Saturday 8 October 2011

யாழ்ப்பாண இளம் குமரிகளின் இராணுவக் குத்தாட்டம்! (காணொளி இணைப்பு)

இறுதி யுத்தம் என்ற பெயரில் முள்ளி வாய்க்கால் பகுதியில் எம்மினப் பெண்கள் பாலியல் வக்கிரம் கொண்ட சிங்கள இராணுவக் காடையர்களால் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டது நீங்கள் அறிந்த ஒன்று.

இவ்வாறான இராணுவக் காடேறிகள் முன்னிலையில் குத்தாட்டம் போடுகின்றனர் யாழ்ப்பாண இளம் குமரிகள்.

இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மகிழ்வரங்கு ஒன்று நடைபெற்றது.

முழுக்க முழுக்க இராணுவ மயமாக்கப்பட்ட இம் மகிழ்வரங்கில் தமது பாடல்களுக்கு தமிழ் இளம் குமரிகளை ஆடவிட்டு அழகு பார்த்தது சிங்களம்.



இவ்வாறு ஆடும் தமிழ்ப் பெண்களை இரகசியமான முறையில் தமது வீடியோக் கமராவினால் வித்தியாசமான பதிவுகளைச் செய்தமையையும் காணக் கூடியதாக இருந்தது.

இதேவளை தமது இளம் பெண் பிள்ளைகளை இராணுவக் களியாட்டத்தில் கலந்து கொள்ள விட்டுவிட்டு அருகில் நின்று கைதட்டி உற்சாகப்படுத்தும் பெற்றோர்களை நினைக்கும் போது நெஞ்சு வெடிக்கின்றது.



காலப் போக்கில் கைதட்டிய இரு கைகளாலும் தமது கண்ணீரைத் துடைக்கும் காலம் வெகுவிரைவில் வரும் என்பதை அறியாதிருக்கும் பெற்றோர்களே யாழ்ப்பாணத்தில் அரங்கேறும் அனைத்து கலாசாரச் சீரழிவுகளுக்கும் காரணமானவர்கள் ஆவர்.

இவ்வாறு களியாட்டத்தில் கலந்து கொள்ள விட்டு விட்டு, பின்னர் எனது பிள்ளையை ஏமாற்றி விட்டு கருவையும் சுமக்க விட்டுவிட்டான் என கதறி அழுவதும் நீங்கள்தான்.



எனவே பிள்ளைகளைப் பொறுப்புடன் அவர்களின் இனத்தின், மதத்தின் கலாசாரத்திற்கேற்ப வளர்த்து ஆளாக்குவதை விடுத்து அந்நியனுடன் ஆட விட்டுக் கூத்துப் பார்க்கும் நீங்கள்தான் அவர்கள் தப்பான வழிக்குப் போவதற்குக் காரணம் ஆகின்றீர்கள்.

தமிழினத்தின் தனிநாட்டுக்காக எத்தனையோ இளம் பிள்ளைகள் தங்களின் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய இனத்தில் பிறந்தவர்களா இவர்கள் எனச் சந்தேகப்பட வைக்கின்றது.

தமிழ்த் தேசியத்தின் உணர்வலைகளை அறுக்கும் ஒரு கபட நோக்கத்துடன் சிங்களம் மேற்கொள்ளும் இவ்வாறான நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் புறக்கணிப்பது காலத்தின் தேவையாகும்.



இதேவேளை புலம்பெயர் தேசத்தில் இருந்து தமிழீழம் காணத் துடித்துக் கொண்டிருக்கும் உறவுகளே! யாழ்ப்பாணத்தில் நடக்கும் குத்தாட்டங்களைப் பாருங்கள்.

அங்கிருந்து கொண்டு பல பிரிவுகளாகப் பிரிந்து பலதரப்பட்ட வட்டமேசை மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், கனவு காணும் தமிழீழத்தில் தற்போது என்ன நடக்கிறது என்பதை சற்றுத் திரும்பிப் பாருங்கள்.

தமிழிழனத்தை அழிக்க சிங்கள இராணுவம் இலகுவான வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றது. அதனை தடுக்க முயற்சி செய்யுங்கள்.



அதைவிடுத்து நீங்கள் புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு பதவிக்காகவும், கௌரவத்திற்காக ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, தமிழினத்தை அழிக்க சிங்களம் போடும் திட்டத்திற்கு நீங்கள் சல்லாரி போடுவது போன்று இருக்கின்றது.

அமெரிக்காவை ஏமாற்ற முயன்ற சிறிலங்கா - விக்கிலீக்ஸ்


விடுதலைப் புலிகள் பேரழிவு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான ‘றெட் மேர்க்குரி‘ இரசாயனத்தை அமெரிக்காவில் கொள்வனவு செய்ய முயற்சித்ததாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கொடுத்த அறிக்கையை நம்பகமற்றது என்று அமெரிக்கா நிராகரித்தாக விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன.

2006 ஜுலை 27ம் நாள் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பாலிக்ககார, விடுதலைப் புலிகளிடம் இராசாயன அயுதங்கள் இருப்பது பற்றிய, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆவணம் ஒன்றை கொழும்பில் இருந்த அமெரிக்க பதில் தூதுவரிடம் கையளித்தார்.

இந்த அறிக்கை சிறிலங்கா அரசுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் அடிப்படையில் சிறிலங்காவுக்குத் தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதில் தூதுவராக இருந்த ஜேம்ஸ் என்ட்விசில், அந்த ஆவணத்தை வொசிங்டனுக்கு அனுப்பி அதன் பதிலைப் பெற்றுத் தருவதாக கூறியிருந்தார்.

பேரழிவு ஆயுதங்களை தயாரிக்கப் பயன்படும் ‘றெட்மேக்குரி‘ என்ற இரசாயனப்பொருளைக் கொள்வனவு செய்வதற்கு விடுதலைப் புலிகள் முயற்சித்துள்ளதாக நம்பகமாக தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அணுகுண்டுகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தக் கூடிய ஒரு அரைப் புராணப் பொருளே றெட்மேர்க்குரி என்றும் விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தை சிறலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை ஆதாரம் காட்டியிருந்தது.

இது மரபுரீதியாகப் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த வெடிபொருளே என்றும், இதனை சிறிய அல்லது எளிதில் காவிச் செல்லக் கூடிய குண்டுகளுடன் இணைத்து பேரழிவு ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

2002ம் ஆண்டின் முதலாவது காலாண்டில் கொழும்பில் விஜேராம மாவத்தையில் சதொசவுக்கு அருகில் உள்ள ஆய்வு மற்றும் கருவிகள் முகவர் நிறுவனம் ஒன்றிடம் விடுதலைப் புலிகள் இந்த இரசாயனம் குறித்து விசாரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேகாலப் பகுதியில் தமது அனைத்துலக ஆயுத முகவர்களின் மூலம் விடுதலைப் புலிகள் இந்த இரசாயனப் பொருளைக் கொள்வனவு செய்ய முயற்சித்ததாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆவணத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த இரசாயனப் பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனம் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியது.

ஹேர்குலிஸ் கெமிக்கல் கொம்பனி லிமிட்டெட் என்ற அந்த நிறுவனத்தின் முகவரியும் அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கடந்த சில ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் தமது சில போராளிகளை அனைத்துலக அளவில் நடைபெறும் அணுவாயுதப் போர்முறை பற்றிய கருதரங்குகளுக்கு அனுப்பி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

லண்டனில் ஹற்றன் என்ற இடத்தில் 2001 செப்ரெம்பர் 30 தொடக்கம் நவம்பர் 1 வரை நடைபெற்ற எஸ்.எம்.ஐ பாதுகாப்பு கருத்தரங்கிலும் புலிகளின் போராளிகள் பங்குபற்றியதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்தக் கருத்தரங்கில் அணுவாயுதப் போர்முறை பற்றியும் ஆராயப்பட்டதாகவும், போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகள் அணுவாயுதப் போர்முறையுடன் தொடர்புடைய நூல்களை குறிப்பிட்டதக்களவில் கொள்வனவு செய்துள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

கவனத்துக்குரிய உணர்வுபூர்வமான இந்தத் தகவல்களின் அடிப்படையில், விடுதலைப் புலிகளுக்கு இரசாயன ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுப்பதற்கு பொருத்தமான அனைத்துலக சமூகத்தை நாட வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு பரிந்துரை செய்வதாகவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த ஆவணத்தை 2006 ஜுலை 31ம் நாள் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வொசிங்டனுக்கு அனுப்பியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறியுள்ளது.

இதையடுத்து 2006 ஓகஸ்ட் 15ம் நாள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து, அப்போதைய இராஜாங்கச் செயலர் கொன்டலிசா ரைஸ் கொழும்புக்கு அனுப்பிய பதிலையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

‘றெட்மேர்க்குரி‘யை பேரழிவு ஆயுதங்களாக வழக்கமான வெடிபொருள் அல்லது வேறு ஆயுதங்களில் இணைத்துப் பயன்படுத்த முடியாது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

றெட்மேர்க்குரியை பேரழிவு ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று வொசிங்டனிடம் நம்பகமான தகவல் இல்லை என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முகவரியில் எந்தவொரு இரசாயன நிறுவனமும் இருப்பதை அடையாளம் காண முடியவில்லை என்றும் இதன் அடிப்படையில் அந்த அறிக்கை நம்பகமானது அல்ல என்றும் கொன்டலிசா ரைஸ் கூறியுள்ளார்.

இந்தக் காரணிகளின் அடிப்படையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை நம்பகமானது அல்ல என்றும் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லை என்றும் சிறிலங்கா அரசுக்கு கூறுமாறும் அந்த தகவல் பரிமாற்றக் குறிப்பில் கொன்டலிசா ரைஸ் குறிப்பிட்டுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.

Friday 7 October 2011

சந்தானத்தைப் 'பிடித்த' சுந்தர் சி!!


காற்று எந்தப் பக்கம் அடிக்கிறதோ, அந்தப் பக்கம் சாயும் நாணலைப் போன்றவர்கள்தான் சினிமாக்காரர்கள். காரணம் இது முழுக்க முழுக்க வர்த்தகம். கலை என்பது காசுக்கு அப்புறம்தான்!

இயக்குநர் சுந்தர் சியும் ஒரு பக்கா சினிமாக்காரர்தான். இவர் ஆரம்பத்தில் கவுண்டமணியை மட்டுமே நம்பி காமெடிப் படம் எடுத்தார். கவுண்டர் அலை ஓய ஆரம்பித்ததும், அன்றைக்கு பரபரப்பாக இருந்த வடிவேலுவை தனது ஆஸ்தான காமெடியன் ரேஞ்சுக்கு கொண்டு வந்தார்.

வின்னர், கிரி, இரண்டு, தலைநகரம், நகரம் என வரிசையாக இவர்களின் படங்களில் காமெடி களை கட்டியது. இந்த நிலையில் அரசியலில் குதித்து 'அடிபட்டார்' வடிவேலு.

சினிமாவில் மீண்டும் நடிக்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில்தான் சுந்தர் படத்தில் வடிவேலு மீண்டும் நடிக்கிறார் என செய்திகள் வந்தன. சுந்தர் மற்றும் அவர் மனைவி குஷ்பு இருவருமே திமுகவினர். வடிவேலுவும் திமுகவுக்காக களமிறங்கித்தான் இந்த நிலையில் உள்ளார். எனவே வடிவேலுவுக்கு சுந்தர் கைகொடுக்கிறார் போலிருக்கிறது என 'நம்பி' அனைவரும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் தர, சுந்தரோ இதை உடனே மறுத்தார்.

இப்போது தான் இயக்கும் அடுத்த படத்துக்கு காமெடியனாக சந்தானத்தை ஒப்பந்தம் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்!!

அசினிடம் சவால்விட்டு தோற்றுப்போன சல்மான் கான்!


நடிகர் சல்மான் கான் அசினிடம் சவால்விட்டு அதில் தோற்றுப்போனார்.

நடிகர் சல்மான் கானும். அசினும் சேர்ந்து ரெடி என்ற சூப்பர்ஹிட் படத்தில் நடித்தனர். அந்த படப்பிடிப்பின்போது சல்மான் அசினிடம் சவால்விட்டார். அந்த சவாலில் இப்போது சல்மான் தோற்றுவிட்டாராம்.

அந்த சுவாரஸ்யமான சவால் பற்றி அசின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

அது குறித்து அசின் கூறுகையில், "சல்மான் ரெடி படப்பிடிப்பின் போது தான் பாங்காக் வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்த பூச்சியை வைத்திருந்தார். திடீர் என்று இந்த பூச்சியை நீங்கள் சாப்பிடுங்கள் பார்ப்போம் என்று சவால்விட்டார்.

பொதுவாக பெண்கள் பூச்சிகளைப் பார்த்தாலே ஓடுவார்கள். அதனால் தான் அவர் தைரியமாக சவால்விட்டார். ஆனால் நானோ சிறிதும் பயப்படாமல் அந்தப் பூச்சியை சாப்பிட்டேன். அதைப் பார்த்து அவர் அசந்துவிட்டார். நீங்கள் பூச்சியைப் பார்த்து கத்தி, கூச்சல் போடுவீர்கள் என்று நினைத்தேன் என்றார்.

நான் சல்மான் கானை மதிக்கிறேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் ஒன்றும் அவரைக் காதலிக்கவில்லை. அவரைக் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு வந்ததில்லை. அவர் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளேன்," என்றார்.

பத்து வருஷம் பீல்டுல இருக்கேன்னா சும்மாவா! - தம் கட்டும் த்ரிஷா


சூர்யா - கார்த்தியை இயக்குகிறார் வெங்கட் பிரபு?


அஜீத்துக்கு மங்காத்தா வெற்றியைக் கொடுத்தாலும், மது விருந்தில் நடந்த சோனா விவகாரத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டார் இயக்குநர் வெங்கட் பிரபு.

இப்போது, அதைச் சரிகட்டும் விதத்தில் மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்கும் வேலையில் மும்முரமாக உள்ளார்.

ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்தான் தயாரிப்பாளர். ஹீரோ?

சூர்யா அல்லது அவர் தம்பி கார்த்தி இருவரில் ஒருவராக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இந்த இருவரில் ஒருவரை இயக்குவது பெரிய விஷயமில்லை. இருவரையுமே ஒரு கதையில் இணைப்பதுதான் சவால். வர்த்தகமும் பெரிதாக இருக்கும் என்கிறாராம் வெங்கட் பிரபு.

ஏற்கெனவே அஜீத், அர்ஜூன் என இரு பெரிய ஹீரோக்களை திறமையாக இணைத்து வெற்றி கண்டவர் என்பதால், வெங்கட் பிரபுவின் இந்த ஐடியாவும் பரிசீலனையில் உள்ளதாம்!

விரைவில் படம் குறித்த தெளிவான விவரங்கள் வெளியாகும் என்கிறார்கள். அதுவரை, வதந்திக்கு பஞ்சமிருக்காதல்லவா!!

இந்தியப் படங்களை தடை செய்தால்தான் பாக். சினிமா பிழைக்கும்- பாக். நாளிதழ்


இந்தியாவிலிருந்து எந்தப் படத்தையும் பாகிஸ்தானில் திரையிட அனுமதிக்கக் கூடாது. அப்படி செய்தால்தான் பாகிஸ்தான் திரையுலகம் பிழைக்க முடியும், புத்துயிர் பெறமுடியும் என்று அந்த நாட்டு செய்தித் தாள் ஒன்று கூறியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் நாளிதழ் தி நேஷன் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவிலிருந்து எந்தப் படத்தையும் பாகிஸ்தானில் திரையிட அனுமதிக்கக் கூடாது, அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக லாகூரில் நடந்த கலைஞர்கள், பாடகர்கள், இயக்குநர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அரசு பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். இது நடந்தால்தான் பாகிஸ்தான் திரையுலகைக் காப்பாற்ற முடியும்.

பாகிஸ்தானில் உள்ள பல தியேட்டர்களில் இந்திப் படங்களை மட்டுமே திரையிடுகின்றனர். பாகிஸ்தான் படங்களை அவர்கள் திரையிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பாகிஸ்தான் திரையுலகம் நலிவடைந்து போய்க் கிடக்கிறது.

பாகிஸ்தானின் ஒவ்வொரு மூ்லை முடுக்கிலும் இந்தித் திரைப்படங்களின் ஊடுறுவல் அதிகமாக உள்ளது. இப்படியே போனால் பாகிஸ்தான் திரையுலகமே அழிந்து போய் விடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இந்தித் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது பாகிஸ்தான் மக்கள் இந்தித் திரைப்படங்களைத்தான் விரும்பிப் பார்க்கின்றனர். குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஒரு இந்திப் பட வெறியர். அதிலும் லதா மங்கேஷ்கர் குரலுக்கு இவர் கிட்டத்தட்ட அடிமை ஆவார். அவரே இதை ஒருமுறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேஸில் நம்பர் ஒன்னான 'ரா ஒன்'.... தயங்கும் தமிழ்ப் படங்கள்!


முன்பெல்லாம் தமிழகம் முழுக்க 20 திரையரங்கில் ஒரு இந்திப் படம் வெளியானாலே பெரிய சாதனை. சென்னையில் மூன்று அரங்குகளில் வெளியாகும். இப்போது நிலைமை வேறு.

தமிழ்ப் படங்களுக்கு இணையாக இந்திப் படங்களும் அதிக திரையரங்குகளில் வெளியாகின்றன. அதுவும் ரஜினி நடித்துள்ளார் என்றால் கேட்க வேண்டுமா... கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட அரங்குகளில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெளியாகிறது ரா ஒன். இந்தியில் மட்டுமல்லாது, தமிழிலும் 'டப்பாகி' இந்தப் படம் வெளியாவதால் தியேட்டர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

தீபாவளிப் படங்களில் இப்போதைக்கு ஏழாம் அறிவு மட்டுமே வெளியாவது உறுதியாகியுள்ளது. இப்போதைக்கு ரா ஒன்னுக்கு தீபாவளிப் போட்டி ஏ ஆர் முருகதாஸின் இந்த நேரடி தமிழ்ப் படம்தான்!

ஒஸ்தி வரலாமா வேண்டாமா என தயங்கி நிற்கிறது. ரா ஒன்னுக்கு நல்ல திரையரங்குகள் பெருமளவு ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்தப் படம் வெளிவராது என்றே தெரிகிறது.

தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாக கட்டாயம் ரிலீசாகிவிடும் என்று சொல்லப்பட்ட விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு இன்னமும் நல்ல அரங்குகள் கிடைக்கவில்லை என்கிறார்கள். இதனால் அந்தப் படம் குறித்த தேதியில் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், சொன்னபடி வெளியாகும் வேலாயுதம் என தயாரிப்பாளர் தரப்பில் உறுதியாக உள்ளனர்.

மயக்கம் என்ன படம் ஏற்கெனவே ரேஸிலிருந்து விலகிக் கொண்டது நினைவிருக்கலாம்.

மனைவியை அடித்த வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்


மனைவியை அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறி கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.

மனைவி விஜயலட்சுமியை விட்டுப் பிரிந்து வசித்து வருகிறார் தர்ஷன். அவருக்கும் நடிகை நிகிதாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், இதனால்தான் தர்ஷனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன்னை அடி்த்து கொலை செய்து விடுவதாக தர்ஷன் மீது போலீஸில் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. இதையடுத்து போலீஸார் தர்ஷனைக் கைது செய்தனர். இந்த சூழ்நிலையில் இவர்களது குடும்பச் சண்டையில் தலையிட்ட கன்னட தயாரிப்பாளர் சங்கம், நிகிதாவுக்குத் தடை விதித்து பரபரப்பை அதிகரித்தது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழவே தயாரிப்பாளர் சங்கம் தடையை விலக்கியது.

இந்தப் பின்னணியில் தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டார். அங்குஅவருக்கு நெஞ்சு வலிப்பதாக கூறவே மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு செஷன்ஸ் கோர்ட் ஜாமீன் வழங்க மறுத்தது. இந்த நிலையில், விஜயலட்சுமி திடீரென பல்டி அடித்தார்.

செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜரான அவர் தனது கணவர் தாக்கி தான் காயமடையவில்லை என்றும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயமடைந்ததாகவும் அவர் கூறினார். மேலும் தர்ஷன் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறினார். இருப்பினும் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

தர்ஷன் மீது கொலை முயற்சி வழக்கு, தாக்கி காயம் ஏற்படுத்துதல், மனைவியைக் கொடுமைப்படுத்தியது, குற்றச் செயலில் ஈடுபடுதல் ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டதால் இந்த நிலை. மேலும் அவர் மீது ஆயுதத் தடைச் சட்டமும் பாய்ந்திருந்ததால் ஜாமீன் கிடைக்க முடியாத நிலை நிலவியது.

இந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தர்ஷன் ஜாமீன் கோரி மனு செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. மேலும் அக்டோபர் 13ம் தேதி தர்ஷனும், அவரது மனைவி விஜயலட்சுமியும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

சீமான் படம்: கிணற்றில் விழுந்த புது நடிகர்!


சீமான் நடிக்கும் கண்டுபிடி கண்டுபிடி படத்தின் ஷூட்டிங்கில் தருண் சத்ரியா என்ற புது நடிகர் கதவறி கிணற்றில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மூவி பஜார் என்ற நிறுவனத்தின் சார்பில் கல்கி யுவா என்ற இருபத்தியொரு வயது இளைஞர் தயாரிக்கும் படம் கண்டுபிடி கண்டுபிடி. மாயாண்டி குடும்பத்தார் படத்தை தயாரித்த சாமு சிவராஜ் இந்தப் படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளார்.

முரளி, ஐஸ்வர்யா தேவன் என்ற கேரளா புதுவரவும் நடிக்கும் இந்தப் படத்தின் கதை நாயகன் இயக்குநர் சீமான். பிரபு சாலமனின் உதவியாளரான ராம் சுப்பாராமன் இயக்குகிறார்.

போலீஸ் விசாரணையை மையப்படுத்தி நகரும் பரபரப்பான படமாக வளர்ந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் தேனி மாவட்டம் கம்பம் அருகில் நடந்தது. குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தின் இணை நாயகனாக நடித்த தருண் சத்ரியா இப்படத்தில் முக்கிய வேடமேற்று நடிக்கிறார்.

காட்சிப்படி தருண் நூறு அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி படிக்கட்டில் உக்கார்ந்திருப்பதுபோல ஒரு காட்சியை படமாக்கத் திட்டமிட்டார்கள். இதற்காக பல்வேறு பகுதிகளில் ஆழமான கிணறுகளை தேடி இறுதியாக கொஞ்சம் பழய கிணற்றைக் கண்டுபிடித்து படப்பிடிப்பை நடத்தினார்கள்.

நடிகர் தருண் சத்ரியா படிக்கட்டு வழியாக இறங்கியபோது அங்கிருந்த பாசி வழுக்கி பிடிமானம் இல்லாமல் கிணறில் தவறி விழுந்தார். தலையில் அடிபட்டு மயக்கமான தருணை, அந்த ஊரைச் சேர்ந்த இருவர் கிணற்றுக்குள் குதித்து காப்பாற்றினர்.

அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர் படக்குழுவினர். இயல்புக்கு திரும்பிய தருண் மீண்டும் கிணற்றுக்குள் இறங்கி நடித்துமுடித்தபோது ஒட்டுமொத்த படக்குழுவே அவருக்கு கைத்தட்டி உற்சாகமளித்தது!

அக் 9-ம் தேதி ரஜினியைச் சந்திக்கிறார் ஷாரூக்கான்!


சென்னை: வரும் அக்டோபர் 9-ம் தேதி, அதாவது ஞாயிற்றுக்கிழமை போயஸ் கார்டனில் ரஜினியைச் சந்திக்கிறார் நடிகர் ஷாரூக்கான்.

அன்று ஷாரூக்கானின் ஐபிஎல் அணி சென்னையில் விளையாடுகிறது. எனவே நிச்சயம் அன்றைக்கு தான் சென்னையில் இருப்பேன் என்றும், ரஜினியைச் சந்திப்பேன் என்றும் ஷாரூக்கான் கூறியுள்ளார்.

ஆனால் அவரது சந்திப்பு குறித்து ரஜினி வீட்டில் யாரும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன்பு நிருபர்களிடம் பேசிய ஷாரூக்கான், "நான் ரஜினியின் தீவிர ரசிகன். நிச்சயம் அவரை சென்னையில் சந்தித்து மரியாதை செலுத்த விரும்புகிறேன். அடுத்த முறை சென்னை செல்லும்போது நிச்சயம் சந்திப்பேன். அவரைப் பற்றி பேசும்போதே சிலிர்ப்பாக உள்ளது.

அக்டோபர் 4-ம் தேதி ராணா படத்தில் அவர் நடிப்பார் என்றும் அப்போது ராஒன் காட்சியை எடுத்துக் கொள்ளலாம் என்றும் சௌந்தர்யா கூறியிருந்தார். ஆனால் ரஜினி சார் ராணாவில் நடிக்கவில்லை. ஆனாலும் சௌந்தர்யா தன் வாக்கை காப்பாற்றினார்.

படப்பிடிக்கு தனது தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவுடன் வந்தார் ரஜினி சார். என் வாழ்க்கையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆம், ரஜினி சாருடன் நான் நடித்தேன். பின்னர் அந்தக் காட்சியை சௌந்தர்யா எடிட் செய்து, மீண்டும் ரஜினி சாருக்கு காட்டி அனுமதி பெற்றார்," எனும் ஷாரூக், எந்திரன் சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார்.

"ரோபோ படத்தை எனது குழந்தைகள் வீட்டில் உள்ள திரையரங்கில் பார்க்க விரும்பினார்கள். ஆனால் பிரிண்ட் கிடைக்கவில்லை. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட லதா மேடம், உடனே கவுரியிடம் (ஷாரூக் மனைவி) பேசினார். மும்பையில் உள்ள விநியோகஸ்தரிடம் பிரிண்டுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக சொன்னார். என் குழந்தைகள் ரோபோவை பார்த்து மகிழ்ந்தனர். இப்படி பல விஷயங்களில் ரஜினி சார் குடும்பத்துக்கு நான் ஆயுள் முழுக்க கடன்பட்டிருக்கிறேன்," என்றார்.

அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்க ஆசை! - ஏ.ஆர்.ரஹ்மான்


சென்னை: அதிக தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்க ஆசையாக உள்ளது என்றார் ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.

வசந்த பாலன் இயக்கத்தில் ஆதி-தன்ஷிகா ஜோடி நடித்துள்ள அரவான் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. டி சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. பின்னணிப் பாடகர் கார்த்திக் இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அளவுக்கு முற்றிலும் வித்தியாசமான வரலாற்றுப் படமாக அரவான் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் நடந்தது. முதல் இசைத் தட்டை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட, இயக்குநர் மணிரத்னம் பெற்றுக்கொண்டார்.

விழாவில், ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், "தமிழ் ரசிகர்கள் மத்தியில் சினிமா பற்றிய ஞானம் வளர்ந்து இருக்கிறது. அவர்களின் ரசனை உயர்ந்திருக்கிறது. ஒரு படத்தின் 'டிரைலரை' பார்த்து, அது எப்படிப்பட்ட படம் என்பதை கணித்து விடுகிறார்கள்.

ஒரு சிறுவனிடம் ட்ரெய்லரைக் காட்டினால், அதுபற்றி அவன் என்ன சொல்கிறானோ அதுதான் உண்மையாகிறது. அதைவைத்தே அந்தப் படம் ஓடுமா ஓடாதா என்று கூறிவிடலாம்.

நான், தமிழ் படங்களை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறேன்.

இந்த (அரவான்) பட காட்சிகளை பார்க்கும்போது, எனக்கும் அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறது,'' என்றார்.

தமிழ்த் திரையுலகமே ஒரே இடத்தில் குவிந்துவிட்டது போல, ஏராளமான பிரமுகர்கள் இந்த விழாவுக்கு வந்திருந்தனர். குறிப்பாக, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் கேயார் ஆகியோர் தங்கள் அணியுடன் வந்து விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பட அதிபர் டி.சிவா வரவேற்று பேசினார். இயக்குநர் வசந்தபாலன் நன்றி கூறினார்.

Thursday 6 October 2011

அவுஸ்திரேலியாவிலும் இலங்கையை துரத்தப்போகும் போர் குற்ற வழக்கு!

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் செல்லும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு சில மனித உரிமை அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாடு ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை சிட்னி நகரில் உலக தமிழ் அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை வெளியிட்டுள்ளது. எனினும், அரச தலைவர்களுக்கான ஏர்க் சேர்விஷ் சர்வதேச இணக்கப்பாடு இலங்கை ஜனாதிபதிக்கும் பொருந்தும் என்பதால் நீதிமன்ற அழைப்பாணையைப் பெற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பல அதிகாரிகள் தற்சமயம் அவுஸ்திரேலியாவில் நிலைகொண்டுள்ளதால் அவர்களுக்கு எதிராகவும் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட பல வழக்குகளை தொடுப்பது குறித்து அவுஸ்திரேலிய தமிழர் பேரவையும் மற்றும் உலகத் தமிழர் பேரவையும்(GTF) இணைந்து ஆலோசனை நடத்திவருவதாகவும் அறியப்படுகிறது. மகிந்தர் எந்த ஒரு நாட்டிற்குச் சென்றாலும் அங்கே நெருக்குவாரங்களை ஏற்படுத்துவதில் உலகத் தமிழர் பேரவை முனைப்புக்காட்டிவருகிறது.

இது குறித்த மேலதிக தகவல்கள் மிகவிரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

அதிர்வு

போர்க்குற்றவாளி மகிந்தவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை பெற அனுமதி மறுப்பு

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயோர்க் சென்றிருந்த மகிந்த ராஜபக்­ஷ‌ டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஹொஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்கு அமெரிக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் பிரதி ராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக்கிடம் வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முறையிட்டுள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் பதிலளித்த ரொபேர்ட் ஓ பிளேக் மகிந்த ராஜ பக்­ஷ‌வுக்கு நியூயோர்க்கில் மட்டுமே ராஜதந்திர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மகிந்த ராஜபக்­ஷ‌ நியூயோர்க்குக்கு வெளியே செல்லும் போது ஏற்படக் கூடிய சட்டரீதியான நடவடிக்கைகளில் தலையீடு செய்வதற்கு அமெரிக்க அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் பீரிஸிடம் கூறியுள்ளார். அமெரிக்காவின் குயின்ஸ்லாந்து பெளத்த விகாரையில் இடம் பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருந்த மகிந்த ராஜபக்­ஷ‌விடம் நீதிமன்ற அழைப்பாணையை கையளிக்க அமெரிக்க அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரால் அங்கு செல்ல முடியவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

கேணல் ரமேஷின் படுகொலை, வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே மகிந்த ராஜபக்­ஷ‌ மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறு திக்கட்டப் போரின் போது சிறீலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேஷின் துணைவி வத்சலா தேவியின் சார்பில் இவ்வழக்கு கடந்தமாதம் 22ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

06.10.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு


06.10.1998 மாங்குளம் நோக்கி முன்னேற முயன்ற ஜெயசிக்குறு படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் டயஸ் உட்பட்ட மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாளும், 06.10.2000 அன்று ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையில் நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு முயற்சியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சாந்தகுமாரி உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாளும், 06.10.2006 அன்று மட்டு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் புனிதா உட்பட்ட மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.

தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்


பிரதமர் உருத்திரகுமார் ஹவானா ரைம்ஸ் இதழுக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகள்


ஹவானா ரைம்ஸ் செய்தி இதழின் செய்தியாளர் றொன் றிடெநொயருக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் ஒக்ரோபர் 3 ம் திகதி அன்று வழங்கிய செவ்வியின் சில முக்கியமான பகுதிகளின் தமிழாக்கம் வருமாறு:சிறிலங்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் தமிழர்களாகிய நாம் இன்னமும் நமக்கென தனியான ஒரு நாட்டையே விரும்புகிறோம்.

தமிழ் மக்கள் மீதான மகிந்த இராஜபக்ஷ அரசின் போர்க்குற்றங்களின் மோசமான குரூரத்தன்மை நன்கு அறியப்பட்டு வருவதனால் எமது கோரிக்கை உலகளாவிய அளவில் இன்று பேசப்பட்டு வருகின்றது.' இவ்வாறு விசுவநாதன் ருத்திரகுமாரன் என்னிடம் அண்மையில் நியூ யோர்க் நகரில் தெரிவித்தார்.

அதிர்ச்சி தரத்தக்க சனல் 4ன் ஆவணப்படமான சிறிலங்காவின் கொலைக்களங்கள் முதலில் யூன் மாதம் ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பிலும் பின்னர் உலகம் முழுவதும் காண்பிக்கப்பட்டு வருவது தமிழரின் உரிமைகள் அங்கிகரிக்கப்பட்டு வருவதற்கு அடையாளமாக உள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமாரன விசுவநாதன் ருத்திரகுமாரன், புலம்பெயர்ந்த தமிழர்களின் உரிமைகளுக்காக செயற்பட்டு வருபவர்களில் முக்கியமான ஒருவர். கொழும்பு பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவில் உள்ள சவுத் மெதடிஸ்ற் பல்கலைக்கழகத்திலும் சட்டத்துறையில் பட்டம் பெற்றுள்ள ருத்திரகுமாரன், ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் சுயநிர்ணய உரிமை பற்றி ஆய்வு செய்து ஆய்வுரைகளை வெளியிட்டிருந்தார்.

சிறிலங்காவின் நீண்ட உள்நாட்டு போர் மே 2009ல் முடிவுக்கு வந்தபோது, தமிழரின் இறையாண்மைக்கான தேவையை ருத்திரகுமாரன் கண்டுகொண்டார். அதேவேளை சுவிற்சலாந்திலும் மலேசியாவிலும் உள்ள அறிவாளர்கள் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நிறுவினார்கள்.

இவ்வாறாக புலம்பெயர்ந்த தமிழர் தலைவர்கள் தமக்கான ஆதரவை திரண்டெழுப்பி வரும் நிலையில், மே 2009ல் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் கூட்டத்தில் கியூபாவிலும் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் உள்ள முற்போக்கான அரசுகள் சிறிலங்காவை ஆதரித்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆதரவு தமிழரின் விடுதலைப் போராளிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல முற்றான தமிழ்மக்களின் விருப்பங்களுக்கும் எதிரானதுமாகும்.

தமிழர் என்றும் பிடல் காஸ்ரோவையும் சே குவாராவையும் வீரம் செறிந்த போராளிகளாக போற்றிவந்திருக்கிறார்கள்.' என பிரதமர் குறிப்பிட்டார். மே 2009ற்கு பின்பான கியூபாவின் நிலைப்பாடு தமிழ்மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஒருவேளை இது போதிய அளவில் இடம்பெறாத கருத்து பரிமாற்றங்கள் காரணமாக இருக்கலாம். ஆகவே நாம் கியூபாவுக்கும் வெனிசியுலாவுக்கும் லத்தீன் அமெரிக்க மக்களின் பொலிவியன் கூட்டமைப்பை சேர்ந்த ஏனைய அரசுகளுக்கும் ஒரு தூதுக்குழுவொன்றை அனுப்பி எமது நிலைப்பாடு பற்றி எடுத்து கூறி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட ஆவலாக இருக்கிறோம்' என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

எந்தவொரு அரசாங்கத்துடனும் அல்லது சர்வதேச சக்தியுடனும் இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செயற்படவில்லை' என குறிப்பட்ட பிரதமர் ருத்திரகுமாரன் தமது நோக்கத்துக்கு ஆதரவு தருபவர்களுடன் ஒத்துழைக்க விரும்புவதாக குறிப்பிட்டார்.

மக்களின் தெரிவின் அடிப்படையில் முடிவெடுப்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. கடந்த 2010 இளவேனிற் காலத்தில் 12 நாடுகளிலிலுந்து தேர்தல்கள் மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சில சந்தர்ப்பங்களில் பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த தேர்தல்களில் பங்குபற்றினர்.

55 பிரநிதிகள் அமெரிக்காவில் உள்ள பிலடல்பியா நகரில் கூடி மே 17-19 2010ல் நாடுகடந்த அரசாங்கத்தின் சட்டசபையை உருவாக்கினர். மேலும் 30 பிரதிநிதிகள் லண்டனில் இருந்தும் ஜெனீவாவில் இருந்தும் வீடியோ மூலம் பங்குபற்றினர்.

ஹவானா ரைம்ஸின் செய்தியாளர் றொன் றிடெநொயர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் தமிழருக்கு எதிரான இனப்படுகொலைகள் பற்றியும் விபரித்தார். ஆயுதப் போராட்டத்தின் வரலாறு பற்றி குறிப்பிட்டு, தமிழ் மக்களுக்கு விடுதலைப்புலிகள் போராடுவதற்கான பலத்தையும் தன்மானத்தையும் பெற்றுத் தந்திருப்பதாகவும் இன்று போராட்டம் இராஜதந்திர தளத்தில் இடம்பெறுவதாக தெரிவித்தார்.


நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் இரு சர்வதேச தமிழர் அமைப்புகளுடன் சிறப்பான உறவை வளர்த்துக்கொண்டு செயல்படுவதாக குறிப்பிட்ட பிரதமர் ருத்திரகுமாரன், இந்த அமைப்புகள் உலகத் தமிழர் பேரவையும், ஐரோப்பாவின் ஈழத்தமிழர் அமைப்பு எனவும் குறிப்பிட்டார்.

எமது நோக்கம் ஒன்றே அதை அடைவதற்கான எமது வழிகளும் ஒன்றே ஆயுதம் ஏந்தாத இராஜதந்திர வழிகள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கம் என்ற அளவிலேயே நாம் எமது நட்பு அமைப்புகளில் இருந்து வேறுபடுகிறோம் என்று பிரதமர் ருத்திரகுமாரன் தெரிவித்தார்.

தென் சூடானில் இடம்பெற்ற வாக்கெடுப்பு மூலமான விடுதலை தமக்கு உற்சாகமளிப்பதாக குறிப்பிட்ட பிரதமர் ருத்திரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் துணை வெளிவிவகார அமைச்சர் மாணிக்கவாசகரும் பிரதமர் செயலகத்தின் பிரதமர் அலுவலகப் பேச்சாளர் ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கமும் தென் சூடானின் அதிபராக சல்வா கீர் பதவியேற்ற நிகழ்வில் பங்குகொண்டதாக குறிப்பிட்டார்.

எமது இராஜதந்திர முயற்சியின் நோக்கம் தென் சூடான் போல எமது மக்களும் ஈழத்தில் ஒரு கண்காணிக்கப்படும் வாக்கெடுப்பு மூலம் தமது எதிர்காலத்தை தீர்மானிக்க சர்வதேச சமுகம் உதவ செய்வதே என தெரிவித்தார்.

ஹவானா ரைம்ஸின் செய்தியாளர் றொன் றிடெநொயர் பிரதமர் ருத்திரகுமாரன் பற்றி தெரிவிக்கையில், அவருக்கு வல்லரசுகளினதும் இன்றைய மற்றும் முன்னாள் ஏகாதிபத்தியங்களினதும் நோக்கங்கள் பற்றி எந்த மயக்கமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

எமது ஒன்றுபட்ட இறையாண்மைக்கான நோக்கத்தை நாம் என்றும் விட்டுக்கொடுக்க போவதில்லை. அது எமது ஆற்றலிலும் உறுதிலும் தங்கியுள்ளது. எமது போராட்டம் எமது தேசியத்துக்கானது. இது வேறு எந்த இலட்சியம் பற்றியதோ அல்லது பொருளாதார அடிப்படையிலானதோ அல்ல' என பிரதமர் ருத்திரகுமாரன் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகம்,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

http://www.havanatimes.org/?p=52152

http://www.tgte.org/node/105

ஈழத்தமிழர் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்: சீமான்

செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் பல ஆண்டுகளாக சிறைப்பட்டுத்தப்பட்டிருந்த ஈழத் தமிழ் அகதிகளில் 15 பேர் விடுவிக்கப்பட்டதைப்போல், மற்ற 29 பேரையும் தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில், செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 ஈழத் தமிழ் அகதிகளில் 15 பேரை தமிழக அரசு விடுவித்திருப்பது பாராட்டிற்குரியதாகும்.

ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலை உச்ச கட்டத்தில் இருந்தபோது, அங்கே படுகாயமுற்றுக் கிடந்த மக்களுக்கு மருந்துப் பொருட்களையும், மண்ணெண்ணை உள்ளிட்ட சில அத்யாவசியப் பொருட்களையும் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் போரில் இங்கிருக்கும் பல ஈழத் தமிழ் அகதிகளை தமிழக காவல்துறை கைது செய்து, சிறப்பு முகாம்கள் என்று பெயரில் சிறையை ஏற்படுத்தி தடுத்து வைத்தது. அவர்களுக்கு எதிரான வழக்குகளில், பிணைய விடுதலை உள்ளிட்ட சட்ட ரீதியான நிவாரணங்களைக் கூட பெறுவதற்கு அனுமதிக்காமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழின அமைப்புகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தனர். சிறப்பு முகாம்களில் அடைப்பட்டுக் கிடந்தவர்கள் பல முறை பட்டிணிப் போராட்டம் நடத்தி தங்களை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டிலுள்ள இதர முகாம்களில் வசிக்கும் தங்கள் உறவினர்களுடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அவர்களில் 15 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்னமும் 29 பேர் பூந்தமல்லி, செங்கல்பட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவர்கள் அனைவரும் இரண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு இப்பிரச்சனையை அணுக வேண்டும். தங்கள் சொந்த மண்ணிலும் சிறை, நம்பி பிழைக்க வந்த மண்ணிலும் சிறை என்றால் எப்படி? தமிழர்களாக பிறந்ததைத் தவிர, வேறு எந்தப் பாவமும் இவர்கள் செய்யவில்லை. இந்த நிலையை தமிழக அரசு நினைத்துப் பார்க்க வேண்டும்.

எனவே, 15 பேர் மீது கருணை காட்டி விடுவித்தது போல், மீதமுள்ள 29 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறது என்று கூறியுள்ளார்.

இந்தியாவையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: வைகோ


போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்தியாவையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென வைகோ சூளுரைத்துள்ளார்.


இலங்கை அரசானது தமிழ் மக்களை காலனிப் பகுதிகள் போன்ற அடிப்படை வசதிகளற்ற இடங்களில் குடியமர்த்தி வைக்க முயற்சிக்கின்றது என்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கமானது இனவாதம் கொண்டது. தமிழ்; மக்களை இனப்படுகொலை செய்த பாசிச வெறித்தனம் கொண்டது.

எனவே இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளித்து தமிழர்களுக்குத் துரோகம் செய்த இந்திய மத்திய அரசாங்கத்தையும் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளதாக ஏ.என். ஐ. ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ஹவானா ரைம்ஸ் இதழுக்கு வழங்கிய செவ்வி!

ஹவானா ரைம்ஸ் செய்தி இதழின் செய்தியாளர் றொன் றிடெநொயருக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் ஒக்ரோபர் 3 ம் திகதி அன்று வழங்கிய செவ்வியின் சில முக்கியமான பகுதிகளின் தமிழாக்கம் வருமாறு:

சிறிலங்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் தமிழர்களாகிய நாம் இன்னமும் நமக்கென தனியான ஒரு நாட்டையே விரும்புகிறோம்.

தமிழ் மக்கள் மீதான மகிந்த இராஜபக்ஷ அரசின் போர்க்குற்றங்களின் மோசமான குரூரத்தன்மை நன்கு அறியப்பட்டு வருவதனால் எமது கோரிக்கை உலகளாவிய அளவில் இன்று பேசப்பட்டு வருகின்றது.' இவ்வாறு விசுவநாதன் ருத்திரகுமாரன் என்னிடம் அண்மையில் நியூ யோர்க் நகரில் தெரிவித்தார்.

அதிர்ச்சி தரத்தக்க சனல் 4ன் ஆவணப்படமான சிறிலங்காவின் கொலைக்களங்கள் முதலில் யூன் மாதம் ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பிலும் பின்னர் உலகம் முழுவதும் காண்பிக்கப்பட்டு வருவது தமிழரின் உரிமைகள் அங்கிகரிக்கப்பட்டு வருவதற்கு அடையாளமாக உள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமாரன விசுவநாதன் ருத்திரகுமாரன், புலம்பெயர்ந்த தமிழர்களின் உரிமைகளுக்காக செயற்பட்டு வருபவர்களில் முக்கியமான ஒருவர். கொழும்பு பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவில் உள்ள சவுத் மெதடிஸ்ற் பல்கலைக்கழகத்திலும் சட்டத்துறையில் பட்டம் பெற்றுள்ள ருத்திரகுமாரன், ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் சுயநிர்ணய உரிமை பற்றி ஆய்வு செய்து ஆய்வுரைகளை வெளியிட்டிருந்தார்.

சிறிலங்காவின் நீண்ட உள்நாட்டு போர் மே 2009ல் முடிவுக்கு வந்தபோது, தமிழரின் இறையாண்மைக்கான தேவையை ருத்திரகுமாரன் கண்டுகொண்டார். அதேவேளை சுவிற்சலாந்திலும் மலேசியாவிலும் உள்ள அறிவாளர்கள் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நிறுவினார்கள்.

இவ்வாறாக புலம்பெயர்ந்த தமிழர் தலைவர்கள் தமக்கான ஆதரவை திரண்டெழுப்பி வரும் நிலையில், மே 2009ல் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் கூட்டத்தில் கியூபாவிலும் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் உள்ள முற்போக்கான அரசுகள் சிறிலங்காவை ஆதரித்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆதரவு தமிழரின் விடுதலைப் போராளிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல முற்றான தமிழ்மக்களின் விருப்பங்களுக்கும் எதிரானதுமாகும்.

தமிழர் என்றும் பிடல் காஸ்ரோவையும் சே குவாராவையும் வீரம் செறிந்த போராளிகளாக போற்றிவந்திருக்கிறார்கள்.' என பிரதமர் குறிப்பிட்டார். மே 2009ற்கு பின்பான கியூபாவின் நிலைப்பாடு தமிழ்மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஒருவேளை இது போதிய அளவில் இடம்பெறாத கருத்து பரிமாற்றங்கள் காரணமாக இருக்கலாம். ஆகவே நாம் கியூபாவுக்கும் வெனிசியுலாவுக்கும் லத்தீன் அமெரிக்க மக்களின் பொலிவியன் கூட்டமைப்பை சேர்ந்த ஏனைய அரசுகளுக்கும் ஒரு தூதுக்குழுவொன்றை அனுப்பி எமது நிலைப்பாடு பற்றி எடுத்து கூறி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட ஆவலாக இருக்கிறோம்' என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

எந்தவொரு அரசாங்கத்துடனும் அல்லது சர்வதேச சக்தியுடனும் இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செயற்படவில்லை' என குறிப்பட்ட பிரதமர் ருத்திரகுமாரன் தமது நோக்கத்துக்கு ஆதரவு தருபவர்களுடன் ஒத்துழைக்க விரும்புவதாக குறிப்பிட்டார்.

மக்களின் தெரிவின் அடிப்படையில் முடிவெடுப்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. கடந்த 2010 இளவேனிற் காலத்தில் 12 நாடுகளிலிலுந்து தேர்தல்கள் மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சில சந்தர்ப்பங்களில் பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த தேர்தல்களில் பங்குபற்றினர்.

55 பிரநிதிகள் அமெரிக்காவில் உள்ள பிலடல்பியா நகரில் கூடி மே 17-19 2010ல் நாடுகடந்த அரசாங்கத்தின் சட்டசபையை உருவாக்கினர். மேலும் 30 பிரதிநிதிகள் லண்டனில் இருந்தும் ஜெனீவாவில் இருந்தும் வீடியோ மூலம் பங்குபற்றினர்.

ஹவானா ரைம்ஸின் செய்தியாளர் றொன் றிடெநொயர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் தமிழருக்கு எதிரான இனப்படுகொலைகள் பற்றியும் விபரித்தார். ஆயுதப் போராட்டத்தின் வரலாறு பற்றி குறிப்பிட்டு, தமிழ் மக்களுக்கு விடுதலைப்புலிகள் போராடுவதற்கான பலத்தையும் தன்மானத்தையும் பெற்றுத் தந்திருப்பதாகவும் இன்று போராட்டம் இராஜதந்திர தளத்தில் இடம்பெறுவதாக தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் இரு சர்வதேச தமிழர் அமைப்புகளுடன் சிறப்பான உறவை வளர்த்துக்கொண்டு செயல்படுவதாக குறிப்பிட்ட பிரதமர் ருத்திரகுமாரன், இந்த அமைப்புகள் உலகத் தமிழர் பேரவையும், ஐரோப்பாவின் ஈழத்தமிழர் அமைப்பு எனவும் குறிப்பிட்டார்.

எமது நோக்கம் ஒன்றே அதை அடைவதற்கான எமது வழிகளும் ஒன்றே ஆயுதம் ஏந்தாத இராஜதந்திர வழிகள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கம் என்ற அளவிலேயே நாம் எமது நட்பு அமைப்புகளில் இருந்து வேறுபடுகிறோம் என்று பிரதமர் ருத்திரகுமாரன் தெரிவித்தார்.

தென் சூடானில் இடம்பெற்ற வாக்கெடுப்பு மூலமான விடுதலை தமக்கு உற்சாகமளிப்பதாக குறிப்பிட்ட பிரதமர் ருத்திரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் துணை வெளிவிவகார அமைச்சர் மாணிக்கவாசகரும் பிரதமர் செயலகத்தின் பிரதமர் அலுவலகப் பேச்சாளர் ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கமும் தென் சூடானின் அதிபராக சல்வா கீர் பதவியேற்ற நிகழ்வில் பங்குகொண்டதாக குறிப்பிட்டார்.

எமது இராஜதந்திர முயற்சியின் நோக்கம் தென் சூடான் போல எமது மக்களும் ஈழத்தில் ஒரு கண்காணிக்கப்படும் வாக்கெடுப்பு மூலம் தமது எதிர்காலத்தை தீர்மானிக்க சர்வதேச சமுகம் உதவ செய்வதே என தெரிவித்தார்.

ஹவானா ரைம்ஸின் செய்தியாளர் றொன் றிடெநொயர் பிரதமர் ருத்திரகுமாரன் பற்றி தெரிவிக்கையில், அவருக்கு வல்லரசுகளினதும் இன்றைய மற்றும் முன்னாள் ஏகாதிபத்தியங்களினதும் நோக்கங்கள் பற்றி எந்த மயக்கமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

எமது ஒன்றுபட்ட இறையாண்மைக்கான நோக்கத்தை நாம் என்றும் விட்டுக்கொடுக்க போவதில்லை. அது எமது ஆற்றலிலும் உறுதிலும் தங்கியுள்ளது. எமது போராட்டம் எமது தேசியத்துக்கானது. இது வேறு எந்த இலட்சியம் பற்றியதோ அல்லது பொருளாதார அடிப்படையிலானதோ அல்ல' என பிரதமர் ருத்திரகுமாரன் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகம்,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

உலகத்தை மாற்றிப்போட்ட உன்னத அறிவாளி மரணம்! (காணொளி இணைப்பு)

நேற்று அப்பிள் நிறுவன ஐபோன் 5 வருமென எதிர்பார்த்து ஏமார்ந்த அப்பிள் பாவனையாளருக்கு அந்த நிறுவனத்தை இந்த நிலைக்கு உயர்த்திய ஸ்டீவ் யொப்ஸ்சின் மரணம் பேரிடியாக இறங்கியுள்ளது.

கடந்த 15 வருட காலத்தில் அப்பிள் நிறுவனத்தை உலகத்தின் அதிசயமிக்க வெளியீடுகளைத் தரும் நிறுவனமாக மாற்றிய புகழுக்குரியவர் இவரே. இவருடைய அறிவும், ஜீனியஸ்சான மூளையும் உலகத்தையே மாற்றிப்போட உதவியது என்று அப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அப்பிளில் டச் முறையை கொண்டு வந்து இலத்திரனியல் உலகத்தின் புது வலு கொடுத்த ஸ்டீவ் ஜொப்ஸ் நேற்று தனது 56 ஆவது வயதில் காலமானார்.

கடந்த சில வருடங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

உலகில் கணனி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகளைத் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனமாக அப்பிள் இன்று திகழ்வதற்கு முக்கிய காரணம் இவரது திறமையாகும்.

இவர் 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தார்.

அவர் தனது கல்லூரிப் படிப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யாத போதிலும் கணனித்துறையில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்குப் பல சாதனைகளைத் தனது வாழ்நாளில் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

அவரின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் உலகெங்கிலுமிருந்து இரங்கல் செய்திகள் குவிந்த வண்ணமுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பில்கேட்ஸ், ஷூக்கர் பேர்க் உட்பட அனைவரும் தங்களது அனுதாப அறிக்கைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜொப்ஸ் வரலாற்றில்...

உலகத்தலைவர்கள் பலர் இவரது மறைவிற்கு தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக ஒபாமா ” அமெரிக்காவின் சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவர் எனவும், வித்தியாசமாக யோசிக்கத் தைரியமுள்ளவர் எனவும், தன்னால் உலகை மாற்றமுடியும் என்பதை நம்புபவர் எனவும் அதை செய்து காட்டும் திறமையும் கொண்டவர் என தனது அஞ்சலி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல பிரபலங்கள் தங்களது அனுதாபத்தினை வெளியிட்டுள்ள இத்தருணத்தில் அவரின் வாழ்க்கைப்பயணங்களை மீட்டிப் பார்ப்பது சாலப்பொருந்துவதாக அமையும்.

ஸ்டீவ் ஜொப்ஸின் வாழ்நாள் மற்றும் அப்பிள் நிறுவன வரலாற்றில் சில முக்கிய தருணங்கள்

1955: ஸ்டீவன் போல் ஜொப்ஸ் பெப்ரவரி 24 ஆம் திகதி பிறந்தார்.

1972: ஜொப்ஸ் போர்ட்லேண்டில் உள்ள ரீட் கல்லூரியில் இணைந்தார் எனினும் முதல் செமஸ்டரிலேயே அதனை நிறுத்திவிட்டார்.

1976: அப்பிள் கணனியை ஏப்ரல் முதலாம் திகதி உருவாக்கினார். த அப்பிள் ஐ கணனி 666.66 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனைக்கு வருகின்றது.

1977: அப்பிள் நிறுவனம் கூட்டு நிறுவனமாக்கப்படுகின்றது. த அப்பிள் ஐஐ கணனி அறிமுகப்படுத்தப்படுகின்றது.

1978: ஸ்டீவ் ஜொப்ஸின் மகள் லிஸா பிறந்தார்.

1980: அப்பிள் நிறுவனம் முதல் முறையாக தனது பங்குகளை வெளியிட்டது (ஐய்ண்ற்ண்ஹப் ல்ன்க்ஷப்ண்ஸ்ரீ ர்ச்ச்ங்ழ்ண்ய்ஞ்). 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டிக் கொண்டது.

1982: அப்பிள் நிறுவனத்தின் வருடாந்த வருவாய் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாய் அதிகரிக்கின்றது.

1983: அப்பிளின் லிசா கணனிகள் விற்பனைக்கு வருகின்றன.

1984: அப்பிளின் மெகிண்டொஸ் கணனிகள் விற்பனைக்கு வருகின்றன.

1985: நிறுவனத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கூலி மற்றும் ஜொப்ஸ் இடையே மோதல், ஜொப்ஸ் மற்றும் வொஸ்னிஹக் ஆகியோர் அப்பிளில் இருந்து பதவி விலகுகின்றனர்.

1986: ஜொப்ஸ் நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்ததுடன், உயர் தொழிநுட்பம் கொண்ட கணனிகளை பல்கலைக்கழகங்களுக்கென தயாரிக்கத்தொடங்குகின்றார்.

1989: முதலாவது நெக்ஸ்ட் கணனி விற்பனைக்கு செல்கின்றது. விலை 6,500 அமெரிக்க டொலர்கள்.

1991: அப்பிள் மற்றும் ஐ.பி.எம் நிறுவனங்கள் இணைந்து கணனிகளுக்கான புதிய மைக்ரோபுரசசர்கள் மற்றும் மென்பொருட்களை உருவாக்கவுள்ளதாக அறிவித்தன.

பவர்புக் என்றழைக்கப்படும் காவிச்செல்லக்கூடிய மெக்ஸ் கணனிகளை அறிமுகப்படுத்துகின்றது.

ஜொப்ஸ் லொரன் பவல் என்பவரை சட்டப்படி மணக்கின்றார்.

1996: ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அவரது குழு இணைந்து உருவாக்கிய நெக்ஸ்ட் நிறுவனத்தின் இயங்குதளத்தினை 430 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யும் திட்டத்தினை அப்பிள் அறிவிக்கின்றது.

1997: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.

2000: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.

2001: முதல் ஐ பொட் விற்பனைக்கு வருகின்றது. ஐ டியூன்ஸ் மென்பொருளை வெளியிடுகின்றது.

2004: கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜொப்ஸ் சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.

2006: ஜொப்ஸ் டிஸ்னி நிறுவனத்தின் அதி கூடிய பங்குகளைக் கொண்ட தனிநபராகின்றார்.

2007: அப்பிள் தனது முதல் கையடக்கத் தொலைபேசியான ஐ போனை வெளியிடுகின்றது.

2009: ஜொப்ஸ் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.

2011 ஜனவரி 17: ஜொப்ஸ் 2 ஆவது முறையாக மருத்துவ விடுமுறையில் செல்வதாக அறிவிக்கின்றார்.

2011 ஓகஸ்ட் 24: ஜொப்ஸ் தான் அப்பிளின் நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கின்றார்.

2011 ஒக்டோபர் 5: ஜொப்ஸ் காலமானதாக அறிவிக்கப்படுகின்றது.

இதேவேளை உலகம் பூராகவும் மக்கள் பலர் தங்கள் அஞ்சலிகளை செலுத்திய வண்ணமுள்ளனர்.

மூவரையும் விடுவிக்க வேண்டும்: பிரதமர், சோனியாவுக்கு கலைஞர் வேண்டுகோள்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கலைஞர், பிரதமருக்கு வேண்டுகோள்விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, இருபதாண்டு காலத்திற்கு மேலாக சிறையிலே வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும் என்றும், அதற்காக தமிழக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநனருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அனைவரும் கேட்டுக்கொண்டு பல நாட்களாகியும்,

தமிழக அரசு அதற்கு முன் வராத நிலையில், மத்திய அரசாவது இவர்கள் மூவரையும் சிறையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு உதவிட வேண்டும் என்று பிரதமரையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டும் தலைவி சோனியா காந்தியையும் தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் தமிழ் அமைச்சர்கள் இல்லாத சரஸ்வதிபூஜை "(பட இணைப்பு)


நவராத்திரியின் இறுதி நாளான இன்று புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணக்களத்துடன் இணைந்து பாராளுமன்றத்தில் இன்று சரஸ்வதி பூஜையை நடத்தியது.

இந்தப் பூஜையில் பிரதி சபாநாயகர், சிரேஷ்ட அமைச்சர் ஜோன் அமரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அஸ்வர், அப்பாத்துரை விநாயக மூர்த்தி,சந்திரகுமார் உட்பட சில எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

இன, மத பேதமின்றி பாராளுமன்றத்தில் வருடாந்தம் நடத்தப்படும் இவ் வாணிவிழா பூஜைக்கு எந்தவொரு தமிழ் அமைச்சரும் கலந்து கொள்ளவில்லை.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கலைநிகழ்வொன்றும் இடம்பெற்றது.





தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்


வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த அனந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மனைவி (23). கடந்த 1ம் தேதி இரவு இவர்களது குடிசை வீட்டில் கணவன், மனைவி இருவரும் தூங்கினர். இரவு 11 மணியளவில் மர்ம நபர்கள் யாரோ கதவை தட்டியுள்ளனர். சத்தம் கேட்டு தொழிலாளி கதவை திறந்தார்.

அப்போது வெளியில் நின்றிருந்த 3 மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து அவரை சரமாரி தாக்கியுள்ளனர். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரும், இளம்பெண்ணை பைக்கில் கடத்திச் சென்றனர்.

செங்காடு ஏரிக்கரையில் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ‘இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம்’ என அவர்கள் மிரட்டியுள்ளனர்.

இது குறித்து இளம்பெண் வாலாஜா போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் ராணிப்பேட்டை டிஎஸ்பி லாவண்யா, இன்ஸ்பெக்டர் முருகேசன் மற் றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து வாலாஜா அடுத்த செங்காடு கிராமத்தை சேர்ந்த வெங் கடேசன்(30), பிச் சாண்டி(30), மனோ கரன்(40) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மூவரையும் வேற்று மாநில சிறைக்கு மாற்ற சூழச்சி!: பெ.மணியரசன்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் வேற்று மாநில சிறைக்கு மாற்ற இந்திய அரசு சூழ்ச்சி செய்கிறது. அதனை நாம் முறியடிப்போம் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

சென்னை கோயம்பேட்டில், மரண தண்டனைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் பல்வேறு அமைப்புகள் பங்குகொள்ளும் 40 நாட்கள் தொடர் பட்டினிப் போராட்டம் நடந்து வருகின்றது. அதன் 14ஆவது நாளான நேற்று (05.10.2011) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் உண்ணாப் போராட்டம் நடந்தது.

காலை 9 மணியளவில், மூவர் தூக்கை எதிர்த்துத் தீக்குளித்த தழல் ஈகி தோழர் செங்கொடியின் படத்திற்கு ஈகச்சுடரேற்றி போராட்டம் தொடக்கப்பட்டது.

த.தே.பொ.க தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். பேராசிரியர் அறிவரசன் உண்ணாப் போராட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார்.

மாலையில், நடந்த நிறைவரங்கத்தில் தமிழின உணர்வாளர் திருச்சி சவுந்திரராசன் கலந்து கொண்டு பேசினார்.

இறுதியில், பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்து த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

அவர் பேசும் போது, 1965 ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நம் தமிழ் மாணவர்கள் 300 பேரை இந்திய அரசு சுட்டுக் கொன்றது.

1987ல் ராஜீவ் காந்தியின் உத்தரவின் பேரில் தமிழீழத்திற்குச் சென்ற இந்திய அமைதிப் படை 6000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை கொன்றொழித்து, நம் தமிழ்ப் பெண்களை சீரழித்தது.

அதே இந்தியப் படை தான் நம் தமிழ்நாட்டு மீனவர்கள் 600 பேரை சிங்களக் கடற்படை சுட்டுக் கொல்வதைப் பார்த்து ரசிக்கிறது.

2009ல் இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்க சிங்களவனுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்தது, இந்திய அரசு.

அதன் தொடர்ச்சியாகத் தான் இந்திய அரசு இரத்தவெறி அடங்காமல் இம்மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. தமிழினத்திற்கு மான உணர்ச்சி இருக்கிறதா என சோதித்துப் பார்க்கிறது இந்திய அரசு.

இந்திய அரசின் கைக்கூலிகளான சில காங்கிரசாரை வைத்துக் கொண்டு, இம்மூவர் தூக்கை ரத்து செய்யக் கோரும் வழக்கை வேற்று மாநில நீதிமன்றத்திற்கு மாற்ற இந்திய அரசு சூழ்ச்சி செய்கிறது.

சோனியா காந்தி மறைமுகமாக தலையி்ட்டு, இம்மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று தனக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்கும் வேறொரு மாநில நீதிமன்றத்திற்கு இவ்வழக்கை மாற்ற முயற்சிக்கிறார்.

இந்த சூழ்ச்சியை நாம் புரிந்து கொண்டு வழக்கை வேற்று மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக் கூடாது என்று நாம் போராட வேண்டும். இந்த சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்” என்று பேசினார்.

போராட்டத்தில், ஓவியர் புகழேந்தி, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மதுரை அ.ஆனந்தன், ஓசூர் கோ.மாரிமுத்து, நா.வைகறை, க.அருணபாரதி, தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன், த.தே.பொ.க. தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் குழ.பால்ராசு, தமிழக உழவர் முன்னணிப் பொதுச் செயலாளர் தெ.காசிநாதன், தமிழக இளைஞர் முன்னணி சிதம்பரம் நகர அமைப்பாளர் ஆ.குபேரன், கீற்று இணையதள ஆசிரியர் குழுத் தோழர் கீற்று நந்தன், தமிழ்ச்சமரன், பெருஞ்சித்திரன்(த.ஓ.வி.இ.), தஞ்சை மகளிர் ஆயம் தோழர் இலெட்சுமி, சென்னை அருணா, சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த உணர்வாளர்கள் அருட்தந்தை அருண் ஏபேஸ், கதிரவன், பால் டேனியல் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கவிஞர்கள் கவிபாஸ்கர், முழுநிலவன் ஆகியோர் மரண தண்டனைக்கு எதிரான கவிதைகள் வாசித்தனர்.

உண்ணாப்போராடத்திற்கு இடையே, தழல் ஈகி செங்கொடியின் இறுதி நிகழ்வும், பேரறிவாளன் அற்புதம் அம்மையாரின் செவ்வியும் அடங்கிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.

போராட்டத்தில் திரளான இளைஞர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு

கூட்டமைப்பின் ஆதரவு எங்களது வெற்றியை மென்மேலும் உறுதிபடுத்துகின்றது: மனோ

சற்றுமுன் கல்முனையிலிருந்து வந்த தகவலின்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு மற்றும் தெகிவளை கல்கிசை தேர்தல்களிலே ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவை தெரிவித்திருக்கின்றது.

இது சம்பந்தமான அறிவித்தலை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்பி வெளியிட்டுள்ளார். கூட்டமைப்பின் ஆதரவு எங்களது வெற்றியை மென்மேலும் உறுதிப்படுத்துகின்றது.

நாம் பெறப்போகும் வெற்றி இந்த தமிழர் விரோத சர்வாதிகார அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் முகமாக தென்னிலங்கையிலே பாரிய எதிர்கட்சி கூட்டணியை உருவாக்குவதற்கு வித்திடுகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் இறுதி பிரசாரக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 5ம் திகதி புதன் கிழமை இரவு 11.00 மணிக்கு மட்டக்குளியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த அரசாங்கம் தமிழருக்கு எதிரான கோரப்போரை நடத்தி முடித்திருக்கின்றது. புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லப்பட்டாலும், அது தமிழ் மக்களுக்கு எதிரான போராகவே நடத்தப்பட்டது. இந்த போரை நடத்துவதில் அவசரத்தையும், அக்கறையையும் காட்டிய இந்த அரசாங்கம் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் காலத்தை கடத்திகொண்டிருக்கின்றது.

தமிழர்களை அறுபது வருடகாலமாக கொழும்பு அரசாங்கங்கள்; ஏமாற்றிவந்துள்ளன. இவ்வரிசையில் முதன்மை வகிக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் தற்போது இந்திய உட்பட சர்வதேச சமூகத்தையும் ஏமாற்ற ஆரம்பித்துள்ளார்கள். தமிழ் தலைவர்களை ஏமாற்றியதை போல் இந்திய மற்றும் அமெரிக்க தலைவர்களையும் இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக ஏமாற்றப்போகின்றதா, இல்லையா என்பதை இன்னும் சில மாதங்களில் தெரிந்துகொள்ளலாம்.

ஏனெனில் இந்த அரசாங்கம் இன்னும் மூன்று மாதத்திற்குள் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை கண்டேயாகவேண்டும். இந்த உண்மைகள் இன்றைய அரசாங்கத்திற்கு துதிப்பாடும் சில ஞானசூன்யங்களுக்கு தெரியாது.

அதேபோல் இன்றைய ஆட்சியாளரை வெளிநாட்டு அழுத்தங்களால் மாத்திரம் உள்நாட்டை தோற்கடிக்க முடியாது. அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்றாhல் பாரிய எதிர்கட்சி கூட்டணி ஏற்படுத்தப்படவேண்டும். இன்றைய ஐதேகவின் தலைமை இதற்கு தயார் இல்லை. இன்னும் நீண்ட நெடுங்காலத்திற்கு நிரந்தர எதிர்கட்சியாகவே இருப்பதற்கே இவர்கள் விரும்புகின்றார்கள்.

ரணில் விக்கிரமசிங்க நல்ல மனிதர். ஆனால் அவரை சுற்றி இருக்கும் பலருக்கு தனிப்பட்ட நிகழ்சி நிரல்கள் இருக்கின்றன. எனவே இன்றைய அரசாங்கத்தை வீழ்த்த விரும்பாத இந்த பலவீனமான எதிர்கட்சிக்கு எங்கள் மக்களின் வாக்குகளை நிபந்தனையில்லாமல் வாங்கிக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை.

அதேபோல் நாளை மாநகரசபையின் மேயராக மாறிவிட்டு பின்னர் ஆளுங்கட்சிக்கு தாவுவதற்கு திட்டம்போட்டு வைத்திருப்போருக்கு எமது மக்களின் வாக்குகளை வாங்கிக்கொடுப்பதற்கும் நாம் தயாராக இல்லை. இதனால்தான் இவர்களுக்கு என்மீது கோபம். என்னைப்பற்றிய பொய்யான வதந்திகளையெல்லாம் இவர்கள் இன்று பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்களை ஆதரிக்காது என்று இவர்கள் சொன்னார்கள். இவ்வர்களது மேயார் வேட்பாளர்களும், இன்னும் இரண்டு தமிழ் தேசியப்பட்டியல் அரசியல்வாதிகளும் கூட்டமைப்பு தங்களையே ஆதரிக்கிறது என்று கூட்டமைப்பின் தலைவரின் கருத்தை திரித்து பேசினார்கள்.

இதோ இப்போது கூட்டமைப்பு எங்களை ஆதரித்துவிட்டது. எனவே இதுபற்றி கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தாங்கள் பேசிய வார்த்தைகளை தாங்களே தற்போது விழுங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. எங்களுக்கும், கூட்டமைப்பிற்கும் இருக்கின்ற உறவு உணர்வுப்பூர்வமானது. இதை புரிந்துகொள்வதற்கு இத்தகைய பெரும்பான்மை கட்சிகளுடன் சங்கமமாகிவிட்டவர்களுக்கு தெரியாது. எனவே இவர்களை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன்.

அமெரிக்க அழைப்பாணையை ஏற்க முடியாது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசு அறிவித்துள்ளது.

ஹேக் சர்விஸ் என்னும் பிரகடனத்தின் அடிபப்டையில் அரச தலைவர்களுக்கு எதிராக இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்க முடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் நீதி அமைச்சு அமெரிக்க நீதிமன்றத்துக்கு இந்த பதிலை வழங்கியுள்ளது.

விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதி ரமேஸின் மனைவியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இலங்கையை அடிப்படையாகக் கொண்டது எனவும், இதனால் அமெரிக்காவில் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக விசாரணை நடத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஜனாதிபதிக்கு எதிராக அழைப்பாணை பிறப்பிக்கும் நடவடிக்கை நாட்டின் இறைமையைப் பாதிக்கக் கூடியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விபச்சார விடுதி ஒன்றை நடத்தி கைதான நபர்கள்


சுற்றுலா விடுதி என்னும் பெயரில் விபச்சார விடுதி ஒன்றை நடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட குறித்த விபசார விடுதியின் முகாமையாளர் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதிவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய தர்சிக்கா விமலசிறி உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் புலங்குளம் பகுதியிலேயே இவ்விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Wednesday 5 October 2011

56 வயதான ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரிழந்ததாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.


ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணத்திற்கு, பில்கேட்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தொழில் நுட்ப சாதன தயாரிப்பில் புகழ் பெற்றதாகும். 1976ல் தமது நண்பர் வோஸ்னியாக்குடன் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கினார் ஸ்டீவ் ஜாப்ஸ். உடல்நலக்குறைவுக் காரணமாக ஆப்பிள் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து கடந்த ஆகஸ்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் விலகினார்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டாக சிகிச்சை பெற்று வந்த 56 வயதான ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரிழந்ததாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தலைவர் பில்கேட்ஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஸ்டீவ் ஜாப்ஸூடன் இணைந்து பணியாற்றி அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன், நவீன கணினி புரட்சியினை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸை, இந்த உலகம் இழந்துவிட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அ‌வரை முதன்முதலாக சந்தி‌த்தேன் அன்று முதல் இருவரும் நல்ல நண்பர்களாகினோம். ஒரு நல்ல நண்ப‌ரை இழந்துவிட்டேன். இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார்.

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 24 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு (படங்கள் இணைப்பு)

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் 3.10.2011 திங்கட் கிழமை அன்று தியாகதீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர்,கேணல் ராயு ஆகியோரின் நினைவெழுச்சி நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில். பெருந்தொகையான மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். தமிழீழம் இசைக்குழுவினரின் இசைவணக்க நிகழ்வும்,மற்றும் முன்சன், நூறன்பேர்க், ஸ்ருட்காட் நடனக்கலைஞர்களின் விடுதலை நடனங்களும், நாடகமும் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் வரலாற்றாய்வாளர் திரு. கலாநிதி. முருகர் குணசிங்கம் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து வெல்வதுஉறுதி என்னும் இறுவட்டும் மீள் வெளியீடு செய்துவைக்கப்பட்டது.




எம்பியாகி நாடாளுமன்றம் செல்வேன்: திருமா

எம்பியாகி நாடாளுமன்றம் செல்வேன் என நினைத்து பார்த்ததில்லை: வேட்பாளர்களை ஊக்கப்படுத்திய திருமா

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் (05.10.2011) விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,

எப்போதும் இல்லாத இந்த உள்ளாடசித் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே களம் இறங்கியுள்ளன. தேமுதிகவும் கம்யூனிஸ்ட்டுகளும் கூட்டணி வைத்தன. அதுவும் சிக்கலில் முடிந்துவிட்டது. ஆனால் இஸ்லாமிய சகோதர அமைப்புகளும், விடுதலைச்

சிறுத்தைகளும் கூட்டணி அமைத்து மக்கள் ஜனநாயக கூட்டணி என்ற அமைப்பு உருவாகி உள்ளது.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் நாம் தான் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளோம். திராவிட கட்சிகள் அனைத்தும் சிறுபான்மையினரும், ஒடுக்கப்பட்டோரையும், தலித்துக்களையும் ஒரு ஏணிப்படியாக பயன்படுத்தி வந்துள்ளன. இதுவரை ஓட்டுப் போட மட்டுமே நாம் பயன்பட்டு வந்துள்ளோம்.

இன்று மக்கள் முன் ஓட்டு கேட்க நாம் தயாராகி உள்ளோம். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர், தலித்துகளின் ஒற்றுமை தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் அடிப்படை தேவையாகி விட்டது.

இஸ்லாமியர்களும், தலித்துக்களும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் நாம் இணைந்தால், மத்தியில் பிரதமராக ஒரு தலித்தோ, ஒரு இஸ்லாமியரோ தான் வரமுடியும். அதை எந்த சத்தியாலும் மாற்ற முடியாது. பாஜக, பிராமண சமூகத்தினர் போன்றவர்கள் எல்லாம் பிரதமர் பதவியை நினைத்து பார்க்க முடியாது. அதற்கு முதலில் தமிழ்நாட்டில் நாம் ஒன்றிணைவோம். அதை இந்திய அளவில் பின்பற்றுவோம்.

வேட்பாளர்கள் நம் கூட்டணி வெற்றி பெறுமா என்று நினைக்க வேண்டாம். நாம் ஒன்றிணைந்ததே வெற்றி பெற்றதாக அர்த்தம். மற்றவர்கள் பணம் கொடுக்கிறார்கள். பொருள் கொடுக்கிறார்கள். நாம் எதுவும் செய்யாமல், மக்கள் நமக்கு ஓட்டு போடுவார்களா, ஜெயிப்போமா என்று என்ன வேண்டாம். நீங்கள் உங்கள் வார்டில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்காளர்களை சந்தித்து ஒருவருக்கு இரண்டு பிட் நோட்டீஸ் வீதம் கொடுத்து வாக்கு கேட்டாலே போதும். மற்றவர்களை பற்றி நீங்கள் நினைக்க வேண்டாம். நாம் தான் வெற்றி வேட்பாளர். நாம் வெற்றி பெற்று விட்டோம் என்ற எண்ணம் எந்த நேரத்திலும் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் ஜெயிப்பது உறுதி.

அனைத்து கட்சிகளும் தனித்தனியாக நிற்பதால் கட்டாயம் ஓட்டுகள் சிதறும். நம் கூட்டணி வேட்பாளர் தான் மேயர். இதை மாற்ற முடியாது. இன்று முதல் உங்களுக்கு நவராத்திரி என்று வைத்துக்கொள்ளுங்கள். தேர்தல் அன்று தான் தசரா விழா. அதுவரை இரவு பகல் பாராமல் சென்று வாக்காளர்களை சந்தியுங்கள். வெற்றி நமக்கே.

சேரியில் பிறந்த நான், என்னுடைய குடும்ப சூழ்நிலைக்கும், பொருளாதார வசதிக்கும் எம்பியாகி நாடாளுமன்றத்திற்கு போவேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. நான் பார்த்து வந்த அரசு வேலையில் கிடைத்த சம்பளத்தில் தான் தமிழ்நாடு முழுக்க கட்சியை வளர்க்க பாடுபட்டேன். ஐயா மூப்பனாரின் அறிவுரைப்படி விருப்பமில்லாமல் அந்த வேலையை வேண்டாம் என்று எழுதிகொடுத்துவிட்டு முழு மூச்சுடனும், நம்பிக்கையுடனும் முயற்சித்தேன். அதனால் தான் நான் இந்த நிலைமைக்கு வரமுடிந்தது. ஆகவே வேட்பாளர்களாகிய நீங்களும கடினமாக உழைத்து முழு நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்றார்.

கையடக்க தொலைபேசியில் ஆபாச காட்சிகளை வைத்திருந்தவருக்கு அபராதம்


கையடக்க தொலைபேசியில் ஆபாச காட்சிகளை பதிவு செய்து வைத்திருந்த இளைஞர் ஒருவருக்கு கண்டி பிரதான நீதவான் எஸ்.எம். யூ. கரல்லியத்த 2 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்தார்.

கண்டி மாத்தளை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இச் சந்தேக நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்து இன்று கண்டி நீதவான் முன் ஆஜர் செய்தபோதே குறித்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ரஜினியை சந்திக்க காத்திருக்கும் சைதைதுரைசாமி


திமுக, அதிமுக என்ற கட்சிக் கரைகளைக் கடந்து, தங்களின் வசிப்பிட சூழல், அந்தப் பகுதி மக்களுக்கு எது சரி என்பதையெல்லாம் உணர்ந்து ரஜினி ரசிகர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த உள்ளாட்சித் தேர்தலில், சைதை பகுதியைச் சேர்ந்த மன்றப் பொறுப்பாளரான சைதை ரவி, தனது ஆதரவை சென்னை மேயர் பதவிக்குப் போட்டியிடும் சைதை துரைசாமிக்கு தெரிவித்துள்ளார்.

சைதை ரவியுடன் உள்ள ஏராளமான ரசிகர்களும் துரைசாமிக்கே தங்கள் ஆதரவு என்றதோடு, களத்தில் இறங்கி வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

விரைவில் ரஜினியைச் சந்தித்து வாழ்த்து பெற அனுமதி கோரியுள்ளார் சைதை துரைசாமி.

முன்னொரு சந்திப்பில் ரஜினி -சைதைதுரைசாமி

ஷங்கர் இயக்க, அஜீத் நடிக்க இந்தியன் -2? என்ன சொல்கிறார் ஏஎம் ரத்னம்?


பில்லா 2 நடித்துக் கொண்டிருக்கும் அஜீத்தின் அடுத்தபடம் அநேகமாக இந்தியன் 2 ஆக இருக்கலாம் என்கிறது கோடம்பாக்கம் வட்டாராம்.

இந்தியன் படத்தின் இறுதியில், அதன் அடுத்த பாகம் வரப்போவதை இயக்குநர் ஷங்கர் சூசகமாக குறிப்பிட்டிருப்பார். இந்தப் படத்தை தயாரித்த ஏஎம் ரத்னம்தான், அடுத்து அஜீத்தை வைத்து படம் தயாரிக்கிறார்.

அதேபோல, பாய்ஸ் சமயத்தில் மனக்கசப்பு ஏற்பட்டாலும், ரத்னத்துக்கு இன்னொரு படம் பண்ணித் தருவதாக இயக்குநர் ஷங்கரும் உறுதி தந்திருந்தார்.

எனவே இதுவரை நடக்காமல் இருந்த அஜீத் - ஷங்கர் காம்பினேஷனை இந்த முறை சாத்தியமாக்கிவிடலாம் என ரத்னம் முயற்சிப்பதாகவும், அது இந்தியன் -2 ஆக மலரலாம் என்றும் தகவல் பரபரக்கிறது. அன்னா ஹஸாரே விவகாரம் படுபாப்புலராக உள்ள இந்த நேரத்தில் இந்தியன் 2 எடுப்பது வியாபாரத்தில் அனல் பறக்க வைக்கும் என்பதால் இந்த பேச்சு.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஏ எம் ரத்னத்தை தொடர்பு கொண்டு விசாரித்தோம். "பேசிக்கிட்டிருக்கோம்," என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தவரை, இந்தியன் -2 உண்மையா என்று மட்டும் சொல்லுங்க என்றோம்.

"எதுவும் நடக்கலாம். இந்தியன்- 2 கூட நல்லாதான் இருக்குல்ல," என்றார் அப்பாவியாய்.

கமல்ஹாசன், சுகன்யா, மனீஷா கொய்ராலா நடித்து வெளியான தமிழில் புதிய புரட்சி படைத்த படம் இந்தியன். இப்படத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் தாத்தா வேடம் வெகு பிரபலமானது. இப்படத்தில் லஞ்சம், ஊழலை எதிர்த்துப் போராடும் இந்தியன் தாத்தா வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது நினைவிருக்கலாம்.

எல்லாம் சரி, கமல்ஹாசன் தரித்த வேடத்தை தாங்கும் அளவுக்கு அஜீத்துக்கு பலம் இருக்கிறதா?

தீபாவளி ரேஸிலிந்து விலகின தனுஷ், சிம்பு படங்கள்!


தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனுஷின் மயக்கம் என்ன மற்றும் சிம்புவின் ஒஸ்தி படங்கள், தியேட்டர் பற்றாக்குறை மற்றும் கடும் போட்டி காரணமாக விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு விஜய் நடித்த வேலாயுதம், சூர்யா நடித்த ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கியிருந்த மயக்கம் என்ன, தரணி இயக்கத்தில் சிம்பு நடித்த ஒஸ்தி போன்றவையும் தீபாவளித் திரை விருந்தாக வரும் என்று கூறப்பட்டது.

ஆனால் பெரும்பாலான திரையரங்குகள் ஏழாம் அறிவு மற்றும் வேலாயுதம் படங்களுக்கே ஒதுக்கப்பட்டுவிட்டதால் இப்போது மற்ற இரு படங்களும் வெளியாவது கடினமாகிவிட்டது.

நான்கு பெரிய படங்கள் போட்டியிட்டால் தேறுவது கடினம் என்பதால், மயக்கம் என்ன படத்தை தனியாக வெளியிடப் போவதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். சிம்பு படத்துக்கும் அதே நிலைதானண். மேலும் இந்தப் படத்தில் ஒரு பாடல் வேறு இன்னமும் முடியவில்லையாம். எனவே இந்தப் படங்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ரா ஒன்னுக்கு கணிசமாக திரையரங்குகள் கிடைத்துள்ளன.

இந்தி பிதாமகனில் ரித்திக், சைப் அலி கான்?


தேசிய விருது பெற்ற பிதாமகன் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் ரித்திக் ரோஷன், சைப் அலி கான் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

சீயான் விக்ரம், சூர்யா, சங்கீதா, லைலா நடித்த பிதாமகன் தேசிய விருது வாங்கிய படம். ஒரு பாட்டுக்கு மட்டும் வந்தாலும் சிம்ரன் நச்சென்று நடனம் ஆடி அசத்தியிருப்பார். இந்த படம் கடந்த 2003-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. விக்ரம் இப்படத்தில் பேசாமல் தன் நடிப்பால் நம்மையெல்லாம் அவரைப் பற்றி பேசவைதத்தார்.

இப்படிப்பட்ட பிதாமகன் தற்போது இந்திக்குப் போகிறது. இப்போதெல்லாம் தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்ய பாலிவுட் ஆர்வம் காட்டி வருகின்றது. கஜினி, காக்க காக்க, சிங்கம் போன்ற படங்கள் இந்திக்குப் போய் அங்கும் ஹிட்டானது.

தற்போது அந்த வரிசையில் பிதாமகனும் சேர்கிறது. விக்ரம் நடித்த சேது இந்தி ரீமேக்கில் சல்மான் நடித்தார். தற்போது பிதாமகன் படத்தின் உரிமையைப் பெற ஸ்ரீதேவி கணவர் போனி கபூர், வஷு பாக்னானி, டேவிட் தவான் ஆகியோரெல்லாம் போட்டி போட இறுதியில் இயக்குனர் சதீஷ் கௌஷிக் சத்தமில்லாமல் உரிமையை வாங்கிவி்ட்டார்.

அவர் இந்த படத்தில் ரித்திக் ரோஷன், சைப் அலி கான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார். இன்னும் அவர்களிடம் இது குறித்து அவர் கேட்கவில்லையாம்.

அப்போ சங்கீதா, லைலா கதாபாத்திரங்களில் யார் நடிக்கப் போகிறார்கள்?. சிம்ரன் ஆடிய ஜிங்கிள் டான்ஸை ஆடப் போவது யார்...!!

குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 24ம் ஆண்டு நினைவு நாள்

குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 24ம் ஆண்டு நினைவு நாள்.

இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் அப்துல்லா, ரகு, நளன், பழனி, மிரேஸ், றெஜினோல்ட், தவக்குமார், அன்பழகன், கரன், ஆனந்தக்குமார் ஆகியோரின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.











Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா