Saturday 5 November 2011

மாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக.உங்கள் கல்லறை மீது எங்கள் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்”.


கார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேசியநாள்.அந்நாளில், ஒவ்வொரு வருடமும் மாவீரர்துயிலும் இல்லங்களுக்குச் சென்று, மடிந்த வீரர்களின் கல்லறைகளில் கண்ணீருடன் நிற்கும் பெற்றோர்களின் கரங்களைப் பற்றி, மாவீரர்களின் கனவு நனைவாகும் என்ற ஆறுதல் வார்த்தைகளைக்கூறி, கனத்த மனங்களுடன் திரும்பும் வேளை, இன்னும் உங்களின் கனவை நனவாக்கவில்லையே என்ற உறுத்தல் மனதைக் குடையும்.

இன்றைக்கு முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களை, உங்களின் கனவை நனவாக்குவோம் என்றே விதைகுழிகளுக்குள் விதைத்துவிட்டோம். ஈழத்தமிழ்மக்களின் சுபீட்சமான எதிர்காலம் என்ற உன்னத இலட்சியத்திற்காக, கொள்கைக்காகப் போராடி மடிந்த இந்த மாவீரர்கள் தான் உண்மையான போராளிகள் என்பது தேசியத் தலைவனின் கருத்து. 2001ம் வருடம் தீச்சுவாலை எதிர்த்தாக்குதலுக்கு தயாராக இருந்தவேளை, களமுளைத்தளபதிகளுக்கான கலந்துரையாடலுக்காக அழைக்கப்பட்டிருந்தோம். அப்போது தலைவர் பிரபாகரன் அவர்கள் ”உண்மையான போராளி என்றால் யார், அவர் தான் கொண்ட கொள்கையில் வென்றிருக்க வேண்டும் அல்லது அந்த கொள்கைக்காக வீரச்சாவடைந்திருக்க வேண்டும், அவர் தான் உண்மையான போராளி. எனவே நான் என்னை ஒரு உண்மையான போராளி என்று சொல்லமாட்டேன். நான் என்னுடைய கொள்கையில் வெல்லவுமில்லை வீரச்சாவடையவுமில்லை” என்று கூறினார். அந்தக் கர்மவீரனின் எண்ணத்தில் உயர்ந்து நிற்பவர்கள்தான் மாவீரர்கள்.

தமிழ்மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தின் முத்துக்கள் இவர்கள். அவர்களின் தியாகம், உழைப்பு, கனவு எல்லாம் விடுதலை மீதும் அதை வழிநடாத்திய தலைவன் மீதும் கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடுகள். லெப் சங்கர் தொடக்கம் எத்தனை மாவீரர்களின் தியாகங்களைத் தாங்கியிருக்கிறது இந்த விடுதலைப்போராட்டம். துப்பாக்கிச் சன்னம் துளைத்து விழுந்த வேளையிலும் ’எதிரியிடம் பிடிபடக்கூடாது என்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்திட்டுப் போங்கோ’ எனக் கூறி வீரச்சாவடைந்த லெப் சீலன், காந்தியவழியில், நிராகாரம் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்து தியாகமரணமடைந்த தியாகி திலீபன், எதிரியின் குகைக்குள் கரும்புலியாய் வெடித்த கரும்புலி மில்லர், என எத்தனை எத்தனையோ தியாகங்களின் அடித்தளத்தில் வளர்க்கப்பட்டது இந்தப் போராட்டம். தமது வாழ்க்கையை அர்ப்பணித்த எல்லாப் போராளிகளும் ’நான் வீரச்சாவடைந்தாலும் எனது தலைமுறை போராடும்’ என்ற ஒரே நம்பிக்கையில்தானே போர்க்களம் போனார்கள். அதே நம்பிக்கையோடுதானே விதைகுழியில் தூங்குகின்றார்கள். ஒவ்வொரு போராளியையும் விதைக்கும் போது ’நெஞ்சு கனக்கும் தாயகக்கனவுடன் பிரிந்து செல்லும் இவனின் கனவை நனைவாக்குவோம்’ என விதைகுழி மீது உறுதியெடுத்துத்தானே விதைத்தோம்.

அவர்களின் தியாகங்கள் அளப்பரியவை. வர்ணிக்க முடியாதவை. தற்துணிவான வீரம்மிக்க செயல்களின் கதாநாயகர்கள் தான் மாவீரர்கள். எப்படி இவர்கள் இவ்வாறு தமது உயிரைத் தியாகம் செய்யத் துணிந்தார்கள். ஒரேவிடயந்தான், இனத்தின் விடுதலை வேண்டுமாயின் போராடியேதான் ஆகவேண்டும் என்ற முடிவில் தெளிவாக இருந்தார்கள் அதற்காக எந்தக் கடினங்களையும் தாங்கும் துணிவுடன் செயற்பட்டார்கள். ’சத்தியத்திற்காகச் சாகத்துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப்பிறவியும் சரித்திரத்தைப் படைக்கமுடியும்’ என்ற தலைவனின் வழியில், சரித்திர புருஷர்களாக சத்தியத்தின் வழி நின்று தமது வாழ்வை அர்ப்பணித்த அவர்களின் நினைவு எழுச்சி தினத்தின் கனதி கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
தலைவராலும் தமிழ்மக்களாலும் உன்னதமாக மதிக்கப்படும் மாவீரர்களுக்காகக் கொண்டாடப்படும் மாவீரர்தினம் வெறும் அடையாள நிகழ்வோ, கேளிக்கை நிகழ்வோ அல்ல. வணங்குதலுக்குரிய, போற்றுதலுக்குரிய நன்நாள். தலைவரால் தேசிய நாளாகவே பிரகடனப்படுத்தப்பட்ட புனிதநாள்.



தமிழீழத்தின் புனிதநாளான மாவீரர்நாள், நினைவு எழுச்சி நாளாகத் தேசமெங்கும் பரந்து நிற்கும். களமும் புலமும் ஒரே குடையில் இணைந்து நின்று அந்த நாளை வரவேற்கும். தமிழீழத்தின் ஒவ்வொரு இடமும் புனிதமாக, மாவீரர் நினைவுகளைத் தாங்கி அலங்கரிக்கப்பட்டிருக்கும். வீதிகளும் வெளிகளும் பாதாகைகளுடன் நிமிர்ந்து நிற்க, தென்றலோடு கலந்துவரும் மாவீரர் கீதங்கள் நினைவுகளை மீட்டி, உணர்வுகளை உரசிச் செல்லும். காற்றுக்கூட அவர்களின் நினைவைச் சுமந்துவரும். துயிலுமில்லங்களில், அவர்களின் கல்லறை கண்ணீரில் நனைந்திருக்கும். வித்தாகிப்போன ஒவ்வொரு ஆத்மாவின் பெயரிலும் தனது சத்திய உரையை வழங்கும் தலைவன், நெஞ்சோடு நிறுத்தி உறுதியெடுப்பார். நிசப்தமாக ஏற்றப்படும் விளக்குகளின் ஒளிவெள்ளத்தில் பிரகாசிக்கும் அவர்களின் கல்லறை மீது ஒவ்வொரு தமிழனும் மானசீகமான உறுதியெடுப்பான் ”உங்கள் கல்லறை மீது எங்கள் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்”. வித்தாகிப்போன அந்த ஆத்மாக்கள் அன்றைய உறுதி மொழிகளில் அமைதியாக உறங்கும்.

தற்போது ஈழத்தில் தமிழினம் கொடியவனின் கரங்களுக்குள் சிறைப்பட்டிருந்தாலும் ஆறாத வடுக்களுடன் அவல நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தாலும் இனத்தின் சுதந்திரத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் போராடி மடிந்த மாவீரர்களை நினைவுகூரத் தயாராகி, வரப்போகும் கார்த்திகையை எதிர்பார்த்து நிற்கிறார்கள். போற்றப்பட்டு வந்த துயிலுமில்லங்களைக் கூட இடித்தழித்திருக்கிறது போர்த்தர்மமும் மனிதாபிமானாமும் அற்ற சிங்கள இராணுவம். அடக்குமுறைச்சிறையில் இருந்தாலும், ஈழமக்கள், அமைதியாக ஆத்மார்த்தமாக வீடுகளில் நினைவுகூருவார்கள் என்பதில் ஜயமில்லை. மாவீரர்களின் நினைவுக்கான எந்தச் சுவடும் தமிழீழத்தில் இல்லை என்று சிங்களம் இறுமாப்புடன் இருந்தாலும், மக்கள் தமது மனங்களில் ஏந்தி மாவீரச் செல்வங்களை வணங்குவார்கள் என்பது திண்ணம்.

ஆனால், விடுதலைப்போராட்டத்தின் அடுத்தக்கட்டத்தைச் சுமக்கவேண்டிய புலம்பெயர்தேசம் குழப்பங்களில் சிக்கித் தவிக்கின்றது. தலைவனின் வழிநடத்தலில் ஒன்றுபட்டு நின்ற தேசம் இன்று பிரிவுகளாக நின்று மாவீரர் தினத்தை நடாத்துமளவிற்குப் பிளவுபட்டு நிற்கின்றது. கொள்கைகள் கோட்பாடுகளில் முரண்பாடுகள் வரலாம். எங்களுக்காக மடிந்துபோன தியாகிகளான மாவீரர்களை நினைவு கூருவதிலுமா இழுபறி? ஆளாளுக்கு ஒரு மாவீரர் தினம். அதற்கான பாரிய விவாதங்கள், உரையாடல்கள் என மாவீரர்தினம் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் முடிவின்றி நீண்டுகொண்டே செல்கின்றன. மாவீரர்களின் தியாகங்கள், அவர்களின் வரலாறுகள் பற்றிய உரையாடல்கள், செய்திகள் பரிமாறப்படுவதை விட, முரண்பாட்டின் விவாதங்களே மிகவும் பிரதானப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது தானா தலைவனிடத்தில் இதுவரையும் நாம் கற்றுக்கொண்டது. மாவீரர் தினத்தில் கூட ஒன்றிணைய முடியவில்லையென்றால் நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம் எமது போராட்டம் எங்கே செல்கின்றது. ஒற்றுமையாக முந்நகர்த்தப்பட வேண்டிய போராட்டம், உள்முரண்பாடுகளில் சிதைந்துபோகின்றது. இதனால் எத்தனை தமிழ்மக்கள் திசைதெரியாத குழப்பதோடு தவிக்கிறார்கள், பலர் ஒதுங்கிக் கொண்டு செல்கின்றார்கள். இழுத்த இழுப்பிற்கெல்லாம் எல்லாமக்களும் இழுபடுவார்கள் என்று நினைப்பது தவறானது.

தலைவரின் தலைமையில் பயணித்தவர்கள் இன உரிமைப் போராட்டத்தில் செலுத்தும் கவனத்தை விட விடுதலைப்புலிகளின் உரிமை யாருக்கு என்னும் தனி உரிமைப் போராட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப்போல தெரிகின்றது. மிகவும் கட்டுக்கோப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயரால் அடையாளங் காணப்பட்டவர்கள், இன்று தங்களிற்குள்ளேயான தனிப்பட்டதாக்குதல்கள், வன்முறைகள், வசவுகள் என்ற வளையத்திற்குள் சிக்கி அமைப்பினதும் தலைவரினதும் கௌரவத்தை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்றனர். இவையே மாவீரர் தின குழப்பங்களுக்கும் காரணமாகிவிட்டன. இவர்கள் யாரும் தங்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்த முடியாது. குடும்பத்தலைவர் இருக்கும் போது ஒழுங்காக இருப்பதை விட அவர் வீட்டில் இல்லாத போதும் ஒழுங்காக இருப்பது தான் உன்னதமான ஒழுக்கம். விடுதலைப்புலிகளின் பெயரால் செய்யப்படும் ஒவ்வொரு விடயத்தாலும் அவமானப்படுவது நீங்கள் யாருமல்ல, ’தலைவர்தான்’ என்பது கூடப் புரியவில்லையா?. இந்த மாபெரும் இயக்கம் பிரபாகரன் என்னும் ஒற்றைச் சொல்லின் ஆளுமையின் வெளிப்பாடு. அதைச்சுற்றித்தான் மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டனர். அதை தலைவர் இலகுவாக கட்டியெழுப்பிவிடவில்லை. எத்தனையோ அர்ப்பணிப்புகள் தியாகங்களின் அடித்தளத்தில் தான் கட்டியெழுப்பினார். இதனால் அவரின் தலைமையின் கீழ் செயற்பட்டவர்கள் என்பதன் அடிப்படையில் அதை போட்டு உடைக்கும் உரிமை யாருக்கும் இல்லை.

தமிழீழம் என்ற ஒற்றைக் கனவுக்காக மடிந்துபோன ஆத்மாக்களிடம், ’எங்களுக்காக நீங்கள் ஆகுதியானீர்கள். ஆனால் உங்களை எங்களால் ஒன்றுபட்டு வணங்க முடியவில்லை’ என எவ்வாறு கூறமுடியும். அவ்வாறு கூறின் நெஞ்சிலே நெருஞ்சி முள்ளாள் குத்துவது போலாகாதா? உங்களிடம் தாழ்வான வேண்டுகோள் ஒன்றுதான். தயவுசெய்து தலைவரையும் மாவீரர்களையும் அவமானப்படுத்திவிடாதீர்கள். உங்களின் அணிப்பலத்தைக் காட்டுவதற்கான குறியீடாகவோ ஆதாரமாகவோ இந்தப் புனிதநாளைப் பயன்படுத்தாதீர்கள். உங்கள் முரண்பாடுகளினால் மக்களைச் சோர்வடையச் செய்யாமல் ஒருமைப்பாட்டுடன் ஒரே வழியில் பயணிப்போம் என இந்த மாவீரர் தினத்திலாவது அவர்களின் கல்லறைகளின் மீது சத்தியம் செய்யுங்கள்.

முரண்பாடுகளில் சிதைக்கப்படும் இன்னொரு முக்கியமான புனிதம் ’தலைவரின் மாவீர்ர் தின உரை நேரம்’. வருடத்தில் ஒரு தடவைதான் தலைவர் தனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பார். ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் தலைவர் தனது உரையில் கடந்த ஒருவருடத்தின் அடைவுகள், சிங்களத்தின் கொடூரங்கள், தனது நகர்வுகள், தொடர்ந்து என்ன செய்யப் போகின்றேன் என்பதைப் பதிவு செய்வார். எனது தனிப்பட்ட பார்வையில், ”அந்தப்புனிதமான தினத்தில், தான் கடந்த வருடத்தில் என்ன செய்தேன், இனி என்ன செய்யப்போகின்றேன் என்பதை ஆத்மார்த்தமாக மாவீரர்களிடம் கூறும் நிகழ்வாக அல்லது சத்தியம் செய்யும் உரையாகத்தான் தலைவர் கருதியதாகவே” நான் நினைக்கின்றேன். எனவே அவர் உரையாற்றும் நேரம் முக்கியமானது, பெறுமதிவாய்ந்தது. எப்போதும் தலைவர் சொல்லுக்கு முன் செயல் இருக்க வேண்டும என விரும்புவார். வெற்று வார்த்தைகளை விட செயற்திறன்மிக்க செயற்பாடுகளைத்தான் வரவேற்பார். அதில் ஒன்றாகவே அவரது மாவீரர்தின உரையும் அமையும்.

கடந்த இரண்டுவருடங்களில், அந்த நேரத்தில் எத்தனையோ அபத்தங்கள் நடந்தேறிவிட்டன. ஒன்றுக்கு மேற்பட்ட உரைகள், அவற்றில் முரண்பாடான கருத்துக்கள். தயவுசெய்து அந்த நேரத்தை களங்கப்படுத்தாதீர்கள். தலைவர் மாவீரர் தின உரையாற்றுவாரா! ஆற்றமாட்டாரா! என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை. ஆனால் வருடத்தில் ஒரு தடவை மட்டுமே உரை நிகழ்த்தும் அந்த நேரம் தலைவருக்கு மட்டுமே உரியது. அவர் செய்யும் சத்திய உரை அது. தலைவரைத்தவிர யாராலும் அந்த நிமிடங்களுக்கு வலுச்சேர்க்க முடியாது. அந்த மாபெரும் தலைவன், தான் செய்தவற்றையும் செய்யப்போவதையும் தன்னை நம்பி வீரச்சரடைந்த மாவீரர்களுடனும் தன்னை நேசித்த மக்களுடனும் பரிமாறும் நிமிடங்கள்.
பெறுமதியான அந்த நிமிடங்களில் கண்டிப்பாக ஏதோ ஒரு உரையை வாசித்தே தீர வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் விதிக்கப்படவில்லை. அவை சம்பிரதாயமான உரைகளை வாசிப்பதற்கான நிமிடங்களும் அல்ல. எனவே, அந்த நிமிடங்கள் தலைவருக்குரியவை என்றே விட்டுவிடுங்கள். அதுதான் தலைமைக்கு கொடுக்கும் மரியாதை. தலைவருக்குரிய நிமிடங்கள் மௌனமாகவே கரையட்டும். அந்த நேரத்தில் மாவீரர்களை மௌனமாக வணங்கி நிற்கும் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் தலைவர் நிசப்தமாக வலம்வருவார். அற்புத வீரனின் நினைவுகளுடன் கலந்திருக்கும் சிறப்பு நேரமாக இருப்பதுதான் பெறுமதியானது. அந்த நேரத்தில் தலைவனின் சிந்தனைகளைக் காற்றோடு கலக்கவிடுங்கள். அதில் மக்கள் இணைந்திருக்கட்டும். அந்த உணர்வுகளுடன் அவர்கள் மாவீரர்களின் கல்லறைகளில் விளக்கேற்றி, அந்த ஆத்மாக்களோடு உறுதியெடுப்பார்கள். அதன் பிற்பாடு உங்களின் அறிக்கைகளை வாசியுங்கள்.

மாவீரர் தினம் என்ற புனிதநாளிலாவது தலைவரின் பேரால் ஒன்றிணையுங்கள் என்பதுதான் விடுதலையை வேண்டிநிற்கும் மக்களின் விருப்பம். இலக்கும் அதற்கான பாதையும் தெளிவாக இருந்தால் முரண்பாடுகள் அர்த்தமில்லாதவை. பிளவுபட்டு நின்று எந்த முடிவையும் எட்ட முடியாது. ஒருகணம் மாவீரர்களின் தியாகத்தை மட்டும் எண்ணிப்பாருங்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைக் கடந்து இணைந்து நில்லுங்கள். தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் அவருடைய ஆளுமையும் தமிழினத்தை என்றைக்கும் வழிநடாத்தும். தலைவரின் இடமும் உரையாற்றும் நேரமும் அவருக்கு மட்டுமே உரியவை. இதனை மனதில் நிறுத்தி, அவரின் சிந்தனைகளை பின்பற்றிச் செயற்படுவது தான் தலைவருக்கு கொடுக்கும் அதி உச்ச கௌரவம்.

அபிஷேகா
abishaka@gmail.com

தந்தையின் பாசறையிலிருந்து தம்பியின்பாசறை வரை தடம்பதித்த கோவிந்தசாமி ஐயா


தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி தங்களையே தமிழீழ தாய் மண்ணுக்கு உரமாக்கிய ஆயிரமாயிரம் போராளிகளில் கோவிந்தசாமி ஐயாவும் ஒருவராகின்றார்.இரண்டு வழி போராட்டப் பாதையிலும் தடம் பதித்தவர் என்றவகையில் நாம் அறிந்த முதல் மனிதராகவே கோவிந்தசாமி ஐயாவை வரலாற்றில் பதிவு செய்கின்றோம்.

விடுதலைப்போராட்டத்துக்கு நீண்ட வரலாறு இருப்பதைப்போல இவருக்கும் விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை நீண்ட வரலாறு உண்டுஎன்பதை யாரும் மறுக்கமுடியாது. கண்ணாடிகோவிந்தர் என்றும் கோவிந்த ஐயா என்றும் எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட கோவிந்தசாமி ஐயாவை நாம் எப்போதாவது கண்ணாடி இன்றி பார்த்தது கிடையாது.

இவருடைய சொந்த ஊர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலை என்கின்ற பழந்தமிழ் கிராமமாகும். இக்கிராமத்துக்கும் எமது விடுதலை போராட்டத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்ததை ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் நிலத்தொடர்புமூலம் காடுகளுக்குள் இலகுவாக செல்லும்பாதையாக வந்தாறுமூலை விளங்கியதால் விடுதலைப் புலிகளின் ஆரம்பகால தங்குமிடங்களில் ஒன்றாக வந்தாறுமூலை கிராமமும், களுவன்கேணி கடக்கரை பிரதேசமும் அதற்கு பாதுகாப்பு அரணாக வந்தாறுமூலை மக்களும், களுவன்கேணி மக்களும் இருந்தனர்.

இம் மக்கள் தங்கள் செல்லப்பிள்ளைகளாகவும் மிகவும் நெருங்கிய உறவுகளாகவும் விடுதலைப் புலிகளை நேசித்ததனால் விடுதலைப் புலிகள் இக்கிராம சூழலில் தங்களின் போராட்டச் செயல்பாடுகளில் உறுதியாக நடந்து கொள்வதற்கு உதவியாக அமைந்தன. வயது வேறுபாடு இன்றி ஒவ்வொரு மக்களும் விடுதலைப் புலிகளை தங்களின் காவல் தெய்வங்களாகவும் விடுதலைப் போராட்ட வீரர்களாகவும் பார்த்து உணவு உட்பட அனைத்து உதவிகளையும் வழங்கிவந்தனர். இவ்வாறான உணர்வான மக்கள் மத்தியிலிருந்து விடுதலைப் போராட்டத்துக்கு கால் பதித்தவர்தான் எங்களின் அன்பான கோவிந்தசாமி ஐயா அவர்களும் ஆகும்.

மட்டக்களப்புக்கு தளபதி அருணா அவர்களும் சில மூத்த போராளிகளின் வருகையும் வந்தாறுமூலை கிராமத்தை அண்டிய வயல் கிராமமான ஈரலக்குளம் என்கின்ற இடத்தில் குளத்தின் அருகாமையில் அமைந்திருந்த மருதமரச்சோலையில் மாவட்டத்தின் முதலாவது விடுதலைப் புலிகளின் பயிற்சி பாசறை இடம்பெற்றது இதனால் வந்தாறுமூலை கிராமமக்களுக்கும் விடுதலைபுலிகளுக்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமாக அமைந்திருந்தன.

இங்கே தளபதி அருணா, அன்றைய மாவட்ட தாக்குதல் தளபதி லெப்.கேணல் குமரப்பா, மூத்த போராளியான நியுட்டன், பிரிக்கேடியர் சொர்ணம், பல்கலைக்கழக பொறியல் பீட மாணவனாக இருந்து பின்பு தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைந்துகொண்ட பயிற்சி பாசறைப் பொறுப்பாளர் கப்டன்முத்துசாமி, கப்டன்ஜிம்கலி, லெப் கஜன், லெப்.யோசெப், லெப்.பயஸ்,லெப்.ஈசன், லெப்.ஜோன்சன்(ஜுனைடின்) போன்றவர்களும் தங்கி இருந்தனர்.

பயிற்சி பாசறை முடிவுற்ற நிலையில் தளபதி அருணாவின் திட்டமிடலில் மாவட்டத்தின் இரண்டாவது சிங்களகாவல் நிலையத்தின் மீதானதாக்குதல் 2 .09 .1985 அன்று ஏறாவூரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அப்போது தமிழ் மக்களின் மனப்பூர்வமானஆதரவு விடுதலைப் புலிகளுக்கு இருந்ததென்பது தாக்குதலின் பின்பு வந்தாறுமூலைக் கிராமத்தை நோக்கி வந்த போராளிகளை மிகவும் மகிழ்ச்சிகரமாக மக்கள் வரவேற்றதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த வரவேற்பு நிகழ்வில் திட்டமிடாதவகையில் ஒன்று கூடிய திரளான மக்கள் மத்தியில் கோவிந்த ஐயா,சிங்கோ மாஸ்டர் போன்றவர்களும் முதன்மை இடம்பெற்றிருந்தனர். இதன்முலம் வந்தாறுமூலை கிராமமக்களும் விடுதலைப் புலிகள் போராளிகளும் இரண்டறக் கலந்திருந்தனர் என்பதை திடமாக கூற முடிகிறது. கோவிந்தசாமி ஐயாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான தொடர்பு அன்றிலிருந்தே ஆரம்பமானதென்பதை எம்மால் இன்று குறிப்பிட முடிகிறது.

இவருடைய அரசியல் வழி எப்போதும் தெளிவான நிலையிலிருந்தன. தந்தை செல்வாவின் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சிக்கு தனது முழு ஆதரவை வழங்கியதோடு அக்கட்சியின் அரசியல் மேடைகளில் தமிழ்மக்களின் விடுதலைக்காக வீர முழக்கமிட்ட விடுதலை வீரர்தான் இந்த கோவிந்தசாமி ஐயா.

கோவிந்தசாமி ஐயாவை நாம் அறிமுகமாகியது.விடுதலையை நேசித்த ஒருவராகத்தான் அதுமட்டுமன்றி அவருடைய வாழ்க்கையில் பெரும்பகுதி தமிழ்மக்களின் விடுதலையோடு கலந்துவிட்ட ஒன்றாகத்தான் இருந்துவந்ததையும் நாம் கண்டிருக்கின்றோம்.

1976 ம் ஆண்டு வட்டுக்கோட்டை தனித் தமிழ் ஈழத்திற்கான தீர்மானமும், அதனைத் தொடர்ந்து 1977 ம் ஆண்டு நடந்த தேர்தலும்இ தமிழ்மக்களின் விடுதலை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். தமிழ்மக்களின் முற்றுமுழுதான ஆணை தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் கட்சிக்கு கிடைத்தது. அதற்கு பிறகு தமிழ் இளைஞர்களின் எழுச்சியும்இஆயுதப்போராட்ட வளர்ச்சியும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழ்மக்களின் தேசிய விடுதலை இயக்கமாக மாற்றியது.

தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் மேடைகளில் உரிமை முழக்கமிட்ட கோவிந்தஐயா வாழைச்சேனை காகித ஆலையில் தொழில் புரிந்த ஒருவராக இருந்ததனால் 1977 தேர்தலுக்கு பின்பு அரசியல் பழிவாங்கலில் எம்பிலிப்பிட்டிய என்ற சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த காகித ஆலைக்கு இடமாற்றப்பட்டார். அங்கே செல்லவிரும்பாது தொழில் இழந்த நிலையில் எவ்வளவு துன்பங்கள் தன்னைத் துரத்தியபோதும் தமிழ்மக்களின் விடுதலையே தனது குறிக்கோள் என்பதிலிருந்து அணுவளவும் அசையாது மாறாக இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்துக்கு முழு ஆதரவை வழங்கி வந்தார்.

1990 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து தோற்றம் பெற்ற விடுதலைப் புலிகள் மக்கள் முன்ணணி அரசியல் கட்டமைப்பொன்றின் மூலம்தேசியவிடுதலை அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்டார். வந்தாறுமூலை சிற்றூர் அவையின் தலைவராகவும் செங்கலடி வட்டவையின் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டு தனது விடுதலைப்பணியை முழு நேரமாக ஆரம்பித்தார்.

எவ்வித கொள்கைப்பிடிப்பும், பற்றும் இல்லாதவர்கள் தங்களை விடுதலை வீரர்களாக இனம் காட்டி புலம்பெயர் தேசங்களில் சுயநல அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் மட்டக்களப்பைச்சேர்ந்த சிலருடன் ஒப்பிடுகையில் தான்பிறந்த மண்ணில் தமது மக்களோடு நின்று தன்னையே அர்ப்பணித்த கோவிந்தசாமிஐயா மிகவும் உயர்ந்த இடத்தில்வைத்து தமிழ் மக்களால் பார்க்கப்படுகின்றார்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டப் பாதையில் தடம் பதித்தவர்கள் தாய்மொழியையும் தமிழீழ மண்ணையும் நேசித்ததனால் அம்மக்களோடு நின்று தங்களையே அர்ப்பணித்தார்கள்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சியும் எழுச்சியும் தமிழ் மக்களின் அரசியலில் பெரும் பங்கை அவ்வமைப்பு வகித்ததினால் அதன் ஊடாக அரசியலில் இடம் பிடிப்பதற்கு 2004ம்ஆண்டு அரசியலில் நுழைந்தவர்கள் மத்தியில் சுயநலமற்ற முற்றுமுழுதாக வாழ்க்கையை தன் இனத்தின் விடுதலைக்கு அர்ப்பணித்த கோவிந்தசாமி ஐயாவைப் போன்றவர்கள் உயர்ந்த இடத்தில் வைத்து மக்களால் மதிக்கப்படுகின்றார்கள். இவ்வறானவர்களைப் பார்த்தாவது புலம் பெயர் தேசங்களில் வாழும் ஈழத்தமிழ்மக்கள் விடுதலை வீரர்களை இனம்காண வேண்டும் என்பதே எமது பெருவிருப்பாகும்.

1990 ஆண்டு தமிழ் மண்ணை சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து முழுமையாக மீட்டெடுப்பதற்கு ஆயுதப் போராட்டமே சிறந்த வழி என்பதால் இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமானது. அதன்போது மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களின் பெரும்பகுதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.அப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் அரசியல் நடவடிக்கைகள் மக்கள் எழுச்சி கொள்ளும் வகையில் மக்களுக்கு சேவையாற்றுவதன் மூலம் மேற்கொள்ளபட்டன.அக்காலகட்டத்தில் கோவிந்தசாமி ஐயா அவர்கள் அரசியல் பிரிவினருடன் இணைந்து பல்வேறு வழிகளில் பணியாற்றினார். ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதனைத் தொடந்து விடுதலைப் புலிகள் அமைப்பில்தன்னையும் ஒருவராக இணைத்துக்கொண்டார்.

மக்களுகாக அமைக்கப்பட்ட இணக்கமன்றத்தில் பொறுப்பாளராக இருந்து சேவை புரிந்தார் . இவ்வாறு காடுகளில் விடுதலைப் புலிகளின் போராளிகளோடு வாழ்ந்ததனால் அவர்களின் துயரத்தையும் நன்கு அறிந்து அவர்களோடு சேர்ந்து செயல்பட்டார். கண்பார்வை குறைந்த அவருக்கு வெளிச்சம் இன்றி காடுகளில் நடமாடுவது கடினமாக இருந்தது ஆனால் அதையும் தாங்கிக்கொண்டார்.

இவருடைய காலத்தில் தமிழீழ விடுதலையை உச்சமாக நேசித்து சிங்கள படையினரின் தடுப்பு முகாமில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு விடுதலை அடைந்த பின்பும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கியவரும் பின்நாளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகள் பெற்று தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நிமலன் சவுந்திரநாயகம் அவர்களையும் இச்சந்தப்பத்தில் எண்ணிப்பார்க்கிறோம்.

ஏனெனில் வந்தாறுமூலைக்கு அருகாமையில் உள்ள மயிலவெட்டுவான் கிராமத்தில் விடுதலைப் புலிகளின் நிருவாக அமைப்புக்கள் செயல்பட்டன. இதில் கோவிந்தசாமி ஐயா இணக்க மன்ற நிருவாகத்தையும்இவைத்தியர் நடராஜன் மருத்துவ சேவையையும், நிமலன் சவுந்திரநாயகம் தொண்டு நிறுவனங்களின் உதவியை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் இணைப்பாளராக செயல்பட்டதையும் மக்களால் மறக்க முடியாத நிகழ்வாகும். இன்று மூவரும் உயிரோடு இல்லாவிட்டாலும் இறுதிவரை தாய் மண்ணில் நின்று தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்தார்கள் என்ற வரிசையில் உள்ளடக்கப் படுகின்றார்கள்.


1993ஆம் ஆண்டு மட்டக்களப்பு காடுகளில் எமது தேசிய விடுதலை இயக்கத்துக்கு எதிரான சிங்கள இராணுவத்தின் தாக்குதல்கள் பரவலாக தொடராக நடத்தப்பட்டதால் போராளிகளும், அப்பகுதியில் வாழும் மக்களும் பெரும் துன்பப்பட்டனர். உணவைப் பெறுவதற்கே சிரமமான காலமாக குறிப்பிட முடியும். இக் காலகட்டத்திலும் போரளிகளுடன் இணைந்து கோவிந்தஐயாவும் ஒருவராக இருந்தார்.ஒருகட்டத்தில் மாட்டுப்பட்டிகளின் நடுவே மாடுமேய்ப்பவர்களுடன் அவர்களுகேற்ற உடையுடன் மாறு வேடத்தில் அலைந்து திரிந்ததையும் எம்மால் எண்ணிப்பார்க்கமுடிகின்றது. எமது இன விடுதலைக்காக தங்களுடைய பாச உணர்வுகளையும், ஆசைகளையும் துறந்து தங்களை அர்ப்பணித்ததை தமிழ் மக்கள் என்றுமே மறக்கக்கூடாது.

தேசியத் தலைவரின் ஆணையின்படி மட்டக்களப்பிலிருந்து போராளிகள் அழைக்கப்பட்டபோது கோவிந்தஐயாவை போராளிகளுடன் அனுப்புவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அவரின் பார்வைக்குறைவு இருட்டில் அவரால் நடமாட முடியுமா என்ற கேள்வி இருந்தபோதும் நீங்கள் எப்படியோ போய்சேர வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார்கள். தென்தமிழிழத்திலிருந்து வட தமிழீழத்துக்கு நடந்து செல்வதென்பது சுலபமான விடயம் இல்லை.

அதுவும் கோவிந்தசாமிஐயா போன்றவர்களுக்கு மிகவும் கடினமான பயணமாகும். ஆனாலும் இளம் போராளிகளின் உதவியோடு வட தமிழீழம் சென்றடைந்தார்.

தளபதி பானு அவர்களால் தமிழீழ நீதீ நிருவாகத்துறைக்கு அனுப்பப்பட்டு அங்கு நடுவப்பணியகப்பொறுப்பாளராக செயல்பட்டார் . அங்கே கணபதிப்பிள்ளை ஐயா என்றும், பின்நாளில் தேனாடான் என்றும் அழைக்கப்பட்டார். அங்கிருந்து அவர் கடந்து வந்தநடைப்பயணத்தை விபரிக்கும் போது இளம் போராளிகளின் உதவியை என்னால் மறக்க முடியாது என்று கூறுகின்றபோதும் கொம்மாதுறை என்ற இடத்தைச் சேர்ந்த மாவீரர் மேஜர் வேந்தன் என்பவரைப் பற்றி அடிக்கடி நினைவு கூர்ந்து கதைப்பார்.

மண்ணை நேசித்தால் மக்களை நேசித்தால் என்றும் மண்ணைவிட்டு இமக்களைவிட்டு செல்வதற்கு மனம் வரமாட்டாது என்பதை கோவிந்தசாமிஐயாவை போன்றவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதொன்றாகும்.

எமது தேசியத்தலைவரை ஆழமாக நேசித்தவர் வாழ்க்கையில் ஒருமுறையாவது அவரை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தார். பின்நாளில் அது சாத்தியமாகி அவருக்கருகில் நின்று புகைப்படம் எடுக்கின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டபோது அளவுக்கதிகமான மகிழ்ச்சி அடைந்தார். இதனை வாழ் நாளில் மறக்கமுடியாத நாள் என்றும் கூறிக் கொண்டார்.

கோவிந்தஐயா தாய்மொழியையும் தமிழீழ மண்ணையும் நேசித்ததனால் இவ்வுலகில் தமிழினம் வாழும் வரை அழியாத நினைவாக இருக்கப்போகின்ற முள்ளிவாய்க்காலில் தனது இறுதி மூச்சை நிறுத்தி உறங்குகின்றார்

இவருடைய வீரச்சாவு எமக்கு காலம்பிந்தி அறியமுடிந்தது. எமது தேசிய விடுதலை இயக்கத்தினால் வெளிப்படுத்தப் படாதகாலப்பகுதியில் இவருடைய வீரச்சாவு நிகழ்ந்ததால். இவருடைய உறவுகள் மூலம் தெரிந்துகொண்டோம்.

1941 ம் ஆண்டு தமிழீழ மண்ணில் பிறந்த கோவிந்தசாமி ஐயா 1961 ஆண்டு தொடக்கம் 2009 மே மாதம் வரை தாம் பிறந்த தமிழ் இனத்தின் விடுதலைக்காக குரல் கொடுத்து பணி செய்த கோவிந்தசாமிஐயாவின் நினைவுகள் எமது உயிர் இருக்கும் வரை என்றும் உறங்காது. எம் மண்ணை விட்டு அவர் புகழ் என்றும் அழியாது.

சிறிலங்கா அகதிகளை திருப்பி அனுப்ப சுவிற்சர்லாந்து நீதிமன்றம் அனுமதி


புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த அகதிகளை திருப்பி அனுப்பும் முடிவுக்கு சுவிற்சர்லாந்தின் சமஸ்டி நிர்வாக நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக சுவிற்சர்லாந்து உலக வானொலி தகவல் வெளியிட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சிறிலங்கா அகதிகளை திருப்பி அனுப்புவதற்கு குடியேற்றத்துக்கான சுவிஸ் சமஸ்டி பணியகம் முடிவு செய்திருந்தது.

ஆனால் திருப்பி அனுப்பப்படும் தமிழ் அகதிகள சிறிலங்காவில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படும், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து இருப்பதாக சமஸ்டி நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இநத வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2009இல் சிறிலங்கா இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, சிறிலங்காவில் பாதுகாப்பு நிலைமைகள் பொதுவாக முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், உறுதிநிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதனால் அகதிகளை திருப்பி அனுப்பலாம் என்றும் சுவிற்சர்லாந்து நீதிமன்றம் கூறியுள்ளது.

சுவிற்சர்லாந்து நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினால் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

செந்தமிழன் சீமான் அமெரிக்கா விமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார்.இந்திய.சிறிலங்கா உளவுத்துறை சதி



அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்ற தமிழின உணர்வாளரும் நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழன் சீமான் அவர்கள் இந்திய-சிறிலங்கா உளவுத்துறையினரின் சதிநடவடிக்கையால் அமெரிக்க விமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.



இது தொடர்பாக அறிகையில்.. தமிழகத்தில் தமிழ்த்தேசியத் தளத்தை வீச்சுக் குறையாமல் கொண்டுசெல்வதில் முக்கிய பங்காற்றிவருபவரும் நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழன் சீமான் அவர்களும் வழக்கறிஞர் தடா.சந்திரசேகரும் அமெரிக்கா சென்றுள்ளனர்.



அமெரிக்காவில் உள்ள ஈழத்தமிழ் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்ற வேளையிலேயே விமான நிலையத்தில் வைத்து திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.



செந்தமிழன் சீமான் அமெரிக்க விமானநிலையத்தில் இறங்கியவுடன் விசாரனைக்காக தடுத்து நிறுத்திய விமானநிலைய அதிகாரிகள் ஒரு மணிநேர விசாரனைக்குப்பின்னர் உங்களை நாட்டிற்குள் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறி திருப்பியணுப்பியுள்ளனர்.



இதேவேளை தனித்தனியாக பயணத்தை மேற்கொண்டிருந்தபடியால் தடா.சந்திரசேகர் அமெரிக்காவிற்குள் பிரவேசித்துவிட்டதாகவும் அமெரிக்காவினுள் உள்நுழைவு அனுமதி மறுக்கப்பட்ட செந்தமிழன் சீமான் அவர்கள் நாடுதிரும்பிக் கொண்டு இருப்பதாகவும் அறியமுடிகின்றது.



இப்படியான இடையூறுகள் ஏற்படும் என்ற காரணத்தினால்தான் மிகவும் இரகசியமாக இந்த பயணஏற்பாட்டினை சீமான் தரப்பினர் மேற்கொண்டிருந்தனர். அத்துடன் அமெரிக்காவிலும் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் எவ்வித அறிவித்தல்களும் வெளியிடப்படாதிருந்தது.



அப்படி இருந்தும் இந்தப் பயணத்தினை மோப்பம் பிடித்த இந்திய-சிறிலங்கா உளவுத்துறையினர் இறுதிக்கட்டத்தில் தலையிட்டு அமெரிக்காவினுள் செல்லவிடாது விமானநிலையத்தில் வைத்து திருப்பியனுப்பிவிட்டார்கள். இவ்வாறே கடந்த ஆண்டும் கனடாவில் நடைபெற இருந்த மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வில் பங்கேற்கச் சென்ற செந்தமிழன் சீமான் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு பின்னரான காலகட்டத்தில் தேசியத்தலைவரது வெளிப்பாடு இல்லாத நிலையில் புலத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவு நிலைக்கும் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் உளச்சோர்வு நிலைக்கும் மருந்திடும் ஆற்றலை கொண்ட செந்தமிழன் சீமான் அவர்களது பயணங்கள் இந்திய-சிறிலங்கா உளவுத்துறையினரால் திட்டமிட்டு தடுக்கப்படுகின்றது.



முறையாக விசாவிற்கு விண்ணப்பித்து பெறப்பட்ட நிலையில் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்புவது என்பது ஏற்புடையது அல்ல. நாட்டிற்குள் அனுமதிக்க முடியாதவர்களை தவிர்ப்பதற்காகவே விசாவிற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கும் முறை உள்ளது. விசாவிற்கான விண்ணப்பம் அளிக்கப்பட்ட பின்னர் அதனை பரிசீலிக்கும் காலகட்டத்தில் குறித்த நபர்கள் தொடர்பாக ஆராயப்பட்டே விசா அனுமதி வழங்கப்படுகின்றது. அப்படி இருந்தும் பயணிப்பதற்கு அனுமதித்துவிட்டு விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்புவது என்பது கண்டிக்கத்தக்கதே.



இந்திய அரசின் கபடத்தனத்தால் இந்தியாவிற்குள் குறிப்பாக தமிழகத்திற்குள் நுழைவதற்கு அனுமதித்துவிட்டு இறுதி நேரத்தில் விமானநிலையத்தில் வைத்து திருப்பியனுப்பும் பாணியிலேயே செந்தமிழன் சீமான் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.



இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் வைத்து தேசத்தாய் பார்வதியம்மாள் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு கூட அனுமதிமறுக்கப்பட்டு கருணாநிதி ஆட்சியில் திருப்பியனுப்பியிருந்தமையும் தற்போது உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் இம்மானுவேல் அடிகளாரும் அதே விதத்தில் திருப்பியனுப்பப்பட்டிருந்தனர்.



சினிமா நாயகர்களுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் ஏற்படும் இடையூறுகளிற்கெல்லாம் கொதித்தெழுபவர்கள் இன விடுதலைக்கான பயணத்தை மேற்கொண்ட செந்தமிழன் சீமானை திருப்பியனுப்பியதை கண்டிப்பார்களா...?





இலங்கையைச் சேர்ந்த 30 பேருக்கு இன்டர்போல் பிடிவிராந்து


இலங்கையைச் சேர்ந்த 30 பேருக்கு இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.குறித்த இலங்கைப் பிரஜைகள் பாரியளவு நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆறு பேர் பெண்கள் எனவும், இரண்டு வர்த்தகர்கள், ஒரு சட்டத்தரணி உள்ளிட்டோருக்கு எதிராகவும் சார்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 பேரில் பதினாறு பேர் சிங்களவர்கள் எனவும், குருணாகால், கொழும்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் போதைப் பொருள் வர்த்தகர்களும் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார் சீமான்: நாம் தமிழர் கட்சி கண்டனம்

அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:

உலகத் தமிழர் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள் அமெரிக்காவில் தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு சீமானுக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதற்கான முறையான பயண அனுமதியும் அந்நாட்டு அரசிடமிருந்து பெற்று சீமானின் பயண ஏற்பாடுகளை உறுதி செய்தனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு சீமான் புறப்பட்டுச் சென்றார். இன்று அதிகாலை சீமான் நியூயார்க் சென்று சேர்ந்தபோது, அவரை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி விமான நிலையத்திலேயே தடுத்து வைத்துள்ளனர்.

இதற்கான காரணம் கேட்டதற்கு, சீமான் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நெருக்கமானவர் என்றும், அவரை அனுமதித்தால் அது அமெரிக்க நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஆகலாம் என்ற அச்சம் காரணமாக அனுமதி மறுக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

சீமானுக்கு பயண அனுமதி வழங்கப்பட்டபோது இந்த உண்மைகள் அவர்களுக்கு தெரியாமல் போனது ஏன்? இதிலிருந்து தமிழினத்தின் நலனுக்கு எதிரான சக்திகள் அளித்த தகவல்கள் பேரிலேயே சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

இது அமெரிக்காவில் நடை முறையில் உள்ள மனித உரிமை, கருத்துச் சுதந்திர சட்ட உரிமைகளுக்கு முரணான நடவடிக்கையாகும். இந்நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக உண்மையாகப் போராடிவரும் அனைத்து தமிழர் தலைவர்களும் இப்படிப்பட்ட சட்ட அராஜகங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவராக உள்ள அருட்தந்தை இம்மானுவேல் அடிகளாரை இதேபோல்தான் சென்னை விமான நிலையத்தில் இந்திய குடியேற்ற துறை விமானத்தில் வைத்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது. அதுதான் இன்றைக்கு சீமானுக்கும் நடந்துள்ளது.

தமிழீன விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, சிங்கள பவுத்த இனவாத ஆட்சியின் அரச பயங்கரவாதத்திற்கு துணை நின்று, தமிழினப் படுகொலைக்கு உதவிய அரசுகள், இன்று தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அரசியல் தளத்திலும் முடக்க இப்படிப்பட்ட வன்செயல்களில் ஈடுபடுகின்றன.

இன்றைக்கு சீமானுக்கு இழைக்கப்பட்ட அநீதி தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் தமிழினத்தின் அரசியல் போராட்டம் ஒருபோதும் முடங்கிவிடாது. தமிழீழ விடுதலைக்காகப் போராடி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் ஆத்ம பலத்தை சிந்தையில் ஏந்தி விடுதலைப் போராட்டம் வென்றே தீரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜேர்மனில் உள்ள சிறீலங்கா தூதரகத்தில் நடந்த களியாட்டம்! (படங்கள் இணைப்பு)

ஜேர்மன் தலைநகர் பேர்லினில் அமைந்துள்ள சிறீலங்கா துதரகத்தில் கடந்த தீபாவளி நாள் அன்று தமிழ்துரோக கும்பலை ஒன்றுகூட்டி களியாட்ட நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பு இன்று சர்வதேச கவனம் பெற்றுள்ளதுடன் அதனை தழுவியே இன்றைய சர்வதேச செயற்பாடுகள் தவிர்க்கமுடியாது நகர்ந்து வருகையில் சிங்களத்தின் மீதான சர்வதேச அழுத்தங்கள் முன்னிலும் பலமாகப் பிரயோகிக்கப் பட்டு வருகின்ற வேளையில் யேர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்திருக்கும் மேலும் வாசிப்பதற்கு....

கோவையில் நடைபெறும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுக்கு திரண்டு வாருங்கள்: வைகோ

கோவையில் 6ம் திகதி நடைபெறும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுக்கு திரண்டு வாருங்கள் என, வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர் உரிமைகாக்க, மூன்று தமிழர் உயிரைக் காக்க, கோவை மாநகரில், சிதம்பரம் பூங்காவில் வருகின்ற 6ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு, நடைபெறவுள்ளது.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர், பழ. நெடுமாறன் இதற்கு தலைமை தாங்குகிறார். ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்து வரும் அமெரிக்க எழுத்தாளர் ரான்ரைட்னர், ஐக்கிய நாடு அவையின் வல்லுநர்குழு அறிக்கையை வெளியிடவுள்ளார்.

லட்சக்கணக்கான தமிழர்களை கொன்ற இலங்கைக்கு வரிந்து கட்டிக்கொண்டு இந்திய அரசு வேலை செய்கின்றது. அதனால்தான், 2013 ம் ஆண்டு இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் கூறியுள்ளார்.

கோவையில் நடக்கும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கு ஏற்பது, நமது முழு முதல் கடமை. அணி திரண்டு வாருங்கள் தமிழர்களே என அழைக்கின்றேன். மரண இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் தவிக்கும் ஈழத் தமிழருக்கு வாழ்வுரிமை வெளிச்சத்தைக் காட்ட கோவையில் திரண்டிடுவோம்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Friday 4 November 2011

புலிகளை அழித்த சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஏன் ஆதரித்தது?


சரத்பொன்சேகாவுக்கும் சம்பந்தனுக்கும் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருந்ததாக விக்கிலீக்ஸ் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட சரத் பொன்சேகா, ‘தமிழ் மக்களுக்கு அனைத்தையும் கொடுப்பதற்கு சரத்பொன்சேகா இணங்கிவிட்டார். அதற்கான உடன் படிக்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கைச்சாத்திட்டும் விட்டார்” என்பது ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரமாக இருந்தது. இதனை எதிர்க்கட்சிகள் மறுத்து வந்த போதிலும், ‘விக்கிலீக்ஸ்” தற்போது வெளியிட்டுள்ள இரகசியத் தகவல்கள் இது உண்மை என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது.
2010 ஆம் ஆண்டு ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் உச்சக் கட்டத்தில் ‘பொன்சேகா சம்பந்தன் இரகசிய உடன்படிக்கை” என்ற பிரச்சாரமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியி ருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
தேர்தல் கள நிலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இது அமைந்திருந்தது. இது அரசாங்கத்திற்கு சார்பான பிரச்சாரமாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குத் தலைமை தாங்கியவர் என்ற முறையில் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிப்பதா? என்ற கேள்விதான் தமிழர்கள் மத்தியில் முதலில் எழுந்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது.
இருந்த போதிலும் இறுதிக்கட்டத்தில் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பதற்கு இந்த உடன்படிக்கையும் காரணமாக இருந்துள்ளது.
பொன்சேகா கையொப்பமிட்ட இந்த உடன்படிக்கையின் பிரதி ஒன்று சம்பந்தனால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அப்போது வழங்கப்பட்டது.
சரத் பொன்சேகாவுடன் தான் பேச்சுக்களை நடத்தியிருப்பது தொடர்பாக சம்பந்தன் அப்போது பொதுக்கூட்டங்களில் தெரிவித்த போதிலும், சரத் பொன்சேகா கைச்சாத்திட்ட உடன்படிக்கை ஒன்று தன்னிடம் தரப்பட்டிருப்பதாக பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
சம்பந்தனுடன் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நடத்திய சந்திப்பு, 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதென சம்பந்தன் அறிவித்த பின்னர் ஏற்பட்டிருந்த அரசியல் கள நிலைமைகள் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வோஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்த இரகசிய கேபிள் தகவலை விக்கிலீக்ஸ் இப்போது அம்பலமாக்கியுள்ளது.
அதிகளவில் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்கும் அதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கும் சரத் பொன்சேகா இந்த உடன்படிக்கையின் மூலமாக இணக்கம் தெரிவித்திருந்தார்.
இந்த உடன்படிக்கையில் எதிரணிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட சரத் பொன்சேகாவும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கைச்சாத்திட்டிருந்தார்கள்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பேகர் இன மக்களினால் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் நியாயமான அதிகாரப்பரவலாக்கலை வழங்குவதற்கு இந்த உடன்படிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையில் சிங்கள வாக்குகள் பிளவுபட்டிருக்கும் நிலையில் தமிழர்களுடைய ஆதரவு மிகவும் பெறுமதியுடையதாக இருக்கும் என்ற தனது கருத்தையும் அமெரிக்க தூதுவர் முன்வைத்திருக்கின்றார்.
இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டியிருந் தமையையிட்டு தான் கவலையடை வதாகவும் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்த சம்பந்தன், இருந்தபோதிலும் இடம்பெயர்ந்த மக்களை விடுவித்ததைத் தவிர வேறு எதனையும் ராஜபக்ஷ செய்யவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

கள்ளத் தொடர்பு- விபரீதம்


தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபரொருவரை வெட்டிக் கொன்றதுடன் மனைவிக்கும் பலத்த காயமேற்படுத்திய குடும்பஸ்தர் ஒருவரை வத்தேகம பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தேகம பொல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டவராவார்.
கொலையுண்டவரின் சடலத்தில் சுமார் 15 வெட்டுக் காயங்கள் காணப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுண்ட குறித்த இளைஞர் இரவு நேரத்தில் தனது மனைவியைச் சந்திப்பதற்காக இரகசியமாக வந்திருந்த போதே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இவரது மனைவி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிம்புவுக்கு நோ சூர்யாவுக்கு யெஸ்... - அமலாவின் தாராளம்


கொஞ்சம் ரூட் மாறியிருந்தால் 'மாமனாரின் இன்ப வெறி' பட ரேஞ்ச்Amala Paulநடிகையாகியிருப்பார் அமலாபால். அதிர்ஷ்டம் விக்ரம் ரூபத்தில் வந்து அவரது வாழ்க்கையே திருப்பி விட்டு விட்டது. தனது தெய்வ திருமகள் படத்தில் அமலாவுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து அவரது தரத்தை உயர்த்திவிட்டார் சீயான். அதே விக்ரம் கேட்டால் கூட சட்டு புட்டென்று கால்ஷீட்டை எடுத்து நீட்டிவிட முடியாதளவுக்கு அமலா பிஸியோ பிஸி.
சிம்பு நடிக்கவிருக்கும் வடசென்னை படத்தில் நடிக்க அமலாவைதான் கேட்டிருக்கிறாராம் வெற்றி மாறன். இதுவரைக்கும் ஓ.கே சொல்லவில்லை இவர். சந்தோஷமான சம்பளம், தானாக கிடைக்கும் நெகட்டிவ் பப்ளிசிடி இவ்வளவையும் மீறி கால்ஷீட் கொடுக்க விடாமல் தடுப்பது அமலாவின் அண்டை மாநில படங்கள்தான். அவைதான் குறுக்கே நிற்கிறதாம் வடசென்னைக்கு. இதற்கிடையில் சிம்புவுடன் கார்த்திகா நடிப்பதாக இன்னொரு வதந்தியும் றெக்கை கட்டி பறக்க, மெல்லவும் முடியாமல் முழுங்கவும் இயலாமல் அவஸ்தைப்படுகிறார் சிம்பு.
சிம்புவுக்குதான் கால்ஷீட் இல்லை. ஆனால் சிங்கம் பார்ட் 2 வில் சூர்யாவுடன் நடிக்க அமலாவைதான் அழைத்தாராம் ஹரி. வலிய வந்த சந்தோஷத்தை. வாசலிலேயே நிற்க வைக்க தயாராக இல்லை அமலா. கால்ஷீட் டைரியை புரட்டி துழாவி தேதிகளை கொடுத்துவிட சொல்லிவிட்டாராம் மேனேஜரிடம்

கடின உழைப்பே என் வெற்றிக்கு காரணம்: ஸ்ருதிஹாசன் பெருமிதம்


எனது தந்தை கமல்ஹாசன் எனக்கு முழு சுதந்திரம் அளித்திருப்பதே என் தன்னம்பிக்கைக்கு காரணம் என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியள்ளார்.
ஏழாம் அறிவு படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அவர், அந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார்.
மேலும் ஓ மை பிரண்ட், கப்பார் சிங் ஆகிய தெலுங்கு படங்களிலும் கமிட் ஆகியிருக்கிறார்.
திரைத்துறையில் அடுத்தடுத்த படிகளில் ஏறி முன்னேறிக்கொண்டிருப்பது பற்றி ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், வாழ்க்கையில் நான் எந்த முடிவுகளையும் சுயமாக எடுத்துக் கொள்ளலாம். அதற்கான முழு சுதந்திரத்தையும் எனது தந்தை கமல் எனக்கு அளித்து உள்ளார்.
அந்த வகையில் நான் பெரிய அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன். பண வசதி இருப்பதால் அதிலிருந்து தன்னம்பிக்கை பெறுகிறேன்.
வெற்றிக்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பு தன்மையும் அவசியம் என்பதை உணர்ந்து வைத்துள்ளேன். அதனால்தான் அடுத்தடுத்த படிகளில் ஏறி பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
சினிமா, இசை, எழுத்து எல்லாவற்றிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறேன். வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் என் விருப்பப்படியே எடுத்து வைக்கிறேன். நானே என்னை வழி நடத்துகிறேன். என் பெற்றோரிடம் சில விஷயங்களில் ஆலோசனை பெற நான் அணுகுவது உண்டு. ஆனாலும் இறுதி முடிவை நான்தான் எடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியல்: ஒபாமா முதலிடம்

உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் இடத்தில் உள்ளார்.
கடந்தாண்டு வெளியான பட்டியலில் ஒபாமா முதல் இடத்தை இழந்திருந்தார். ஆனாலும் பின்லேடன், கடாபி ஆகியோருக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இந்தாண்டு பட்டியலில் அவருக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.
ரஷ்யாவின் விளாடிமிர் புடின் இரண்டாவது இடத்திலும், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மார்கெல் நான்காவது இடத்திலும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 16வது இடத்திலும் உள்ளனர்.

சீன ஏவுகணைகளால் இந்தியாவுக்கு ஆபத்து: அமெரிக்கா எச்சரிக்கை

அணு ஆயுதத்துடன் கூடிய சீன ஏவுகணையால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்க விஞ்ஞானிகள் குழு சீனாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பற்றி ரகசிய ஆய்வு நடத்தினார்கள். அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சீனா பக்கத்து நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதங்களை குவித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சீனா சமீபத்தில் ஏவுகணை சோதனை நடத்தியது. இவை 7200 கி.மீ தூரம் பாய்ந்து சென்று எதிரியின் இலக்கை தாக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. அதில் அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்டு போர்க் கப்பல்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது போல் அணு ஆயுதங்களுடன் கூடிய 4 ஏவுகணைகளை போர்க்கப்பலில் வைத்துள்ளது.
இந்த ஏவுகணைகளால் இந்தியா-ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவை இந்தியா- ரஷியாவை தாக்கக்கூடிய வகையில் குறி பார்த்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சீனாவிடம் 240 அணு ஆயுதங்கள் உள்ளன. சீனாவின் ஏவுகணை அமெரிக்காவையும் மிரட்டும் வகையில் உள்ளது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட தூரம் 2000 கி.மீ. இந்த இலக்கை தாக்கக்கூடிய ஏவுகணைகள் சீனாவிடம் உள்ளது. தற்போது 7200 கி.மீ. வரை நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை தயாரித்து இருப்பதன் மூலம் அது இந்தியா, ரஷியா மட்டுமல்ல அமெரிக்காவை கூட தாக்கக்கூடியதாகும்.
இதுபற்றி இந்திய அதிகாரிகள் கூறுகையில், சீனாவின் கிங்காய் மாகாணத்தில் ஏவுகணை தளம் உள்ளது. அங்கிருந்து டெல்லி 2000 கி.மீ. தூரம் தான். இதன் மூலம் டெல்லி, நேபாளம், மியான்மர், பாகிஸ்தான் நாடுகளை தாக்கலாம் என்பதால் இது இந்தியாவுக்கு கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என்றார்.

என் குழந்தைக்கு தந்தை இவர்தான்;17 வயது பாப் பாடகர் மீது இளம்பெண் “செக்ஸ்” புகார்


என் குழந்தையின் தந்தை இவர்தான் என 17 வயது அமெரிக்க பாப் பாடகர் மீது இளம்பெண் “செக்ஸ்” புகார் கூறியுள்ளார். அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் 17 வயதே ஆன இவர் மீது கலிபோர்னியாவைச் சேர்ந்த மரியா யீடர் என்ற 20 வயது இளம்பெண் “செக்ஸ்” புகார் கூறியுள்ளார்.
ஜஸ்டினின் ரசிகையான இவர் அவருடன் “செக்ஸ்” உறவு வைத்து இருந்தார். அதன் மூலம் அவர் ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார். அந்த குழந்தை பிறந்து 3 மாதம் ஆகிறது. எனவே, தனது குழந்தைக்கு ஜஸ்டின் பீபர்தான் தந்தை என ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மரியா யீடர் தெரிவித்துள்ளார். அதை நிரூபிக்க அவர் மரபணு சோதனை செய்து கொள்ள முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், இவரது குற்றச்சாட்டை ஜஸ்டின் பீபரின் நெருங்கிய நண்பர்கள் மறுத்துள்ளனர். மரியா யீடர் கூறுவது முற்றிலும் பொய் என தெரி வித்துள்ளனர். எனவே, ஜஸ்டின் பீபர் மீது மரியா யீடர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஜஸ்டின் பீடரை மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.இந்த வழக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதியில் விசாரணைக்கு வருகிறது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா மரணம்



இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவியான ஜீவா
மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.  இறக்கும் போது அவருக்கு வயது 58.சென்னையில் தியாகராயநகரில் இளையராஜாவின் வீடு உள்ளது அங்கு இருந்த ஜீவாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளையராஜா - ஜீவா தம்பதியர்களுக்கு கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்ற மகன்களும், பவதாரணி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீறினால் சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்வேன். மிரட்டல் விடுக்கிறார் முன்னாள் பிரத நீதியரசர்

அதிகாரத் துஷ்பிரயோகம் என்பது எனது பதவிக் காலத்தில் இடம்பெறவில்லை. இதற்கு ஜனாதிபதியின் கடிதம் நற்சான்று பகர்கின்றது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்தார். தன் மீதான நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் ரீதியிலான பழிவாங்கலாகும் எனவும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவில்லை என்ற காரணத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

கோட்டே சோலிஸ் ஹோட்டலில் கடந்த ஞாயிறுறுக்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 

அரசாங்கமும் அதன் 75 எம்.பிக்களும் இணைந்து எனக்கு எதிராக பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்துள்ள பிரேரணையானது இலங்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. இது ஓர் அரசியல் பழிவாங்கலும் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுமாகும். அதிகாரத் துஷ்பிரயோகம் என்பது எனது பதவிக் காலத்தில் இடம்பெறவில்லை. இதற்கு ஜனாதிபதியின் கடிதம் நற்சான்று பகர்கின்றது. 

1968ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி வரையில் அரச நீதித்துறையில் கடமை புரிந்துள்ளேன். நான் பதவி வகித்த காலப்பகுதியில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஆளும் தரப்பினர் பாராளுமன்றத்தில் எனக்கெதிராக விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமெனக் கோரியுள்ளனர். 

இவ்வாறான பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படுவதானது இலங்கை அரசியலமைப்புக்கு புறம்பானதும் மீறுகின்றதுமான செயற்பாடாகும். பிரதம நீதியரசர் ஒருவர் பதவியில் இருக்கும்போது அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்று உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் உயரிய இடமான பாராளுமன்றத்தினூடாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவரை பதவி விலக்க முடியும். 

ஆனாலும் தற்போது என்னை அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில் நான் தற்போது எந்தப் பதவியிலும் இல்லை. மேலும் 2009 ஜூலை மாதம் 7ஆம் திகதி நான் ஓய்வுபெற்றுவிட்டேன். தற்போது இருக்கின்ற 14ஆவது தடவை தெரிவான பாராளுமன்றத்துக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நான் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்தால் நான் பதவி வகித்த காலப்பகுதியில் இருந்த 13ஆவது பாராளுமன்றமே என் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இடம் பெறவில்லை. அன்று ஜனாதிபதி எனது சேவையைப் பாராட்டி நற்சான்று வழங்கியுள்ளார். 

எனது நாடு எனது மக்கள் என்ற வகையில்தான் இந்த சட்டத்துக்கு முரணான செயற்பாட்டை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்பினேன். இது எனது முதற்கட்டப் பணியாகும். இவ்விடயம் கவனத்திற் கொள்ளப்படவில்லையெனில் இதனை சர்வதேச நீதிமன்றம் வரையில் கொண்டு செல்வதற்கும் முயற்சிப்பேன் என்றார்.

Credit/Debit கார்டு இல்லாமல் Domain வாங்குவது எப்படி?


இணையத்தளமொன்றுக்கு அதனது டொமைன் பெயர் மிக முக்கியமாகும். இணையத்தள வருகையாளர்கள்
நினைவில் வைத்திருந்து மீண்டும் உங்கள் தளத்திற்கு வருமாறு இலகுவான பெயராகவும் அதே நேரம் உங்களுக்கு பிடித்த பெயராகவும் டொமைன் பெயர் இருப்பது மிக முக்கியமாகும். எனினும் விரும்பிய டொமைனை வாங்குவதற்கு கிரடிட் காட் அவசியம் என்று இருந்த காலம் போய் தற்போது, இந்திய பாவனையாளர்களுக்கு நற்செய்தியாக தற்போது கிரடிட் கார்ட்டு இல்லாமல் டொமைன் பெயர் வாங்கமுடிவதாகும். இது தொடர்பில்  விரிவான பதிவாக பலேபிரபு தனது தளத்தில் தகவல்கள் தந்துள்ளார். மீள் பிரசுரம் செய்ய அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்து இங்கே மீண்டும் பிரசுரிக்கின்றோம். 4தமிழ்மீடியா குழுமம்
கஸ்டம் டொமைன் என்பது நிறைய பேரின் விருப்பம். பிளாக்கர் மூலம் வாங்க வேண்டும் என்றால் கிரெடிட் கார்டு வேண்டும், இன்னும் சிலவற்றுக்கு டெபிட் கார்டு வேண்டும். இவை இரண்டும் இல்லாமல் வாங்க வழி உள்ளதா என்றால் ஆம் உள்ளது. எப்படி என்று எல்லோரும் கேட்கிறீர்களா? பதிவை படியுங்கள்.

நான் முன்னர் எழுதிய Custom Domain குறித்த பதிவுகளுக்கு நிறைய பேர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு இருந்தால் மட்டுமே வாங்க முடியுமா என்று கேட்டனர், நான் அப்போது கூறிய பதில் ஆம். ஆனால் நண்பர்  தமிழ்கிழம்  ஜெயச்சந்திரன் அதெல்லாம் தேவை இல்லை, நான் அவை இல்லாமல் வாங்கி உள்ளேன் என்று சொன்னார். 
 
தமிழ் பதிவுலகத்துக்கு புதியவரான அவர் இதோ என் வலைப்பூவில் முதல் முறையாக Guest Post எழுதி உள்ளார். இது நிறைய பேருக்கு கண்டிப்பாய் தேவைப்படும் ஒன்று. இதோ பதிவு அவரின் நடையில், 
 
 
அன்பு வாசகர்களுக்கு தமிழ்கிழத்தின் கனிவான வணக்கங்கள். பல இடங்களில் தமிழர்களின் மூளை விரயமாவதைத் தவிர்க்க, தமிழர்களின் ஒற்றுமையை நிலை நாட்ட முதல் முயற்சியாக இன்று நண்பர் பிரபு கிருஷ்ணா அவர்களின் வலைப்பூவில் முதல் முறையாக விருந்தினர் பதிவு எழுத வந்திருக்கும் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்பி இன்றைய பதிவுக்கு செல்வோமா...
 
நம்மில் பலருக்கு Custom Domain வாங்க வேண்டும் என்று வெகு நாள் ஆசைப்பட்டிருப்போம். ஆனால் online purchase-இல் இருக்கும் சிக்கல்களினாலோ அல்லது credit/debit கார்டு இல்லாத காரத்தினாலோ அதை வாங்காமல் இருந்திருப்போம்.மேலும் google மூலம் வாங்க விரும்பினால் Debit கார்டு-டெல்லாம் செல்லாது,கண்டிப்பாக international credit கார்டு வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்று நான் சொல்லப்போகும் வழிமுறையை பயன்படுத்தி எந்த ஒரு சிக்கலும் இன்றி நீங்கள் விரும்பிய domain-ஐ offline-இல் bigrock மூலம் சுலபமாக வாங்கலாம் (பல registrar-கள் offline முறையை வைத்திருந்தாலும் நான் பரீட்ச்சயப்பட்டது bigrock-இல் தான்).
 
முதலில் www.bigrock.in சென்று உங்கள் domain பெயரை தேர்வு செய்து கொள்ளவும். பின்னர் கணக்கு இல்லயேல் புதிதாக ஒரு கணக்கு துவங்கிக்கொள்ளவும். அதன் பின்னர் உங்கள் bigrock வலைதளத்தில் Select Your Payment Method என்ற இடத்தில் தங்கள் நாட்டை தேர்வு செய்து pay offline என்பதை சொடுக்கவும்.

அல்கைதா லிபியாவில் தனது கொடியை ஏற்றியுள்ளதாக பரபரப்பு! அமெரிக்கா அதிர்சியில்!

அல் கைதா அமைப்பு லிபியாவில் செயற்படுவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. நேட்டோ அமைப்பு, லிபியாவில் நடவடிக்கைகளை நிறுத்தி, 24 மணித்தியாலங்கள் செல்வதற்கு முன்னர், அல் கைதா அமைப்பு தமது கொடியை, லிபியாவில் ஏற்றியுள்ளதாக, வெளிநாட்டுசெய்திகள் தெரிவிக்கின்றன. பெங்காசி நகரில் உள்ள நீதிமன்ற கட்டிடத்தில், அல் கைதா அமைப்பு இவ்வாறு அதன் கொடியை ஏற்றியுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது. 

லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபிக்கு எதிராக இக்கட்டிடத்திலிருந்தே, கிளர்ச்சியாளர்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக, தெரியவருகிறது. இச்சம்பவத்திற்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென, லிபிய ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

லிபியாவில் செயற்படும் கிளர்ச்சிக்குழுக்களும், அல் கைதா அமைப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக, அமெரிக்கா சந்தேகிக்கிறது. அமெரிக்கா, லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு வழங்கிய ஆயுதங்கள், இதனடிப்படையில் அல் கைதா அமைப்பிடம் சென்றிருக்கலாமென்ற அச்சம், அமெரிக்காவிற்கு இருப்பதாக, வெளிநாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

தம்முடைய ஆயுதங்களை கொண்டு, தாமே அடிவாங்கும் நிலை, அமெரிக்காவிற்கு உருவாகியுள்ளதாக, அவர்கள் தெரிவிக்கின்றனர். 

சுவிஸ்-பேர்ன் வீதி விபத்தில் தமிழ் மாணவன் உயிரிழப்பு!


புதன் கிழமை(02.11.2011) காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது தமிழ் மாணவனான அகரன் மஞ்சள்வரி வீதிக்கடவையில் வைத்து ஒரு பார ஊர்தி அவர் மீது ஏறியதால் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிகழ்வினால் பேர்ன் மாநிலத்திலுள்ள இட்டிகன் என்ற கிராமமே ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளது.

அகரன் கல்விகற்கும் பாடசாலை அதிபர் கூறுகையில் ‘விபத்து நடைபெற்ற இடத்திற்கு தான் உடனடியாகச் சென்றபோது கண்ட காட்சி மிகக் கொடூரமானது. அதைவிட கொடூரம் என்னவென்றால் தற்செயலாக அவ்விடத்தால் சென்றவர்கள், அவ்விடத்தில் நின்றவர்கள், பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த சிறுவர்கள் அந்த கொடூரத்தை நேரடியாக பார்க்க நேர்ந்தது தான்’ என்றார்.

அகரன் சில நாட்களுக்கு முன்னர் தான் தனது 8 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். அவரது தந்தையார் கூறும்போது ‘தனது மகனை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதை நிறுத்தும்படி பாடசாலை நிர்வாகம் ஆலோசனை வழங்கியிருந்தது என்றும் வீதியில் செல்லும்போது தனது மகனை வாகன சாரதிகள் இலகுவில் அடையாளம் காண்பதற்காக சிவப்பு நிறத்தில் பாதணிகளை அணிவித்திருந்ததாகவும் அப்படியிருந்தும் இந்த கோரச்சம்பவம் நிகழ்ந்துவிட்டது’ என்றும் மிகவும் மனவேதனையுடன் கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில் ‘போதுமான அளவு பாதுகாப்பு மாணவர்களுக்கு செய்யப்பட வேண்டும் அதோடு விபத்து நடந்த அந்தப் பகுதியில் போதுமான அளவு எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட்டிருந்திருந்தால் எனது மகன் இன்னமும் உயிருடன் இருந்திருப்பான்’ என்றார்.

அகரன் கல்விகற்கும் பாடசாலை அதிபர் கூறும்போது, ‘பாடசாலையைப் பொறுத்தவரையில் பெற்றோர் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வருவது பற்றி தமக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை, ஆனால் வாகனங்களில் கூட்டி வருவதை தாம் விரும்பவில்லை’ என்றார்.

நன்றி 20 நிமிடம்.http://www.20min.ch/news/bern/story/Zehnjaehriger-auf-Zebrastreifen-totgefahren-26885102

சிறிலங்காவுக்கு சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம் - அமெரிக்கா

சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து உயர்ந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் அம்மையார் நேற்றுமாலை வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை உயர்ந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான கீழ் நிலைச் செயலர் வென்டி சேர்மனை சந்தித்துப் பேசியுள்ளது.

இந்த மாதம் வெளிவரப் போகும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து உயர்ந்த எதிர்பார்ப்புகளுடன் உள்ளோம் என்பதே சேர்மனின் பிரதான கண்ணோட்டமாக இருந்தது.

இந்த அறிக்கை உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டியது மட்டுமன்றி, அதனை நடைமுறைப்படுத்தவும் சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது தான் முக்கியமான செய்தி. அதனை நாம் சொல்லி விட்டோம்.

அறிக்கை தொடர்பாக மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.“ என்று விக்ரோரியா நுலன்ட் அம்மையார் மேலும் கூறியுள்ளார்.

தேசிய நினைவெழுச்சி நாள் 2011 – பிரித்தானியா இடங்கள் அறிவிப்பு

கடந்த 20 வருடங்களாக பிரித்தானியக் கிளையின் ஏற்ப்பாட்டில் உணர்ச்சிபூர்வமாக கொண்டாடப்பட்டுவரும் தேசிய நினைவெழுச்சி நாள் இம்முறை அனைவரது வசதிகளிற்குமேற்ப ஆறு இடங்களில் நடாத்த ஏற்பாடாகியுள்ளது என்பதை அறியத்தருகிறோம்.

பிரித்தானியாவில் கடந்த 20 ஆண்டுகளாக மாவீரர் தினத்தை நடத்திவரும் செயல்பாட்டுக் குழுவினரே இம்முறை இந்த 6 இடங்களில் இந் நிகழ்வுகளை நடத்துகின்றனர் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

South East London
58 Launcelot Road,
Bromley
Kent
BR1 5EB

North West London
Shree Kadwa Patidar Centre
Kenmore Avenue
Harrow, Middlesex
HA3 8LU

South West London
Memon Centre
3 Weir Road
Balham
London SW12 0LT

North East London
Eastbury Comprehensive School
Wilmington Gardens
Barking
Essex IG11 9TW

Coventry
243 Cross Road, Coventry,
West Midlands CV6 5GP
Glasgow, Scotland
36 Glenfarg St
Glasgow
G20 7QF

காலை 10.30 மணிக்கு மண்டபம் திறக்கப்பட்டு காலை 11.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்
மேலதிக தொடர்புகட்கு:

www.tnrf.org.uk

NW : 075 5033 6408 / SW : 075 5033 4414 / NE : 075 3518 6315 / SE : 075 5033 6412 / Out Of London : 075 5033 6658


சம்பந்தன் - பொன்சேகா இரகசிய உடன்பாடு: விக்கிலீக்ஸ்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் இரகசிய உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டது. என விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் முக்கிய சரத்துக்கள் வெளிவராதபோதும் உடன்படிக்கையின் பிரதிநிதிகள், தூதரகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் அமெரிக்க தூதரகத்துக்கும் ஒரு பிரதி வழங்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையில் வடக்கு கிழக்கு இரண்டு பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மத்திய மற்றும் பிராந்திய அரசுகளுக்கு இடையில் தேசிய பாதுகாப்பு, நிதி, குடிவரவு போன்ற விடயங்கள் தவிர ஏனைய விடயங்களில் அதிகார பரவலாக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.

அத்துடன் வடக்குகிழக்கில் இராணுவமயத்தை இல்லாதொழித்தல், மீள்குடியேற்றம், முன்னாள் போராளிகளுக்கு உரிய புனர்வாழ்வளிப்பு, அவசரகால சட்டத்தை நீக்குதல், உட்பட்ட பல்வேறு உடன்பாடுகளும் இதில் அடங்கியிருந்தன.

மஹிந்த ராஜபக்ச தமிழர் விடயத்தில் உரிய முனைப்புகளை மேற்கொள்ளவில்லை என்பதன் காரணமாகவே தாம் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்ததாக ஆர். சம்பந்தன், அமரிக்கா தூதர் பற்றிசீயா புட்டினிஸிடம் தெரிவித்துள்ளார்.

இதனை புட்டினிஸ் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்திருந்தார்.

சர்வதேசம் மீண்டும் ஈழத் தமிழர்களை சிதைப்பதற்கு தயாராகின்றதா?

2009ம் ஆண்டில் சர்வதேசம் செய்த சதியால் ஈழத் தமிழினத்தின் வீரம் பலாத்காரமாக பறிக்கப்பட்டது. லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலலப்பட்டு, அவர்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகள் போராளிகள் விசமத்தனமான முறையில் அழிக்கப்பட்டார்கள்.

அந்த வீரர்கள் தந்திரமான முறையில் தோற்கடிக்கப்பட்டார்கள். அவர்கள் தோற்கடிக்கப்பட்ட போது உலகம் ஒரே பக்கத்தில் நின்றது.

ஒரு இனம் அல்லது நாடு அடக்கு முறையிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆயுதப் போராட்டம் அவசியமானது என்று பிரச்சாரம் செய்து வந்த நாடுகள் கூட நமது வீரத்தை பறிப்பதற்கு ஒன்றாகப் பறந்து வந்து இலங்கை அரசாங்கத்திற்கு உதவிக் கரம் நீட்டி நின்றன. இது இன்னும் தொடருகின்ற ஒரு கொடுமையாகி விட்டது.

நமது மக்கள் சிதைக்கப்பட்டு எத்தனையோ மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் உலகம் நாங்கள் மீண்டும் எழுந்து நிற்கக் கூடாது என்ற நோக்கத்தோடு செயற்பட ஆரம்பித்து விட்டது.

ஆமாம்! நமது மக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டது என்ற காரணத்தால் ஒரு போர்க்குற்ற விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற வலுவான பிரச்சாரம் நமது மக்களின் அமைப்புக்களால் துரிதப்படுத்தப்பட்டு வரும் இந்த வேளையில், தமிழ் மக்கள் மீதான போர்க்குற்றங்களை புரிந்தார் என்று நமது மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மகிந்த'வைக் காப்பாற்ற இந்த சர்வதேசம் மீண்டும் ஒன்றாக சேர்ந்து நிற்கின்றது.

நமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுக்குச் சென்று நமது மக்களின் குறைகளைக் கூட தெரிவிக்க முடியாமல் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் புறக்கணிக்கப்படுவதை நாம் கடந்த வாரங்களில் காணக் கூடியதாக இருந்தது.

இலங்கை அரசாங்கத்தின் பொய்யான பிரச்சாரத்திற்கு செவிகளை திருப்பி நின்று அந்த கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகயிருக்கும் மகிந்த'வையும் இலங்கையையும் தாம் காப்பாற்ற பின்நிற்க மாட்டோம் என்று சத்தமிடும் நாடுகளையும் நாம் பார்க்கின்றோம்.

உதாரணமாக சீனா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகள் அண்மைக் காலங்களில் இலங்கையை உற்சாகப்படுத்தும் பல காரியங்களில் ஈடுபட்ட வண்ணமுள்ளன.

இதற்கு காரணம் இலங்கையுடன் உள்ள பிராந்திய உறவா அல்லது வர்த்தகம் சார்ந்த உறவா என்று எம்மால் வகையிட முடியாது உள்ளது.

அமெரிக்கா நமது பக்கம் என்று நாம் உடனடியாக ஒரு தீர்மானத்திற்கு வர முடியாது.

அமெரிக்காவோ அன்றி வேறு நாடுகளோ பாதி;க்கப்பட்ட நமது மக்கள் பக்கம் நிற்காவிட்டாலும் பரவாயில்லை, நீதியின் பக்கம் நிற்கவேண்டும் என்றே உலகெங்கினும் வாழும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

இதற்கு மேலாக நாம் முன்னர் குறிப்பிட்ட ரஷ்யா, சீனா, வியட்னாம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள மகிந்த'வையும் இலங்கையையும் காப்பாற்ற முனைவதும் மீண்டும் ஈழத்தமிழர்களை சிதைக்க எண்ணும் அவர்களது சிந்தனை என்றே உதயன் வலியுறுத்துகின்றான்.

கனடா உதயன் கதிரோட்டம்

ஆடுகளின் எடையை அதிகரிக்க வலுக்கட்டாயமாக வாயில் தண்ணீரை ஊற்றுகிறார்கள் (படம்)

பக்ரீத் பண்டிகையின் குர்பானிக்காக நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் சந்தையில் நேற்று (3.11.2011) ஒரு நாள் மட்டும் ஒரு கோடி ஆடுகள் விற்பனை ஆகின.

ஆடுகளின் எடையை அதிகரிக்க வலுக்கட்டாயமாக வாயில் தண்ணீரை ஊற்றி வயிற்றில் நிரப்புகிறார்கள். இப்படி நூதன மோசடி செய்து விற்று தங்களது வயிற்றையும் நிரப்பிக்கொள்கிறார்கள்.

இந்த நூதன மோசடி மூலம் ஒரு ஆட்டுக்கு 500 ரூபாய் மூலம் ஆயிரம் ரூபாய் வரை அதிகம் சம்பாதிக்கிறார்கள்.

தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாமல் இந்த ஆடுகள் எத்தனை நாட்கள் அவதிப்பட்டிருக்குமோ?

Thursday 3 November 2011

நோர்வேயில் நடைபெற்ற பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 6 மாவீரர்களின் வீரவணக்கநிகழ்வு.


02.11.2011 புதன்கிழமை அன்று நோர்வேயில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வம் உட்பட ஆறு மாவீரர்களுக்கும் வீரவணக்கநிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அகவை பேதமின்றி தமிழ்மக்கள் கலந்து கொண்டு காலத்தால் அழியாத மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர்.
அத்தோடு இந்நிகழ்வில் பாடல்கள் பாடி கவிதை மொழிந்து புன்னகை அழகனுக்கு தமிழ் பாவால் பாமாலை சூட்டினர்.இனத்தின் விடியலுக்காக அயராது உழைத்து உலகமெங்கும் உரிமைகீதம் பாடித்திரிந்த சமாதானப்புறாவின் வீரம் செறிந்த வாழ்வின் வரலாறும் வெண்திரையில் விரிந்தது.

இறுதியாக மாண்ட வீரரின் கனவு பலிக்க ஒன்றிணைந்து பணியாற்றி கொண்ட கொள்கை குன்றிடாத தலைவன் காட்டிய வழியில் தமிழரின் தாகத்தை தீர்க்க பாடுபடுவோம் என்ற நம்பிக்கை வரிகளோடு நிகழ்வு நிறைவுக்குவந்தது.




இராணுவம் நடத்தும் மதுக் கடையில் மது அருந்தும் யாழ் மாணவர்கள்.சிறிதரன் எம்.பி


தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்கா அழைத்தமையானது அரசிற்கு ஒரு அரசியல் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழர்களின் பிரச்சனைக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுப்பதை அரசு விரும்பவில்லை. எப்படியாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடை செய்வதற்கு அரசு முயல்வதாக நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிமை மாலை 5 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசு தமிழ் மக்கள் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கு முயலவில்லை என்றும் இலங்கையில் அமைதி, நிம்மதி வரவேண்டுமானால் தமிழ் மக்களுக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டதுடன்,

வடக்கில் தமிழர் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினர் தமிழர்களின் காணிகளில் சிங்கள ஆக்கிரமிப்புக்களைச் செய்து வருகின்றனர்.

குறிப்பாக மண்டைதீவுப் பகுதியில் தோட்டக் காணிகளில் 60 ஏக்கர் பரப்பில் அகரித்து கடற்படைத்தளமாக வைத்திருக்கினறர்கள். க்காணிகளுக்குள் தான் நல்ல தண்ணீரும் இருக்கிறது. ஆனால் அங்குள்ள மக்கள் குடிநீர் இன்றி அலைகின்றனர்.


தழிழ் மக்களின் நிலங்களை அபகரித்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர். முறிகண்டிக் கோயிலுக்கு அருகில் உள்ள அறிவியல் நகர் பகுதியில் சிங்கள மக்கள் காணிகளை விலைக்கு வாங்கி அங்கு குடியேறி வருகின்றனர். காணிகளை வாங்குவது ஒருபுறமிருக்க திட்டமிட்டு தமிழர் பகுதிகளில் குறியேற்றப்படுகின்றனர்.

தழிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படாது விட்டால் அமைதியும் நிம்மதியான சகவாழ்வும் சகோரத்துவதுவம் இலங்கையில் எக்காலத்திலும் நிலைக்காது என்பதை சிங்கள தேசம் உணரவேண்டும். தமிழ் மக்களை மனோரீதியாகத் தாக்கி அவர்களின் இன உணர்வுகளை மழுங்கடிப்பதற்கு அரசு முயன்றுவருகிறது

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சாராய பார்களினால் இளைஞர்கள், 16 வயது பாடசாலை மாணவர்கள் சாராயத்தை வாங்கிக் கொண்டு தோட்டங்களில் வைத்து குடித்து விட்டு செல்கிறார்கள். இந்த நிலமைக்கு யார் காரணம்?

தமிழ் மக்களின் கலாச்சார மையமான யாழ்ப்பாணத்தின் நிலமைகள் அடியோடு மாறியுள்ளது. நாங்கள் அரசியல் பேசிக்கொண்டு இருப்பதினால் எந்தப்பிரயோசனமும் இல்லை.

எமது கலாச்சரத்தை பாதுகாப்பதற்காக புத்திஜிவிகள் ஊடகவியலாளர்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டு எமது காலாசரத்தை பாதுகாக்க வேண்டும்.

திறக்கப்படும் மதுபான சாலைகளை நிறுத்த வேண்டும். அரசு ஏன் திட்டமிட்டு தமிழர் பகுதிகளில் சாராய பார்களை அமைப்பதற்கு அனுமதி வழங்குகிறது என்பது பற்றி யோசிக்க வேண்டும். மதுபானசலைகயோடு சேர்ந்து தான் யாழ்ப்பாணத்தில் விபச்சராம் நடக்கிறது.

யாழ்பாணத்தில் சிங்கள அரச உத்தியோகத்தர்களை நியமிகிறத்திற்கு அரசாங்கம் பரிசிலிக்கிறது. தங்களுடைய சிங்களக் குடியேற்றங்கள், காணிபறிப்புக்கள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு இது வசதியாக இருக்கும் என்பதினால் இவர்களை நியமிக்கின்றார்கள்.

நாங்கள் உணர்வு ரீதியான மக்களாக இருக்கக் கூடாது என்பதற்காக அரசு திட்டமிட்டு சிங்களக் குடியேற்ங்களை செய்து வருகின்றது.

வீடுகட்டுவதில் இருந்து தோட்டம் செய்வதிலிருந்து சலூண் நடத்துவது வரை இராணுவம் தான் செய்து வருகிறது. தமிழ்மக்கள் உழைத்து வாழமுடியாத நிலையில்தான் வாழ்கின்றார்கள்.

ஏன் இந்த நிலை என்றால் தமிழ் மக்களைக் கையேந்தும் நிலையில் வைத்திருக்கிறது. கையேந்தும் நிலையில் வைத்திருந்தால் அவர்கள் உணர்வு ரீதியாக, இனரீதியாக விடுதலை பற்றிச் சிந்திக்கமாட்டார்கள் இதைத்தான் அரசாங்கம் செய்து வருகிறது.

எங்கள் மக்கள் தங்களின் காணிகளில் தோட்டம் செய்யமுடியாத நிலையில் இருக்கும் வேளையில் அதே காணியில் இராணுவம் விவசாயம் செய்து எமது மக்களுக்கே விற்பனை செய்கிறது.

யாரும் விடுதலை உணர்வுடன் பேசினால் அவரின் வீட்டில் மாட்டுத்தலை அல்லது நாய்த்தலை தான் வீடுகளில் கிடைக்கும். இந்த நிலைதான் யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவுகிறது.

போர் குற்றத்தை விசாரணை செய்வதன் மூலம் போர்குற்றத்தை செய்தவர்களைத் தூக்கில் போடுவதால் தமிழ் மக்களுடைய பிரச்சனை தீர்ந்து விடும் என நாங்கள் நினைக்கவில்லை.

உண்மையில் இந்தப் போர்க்குற்றம் தமிழ் மக்கள் இனரீதியாக அழிக்கப்பட்டார்கள் என்பதை நிருபிக்கும். போர்க்குற்றம் விசாரிக்கப்பட்டால் சிங்கள அரசுகளினால் சிங்கள பெரும்பான்மை இனத்தால் தமிழ் இனம் அழிக்கப்பட்டது.

என்ற செய்தி உலகத்திற்கு வரும் ஆகவே தமிழர்களும் சிங்களவர்களும் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழமுடியாது என்ற உண்மை தெளிவாகப் புலப்படுத்தப்படும் என்றார்.

இரண்டு காமக்கொடூரன்களுக்கு இரையாகிய மூன்று சிறுமிகள்


திருகோணமலை சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இருவரைக் கைது செய்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஒரு பிள்ளையின் தந்தையான அகிலரூபன்(வயது-23)பட்டித்திடல்,தோப்பூர் பகுதியைச்சேர்ந்தவரும்; சுப்பரமணியம் சிறிகாந்தன்(வயது-20)கல்லடி,மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்தவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

கடந்த 26ம் திகதி கோயிலுக்கு செல்வதற்காக ஆறு பேர்கள் சென்றதில் மூவர் வீடு திரும்பவில்லை.அதனையடுத்து பெற்றோர்கள் தேடுதல்களை நடாத்திய வேளை சிறுமிகள் மீட்கப்படவில்லை.அதனையடுத்து 28ம் திகதி சேறுநுவர பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைபாட்டினையடுத்து பொலிஸார் தேடுதல்கள் நடாத்திய போது கிளிவெட்டி,பட்டித்திடல் பகுதியிலுள்ள மூதாட்டியின் வீட்டொன்றில் இருந்து தர்சினி (வயது-14), வினித்தா (வயது-15), யதுசாந்தினி (வயது-15) ஆகியோரே மீட்கப்பட்டவர்கள் ஆவர்.

விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாரிடம் தங்களை விருப்பமின்றி அழைத்துச்சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக மேற்படி சிறுமிகள் தெரிவித்தனர்.

பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதை உறுதிப்படுத்துவதற்காக திருமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்தியரின் அறிக்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகளின் முறைப்பாட்டினையடுத்து இருவரைக்கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஐர்படுத்திய வேளை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்னலுக்கு அதிகளவானோர் உயிரிழந்த ஆண்டாகிறது 2011.


மின்னல் தாக்குதல்களினால் கடந்த 10 மாதங்களில் 46 பேர் பலியாகியுள்ள நிலையில் இலங்கை வரலாற்றில் மின்னல் தாக்குதல்களினால் பலியானவர்களின் எண்ணிக்கை இவ்வருடமே அதிகளவில் இடம்பெறும் நிலை காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மின்னல் தாக்குதல்களினால் 1997 ஆம் ஆண்டே அதிகளவாக 47 பேர் பலியாகியிருந்தனர்.ஆனால், இவ்வருடத்தில் கடந்த 10 மாதங்களில் மின்னல் தாக்குதல்களினால் 46 பேர் பலியானமை தொடர்பிலேயே வானிலை அவதான நிலையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை பிங்கிரியாவில் 8 வயதுடைய சிறுமியொருவர் மின்னல் தாக்குதலில் பலியானதையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை இவ்வருடத்தில் 46 ஆகவுள்ளது. இச்சிறுமி மீது அண்டனா வயர் ஊடாகவே மின்னல் தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.
நாட்டில் மார்ச், ஏப்ரல் மற்றும் அக்டோபர் ,நவம்பர் காலப்பகுதிகளில் இடை நிலை பருவப்பெயர்ச்சி காலநிலை காணப்படுவது வழமையாகும். இதன்போது மெதுவான காற்றின் காரணமாக மின்னலின் தாக்கம் அதிகரிப்பதாகவும் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை தொடர்ந்து பிற்பகல் மற்றும் இரவு வேளையில் பெய்யும் நிலையுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் அதிகாரியான கே.சூரியகுமார் தெரிவித்தார்.
அத்துடன் சில நேரங்களில் சில இடங்களில் பாரிய மழைபெய்யுமெனவும் தெரிவித்த அவர் கிழக்கு, வடக்கு பிராந்தியத்தின் சில பகுதிகள் மற்றும் தெற்கு,மேற்கு கரையோர பிரதேசங்களில் காலையில் மழை பெய்யும் சூழ்நிலையுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா