

அன்றைய கள நிலவரங்களையும், தேவைகளையும் அடிப்படையாக வைத்துத்தான் நடவடிக்கை தொடர்பான முடிவை ஜெனரல்; ஹரிகிரத் சிங் எடுத்திருப்பார். அதனால் அந்த நடவடிக்கை தோல்வியடைந்தது பற்றி நான் தீர்ப்புக் கூறுவது பொருத்தமல்ல. ஆனால் ஒரு விடயத்தை நான் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். அவர் எடுத்திருந்த எந்த ஒரு முடிவையும் அவர் தனது மேலதிகாரிகளுடன் நிச்சயம் கலந்தாலோசித்திருக்கவேண்டும். யாழ்ப்பாண தரையிறக்க விடயத்தைப் பொறுத்தவரை அவ்வாறு நடந்ததாகத் தெரியவில்லை.

விடுதலைப்புலிகளின் பலம், அவர்களிடமுள்ள ஆயுதங்களின் விபரங்கள் என்பன தெரியாமல் நேரடியாகச் சென்று அவர்களைத் தாக்க முற்பட்டதே எமது பின்னடைவிற்கு காரணம் என்று நான் நினைக்கின்றேன்.

அதேவேளை, இந்தியப் படையினருக்கு புலிகள் தொடர்பாக வழங்கப்பட்டிருந்த பிழையான தகவல்களும், பிழையான முடிவை நாம் மேற்கொள்ளக் காரணமாக அமைந்திருந்தது என்ற உண்மையையும் அனைவரும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். புலிகள் ஒருபோதும் இந்தியப் படையினரைத் திருப்பித் தாக்கமாட்டார்கள் என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டிருந்த புலனாய்வுத் தகவல்களும் எங்களை பிழையாக வழிநடத்தியிருந்தன. இவ்வாறு ஜெனரல் கல்கட் தெரிவித்திருந்தார்.

ஆகமொத்தத்தில், இலங்கை வந்த இந்திய உயரதிகாரிகள் அனைவரும் இந்தியா திரும்பியதும், ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி அடித்துக்கொள்ளும் அளவிற்கு, ஈழமண்ணில் பாரிய தோல்வியை விடுதலைப் புலிகள் அவர்களுக்கு வழங்கியிருந்தார்கள்.

இன்று கூட, இந்தியப் படைகளின் அந்த அக்டோபர் நடவடிக்கை பற்றி எழுதும், பேசும் அனைத்து ஆய்வாளர்களும், அறிஞர்களும், அன்றைய தினத்தில் இந்தியப் படைகளுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டதைப் போன்ற ஒரு அசம்பாவிதம் எதிர்காலத்தில் எப்போதுமே ஏற்பட்டுவிடக்கூடாது என்றுதான் குறிப்பிடுகின்றார்கள்.

இந்தியப் படையினருக்கு அந்த இரவில் ஏற்பட்ட கெட்ட கனவு அன்றுடன் மட்டும் முடிந்துவிடவில்லை.

அதுபோன்ற பல கெட்ட கனவுகளை ஈழ மண்ணில் இந்தியப் படைகள் தொடர்ந்தும் காண நேர்ந்தது.

இந்திய அரசியல்வாதிகள் ஈழத்தமிழருக்கு தொடர்ந்து செய்துவந்த துரோகங்களின் தண்டனையை, பாவம் இந்தியப் படை ஜவான்களே அறுவடை செய்ய நேர்ந்ததுதான் உண்மையிலேயே மிகப் பெரிய சோகம்.

தொடரும்...


nirajdavid@bluewin.ch

ஸ்ரீலங்காவில் மனித உறுப்புகளை கள்ளமாக எடுக்கும் கோஷ்டி!

இலங்கையில் போர்குற்றம் நடந்தது, இன அழிப்பு நடந்தது, தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொலைசெய்யப்பட்டர்கள் ஆனால் இவற்றை விட உயிருடன் உள்ளபோதே உடல் உறுப்புக்களை களவாடி எடுத்து அதனை விற்கும் கும்பலும் இங்கும் உள்ளது. இவர்கள் பிடியில் இருந்து அதிஷ்டவசமாகத் தப்பி வந்த பெண் இலங்கைப் பொலிசாருக்கு முறைப்பாடு செய்ய முன்னர் ஆசிய மனித உரிமைச் சபைக்கு முறைப்பாடு செய்துள்ளார் என்றால் பாருங்களேன்.

திருமதி காந்தி என்னும் தம்புள்ளையச் சேர்ந்த பெண் ஒருவர் கான்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் அடிக்கடி கண்டி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரை அணுகிய 2வர் தாம் வைத்தியர் என்று தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர். அத்தோடு கான்சரைக் குணப்படுத்த இந்தியா செல்வது நல்லது என்று அறிவுரை கூறியுள்ளனர்.

38 வயதாகும் குறித்தபெண் இதற்கு மறுப்புத் தெரிவித்த நிலையில் ஒருநாள் அவரை மயக்கி பலவந்தமாக இவ்விருவரும் கடத்திச்சென்று ஓர் இடத்தில் அடைத்துள்ளனர். அங்கே தன்னைப் போல பல பெண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததை அவர் பார்த்துள்ளார். அத்தோடு மட்டுமல்லாது உடலில் உள்ள சிறுநீரகம் மற்றும் தேவையான உறுப்புகளை அவர்கள் சத்திர சிகிச்சை மூலம் அகற்ற அங்கே தனியான அறைகள் இருந்ததையும் அவர் கண்டு ஆடிப்போயுள்ளார்.

குறித்த இப் பெண்ணின் எந்த உறுப்புகளை தாம் அகற்றுவது என்பது தொடர்பாக இக் கும்பல் இவர் மீது பல பரிசோதனைகளை நடத்தியுள்ளது. தான் இந்தியாவில் இருக்கிறேனா இல்லை இலங்கையில் இருக்கிறேனா என்று தெரியாத நிலை இப் பெண்ணுக்கு இருந்திருக்கிறது. பின்னர் சிங்களம் பேசும் தாதிமாரைப் பார்த்ததும் தான் இவர் இலங்கையில் இருப்பதை இவர் உணர்ந்துள்ளார்.

நவம்பர் மாதம் 1ம் திகதி இப் பெண் சிறுநீர் கழிக்கும் அறைக்குச் சென்றவேளை அங்கே வெலைசெய்த பெண் ஒருவரோடும் பேசியுள்ளார். அவரின் உதவியோடு சிறுநீர் கழிக்கும் அறைக்குப் பின்னால் உள்ள ஜன்னல் வழியாக ஏறிக்குதித்து அவர் அங்கிருந்து தப்பியுள்ளார். அவர் ஓடிச்சென்று ஒரு ரயில்வே நிலையத்துக்குச் சென்று பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் பிறிதொரு இடத்துக்குச் சென்றுள்ளார்.

அவர் தற்போது கொடுத்திருக்கும் வாக்குமூலத்துக்கு அமைவாக இலங்கையில் இயங்கிவரும் இக் கும்பல் நோயாளிகளைக் குறிவைத்து அவர்கள் உடலில் உள்ள உறுப்புகளை அகற்றி அதனை வெளிநாடுகளுக்கு விற்றுவருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார். ஈரல் சிறுநீரகங்கள் மற்றும் ஏனைய உடல் உறுப்புகளை இவர்கள் அகற்றி விற்பனை செய்து வருவதாகவும் கூறப்பட்டுகிறது. இச்செயலை ஆசிய மனித உரிமை மையம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

அத்தோடு இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தப்பட்டவேண்டும் எனவும் அது கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு மனித உறுப்புகள் செல்வது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.

அது விமான நிலையம் ஊடகத்தான் செல்லவேண்டும். அதுவும் குளிரூடப்பட்ட நிலையில் தான் செல்லவேண்டும். இப்படி இருக்கும்போது இக் கும்பல் அரசாங்கத்தின் துணை இன்றி எவ்வாறு செயல்படமுடியும் என்பது சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது என்கிறார் கொழும்பு நிருபர்.

அதிர்வு

ஜெயலலிதா தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது: சீமான்

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்கு தண்டனைக்கு 8 வார கால தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வேலூர் ஜெயிலில் இருக்கும் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரை சந்தித்து பேசினார்.

பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம்,

’’சிறையில் உள்ள 3பேரின் தூக்கு தண்டனை வழக்கு வருகிற 29-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அவர்கள் 3 பேரும் சட்டரீதியாக விடுதலையாவார்கள். தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

தூக்கு தண்டனையே கூடாது என்று தமிழர்கள் மட்டுமல்ல, பல்வேறு அமைப் பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் ஆகியவை நடத்தி எங்கள் உணர்வை வெளிபடுத்தி வருகிறோம்.

கொலைக்கு தண்டனை கொலையாகாது. 21 ஆண்டுகள் நீண்ட ஆயுள் தண்டனை அனுபவித்து உள்ளனர். அவர்களுக்கு 2 தண்டனை கொடுக்க கூடாது.

29-ந்தேதி கோர்ட்டில் நடக்கும் வழக்கில் அவர்கள் விடுதலையாவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழக அமைச்சரவையை முதலமைச்சர் ஜெயலலிதா கூட்டி தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

நான் 2008-ல் இருந்து 10 ஆண்டுகள் அமெரிக்கா, கனடா செல்ல விசா எடுத்து உள்ளேன். தற்போது சர்வதேச அளவில் தமிழர்களை நான் ஒருங்கிணைந்திடுவேன் என்ற அச்சம் காரணமாக எனக்கு அமெரிக்கா, கனடாவுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’’என்று கூறினார்.

யாழில் அதிபரை வீட்டில்வைத்து வெட்டிக் கொலை! (படம் இணைப்பு)

யாழ். மாவட்டம் தென்மராட்சிப் பிரதேசத்தில் வரணி, கரம்பைக்குறிச்சி அரசினர் தமிழ்கலவன் பாடசாலையின் அதிபர், யாழ். கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் அறையொன்றிலிருந்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். அதிபர் சிவசுப்ரமணியம் தயாபரன் (வயது 40) என்பவரே கடந்த இரவு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது...

யாழ். மீசாலைப் பகுதியில் வசிக்கும் பாடசாலை அதிபர் தயாபரனுக்கு, யாழ். கந்தர்மடம் புகையிரதநிலையத்திற்கு அருகிலும் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அதிபர் அவ்வப்போது சென்று வீட்டைப் பார்வையிட்டுச் செல்வது வழக்கம். இரண்டு மாடிகளைக் கொண்ட அவரது வீட்டின் கீழ் தளத்தில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினைச் சேர்ந்த சிங்கள மாணவர்கள் தற்காலிகமாக குடியமர்ந்துள்னளர். நேற்று வியாழக்கிழமை வழமைபோல தனது வீட்டினைப் பார்க்கச் சென்ற அதிபர் தயாபரன் மேல்மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்துள்ளார்.

இறுதியாக 9.00மணியளவில் அவர் தனது வீட்டாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் அவருடைய தொடர்பு கிடைக்காத நிலையில் வீட்டினர் மீசாலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்று பார்த்த போது அவர் கத்திவெட்டிற்கு இலக்காகிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டார் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து வீட்டார் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்துசென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இதேவேளை வீட்டின் கீழ் தளத்தில் தங்கியிருந்த சிங்கள மாணவர்களுக்கு இந்தச் சம்பவம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர். தாம் தமது பெருநாள் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு காலம் தாழ்த்தே வீட்டிற்கு திரும்பியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பிரதிநிதிக்கு அடிப்படை குற்றவியல் சட்டஅறிவு இல்லை!- ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு

ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான மாநாட்டில் இலங்கையின் சார்பில் பங்கேற்கும் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அடிப்படை குற்றவியல் சட்டஅறிவுகளை கொண்டிருக்கவில்லை என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் சித்திரவதைகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடந்த 9 ஆம் திகதி அவருக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

இன்போது மொஹான் பீரிஸினால் சரியான புள்ளிவிபரங்களையும் சம்பவங்களையும் கூறமுடியவில்லை. 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் உரிய சட்டமுறைகள் இருப்பதாக குறிப்பிட்டார்.

எனினும் அதனை கண்டித்துள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு நடைமுறை நிறைவேற்று அதிகாரம் கொண்டு ஜனாதிபதி முறையின் கீழ் அந்த சட்டங்கள் வலுவிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணைத்தளத்தில் சில சட்டத்தரணிகளை துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை காப்பாளர்கள் தாக்கப்பட்டமை குறித்து மொஹான் பீரிஸ் பதில் எதனையும் வழங்க மறுத்துவிட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் சில சட்டத்தரணிகள் துரோகிகள் என்ற குறிப்பிடப்பட்டமை எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஊடகவியலாளார் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் இலங்கைக்கு எதிரான பிரசாரத்துக்காக வெளிநாடு ஒன்றில் அகதியாக சென்றிருக்கலாம் என்று மொஹான் பீரிஸ் பதிலளித்துள்ளார். அவரால் வலுவான ஆதாரங்களை சமா்ப்பிக்க முடியவில்லை.

சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனம் கட்டாயம் காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரகடனம் சர்வதேச யுத்த நீதிமன்றம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பீரிஸ் பதிலளிக்கவில்லை.

வெலியமுன என்பவரது வீட்டின் மீது கிரனைட் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து கேட்டபோது மொஹான் பீரிஸ் அளித்த பதில்களில் அவருக்கு அடிப்படை சட்டஅறிவு இல்லை என்பதை உணர்த்தியதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை சித்திரவதைகள் தொடர்ல் பூஜ்ஜிய நிலை ஏற்படவேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுவதாக அவா் குறிப்பிட்டபோது அதனை சித்திரவதைகள் தொடா்ன ஐக்கிய நாட்டு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரின் பதில்கள் உண்மையை மறைப்பதாக அமைந்துள்ளதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இணைபிரியாமல் இருக்கும் இமெல்டாவும் கத்துரு சிங்காவும்! (படம் இணைப்பு)

யாழ். நாகவிகாரையில் தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட யானைகளுடன் பெரெஹரா கொண்டாட்டங்கள் நேற்று வியாழக்கிழமை பெருமெடுப்பில் ஆரம்பமாகியுள்ளது.

மாலை 4 மணிக்கு ஆரம்பமான பேரேஹரா நிகழ்வு சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் வரையில் யாழ்.நகரை சுற்றி வலம் வந்தது. அலங்கார லைட்டுகளுடன் வந்த பெரெஹரா யானைகளை மக்கள் அகலக் கண்கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தனர். அது எல்லாம் வெளியே நடக்க உள்ளே இமெல்டா சுகுமார் அவர்கள் விறுவிறுப்பாக வேறுவிடையத்தில் கவனமாக இருந்தார். அது என்ன என்று கேட்க்கிறீர்களா கத்துரு சிங்காவுடன் பேசுவது தான் வேறு என்ன?

விழா அரம்பமாகிய சில நிமிடத்திலேயே அவர் அருகில் போய் உட்காந்துகொண்டார். புகைப்படத்தைப் பாருங்கள் அவர் முகத்தில் இருக்கும் புன்னகை சொல்லும் மற்றைய செய்திகளை!

இலங்கையில் சித்திரவதை என்ற சொல்லுக்கே இடமில்லையாம்!

கடந்த வாரம் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட புதிய காணொளி காரணமாக இலங்கைக்கு மேலும் நெருக்குதல்கள் ஏற்பட்டுள்ளது. ஐனாவின் உறுப்பு நாடு என்ற வகையில் அது ஐநாவின் சாசனத்துக்கு ஏற்ப்பவே நடக்கவேண்டும் என்பது மரபு.

குறிப்பாக சித்திரவதைகளை தடுக்கும் பல சட்டங்கள் ஐனாவால் பின்பற்றப்பட்டு வருகின்றது. ஆனால் அதன் உறுப்பு நாடுகளில் ஒன்றான இலங்கையில் சித்திரவதைகள் இரகசிய சிறைக்கூடங்களில் நடப்பதாக ஆதாரத்துடன் கூடிய காணொளி வெளியானது யாவரும் அறிந்ததே.

இதனால் ஏற்பட்டுள்ள நெருக்குவாரங்களைச் சமாளிக்க இலங்கை அரசானது தமது நாட்டில் சித்திரவதைகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் அவ்வாறு யாரவது ஆதாரத்துடன் கூறினால் தாம் அது குறித்து விசாரணை நடத்தத் தயார் எனவும் வழமையான பாணியில் தெரிவித்துள்ளது.

சித்திரவதைக்கு எதிரான ஐனாவின் கமிட்டியில் உரையாற்றிய பீரிஸ் இலங்கையில் இரகசிய முகாம்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அத்தோடு தம்மிடம் சரணடைந்த சுமார் 11,000 போராளிகளில் 689 பேர் மட்டுமோ மீதம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றையவர்கள் அனைவரையும் தாம் விடுவித்துவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இலங்கையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 7 இரகசிய முகாம்களை நடத்திவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இம் முகாம்களிலேயே பலர் தடுத்துவைக்கப்பட்டு இன்னமும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா எப்பொழுதுமே நட்பு நாடு தான்: ஹினா ரப்பானி

இந்தியாவுக்கு மிகவும் ஆதரவான(நட்பு) நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள விவகாரத்தில் பின்வாங்கப் போவதில்லை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா மீண்டும் கூறியுள்ளார்.

மாலத்தீவின் அட்டு தீவில் நேற்று தொடங்கிய சார்க் நாடுகளின் 17வது உச்சி மாநாட்டில் ரப்பானி கலந்து கொள்கிறார்.

இந்தியாவுக்கு நட்பு நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், இந்தியாவுக்கு நட்பு நாடு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்றார்.

நட்பு நாடு என்று இந்தியாவுக்கு சான்று வழங்கப்படும் என்று சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். இது தவறு. இரு நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் நட்பு நாடு என்று அழைக்கப்படுகிறது.

மேலும் அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் முயன்று வருகிறது. குறிப்பாக இந்தியாவுடனான அமைதி பேச்சு தொடரும் என்றார்.

கனிமொழி விடுதலை பெற திமுக எம்.பி. பூஜை

ஸ்பெக்ட்ரம் வழக்கில், திகார் சிறையில் இருக்கிறார் கனிமொழி. இந்நிலையில், கனிமொழி விரைவில் விடுதலை அடைய வேண்டி எம்.பி., வசந்தி ஸ்டான்லி சிறப்பு பூஜை செய்தார்.

தி.மு.க. ஒருங்கிணைப்பு செயலாளரும், எம்.பி.,யுமான டி.கே.எஸ்.இளங்கோவன், இது குறித்து, பத்திரிகையாளர் களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது அவர், ‘’வசந்தி ஸ்டான்லி, கட்சித்தலைமைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை.

வசந்தி ஸ்டான்லி மேற்கொண்ட சிறப்பு பூஜை, அவரது தனிப்பட்ட விருப்பம். இதற்கு கட்சி ஒருபோதும் பொறுப்பேற்காது’’ என்று கூறினார்.

நீலாங்கரை பீச்சில் நள்ளிரவில் டான்ஸ் : இளம்பெண்ணை அழைத்த சிம்பு நண்பர்கள் கைது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை: இளம்பெண்ணை கிண்டல் செய்து அவரது கணவரை தாக்கிய நடிகர் சிம்புவின் நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் நீலாங்கரையில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். அடிக்கடி பரபரப்பில் சிக்குபவர் நடிகர் சிம்பு. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நீலாங்கரை கடற்கரை அருகே உள்ள 'பப்'புக்கு நண்பர்களுடன் சென்றார் சிம்பு. வசதி படைத்தவர்கள் ஜாலியாக இங்கு வந்துபோவது வழக்கம். இப்போது சினிமா நட்சத்திரங்களும் வர ஆரம்பித்திருக்கின்றனர். வழக்கமாக இரவு 10 மணிக்கெல்லாம் மூடப்படும் இந்த பப், சினிமா நட்சத்திரங்கள் வருகைக்கு பிறகு நள்ளிரவு வரை இயங்குவதாக கூறப்படுகிறது. தனியார் நிறுவன மேலாளர் நவீன் என்பவர், தன் மனைவியுடன் அதே பப்புக்கு சென்றிருக்கிறார். அங்கு நடந்த ஆட்ட விருந்தில் கலந்து கொண்டனர். அப்போது சிம்புவுடன் வந்திருந்த நண்பர்கள், நவீன் மனைவியின் அழகில் மயங்கி அவருடன் நடனம் ஆட விரும்பினார்கள். பின்னர் வம்படியாக அந்த பெண்ணை டான்ஸ் ஆட அழைத்தனர். இதற்கு நவீன் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் பிரச்னை ஏற்பட்டது. சிம்புவும் அவரது நண்பர்களும் அப்பெண்ணை கிண்டல் செய்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நவீன், அவர்களிடம் சத்தம் போட்டு தகராறு செய்தார். பின்னர் 'பப்'பில் இருந்து கார் பார்க்கிங் சென்று சிம்புவின் நண்பர்கள் காத்திருந்தனர். நள்ளிரவு ஆட்டம் முடிந்து நவீன் வருவதை பார்த்த அவர்கள் மீண்டும் கிண்டலும், கேலியும் செய்துள்ளனர். இதையடுத்து இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. நவீன் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனே உதவி உதவி என்று சத்தம் போடவே பப் ஊழியர்கள் அந்த இடத்துக்கு ஓடிவந்தனர். கூட்டமும் கூடியது. அவர்களை பார்த்ததும் சிம்புவின் நண்பர்கள் ஓடிவிட்டனர். அதற்கு முன்பே சிம்பு அங்கிருந்து சென்றுவிட்டார். இதுபற்றி நீலாங்கரை போலீசில் நவீன் புகார் கொடுத்தார். சிம்புவின் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக நீலாங்கரை சப் இன்ஸ்பெக்டர் பாலரத்னம் கூறும்போது, ''புகாரின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் 3 பேரை தேடி வருகிறோம்" என்றனர்.


பார்ட்டியில் கமல்-விஜய் நடனம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கடந்த 7ஆம் தேதி உலகநாயகன் கமலஹாசன் தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடினார். முக்கிய தலைவர்கள், நட்சத்திரங்கள் என எல்லோரிடமிருந்தும் பிறந்தநாள் பாராட்டுக்கள் கமலுக்கு குவிந்தன. இந்நிலையில், தன்னை வாழ்த்திய அனைவருக்கும் கமல் ஒரு ரகசிய பார்ட்டி அளித்திருக்கிறார்.  இந்த பார்ட்டியில் நடிகர் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

பார்ட்டியின் இடையே திடீரென கமல்  விஜய்யை அழைத்து தனக்காக நடனமாட வேண்டும் என கேட்டிருக்கிறார். அதிர்ச்சியில் உரைந்து போன விஜய் சற்று சுதாரித்துக் கொண்டு பின்னர் அடக்கமாக சில ஸ்டெப்களை போட்டிருக்கிறார். கமலும் அவருடன் இணைந்து ஆடி இருக்கிறார். கமலின் பிறந்த நாளன்று விஜய் நடனமாடியது அவரது வாழ்வில் மறக்க முடியாத தருணமாக இருக்கும் என கூறப்படுகிறது.



இன்றைய தினம் 11.11.11


இன்றைய தினம் அரிதான தினமாகும். ஆறு ஒன்றினைக் கொண்டு அதாவது 11-11-11 என அனைத்தும் ஒன்றாக கொண்டு வந்துள்ள இந்தநாளினை உலகத்தின் சிறப்பு வாய்ந்த நாளாக பலரும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு மற்ற நாட்களை விட நான்கு நாட்கள் ஒன்றினை எண்ணாக கொண்டு வந்துள்ளன. ஜனவரி மாதத்தில் வந்த 1-1-11 , 11-1-11 ஆகிய திகதிகளும் நவம்பர் மாதத்தில் 1-11-11 வந்த திகதியும் 4 அல்லது 5 ஒன்றினை மட்டுமே கொண்டிருந்தன.

ஆனால் இன்றைய தினமான 11-11-11 மொத்தம் 6 ஒன்றினை கொண்டுள்ளது. நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்தநாள் வரும் என்பதே இதன் சிறப்பம்சமாகும். எனவேதான் நவம்பர் மாதம் 11ம் திகதியை உலகம் முழுவதும் சிறப்பு வாய்ந்தநாளாக கருதுகின்றனர்.

இந்தநாளில் 11 மணி 11 நிமிடம் மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். அதாவது 11-11-11, 11:11 அந்த நிமிடத்தை பல விதங்களில் கொண்டாட திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

புவனேஸ்வரியிடம் ரூ 1 கோடி கடன்பட்ட தயாரிப்பாளர்... திருப்பிக் கேட்டு வழக்கு!


சென்னை: கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் என்ற படத்தைத் தயாரிக்க நடிகை புவனேஸ்வரி ரூ 1 கோடி கடன் கொடுத்துள்ளார்.

இந்தப் பணம் திருப்பித் தரப்படாததால், அதன் தயாரிப்பாளர் சம்பூர்ணம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் புவனேஸ்வரி.

தமிழ் சினிமா ஆயுசுக்கும் மறக்கமுடியாத நடிகை புவனேஸ்வரி. இவரை சில ஆண்டுகளுக்கு முன் விபச்சார வழக்கில் போலீசார் கைது செய்ய, அதை செய்தியாக வெளியிட்ட பத்திரிகைகள் மீது திரையுலகம் பாய்ந்தது. அதன் தொடர்ச்சியாக சினிமாவும் பத்திரிகையுலகமும் மோதியது நினைவிருக்கலாம்.

அதன் பிறகு ஜாமீனில் வந்த புவனேஸ்வரி சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கவும் பைனான்ஸ் பண்ணவும் ஆரம்பித்துள்ளார். அப்படி அவரிடம் பைனான்ஸ் பெற்று தயாரான படம் கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்.

படம் முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் தயாரிப்பாளர் புவனேஸ்வரிக்கு தரவேண்டிய பணத்தை தரவில்லையாம்.

எனவே சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார் புவனேஸ்வரி. அதில், "கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம்' சினிமா தயாரிப்பாளர் சம்பூர்ணம் என்னிடம் படம் தயாரிப்பதற்காக ரூ.1 கோடி கடன் வாங்கி இருந்தார். இந்த தொகையை படம் வெளியிடுவதற்கு முன்பு திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்து முத்திரை தாளில் எழுதிக் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் 'கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம்' படம் விரைவில் வெளியிடப்படுவதாக பத்திரிகைகளில் விளம்பரம் வெளியாகி இருக்கிறது. இதைப் பார்த்ததும் தயாரிப்பாளர் சம்பூர்ணத்தை தொடர்பு கொண்டு கடன் தொகையை திருப்பி செலுத்தும்படி கேட்டேன். ஆனால் தயாரிப்பாளர் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை.

எனக்கு சேர வேண்டிய கடன் தொகை திருப்பி செலுத்தப்படவில்லை என்றால் நான் மிகவும் பாதிக்கப்படுவேன். ஆகவே கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். கடன் தொகையை திருப்பி செலுத்துமாறு கோர்ட்டு அவருக்கு உத்தர விட வேண்டும்," என்று கூறியுள்ளார்.

மனுவை சென்னை 17-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி சரவணன் விசாரித்து தயாரிப்பாளர் சம்பூர்ணத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். படம் வெளியாக ஏற்கெனவே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழில் பாடசாலை அதிபர் வெட்டிக் கொலை


யாழ். மாவட்டம் தென்மராட்சிப் பிரதேசத்தில் வரணி, கரம்பைக்குறிச்சி அரசினர் தமிழ்கலவன் பாடசாலையின் அதிபர், யாழ். கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் அறையொன்றிலிருந்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

அதிபர் சிவசுப்ரமணியம் தயாபரன் (வயது 40) என்பவரே கடந்த இரவு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ். மீசாலைப் பகுதியில் வசிக்கும் பாடசாலை அதிபர் தயாபரனுக்கு, யாழ். கந்தர்மடம் புகையிரதநிலையத்திற்கு அருகிலும் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அதிபர் அவ்வப்போது சென்று வீட்டைப் பார்வையிட்டுச் செல்வது வழக்கம்.

இரண்டு மாடிகளைக் கொண்ட அவரது வீட்டின் கீழ் தளத்தில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினைச் சேர்ந்த சிங்கள மாணவர்கள் தற்காலிகமாக குடியமர்ந்துள்னளர்.

நேற்று வியாழக்கிழமை வழமைபோல தனது வீட்டினைப் பார்க்கச் சென்ற அதிபர் தயாபரன் மேல்மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்துள்ளார்.

இறுதியாக 9.00மணியளவில் அவர் தனது வீட்டாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் அவருடைய தொடர்பு கிடைக்காத நிலையில் வீட்டினர் மீசாலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்று பார்த்த போது அவர் கத்திவெட்டிற்கு இலக்காகிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டார் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து வீட்டார் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்துசென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதேவேளை வீட்டின் கீழ் தளத்தில் தங்கியிருந்த சிங்கள மாணவர்களுக்கு இந்தச் சம்பவம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர். தாம் தமது பெருநாள் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு காலம் தாழ்த்தே வீட்டிற்கு திரும்பியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். என தெரிவிக்கப்படுகிறது.


Thursday 10 November 2011

சதாம் ஆட்சிக்குப் பின்னர் ஈராக்கில் 4000 பெண்கள் பாலியல் நடவடிக்கைகளுக்காக கடத்தல்


ஈராக்கில் சதாம் ஹுசைனின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின்னர் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் நோக்கத்திற்காக அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கில் கல்விக்கான சமூக மாற்றம் (Social Change for Education in the Middle East) என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே திடுக்கிடும் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இவ் ஆய்வறிக்கையின் படி 2003 ஆம் ஆண்டின் பின்னர் அதாவது அமெரிக்க படையினர் ஈராக்கில் நுழைந்ததன் பின்னர் இதுவரை சுமார் 4000 பெண்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் அநேகர் அண்டைய மத்தியகிழக்கு நாடுகளான சிரியா, ஜோர்தானுக்கும், மேலும் பலர் சவூதி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் கடத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களே இவ்வாறான கடத்தல்களில் ஈடுபடுவதாகவும், சில பெண்கள் தங்கள் குடும்பத்தவர்களாலேயே விற்பனை செய்யப்படுவதாகவும் அவ்வறிக்கை குறிப்பிடுகின்றது.

யாழ்.பாடசாலை மாணவர்கள் போதைப் பொருள் பாவனையில் கல்விச் சமூகம் அதிர்ச்சியில்



பாவனையில் யாழ் ஹெரோயின் போதைப் பொருளைப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.



இவர்களுக்கு போதைப் பொருளை விநியோகித்த வலைப்பின்னலைச் சேர்ந்த ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.



யாழ். நகரில் மாணவர்கள் மத்தியில் ஹெரோயின் பயன்பாடு குறித்த தகவல் கல்விச் சமூகத்தைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.



மாவட்டத்தின் ஒரே சொத்தான கல்வியை அடியோடு பாழாக்கி விடக்கூடிய இந்தப் பழக்கத்தைத் தடுக்க உடனடியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று கல்விச் சமூகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.



பாடசாலை மாணவன் ஒருவன் போதைப் பொருள் பயன்படுத்துவதாகக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார் விரைந்து எடுத்த நடவடிக்கையில் பல மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் இருந்து, மாணவர்களுக்கு ஹெரோயின், கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள்களை விநியோகித்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.



யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த ஆண்கள் பாடசாலைகளில் கற்கும் சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களே பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.



போதைப் பொருளுக்கு அடிமையான மாணவர்களில் ஒருவர் 14 வயதேயானவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் வழங்கிய தகவல்களில் இருந்து, யாழ்ப்பாணத்தில் மாணவர்களுக்குப் போதைப் பொருள்களை விற்பனை செய்து வரும் கும்பல் ஒன்றைப் பொலிஸார் அடையாளப்படுத்தினர்.



நேற்றுக் காலையில் இருந்து மாலை வரை அவர்கள் நடத்திய அதிரடி நடவடிக்கை மூலம் அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மூலம் போதைப் பொருள் விற்கும் கும்பலை மடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.



பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த அவர் உத்தரவிட்டார்.



பரிசோதனைகளின் பின்னர் பெற்றோர் அழைக்கப்பட்டு, எச்சரிக்கை செய்யப்பட்டு மாணவர்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். எனினும் அடுத்து வரும் 6 மாதங்களுக்கு அவர்களை உளவள ஆற்றுப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டார்.



இந்த மாணவர்களில் அனேகமானோர் ஆசிரியர்கள், அதிபர்கள் போன்ற உயர் பதவியில் உள்ளவர்களின் பிள்ளைகள் என்றும் தெரியவந்துள்ளது.



எனவே, மாணவர்களிடம் பரவிவரும் இந்தப் போதைப் பொருள் பாவனையைத் தடுத்து நிறுத்த சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் இணைத்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசர, அவசிய தேவையாக உள்ளது என்று யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.



யாழ்ப்பாண மக்களின் சொத்தான கல்வியை அழிப்பதற்காகவே மாணவர்களைப் போதைப் பொருளுக்கு அடிமையாக்குகிறார்கள். இதனைத் தடுப்பதற்கு பொது நிறுவனங்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் முன்வர வேண்டும்'' என்று யாழ். பல்கலைக்கழக பொருளியல்துறைத் தலைவர் வி.பி.சிவநாதன் தெரிவித்தார்.



இது தொடர்பில் விரிவுரையாளர் வி.பி.சிவநாதன் மேலும் தெரிவித்ததாவது:



மாணவர்களிடம் போதைப் பொருள் பாவனை என்பதை சமூகத்தை அழிப்பதற்கான நடவடிக்கையாகவே நோக்க வேண்டும். பாடசாலைச் சமூகத்தைப் பொறுத்த வரையில் அதிலும் யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்வித் தரத்தை வீழ்த்துவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.



இந்த நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் எமது கல்விச் சந்ததி இல்லாமல் போய்விடும் என்றே சொல்லலாம். இதனைத் தடுப்பதற்கு முதலில் பெற்றோர் விழிப்பாக இருக்க வேண்டும். பாடசாலைகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.



வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அதிகாரியும் "ஆறுதல்' தொண்டு நிறுவனப் பணிப்பாளருமான சுந்தரம் டிவகலாலா இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,



நாங்கள் எமது சமூதாயத்தை இந்தப் போதைப் பொருள் பாவனையில் இருந்து உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். இதற்கு ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து, கிராம மட்டத்திலிருந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.



யாழ்ப்பாணத்தில் முன்னர் இல்லாத இத்தகைய இந்தப் போதைப் பொருள் பாவனை பழக்கங்கள் இப்போது எப்படி வந்தன? ஏன் வந்தன? எங்கிருந்து வருகின்றன? என்பதை ஆராய வேண்டும்.



போதைப் பொருளுக்கு இளம் சமூகம் அடிமையாகிவிட்டால் அதனைப் பாதுகாப்பது கடினம். முழுச் சமூகமும் இது குறித்து உரத்துச் சிந்திக்க வேண்டும்.



இது தொடர்பில் கிராமங்கள் தோறும் சென்று பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாகத் தாய்மார்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.



சகல பாடசாலைகளிலும் நேரம் ஒதுக்கி, போதைப் பொருள் பாவனையின் கேடுகள் பற்றியும் துஷ்பிரயோகங்கள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும் என்றார்.

பாடசாலை மாணவர்கள்! கல்விச் சமூகம் அதிர்ச்சியில்..

இலங்கையின் கொலைக்களங்கள் பாகம் 2 - தயாரிப்பில் சனல் 4 தொலைக்காட்சி (காணொளி)

இலங்கையின் கொலைக்களங்கள் எனும் தலைப்பிலான சர்ச்சைக்குரிய ஆவணப் படத்தை தயாரித்த பிரிட்டனின் சனல் - 4 அலைவரிசை, அந்த ஆவணப்படத்தின் தொடர்ச்சியாக மற்றொரு ஆவணப்படத்தையும் தயாரிக்க ஆரம்பித்துள்ளது. இலங்கையின் கொலைக்களங்கள்: "தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்" என இந்த ஆவணப்படுத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் துஷ்பிரயோகங்கள் குறித்து இரண்டாவது விசாரணையொன்றை நடத்தும் நிகழ்ச்சியை தயாரிக்குமாறு பிரிட்டனின் ஐ.ரி.என். புரடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் சனல் 4 அலைவரிசையின் செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பிரிவின் தலைவர் டொரத்தி பெய்ர்ன் கூறியுள்ளார்.

இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தின் சில காட்சிகளை சனல் 4 அலைவரிசை வரலாற்றில் ஒளிபரப்பப்பட்ட மிக அதிர்ச்சிகரமான காட்சிகளாகும். அவற்றில் பெரும்பாலான காட்சிகள் செல்லிடத் தொலைபேசியினால் படம்பிடிக்கப்பட்டிருந்தன. வன்முறைகள் மிகுந்த இக்காட்சிகள் தொடர்பாக பிரிட்டனின் ஊடக ஒழுங்குபடுத்தல் அமைப்பான ஒவ்கொம் விசாரணையொன்றை நடத்தியது. எனினும் இறுதியில் அக்காட்சிகளை ஒளிபரப்ப அனுமதி வழங்கப்பட்டது.

பிரிட்டனில் அந்த ஆவணப்படத்தை பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர். 30 இற்குமேற்பட்ட நாடுகிளல் இந்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது ஆவணப்படமானது போர்க்குற்றங்களுக்கான சக்திவாய்ந்த புதிய ஆதரங்களைக் கொண்டிருக்கும் என எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது ஆவணப்படத்தைப் போலவே இதிலும் ஜோன் ஸ்னோ விளக்கங்களை வழங்கவுள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போதியளவு சர்வதேச நடவடிக்கை மேற்கொள்ளப்படாமை குறித்தும் இந்த ஆவணப்படத்தில் கேள்வி எழுப்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் வாழ் சமூகத்தினரிடமும் மற்றும் முள்ளிவாய்க்கலில் இறுதிவரை நின்ற சிலரிடமும் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதோடு புதிய ஆதாரக் காணொளிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளதாக அறிகிறது.


அதிர்வு

Wednesday 9 November 2011

தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் வேல்முருகன் புதிய கட்சி தொடங்குகிறார்

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் பாமகவில் இருந்து நீக்கப்பட்ட வேலுமுருகன் புதிய கட்சி துவங்கவிருக்கிறார்.

பாமகவில் இணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தவர் வேல்முருகன். முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் பா.ம.க. நிறுவனர் ராமதாசையும், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனையும் தரக்குறைவாக பேசியதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து தமிழகம் முழுவதும் நீக்கப்பட்டவர்களை சுற்றுப்பயணம் செய்து சந்தித்து ஆதரவு திரட்டப்போவதாக அறிவித்தார்.

பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல பா.ம.க. ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

வேல்முருகனையும் அவரது ஆதரவாளர்களையும் தங்கள் கட்சியில் சேர்க்க முன்னனி கட்சிகள் மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் வேல்முருகன் புதிய கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

வருகிற 26-ந் தேதி விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினம் வேல்முருகன் புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். கட்சியின் பெயர் மற்றும் கொடியை பற்றி அவர் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

இலங்கையின் குத்தாட்டம்: இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது!

உலக நாடுகளில் எங்கும் கேள்விப்படாத சட்டம் ஒன்று தற்போது இலங்கையில் போட்டிருக்கினம். அதுதான் மீடியா சட்டம். அதாவது ஏதாவது ஒரு ஊடகம் இலங்கையைப் பற்றி எழுதுது எண்டால் உடனே அவர்கள் இலங்கை ஊடக நிலையத்தோடு தொடர்புகொண்டு தங்களைப் பதிவுசெய்ய வேண்டுமாம். இது ஒன்றும் உள்நாட்டு ஊடகங்களுக்கு மட்டும் தான் என்று நினைக்கவேண்டாம்.

அனைத்து வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இது பொருந்துமாம். அதாவது இனிமேல்பட்டு இலங்கை குறித்து ஏதாவது ஒரு ஊடகம் தகவல் வெளியிட்டால் அது முன்கூட்டியே இலங்கை அரசிடம் பதியப்பட்டு இருக்கவேண்டும் என்கிறது இலங்கை அரசு. அதற்கென்ன பதியுஞ்சு போட்டு நடத்துவோம் என்று சிலர் நினைக்கலாம். அங்க தான் மாப்பு வைச்சிருங்காங்க ஆப்பு!

இலங்கை அரசு நிரப்பச் சொல்லும் படிவம் கீளே உள்ளது. அதனைப் பாருங்கள். அதில் மொத்தம் 8 கேள்விகள் இருக்கு. அதில் 4, 5, 7 மற்றும் 8 ம் கேள்விகள் மிக எடக்கு முடக்கானவை. அப்படிக்கூடச் சொல்லமுடியாது. ஒரு ஊடகம் எங்கிருந்து இயங்குகிறது அதன் எழுத்தாளட் யார்? அவர் பெயர் விலாசம் எங்கிருந்து அப்டேட் செய்கிறார்.

அவர் கணணியின் இன்ரர்நெட் வழங்குனரின் ரகசியக் குறியீடுகள் மற்றும் ஐ.பி முகவரி என்று அனைத்தையும் இலங்கை அரசு கோரியுள்ளது. அதாவது பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகளில் இயங்கிவரும் வேற்றின இணையங்களிடம் கூட அந் நாட்டரசுகள் இவ்வாறு கேட்ப்பது இல்லை. ஏன் இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவுக்கு எதிராக இயங்கிவரும் விக்கி லீக்ஸுக்கு கூட இவ்வளவு நெருக்கடிகள் இருக்கவில்லை. ஆனால் இன்றைய நிலையில் புலம் பெயர் தமிழ் ஊடகங்களை இலங்கை அரசு வெளிப்படையாகவே அச்சுறுத்துகிறது.

இவர்கள் அச்சுறுத்தல் எவ்வாறு அமைந்திருக்கிறது என்று பார்ப்போம்: அதாவது இவர்கள் சொல்கிறார்கள் ஊடகத்தை நத்துபவர்கள் தங்களிடம் பதியவேண்டும் என்று, அதற்கான 8 கேள்விகளுக்கும் விடைகொடுக்கவேண்டும், பின்னர் நான் இலங்கை அரசுக்கும் அரச அதிகாரிகளுக்கும் எதிராக எழுதமாட்டேன் என்று கடிதம் ஒன்றும் எழுதித் தருமாறு தனிப்பட்ட முறையில் வற்புறுத்துகின்றராம். அப்படி என்றால் மட்டுமே இலங்கையில் உங்கள் இணையங்கள் தடைசெய்யப்படாமல் இருக்கும் என்று இலங்கை அரசு வெளிப்படையாகவே கூறியிருக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள பல ஊடகங்கள் குழம்பிப்போய் உள்ளார்கள். அதாவது அனைவரும் புரிந்துகொள்ளவேண்டியது ஒன்றுதான். வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்களை(இணையங்களை) இலங்கை அரசால் தடைசெய்ய முடியாது. மிஞ்சிப்போனால் அவர்கள் அதனை இலங்கையில் தடைசெய்யலாம். அவ்வளவுதான்.

எனவே இவர்கள் பூச்சாண்டிக்கு எந்தத் தமிழ் இணையங்களும் பயப்பிடத் தேவையில்லை. அதுமட்டுமல்ல தமிழ்நெட் போன்ற ஆங்கில ஊடகங்களை இலங்கை அரசு ஏற்கனவே இலங்கையில் தடைசெய்து தான் வைத்துள்ளது. அவ்வாறு தடைசெய்யப்பட்ட இணையங்களை சிறிய பொறிமுறை ஒன்றைப் பாவித்தால் நிச்சயம் இலங்கையில் பார்வையிடலாம். அதுவும் பாதுகாப்பாகப் பார்வையிடலாம்.

இப் பொறிமுறையை விரைவில் நாம் அறிமுகப்படுத்தி அதனை நாம் ஈழத்தில் உள்ள எம் உறவுகளுக்கும் புரியவைக்கவேண்டும். அப்படி என்றால் ஈழத்தில் இருக்கும் அனைவரும் தடைசெய்யப்பட்ட எந்த ஒரு தமிழ் இணையத்தையும் பார்க்க முடியும். அரசு எதனை மறைக்க முற்படுகிறதோ அதனை புரிந்துகொள்ள முடியும்.

ஈழத்தில் உள்ள போர் நினைவுகளை அழித்தார்கள்! மாவீரர் துயிலும் இல்லங்கை அழித்தார்கள்! சிலைகளை உடைத்தார்கள்! ஈழத்தில் ஒரு விடுதலைப் போர் நடந்ததா என இனிவரும் சந்ததிகள் கேட்க்கும் அளவுக்கு பல காரியங்களைச் செய்யும் இவர்கள் இறுதியாக புலம்பெயர் மக்களையும் ஈழத்து மக்களையும் பிரிக்கும் ஒரு நடவடிக்கையாகவும், ஈழத்து மக்களுக்கு சில செய்திகள் சென்றடையாமல் தடுப்பதற்காக புலம்பெயர் தேசிய இணையங்களை இலங்கையில் முடக்கவும் தற்போது நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

இலங்கையில் இன்னமும் பல ஆபாசப்பட வலையமைப்புகளும் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் இணையங்களும் தடைசெய்யப்படாமல் இருக்கும்போது, புலம்பெயர் நாட்டு இணையங்களை மட்டும் இலங்கை அரசு தடைசெய்ய இவ்வளவு பிரயத்தனத்தை ஏன் காட்டவேண்டும்? இப்ப புரிகிறதா மேட்டார்?


அதிர்வு

உரியவர் உரியதை செய்ய வழி விடுங்கள்!: ச.வி.கிருபாகரன்

நேரடியாக விடயத்திற்கு வருகிறேன். இரண்டு மாவீரர் தினம் நடக்காது தடுக்கக் கூடிய மனிதர்கள் இன்றைய கால கட்டத்தில் நிச்சயம் புலம் பெயர்வாழ்வில் இருக்கிறார்கள், அவர்களால் இரண்டு மாவீரர் தினம் நடக்கவிருப்பதை நிச்சயம் தடுக்க முடியும்.

எதிர்காலத்தை மனதில் கொண்டு, தமிழ் தேசியம் சிதறிக்கப்படாது, சிங்கள சிறிலங்கா அரசு முள்ளிவாய்க்காலுக்கு அடுத்து புலம்பெயரில் ஓர் மாபெரும் வெற்றியை பெற நாம் துணை போனதாக சரித்திரம் இருக்கப்படாது என எண்ணும் ஒவ்வொரு பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டாளர்களால் இரண்டு மாவீரர் தினம் நடைபெறுவதை நிச்சயம் தடுத்து நிறுத்த முடியும்.

பொறுப்பு வாய்ந்தவர்களின் அறிக்கையினால் இதை தடுக்க முடியும்.

மாவீரர்களை, தேசியத் தலைவரை மதித்து, கடந்த பல தசாப்தங்களாக நடைபெற்று வந்த தமிழீழ விடுதலை போராட்டம், தாயாக பூமியில் வாழும் எமது உடன் பிறவாச் சகோதரர்கள் மானத்துடன் வாழ வேண்டும் போன்ற காரணிகளை மனதில் கொண்டு நிச்சயம் இரண்டு மாவீரர் தினம் நடக்கவிருப்பதை உடன் பொறுப்பு வாய்ந்தவர்கள் தடுக்க வேண்டும்.

இவ் விடயத்தில் விட்டுகொடுப்பதனால் யாரும் சிறியவராகவோ பெரியாவராகவோ மாட்டீர்கள்.

வழமையாக வருடாவருடமாக மாவீரர் தினம் செய்தவர்கள் தொடர்ந்து செய்ய அனுமதியுங்கள். இவ்விடயத்தில் தயவு செய்து பேரம் பேசாதீர்கள். இவ்விடயத்தில் விடப்பிடியாக நிற்கும் உங்களை, சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு துணை போகிறவர்களென்று மக்களினால் சுமத்தப்படும் வீண் பழியை நீங்கள் சுமப்பீர்கள்.

வழமையாக வருடாவருடமாக மாவீரர் தினம் செய்தவர்கள் தொடர்ந்து செய்ய நீங்கள் அனுமதிப்பதன் மூலம் உங்கள் அமைப்பிற்கும் ஒர் மாபெரும் பெருமையை நீங்கள் தேடிக் கொள்வீர்களென்பதில் எவ்வித ஐயமில்லை.

உங்கள் தரப்பில் நின்று குழப்பங்களை விரும்புவோர், நீங்கள் இன்னுமோர் மாவீரர் தினம் நிச்சயம் நடத்தியே ஆக வேண்டும் என்பதில் விடாபிடியாக நிற்பார்கள்.

காரணம் இவர்களது இலக்கு தமிழ் தேசியம் சிதைக்கப்பட வேண்டுமென்பது மட்டுமல்லாது, இவர்களுக்கு இதன் அருமை பெருமை பற்றி அறியுமளவிற்கு அரசியல் அறிவோ, பொது அறிவோ போதாமையும் காரணங்களாகவுள்ளன.

ஆனால் உங்கள் அமைப்பு எதிர்காலத்தில் உண்மையான அரசியல் செயற்பாடுகளை மனதில் கொண்டதாக இருந்தால், தயவு செய்து சிறிலங்கா அரசின் சிந்தனைக்கு துணை போகாதீர்கள்.

ஐரோப்பிய குழப்பக்காரர்கள் மூலம் நீங்கள் புலம்பெயர் வாழ் மக்களின் உண்மை நிலையை ஒரு பொழுதும் அறிய மாட்டீர்கள்.

இவர்கள் மக்கள் எண்ணங்கள் அபிப்பிராயத்தை தினமும் திரிபுபடுத்திக் கொண்டிருப்பதுடன், தமது சிந்தனைகளை, திட்டங்களை தினமும் தமது மூன்றாம் நான்காம் தரகர்கள் மூலம் மிகத் தவறான தகவல்களை உங்களுக்கு ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிக நீண்ட காலமாக நாம் அறிந்த உண்மை.

இறுதியாக, இப்பொழுது பெரும்பான்மையான புலம்பெயர் வாழ் மக்கள் குழப்பமடைந்த நிலையில் உள்ளார்கள் என்பது தான் இன்றைய உண்மை நிலை?

புலம்பெயர் வாழ்வில் ஓர் குறிப்பிட்ட மக்கள் முள்ளிவாய்க்காலின் பின்னர் எந்த பிரிவிற்கும் ஆதரவு அளிக்காது நடுநிலையாக வாழ்வதை ஐரோப்பாவில் நாம் பெரிதும் காண்கிறோம்.

ஆனால் இரண்டு மாவீரர் தினம் நடைபெற்றால, ஐரோப்பாவில் நடுநிலையாக வாழும் மக்கள் கூட, சிங்கள அரசின் எதிர்பார்ப்புக்கு துணை போகிறவர்களை நிச்சயம் நிராகரிக்க முனைவார்கள்.

வளரும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும் என்பது தமிழ் பழமொழி. மாவீரர் தினம் செய்வது சிறிய விடயமல்ல என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

இதேவேளை, ஒரு முழு வளர்ச்சி அடையும் முன்பே தேவையற்ற விடயங்களை செய்ய முனைவதால,; மக்களின் ஆதரவை நீங்கள் பெற முடியுமா என்பதையும் நீங்கள் கடுமையாக சிந்திக்க வேண்டும்.

ஆகையால் மக்களின் ஆதரவு குறையக்கூடிய எந்த வேலை திட்டங்களிலும் தயவு செய்து இறங்காதீர்கள் என மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

நன்றி – வணக்கம்

ச.வி.கிருபாகரன்
பிரான்ஸ்

கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களின் விஜயமும் அவர்கள் சொன்ன விடயங்களும்

அமெரிக்காவிற்கு முக்கியமான இராசதந்திர ரீதியான சந்திப்புக்களை மேற்கொண்டுவிட்டு கனடாவிற்கும் வந்து கனடாவில் ஆதரவாளர்களின் சந்திப்புக்கள் பொதுக்கூட்டம் ஒன்று, இரவு விருந்து ஒன்று எனச் சிறப்பாக நிகழ்வுகளில் கலந்து கொண்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள் தமிழர் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள்.

இங்கு நடந்த சந்திப்புகளிற் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களுடன் அவர்களின் நிலைப்பாடுகள் செயற் திட்டங்கள் என்பன தெளிவு படுத்தப்பட்டன. அக்ரோபர் 30 ம் திகதி நடந்த இரவு விருந்தில் எல்லாத் தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்படைய வைத்தார்கள். தமிழர் கூட்டமைப்பின் பல்வேறு நிலைப்பாடுகளைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் கூடத் தலையாய கடமையாக இந்த விழாவைக் கருதித் தமிழர்களின் தற்போதைய தலைவர்களைக் கௌரவிக்கத் தவறவில்லை.

தலைவர்களும் வாஷிங்டனில் இராஜாங்கத் திணைக்களத்தில் நடாத்திய சந்திப்புக்கள் தந்த உற்சாகத்துடன் பலதையும் தெளிவுபடுத்தினார்கள். இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களிற் பரிமாறிய கருத்துக்களின்படி புலம் பெயர்ந்த மக்களின் உணர்ச்சிகளின் எழுச்சிக்கேற்ப அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டு வந்ததையும் சொல்லி முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தால் தலைவர்களை தெரியும் உரிமை கிடைத்துள்ளதையும் சொன்னார்கள்.

பல ஆட்சி மட்டங்களில் ஜனநாயக வழியில் இளம் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டதையும் ஒரு கிராம சபையோ நகர சபையோ என மக்களுக்கான சேவைக்காக தலைமைப் பணிகளில் மிகவும் இளையவர்கள் பல்கலைக் கழகங்களில் படித்துக் கொண்டிருப்பவர்கள் கூட ஈடுபட வேண்டியதாக இருக்கிறது என்பதையும் அறியக்கூடியதாக இருந்தது. இதையொட்டி எழுந்த கேள்வி பதில்களில் அங்கு எல்லா உதவிகளிலும் விட மனிதவள உதவி மிகவும் முக்கியமாகத் தேவைப்படுவது தெரிந்தது.

பணம் தொழில் நுட்பம் என்பவற்றுடன் இவற்றின் பாவனை தெரிந்தவர்கள் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த நிலையாக வாழ்ந்து வரும் எமது மக்களுக்கு நேரடியாக உதவிட வேண்டும்; ஓரிரு ஆண்டுகள் அங்கு வந்து நேரடியாக மக்களுடன் இந்த நிபுணத்துவங்களைப் பகிர்ந்து தேவையான புனரமைப்பு வேலைகளில் பங்கு கொள்ளவது பிரயோசனமாக இருக்கும் என்பது உணரப்படுவதாகத் தெரிந்தது.

முப்பது ஆண்டுகள் என்பது ஒரு தலைமுறை. இந்தக் காலத்தில் இடப்பெயர்வுகள் புலப் பெயர்வுகள் கல்விக்கூடங்களுக்கு ஏற்பட்ட இடையுறுகள் என்பதால் ஏற்பட்ட இடைவெளி போரின் காரணமாகவும் அதனால் நடந்த வன்செயலாலும் இனிய இளைய உயிர்கள் பல்லாயிரம் பறிக்கப்பட்டதால் ஈழத்தமிழரிடையே ஒரு பாரிய மனிதவள குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பாரிய வெற்றிடம் சனத்தொகையில் ஏற்பட்டுள்ளது.

போரின் பின்னான சமுதாயக் கட்டமைப்பை கட்டியெழுப்பும் திட்டங்களைத் தீட்டும் நிபுணர்களுக்கு இந்த வெற்றிடத்தை நிரப்புவது என்பதும் அத்தியாவசியமான நிபுணத்துவங்கள் உள்ளவர்களைத் தேடுவதும் அதற்குப் பயிற்சி கொடுப்பதும் பெரிய பிரச்சனையாக இருக்கும். இந்த நேரத்தில் பல்வேறு தொழில்களுக்கும் தொழிலாளர்களும் நிபுணர்களும் தெற்கிலிருந்து வடக்குக்கும் கிழக்கிற்கும் படை எடுத்திருப்பது எங்களைக் கிலேசம் அடைய வைத்துள்ளது. இருந்த போதிலும் இது இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு நடைமுறையாகும். அத்துடன் தாயகத்திலிருந்து நாம் புலம் பெயர்ந்ததால் நம் ஒவ்வொருவருடைய இடமும் வெற்றிடமாக இருப்பதும் தெரிந்ததே.

இந்த நேரத்தில் இலங்கை அரசும் விசா, குடியுரிமை சம்பந்தமான விதிகளை இறுக்கி இந்த விதமான குடிவரவு திருப்பி நடக்காமற் பார்ப்பதில் எச்சரிக்கையாக இருக்கிறது. ஆனால் இலங்கை அரசுக்கு மீண்டும் வன்செயலை வெளிநாட்டுத் தமிழர்கள் இறக்குமதி செய்து விடுவார்களோ என்பது இந்த விதிகளை இறுக்குவதை நியாயப்படுத்தும் ஒரு காரணமாக இருக்கிறது. இப்படித் தனியாக ஒருவர் இருவர் இப்படி இலங்கை சென்று வாழ்ந்தாலும் இன்னும் பெரிய அளவில் நடக்கவில்லை.

கனடாவைப் பொறுத்தமட்டிற் கனடிய பணமோ கனடியர்களோ இலங்கையில் வன்செயலில் ஈடுபடுவதையோ தூண்டுவதையோ கனடிய அரசாங்கமும் விரும்பாது. மேற்கு நாடுகளின் பாதுகாப்பு அமைப்புக்களும் இந்தக் கோட்டைப் புலம் பெயர்ந்த அமைப்புக்கள் தாண்டுகிறனாவா என்பதை அவதானிப்பதிற் கவனமாக இருக்கும். இந்தப் பாதையில் நாம் செல்வது என்பது இன்று நமது மக்களின் மீது இருக்கும் சர்வதேசத்தின் கவனத்தைப் பலவீனப்படுத்தி விடும்.

இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்களின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு நடக்கும் போராட்டங்களின் வடிவங்கள் பல இங்குள்ள தமிழர்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக அமையலாம். ஆனாற் தூரநோக்கில் தமிழீழ மக்களின் அரசியல் பொருளாதார சமுதாய வளர்ச்சியை எப்படிப் பாதிக்கும் அல்லது அந்த வளர்ச்சிக்கு எவ்வாறு உதவும் என்று இங்கு நடவடிக்கைகளைத் தீர்மானிப்போர் தலைமை தாங்குவோர் தெளிவாக இருக்க வேண்டும்.

இங்கும் மே 2009க்குப் பிறகு ஒரு தலைமை வெற்றிடமும், அதைக் தொடர்ந்து அந்த இடத்திற்குப் பலத்த போட்டி, பல கோணங்களில் இருந்தும் நடக்கையில், புலம் பெயர்ந்த நாம் ஈழத் தமிழருக்கு என்ன தேவை என்று நினைப்பதை விட அங்கு வாழும் மக்கள் எது தங்களுக்குத் தேவை எதை நடைமுறையில் தங்களால் அடையலாம் என்பதை தேரும் போது அதற்கு அங்கிருக்கும் தலைவர்களை அனுசரித்து அந்த நோக்கதிற்கு தேவையான உதவியை வழங்குவதே சரியானதாக இருக்கும்.

பேசிய தலைவர்கள் பல விடயங்களைப் பேசினார்கள். என் மனதில் ஆழமாக உறைத்தது இந்த மனிதவளக் குறைபாடுதான். இதை எமது புலம் பெயர் உறவுகளுடன் பகிர்ந்து கொண்டது ஒரு பாரம் குறைந்தது போல இருக்கிறது.

-மாறன் செல்லையா-
maran.chelliah@rogers.com

உயிர்ப்பலிக்குக் காரணமான பிள்ளையான், கருணா

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த பிரிந்து சென்ற கருணா வெளிநாடுகளுக்குச் சென்று புலிகள் அமைப்புக்கு எதிராகப் பிரசாரம் செய்த போது அதனை இலங்கையிலிருந்து ஆதரித்துப் பேசிய கிழக்கு மாகாண முதலமைச்சரான பிள்ளையான், இன்று கருணாவுடன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐரோப்பிய விஜயத்தை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.

புலிகளுடன் தனக்குப் பிரச்சினைகள் என்றால் அதனை உள்ளுரில் அவர் பேசித் தீர்த்திருக்க வேண்டும். அதனை விட்டு விட்டு ஏன் அவர் வெளிநாடு சென்று புலிகளுடனான பிரச்சினைகள் குறித்துப் பேசியிருக்க வேணடும்? இந்த நிலையில் இவர்கள் இருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐரோப்பிய விஜயத்தைக் கொச்சைப்படுத்துவது கேவலமான நடவடிக்கை என டெலோ இயக்க அரசியல் பொறுப்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஈழநாதம் இணையத்துக்குத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்றைய கிழக்கு மாகாண முதலமைச்சரான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கூட ஒரு தடவை இந்தியாவுக்குச் சென்று ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த விடயத்தை அவர் எவ்வாறு இப்போது நியாயப்படுத்தப் போகிறார்.

இவர்கள் இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று இரு அணியாகச் செயற்பட்டபோது இடம்பெற்ற மோதல்களின் போது ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இப்படியெல்லாம் கீரியும் பாம்புமாக இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உயிர்ப்பலிக்குக் காரணமான இவர்கள் இன்று கேக்கும் கோப்பியும் குடித்துக் கொண்டு கூட்டமைப்பை விமர்சிப்பது கேலிக் கூத்தான விடயம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 13)

எங்களின் உயிர் மீது விதிக்கு அப்படி என்னதான் விருப்பமோ... மீண்டும் மரண மேகம் கவிழ்ந்துவிட்டது. கருணை மனுவைக் கணக்கில் கொள்ள​வேண்டிய அவசியம் இல்லை என மத்திய, மாநில அரசுகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சொல்கின்றன.

எங்களின் உயிர் இந்த அளவுக்கு உதாசீனப்படுத்தப்படும் என நாங்கள் கொஞ்சம்கூட நினைக்கவில்லை. இனி, வழக்கம்போல் தேதி குறிக்கப்படும். தினசரி நரகங்கள் தீர்மானிக்கப்படும். காப்பாற்றப்படுவோமா... கைவிடப்படுவோமா என உயிரும் உடலும் பட்டிமன்றம் நடத்திப் பதற்றத்தைக் கிளப்பும். ஆனாலும், அடுத்த கட்ட விசாரணையில் எங்களின் ஆயுள் காப்பாற்றப்படும் என இந்தக் கணத்திலும் நம்பி நிற்கிறோம்.

கடந்த முறைபோலவே எங்​களின் உயிர் காக்க மொத்தத் தமிழகமும் கைகோர்க்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்காகத் தீக்குளித்து மடிந்த எங்கள் தங்கை செங்கொடியை இந்தக் கணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். 'அவர்கள் தவறு செய்யவில்லை’ என்று உறுதியாக நம்பிய அந்தத் தங்கை தன்னை மாய்த்துக்​கொண்ட நிலையில், நாங்கள் மட்டும் உயிர் வாழ்ந்து என்ன சாதித்துவிடப் போகிறோம்? தங்கையைப் பின்தொடர்ந்து சாவதில் எங்களுக்கு சந்தோஷம்தான்.

ஆனால், கயிறு எங்களின் கழுத்தை இறுக்கும் முன் என்னுடைய முழுக் குமுறலையும் இறக்கிவைக்க வேண்டும். காங்கிரஸ்காரர்கள் சொல்வதைப்போல் நடந்த படுகொலை மறக்க முடியாதது. மன்னிக்க முடியாததுதான். ஆனால், அந்த சம்பவம் ஏன் நடந்தது என்பதைப்பற்றி மனசாட்சியோடு விவாதிக்க ஏன் யாருமே முன்வருவது இல்லை?

உண்மையாகவே ராஜீவ் காந்தி மீது ஆத்மார்த்தமான அன்பு எந்தக் காங்கிரஸ்காரர்களுக்காவது இருந்திருந்தால், அவர் மரணத்தைத் தன் வீட்டு இழவாக எண்ணித் துடித்திருந்தால், நிச்சயம் எங்களை வேலூர் சிறையில் வந்து சந்தித்து இருக்கலாம். 'ஏனடா எங்களின் தலைவனைக் கொன்றீர்கள்?’ என நெஞ்சு குலுங்க எங்களின் சட்டையைப் பிடித்து உலுக்கி இருக்கலாம். ஆனால், ஒரு காங்கிரஸ்காரருக்குக்கூட எங்களைச் சந்திக்கும் தைரியம் ஏனய்யா இல்லாமல் போயிற்று?

இந்தியாவின் இளைய சக்தியாக வளர்ந்துவந்த ராஜீவ் காந்திக்கு யார் எதிரிகள்? எதிர்ப்பை உருவாக்கிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு என்ன பகை? செஞ்சிவப்பு முகமும், சிறுபிள்ளைச் சிரிப்புமாக வலம் வந்த அவரைச் சுக்குச் சுக்காகச் சிதறடிக்க சதிகாரர்களுக்கு எப்படி மனம் வந்தது?

''இலங்கையில் நடந்த கொடுமைகளுக்கு ராஜீவ் காந்திதான் காரணம் என்பதால், பெண்கள் குழுவின் மத்தியில் அவரைப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு பலமாக இருந்தது. இதை மூன்றாவது குற்றவாளி முருகன் அவரது ஒப்புதல் வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார்...'' - இவை ராஜீவ் காந்தி வழக்கில் நீதிபதி அவர்கள் எழுதி இருக்கும் வார்த்தைகள்.

என்னுடைய ஒப்புதல் வாக்குமூலம் எப்படி எல்லாம் சித்திரிக்கப்பட்டது என்பதை மறுபடியும் சொல்லி, பரிதாபத்தை நீட்டிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், எனது வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கும் மேற்கண்ட வரிகளை, மறுபடியும் படித்துப் பாருங்கள். ராஜீவ் காந்தி இலங்கைக்கு அனுப்பிய அமைதிப் படை அங்கே போய் அமைதியைத்தானே நிலைநாட்டி இருக்க வேண்டும்? அசிங்கங்களையும் அக்கிரமங்களையும் நிறைவேற்றுவதற்குப் பெயர்தான் அமைதிப் படையா?

எங்கள் மண்ணில் அவர்கள் நிகழ்த்திய கோரங்கள் கொஞ்சநஞ்சமா? சிங்களப் படைகளின் குரூரங்களுக்கு நாங்கள் கொஞ்சமும் குறைந்தவர்கள் அல்ல என்பதை அன்றைக்குத்தானே அந்தப் படைகள் நிரூபித்துக் காட்டின. திரும்பிய பக்கம் எல்லாம் ஓலம்... ஆண்களைக் கண்டால் அடித்துத் துவைப்பதும், பெண்களைக் கண்டால் துரத்திச் சுவைப்பதும்தான் அவர்களின் ஒரே வேலையாக இருந்தது என்பதற்கு எமது மண்ணில் அநேக ஆதாரங்கள் உண்டு!

மரணம் என்கிற கத்தி எங்களின் தலைக்கு மேலாகத் தொங்கியபடி இருக்கிறது. இந்தக் கணத்தி​லும் அங்கே அமைதிப் படை நிகழ்த்திய கொடூர மரணங்களை எண்ணிப் பார்க்கிறேன். இனம், மொழி பாராமல் குழந்தைகளைக்கூட குருவிகளைப்​போல் சுட்டு வீழ்த்திய அமைதிப் படையின் குரூரத்தை எத்தனை காலம் கடந்தாலும் சகிக்கவோ, மன்னிக்கவோ முடியுமா?

உங்கள் குழந்தையின் தலையில் ஷூவை வைத்து ஒருவன் நசுக்குகிறான். திமிற முடியாத கட்டுக்குள் நீங்கள் சிதைக்கப்படுகிறீர்கள். உங்களின் வலியை சட்டை செய்ய முடியாத அளவுக்கு குழந்தையை நசுக்கி எறிகிறது இராணுவப் படை. ஒரு சிகரெட்டைக் காலில் போட்டு அணைப்பதுபோல் ஈழத்து சிசுக்களின் உயிர்கள் அணைக்கப்பட்டன.

நஞ்சுக்கொடிகூட குழந்தையை இறுக்கிவிடக் கூடாது எனக் கர்ப்ப காலத்திலேயே மிகக் கவனமாக இருப்பவர்கள் எங்களின் தாய்மார்கள். சிதைக்கப்பட்ட சிசுக்களை அலறலோடு கண்ணுற்ற பெற்ற வயிறுகளில் எத்தகைய வைராக்கியம் கூடு கட்டி இருக்கும்? வாசல் மண்ணை வாரி இறைத்து அவர்கள் இட்ட சாபம் அமைதிப் படையை அனுப்பியவர்களுக்குக் கேட்டி​ருக்குமா?
மிகப் பெரிய கொடூரங்களை நிகழ்த்துபவர்களின் பின்னணியில் இருக்கும் ஒரே காரணம் என்ன தெரியுமா? இயலாமைதான்!

எதையும் செய்யத் துணிகிற துணிச்சல், கையறு நிலையில்தான் மனதுக்குள் கருவாகிறது. இந்தியாவின் பலம் பொருந்திய தலைவராக உருவெடுத்த ராஜீவ் காந்தியை சுக்கு நூறாகச் சிதைக்க முடியும் என அன்றைய காலகட்டத்தில் யாரும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா? அடுக்கடுக்கான பாதுகாப்புகளைக் கடந்து அவரை நெருங்கி இருக்க முடியுமா? எங்கே வருவார்... எங்கே போவார் என்பதை எல்லாம் உளவுத் துறையே கணிக்க முடியாத நிலையில் மிக கவனமாகத் திட்டமிட்டு அவரை எப்படித் தீர்த்துக் கட்டினார்கள்?

அரசு ஆவணம் 81-ல், ''இலங்கையில் இயக்கத்​தினர் மீது இந்திய அமைதிப் படையினர் செய்த கொடுமைகளுக்கு ராஜீவ் காந்திதான் காரணம் என்பதினால், அவரைப் பழிவாங்கும் எண்ணம் இயக்கத்தினருக்கு இருந்தது...'' என்று நான் சொல்லி​யதாக எழுதப்பட்டு உள்ளது. அதில், இயக்கப் பெண்கள் குழுவைப்பற்றி நான் பேசியதாக இல்லை. மேற்கண்டவாறு எழுதியதன் மூலம் 1991 மார்ச் மாதத்திலேயே ராஜீவ் காந்தி கொலை குறித்து எனக்குத் தெரிந்துவிட்டது என்று மறைமுகப் பொருள்படுகிறது.

ஏனென்றால், 1991 மார்ச் மாதம், சிவராசன் என்னிடம் மாலை அணிவிக்க ஒரு பெண் வேண்டும் என்று கேட்ட சமயத்தில்தான், எனக்கு மேற்படி தோன்றியதாக எழுதப்பட்டு உள்ளது. ஆனால், இந்த இடத்தில் 7.5.91 தேதிக்கு முன் சிவராசன், சுபா, தாணு ஆகியோர் தவிர யாருக்கும் சதி குறித்து தெரிந்து இருக்கவில்லை என்று நீதிபதிகளே சொல்லி இருக்கிறார்கள்.

இயக்கத்தினர் மீது பழியை ஏற்படுத்த வேண்டும் என்கிற கட்டாயத்தில் என்னுடைய வாக்குமூலம்(?) என ஏதேதோ கற்பனைக் கதைகளைப் பயன்படுத்திக்கொண்டவர்கள், மிக முக்கிய இடங்களில் வசதியாக அந்த வாக்குமூலத்தை மறந்துவிட்டு கதை பரப்புகிறார்கள்.

பக்கம் 140-ல், ''1991 மே மாதத்தின் முதல் வாரத்தில் 'இரண்டு பெண்களைக் கூட்டி வந்து இருக்கிறேன். அவர்களைப் பயன்படுத்தி வேலையை முடிக்க ஓர் இந்தியப் பெண் தேவை’ என ஏ-3 முருகனிடம் சிவராசன் சொன்னார்...'' என எழுதப்பட்டு உள்ளது.

இப்படி ஒரு கருத்துப் பகிர்தல் எனக்கும் சிவராசனுக்கும், 1991 மே மாதத்தில் அதுவும் குறிப்பாக... சுபா, தாணு 2.5.91 அன்று இங்கு வந்த பின்னர் நடந்தாக எவ்வித சாட்சியமும் சான்றும் எங்குமே கிடையாது.

அரசு ஆவணம் 81-ல், ''1991 மார்ச் மாதத்தில் எதிர்காலத்தில் நல்லுறவினை வளர்க்க ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்க ஓர் இந்தியப் பெண் தேவை என சிவராசன் கேட்டார்...'' என்றும், ''1991 ஏப்ரல் முதல் வாரத்தில் சுபா, தணு என்கிற பெண்களைக் கூட்டிவரப் போவதாகவும், அவர்களுடன் கூடச் சென்று வேலையை முடிக்க (இலங்கைப் பெண்கள் எனத் தெரியாதிருக்க) ஒரு பெண் தேவைப்பட்டது. அதற்கு நளினியைப் பயன்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது...'' என்று மட்டுமே எழுதப்பட்டு இருக்கிறது.

இந்த இரண்டு பகுதிகளையும் சேர்த்துப் பார்த்தால், அந்த வேலை 'மாலை அணிவிப்பது’ என்று வெளிப்படையாக உள்ளது. அதே நேரம், அதில் உள்ள முக்கிய முரண்பாட்டினையும் கவனிக்காமல் இருக்க முடியாது. முதல் பகுதியில், இந்தியப் பெண்ணே நேரடியாக மாலை அணிவிப்பதாக உள்ளது.

இரண்டாவது பகுதியில், இரு இலங்கைப் பெண்கள் மாலை அணிவிக்க அவர்களது அடை​யாளம் தெரிந்துவிடாமல் இருக்க மறைப்புக் கொடுத்து உதவுவது. முதல் பகுதிக்கு நான் முயற்சி செய்கிறேன் என்று சொன்னதாக உள்ளது. இரண்டாவது பகுதிக்கு நான் உடன்பட்டதாக எங்கும் குறிப்பு இல்லை. 'தீர்மானிக்கப்பட்டது’ என்று மட்டுமே எழுதி இருக்கிறார்களே தவிர, யாரால் தீர்மானிக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் இல்லை.

மேலும் அரசுத் தரப்பு வாதத்தில் சுபா, தணு என்ற இரு பெயர்களும் 2.5.91 அன்றுதான் முதன் முதலில் சூட்டப்பட்டது என்று இருக்கிறது. ஆனால், 1991 ஏப்ரல் முதல் வாரத்திலேயே சிவராசன் அந்த இரு பெயரால் குறிப்பிட்டு அவர்களைப்பற்றி சொன்னார் என இருக்கிறது. இந்தக் குளறுபடிகளை எல்லாம் நீதிபதிகள் எப்படி ஏற்றுக்​கொண்டார்கள்?

இடைச்செருகலாக வழக்கு விவரங்​களைச் சொன்னதன் பின்னணிக்கு ஓர் அர்த்தம் இருக்கிறது. ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் இருப்பது புலியா? இல்லை புலிகள் மீதான பழியா? என்பதை எல்லாம் சுட்டிக்காட்டும் நிலையில் நான் இல்லை. ஆனால், உற்ற உறவுகள் இரத்தத்தில் மிதந்ததைக் கண்ணுற்ற எவர் வேண்டுமானாலும், வெறியோடு அலைந்திருக்க முடியும்.

எத்தனை விதமான இழப்புகள்... எவ்வளவு துயரங்கள்... சிங்களப் படைகளின் குரூரமே தேவலாம் என்கிற அளவுக்கு பலாத்காரங்கள்... கொலைகள்... அதில், பாதிக்கப்பட்ட ஈ எறும்புக்குக்கூட பழிவாங்கும் எண்ணம் உருவாகி இருக்கும். அப்படி இருக்க, ரத்தமும் சதையுமாய் மண்ணையும் மரத்தையும் நேசித்த எங்களின் உறவுகள், அமைதிப் படைக்கு எதிராக எப்படித் துடித்து இருப்பார்கள்? அதை ஏவிய ராஜீவ் காந்தி மீது எவ்வளவு ஆத்திரத்தில் இருந்திருப்பார்கள்? பழிவாங்கும் வெறியை மடியில் கட்டியபடி அமைதிப் படையை விரட்டத் தங்களின் உயிரையே தீய்த்திருப்பார்கள்?

மடியில் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு வந்த தாணுவுக்கு உயிர் வாழும் ஆசை இருந்திருக்காதா? இந்த மண்ணைவிட்டு மறையப்போகிறோமே என்கிறத் தவிப்பு கடைசிக் கணத்திலும் அவருக்கு ஏற்படாமல்​போனது ஏன்? இந்தக் கணத்திலும் ராஜீவ் கொலையை நான் துளியும் நியாயப்படுத்தவில்லை. 'கொலைக்கு கொலையே தீர்வு’ என்கிற கோட்பாடு மனித வர்க்கத்துக்குக் கூடாது. ஆனாலும், சிலர் சிந்தும் கண்ணீருக்குக் காரணமே, அவர்கள் பலருக்கும் விதைத்த கண்ணீர்தான் என்பதை ஈழத்துப் பிறப்பெடுத்தவனாக சொல்ல வேண்டியது என் கடமை!

காயங்கள் ஆறாது...

நன்றி ஜூனியர் விகடன்

பாலைவனமாக இலங்கை மாறக் கூடிய அபாயம்: சரத்

இந்த நாடு பாலைவனமாக மாறக் கூடிய அபாயம் காணப்படுகின்றது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்த போது சிங்கப்பூரில் உள்ள அரச வைத்தியசாலையில் எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, அதுமட்டுமன்றி உலகக் குழுக்களை வழி நடத்தும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிங்கப்பூரின் தனியார் வைத்தியசாலை ஒன்றில் பெரும் பொருட் செலவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சட்டங்களை இயற்றி அரசாங்கம் வர்த்தக நிறுவனங்களை கொள்ளையிட முயற்சிக்கின்றது. இதுதான் மெய்யான தேசப்பற்று என்று கூறிய இவர் வெற்றி உண்டாகட்டும். என்றும் இந்த நாட்டு பற்று என்றாவது நாட்டை பாலைவனமாக மாற்றிவிடும் என்று தெரிவித்தார்.

இந்த நாட்டை சுரண்டி ஒன்றுமில்லாமல் ஆக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொள்ள சென்றிருந்த போது அவர் செய்தியாளர்களுக்கு இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

கவிஞர் காசி ஆனந்தன் நூல்கள் வெளியீட்டு விழா

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதியுள்ள நறுக்குகள் (இரண்டாம் தொகுப்பு), பொழிச்சல் (புதுக்கவிதை உரை இலக்கியமே - ஆய்வு), உருவகக் கதைகள் என்ற நூலின் ஆங்கில மொழிப் பெயர்ப்பு நூல் ஆகிய 3 நூல்கள் 10.11.2011 அன்று மாலை 5 மணிக்கு சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் வெளியிடப்படுகிறது.

விழாவுக்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்குகிறார். 3 நூல்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிடுகிறார். கோ.இளவழகனார், புலவர் இரத்தினவேலு ஆகியோர் முதல் பிரதிகளை பெற்றுக்கொள்கிறார்கள்.

பெ.மணியரசன் வாழ்த்துரை வழங்குகிறார். இயக்குனர் மணிவண்ணன், தமிழச்சி தங்கபாண்டியன், ஓவியர் வீர சந்தானம் ஆகியோர் ஆய்வுரை நடத்துகின்றனர். இறுதியில் கவிஞர் காசி ஆனந்தன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வருக்கு அவகாசம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் எதிர்வரும் நவம்பர் 22 அன்று அவர் ஆஜராவதற்கு நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜுனய்யா ஒப்புக் கொண்டார்.

ஜெயலலிதா 1991-96ல் முதல்வராக இருந்தபோது, முறைகேடாக 66 கோடி ரூபாய் அளவு அவர் சொத்துக் குவித்த்தாக, பின்னர் வந்த திமுக அரசு வழக்கு தொடர்ந்தது. அது பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்து, பெங்களூருக்கும் மாற்றப்பட்டு, அங்குள்ள சிறப்பு நீதிமன்றத்தின் முன் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
நீதிமன்றம் சென்று அரச தரப்பு வழக்கறிஞர் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிய நிலையில், கடந்த அக்டோபர் 20, 21 ஆகிய இரு நாட்களில், அவர் நீதிமன்றம் சென்று பதில்களை அளித்தார்.

ஆனால் அவருக்காக தயாரிக்கப்பட்டிருந்த 1339 கேள்விகளில் 567 கேள்விகளுக்குத்தான் அவ்விருநாட்களில் தமிழக முதல்வரால் பதிலளிக்கமுடிந்தது. பின்னர் விசாரணை நவம்பர் 8க்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் நேரடியாக ஆஜராவதிலிருந்து விலக்களிக்கவேண்டுமெனக்கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு வசதியானதொரு நாளில் ஆஜராவது குறித்து சிறப்பு நீதிமன்றம் முடிவுசெய்துகொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

அதன்படி செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு சிறப்புநீதிமன்றத்தின் முன் வந்தபோது, ஜெயலலிதாவின் வழக்கறிஞர், முதல்வர் என்ற முறையில் அவர் மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டியிருக்கிறது. வெள்ள நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியிருக்கிறது. எனவே நவம்பர் 22 ம் தேதி ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு வர அனுமதிக்கவேண்டும் எனக்கோரினார். தேவையானால் அதற்கடுத்த நாளும் தமிழக் முதல்வர் நீதிமன்றம் வருவார் என்றார் வழக்கறிஞர். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு வழக்கு நவம்பர் 22க்கு ஒத்திவைக்கப்பட்டது.

நண்பன் படத்துக்கு சிக்கல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் டப்பிங் படங்களை வெளியிட ஆந்திராவில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த கட்டுப்பாடால் ஷங்கர் இயக்கியுள்ள 'நண்பன்' படத்தை தெலுங்கில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னணி ஹீரோ நடித்த அல்லது பிரபல இயக்குனர்கள் இயக்கிய தமிழ் டப்பிங் படங்கள், நேரடி தெலுங்கு படங்களை விட ஆந்திராவில் வசூலில் சாதனை படைத்து வருகின்றன. இதனால் தெலுங்கு பட வியாபாரம் பாதிப்படைவதாக ஆந்திர மாநில விநியோகஸ்தர்கள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். வரும் பொங்கலன்று (தெலுங்கில் சங்கராந்தி) ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்துள்ள 'நண்பன்' படம், '3 ராஸ்கல்ஸ்' என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. பொதுவாக ஷங்கர் இயக்கும் படங்கள் ஆந்திராவில் வசூலில் சக்கைப்போடு போடுவது வழக்கம். அதனால் அன்று வெளியாகும் நேரடி தெலுங்கு படங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆந்திர விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆந்திர மாநில பிலிம் சேம்பர் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. இக்குழுவில், சுரேஷ் பாபு, தில் ராஜு, நாட்டிகுமார், உள்ளிட்ட தயாரிப்பாளர்களும் பூபால், ராம சுப்பா ரெட்டி, விஜயேந்தர் ரெட்டி உட்பட விநியோகஸ்தர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு, டப்பிங் படங்களுக்கான வரியை தற்போது இருக்கும் 20லிருந்து 50 சதவிகிதமாக உயர்த்துவது, சங்கராந்தி, விநாயக சதுர்த்தி, தசாரா உட்பட முக்கியமான விழாக் காலங்களில் நேரடி தெலுங்கு படங்களைத் தவிர மற்ற படங்களை வெளியிடாமல் இருப்பது, டப்பிங் படங்களுக்கான தியேட்டர்களை குறைப்பது, இவற்றை  ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கும். இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் அரசாணை வெளியிட, ஆந்திர அரசுக்கு பரிந்துரைக்கப்படும். ''டப்பிங் படங்களுக்கு நாங்கள் எதிரியல்ல. ஆனால், தமிழ் நாட்டில் டப்பிங் படங்களுக்கு அதிக வரி விதிப்பு இருப்பதை போல இங்கும் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்'' என்று தயாரிப்பாளர் சுரேஷ் பாபு கூறினார். இந்த விஷயங்களை ஆந்திர அரசு ஏற்றுக்கொண்டால், பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் 'நண்பன்' படத்துக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.


கவர்ச்சி இல்லாமலும் ஜெயிக்கலாம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கவர்ச்சி இல்லாமலும் ஜெயிக்கலாம் என்று நடிகை பாமா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: இந்திப் படத்தில் நடித்து வெற்றி பெற்றால் இந்திய நடிகை, தமிழ் படத்தில் ஜெயித்தால் தென்னிந்திய நடிகை, இதுதான் இன்றைய நிலை. அதற்காகத்தான் மலையாள நடிகைகள் தாய் மொழிக்குப் பிறகு தமிழில் ஜெயிக்க நினைக்கிறார்கள்.சிலர் தமிழில் ஜெயிக்க கிளாமர் முக்கியம் என்று நினைக்கிறார்கள். ரேவதி எந்தப் படத்திலும் கிளாமராக நடிக்காமல் வெற்றி பெற்றார். சமீபத்தில் ப்ரியாமணியும், அமலா பாலும் கிளாமராக நடிக்காமல் தமிழில் ஜெயித்தார்கள். எனவே வெற்றிபெறுவதற்கு கிளாமர் முக்கியமில்லை. தற்போது தமிழில் 'சேவற்கொடி' படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். கன்னட 'மைனா' படமும், 'ஒண்டு கவுனவல்லி' என்ற படமும் அடுத்த மாதம் வெளிவருகிறது. இன்னும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். இதில் எதிலுமே கிளாமராக நடிக்கவில்லை.


காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு : வீட்டிலிருந்து நிஷா வெளியேற்றம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் 'ஜே ஜே' படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தவர் அமோகா. இவர் தனது இயற்பெயரான நிஷா கோத்தாரி என்ற பெயரில் இந்தியில் நடித்து வந்தார். ராம் கோபால் வர்மா இயக்கிய இந்தி படங்களில் நடித்து வந்த இவர், இப்போது தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். ஜீவா நடித்த 'கச்சேரி ஆரம்பம்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். மும்பை ஓஷிவாராவில் வசித்து வரும் இவரது குடும்பம், தங்கள் சமூகத்தின் மீது அதிக நம்பிக்கைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நிஷா, கடற்படையில் வேலை பார்க்கும் ஒருவரை சில வருடங்களாக காதலித்து வருகிறார். அவரை திருமணம் செய்யப்போவதாக தனது தந்தை நிர்மல் குமாரிடம் சொன்னார். காதலர் தங்கள் பிரிவை சேர்ந்தவர் இல்லை என்று தெரிந்ததும் அவர்கள் நிஷாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து நிஷாவை அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. தங்களது சமூக சங்கத்துக்கும் இது தொடர்பாக நிஷாவின் பெற்றோர் கடிதம் அனுப்பியுள்ளனர். இதுபற்றி நிஷாவிடம் கேட்டபோது, ''இப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. தற்போது எனது பெற்றோருடன் டெல்லியில் இருக்கிறேன்'' என்று முடித்துக்கொண்டார். இதே போல நிஷாவின் தந்தை கூறும்போது, ''இது எங்கள் தனிப்பட்ட பிரச்னை. இதில் உண்மை இல்லை. சொசைட்டிக்கு நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளதற்கு வேறு காரணங்கள் உள்ளன''என்றார்.
நிஷா தங்கியிருக்கும் ஓஷிவாரா சமர்தீப் அபார்ட்மென்ட் செயலாளர் கூறும்போது, ''நிஷாவின் தந்தை, ப்ளாட்டின் சாவியை தங்கள் குடும்பத்தினர் யார் கேட்டாலும் கொடுக்க வேண்டாம், நீங்களே வைத்திருங்கள்' என்று கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, என்னிடம் போன் செய்து அவரது மகள் நிஷாவின் திருமண கதையை சொன்னார். இந்த சம்பவத்துக்குப் பிறகு நிஷா இங்கு வருவதில்லை'' என்றார்.


Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா