Saturday 1 October 2011

வவுனியா அங்காடிகளின் அவலம். பொருத்தமான இடம்கோரி நகரில் ஆர்ப்பாட்டம்.


வவுனியா தெருவோரங்களில் வியாபாரம் செய்யும் மூவினத்தையும் சேர்ந்த அங்காடிகள் வவுனியா நகர சபைக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். வவுனியாவில் பன்னெடுங்காலங்களாக மேற்படி வியாபாரத்தினையே வாழ்வாதாரமாக கொண்டுவாழ்ந்து வரும் இவர்கள் மீது கடந்த காலங்களில் நகர சபையின் பொது சுகாதார உத்தியோகித்தர்கள் கடும் அழுத்தத்தினை பிரயோகித்து வருவதாகவும், இதற்கு முடிவு வேண்டுமெனவும் அவர்கள் சுலோகங்களை தாங்கி நின்றனர். 

அங்காடிகள் நுகர்வதற்கு ஒவ்வாத உணவினை விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் குற்றஞ்சுமத்தப்படுகின்றது. 

வவுனியா வைத்தியசாலை அண்மித்த பகுதி தொட்டு நகரெங்கும் வியாபாரத்தில் ஈடுபடும் தாம் கடும்சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும், பல சிரமங்களுக்கு உட்படுத்தபடுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் நகர சபையினர் தமக்கு பொருத்தமான இடமொன்றை ஒதுக்கி தரவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இவ்விடத்திற்கு வந்த வவுனியா மாநகர சபையின் பிரதி மேயர் ரதன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசியதுடன் அவர்களுக்கு சாதகமான தீர்வொன்றினை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார். 

வவுனியா நகரசபையின் தலைவராக கனகரட்ணம் உள்ளபோது, பிரதி மேயரான ரதன் அவ்விடத்திற்கு வந்தமையையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை காட்டியுள்ளனர். 

ரதன் தலைமைக்கு கட்டுப்படாதவராக சகலவிடயங்களிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளையே மேற்கொண்டுவருவதாகவும் ரதனின் எல்லைகடந்த செயற்பாடுகள் குறித்து நகர சபையிலுள்ள எதிர்கட்சி ஆழும் கட்சி இருதரப்பினருமே விசனம் அடைந்துள்ளனர். 

முன்னாள் மேயர் நாதன் ராஜனாமா செய்து சென்றதற்கு ரதனின் ஒவ்வாத செயற்பாடுகளும் காரணம் என அச்சந்தர்ப்பத்தில் பேசப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 

நாதன் ராஜனாமா செய்தபின்னர் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் நின்ற ரதனை தலைவர் பதவிக்கு நியமிக்காமல் விருப்பு வாக்குகளில் பின்னி லையில் உள்ள கனகரட்ணத்தை நியமித்ததற்கு ரதனின் செயற்பாடுகளே காரணம் என த.தே.கூ வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. 

மேற்படி ஆர்ப்பாட்டத்தினை வவுனிய சுயதொழில் செய்வோர் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. 














ராணா கைவிடப்பட்டது: ரஜனி, ரவிக் குமார் தீர்மானம்


  கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிக்கவிருந்த ராணா திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணா படப்பூஜையின் போதே ரஜனி நோய்வாய்ப்பட்டதுடன் அவரது உடல் நிலை மோசமடைந்தது.

இதன் பின்னர் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் சென்று சில மாதங்களின் பின்னர் இந்தியாவிற்கு திரும்பினார்.

அவரது உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தினால் இப்படம் கைவிடப்படுமென ஆரம்பம் முதலே செய்திகள் வெளியாகியிருந்தன.

இத்தகவல் உறுதி செய்யப்படாத நிலையில் தற்போது ரஜனி கே.எஸ். ரவிக்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இதன் போது இப்படம் நிறைவடைய 1 1/2 வருடங்கள் வரை தேவையென்பதனால் தற்போதைக்கு ரஜனியால் அது சாத்தியமில்லையென்பதனால் இப்படத்தினைக் கைவிடும் நிலைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது,

எனினும் ரஜனி கே.எஸ். ரவிக்குமாருடன் இணைந்து வேறு படமொன்றில் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் படப்பிடிப்பு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் ஆரம்பமாகலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு சிலதினங்களில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வறுமையில் வாழும் மக்களின் வீடுகளை உடைத்து அக்காணிகளை வெள்ளைக்காரர்களுக்கும் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் விற்றுத் தீர்க்க அரசு திட்டம்:



வீடுகளை உடைக்கும் அரசாங்கத்தின் திட்டம் தேர்தல் முடியும்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர அது முற்றாக கைவிடப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். காணிகளையும் வீடுகளையும் பாதுகாப்பதா அல்லது சாதாரண மக்களை நசுக்கி அவர்களின் காணிகளை வெள்ளைக்காரர்களுக்கு விற்கும் திட்டத்தை வெற்றி பெறச் செய்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டுமென்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
பிட்டகோட்டே ஒபேசேகரபுரவில் புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கொழும்பு நகரில் வீடுகளை உடைக்க மாட்டோமென காலை தொடக்கம் இரவுவரை அரசாங்கம் பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே பிரதேசங்களில் என்ன நடக்கின்றது. இவ் பிரதேசங்களில் 300 வீடுகளை உடைத்து மக்களை வெளியேற்றுவதற்கான அனுமதி கோரி நகர அபிவிருத்தி அதிகார சபை வழக்கு தாக்கல் செய்துள்ளது.
அத்தோடு 2500 வீடுகளை உடைப்பதற்காக வழக்கு தாக்கல் செய்வது தேர்தல் இடம்பெறவுள்ளதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் வீடுகளை உடைக்க மாட்டோம் என்கிறது. அப்படியானால் ஏன் நகர அபிவிருத்தி அதிகார சபை வீடுகளை உடைக்க வழக்கு தொடர வேண்டும்.
நகர அபிவிருத்தி அதிகார சபையென்பது தனியானதொரு ராஜ்ஜியமா? அரசாங்கத்தின் அனுமதியின்றி எப்படி வீடுகளை உடைக்க முடியும்.
உழைக்கும் வர்க்கம், நடுத்தர குடும்பங்கள் வாழும், வீடுகள் வறுமையில் வாழும் மக்களின் வீடுகளை உடைத்து அக்காணிகளை வெள்ளைக்காரர்களுக்கும் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் விற்றுத் தீர்க்க ஐக்கிய முன்னணி அரசு திட்டங்களை தயார்படுத்தியுள்ளது. இந்தத் துர்ப்பாக்கிய நிலையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு இரண்டு வழிமுறைகளே உள்ளது.
பொது மக்களின் வாழும் உரிமையை பாதுகாப்பதா அல்லது சாதாரண மக்களை நசுக்கி கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, மொறட்டுவை, கொலன்னாவை பிரதேசங்களில் வாழும் அப்பிரதேசங்களை வெள்ளைக்காரர்களின் நகரமாக்குவதா என்பதுவேயாகும்.
மக்களின் வாழும் உரிமையை பாதுகாப்பதற்கு மக்களுக்கு உள்ள ஒரே தெரிவு ஐ.தே. கட்சியாகும். மக்களை அவர்கள் வாழும் பிரதேசங்களிலேயே நாம் வாழ வைப்போம். இவை தேவையில்லை.யென்றால் எந்தக் கட்சிக்காவது வாக்களிக்கவும்.
கோட்டை நகர சபை ஆட்சியதிகாரத்தை ஐ.தே. கட்சி கைப்பற்றியதும் முதல் வேலை அரசாங்கத்தின் வீடுகளை உடைக்கும் திட்டத்திற்கு எதிராக சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதாகும். ஐ.தே. கட்சியிலுள்ள சட்டத்தரணிகளுடன் இணைந்து வீடுகளை உடைப்பதற்கு எதிராக போராடுவோம்.
மாநகர சபையில் உத்தரவைப் பெற்ற பின்னர் வீடுகளை உடைப்பதை எம்மால் தடுக்க முடியும். ஏழைகளின் வீடுகளை ஏன் உடைக்க வேண்டுமென நான் அரசாங்கத்திடம் கேட்கிறேன். அம் மக்களுக்கு அவர்களது வீடுகள் எவ்வளவு பெறுமதிமிக்கவை என்பது அரசாங்கத்திற்கு தெரியாது.
கோட்டே நகரத்தை ஐ.தே. கட்சியே அபிவிருத்தி செய்தது. எனவே இது தொடர்பில் பேசுவதற்கு எமக்கு உரிமை உண்டு:
இப்பிரதேசத்தில் பாராளுமன்றத்தை நிர்மாணித்தபோது பெரும் தொகைப் பணத்தை செலவழித்து பாராளுமன்றம் தேவையா என அன்று அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்க கேள்வியெழுப்பினார். ஆனால் இன்று இதனாலான பலன்களை மக்கள் அனுபவிக்கின்றனர். இப்பிரதேசம் அபிவிருத்தியடைந்துள்ளது.
இசுறுபாய, செத்சிறிபாய என அரசாங்க கட்டிடங்கள், ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை, மஹரகம இளைஞர் சேவைகள்மன்றம் போன்ற பல்வேறு கட்டிடங்கள் ஐ.தே. கட்சி ஆட்சியில் பிரேமதாஸாவால் நிர்மாணிக்கப்பட்டது.
கடந்த ஆறு வருடங்களாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் கோட்டேயில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டனவா? ஆனால் ஒன்றைச் செய்தார்கள் நகரை அபிவிருத்தி செய்வது அல்ல பணம் சம்பாதித்தனர். செல்வந்தர்களானார்கள்.
இறுதியில் என்ன நடந்தது. 2009இல் பாராளுமன்றமும் வெள்ளத்தால் மூழ்கியது. இதனை தடுப்பதற்கு நாம் திட்டத்தை தயாரித்து கொடுத்ததால் இன்று பாராளுமன்றம் வெள்ளத்தினால் மூழ்குவது தடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரை வர்த்தக நகரமாக அபிவிருத்தி செய்யும் அதேவேளை ஸ்ரீ ஜயவர்த்தனபுரவை இணை நகரமாக அபிவிருத்தி செய்வோம். தேர்தலின் பின்னர் இதற்காக மக்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வோம்.
அதற்கு முன்பதாக இப்பிரதேசத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவோம். கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு முன்பு மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். நகர அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களுக்கு வழங்கப்படும் பத்து மாத கடன் வழங்கும் நிதியம் பாதுகாப்பு அமைச்சு பொறுப்பேற்றுள்ளது.
அந்தளவிற்கு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் ஐ.தே. கட்சி ஆட்சியதிகாரம் உள்ள நுவரெலியா மாநகர சபையே அதிகளவில் விருதுகளை பெற்றுள்ளது. ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய நான் பிரதமராக பதவி வகித்தபோது நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
ஆனால் இன்று அவ்வாறான நிதியுதவிகள் கிடைப்பதில்லை. அரசாங்கம் வெளிநாடுகளுடனான நட்புறவுகளை முறித்துக் கொண்டுள்ளது என்றார்

இலங்கையின் போர்க்குற்றம் விசாரணை தேவை!– பிரித்தானிய நிழல் அமைச்சர்

பிரித்தானியாவின் நிழல் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் அலெக்சாண்டர் (Douglas Alexander) இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று கோரியுள்ளார்.



2009 ஆம் ஆண்டு இறுதிக்காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற போரின் போது, இலங்கைப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டடும் என்று அவர் கோரியுள்ளார்.

கடந்த 28 ஆம் திகதியன்று தொழில்கட்சிக்கான தமிழர்களின் மாநாடு நடத்தப்பட்டது.

இதன்போது கருத்துரைத்த டக்ளஸ் அலெக்சாண்டர், இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாக கூறப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள், சுதந்திரமாகவும், சாட்சிபாதுகாப்புக்காகவும் இடம்பெறவேண்டுமானால் அது, சர்வதேச ஆணைக்குழுவின் முன்னால் இடம்பெறவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் தலையிடுவதாக அது அமையாது.

எனினும் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு, தமது பணிகளை சர்வதேச ஆணைக்குழுவின் பங்களிப்புடன் மேற்கொள்ளவேண்டும் என்றே தாம் வலியுறுத்துவதாக டக்ளஸ் அலெக்சாண்டர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் 50 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் கருத்துரைத்த அவர், குறித்த 50 பேரும் இலங்கையில் சித்திரவதைக்கு உட்படு;த்தப்படமாட்டார்கள் என்பதற்கான உறுதியை பிரித்தானிய அரசாங்கம் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடர்;ந்தும் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

இடம்பெயர்ந்தோரை உரிய முறையில் இன்னும் இலங்கை அரசாங்கம் குடியமர்த்தவில்லை.

பிரித்தானியாவில் இயங்கும் சிறந்த ஊடகத்துறை காரணமாக செனல் 4 காணொளி மூலம் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்கள் வெளிக்கொண்;டு வரப்பட்டன.

இந்தநிலையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கையில் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்படவும் சமாதானம் ஏற்படுத்தப்படவும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் டக்ளஸ் அலெக்சாண்டர் கேட்டுக்கொண்டார்

லெப்.கேணல் அண்ணாச்சி அவர்களிற்க்கு 11ம் ஆண்டு வீரவணக்கம்


01.10.1999 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் அண்ணாச்சி அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
அவர்களிற்க்கு எமது வீரவணக்கம்.

வரட்சியில் சிக்கியுள்ள மட்டக்களப்பு மாவட்டம்


எட்டு மாதங்களின் முன்னர் பொன்னம்பலம் தனேஸ்வரன் தனது பணிக்குச் செல்லும் போது படகை மட்டும் பயன்படுத்தியதுடன் நின்றுவிடாமல், வெள்ளப் பெருக்கால் வரும் ஆபத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உயிர்காப்பு அங்கியையும் அணிந்து கொண்டே சென்றிருந்தார்.

சிறிலங்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தொலை தூரப் பிரதேசமான வெருகல் பிரதேச செயலர் பிரிவின் அரசாங்க அதிபராகக் கடமையபற்றும் தனேஸ்வரன், இவ்வாண்டின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இரு வாரங்கள் தொடர்ந்து இடம்பெற்ற வெள்ளப் பெருக்கால் சூழப்பட்ட அந்த நாட்கள்பற்றித் தெரிவித்தார்.

டிசம்பர் 2010ம் ஆண்டிற்கும் இவ்வாண்டின் பெப்ரவரி மாதத்தின் ஆரம்ப நாட்களுக்கும் இடையில், தலைநகர் கொழும்பிலிருந்து 270 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இவ் வெருகல் பிரதேசமானது ஒரு ஆண்டில் பெறுகின்ற மழைவீழ்ச்சியைப் பெற்றுக் கொண்டது.

ஆனால் தற்போது பாலைவனத்திற்குள் தான் அகப்பட்டுவிடுவேனோ என தனேஸ்வரன் கருதுகிறார். "கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கின் பின்னர் இப்பிரதேசத்தில் மழை பெய்யவில்லை" என தனேஸ்வரன் தெரிவிக்கிறார்.

தற்போது இப்பிரதேச செயலர் பிரிவில் உள்ள தொலைதூரக் கிராமங்களுக்குத் தேவையான நீரை வழங்குகின்ற பணியைத் தான் ஆற்றவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளையில் தனேஸ்வரனின் செயலகத்திலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Thanamallvilla என்ற இடத்தில் சிறுவர்களுக்கான இல்லம் ஒன்றை நடாத்திவரும் கத்தோலிக்க மதகுருவான மொடஸ்ரஸ் பெர்னாண்டோ என்பவர் நீர்ப் பற்றாக்குறையால் பல்வேறு கடினங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்தார்.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வறண்ட அல்லது நீர்வற்றிப் போன ஆற்றுப் படுக்கைகளில் பெரிய குழிகளைத் தோண்டி அவற்றுள் திறந்த வாயைக் கொண்ட உருளைகளைப் புதைத்து இரவு நெடுநேரம் வரை அதிலிருந்து ஊறுகின்ற நீரைப் பெற்றுக் கொள்வதற்காக காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் பெர்னாண்டோ தெரிவித்தார்.

"இவ்வாறு இரவு நெடுநேரம் வரை காத்திருந்து நீரைப் பெற்றே எங்களால் குளிக்க முடிகிறது" எனவும் அவர் தெரிவித்தார்.

சிறிலங்காவின் கிழக்குப் பிரதேசமானது பல்வேறு விதமான பருவகால மழைகளைப் பெறுகின்ற இடமாகும். சிறிலங்காத் தீவில் ஏற்படும் காலநிலை மாற்றமானது இதன் கிழக்கு மற்றும் மத்திய பிரதேசங்களில் அதிக தாக்கத்தை விளைவிப்பதுடன், அங்கு மேற்கொள்ளப்படும் நெற்பயிர்ச் செய்கையிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இவ்வாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வெருகலில் 7000 ஏக்கருக்கும் மேற்பட்ட பிரதேசத்தில் பயிரிடப்பட்ட நெல் உற்பத்தியானது அழிவடைந்ததாக தனேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பயிரிடப்பட்ட நெல்லானது முற்றிலும் வெள்ளத்தால் அழிவடைந்ததாக விவசாயத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்பார்க்கப்பட்ட 2.7 m மெற்றிக் தொன் நெல் அறுவடையில் 700,000 மெற்றிக் தொன் நெல்லானது வெள்ளப் பெருக்கால் அழிவடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நெல் அறுவடையின் போது தாக்கத்தைச் செலுத்தும் காலநிலை மாற்றம் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதுடன், இதனால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

"நெல்லானது பிரதான அறுவடைப் பயிராக உள்ளது. அத்துடன் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு நெல்லரிசியானது மிகப் பிரதானமானதாக உள்ளது" என சிறிலங்காவில் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் சுயாதீன நிறுவனமான வறுமைக்கான மாற்றுச் செயற்பாட்டு மையத்தின் ஆராய்ச்சியாளரான அமிலா பாலசூரியா தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் 800,000 இற்கும் மேற்பட்ட நெல் அறுவடையாளர்கள் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 50 ஆண்டுகளில் பதிவாக்கப்பட்ட வடகிழக்குப் பருவக்காற்றின் போது பெறப்படும் மழைவீழ்ச்சியின் போக்கானது மிகவும் மாறுபட்டதாக உள்ளது. இப்பருவக்காற்றின் மூலம் பெறப்படுகின்ற மழைவீழ்ச்சியானது சிறிலங்காவின் பிரதான உற்பத்தியான நெற் பயிர்ச்செய்கைக்குத் தேவையாக உள்ளது.

தற்போது கிழக்கு மாகாணத்தில் நிலவும் வெப்பநிலையானது 35 பாகை செல்சியசிற்கு அதிகமாக உள்ளது. இந்நிலையில் வெப்பநிலையின் அளவானது அதிகரிக்கப்படுமிடத்து இங்கு உற்பத்தி செய்யப்படும் நெல்லின் அளவானது வழமையாக ஏப்ரல் மற்றும் செப்ரெம்பர் மாதங்களிற்கிடையில் பயிரிடப்படும் இரண்டாவது நெற் போகத்தின் போது கிடைக்கும் நெல்லின் அளவை விடக் குறைவாகவே இருக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், காலநிலையின் தாக்கமானது தேசிய விவசாயத்தில் ஏற்படுத்தும் விளைவை எவ்வாறு சாதகமாக்கிக் கொள்ளலாம் என்பது தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் துறைசார் வல்லுனர்கள் கூடி ஆராய்ந்துள்ளதாக பாலசூரியா தெரிவித்தார்.

எதுஎவ்வாறிருப்பினும், பல்வேறு அமைச்சுக்களுக்கிடையில் இவ்வாறான செயற்பாடுகளை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துகின்ற வேலைத்திட்டமானது பற்றாக்குறையாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

"இந்நிறுவனங்களுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது" எனவும் ஆராய்ச்சியாளரான பாலசூரியா சுட்டிக்காட்டினார்.

செய்தி வழிமூலம்: Alertnet // Amantha Perera
மொழியாக்கம்: நித்தியபாரதி/"புதினப்பலகை"

கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 3)

கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்... இப்போதும் என் மனதுக்குள் அட்சதை தூவும் சத்தம் கேட்கிறது. நானும் நளினியும் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டு புதுமணத் தம்பதியாக சென்னை திரும்பினோம்.

மனதுக்குள் ஆயிரமாயிரம் கற்பனைகள். சினிமா காதலுக்கே உரிய கனவுகளைப் போல் நிறைய குழந்தைகளைப் பெற்றுக்​கொள்ளவும், கொஞ்சி மகிழவும் ஆசைப்பட்டோம். ஆனால், தலைப்பிள்ளையைத் தக்கவைக்கக்கூட போராட வேண்டிய நிலை வரும் என்பதை எந்த சொப்பனமும் எங்களுக்குச் சொல்லவில்லை. அதிகாரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு நானும் நளினியும் மசியாத நிலையில்... அவர்களின் கவனம் எங்களின் இரண்டரை மாத சிசுவின் மீது திரும்பியது.

'இதுவரை நடந்த விசாரணைகள் எல்லாம் சாதாரணம்தான்... இனிதான் மொத்தச் சித்ரவதை​களும் இருக்கு. மரியாதையா இப்பவே உன் வயித்தில வளர்ற குழந்தையைக் கலைச்சிடு. இல்லைன்னா, நாங்களே கலைச்சிடுவோம். அது இன்னும் மோசமா இருக்கும்!’ என அதிகாரிகள் மிரட்ட, நளினிக்கு குலைநடுங்கிவிட்டது. இதுபற்றி அவள் என்னிடம் கலந்து ஆலோசிக்கக்கூட வழி இல்லாத அளவுக்கு பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகப்படுத்தினர்.

'உங்களோட அத்தனை சித்ரவதை​களையும் நாங்க பல்லைக் கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கிறதுக்குக் காரணமே, என் வயித்தில வளர்ற சிசுதான். நீங்க என்ன சொன்னாலும் அதைக் கலைக்க மாட்டேன்!’ என முடிந்த மட்டும் போராடி இருக்கிறாள் நளினி.

அடுத்த கட்டமாக இன்னொரு முயற்சியையும் அதிகாரிகள் நடத்திப் பார்த்தார்கள். என் மாமியார் பத்மா அவர்களையும், மைத்துனர் பாக்கியநாதனையும் மிரட்டி, 'குழந்தையை அழிக்கச் சொல்லுங்கள். இல்லையேல், நாங்கள் சொல்வதற்கு எல்லாம் ஒப்புக்கொள்ளச் சொல்லுங்கள்!’ எனச் சொல்லி இருக்கிறார்கள். இரண்டரை மாத சிசுவைச் சிதைக்க அதிகாரிகளுக்கு என்ன ஒரு ஆர்வம்?

சிசுவை அழிக்க மட்டும் அல்ல... என்னையும் நளினியையும் கணவன் மனைவி இல்லை என்று போலியாக நிரூபிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டனர். நாங்கள் சைதாப்பேட்டையில் கைதானபோது, நளினியின் கழுத்தில் தாலி இருந்தது. பெர்சனல் சர்ச் மெமோவில் (Ex.C.18 என்ற Personal Search memo) அந்தத் தகவல் பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீஸ் கஸ்டடியில், 'நாங்கள் இருவரும் கணவன் - மனைவி’ எனச் சொல்லி இருக்கிறோம். ஜுடீஷியல் கஸ்டடிக்கு வந்தவுடன், 'நாங்கள் இருவரும் கணவன் மனைவி’ எனக் குறிப்பிட்டு பல மனுக்களை சிறப்பு நீதிமன்றத்துக்கும், சிறை அதிகாரிகளுக்கும் பல்வேறு பரிகாரம் வேண்டி எழுதி உள்​ளோம். இவ்வளவு இருந்தும் சி.பி.ஐ., எஸ்.ஐ.டி. அதிகாரிகள் என் மனைவிக்கு எதிராகத் தயார் செய்த ஆவணங்களான எக்ஸ்.பி. 75, 76, 77 (Ex.p.75, 76, 77) கன்ஃபெஷனல் ஸ்டேட்மென்ட் (Confessional statement), 78, 634, 1206, 1209, 1422, 1424, 1427, 1428 ஆகிய அனைத்திலும் என் மனைவியை மிஸ் நளினி என்றுதான் குறிப்பிட்டு உள்ளனர். இது எத்தகைய குரூர வில்லத்தனம்?

எப்படியாவது என் மனைவியை என்னிடம் இருந்து பிரித்துவிடலாம் என்று நம்பியே முன்ன​தாகவே ஆவணங்களில் நளினி கல்யாணம் ஆகாதவர்போல் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், அந்த முயற்சியிலும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. ஒரு கொலையை விசாரிக்க வேண்டியவர்கள், ஒரு சிசுவை அழிக்கவும், ஒரு குடும்பத்தைச் சீரழிக்கவும்தான் போராடினார்கள்.

அடுத்து, பத்திரிகையாளர்களிடம் அவர்கள் பந்திவைத்த செய்திதான் குரூரத்தின் உச்சம். 'முருகனும் நளினியும் திருமணம் செய்துகொள்ளாமலே உடல் உறவு வைத்துக்கொண்டவர்கள்’ என தாம்பத்​தியப் புனிதத்தைத் தலை முழுகும் கொடூரத்தைப் பரப்பினார்கள். என் மனைவியை வேறு சில ஆண்களுடன் தொடர்புபடுத்தியும் கொச்சைப் பரப்புதலில் குளிர் காய்ந்தார்கள். இவை குறித்​தெல்லாம் டிரையல் கோர்ட்டில் சி.ஆர்.பி.சி. செக்ஷன் 313-ன் கீழ் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் கண்ணீரோடு சொன்னோம். ஆனால், நிம்மதிக்காக ஏங்கிய எங்களின் குரல் நீதிமன்றத்தின் கம்பீரக் கதவைத் தட்ட முடியாமல் தோற்றுத் திரும்பின.

அடுத்தடுத்த நாட்களில் தினசரிகளைப் புரட்டி​னால், பக்கத்துக்குப் பக்கம் முருகனும் நளினியும்தான்... 'நளினியின் வயிற்றில் உள்ள குழந்தைக்குத் தகப்பன் யார்?’, 'புலிகளின் மூத்த தளபதிதான் நளினியின் காதலன்’ என நெஞ்சை நொறுக்கும் தலைப்புகள். எங்களுக்காக ஒரு குவளை நீர்கூட கொடுக்காத அதிகாரிகள் அந்த செய்திகளைத் தாங்கி வந்த தினசரிகளை வலிய வந்து கொடுத்தார்கள். அதைப் படித்துவிட்டு நாங்கள் துடித்த துடிப்பை ரசித்தார்கள். மனம் மரத்துப்போகிற அளவுக்கு அத்தனை அவதூறுகளையும் எழுதவைத்தார்கள். 'என்ன எழுதினாலும் சரி, நான் என் மனைவிக்கும், என் மனைவி எனக்கும் உண்மையாக இருக்கிறோம். இதை எந்தக் கொம்பனாலும் பிரிக்க முடியாது!’ என நெஞ்சுக்குள் தைரியம் வார்த்துக்கிடந்தோம். அப்போதுதான் அவதூறின் அடுத்தக் கட்டத் தாக்குதல் மீடியாக்களில் ஆரம்பித்தது. 'நளினியின் குழந்தையைக் கொல்ல முருகன் முயற்சி’ எனத் தலைப்பிட்டு, உள்ளே நா கூசும் கற்பனைகளைக் கடைவிரித்தனர்.

எழுத்தால் - பிரம்பால் - அவ​தூறால் - ஆணவத்தால் எங்களை அழிக்க அதிகாரிகள் தீட்டிய அத்​தனை திட்டங்களையும் தவிப்போடு தாங்கிக்கொண்டோம். 'இனி அழக் கண்ணீர் இல்லை’ என்கிற நிலையிலும், 'இனி எம் மீது பாய்ச்ச அதிகாரிகள் எங்காவது போய் சித்ரவதைகளைக் கற்றுக்கொண்டு வந்தால்தான் உண்டு’ என்கிற சகலத்​தையும் கடந்த சலிப்பும் எங்களை உறுதிகொள்ள வைத்தது.

இத்தனை தடைகளைத் தாண்டி, நளினியின் வயிற்றில் ஆரித்ரா பிறந்தாள். சிறைக்குள் பிறந்தது அவள் எந்தப் பிறவியில் செய்த பாவமோ... ஆனால், எங்கள் வயிற்றில் அவள் பிறந்தது பெரும்பாவம். சிறையில் குழந்தை பிறந்தால், பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்வது எமது சட்டரீதியான உரிமை. ஆனாலும், எமக்கு அது மறுக்கப்பட்டது. அதனால், ஆறு நாட்கள் தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தோம். கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு, பட்டினிகிடப்பது எத்தகைய கொடூரம் என்பதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். பால் வற்றிப்போனது; ஈரக்குலையின் ஈரம் இற்றுப்போய் தண்ணீருக்காக ஏங்கத் தொடங்கியது. தாயும் மகளும் மடிகிற நிலையானால் சிக்கல் வந்துவிடுமே எனப் பயந்து என் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் கொடுத்தார்கள். நாங்கள் கைது செய்யப்படுவதற்கு முன் இந்து திருமண சட்டப்படி செய்துகொண்ட திருமணத்தினை சட்டப்படி பதிவு செய்ய மறுத்த கதையும் நடந்தது. அதற்காக அடுத்தக் கட்ட உண்ணாவிரதம்!

பட்டினி கிடப்பதுதான் எமக்கான தீர்வைப் பெற்றுத் தரும் ஒரே ஆதாரமாக விளங்கியது. உடலை வருத்தி, உணவுக் குடலைச் சுருக்கி, நா வறண்டு, 'இதுதான் கடைசி நாளோ?’ எனக் கண்களுக்குள் பயம் படர்ந்து... மொத்தமாக 25 நாட்கள் உண்ணாவிரதம். சாகும் நிலை வரப்போகிறது எனத் தெரிந்த பிறகுதான், அதிகாரிகளின் மனதில் மாற்றம் பிறந்தது.

1995-ம் ஆண்டு எங்களுடைய திருமணத்தினை சட்டப்படி பதிவு செய்துகொண்டோம். 'குற்றவாளிகள் இல்லை’ எனப் போராடி இருக்க வேண்டிய நாங்கள், உண்மையான தம்பதி என்பதை நிரூபிக்கவும், எங்கள் மகளைக் காக்கவுமே படாத பாடுபட்​டோம்.

கருவிலேயே நினைத்துப் பார்க்க முடியாத அத்தனை கொடூரங்களையும் சந்தித்து​விட்ட என் மகள் ஆரித்ரா, இன்றைக்கு லண்டனில் பயோ மெடிக்கல் சயின்ஸ் முதல் வருடம் படிக்கிறாள். மிருகங்​களுக்கு மத்தியில் சிக்கிய சினை ஆடாக, வயிற்றுக்குள்வைத்து அவளை எப்படிப் பொத்திப்பொத்தி வளர்த்தோம் என்பதை இன்றைக்கு நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. வயிற்றுக்குள் இருந்தபோது மட்டும் அல்ல... வளர்ந்து ஆளாகி அவள் நிற்கும் வேளையிலும் 'மகளே...’ என வாய் நிறைய அழைக்க முடியாமலும், அவள் முகத்தைப் பார்க்க முடியாமலும் நாங்கள் படும்பாடு, ஆயிரம் தண்டனைகளுக்குச் சமம்!

எனக்கு தூக்குக்கான தேதி அறிவிக்கப்பட்டது குறித்து 'விகடன்’ நிருபர் ஆரித்ராவிடம் பேட்டி எடுத்தபோது, 'அப்பாவை முதல் முறையா சந்திச்சப்ப, 'ஏம்ப்பா இப்படிப் பண்ணினீங்க?’னு கேட்டேன். இன்னிக்குப் புரியுது... நான் கேட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு... அப்பா, என்னை மன்னிச்சிடுங்கப்பா’னு ஆரித்ரா பதில் சொல்லி இருந்தாள். ஒரு தாய், தகப்பனாக ஆரித்ராவுக்கு எதுவும் செய்ய முடியாமல், 'கொலைகாரனின் மகள்’ என்கிற பழிப் பெயரை வாங்கிக்கொடுத்த நாங்கள்தான் ஆரித்ராவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். எந்த சிசுவை அழிக்க நினைத்தார்களோ... அதுதான் இன்றைக்கு எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. அவள் உலகத்தின் ஏதோ ஒரு திசையில் இருந்தாலும், எங்களின் வாரிசாக இருக்கிறாள் என்கிற ஆறுதலே எமக்குப் போதும்.

காயங்கள் ஆறாது...

ஜூனியர் விகடன்

Friday 30 September 2011

கார்த்தி படத்தில் 'சர்ச்சை' நிகிதா!


கன்னட நடிகர் தர்ஷனின் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகை நிகிதா தற்போது கார்த்தியுடன் ஜோடி சேரவிருக்கிறார்.

கன்னட நடிகர் தர்ஷனின் குடும்பத்தில் குழப்பதை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கன்னட சினிமாவில் 3 ஆண்டுகள் நடிக்க நடிகை நிகிதாவுக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர் கன்னட பிரபலங்கள் குறுக்கீட்டால் தடை விலகியது. இந்நிலையில் படிக்காதவன், மாப்பிள்ளை ஆகிய படங்களை இயக்கிய சூரஜ்-ன் அடுத்த படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்கிறார் நிகிதா.

இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் கார்த்தியுடன் அனுஷ்கா நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக நிகிதா வருகிறார். இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகு இந்த படம் கிடைத்திருக்கிறதே, அதில் உங்கள் கதாபாத்திரம் பற்றி சொல்லுங்களேன் என்தற்கு,

நான் கிராமத்து பெண்ணாக வருகிறேன். தற்போதைக்கு அவ்வளவு தான் சொல்ல முடியும் என்றார்.

கார்த்தி தற்போது சகுணியில் நடித்து வருகிறார். அது முடிந்தவுடன் சூரஜ் தன் படத்தை துவங்குவார் என்று கூறப்படுகிறது.

தர்ஷன் பிரச்சனை முடிந்தபிறகு நிகிதாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்...

வாகை சூட வா - திரையில் ஒரு இலக்கியம்


-எஸ் ஷங்கர்

நடிப்பு: விமல், கே பாக்யராஜ், இனியா, தம்பி ராமையா, பொன்வண்ணன், தென்னவன், நம்பிராஜன்

இசை: டி ஜிப்ரான் (அறிமுகம்)

ஒளிப்பதிவு: ஓம்பிரகாஷ்

எழுத்து - இயக்கம்: ஏ சற்குணம்

தயாரிப்பு: எஸ் முருகானந்தம், என் பூரணா

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

மக்களை மகிழ்விப்பது வெகுஜன சினிமா. கூடவே மாற்றத்துக்கான சிறு வித்தையாவது பார்ப்பவர் மனதில் அது விதைத்துச் சென்றால் ஒரு படைப்பு என்ற அந்தஸ்தைப் பெறுகிறது. அந்த வகையில் சற்குணம் உருவாக்கியுள்ள வாகை சூட வா, 'சிறந்த படைப்பு'!

கொளுத்தும் வெயிலில் எங்கோ வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறோம். திடீரென்று வானம் கவிந்து, பெருமழை பிடித்துக் கொள்கிறது. மண் வாசம் மனதை நிறைக்க, சின்ன தளும்பலுடன் நினைவுகள் பின்னோக்கிப் போய் பால்ய மழைக்காலங்களையும், அந்தப் பருவத்தில் அனுபவித்து மகிழ்ந்த சின்னச் சின்ன சந்தோஷங்களையும் தொட்டுத் தடவி மகிழத் தொடங்கிவிடும். சற்குணத்தின் இந்த முயற்சியில் அந்த பழைய மனப்பதிவுகளைத் தடவிப் பார்த்த அனுபவம்!

சினிமாவின் முதல்காட்சி இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும், காதலர்கள் இப்படித்தான் பாடிக் கொள்ள வேண்டும், நகைச்சுவை இப்படித்தான் பித்துக்குளித்தனமாக இருக்கவேண்டும், க்ளைமாக்ஸ் இப்படித்தான் முடிய வேண்டும்... ம்ஹூம்... இந்த கோடம்பாக்க விதிகள் எதையும் கண்டுகொள்ளவில்லை இந்த மனிதர்!

திரையில் எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை. 'வாத்தியாரை' அடிக்கிறார் நம்பியார். மணலைக் குவித்து உட்கார்ந்து படம் பார்க்கும் கூட்டத்தில், தோளில் வேட்டைத் துப்பாக்கியோடு ஒரு நரிக்குறவர். வாத்தியாரை அடிக்கும் நம்பியாரை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 'வாத்தியாரே ஒதுங்கிக்கோ' என்று கூவியபடி திரையைச் சுடுகிறார் அந்த நரிக்குறவ ரசிகர். திரை எரிகிறது, அவர் மனம் குளிர்கிறது!

-அறுபது எழுபதுகளில் இந்தக் காட்சியை பார்த்திராத, அனுபவித்திராத சினிமா ரசிகர்களோ, டூரிங் டாக்கீசுகளோ அனேகமாக தமிழகத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை! அந்த யதார்த்தத்தோடு தொடங்கும் படம், இறுதிக் காட்சியில் அறியாமையின் இருளிலிருந்து விடுபட்ட சிறுவர்கள், தங்களை ஏய்க்கப் பார்த்தவனிடம் உழைப்புக்கான ஊதியத்தை எண்ணி வாங்கும் போது ஹீரோ ஆனந்தக் கண்ணீருடன் சிரிக்கிறாரே.... அதுவரை தொடர்கிறது... ஹேட்ஸ் ஆஃப் சற்குணம்!

1966. அரசு வேலை என்பது எட்டாக்கனியாக இருந்த காலகட்டம்.

'ஒரு சர்க்கார் உத்தியோகம் வேண்டும். அதற்கு முன் கிராம சேவக் தன்னார்வ அமைப்பு மூலம் ஏதோ ஒரு கிராமத்தில் தற்காலிக வாத்தியார் வேலை செய்தால் சொற்ப சம்பளமும் ஒரு சான்றிதழும் கிடைக்கும். இந்த சான்றிதழ் இருந்தால் அரசு வேலை எளிதில் சாத்தியம்,' - பத்திரம் எழுதி தன்னைப் படிக்க வைத்த அப்பாவின் (பாக்யராஜ்) இந்த யதார்த்தக் கனவை நனவாக்க கண்டெடுத்தான் காடு கிராமத்துக்கு வருகிறார் வேலுத்தம்பி (விமல்).

செங்கல் சூளையில் மண்ணோடு மண்ணாகக் கிடக்கும் மக்களின் வாரிசுகளுக்கு பாடம் சொல்லித் தர முயற்சிக்கிறார். அறியாமை இருளிலிருந்து அவர்கள் வெளிவராவிட்டாலும், படித்த பட்டணத்து இளைஞனான வாத்தியாரின் வெள்ளந்தித்தனத்தை தோலுரித்து விடுகிறார்கள்.

படித்தவன் பிழைப்பைக் கெடுக்கப் பார்க்கிறான் என்ற நினைப்பில், வாத்தியாரை 'சேர்த்துக் கொள்ளாமல்' இருக்கும் அந்த மக்கள், படிப்பறிவில்லாத தங்களை, ஒரு 'ஆண்டை' எப்படியெல்லாம் ஏமாற்றுகிறான் என்பதை உணர்ந்த கணத்தில், வாத்தியாரின் கைகளில் தங்கள் பிள்ளைகளை ஒப்புவிக்கிறார்கள். கிராமத்தில் குறும்புத்தனம் செய்த மழலைகள், மெல்ல மெல்ல பல்பம் வைத்து சிலேட்டில் கிறுக்க ஆரம்பிக்கிறார்கள். கூடவே வாத்தியாருக்கு ஆக்கிப் போட வந்து, தன்னை அவருக்குத் தரத் தயாராக நிற்கும் மதி (இனியா).

தனது கொத்தடிமைகள் புதிதாக கற்க ஆரம்பித்துள்ள கல்வி தனக்கெதிரான புரட்சிக் கேள்வியாக மாறும் நாள் நெருங்குவதை உணர்ந்த ஆண்டைக்கு ஆத்திரம் தாங்கவில்லை. அந்த மக்களையே அழிக்க முயல, ஆபத்பாந்தனாய் அவர்களைக் காக்க வருகிறார் வாத்தியாரின் தந்தை. வந்தவர் அரசு வேலைக்கான உத்தரவுக் கடிதத்தை வாத்தியாரிடம் தர, உற்சாகத்தோடு வேலையில் சேரப் புறப்படுகிறார் வாத்தியார்.

பாதிக் கலைந்த உறக்கத்தில் தவிப்பர்களைப் போல, அரைகுறை கல்வியோடு கண்முன் நிற்கும் அந்த மழலைகளிடம் கண்ணீருடன் விடைபெறுகிறார் வாத்தியார்... அரசு வேலையில் சேர்ந்தாரா.... அந்த மழலையரின் கல்வி என்ன ஆனது.. மதியின் காதலை ஏற்றுக் கொண்டாரா? போன்றவை ஒரு அழகிய நாவலின் நிறைவான அத்தியாயம் மாதிரி சொல்லப்பட்டுள்ளன.

1966-தான் கதை நிகழும் காலம் என்று முடிவு செய்த இயக்குநர், அந்தக் காலத்தில் வழக்கிலிருந்த நாணயமுறை, உணவு வழக்கம், விவசாயம், விளையாட்டு, சினிமா... ஒன்றிலும் சிறு குறைகூட காண முடியாத அளவுக்கு பார்த்துப் பார்த்து விஷயங்களைச் சேகரித்திருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகளுக்குத் தெரியாத விஷயங்களை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

வழக்கொழிந்துபோன கவலைப் பாசனம், கருவாமணி, பிரிமனை, மக்கேரி, தவலை (தண்ணீர்குடம்), பொட்டல்வெளி என்பதற்கு சரியான உதாரணமாய் ஒரு கிராமம், பனையிலேறும் மீன், செங்கல் சூளைகள், கிராமத்து உணவுகள் போன்றவற்றையெல்லாம் திரையில் பார்ப்பது இதுதான் முதல்முறை. ஒரு இலக்கியவாதியின் செய்நேர்த்தி!

படத்தில் ஹீரோ விமலையும் தாண்டி கண்ணிலேயே நிற்பவர்கள் இருவர்... நாயகி இனியா மற்றும் நான்கே காட்சிகளில் வந்தாலும் மனசைத் தொடும் பாக்யராஜ்.

விமலிடம் பணத்தைப் பிடுங்க அப்பா தம்பி ராமையாவுடன் சேர்ந்து நடத்தும் நாடகமும், தன் காதலைச் சொல்லும் உத்தியாய், 'எனக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்குறாங்க' என்ற பொய்யைச் சொல்லி, அதற்கு விமல் முகம் போகும் போக்கைப் பார்த்து சந்தோஷத்தில் ஆடிக் கொண்டே வருவதும்... முதல் தரம். பாரதிராஜாவின் நாயகிகளைக் கண்முன் நிறுத்தியது இந்தக் காட்சிகளில் இனியாவின் நடிப்பு.

மகன் சர்க்கார் வேலைக்கு ஏன் போக வேண்டும் என்பதை மூச்சைப் பிடித்துக் கொண்டு சொல்லும் முதல் காட்சியிலும், அதே மகன் தன் கனவை நிறைவேற்றாமல் செல்லும்போது வழியனுப்பும் காட்சியிலும் மனதைப் பிசைகிறது பாக்யராஜ் நடிப்பு.

'டூ நாலெட்டாக' வரும் தம்பி ராமையா, நம்பிராஜன், பொன்வண்ணன், அந்த குருவிக்கார கிழவனாக வரும் குமரவேலும் நடிகர்களாகவே தெரியவில்லை.. இந்தப் படத்தைப் பொறுத்தவரை கண்டெடுத்தான் காட்டுவாசிகள்தான் அவர்கள்!

இத்தனை நாளும் நாம் ஆண்டையிடம் இப்படித்தான் ஏமாந்து போனோமா என்ற தவிப்புடன், சூளையில் கிடக்கும் தன் மகளை தரதரவென இழுத்துப் போய் விமலிடம் ஒப்படைத்து, 'வாத்தியாரே இதை உங்கையிலே ஒப்படைக்கிறேன்... எதையாவது கத்துக் கொடுங்க,' என அந்தத் தாய் கதறும்போது கண்களில் நம்மையும் மீறி 'மளுக்'கென எட்டிப் பார்க்கிறது கண்ணீர்!

ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு, காலச் சக்கரத்தில் ஏற்றி நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தைக் காட்டுகிறது. ஜிப்ரான் என்பவர் புதிய இசையமைப்பாளர் என்கிறார்கள். நம்பத்தான் முடியவில்லை. பின்னணி இசையும், 'போறானே...', 'சரசர சாரக்காத்து...' பாடல்களும் லயிக்க வைக்கின்றன.

களவாணியில் தன்னை நிலை நிறுத்த ஒரு திரைக்கதையை உருவாக்கி வெற்றிபெற்ற சற்குணம், இந்தப் படத்தில் தமிழ் சினிமாவையே நிமிர்த்தும் அசத்தலான திரைக்கதையை உருவாக்கி வாகை சூடியிருக்கிறார்... வாழ்த்துக்கள்!

மன உளைச்சல்... தற்காலிகமாக சினிமாவிலிருந்து விலகல்! - சோனா அறிவிப்பு


சென்னை: எஸ்பிபி சரண் செய்த பாலியல் பலாத்கார முயற்சி, அது தொடர்பாக தான் கொடுத்த புகாருக்கு போலீசார் காட்டிய ரியாக்ஷன், சமரசமாகப் போகுமாறு வந்த மிரட்டல்கள் போன்றவற்றால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும், இதனால் கொஞ்சகாலத்துக்கு சினிமாவில் நடிக்கவே மாட்டேன், என்றும் நடிகை சோனா அறிவித்துள்ளார்.

மங்காத்தா மது விருந்தில் தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ததாக போலீசுக்கு போனார். இவ்வழக்கு நீதிமன்றத்துக்கும் போனது. போலீசார் கைது செய்யாமல் இருக்க எஸ்.பி.பி. சரண் முன் ஜாமீன் பெற்றார்.

பாலியல் பலாத்காரம் நடந்ததற்கான ஆதாரத்தை சோனா போலீசில் அளித்ததால் வழக்கு சூடு பிடித்தது.

மது விருந்தில் பங்கேற்ற வெங்கட் பிரபு, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி போன்றோரிடம் போலீசார் விசாரணையை துவங்கினர். இதனால் சோனா, சரண் இடையே சமரச பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஒருகட்டத்தில், போலீசார் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் சோனாவை சமரசமாக போகும்படி நிர்ப்பந்தித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் எஸ்பிபி சரணுக்கு எதிராக ஏதேனும் போராட்டம் நடத்தினால் கைது செய்து உள்ளே அடைத்துவிடுவோம் என போலீஸ் சோனாவை பகிரங்கமாக மிரட்டியது.

இதனால், அடுத்த நாளே சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தார் என்றும், இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாகவும் சோனாவே அறிவித்தார். எஸ்ப்பி சரண் எதுவும் கூறவில்லை.

நடந்த சம்பவங்கள் தன் மனதை மிகவும் பாதித்துள்ளதாகக் கூறிவந்தார் சோனா. உடனடியாக வெளிநாடு போய், பின்னர் ஹைதராபாத்தில் தங்கி நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தனது இப்போதைய முடிவு குறித்து சோனா கூறுகையில், "எனக்கு வந்தது போல் எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தினார்கள். மானபங்கம் செய்தார்கள். இதை எதிர்த்து தனி ஆளா நின்னு போராடினேன். என்பக்கம் உண்மையிருப்பதை அறிந்து பெண்கள் அமைப்புகள் ஆதரவுகரம் நீட்டின. இடையில் பல விஷயங்கள் நடந்தன. ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்போது எல்லாம் சுமூகமாக முடிந்து விட்டது. வழக்கை வாபஸ் பெறுகிறேன். வக்கீலை வைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன். ஓரிரு நாளில் அது முடிந்து விடும்.

அதன் பிறகு வெளிநாடு போகப் போகிறேன். மன உளைச்சலில் இருந்து விடுபட அமைதியும், ஓய்வும் தேவை. அதற்காகத்தான் வெளிநாடு செல்கிறேன். ஒரு வருடம் தற்காலிகமாக சினிமாவை விட்டு விலகி இருக்கப் போகிறேன்.

வேண்டாம் வெங்கட்பிரபு படம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் புதுப்பட மொன்றை தயாரிக்க முடிவு செய்து இருந்தேன். இதற்காக அவரிடம் ஒப்பந்தமும் போட்டு இருந்தேன். அந்த படத்தை இனி தயாரிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.

வெங்கட் பிரபுவும் நானும் சுமூகமாக பேசி விலகிவிட்டோம். இதனால் கொஞ்ச நாட்கள் தூக்கமே வராமல் தவித்தேன். மாத்திரை போட்டுத்தான் தூங்கினேன். உடல் நிலை வேறு பாதித்துவிட்டது. சினிமாவை விட்டு ஒதுங்கி ஓய்வில் இருக்கப் போகிறேன், என்றார்.

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை மக்களே கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்: சீமான்

நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’வாச்சாத்தி தீர்ப்பின் முக்கியத்துவம், அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டதில் மட்டுமே இல்லை.

மாறாக, பழங்குடியினர் போன்று சமூகத்தின் அடித்தட்டில் வாழும் ஏழை, எளிய உழைக்கும் மக்கள் காலம் காலமாக அரசு எந்திரங்களின் வன்முறை வெறியாட்டத்திற்கும், பாலியல் வன்முறைக்கும் தொடர்ந்து உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ஆனால் அவர்களில் எவரும் சட்டத்தின் உதவியை நாடியதில்லை. காரணம், சட்டத்தின் காவலர்களே இப்படிப்பட்ட அராஜகத்தில் ஈடுபட்டுவருவதுதான்.

இப்படிப்பட்ட சூழலை மாற்றியமைக்க வேண்டியது உடனடிக் கடமையாகும்.

இதற்கு மேலாவது பழங்குடியினர் உள்ளிட்ட சமூகத்தின் நலிவடைந்த மக்களை அநீதிக்கு உட்படுத்தும் அரசு எந்திர அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகல் அவசியமானதாகும்.

பலமான உள்ளாட்சி தேவை. இதற்கான நிரந்தரத்தீர்வு, உள்ளாட்சி அமைப்புகளை கட்சி அரசியல் பிடியில் இருந்து மீட்பதுதான்.

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை மக்களே தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நிர்வகிக்கும்போதுதான் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படும்.

அதே நேரத்தில் தங்களையும்,தங்கள் வாழ்விற்கு ஆதாரமாகவுள்ள நிலம், நீர் ஆகியவற்றை பாதுகாத்து தக்க வைக்க முடியும். எனவே, உண்மையான மக்களாட்சி மலரவேண்டுமெனில், அது முதலில் உருவாக வேண்டிய இடம் உள்ளாட்சிதான்.

இந்திய அரசமைப்பும், பஞ்சாயத்து ராஜ் சட்டமும் அளித்துள்ள இப்படிப்பட்ட ஜனநாயக உரிமைகளை உணர்ந்து மக்கள் கடமையாற்ற வேண்டும். அப்போதுதான் சமூக பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்துகொள்ள முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையை அடியோடு கைகழுவியது இந்தியா

இறுதிப் போரின்போதும் அதன் பின்னரும் சர்வதேச அரங்கில் இலங்கைக்குப் பெரும் பாதுகாப்பு அரணாக விளங்கி வந்த இந்தியா இப்போது அந்தப் போக்கைக் கைவிட்டுள்ளது. இலங்கையின் எந்தவொரு உள்விவகாரத்திலும் இனி இந்தியா தலையிடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைப் பிரச்சினையை இலங்கை அரசே இனிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்று அறிய வந்தது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்ற நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். இருவருக்குமிடையில் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை டாக்டர் மன்மோகன் சிங் நேரடியாகவே ஜனாதிபதி மஹிந்தவிடம் தெரியப்படுத்தினார் என அறியமுடிகிறது.

இலங்கைக்கு எதிராகச் சர்வதேச சமூகம் தொடர்ந்து மேற்கொண்டுவரும் அழுத்தங்கள் குறித்து இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி மஹிந்த இந்தச் சந்திப்பில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். இதனை நன்கு கவனமாகச் செவிமடுத்த இந்தியப் பிரதமர் இலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கும் அழுத்தங்கள் இருக்கிறது எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார். சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் கடப்பாட்டை இலங்கையே இனிமேல் வெளிப்படுத்தவேண்டுமெனவும், இலங்கை விவகாரத்தில் தலையிடாதிருக்க இந்தியா உத்தேசித்திருப்பதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தினால் காங்கிரஸ் அரசுக்கு தமிழ்நாட்டிலிருந்தும், சர்வதேசத்திலிருந்தும் அழுத்தங்கள் வருவதை விலாவாரியாக ஜனாதிபதி மஹிந்தவிடம் தெரிவித்திருக்கும் இந்தியப் பிரதமர், இனிமேல் இலங்கைப் பிரச்சினையை இலங்கை அரசே பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார் என்று மேலும் தெரியவருகிறது.

சர்வதேச நெருக்கடி மிகுந்த காலத்தில் இந்தியா இவ்வாறு இலங்கையைக் கைவிட்டிருப்பது, கொழும்புக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கனடா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகையில் இந்தியா இலங்கையைக் கைவிட்டிருப்பது மஹிந்த அரசுக்கு விழுந்த பேரிடி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சிதம்பரத்தையும் திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும்: பாஜக

2ஜி ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக பெரிய அளவில் ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்த பாரதிய ஜனதா கட்சி, சிதம்பரத்தையும் திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

சிதம்பரத்தை பாதுகாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ரவிஷங்கர் பிரசாத் குற்றம்சாட்டினார். ஆதாரங்கள் பெரிய அளவில் இருந்தபோதிலும் சிதம்பரத்தின் குற்றங்களை மறைக்க அரசு முயற்சித்து வருகிறது. இதுவே இருவேறு அளவுகோல்கள் பின்பற்றப்படுவதை குறிப்பிடுகிறது என பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ராசாவுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்ததால் அவர் இப்போது சிறையில் உள்ளார். சிதம்பரத்துக்கு எதிராகவும் ஆதாரம் உள்ளது. அப்படியிருக்க ராசா மட்டும் உள்ளே இருக்கிறார். சிதம்பரம் வெளியே இருக்கிறார். சிதம்பரமும் திகார் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என பிரசாத் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சருக்கு எதிராக சிபிஐ நடவடிக்கை எடுப்பதை மத்திய அரசு தடுத்து வருகிறது என அவர் கூறினார். ஸ்பெக்ட்ரம் விலையைத் தீர்மானிப்பது ஏன் அமைச்சர்கள் குழுவிடம் இருந்து விலக்கிவைக்கப்பட்டது என்பதற்கு பிரதமர் பதிலளிப்பது மிகவும் அவசியம் என பிரசாத் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் மேலும் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் பிரதமரின் பங்கு குறித்தும் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

நிஜத்தில் ஹீரோவான கன்னட நடிகர் ஜக்கீஷ்... 2 செயின் திருடர்களை விரட்டிப் பிடித்தார்!


பெங்களூர்: இரண்டு செயின் பறிப்புத் திருடர்களை மோட்டார் சைக்கிளில் போய் விரட்டிப் பிடித்து பொதுமக்களிடம் பாராட்டுப் பெற்றுள்ளார் பிரபல கன்னட நடிகர் ஜக்கீஷ்.

நேற்று மாலை பெங்களூர் மல்லேஸ்வரத்தில் இந்த சம்பவம் நடந்தது.

கன்னட சினிமாவில் பிரபல நகைச்சுவை - குணச்சித்திர நடிகராக இருப்பவர் ஜக்கீஷ்.

மாலை 5.30 மணியளவில், 18வது க்ராஸ் சாலையில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு மொபைலில் பேசிக் கொண்டிருந்தார் நடிகர் ஜக்கீஷ்.

அப்போது சாலையிலஸ் ஒரு பெண் கதறிக் கொண்டும், காப்பாற்றக் கோரியும் சத்தமெழுப்பியது அவர் காதில் விழுந்தது. உடனே சாலையில் எட்டிப் பார்த்தார். அப்போது ஒரு 17 வயது பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை, பைக்கில் வந்த இரு வாலிபர்கள் பறிக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணோ சங்கிலியை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கதறினாள்.

கிட்டத்தட்ட 20 அடி தூரம் ரோடில் அந்தப் பெண்ணை இழுத்துக் கொண்டே போயிருக்கிறார்கள். அப்படியும் விடவில்லை. உடனே அந்தத் திருடர்களில் ஒருவன் பெண்ணை தள்ளிவிட்டு சங்கிலியைப் பறிக்க பைக் பறந்தது. அதற்குள் அந்தப் பெண்ணருகில் ஓடிவந்த ஜக்கீஷ், நடந்ததைப் புரிந்து கொண்டு, போலீசுக்கு தகவல் கொடுக்குமாறு அருகிலிருந்தவர்களிடம் சொன்னார்.

மேற்கொண்டு நடந்ததை அவரே சொல்கிறார்:

" அந்தப் பக்கம் பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி விஷயத்தைச் சொல்லி பைக் கேட்டேன். அவரும் மறு பேச்சின்றி உடனே தந்தார். அடுத்த நொடி நான் பறந்தேன் பைக்கில். எனக்கும் அவர்களுக்கும் 500 மீட்டர் கேப். வேகமாகப் போய், அவர்கள் பைக்குக்கு முன் நான் மறிக்க அவர்கள் இருவரும் கீழே விழுந்தார்கள். இருவரையும் பலமாகப் பிடித்துக் கொண்டேன். ஒருவன் மட்டும் சங்கிலியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து செயினை கைப்பற்றினேன். அந்தப் பெண்ணிடம் அந்த செயினை ஒப்படைத்தபோது, அவள் அடைந்த நிம்மதியும் சந்தோஷமும் இதற்கு முன் பார்க்காதது," என்றார்.

ஆரம்பத்தில் இது ஏதோ சினிமா ஷூட்டிங் என நினைத்துவிட்டார்களாம் மக்கள். அவர்களிடம் கன்னடத்தில் "இது ஷூட்டிங் அல்ல' என்று பல முறை விளக்கிக் கூறவேண்டியிருந்ததாம். விஷயம் புரிந்ததும், அசந்துபோய் ஜக்கீஷைப் பாராட்டினார்களாம் பொதுமக்கள்.

பின்னர் வழக்கம்போல போலீஸ் கடைசியில் வந்து, திருடர்கள் இருவரையும் பிடித்துள்ளது. பிடிபட்ட இரு இளைஞர்களும் கல்லூரி மாணவர்கள் என்பது பின்னர் தெரிய வந்தது.

"ஒரு இளைஞன் ஆஸ்டின் கல்லூரியில் பியூசி படிப்பவன். இன்னொரு இளைஞர் ஷேசாத்ரிபுரம் கல்லூரியில் பியூசி படிக்கிறான்," என்றார் இந்த வழக்கை விசாரிக்கும் பெங்களூர் துணை கமிஷனர் ரேவண்ணா.

ஜக்கீஷ் இதுபோல நிஜத்திலும் உதவுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே பெங்களூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்றி தவறி ட்ராக்கில் விழவிருந்த ஒருவரை, பாய்ந்து சென்று காப்பாற்றியுள்ளார் ஜக்கீஷ்.

ஹாரிஸ் ஜெயராஜ் கச்சேரியை ஒத்தி வைத்த மழை!


மழை காரணமாக, சென்னையில் தான் நடத்தவிருந்த இசை நிகழ்ச்சியை ஒத்திப் போட்டார் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

ஹாரிஸ் ஆன் தி எட்ஜ் எனும் தலைப்பில் சென்னை மற்றும் கோவையில் இசைக் கச்சேரி நடத்தப் போவதாக ஹாரிஸ் ஜெயராஜ் அறிவித்திருந்தார். சர்வதேச தரத்தில், நல்ல ஒலியமைப்பில் உள்ளூர் ரசிகர்களுக்கு தான் அளிக்கும் திரைவிருந்து என அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார்.

டிக்கெட்டுகள் மளமளவென விற்பனையாகிவந்த நிலையில், சென்னையில் திடீர் திடீரென பெரும் மழை வெளுத்துக்கட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் மாலை வேளைகளில் கச்சேரி நடத்துவது சென்னையில் சாத்தியமில்லாததாகிவிட்டது.

எனவே சென்னையில் வரும் அக்டோபர் 8-ம் தேதியும், கோவையில் ஏற்கெனவே அறிவித்தது போல அக்டோபர் 16-ம் தேதியும் இசை நிகழ்ச்சிகள் நடக்கும் என தனது பிஆர்ஓ நிகில் மூலம் அறிவித்துள்ளார் ஹாரிஸ்.

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் இந்த இசை நிகழ்ச்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா இலங்கையைக் கைகழுவியதா?


இறுதிப் போரின்போதும் அதன் பின்னரும் சர்வதேச அரங்கில் இலங்கைக்குப் பெரும் பாதுகாப்பு அரணாக விளங்கி வந்த இந்தியா இப்போது அந்தப் போக்கைக் கைவிட்டுள்ளது என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இலங்கையின் எந்தவொரு உள்விவகாரத்திலும் இனி இந்தியா தலையிடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைப் பிரச்சினையை இலங்கை அரசே இனிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்று அறிய வந்தது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்ற நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். இருவருக்குமிடையில் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை டாக்டர் மன்மோகன் சிங் நேரடியாகவே ஜனாதிபதி மஹிந்தவிடம் தெரியப்படுத்தினார் என அறியமுடிகிறது.

இலங்கைக்கு எதிராகச் சர்வதேச சமூகம் தொடர்ந்து மேற்கொண்டுவரும் அழுத்தங்கள் குறித்து இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி மஹிந்த இந்தச் சந்திப்பில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். இதனை நன்கு கவனமாகச் செவிமடுத்த இந்தியப் பிரதமர் இலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கும் அழுத்தங்கள் இருக்கிறது எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் கடப்பாட்டை இலங்கையே இனிமேல் வெளிப்படுத்தவேண்டுமெனவும், இலங்கை விவகாரத்தில் தலையிடாதிருக்க இந்தியா உத்தேசித்திருப்பதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தினால் காங்கிரஸ் அரசுக்கு தமிழ்நாட்டிலிருந்தும், சர்வதேசத்திலிருந்தும் அழுத்தங்கள் வருவதை விலாவாரியாக ஜனாதிபதி மஹிந்தவிடம் தெரிவித்திருக்கும் இந்தியப் பிரதமர், இனிமேல் இலங்கைப் பிரச்சினையை இலங்கை அரசே பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார் என்று மேலும் தெரியவருகிறது.

சர்வதேச நெருக்கடி மிகுந்த காலத்தில் இந்தியா இவ்வாறு இலங்கையைக் கைவிட்டிருப்பது, கொழும்புக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கனடா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகையில் இந்தியா இலங்கையைக் கைவிட்டிருப்பது மஹிந்த அரசுக்கு விழுந்த பேரிடி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

எல் ஆர் ஈஸ்வரியுடன் டி ராஜேந்தர் பாடிய குத்துப் பாட்டு!


எல் ஆர் ஈஸ்வரி... சினிமாவில் பொன்விவா கொண்டாடும் பாடகி. 60 மற்றும் 70களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்.

காபரே, தெம்மாங்கு, தாலாட்டு, காதல் என அத்தனை விதமான பாடல்களிலும் வெளுத்துக் கட்டிய எல் ஆர் ஈஸ்வரியின் குரலுக்கு இன்றும் தனி ரசிகர் கூட்டமுண்டு.

எண்பதுகளுக்குப் பிறகு எல் ஆர் ஈஸ்வரி சினிமாவில் பாடுவது நின்றுபோனது. பக்திப் பாடல்களைப் பாடி வந்தார்.

இந்த நிலையில், எல் ஆர் ஈஸ்வர் மீண்டும் முழுமையான குத்துப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இந்தப் பாடலில் அவருடன் சேர்ந்து பாடியிருப்பவர் சினிமாவின் அஷ்டாவதானி எனப்படும் டி ராஜேந்தர். அவரது மகன் சிலம்பரசன் நடிக்கும் ஒஸ்தி படத்தில் இடம்பெறும் குத்துப்பாடலைத்தான் இந்த இருவரும் இணைந்து பாடுகிறார்கள்.

'கலாசலா..' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாட்டுக்கு திரையில் ஆடப் போகிறவர் மல்லிகா ஷெராவத். அவருடன் ஹீரோ சிம்பு, வில்லன் சோனு சூட் ஆகியோரும் குத்தாட்டம் போடுகிறார்கள் இந்தப் பாடலுக்கு.

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற தபாங் படத்தின் ரீமேக்தான் இந்த ஒஸ்தி. தபாங்கில் 'முன்னி பத்னம்' என்ற ஐட்டம் பாட்டு செம ஹிட். அந்தப் பாடலுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் தமன் பார்த்துப் பார்த்து உருவாக்கியுள்ள பாடல்தான் 'கலாசலா..'

மல்லிகா ஷெராவத், எல் ஆர் ஈஸ்வரி, டி ராஜேந்தர், சிம்பு என ஒரு வித்தியாசமான கூட்டணி இந்தப் பாடலுக்கு அமைந்துவிட்டதால், இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இத இத இதத்தானே 'ஒஸ்தி' டீம் எதிர்ப்பார்த்தது!

பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியாகும் 'வாகை சூடவா' - 'வெடி'!


இன்று வெள்ளிக்கிழமை... வழக்கமாக பண்டிகை தினங்களில்தான் விசேஷமான படங்கள் வெளியாகும்.

ஆனால் இந்த வெள்ளிக்கிழமை இரண்டு முக்கியமான படங்கள் வெளியாகின்றன. ஒன்று களவாணி படம் மூலம் நம்பிக்கை இயக்குநராகத் திகழும் ஏ சற்குணம் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படைப்பான வாகை சூடவா.

இந்தப் படம் முழுக்க முழுக்க 1966-ம் ஆண்டின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளதால், நல்ல படம் பார்க்கத் துடிக்கும் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் வாகை சூட வா-வுக்கு காத்திருக்கிறார்கள்.

விமல், இனியா நடித்துள்ள இந்தப் படத்தில், கே பாக்யராஜ் முக்கிய வேடமேற்றுள்ளார். படம் முழுக்க 60களின் பின்னணி என்பதால் பார்த்துப் பார்த்து உருவாக்கியுள்ளார் சற்குணம். தமிழ் திரையில் ஒரு யதார்த்தமான படமாக இருக்கும் என்று, இந்தப் படத்தை முன்கூட்டியே பார்த்த சக இயக்குநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அடுத்த முக்கியமான படம் வெடி. விஷால் - சமீரா நடித்துள்ள ஆக்ஷன் ரொமான்டிக் படம் இது. சவுரியம் என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்தான் இது என்றாலும், படத்தை இயக்கியிருப்பவர் பிரபு தேவா என்பதால் கூடுதல் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தப் படங்கள் இரண்டுமே ஒன்றுக் கொன்று வித்தியாசமானவை என்பதால், ரசிகர்களைப் பொறுத்தவரை தீபாவளிக்கு முந்தைய திரைவிருந்தாக இவை அமையக்கூடும்.

ரஜினி அங்கிளைச் சந்தித்தேன்... சூப்பரா இருக்கார்! - மோகன்பாபு மகள்


ரஜினியை வீட்டில் போய் சந்தித்தேன். அவர் நலமுடனும் மிகுந்த உற்சாகத்துடனும் உள்ளார் என்று நடிகர் மோகன்பாபுவின் மகள் மஞ்சு லட்சுமி தெரிவித்துள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்ற ரஜினி கடந்த ஜூலை 13-ம் தேதி சென்னை திரும்பினார். அதன் பிறகு அவர் போயஸ் கார்டன் மற்றும் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா வீடு ஆகியவற்றில் ஓய்வெடுத்து வருகிறார்.

இடையில் ராணா பட வேலைகளையும் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாருடன் இணைந்து கவனிக்கிறார். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள், படத்தின் இசை, காட்சியமைப்புகளில் மாற்றம், உடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் போன்றவற்றை ரஜினி ஆலோசனையுடன் இயக்குநர் ரவிக்குமார் முடிவு செய்து வருகிறார்.

இடையில் ரஜினி தனக்கு மிக நெருங்கிய நண்பர்கள், வைரமுத்து, எஸ்பி முத்துராமன் போன்ற திரையுலகப் பிரமுகர்களை மட்டும் சந்தித்துப் பேசினார். ஆனால் அதுகுறித்த புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, ரஜினியின் நெருங்கிய நண்பரும் தெலுங்கு சினிமாவின் முக்கிய பிரமுகருமான மோகன்பாபுவின் மகள் மஞ்சு லட்சுமி, சில தினங்களுக்கு முன் ரஜினியை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் லட்சுமி குறிப்பிடுகையில், "ரஜினி அங்கிளை சென்னையில் சந்தித்தேன். சூப்பராக இருக்கிறார். முன்பைப் போலவே உற்சாகமாகவும் நலமாகவும் உள்ளார். அவரை பார்த்ததே மிகவும் சந்தோஷமாக இருந்தது. நம்ம சூப்பர் ஸ்டார் அதே மாதிரி ஸ்ட்ராங்காக திரும்ப வந்துவிட்டார். விரைவில் அவரது படத்தை வெளியிடுவேன்," என்றார்.

Thursday 29 September 2011

முப்பொழுதும் உன் கற்பனைகள் ஒற்றைப் பாடல் வெளியீடு!


இப்பொழுதெல்லாம், ஒரு படத்தின் ஒற்றைப் பாடலை வெளியிடுவது புதிய வழக்கமாகி வருகிறது.

அந்த வகையில், விண்ணை தாண்டி வருவாயா, கோ என வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார், அடுத்து தயாரித்து இயக்கியிருக்கும் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தின் ஒற்றைப் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.

அமலா பால், அதர்வா நடித்துள்ள இந்தப் படத்தின் பாடலை ஜீவா வெளியிட வெற்றிமாறன் பெற்றுக் கொண்டார். படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ்குமார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் தாமரை எழுதியிருக்கிறார்.

அந்த அனுபவம் பற்றிப் பேசிய தாமரை, "பொதுவாக என்னை காதல் பாடல்கள் எழுதுபவள் என்று முத்திரை குத்திவிட்டார்கள். எனக்கும் தத்துவ, சோக, புரட்சி, தாலாட்டுப் பாடல்கள் எழுதணும்னு ஆசை. அது இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கிறது.

இப்போது வெளியாகியுள்ள பாடல் வித்தியாசமானது. காதலிக்கு காதலன் தர நினைக்கிற பரிசைப் பற்றிய பாடல். நானும் என் காலத்தை மனதில் கொண்டு சில வரிகளை எழுத, இல்ல, இந்தக் காலத்துக்கேத்த பரிசுகளை வரிசைப் படுத்துங்க என்றார்கள். அப்படி என்னதான் இந்தக் காலத்தில் கொடுத்துக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள, சிட்டி சென்டர், எஸ்கேப், ஸ்கை வாக் என்று நவீன ஷாப்பிங் மால்களுக்கு என்னை கூட்டிப் போனார்கள். அங்கே பார்த்த பிறகுதான் இன்றைய வழக்கங்களே வேறாக இருப்பதைத் தெரிந்து கொண்டேன். அதன் அடிப்படையில்தான் எழுதியிருக்கிறேன்," என்றார்.

இசைத்தட்டை வெளியிட்ட ஜீவா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், இயக்குநர் எல்ரெட் குமார் உள்ளிட்டோர் பேசினர்.

மிக சுருக்கமாகவும், கச்சிதமாகவும் அமைந்திருந்தது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு!

சகோதரத்துவத்தை மையப்படுத்தி ரஹ்மான் புதிய ஆல்பம்!


தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்குப் பிறகு தனி இசை ஆல்பம் வெளியிட்டு பெரும் புகழ் பெற்றவர் ஏ ஆர் ரஹ்மான்.

அவரது வந்தே மாதரம் செய்த சாதனை மகத்தானது. அதன் பிறகு பல புகழ்பெற்ற ஆல்பங்கள், நாடகங்களுக்கான ட்ராக்குகளை வெளியிட்டுவிட்டார் ரஹ்மான்.

இப்போது உலகில் அரிதாகி வரும் சகோதரத்துவத்தை வலியுறுத்தி ஒரு ஆல்பம் தயார் செய்து வருகிறாராம் இந்த ஆஸ்கர் நாயகன். 3 இந்தி பாடல்களும், 2 ஆங்கில பாடல்களும் கொண்ட இந்த ஆல்பத்தில், தமிழுக்கு இடமில்லை என்பது கொஞ்சம் வருத்தமான சமாச்சாரம்தான்.

இவற்றில் 2 பாடல்களை காட்சிப்படுத்த இருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு மட்டும் ரஹ்மான் தோன்றிப் பாடுகிறார்.

ரஹ்மானின் 'வந்தே மாதரம்' ஆல்பத்தை படமாக்கிய பரத் பாலா இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளாராம். இந்த ஆல்பத்தை விரைவிலேயே வெளியிட இருக்கிறார்கள்.

போர்க்குற்றவாளி சர்வேந்திர சில்வா வீட்டுக் கதவை தட்டிய தமிழர் (காணொளி இணைப்பு)

சமீபத்தில் அமெரிக்காவில் தங்கியுள்ள சர்வேந்திர சில்வாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டமை யாவரும் அறிந்ததே.

58ம் படைக்கு தளபதியாக இவர் இருந்த கால கட்டத்தில் யுத்தக்குற்றங்கள் இழைத்தார் என இவர்மேல் வழக்கு தொடரப்பட்டு நஷ்ட ஈடும் கோரப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு விடுத்த அழைப்பாணையின் பிரதியை சர்வேந்திர சில்வாவின் வீட்டிற்குச் சென்று சிலர் வழங்கியுள்ளனர்.

நியூயோர்க்கில் உள்ள தொடர்மாடி ஒன்றில் வசித்துவரும் அவர் வாசல்ஸ்தலதைத் தட்டி அங்கே இருந்த அவரது உதவியாளிடம் இந்த அழைப்பாணையின் பிரதி கையளிக்கப்பட்டுள்ளது. இதனை இவர் இனி மறுக்க முடியாது. காரணம் அனைத்தும் படமாக்கப்பட்டு அவை ஆதாரமாக மாற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க சட்டத்துக்கு அமைவாக நீதிமன்றத்தால் வழங்கப்படும் சில அழைப்பாணை 120 நாட்களுக்கே செல்லுபடியாகும். அதனை 120 நாட்களுக்குள் குறிப்பிட்ட நபரின் கைகளில் சேர்க்கவேண்டும். அப்படி சேர்க்காவிட்டால் போட்ட வழக்கு காலாவதியாகிவிடும். எனவே சர்வேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்கை தொடுத்த அலி பவுடா என்னும் வழக்கறிஞர் சாதூரியமான முறையில் இந்த அழைப்பாணையை சர்வேந்திர சில்வாவிடம் ஒப்படைத்துள்ளார். அதுமட்டுமல்லாது அதனை படமாக்கி ஆதாரத்தையும் திரட்டிவிட்டார்.

எனவே இனி நிச்சயமாக சர்வேந்திர சில்வா நீதிமன்ற வாசல் ஏறியே தீரவேண்டும். அது உறுதியாகிவிட்டது. இவ்வழக்கைத் தொடுக்க உலகத் தமிழர் பேரவை(GTF) வழக்கறிஞர் அலி பவுடாவுக்கு உறுதுணையாக நின்றமை பாரட்டத்தக்கவிடையமாகும்.

இதனையே செயல் திறன் என்று அழைப்பார்கள். அதை விடுத்து நான் வழக்கைப் போட்டு விட்டேன். போடப் போகிறேன் என்று கதை அளப்பதும் கண்ணாம்பூச்சி காட்டுவதையும் விடுத்து ஆக்கபூர்வமான செயலில் ஈடுபடுவது நல்லது. ஆதாரங்களை தகுந்த முறையில் வெளியிடுவது நல்லது. அறிக்கையை மட்டும் விட்டு விட்டு செயல் திறன் இல்லாமல் இருக்கும் ஒரு சில அமைப்புகளைப் பற்றி நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தோம். அவர்களுக்கு இது நல்லதொரு முன் உதாரணமாக அமையும்.

தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு அதனை இதனைச் சொல்லி ஏமாற்றுவதை விடுத்து செயல்திறன்கொண்ட இனமாக நாம் மாறவேண்டும். உண்மையை எழுதினால் "பொய் கூறும் இனமாக எம்மைச் சித்தரிக்கவேண்டாம்" என கவிதைகளை பாடுகிறார்கள். கவிதை கட்டுரை எல்லாவற்றையும் ஒரு புறம் மூட்டை கட்டிவிட்டு 40,000 தமிழர்களைக் கொன்ற சிங்களதேச அரசியல்வாதிகளையும் இராணுவத்தையும் யுத்தக் குற்றக் கூண்டில் ஏற்ற அனைவரும் ஒன்றாக முயலுவோண்டும்.


அதிர்வு

கணவனுக்காக தனது தற்கொலை காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து வைத்த பெண்

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் சம்தாஷி (25). இவர் மும்பையில் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நிதிஜிங் (24). தனியார் நிறுவனத்தில் நிர்வாக பிரிவில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கடந்த பிப்ரவரி மாதம்தான் திருமணம் நடந்தது.

மும்பையின் மேற்கு அந்தேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.நேற்று காலை சம்தாஷி வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது நிதிஜிங் கணவரிடம் உங்களிடம் முக்கியமான விஷயம் பற்றி பேச வேண்டி உள்ளது. எனக்காக 10 நிமிடங்கள் ஒதுக்குங்கள் என்று கேட்டார். இதற்கு ஒப்புக் கொண்ட சம்தாஷி 10 நிமிடங்கள் அவருடன் பேசினார்.

பின்னர் ஆபீசுக்கு கிளம்பிய போது மீண்டும் அவரை தடுத்து நிறுத்தினார். ஏற்கனவே ஆபீசுக்கு நேரமாகி விட்ட அவசரத்தில் இருந்த சம்தாஷி, மனைவியின் செயலால் கோபம் அடைந்து அவரை சத்தம் போட்டுவிட்டு ஆபீசுக்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த நிதிஜிங் தற்கொலை செய்ய முடிவு செய்தார். தனது செல்போனில் கணவருக்கு “சாரி” (மன்னியுங்கள்) என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.

ஆனால் அதை சம்தாஷி பொருட்படுத்தவில்லை. கணவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் தனது தற்கொலை காட்சியை கணவர் பார்க்க வேண்டும் என்பதற்காக அதை தனது செல்போனில் பதிவு செய்ய தீர்மானித்தார்.

தனது பெட்ரூமில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு செல்போனில் உள்ள கேமிராவை ஆன் செய்து அதை சரியான கோணத்தில் பொருத்தி வைத்தார்.

பின்னர் தூக்கில் தொங்கி உயிரை விட்டார். மதியம் நிதிஜிங்கின் தந்தை போன் செய்தார். பதில் இல்லாததால் அருகில் குடியிருக்கும் உறவினரிடம் விபரத்தை சொல்லி, நேரில் போய் பார்த்து விட்டு வருமாறு கேட்டுக் கொண்டார். அவர் போய் பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் நிதிஜிங் பிணமாக கிடந்தார்.

இந்த தகவலை நிதிஜிங்கின் பெற்றோருக்கும், கணவருக்கும் தெரிவித்தார். உடனடியாக பதறியடித்து கொண்டு அவர்கள் வந்தனர். போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து நிதி ஜிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நிதிஜிங்கின் செல்போனை கைப்பற்றி அதை பரிசோதித்து பார்த்தனர்.

அதில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் மட்டுமே பொறுப்பு. சிறிய மனக்கசப்பு காரணமாகவே இந்த முடிவை நான் எடுத்தேன். யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை.

அடுத்த பிறவியில் எனது குடும்பத்துக்கும், கணவரின் குடும்பத்துக்கும் பொதுவான நடுவராக பிறக்க விரும்புகிறேன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அடுத்து நிதிஜிங் தற்கொலை செய்த காட்சிகளும் பதிவாகி இருந்தது. இதைப் பார்த்து கணவர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிபாஷா பாசு, ராணா டக்குபதி விரைவில் திருமணம்?


பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவும், தெலுங்கில் இருந்து இந்திக்கு சென்றிருக்கும் நடிகர் ராணா டக்குபதிக்கும் இடையே பத்திக்கிச்சாம். விரைவில் திருமணம் நடக்கப்போவதாக பேசப்படுகிறது.

நடிகை பிபாஷா பாசுவும், நடிகர் ஜான் ஆபிரகாமும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். என்னாச்சோ, ஏதாச்சோ என்று தெரியவில்லை ஆளுக்கொரு பக்கமா பிய்த்துக் கொண்டு போய் விட்டனர். பிபாஷா தன்னை மணந்துகொள்ளுமாறு கேட்டதாகவும், அதற்கு ஜான் மறுப்பு தெரிவத்தனால் தான் இருவரும் பிரிந்ததாக ஒரு பேச்சு.

ஜானைப் பிரிந்த பிறகு பிபாஷா தெலுங்கில் இருந்து இந்திக்கு சென்ற நடிகர் ராணா டக்குபதியுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்தார். ராணா தெலுங்கு முன்னணி நடிகர்கள் வெங்கடேஷ், நாகர்ஜூனாவின் நெருங்கிய உறவினர். ராணாவும், பிபாஷாவும் சேர்ந்து தம் மாரோ தம் என்ற படத்தில் நடித்தனர். அதில் இருந்து பிபாஷா, ராணாவுடன் சுற்றுவதாகத் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறப்படுகிறது.

முன்னதாக ராணா தமிழ் நடிகை ஷ்ரேயா சரணை டேட் செய்தார். அதன் பிறகு தான் பிபாஷா பக்கம் தாவி்விட்டார். ராணா, ஷ்ரேயா பிரிய பிபாஷா தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

என்னவோ போங்கப்பா!

போயஸ் தோட்டப் பகுதி காலாளிகளின் விருப்பத்தை பூர்த்தி செய்த ரஜினி!


'ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும்' - இந்த விருப்பமோ ஆசையோ இல்லாத பொது ரசிகனையோ ரஜினி ரசிகனையோ பார்ப்பது அரிது!

ரஜினியை அரிதாகப் பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, அடிக்கடி பார்க்கும் போயஸ் தோட்டவாசிகளுக்கே இந்த ஆசை ஏகத்துக்கும் உண்டு.

சமீபத்தில் அவர்களில் சிலரை அழைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் ரஜினி. அவர் சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சைப் பெற்ற பிறகு எடுக்கப்பட்டு வெளியாகும் முதல் போட்டோ இதுதான்.

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பின், உடம்பை பழைய நிலைக்குக் கொண்டுவர உடற்பயிற்சிகள் மேற்கொள்கிறார் ரஜினி. தினமும் அதிகாலையில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து நடைபயிற்சி செய்கிறார்.

மண்டபத்தில் திருமணங்கள் நடக்கும் நாட்களில் தன் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியிலேயே நடக்கிறார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அவர் நடப்பது இல்லை. வீட்டு அருகிலேயே ஆட்கள் வரத்து அதிகம் இல்லாத தெருக்களில் ஒரு ரவுண்ட் வருகிறாராம் அதிகாலை நேரத்தில்.

ரஜினி வருவதைப் பார்த்த அப்பகுதியில் உள்ள வீட்டு காவலாளிகள் ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினர். நடந்து வந்து கொண்டிருந்த ரஜினியை நிறுத்தி தங்கள் ஆசைகளை சொன்னார்கள். உடனே ரஜினி அவர்களை தன்னுடன் நிற்க வைத்து போஸ் கொடுக்க, சந்தோஷத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.

ரஜினி சுறுசுறுப்பாகவும் தெம்பாகவும் பழைய உடல்நிலையுடனும் இருந்ததாக இந்த காவலாளிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், ராணா மேலும் தாமதமாகும் என்று வரும் வதந்திகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இளையராஜா, யுவனைப் பிரிந்தார் பாலா... அடுத்த படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ்!


ஜிவி பிரகாஷின் காட்டில் இப்போது அடை மழை... அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள், அதுவும் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த முக்கிய இயக்குநர்களின் படங்களில்.

ஏ ஆர் ரஹ்மானின் உறவுக்காரர்தான் ஜிவி பிரகாஷ். ஜென்டில்மேன் படத்தில் குழந்தைப் பாடகராக அறிமுகமானார். வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளரானார்.

அதைத் தொடர்ந்து பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், ரஜினியின் குசேலன் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின்னர் வந்த படங்கள் அனைத்தும் ஜிவி பிரகாஷுக்கு பெயர் சொல்லும்படி அமைந்தன. அங்காடித் தெரு, மதராசப்பட்டினம், ஆடுகளம் என தொடர்ந்து ஹிட் அடித்தன இவரது படங்கள்.

இப்போது பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைக்கிறார்.

அடுத்ததாக, அவருக்கு அடித்துள்ளது 'பாலா பட வாய்ப்பு' எனும் பெரும் அதிர்ஷ்டம்.

அதர்வாவை நாயகனாக வைத்து பாலா இயக்கவிருக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பாலாவின் படங்களில் இசைக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. இவரது முதல்படம் சேதுவுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். திரையிசையில் அந்தப் படம் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்தபடம் நந்தாவுக்கு யுவன் சங்கர் ராஜாவும், பிதாமகனுக்கு இளையராஜாவும் இசையமைத்தனர். நான் கடவுளுக்கும் இளையராஜாதான் இசை.

அவன் இவனுக்கு மீண்டும் யுவன் இசையமைத்தார். இந்த நிலையில் தனது ஆறாவது படத்துக்கு இளையராஜா குடும்பத்துக்கு வெளியில் உள்ள ஒருவரை இசையமைப்பாளராக பாலா ஒப்பந்தம் செய்துள்ளது, திரையுலகில் இன்றைய பரபரப்பாக பேசப்படுகிறது.

பில்லா 2 நாயகி ஹூமா நீக்கம் - அஜீத் ஜோடி பார்வதி ஓமண குட்டன்!


அஜீத் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படமான பில்லா -2 ல் அவருக்கு ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்துஜா குழுமத்தின் ஐஎன் எண்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனமும், சுரேஷ் பாலாஜி-ஜார்ஜ் பயஸின் வைட் ஆங்கிள் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் படம் பில்லா 2.

சக்ரி டோலட்டி இயக்கும் இந்தப் படம், முன்பு ரஜினி நடித்து வெளியான பில்லாவின் முன் தொடர்ச்சியாகும்.

இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி பார்வதி ஓமணக்குட்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் 2008-ம் ஆண்டு மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டம் வென்றவர். 2008-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு போட்டியில் இரண்டாவதாக வந்தவர். இந்தியாவின் முன்னணி மாடலாகத் திகழும் பார்வதி, மிஸ் போட்டோஜெனிக், மிஸ் பர்சனாலிட்டி உள்பட பல பட்டங்களை வென்றுள்ளார்.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து பேசுகையில், "அஜீத்துக்கு ஜோடியாக, எடுத்த எடுப்பில் தமிழில் நடிப்பது பெருமையாக உள்ளது," என்றார்.

படம் ஆரம்பித்த போது, ஹூமா குரேஷி என்ற மாடல்தான் அஜீத் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

"ஆனால் படம் தொடங்கும் தேதியில் ஏற்பட்ட சில மாறுதல்கள் காரணமாக ஹூமாவின் தேதிகள் கிடைப்பது கடினமாகிவிட்டது. வேறு வழியில்லாத நிலையில், பார்வதியை தேர்வு செய்தோம். ஆனால், இந்தப் படத்துக்காக நடந்த ஆடிஷனில் அனைவரையும் கவர்ந்துவிட்டார் பார்வதி," என்று ஐஎன் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் விளக்கம் அளித்துள்ளது.

பிரேசில் மாடல் புருனா அப்துல்லா...

இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய வேடத்தில் பிரேசில் நாட்டின் பிரபல மாடல் புருனா அப்துல்லா நடிக்கிறார் என்பதை ஏற்கெனவே நாம் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். இப்போது அதனை ஐஎன் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

டிசம்பர் 13-ம் தேதி ரஜினிக்கு பிரமாண்ட பிறந்த நாள் விழா... வள்ளுவர் கோட்டத்தில் நடக்கிறது!!


வரும் டிசம்பர் 12 -ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள். இந்த நாளை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாகக் கொண்டாட சென்னை மாவட்ட ரஜினி மன்றங்கள் முடிவு செய்துள்ளன.

உடல்நிலை சீரடைந்து, புதுப்பிறவி எடுத்து வந்துள்ள ரஜினிக்கு, மிகப் பிரமாண்டமாக இந்த விழாவை எடுப்பதற்கான ஏற்பாடுகளில் சென்னை மாவட்ட ரஜினி மன்றத் தலைவர் என் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.

டிசம்பர் 12-ம் தேதி ரசிகர்கள் அந்தத்தப் பகுதியில் எளிமையாக ரஜினி பிறந்த நாளைக் கொண்டாடுவதென்றும், அதற்கடுத்த நாள் டிசம்பர் 13-ல் வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பங்குபெறும் பெரிய நலத்திட்ட விழாவாக நடத்துவதென்றும் ரஜினி மன்றங்கள் முடிவு செய்துள்ளன.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கவிருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதி ரசிகர் மன்றமும், தங்கள் பெயரிலேயே இந்த உதவிகளை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து வழங்கலாம்.

ரஜினிக்கும் அழைப்பு

ரஜினி சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பிறகு, ரசிகர்களைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியிருந்தனர். ஆனால் போயஸ் தோட்ட இல்லத்தின் பணிகள் மற்றும் ரஜினியின் ஓய்வு கருதி இதுவரை அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

எனவே, ரஜினி ரசிகர்களை அழைத்துச் சந்திப்பதைவிட, ரசிகர்கள் ஒன்று திரளவிருக்கும் அவரது பிறந்த நாள் விழாவுக்கே வருகை தந்து அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டால், ரசிகர்களின் மனக்குறை தீரும் என்ற நோக்கத்தில், ரஜினியையே விழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே இதுகுறித்து லதா ரஜினியிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அழைப்பாக இல்லாமல் ஒரு கோரிக்கையாக ரஜினியின் முன் வைத்துள்ளனர்.

ஒருவேளை இந்த விழாவுக்கு ரஜினி வரவில்லை என்றால், அவர் ரசிகர்களுக்கு விடுக்கும் பிறந்த நாள் செய்தியை வீடியோவாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட ரஜினி மன்ற தலைவர் என் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் ஆர் சூர்யா, கே ரவி, சைதை ரவி உள்ளிட்டோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

அடிக்கடி இமயமலை போகும் ரகசியம்... - விஷால் பேட்டி


இயமலையைத் தெரியாதவர்கள் இல்லை என்றாலும், அங்கே போய் ஆன்மீக அமைதி பெற்று வருவதை பிரபலமாக்கிய பெருமை சூப்பர் ஸ்டார் ரஜினிக்குதான் உண்டு. அதன் விளைவு, இமயமலை என்றதுமே உடன் நினைவுக்கு வருபவர் ரஜினிதான்.

இதனால், வேறு எந்த நடிகர் இமயமலையைப் பற்றிப் பேசினாலும், ரஜினியின் பாதிப்பு அல்லது ரஜினியைப் போல இமயமலைக்குப் போவதாக எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த இமயமலை நடிகர்கள் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் விஷால்.சமீபகாலமாக அடிக்கடி இமயமலைக்கு சென்று வருகிறாராம். ரஜினிகாந்தைப் போல் இவரும் ஆன்மிக பயணம் செல்வதாகவும், இமயமலையில் உள்ள குகைகளில் தங்கியிருந்து தியானம் செய்வதாகவும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

உண்மையில் இவர் எதற்காக இமயமலை போகிறார்... உண்மையிலேயே விஷயமிருக்கிறதா அல்லது பப்ளிசிட்டி ஸ்டன்ட்டா என கேள்வி எழுந்தது. அந்தக் கேள்வியை விஷாலிடமே கேட்டுவிட்டனர் நிருபர்கள்.

அவர் கூறுகையில், "இமயமலை, எனக்கு மிகவும் பிடித்த இடம். என் தந்தை ஜி.கே.ரெட்டி, 'ஐ லவ் இந்தியா' என்ற படத்தை தயாரித்தபோது, எனக்கு 16 வயது.

அந்த படத்தின் படப்பிடிப்பு இமயமலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடந்தது. அப்போதுதான் நான் முதன்முதலாக இமயமலைக்கு சென்றேன். 45 நாட்கள் அங்கு தங்கியிருந்தேன்.

அதன்பிறகு 10 முறை நான் இமயமலைக்கு போய் வந்து விட்டேன். 'அவன் இவன்' படம் முடிந்ததும், எனக்கு முழுமையான ஓய்வு தேவைப்பட்டது. அந்த படத்தில் நான் ஒன்றரை கண் உள்ளவனாக நடித்து இருந்தேன். அதனால் என் கண்களுக்கும், மனசுக்கும் ஓய்வு தேவைப்பட்டது. உடனே இமயமலைக்கு புறப்பட்டேன். அங்கு 10 நாட்கள் தங்கியிருந்தேன்.

இமயமலை செல்லும்போதெல்லாம் அங்குள்ள ஆனந்தா ஸ்பா என்ற இடத்தில்தான் தங்குவேன். அங்கிருந்து ரிஷிகேஷ், பத்ரிநாத், குலுமனாலி ஆகிய இடங்களுக்கு 'பைக்'கில் செல்வேன். பஸ் கூரை மீது கூட பயணித்திருக்கிறேன்.

ஆன்மீக பயணம் அல்ல...

ஆன்மிக பயணத்துக்காக நான் இமயமலை செல்வதில்லை. ஓய்வு எடுப்பதற்காகவே போகிறேன். என்னை அங்கு யாருக்கும் தெரியாது என்பதால், சுதந்திரமாக நடமாட முடிகிறது. அங்கு, கங்கா நதிக்கு தினமும் பூஜை நடைபெறுகிறது. ஒரே ஒரு நாள் அந்த பூஜையில் கலந்துகொண்டேன்.

லடாக்கில் மயங்கிய சமீரா

வடநாட்டில் எனக்கு பிடித்த இன்னொரு இடம், லடாக். ஆனால், அங்கு ஆக்சிஜன் குறைவு. 'வெடி' படத்துக்காக, 2 பாடல் காட்சிகளை அங்கு படமாக்கினோம். டாக்டர்கள் குழுவையும், ஆக்சிஜன் சிலிண்டரையும் கூடவே வைத்துக்கொண்டு படப்பிடிப்பை நடத்தினோம். அப்படியிருந்தும் சமீராரெட்டி மயங்கி விழுந்து விட்டார். ஒரு நாள் படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது,'' என்றார்.

அமெரிக்க சிகிச்சை முடிந்து மும்பை திரும்பினார் சல்மான்!


மும்பை: அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகர் சல்மான்கான், மும்பை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரகான சல்மான்கான் (வயது 45) ‘டிரைகெமினல் நியூரால்ஜியா’ என்ற நரம்புக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் முகத்தில் கன்னம், தாடைப்பகுதியில் தாங்க முடியாத வலியை அனுபவித்து வந்த அவர் அதிலிருந்து நிவாரணம் பெற அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக கடந்த மாதம் 29-ந் தேதி அமெரிக்காவுக்கு சென்றார்.

அங்கு பிட்ஸ்பர்க் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் 31-ந் தேதியன்று அவருக்கு 8 மணி நேரம் ஆபரேஷன் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து குணம் அடைந்தார்.

பிக்பாஸ் சீஸன் 5-ல் பங்கேற்பு

நேற்று முன்தினம் இரவில் அவர் விமானம் மூலம் மும்பை திரும்பினார். அவரை குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பிரசித்தி பெற்ற ‘பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ’வின் 5-வது சீசன் தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) மும்பை மெகபூப் ஸ்டூடியோவில் நடக்கிறது. ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி இந்த நிகழ்ச்சியில் சஞ்சய் தத்துடன் சல்மான்கான் கலந்துகொள்கிறார்.

பழம்பெரும் நடிகர்-இயக்குநர் எஸ்.ஏ.கண்ணன் மரணம்


சென்னை: பழம்பெரும் நடிகர்-இயக்குநர் எஸ்.ஏ.கண்ணன், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

சக்தி நாடக சபா மற்றும் சிவாஜி நாடக மன்றத்தில் பணிபுரிந்தவர், எஸ்.ஏ.கண்ணன். பராசக்தி, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார். சிவாஜிகணேசன் நடித்த ‘தங்கப்பதக்கம்,’ ‘வியட்நாம் வீடு’ ஆகிய நாடகங்களை இயக்கியுள்ளார். சத்யம், தனிக்குடித்தனம், கீதா ஒரு செண்பகப்பூ ஆகிய படங்களை டைரக்டும் செய்தார்.

இவருடைய மனைவி காமாட்சி ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். எஸ்.ஏ.கண்ணன் தனது மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, தூக்கத்திலேயே மரணம் அடைந்தார்.

மரணம் அடைந்த எஸ்.ஏ.கண்ணனின் சொந்த ஊர், தஞ்சை மாவட்டம் சாலியமங்களம். அவருக்கு ஒரு மகளும், 3 மகன்களும் இருக்கிறார்கள்.

அவருடைய உடல் தகனம் சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள மயானத்தில் நேற்று மாலை 4 மணிக்கு நடந்தது.

உள்ளாட்சித் தேர்தல்... பிரச்சாரத்துக்குப் போவாரா வடிவேலு?


கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஹைலைட்டாக அமைந்தது நடிகர் வடிவேலுவின் பிரச்சாரம்.

விஜயகாந்துக்கு எதிராக அவர் செய்த அந்தப் பிரச்சாரம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்தாலும் போகப் போக நாராசமாகி, அவர் திரையுலக வாழ்க்கையை தற்காலிக ஓய்வு கொள்ள வைத்தது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், வடிவேலு சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார் எனும் அளவுக்கு அமைதியாக உள்ளார். இத்தனைக்கும் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடியன் அவர்தான். அவரை வைத்துப் படமெடுக்க இயக்குநர்கள் பெரும் ஆர்வத்தோடு இருந்தாலும், அவரிடம் போக முடியாமல் தவிக்கிறார்கள்.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலிலும் அவர் திமுகவுக்கு ஆதரவாக களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

“முன்பாவது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார் விஜயகாந்த். இப்போதோ அவரே ஒரு கூட்டணிக்குத் தலைமை வகிப்பதால், நீங்கள் பிரச்சாரம் செய்ய எந்த தயக்கமும் இல்லையே, முதல்வரும் கூட இதை அமைதியாக ரசிப்பாரே,” என்று வடிவேலுவிடம் எடுத்துக் கூறினார்களாம்.

இன்னொரு பக்கம், விஜயகாந்த் அணியை மட்டும் குறிவைத்துப் பிரச்சாரம் மேற்கொள்ள முடியுமா என முக்கிய பிரமுகர் ஒருவரிடமிருந்தும் வடிவேலுவுக்கு தூது வந்ததாகச் சொல்கிறார்கள்.

ஆனால் வடிவேலு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லையாம். நமது பிரச்சாரம் எதிர்மறை விளைவைத் தந்துவிடுமோ என்ற நினைப்பு அவருக்கும் இருப்பதால், யோசித்து ஒரு முடிவைச் சொல்வதாகக் கூறியுள்ளாராம்.

எதற்கும் ஒரு முறை கருணாநிதி மற்றும் முக அழகிரியை பார்த்துவிடவும் வடிவேலு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா