Saturday 24 September 2011

நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அன்பான வேண்டுகோள்



சனல்4 தொலைக்காட்சியில் இடம்பெற்ற சிறீலங்காவின் கொலைக்களம் நோர்வேயின் தேசிய ஊடகமான NRK2இல் எதிர்வரும் செவ்வாய்(27.09.2011) இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.



நோர்வே ஈழத்தமிழர் அவையின் நீண்ட முயற்சியின் பயனாக சிறீலங்கா பேரினவாத அரசால் தமிழ்மக்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட கோரக்கொலைகளின் காட்சி பெட்டகம் நோர்வேயிலும் முதல் முறையாக ஒளிபரப்பப்படவுள்ளது.



ஆகவே நோர்வேயில் வாழ்கின்ற தமிழ் உறவுகள் நோர்வேஜிய நண்பர்களுக்கும் பிற இனத்தவர்களுக்கும் இச்செய்தியை பரிமாறி அதிகமான மக்கள் பார்ப்பதர்க்கு பரப்புரையை மேற்க்கொள்ளவேண்டும் எமது மக்கள் பட்ட துன்பதுயரங்கள் ஏக்கங்கள் வீண்போகாது அவர்களின் சுதந்திமான வாழ்வுக்காக சர்வதேசப்பரப்பில் போராடவேண்டிய பாரிய பங்கு எம்மிடமுள்ளது.



இந்த தார்மீகக்கடமையை அனைவரும் உணர்ந்து நாகரீக உலகத்தில் எமது உறவுகள் அநியாயமாக கொல்லப்பட்ட கொலைக்கள காட்சிகளை சர்வவேச சமுகத்தின் கண்களின் ஊடாக இதயத்தில் ஈரத்தை ஏற்படுத்த ஒன்றுபடுவோம்.வேலைத்தளங்களில் பாடசாலைகளில் உங்களின் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள் காலத்தின் தேவையுணர்ந்து கைகோர்த்து ஞாலத்தினை வெல்வோம்.



கிளிநொச்சியில் பலர் மனஅழுத்தம் கொண்டவர்களாக உள்ளனர்.ரொயட்டர்


போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் மனநிலை பாதிக்கப்பட்ட பலர் இனங்காணப்பட்டுள்ளதாக ரொயட்டர் செய்திசேவை தெரிவித்துள்ளது. ரொயட்டர் செய்திச்சேவை கிளிநொச்சியில் சேகரித்த தகவல்களின்படி, இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாம் போரின் போது முகங்கொடுத்த கோரங்களில் இருந்து மக்கள் இன்னும் மீளத்திரும்பவில்லை


ரஞ்சனி என்ற பெயரைக்கொண்ட பெண் ஒருவர், போரின் போது தமது தாயின் சடலம் எரியுண்டதையும், தமது சகோதரி இரத்தம் தோய்ந்த நிலையில் வீழ்ந்து கிடந்தமையையும் உறவினர்கள் கண்முன்னே கொல்லப்பட்டமையையும் நினைவுக்கூருவதை ரொயட்டர் சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தனை சம்பங்களை நேரில் கண்ட தாமும் இறந்திருக்கவேண்டும் என்றும் ரஞ்சனி கூறிய கருத்தை ரொயட்டர் கிளிநொச்சி மக்களின் எதிர்கால வாழ்வின் சந்தேகத்துக்கு உதாரணமாக காட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நிதியின் கீழ் கிளிநொச்சியில் பணியாற்றும் தன்னார்வ தொண்டர் ஒருவர், இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள், முன்னெடுக்கப்படுகின்ற போதும் மக்கள் வாழ்வியல் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தற்கொலை சம்பங்களும் துர்நடத்தைகளும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். சிலர் தமது மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்காக விலைக்குறைந்த மதுபானங்களை வீதியோரங்களில் இருந்து அருந்;துவதாக ரொயட்டர் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை போரின் பின்னர் சிலரே தமது மன அழுத்தங்களுக்காக ஆலோசனை பெற்றுக்கொள்கின்றனர்.

கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூவபதி கேதீஸ்வரனின் தகவல்படி, உளவியல் மனோதத்துவ நிபுணர்கள் உரிய எண்ணிக்கையில் இருந்தால், தமது மாவட்டத்தில் மன அழுத்தம்; என்ற பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் 120 ஆயிரம் பேருக்கு ஒரு மனோதத்துவ நிபுணர் மாத்திரமே பணியில் இருப்பதை ரூபவதி கேதீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்

விபச்சாரிகளினால் அழிக்கப்படும் யாழ்ப்பாணம்


இலங்கை ஆட்சியாளர்களால் காலம் தொட்ட தமிழ் மக்களை அடியோடு அழிப்பதற்கான திட்டமிடல்கள் வகுக்கப்பட்டு வருகின்றமை வழமை.

அத் திட்டமிடல்கள் சிலவேளைகளில் தோல்வியைக் கண்டிருந்தாலும் கூட அண்மைக் காலத்தில் பெரு வெற்றியை ஆட்சியாளர்களுக்கு அளித்துள்ளது எனலாம்.

ஏனெனில் எம்மினத்தின் சில புல்லுருவிகள் குருவிச்சை மரம் போன்று ஒட்டி நிற்பது அவர்களுக்குத் தற்காலத்தில் ஏற்பட்ட வெற்றிகளுக்குக் காரணம் என்பது மறுக்க முடியாத ஒன்று.

இது இவ்வாறிருக்க இலங்கையில் விபச்சாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என ஒரு அதிர்ச்சித் தகவல் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

அதேநேரத்தில் யாழ்ப்பாணத்தின் தாவடி, மானிப்பாய்ப் பகுதியில் மகரகமவில் இருந்து அழைத்து வரப்பட்ட சிங்கள இளம் பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும், அப் பெண் பாலியல் தொழிலுக்காகவே அழைத்து வரப்பட்டதாகவும் பொலிஸாரின் முதல்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.

எனவே இவ்வாறான சம்பவங்கள், தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் வேளைகளில் யாழ்ப்பாண இளைஞர்களை பால் நிலை கொண்டு தாக்கும் ஒரு செயற்பாடுகள் தற்போது அரங்கேற்றப்பட்டு வருகின்றது எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

அதாவது யாழ்ப்பாண இளைஞர்களின் போராட்டங்களையும், அவர்கள் கொண்டுள்ள தமிழ்த் தேசிய உணர்வலைகளையும் திசை திருப்பும் நோக்கத்தோடும் இத்தகைய செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றது எனலாம்.

யாழ்ப்பாபணப் பகுதிகளில், பாலியல் தொழிலில் ஈடுபடும் சிங்களப் பெண்களைக் களமிறக்கி அப் பகுதி இளைஞர்கள் மத்தியில் பாலியல் தொடர்பான நோய்களைப் பரப்பி அவர்களை அழிக்கும் ஒரு நயவஞ்சகச் செயல் நடந்தேறுவதற்கான அறிகுறிகள் தற்போது தென்படுகின்றது.

எனவே கடந்த கால ஆட்சியாளர்களினால் தமிழ் மக்களை அழிக்கும் திட்டமிடலுக்கு ஏற்ப தற்கால அரசு இச் சூழ்ச்சியைச் செய்து யாழ்ப்பாண மக்களின் கலாசாரத்தைச் சிதைத்து இளைஞர்களை இயற்கையின் உபாதைக்குள் தள்ளும் ஒரு திட்டம் நடந்தேறப் போகின்றது என்பதை ஊகித்துக் கொள்ள முடிகின்றது.

கடற்புலிகளின் போர்த்தந்திரங்களை இந்தியாவுக்குக் கற்றுக் கொடுத்தது சிறிலங்கா


இந்திய-சிறிலங்கா கடற்படைகள் திருகோணமலைக் கடற்பரப்பில் மேற்கொண்டு வந்த கூட்டுப் போர்ப்பயிற்சி ஒரு நாள் முன்னதாக- நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

போர்ப்பயிற்சியின் இறுதி நாளான நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவும், இந்தியாவின் ஏவுகணைப் போர்கப்பலான ‘ஐஎன்எஸ் சிவ்லிக்‘ இல் இருந்து இறுதிநாள் போர்ப்பயிற்சிகளை அவதானித்துள்ளனர்.

செடெக் உலங்குவானூர்தி மூலம் இவர்கள் இந்தியப் போர்க்கப்பலுக்குச் சென்றிருந்தனர்.

இந்தப் போர்ப்பயிற்சியின் ஒரு கட்டத்தில் கடந்த ஆண்டில் இந்தியக் கடற்படையில் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ‘ஐஎன்எஸ்.சிவ்லிக்‘ இல் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அமெரிக்க இயந்திரத்துடன், கட்டப்பட இந்தப் போர்க்கப்பலில் ரஸ்ய - இந்திய ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தப் போர்ப் பயிற்சியில் இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் ரண்விஜய், ஐஎன்எஸ் சிவ்லிக், ஐஎன்எஸ் காரியல், ஐஎன்எஸ் கஞ்சர், ஐஎன்எஸ் செரியம், ஐஎன்எஸ் கோரதீவ் ஆக ஆறு போர்க்கப்பல்களுடன் கடற்படை உலங்குவானுர்திகளும், டோனியர் கண்காணிப்பு விமானம் ஒன்றும் பங்குபற்றியிருந்தன.

சிறிலங்கா கடற்படையின் சார்பில் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான சாகர மற்றும் சமுத்திர, ஏவுகணைப் போர்க்கப்பலான நந்திமித்ர, அதிவேக பீரங்கிப் படகுகளான பிரதாப, ரணஜய மற்றும் ஆறு அதிவேகத் தாக்குதல் படகுகள் என மொத்தம் 11 போர்க்கலன்களும் பங்கேற்றிருந்தன.

இந்தியக் கடற்படை சார்பில் சுமார் 1200 துருப்புகளும், கிட்டத்தட்ட அதேயளவான சிறிலங்கா கடற்படையினரும் இந்தப் போர்ப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர்.

இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் போர்ப்பயிற்சியை அனைத்துலக சமூகமும், கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளும் கவனமான அவதானித்து வருவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிய படகுகளின் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்த அனுபவங்கள் சிறிலங்கா கடற்படைக்கு நிறைவே இருப்பதாகவும், இத்தகைய தாக்குதல்களை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பது குறித்து தாம் அறிந்து கொண்டுள்ளதாகவும் இந்தப் போர்ப்பயிற்சிக்கு தலைமை தாங்கிய இந்திய கடற்படையின் கிழக்கு தளபதி றியர் அட்மிரல் எச்.சி.எஸ்.பிஸ்ற் தெரிவித்துள்ளார்.

சிறிய படகுகள் மூலமான தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த பயிற்சி ஊடகவியலாளர்களுக்கும் காண்பிக்கப்பட்டது.

சிறிலங்கா கடற்படையின் சிறிய தாக்குதல் படகுகளைக் கொண்ட அணியொன்று இந்தியப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சிவ்லிக் மீது தாக்குதல் நடத்திய போது, மரபுசார்ந்த ஆயுதங்களைக் கொண்ட பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.


அது பயனற்றுப் போக சிறிய ஆயுதங்களைக் கொண்ட படகுகள் மூலம் அந்தத் தாக்குதலை முறியடிப்பது போன்று அந்தப் போர் ஒத்திகை அமைக்கப்பட்டிருந்தது.

இதன்போது கடற்புலிகள் சிறிய படகுகளைக் கொண்டு போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தக் கையாண்ட போர் உத்திகளை சிறிலங்கா கடற்படை, இந்தியக் கடற்படைக்கு செயல்முறையில் விளக்கமளித்துள்ளது.

இந்திய- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் முதலாவது கூட்டுப்பயிற்சி 2005ம் ஆண்டில் நடத்தப்பட்டது.

ஆண்டுதோறும் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் போர்ப்பயிற்சி சிறிலங்காவில் போர் தீவிரமடைந்ததை அடுத்துக் கைவிடப்பட்டது.

போர் முடிவுக்கு வந்த நிலையில் இந்தப் போர்ப் பயிற்சி மீளத் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியப் பாதுகாப்புச் செயலர் பிரதீப்குமார் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தின் போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டிருந்ததாகவும், இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.


இந்தப் போர்ப்பயற்சி கடந்த 19ம் நாள் தொடக்கம் 24ம் நாள் வரையான ஆறு நாள்கள் நடைபெறும் என்று முன்னதாக இருதரப்பினாலும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒரு நாள் முன்னதாகவே இந்தப் போர்ப்பயிற்சி முடித்து கொள்ளப்பட்டுள்ளது.

போர்ப்பயிற்சிகளை இன்று முடித்துக் கொண்டு திருகோணமலையில் இருந்து புறப்படத் திட்டமிட்டிருந்த இந்தியப் போர்க்கப்பல்கள், ஒருநாள் முன்னதாகவே பயிற்சிகளை முடித்துக் கொண்டு நேற்று மாலையே புறப்பட்டுச் சென்றுள்ளதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

எனினும் ஒருநாள் முன்னதாகவே போர்ப்பயிற்சி முடித்துக் கொள்ளப்பட்டு, இந்தியப் போர்க்கப்பல்கள் அவசரமாக புறப்பட்டுச் சென்றதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.நன்றி புதினப்பலகை







அமெரிக்க நீதிமன்றத்தில் சவேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்கு.அழைப்பாணையும் வழங்கப்பட்டது


சிறிலங்கா ஜனாதிபதி ராஜபக்ச ஐ.நா.சபையில் உரையாற்றிய நேற்று (23.09.2011) காலை அமெரிக்க பல்கலைக் கழகத்தின் வாசிங்டன் கல்லூரியின் சட்டபீடம், நியூயோர்க் பகுதியின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவின் பதில் தூதுவர் சவேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்துள்ளது.சிறிலங்காவின் உதவித் தூதுவர் சவேந்திர சில்வா அந்நாட்டின் இராணுவத்தில் 58வது படையை தலைமை வகித்து நாற்பது ஆயிரத்துக்கு மேலான அப்பாவித் தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட காரணமாக இருந்தவராவர்.

இதற்கு பரிசான அந்நாடு ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவின் பதில் தூதுவர் பதவியை அவருக்கு அளித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவை இவ்வாரம் ஆரம்பித்து சிறப்பாக நடைபெறும் இவ்வேளையில், ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவின் பதில் தூதுவரை போர்க்குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அதற்கான அழைப்பாணையை சவேந்திர சில்வாவுக்கு வழங்கியது.

அவ்வழைப்பாணை நியூயோர்க்கில் உள்ள அவர் வாசஸ்தலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது அவர் அங்கிருக்கவில்லை. அவர் வீட்டில் இருந்த சிங்கள வாலிபர் ஒருவர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முனைந்தார். அவர் தொடர்பு கிடைக்காத நிலையில் சவேந்திர சில்வா சார்பில் நீதிமன்ற அழைப்பாணையை அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிகழ்வை அல்ஜசீரா தொலைக்காட்சி நேரடியாக காட்சிப்படுத்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேசின் மனைவி மற்றும் பாதிக்கப்பட்ட சில தமிழர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கு ஒரு குற்றவியல் வழக்கு அல்ல
என்பதும், நட்டஈடு கோரும் ஒரு வழக்காகும்.

58வது படையணியின் கொமாண்டராக ஜெனரல் சவேந்திர சில்வா மிகவும் கொடுமையானதும் தமிழ் மக்களுக்கு எதிராக அதிக துன்பங்ளையும் விளைவித்த போரை நடத்தினார். வார்த்தைகளால் வடிக்க முடியாத கொடும் துயரை நேரடியாக அப்பாவி தமிழ் மக்கள் மேல் ஏவியவர்.

பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் சிறிலங்கா இராணுவம் மிக அதிகளவில் போர்க்குற்றங்களையும் மனித இனத்திற்க்கு எதிரான குற்றங்களையும் இழைத்தது.

குறிப்பாக பாதுகாக்கப்பட வேண்டிய பொதுமக்களையும் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களான வைத்தியசாலைகளையும் ஜெனரல் சில்வாவின் சிங்கள படைகள் நேரடியாக தாக்கியது
சிறிலங்காவின் சட்டத்தை மட்டுமல்ல அமெரிக்கச் சட்டம், பல்நாடுகளின் சட்டம் அனைத்தையும் மீறய செயலாகும்.

ஜெனரல் சில்வாவும் அவரது படையினரும் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பல உறுப்பினர்களையும் சித்திரைவதை செய்து கொலை செய்திருப்பது போர் விதிகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களாகும்.

பல்நாட்டுச் சட்டங்கள், உள் நாட்டுச் சட்டங்கள் அனைத்தையும் அதிர்ச்சியூட்டும் முறையில் முழுமையாக மீறியும் இரண்டு ஆண்டுகள் கழிந்தும் நடவடிக்கை ஒன்றுமேயில்லை என வேதனைப்படும் மக்கள் ஒருபுறம். தொடர்ந்தும் துன்பங்களை அடக்கப்பட்ட நிலையில் வாழும் மக்கள் மறுபுறம்.

இறுதியாக இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் பதில் சொல்லவேண்டிய காலம் வந்து விட்டது என உறவுகளை இழந்தவர்களும் போரில் தப்பிப் பிழைத்தவர்களும் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.

அமெரிக்க நீதிமன்றம் நீதிக்கும் செய்த குற்றங்களுக்கும் பதில் சொல்லும் பொறுப்பும் கொடுக்காவிட்டால் சிறிலங்காவில் குற்றம் இழைத்தவர்கள் தொடர்ந்தும் தண்டனை பெறுவதிலிருந்து தப்பலாம் என்றே எண்ணுவர் என வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞ்சர் அலி பெய்டுன் அவர்கள் குறிப்பிட்டார்.

இச் சட்டநிபுணர் அமெரிக்க பல்கலைக் கழகத்தின் வாசிங்டன் கல்லூரியின் சட்டபீடத்தில் மனித உரிமைகள் மீறல் விடயத்தில் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய துறையில் முன்னணி வகிக்கின்றவர்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கையில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் கொலை செய்யப்பட்டார்கள் எனக் குறிப்பிடுகின்றது.
இரு ஆண்டுகள் கழிந்தும் எவ்வித விசாரணைகளோ போர்க்குற்றங்களையும் மனித இனத்திற்க்கு எதிரான குற்றங்களையும் இழைத்தவர்களுக்கு எதிராக வழக்குகளோ தாக்கல் செய்யப்படவில்லை.

இன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒரு சிறிய ஆனால் மிகவும் குறிப்பிடத்தக்க முயற்சி எனவும் சிறிலங்காவின் கடற்கரைகளில் இரத்தக்களரியை ஏற்படுத்;தியவர்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறோம். அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கு மட்டும் எமது முயற்சி தொடரும் எனவும் குறிப்பிட்டார் சட்டவல்லுநர் பெய்டுன்.

பல்நாட்டுச் சட்டங்கள் உள் நாட்டுச் சட்டங்கள் அனைத்தையும் மீறியவர்களுக்கு நிவாரணமும் நீதியும் தேடும் இம் முயற்சி the Alien Tort Claims Act (ATCA) and Torture Victim Protection Act (TVPA). எனும் சட்டங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இச்சட்ட வரைவாக்கங்கள் அமெரிக்க நீதிமன்றங்களுக்கு மனித உரிமை மீறல்களை வெளிநாட்டில் புரிந்தாலும் அமெரிக்கா ஒரு பாதுகாப்பும் வழங்கும் இடமாக அமையாது என்பது உறுதி.

நியூயோர்க் நகரில் 66 பேர் ஐ.நா பொதுச்சபையில் கலந்து கொள்ள வந்திருக்கும் சிறிலங்கா அரசு தலைவர் மகிந்த ராஐபக்சவுக்கு எதிராக பல ஆயிரம் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கும் இவ்வேளையில், நீதியையும் செய்த கொடுமைகளுக்கு பொறுப்பு ஏற்கும் நிலைமைகளை உருவாக்கியிருக்கும் இச்சந்தர்ப்பம் நியூயோர்க் மட்டுமல்ல உலகம் பூராகவும் எதிரொலிக்கப் போகின்றதே எமது நம்பிக்கை.

தமிழினப் படுகொலைக்கு பொறுப்பானவர்கள் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் சட்டரீதியான எமது நடவடிக்கைகள் தொடரும் என உலகத் தமிழர் பேரவை உறுதிபடத் தெரிவித்துள்ளது.

Friday 23 September 2011

போர்க்குற்றத்திற்கு ஆசான் இந்திய அமைதிப்படையே!

கடந்த செப்டம்பர் 19 நாளன்று, சேவ் தமிழ் இயக்கம் சார்பில், ”போர்குற்ற வரலாற்றில் ராஜீவும் ராஜபக்சவும்” என்னும் தலைப்பில் ஒரு அரங்கக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

பெருமளவானோர் கலந்துகொண்ட அரங்கக் கூட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள் உரையாற்றுகையில்,

இலங்கை அதிபர் ஜெயவர்த்தன என்னும் சிங்கள இராஜதந்திரியின் சதிவலையில் விழுந்த ராஜீவ், இந்திய பாராளுமன்றத்தின் தீர்மானமும், ஒப்புதலும் இல்லாமல் அடுத்த நாட்டின் பிரச்சினைக்கு தனது நாட்டு இராணுவத்தை அனுப்பினார். இது இந்திய வெளியுறவுத்துறை செய்த மிகப்பெரிய தவறு.

ஆனால், இலங்கை சென்ற இரண்டு மாதங்களுக்குள்ளேயே இந்திய அமைதிப்படை தமிழர்களுக்கெதிரான தனது தாக்குதலை ஆரம்பித்தது. இந்த தமிழர்களுக்கெதிரான பல்முனைத் தாக்குதல் 87, 88, 89 என மூன்று வருடங்கள் நடந்தது.

போரின் பின்பு யாழ்ப்பாணம் சென்றிருந்த நான் 12 வயது சிறுமியிடம் பேசினேன்."அண்ணா, சிங்கள இராணுவம் பற்றி எங்களுக்குத் தெரியும், ஆனால் இந்திய இராணுவம் வந்தவுடன் சுதந்திரம் (பாதுகாப்பு) கிடைத்துவிடும் என்று நினைத்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை. இந்திய இராணுவமும் எங்களுக்கு கொடுமைகள் தான் புரிந்தது”என்றாள்.

இது இந்திய ஈழத்தமிழருக்கு செய்த சரித்திர துரோகம். ஈழத்தமிழருக்கு இந்தியாவுடன் பல்லாயிரமாண்டுகால உறவு உள்ளது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான வெளியுறவு கொள்கையை இந்தியா இலங்கையில் கடைபிடிக்கவில்லை.

வடகிழக்கு, காஷ்மீர், மத்திய மலைவாழ் மக்கள் என எங்குமே இந்தியா ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆனால், தமிழகம் எப்படி அவர்களுக்காக போராடாமல் ஒதுங்கியது என்பதுதான் ஆச்சரியம்.

2009-ல் ஏற்பட்ட இழப்புக்கு 1987-ல் இந்தியா வித்திட்டது- 1987-ல் ஜெயவர்த்தன ஜே.வி.பி. கூட்டத்தில் பேசினார். “நாம் செய்ய வேண்டியதை இந்திய இராணுவம் செய்யும்” என்று அவர் திட்டமிட்டு இந்தியாவையும், புலிகளையும் மோத வைத்தார்.

ஈழம் என்பது பல்லாயிரமாண்டு கால சரித்திர உண்மை. அது 1940-களுக்கு பிறகு சிங்கள இனவாதிகளின் அடக்குமுறையால் வலுப்பெற்றது. அந்த இன அடக்குமுறைக்கு எதிராக நாம் குரல் கொடுப்பது தீவிரவாதம் ஆகாது. ஆனால், அரசாங்கம் தீவிரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் நாம் நமது அகிம்சையான பேராட்டங்களை கூட விட்டு விட்டு ஒதுங்கினோம்.

இந்தியாவுக்கு எப்போதும் சிங்களவரிடம் இருந்து பிரித்து தமிழர்களுக்கு உரிமை பெற்று தருவதில் விருப்பம் இல்லை. ஆனால், நமது எண்ணம் மாறுபட்டது. மனித உரிமைகள் எங்கே ஒடுக்கப்பட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். அதுவும் ஒடுக்குவது இந்தியா எனும்போது நாம் அதிகமாக குரல் கொடுக்க வேண்டும். நமக்கு அந்த உரிமையுண்டு.

2500 சிங்கள இராணுவ வீரர்கள் யாழ்ப்பாணத்தின் விடுதலைப்புலிகளின் முற்றுகைக்குள் சிக்கியபோது இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி சிங்கள இராணுவ வீரர்களை விடுவித்தது. அதே இந்தியாவிற்கு தங்களின் செயற்கைகோள் படங்களில் 3 லட்சம் மக்கள் உணவு, தண்ணீர், மருந்துகள் இல்லாமல் தாக்கப்பட்டது தெரியாதா? ஏன் அவர்களை காப்பாற்ற இந்திய நடவடிக்கை எடுக்கவில்லை?

சேவ் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் பேசுகையில்,

நான்காம் கட்ட ஈழப் போரில் சிங்களப் பேரினவாத அரசு புரிந்த இனக்கொலை குற்றத்திற்காக அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஈழத் தமிழர்களும், தமிழ்நாட்டு தமிழர்களும் போராட்டங்களைத் தீவிரப் படுத்திக் கொண்டிருந்தோம். 2009 லிருந்து இரண்டாண்டுகளைக் கடந்தும் ஆறாத காயங்களுடன், அடங்காத சினத்துடன் தமிழக அரசியல் வெளியைத் தமிழீழ ஆதரவு குரல் நிரப்பியிருந்தது. இனி இது ஈழத் தமிழர் பிரச்சனை அல்ல இது தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்குமான பிரச்சனை என்று வளர்ந்து கொண்டிருந்தது. ஈழ ஆதரவு இயக்கம். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இனக்கொலை குறித்த விவாதம் நடப்பதற்குப் பல முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்தச் சூழலில் தான் இந்திய அரசு பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் தூக்குத் தண்டனைக்கு நாள் குறித்தது. மூன்று தமிழர்களின் உயிரைப் பணயம் வைத்து இனக்கொலை விசாரணை கோருவதைவிட்டு தமிழகத்தை விலகச் செய்தது மட்டுமின்றி ராசீவ் கொலையை மீண்டும் தமிழக மக்களின் நினைவுக்கு கொண்டுவந்து குற்றவுணர்ச்சியைத் தூண்டி வெற்றி கண்டுள்ளது.

மேலும் தெற்காசிய பிராந்தியத்தில் எந்த ஒரு மூலையிலும் போர்குற்ற விசாரணை என்ற ஒன்று நிகழாது தடுத்து நிறுத்த இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது. இலங்கையை காப்பாற்ற மட்டுமின்றி தன் சொந்த நலனுக்காகவும் தெற்காசிய பிராந்தியத்தில் எந்த ஒரு தேசிய இனத்திற்கு எதிராக நடந்து வரும் போர்குற்றங்கள் குறித்த விசாரணையை இல்லாது செய்து வருகிறது இந்தியா.

இன்று தமிழக மக்களிடம் இலங்கைக்கு எதிரான போர்குற்ற விசாரணை தேவை என்ற முழக்கங்கள் தீவிரமடைந்திருப்பதை நன்கு உணர்ந்த இந்தியா, மக்களை போர்குற்ற விசாரணையில் இருந்து திசைதிருப்பும் நோக்கோடு மூவரின் தூக்குதண்டனைக்கான நாள் குறித்தது.

மூன்று தமிழர் உயிரை மீட்பதென்பதைத் தமிழகம் தன்னுடைய மானப் பிரச்சனையாக உணர்ந்தது. இந்த முறை போராட்டம் செங்கொடி தீக்குளிப்போடு ஒரு உயிரை இழந்து நின்று கொண்டுள்ளது. மக்கள் போராட்டத்தின் ஒரு பயனாக தமிழக சட்டசபை ’தூக்கை நிறுத்த வேண்டும்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. உண்மையில் சட்டப் போராட்டத்தின் மூலம் தூக்கு இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சிங்கள அரசுகள் அனைத்துலக அரங்கில் தங்களை இனக்கொலை குற்றத்திலிருந்து காத்துக் கொள்வதற்கான அரச தந்திர கைவரிசைகளைக் கவலையின்றி செய்து கொண்டிருக்கின்றன.

ஒன்றரை இலட்சம் உயிர்கள் இந்திய அரசின் உதவியுடன் கொல்லப்பட்ட பின்பே தமிழக மக்கள் ’ராசீவ் கொலை’ என்ற குற்றவுணர்ச்சியிலிருந்து மீளத் துணிந்துள்ளனர். ஆனால் 2011 ல் நின்று கொண்டிருந்த நம்மை மீண்டும் 1991 க்கு தள்ளிவிட்டது இந்திய அரசு. மூன்று தமிழர் உயிர் என்றோம். பகைவர்கள் ’ராசீவோடு உயிரிழந்த 18 தமிழர்களின் உயிருக்கு என்ன பதில்?’ என்று நம் பக்கமே திருப்பி விடுகின்றார்கள். நாம் அரசியல் நியாயமற்றவர்கள் போல சித்தரிக்கப்படுகின்றோம். ஆனால் அதுவா உண்மை?

ராசீவ் கொலை என்பது இந்திய அமைதிப் படை ஈழத் தமிழர்க்கு எதிராக செய்த அட்டூழியங்களின் எதிர்வினையாகவே நடந்தது என்ற உண்மை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

ராசபக்சேவை இனக்கொலை குற்றத்திலிருந்து காத்து தமிழீழ விடுதலைக்கு தடை போடத் தானே இந்திய அரசு நினைக்கின்றது. ராசபக்சே மட்டுமல்ல ராசீவ் காந்தியும் போர்க்குற்றவாளியே என்ற உண்மையைப் போட்டுடைப்போம். அது உண்மையில் மூன்று தமிழர் உயிர் காக்கும் மக்கள் போராட்டங்களை விரிவாக்கும்.

சிங்கள இராணுவம் இலட்சத்து ஐம்பதாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது என்றால் ராசீவின் இந்திய இராணுவமும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்துள்ளது. சிங்கள இராணுவத்தைப் போலவே இந்திய இராணுவமும் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறைக் கொடுமைகளை நிகழ்த்தியது.

ராசபக்சே வெள்ளை கொடி ஏந்தி வந்தவர்களைக் கொல்ல சொன்னது போல் ராசீவும் சமாதானம் பேசப் போன பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்டார். ‘என் இராணுவம் மனிதாபிமான நடவடிக்கை மேற்கொண்டது’ என்று ராசபக்சே சொன்னது போல் ‘இந்திய இராணுத்தினர் ஒரு கையைப் பின்னால் கட்டிக் கொண்டு ஒற்றைக் கையால் கவனமாக சண்டைப் போடுகின்றனர்’ என்று ராசீவும் அன்று சொன்னார்.

ராசபக்சே போல ராசீவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க நினைத்தார். ஈழத் தமிழர்தம் தமிழீழ தாயக வேட்கை உலகத் தமிழர்களின் தாகமாக மாறும் என்று ராசபக்சே கருதியிருக்கவில்லை. அது போல் அன்று புலிகளின் தாகம் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் தாகமாக மாறி போராட்டம் புது வேகம் எடுக்கும் என்று ராசீவும் நினைக்க வில்லை.

எனவே, ராசீவும் ராசபக்சேவும் வரலாற்றின் அடுத்த அடுத்தப் பக்கங்களிலேயே நின்று கொண்டிருக்கின்றார்கள். இருபது ஆண்டுகளாக இருட்டடிக்கப்பட்ட உண்மைகளை ஊருக்கு உரக்க சொல்வதற்கு இது தான் தருணம். இதை நாம் முன்பே செய்திருக்க வேண்டும். இப்போதும் செய்யாமல் விட்டால் தான் அது பிழை.

இன்று போர்க்குற்றங்கள் பற்றிய பரவலான விழிப்புணர்வு மக்களுக்கு இருக்கின்றது. இப்போதாவது இந்திய அமைதி படையின் அட்டூழியங்களை அம்பலமாக்குவோம். நமக்கு வலியைக் கொடுக்க நினைக்கும் இந்திய அரசுக்கே வலியைத் திருப்பி தருவோம்.

20 ஆண்டுகளுக்கு முன் நடந்த ராசீவ் கொலை என்ற அரசியல் பிழையை திருத்தி எழுத நமக்கு இருக்கும் ஒற்றை வழி ராசீவின் பிம்பத்தைத் தகர்த்தெறிவதே. ராசீவ் போர்க்குற்றவாளி! இராசபக்சே இனக்கொலையாளி!

தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்களின் உரை:

இன்று ராஜபக்சே நடத்திய இனப்படுகொலைகளுக்கு ‘முன்னோடி’ இந்திய இராணுவம் தான் என்பதை ஒப்பிட்டுக் காட்டுவதற்காக சில நிகழ்வுகளை மட்டும் கூறுவது பொருத்தமாக இருக்கும்.

சாட்சிகளற்ற இனப் படுகொலைகளை’ நடத்தியது சிறீலங்கா அரசு. அதற்காக முதலில் ஆட்சிக்கு எதிராக எழுதிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதைத் தான் இந்திய இராணுவமும் ஈழத்தில் நடத்தியது.

1987 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் அதிகாலை யாழ்ப்பாணம் நகரத்துக்குள் நுழைந்த இந்திய இராணுவம், தமிழர்களின் குரலாக ஒலித்து வந்த ‘ஈழ முரசு’, ‘முரசொலி’ என்ற இரண்டு நாளேட்டின் அலுவலகர்களை துப்பாக்கி முனையில் கைது செய்தது. அதுமட்டுமல்ல அச்சு இயந்திரத்தையும், அலுவலகத்தையும் வெடி வைத்து தகர்த்தனர்.

அதே நாளில் கொக்குவில் என்ற இடத்திலிருந்த விடுதலைப் புலிகள் தொலைக்காட்சி சேவையான நிதர்சனம் தொலைக்காட்சி நிலையத்தில் இந்திய இராணுவம் புகுந்து, ஒளிபரப்புக் கருவிகளை பறித்துச் சென்று விட்டது.

‘ஈழ முரசு’இ ‘முரசொலி’ நாளேடுகள் இலங்கை அரசு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தமிழ் நாளேடுகள்; முதலில் மக்களுக்கு செய்திகளை அறிவிக்கும் ஊடகங்களை முற்றாக நசுக்கிய பிறகு, இந்திய இராணுவம் மக்களுக்கு எதிரான இராணுவ வேட்டையில் இறங்கியது. இதைத்தான் ராஜபக்சேவும், இறுதி கட்டப் போரில் செய்தார்.

மருத்துவமனைகளை ராஜபக்சேயின் இராணுவம் குண்டு வீசித் தாக்கி, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளையும் மறுத்த இரத்தக் கண்ணீர் வரவழைக்கும் அதிர்ச்சித் தகவல்களை இப்போது ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் நியமித்த குழுவின் அறிக்கை கூறுகிறது.

அதைத் தான் இந்திய இராணுவமும் செய்தது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் இறங்கிய இந்திய இராணுவம் 1987 அக்டோபர் 21 அன்று யாழ்ப்பாணம் மருத்துவமனையைக் குறி வைத்தது. இதுபற்றி ‘நியூ சேட்டர் டே ரெவியூ’ என்ற கொழும்பு ஏடு வெளியிட்ட விரிவான செய்தி இது. (1987இ நவம்பர் 7)

அக். 21 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் யாழ்ப்பாண மருத்துவமனையை இந்திய இராணுவம் கைப்பற்றியது. அன்று தீபாவளி நாள். இராணுவத்தினர் உடனடியாக 50 நோயாளிகளை சுட்டுக் கொன்றனர். அவரது உடல்கள் அங்கேயே எரிக்கப்பட்டு, மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே தரையில் வீசப்பட்டன.

அடுத்த இரண்டு நாளில் அக்.23 ஆம் தேதி 83 நோயாளிகள் - ஊழியர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. இதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார் இந்திய இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரார். எல்லா நடவடிக்கைகளையும் யாழப்பாண கோட்டை தலைமை இராணுவ முகாமிலிருந்து கண்காணித்தவர் கேப்டன் பிஸ்ட். அவருக்கு (இந்தப் படுகொலைகளில்) உதவியாக செயல்பட்டவர்கள் டாக்டர் கனகராஜா, டாக்டர் பன்சாரி. இவர்களும் இந்திய “அமைதிப்படை” அதிகாரிகள்தான். கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்த உடல்களுக்கு பிரேத பரிசோதனைகள் செய்யப்படவில்லை; விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

இறந்தவர்களில் 20 பேர் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய ஊழியர்கள். மருத்துவமனையில் நோயாளிகளாக சிகிச்சைப் பெற்றவர்கள், அவர்களை பார்க்க வந்த உறவினர்கள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் உடல் அழுகிய நிலையில் சவக்கிடங்கில் கிடந்தது. 12 பேர் உடல் அடையாளங்களை காண முடியவில்லை. மருத்துவமனை ஊழியர்கள் 20 பேரின் சடலங்கள் ஏனைய ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டன. 11 பேர் உடல்கள் அவர்களின் அடையாள அட்டைகளை வைத்து அடையாளம் காணப்பட்டன.

மருத்துவ மனையில் மின்சாரத்தை இராணுவத்தினர் துண்டித்ததால், மூச்சு சுவாசத்துக்கான ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்ட நோயாளிகளும் தீவிர மருத்துவ கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை உட்பட 3 நோயாளிகளும் இறந்தனர். யாழ்ப்பாண மருத்துவமனை முற்றிலும் நாசமடைந்தது. மின்சாரமோ தண்ணீரோ இல்லை. சவக்கிடங்கு நிரம்பி வழிந்தது. ஒரு வயதிலிருந்து 85 வயது வரையுள்ள 85 சடலங்கள் 3 நாட்களில் குவிந்து கிடந்தன. ‘நர்சு’களின் குடியிருப்புகள் ஷெல் வீச்சுக்கு உள்ளாயின.

தெல்லிப்பளையில் செயல்பட்டுக் கொண்டிருந்த அரசு மருத்துவமனையும் மூடப்பட்டது. மானிப்பாய் என்ற இடத்தில் இருந்த ‘கிரீன் மெமோரியன்’ என்ற தனியார் மருத்துவமனையையும், இராணுவம் மிரட்டி மூடச் சொல்லி விட்டது” என்று செய்தி வெளியிட்ட அந்த ஏடு, இறந்தவர்களின் நீண்ட பெயர்ப் பட்டியலையும் வெளியிட்டது. எந்த ஒரு யுத்தத்திலும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதை ‘போர்க் குற்றம்’ என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன.

மருத்துவமனையில் - ஷெல் வீசியது மட்டுமல்ல; எவரும் சிகிச்சை பெறவும் கூடாது என்று செயல்பட்ட வேறு மருத்துவமனைகளையும் மிரட்டி மூடி விட்டார்கள். காந்தி தேசமான இந்தியாவிலிருந்து ராஜீவ் காந்தியால் அனுப்பி வைக்கப்பட்ட ‘அமைதிப்படை’ இந்தப் போர்க் குற்றங்களைத்தான் செய்தது.

சர்வதேச உதவி அமைப்புகளை போர்ப் பகுதியிலிருந்து ராஜபக்சே வெளியேற்றியதுகூட இந்தியா காட்டிய வழியில்தான்! இந்திய இராணுவம் சர்வதேச மனித உரிமை அமைப்புகளான சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச சட்டவியலாளர்கள் குழு போன்ற அமைப்புகள் தமிழ் ஈழப் பகுதிக்குள் நுழைவதற்கு ‘இந்திய அமைதிப் படை’ அனுமதி மறுத்தது. அவுஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள் இதைக் கண்டித்தன.

இராணுவத் தாக்குதல் நடக்கும்போது மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர், மின்சாரம் போன்றவை கிடைக்காமல் செய்துவிட வேண்டும் என்ற ‘போர்க் குற்றத்தை’ இலங்கை இராணுவத்துக்கு கற்றுக் கொடுத்ததும் இந்திய ராணுவம் தான்.

வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு, உணவு, மருந்து பற்றாக்குறை கடுமையாகி விட்டது. கடைகளில் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்காமல் போய்விட்டது. செஞ்சிலுவை சங்கம் உடனே தலையிட்டு தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும்; தமிழ் மக்கள் மீது இந்திய இராணுவம் ஷெல் வீசிக் கொல்வதை உடன் நிறுத்த வேண்டும்” என்று தொலைபேசி வழியாக அவசர வேண்டுகோள் விடுத்தார் வடக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்.

மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் என்றெல்லாம் ஐ.நா. குற்றச்சாட்டுகளைக் கூறினாலும் அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்ற அணுகுமுறையை இலங்கைக்கு கற்றுக் கொடுத்ததும் இந்தியா தான்!

இந்திய இராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் பற்றி ஐ.நா.வில் மனித உரிமை குழுவில் கடும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. 1987 பிப்.1 மதல் மார்ச் 11 வரை ஜெனிவாவில் நடந்த ஐ.நா.வின் மனித உரிமைக் குழுவில் பேசிய பல பிரதிநிதிகள் இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டிக் கண்டித்தனர். அந்தக் கண்டனங்களை ‘தமிழ் இன்டர்நேஷனல்’ விரிவாகப் பதிவு செய்தது; அதுபற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை இந்திய அமைதிப் படை!

விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன், காவல்துறை பொறுப்பாளர் இளங்கோ, சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களுடன் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தபோது சிங்கள இராணுவம் சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக சுட்டுக் கொன்றது நமக்குத் தெரியும். “வெள்ளைக் கொடியுடன் வந்தாலும் கவலைப்படாதே சுட்டுத் தள்ளலாம்” என்று இலங்கை இராணுவத்துக்கு வழிகாட்டியதும் இந்திய அமைதிப் படைதான்.

வெள்ளைக் கொடிகளை இரத்தச் சிவப்பாக்கிய பல படுகொலைகளை இந்திய இராணுவம் செய்தது. உதாரணமாக 9.11.1987 அன்று சண்டிலிப்பாய் எனுமிடத்தில் இந்திய இராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் காயமடைந்த நான்கு பொது மக்களை காரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். காரில் வெள்ளைக் கொடி கட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இந்திய இராணுவம் நவாலி என்ற இடத்தில் காரை நோக்கி சுட்டது. காரில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் காயமடைந்தனர் - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், ஐ.நா. பொதுச் செயலாளருக்கு 1987 நவம்பரில் எழுதிய கடிதத்தில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே போல் போர் நிறுத்தம் அமுலில் இருந்த போது இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த ஹர்கிரத் சிங்கை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் நேரில் சந்தித்துப் பேசி வந்தார். அப்படி ‘வெள்ளைக் கொடி’யுடன் பிரபாகரன் பேசவரும்போது அவரை சுட்டுக் கொன்று விடுமாறு இலங்கைக்கான இந்தியத் தூதராக இருந்த தீட்சத் என்பவர் ஹர்கிரந்த் சிங்கிடம் கூற, அதற்கு, அந்த நேர்மையான அதிகாரி மறுத்து விட்டார்.

இது டெல்லியிலிருந்து மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு என்று தீட்சத் கூறினார். அப்போதும் அந்த நேர்மையான அதிகாரி மறுத்து விட்டார். இதை ஹர்சிரத் சிங் அவர்களே பணி ஓய்வு பெற்ற பிறகு தான் எழுதிய நூலிலும் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் கூறியுள்ளார்.

போரில்லாத பகுதி’ என்று அறிவிக்கப்பட்ட பகுதியிலும் சுடலாம். ‘போர் நிறுத்தம்’ செய்யப்பட்ட காலத்திலும் மக்களை சுடலாம் என்று இலங்கை இராணுவத்துக்கு வழிகாட்டியதும் இந்திய இராணுவம் தான்.

21.11.1987 அன்று இந்திய இராணுவம் 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தது. அந்த 48 மணி நேரத்தில் திருகோணமலையில் 7 அப்பாவித் தமிழர்களை இந்திய இராணுவம் சுட்டது. இதில் இரண்டு பேர் பிணமானார்கள்.

ராஜபக்சே இராணுவத்தைப் போலவே ராஜீவ் அனுப்பி வைத்த ‘அமைதிப் படையும்’ விடுதலைப் புலிகள் தலைவர், உலகத் தமிழினத்தின் தலைவர் பிரபாகரனுக்குத் தான் குறி வைத்தது.

ராஜீவ் காந்தி தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரான முரசொலி மாறனிடம், தரையை நோக்கி தனது காலைக் காட்டி இங்கு பிரபாகரன் தலை கொண்டுவரப்படும் வரை இந்திய இராணுவத்தின் இலங்கை தாக்குதல் தொடரும் என்று திமிருடன் கூறினார்.

அதிமுகவை டெபாசிட் இழக்க வைப்போம்: தேமுதிக கொதிப்பு

அதிமுக உள்ளாட்சிதேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து வேறு வழியின்றி தேமுதிகவும் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளது.

அதிமுகவின் புறக்கணிப்பு குறித்து அமைதி காத்து வந்த விஜயகாந்த், அதிமுகவுக்கு எதிராக தனது கட்சியினர் மத்தியில் நிலவி வந்த கொந்தளிப்பை உணர்ந்தே தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் ஒதுக்கவில்லை என்று தேமுதிக தொண்டர்கள் ஆவேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் இப்போதும் அதிமுகவுக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.

இன்று தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பு வந்ததை சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் கல்யாண மண்டப வளாகத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் குவிந்திருந்த தேமுதிகவினர் வரவேற்று கொண்டாடினர்.

அப்போது தேமுதிக தொண்டர்கள், ’’ தனித்துப் போட்டியிடுவது என்பது எங்களுக்குப் புதிதல்ல. ஆரம்பத்திலிருந்தே நாங்கள் தனித்தே செயல்பட்டு வந்துள்ளோம். அப்படித்தான் நாங்கள் வளர்ந்தோம். எனவே இது எங்களுக்குப் புதிதல்ல.

புரட்சிக் கலைஞர் கூறியதால்தான் கடந்த தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து செயல்பட்டோம். ஆனால் எங்களை முதுகில் குத்தி விட்டது அதிமுக.

இந்தத் தேர்தலில் அதிமுகவை எதிர்த்து நாங்கள் போட்டியிடப் போகிறோம். அவர்களை தோற்கடிப்பதோடு மட்டுமல்லாமல் டெபாசிட் இழக்க வைத்து நாங்கள் யார் என்பதைக் காட்டுவோம்’’ என்று கொதித்தனர்.

காந்தியடிகள் பிறந்தநாளில் தமிழகமெங்கும் பட்டினிப் போராட்டம்: பழ.நெடுமாறன் வேண்டுகோள்

மூன்று தமிழர் உயிர்காப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும், இந்தியாவில் மரண தண்டனையை அறவே ஒழிக்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளையும் முன் வைத்து, காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து நகரங்களிலும் ஊர்களிலும் பட்டினிப் போராட்டம் நடத்த வேண்டும் என 3 தமிழர் உயிர்காப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.

இந்த இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், மனித உரிமை இயக்கங்களும் பங்கு கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.

காஜலைத் தேடி வரும் பலான மலையாள பட வாய்ப்புகள்


காஜல் அகர்வாலுக்கு தற்போது கேரள நாட்டில் இருந்து பட வாய்ப்புகள் குவிகிறதாம். ஆனால் அவை எல்லாம் ஒருமார்க்கமான படங்கள்.

நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழிலும் அவ்வப்போது வந்து நடித்துவிட்டு போவார். அண்மையில் இந்தியில் சிங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படி அவர் ஆக்டிங் கெரியர் மேலே போய் கொண்டிருக்கையில் அவர் செய்த ஒரு காரியம் பெரிய பிரச்சனையாகியுள்ளது.

எப்ஹெச்எம் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்தார். நான் அப்படியெல்லாம் போஸ் கொடுக்கவில்லை என்று முதலில் மறுத்த அவர் பின்பு அமைதியாகிவிட்டார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக பிலிம்பேர் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கும் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார். இப்படி அடுத்தடுத்து அதிர்ச்சி தந்துள்ளார் காஜல்.

பாலிவுட்டில் சான்ஸ் கிடைக்கத் தான் காஜல் இப்படியெல்லாம் போஸ் கொடுக்கிறார் என்று அங்குள்ளவர்கள் கிண்டல் செய்கிறார்களாம். அவர் பாலிவுட் வாய்ப்பை எதிர்பார்த்து இப்படி செய்தாரா, இல்லையா என்றெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால் அவருக்கு மாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். ஆனால் அவையெல்லாம் பலான பட வாய்ப்புகளாம்.

இதனால் காஜல் தரப்பு அதிர்ச்சியாகியுள்ளதாம். எதையோ நினைத்து போஸ் கொடுத்தால் எதுவெல்லாமோ கிளம்பி வருகிறதே என்று அங்கலாய்க்கிறார்களாம்.

எல்லாம் அந்த டாப்லெஸ் போஸால் வந்த வினை...!

சோனா எந்த வீடியோ ஆதாரமும் கொடுக்கவில்லை: போலீசார்


சென்னை: சரண் தன்னை பலாத்காரம் செய்ததற்கு ஆதாரமான வீடியோவை நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்ததாக சோனா தெரிவித்தார். ஆனால் சோனா எந்த வீடியோ ஆதாரமும் கொடுக்கவில்லை என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நடிகை சோனா நேற்று காலை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங்கை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது, எஸ்.பி.பி. சரண் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளேன். கமிஷனரை சந்தித்து அதற்கான வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தேன்.

வீடியோவை எனது லேப்டாப்பில் பதிவு செய்து வைத்திருந்தேன். அதை கமிஷனரிடம் ஒப்படைத்து விட்டேன். நான் பணத்துக்கு ஆசைப்பட்டும், விளம்பரத்துக்காகவும் சரண் மீது பாலியல் புகார் கூறுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. அதற்கு இந்த வீடியோ ஆதாரம் பதில் சொல்லும். இந்த ஆதாரத்தை வைத்து சரண் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கேட்டுக் கொண்டேன் என்றார்.

வீடியோ ஆதாரமே கிடைத்துவிட்டது. எனவே, இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்படும் என்று பார்த்தால் புஸ்ஸாகிவிட்டது. காரணம் சோனா போலீசாரிடம் வீடியோ எதையும் கொடுக்கவேயில்லையாம். புகார் மனுவை மட்டும் கொடுத்துவிட்டு, வீட்டுக்குப் போய் உதவியாளரிடம் வீடியோவை கொடுத்தனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவர், சென்றவர் தானாம்.

இந்த தகவலை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து சோனாவிடமே கேட்கலாம் என்று நினைத்து தொடர்பு கொண்டால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

எஸ்.பி.பி. சரணை மிரட்டுவதற்காகத் தான் தன்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது என்று சோனா தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது. சமரச பேச்சுவார்த்தைகளை சோனா வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவிடம் பாச்சா பலிக்கவில்லை! தேமுதிக தனித்துப் போட்டி! மேயர் வேட்பாளர்களை அறிவித்த விஜயகாந்த்!

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் சட்டமன்ற தேர்தலைப் போலவே, வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக.

சட்டமன்ற தேர்தலில் போராட்டம் நடத்தி, உருவபொம்மையை எரித்து தொகுதிகளை கேட்டு வாங்கிய தேமுதிக, தற்போது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை எதிர்த்து வாய் திறக்க முடியவில்லை.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்பதையும் மறந்து அதிமுக உறுப்பினர்களாகவே தங்களை நினைத்து நடந்துகொண்டபோதும், அதிமுக தலைமை இரக்கம் காட்டவில்லை என்று புலம்பி வந்தனர் தேமுதிகவினர்.

இதனால் கட்சித் தொண்டர்களை இழக்கக் கூடாது என்று முடிவெடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக தேமுதிக அறிவித்துள்ளது.

இதையடுத்து தேமுதிகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். அதில் 9 மாநகராட்சிகளுக்கான மேயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மேயர் வேட்பாளர் – கோ.வேல்முருகன்

மதுரை மேயர் வேட்பாளர் – கா. கவியரசு

கோயம்புத்தூர்மேயர் வேட்பாளர் – ஆர்.பாண்டியன்.

சேலம் மேயர் வேட்பாளர் – ஏ.ஆர். இளங்கோவன்.

திருநெல்வேலி மேயர் வேட்பாளர் – ஏ.சீதாலட்சுமி

வேலூர் மேயர் வேட்பாளர் – எஸ்.சத்தியவாணி சுரேஷ்பாபு

ஈரோடு மேயர் வேட்பாளர் – என்எஸ் சிவக்குமார்

திருப்பூர் மேயர் வேட்பாளர் – என்.தினேஷ்குமார்

தூத்துக்குடி மேயர் வேட்பாளர் – எஸ்.ராஜேஷ்வரி

இந்த வேட்பாளர்களின் வெற்றிக்கு கழகத்தின் மாவட்ட, பகுதி, வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் கேட்டு கொண்டுள்ளார்.

ஏழாம் அறிவில் வரும் ஹீரோ 'போதி தர்மன்'... சில குறிப்புகள்!


போதி தர்மன்... தமிழ் சினிமாக்காரர்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில் அதிகமாககத் தேடிக் கொண்டிருக்கும் பெயர் இன்றைக்கு இதுதான்!

காரணம், சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்தில் கதையின் நாயகன் இந்த போதி தர்மன்தான்!

முதலில் போதி தர்மன் யார் என்பதை சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.

கிபி 5-ம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் இந்த போதி தர்மன். காஞ்சிபுரத்தில் பிறந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவர்.

புத்த மத குருவாக மாறியபிறகு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி, அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.

ஷோலின் குங்ஃபூ என்ற உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலையை நிறுவியரே இவர்தான் என்கிறது வரலாறு. இதற்கான கல்வெட்டு சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.

புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவராம் இந்த போதி தர்மர்.

அதுமட்டுமல்ல, அவர் கால் தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கடல்வழியாக இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.

போதிதர்மன் மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச அரசன் நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ உயிருடன் 'பாமீர் முடிச்சு' பிரதேசத்தில் ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன அமைச்சர் நேரில் கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த ஊருக்குப் போகிறேன், என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் மீண்டும் உயிர்த்து எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி செய்தார்களாம்... இப்படிப் போகிறது போதியின் கதை.

இந்தக் கதைதான் சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்துக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. போதியின் ஜீன்களைப் பயன்படுத்தி, நவீன மருத்துவமுறையில் சாதனைகளைச் செய்வதாக இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

படத்தின் முக்கிய காட்சிகளை சீனா, தாய்லாந்து என போதி தர்மன் வாழ்ந்த இடங்களிலேயே எடுத்திருப்பதுதான் ஏழாம் அறிவின் சிறப்பு.

தகவல்களைப் படிக்கும்போதே படம் குறித்து ஏக எதிர்ப்பார்ப்பு உருவாகிறதல்லவா... எதிர்ப்பார்ப்பை பொய்யாக்க மாட்டார் முருகதாஸ் என நம்புவோம்!

ஒவ்வொரு இயக்குநரும் தயாரிப்பாளராகணும்! - 'மெரினா' இயக்குநர், தயாரிப்பாளர் பாண்டிராஜ்


பசங்க, வம்சம் என இரண்டே படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க, நம்பிக்கை தரும் படைப்பாளிகள் வரிசையில் இடம்பெற்றுள்ளவர் பாண்டிராஜ்.

இப்போது இவர் உருவாக்கியுள்ள புதிய படம் மெரினா. தலைப்பே சொல்லிவிடும் இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை.

ஆம்... மெரினா கடற்கரையே வாழ்க்கை என அங்கே சுண்டல், டீ விற்றபடி திரியும் சிறுவர்கள், அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள லோக்கல் புரோக்கர்கள், மெரினாவில் காதல் வளர்க்கும் இளசுகள்... என நாம் பார்க்கும், ஆனால் விரிவாகத் தெரியாத இன்னொரு உலகம் பற்றித்தான் இந்தப் படத்தில் அவர் சொல்லியிருக்கிறாம்.

இந்தப் படம் குறித்து நம்மிடம் பேசினார் பாண்டிராஜ்.

படம் பற்றி வெளியாகியுள்ள தகவல்களை வைத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட டாகுமெண்டரி எஃபெக்ட் தெரிகிறதே, என்று ஆரம்பித்தோம்.

உடனே சட்டென்று இடைமறித்தவர், "இதுதான் கதை என்பது முடிவானதுமே, எனக்குள் இந்தக் கேள்வி எழாமல் இல்லை. ஆனால் மெரினாவில் பல உலகங்களைப் பார்க்க முடிந்தது. அது ஒரு முடிவற்ற கதைக் களம். அதில் உள்ள சில சுவாரஸ்யமான நிகழ்வுகள், மனிதர்களைப் பற்றி வணிக ரீதியில் பொழுதுபோக்காகச் சொல்லியிருக்கிறேன். ஏதோ உபதேசம் போலவோ, செய்திப் பட சாயலோ இதில் எள்ளளவும் பார்க்க முடியாது. மெரினா கடற்கரையை சுற்றி ஆயிரம் சோகங்கள், இருட்டு உலகங்கள் என்று இருந்தாலும், நான் காட்டியிருப்பது ரொம்ப ஜாலியான மெரினாவை மட்டும்தான்," என்றார்.

இந்தப் படத்தில் தயாரிப்பாளராகவும் மாறியது ஏன்?

"எனக்கு இப்போது 2 படங்கள் வெளித்தயாரிப்பாளர்களுக்கு செய்து தரவேண்டிய கமிட்மெண்ட் உள்ளது. ஆனாலும் இந்தக் கதையை நான் சொந்தமாகத் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினேன். யாரிடமும் இந்தக் கதையைக் கொண்டுபோய் கொடுத்து தயாரிப்பாளராக இருக்கச் சொல்லவில்லை.

இதுபோன்ற படங்களுக்கு இயக்குநரே தயாரிப்பாளராக இருப்பதுதான் வசதியானது. என்னைக் கேட்டால் ஒவ்வொரு இயக்குநரும் தயாரிப்பாளராகணும். அப்போதுதான் தயாரிப்பாளரின் வலி புரியும். நான் இது வரை பண்ண இரண்டு படங்களிலும் தயாரிப்பாளர்களின் இயக்குநராக, அவர்களுக்கு எந்த வகையிலும் நஷ்டம் ஏற்படுத்தாத இயக்குநராகவே இருந்துள்ளேன்," என்றார்.

இந்தப் படத்துக்காக நிறைய ஆய்வுகளெல்லாம் மேற்கொண்டு, அதில் கண்டறிந்த உண்மைகளின் அடிப்படையில் காட்சிகளை அமைத்தாராம் பாண்டிராஜ்.

படத்தின் நடிகர்கள் குறித்து அவர் கூறுகையில், "புதுமுகம் சிவகார்த்திகேயன், ஓவியா, 'பசங்க' படத்தில் நடித்த பக்கடா மற்றும் 13 சிறுவர்கள் நடித்துள்ளனர் மெரீனாவில். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் பாத்திரத்தில் விமலையே நடிக்க வைக்கலாம்னுதான் நினைச்சேன்.

அப்புறம் 'பசங்க' படம் மாதிரியே ஆயிடுமோன்னு சந்தேகமா இருந்தது. அப்போ தான் ஒரு நிகழ்ச்சியில் சிவ கார்த்திகேயனை பார்த்தேன். நம்ம கதைக்கு இவரு பொருத்தமா இருப்பார்னு தோணுச்சு. என்னுடைய உதவி இயக்குனர்களும் இதையே சொன்னார்கள். இந்த படத்தில் இவர் எப்போ பார்த்தாலும் பேசிக்கிட்டே இருப்பார். இவருக்கு ஜோடியா ஓவியா நடிச்சிருக்காங்க. இருவருக்குள் இருக்கும் காதல்தான் படம்.

'பசங்க' படத்தில் நடித்த பக்கோடா பாண்டி இந்த படத்தில் மெயின் ரோல் பண்ணிருக்கான். இந்த சின்ன வயசிலேயே அவனுக்குள்ளே இவ்வளவு திறமையானு படம் பார்க்கும் எல்லாரையும் நினைக்க வைப்பான். 'பசங்க' படத்தில் அவனுக்கு தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சேன். ஆனா கிடைக்கல. இந்தப் படம் அந்தக் குறையைத் தீர்க்கும்," என்றார்.

உங்கள் சக இயக்குநர்கள், முதல் படம் தந்த சசி போன்றவர்களுக்கு இந்தக் கதை தெரியுமா... அவர்கள் கருத்து என்ன?

"இந்த கதை இயக்குனர் சுசீந்திரனுக்கு மட்டும் தான் தெரியும். சசி சாருக்கு இந்த கதையின் ஒன்லைன் தெரியும்," எனும் பாண்டி, இதுவரை எந்த புதிய இயக்குநரும் செய்யாத ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் செய்கிறார்.

இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியும் விருதுகளும் குவித்த மீரா நாயரின் 'சலாம் பாம்பே' என்ற படத்தினை பார்த்துதான் இந்த படத்தின் கதையை தயார் செய்தாராம் பாண்டிராஜ். ஆகையால் படத்தின் ஆரம்பத்திலேயே இதற்கான நன்றி அறிவிப்பை தெரிவிக்க இருக்கிறாராம்!

'நடிகையின் வாக்குமூலம்'த்தில் செல்வராகவனை 'வெறுப்பேற்றுகிறாரா' சோனியா?


சோனியா அகர்வால் நாயகியாக நடிக்கும் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில், அவரது முன்னாள் கணவர் இயக்குநர் செல்வராகவனை வெறுப்பேற்றும் வகையில் ஒரு கேரக்டர் உருவாக்கப்படுவதாக எழுந்துள்ள வதந்தியை மறுத்துள்ளார் படத்தின் இயக்குநர் ராஜ் கிருஷ்ணா.

'ஒரு நடிகையின் வாக்கு மூலம்' என்ற பெயரில் நடிகர், நடிகைகளின் நிஜ வாழ்க்கை கதை படமாகிறது. இந்த படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார். இதில் பாதிக்கப்படும் நடிகை வேடத்தில் சோனியா அகர்வால் நடிக்கிறார். திருமணமாகி, விவாகரத்து பெற்ற பிறகு சோனியா ஹீரோயினாக நடிக்கும் படம் இது.

நடிகையான பிறகு சோனியா சந்தித்த நெருக்கடிகள் மற்றும் திருமண வாழ்க்கை விவாகரத்து போன்றவை இதில் இடம்பெற்றுள்ளனவாம். சோனியா அகர்வாலின் சொந்த வாழ்க்கையே இந்த படம் என்றும் கணவர் வேடத்தில் நடிக்க செல்வராகவன் தோற்றத்தில் நடிகர் தேடுவதாகவும் செய்திகள் வெளியாயின.

இதுகுறித்து இயக்குனர் ராஜ்கிருஷ்ணாவிடம் கேட்ட போது, "நான் நிறைய நடிகைகளை சந்தித்திஇருக்கிறேன். அவர்கள் பட்ட சிரமங்களை நேரில் அறிந்தும் இருக்கிறேன். அதை 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' என்ற பெயரில் படமாக எடுக்கிறேன். ஒவ்வொரு நடிகையின் வாழ்வில் நடந்த ஓரிரு சம்பவங்கள் இப்படத்தில் இருக்கும். அப்படி எல்லா நடிகைகளும் சந்தித்த நிகழ்வுகள் இப்படத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.

இப்படம் முழுக்க சோனியா அகர்வாலின் வாழ்க்கை கதை என்பது சரியல்ல. கதையைக் கேட்டபோது, என் வாழ்க்கையிலும் இதுபோன்று ஓரிரு சம்பவங்கள் நடந்துள்ளன என்றார் சோனியா. அவர் நடிப்பதால் இந்தப் படம் அவரது சொந்த வாழ்க்கைக் கதையின் அடிப்படையில் படமாக்கப்படுவதாக ஒரு இமேஜ் பரவிவிட்டது. அவர் வாழ்க்கையில் நடந்தவை இரண்டே சீன்கள்தான் படத்தில் இருக்கும்.

செல்வராகவன் போன்று இப்படத்தில் ஒரு கேரக்டரை உருவாக்கி இருப்பதாக வெளியான செய்தியிலும் உண்மை இல்லை. நடிகைகளான எனது சகோதரிகளை புண்படுத்தும் காட்சிகளோ சக இயக்குநரை அவமதிக்கும் காட்சியோ இப்படத்தில் இருக்காது," என்றார்.

ஏழாம் அறிவு இசை வெளியீடு... விழாக்களின் சிகரம்!


தமிழ் சினிமா இசை வெளியீட்டின் உச்சம் என்று புகழும் அளவுக்கு பிரமாண்டம், சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லாமல் நடந்தது சூர்யா நடிப்பில, ஆ ஆர் முருகதாஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள உதயநிதியின் ஏழாம் அறிவு பட இசைவெளியீட்டு விழா.

தமிழில் மிகுந்த எதிர்ப்பார்க்குரிய படங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ஏழாம் அறிவு இசை வெளியீடு சென்னை வர்த்தக மையத்தில் வியாழக்கிழமை மாலை நடந்தது.

விழாவுக்கு தமிழ் சினிமாவின் முக்கியஸ்தர்கள் அத்தனை பேரும் வந்திருந்தார்கள். சூர்யாவின் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்துவிட்டனர் என்றால் மிகையல்ல.

வழக்கமான விழாவாக இல்லாமல் ஒரு நல்ல கலைநிகழ்ச்சியைப் போல இசை வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

க்யூட் ஜோடி என்று சினிமாவில் பெயர் வாங்கிய ஜெய் - அஞ்சலிதான் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள். சும்மா சொல்லக் கூடாது, விழாவுக்கான காம்பியரிங் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பாகத் தொகுத்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றனர்.

படத்தின் ட்ரெயிலர் அத்தனை பேரையும் பிரமிக்க வைத்துவிட்டது. இயக்குநர்கள் கேஎஸ் ரவிக்குமார், விஜய், நடிகர் தனுஷ் என வந்திருந்த அத்தனை பேரும் பாராட்டித் தள்ளினர்.

"ஒரு நல்ல ட்ரைலர் பார்த்தவுடன் புரியக்கூடாது. அதை மெய்ப்பிக்கிறது முருகதாஸின் இந்த ஏழாம் அறிவு ட்ரைலர். காட்சிகளின் பிரமாண்டமும் நேர்த்தியும் என்னை வாயடைக்க வைத்து விட்டது," என்றார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

இயக்குநர் விஜய் கூறுகையில், "இதுவரை ஆங்கிலப் படங்களைத்தான் ரெஃபரன்ஸுக்கு வைத்துக் கொள்வார்கள் தமிழ் இயக்குநர்கள். இனி ஏழாம் அறிவை அந்த லெவலில் வைக்கலாம். தமிழ்ப் படங்களை உலகமே பார்க்கிறது. அந்த வகையில் இனி ஹாலிவுட் காரர்களும் இந்தப் படத்தை ரெபரன்ஸுக்கு வைக்கும் அளவுக்கு படம் உள்ளது," என்றார்.

பாடல்களை தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், ஹீரோ சூர்யா, நாயகி ஸ்ருதி உள்ளிட்ட ஏழாம் அறிவு குழுவினர் வெளியிட, அதனை விழாவுக்கு வந்திருந்த கேஎஸ் ரவிக்குமார், நடிகர் சிவகுமார் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.

படத்தின் இரு பாடல் காட்சிகளை முன்னோட்டமாகத் திரையிட்டுக் காட்டினர். பின்னர் அனைத்துப் பாடல்களையும் மேடையில் பாடி ஆடி பரவசப்படுத்தினர் இஷா ஷெர்வானி, லட்சுமி ராய் உள்ளிட்டோர்.

நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது, இரு வெளிநாட்டு கலைஞர்கள் செய்து காட்டிய அருமையான ஜிம்னாஸ்டிக் காட்சி. 10 நிமிடங்கள் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பார்த்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

அதேபோல, படத்தின் சிறப்புகள் குறித்த லேசர் நிகழ்ச்சியும் பிரமாதமாக அமைந்திருந்தது.

பாடி ஆடி பரவசப்படுத்திய சூர்யா!

பொன்னந்தி மாலைநீ... என்ற பாடலை முதல் முறை கேட்டபோதே அரங்கம் ஆர்ப்பரித்து ஆடியது. இன்னொரு பாடலுக்கு படத்தின் நாயகன் சூர்யா மேடையேறி, நடன இயக்குநர் ஷோபி குழுவினருடன் இணைந்து ஆடி ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்.

படத்தின் நாயகி ஸ்ருதிஹாஸன் பேசும்போது, "ஒரு தமிழ்ப் பெண்ணாக எனக்கு இது மிக முக்கியமான படம். இப்படி ஒரு மிகப் பெரிய, திறமையான டீமோடு இணைந்து பணியாற்றியதை பெருமையாக நினைக்கிறேன்," என்றார்.

சூர்யா-முருகதாஸ்-ஸ்ருதிக்கு கமல் தந்த இன்ப அதிர்ச்சி!

ஏழாம் அறிவு இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக கமல் அளித்த வாழ்த்துச் செய்தி, ஆடியோ விஷுவலாக ஒளிபரப்பப்பட்டது.

தனது வாழ்த்தில், "திறமையும் வெற்றியும் ஒருங்கே அமைவது அரிதாக நடக்கும் விஷயம். இந்தப் படத்தில் மிகச் சிறந்த திறமையாளர்கள் இணைந்துள்ளனர்.

அவர்களோடு என்மகள் ஸ்ருதி இணைந்து பணியாற்றுவது, அவருக்கு கிடைத்த அதிருஷ்டம் என்பேன்," என்றார்.

மொத்தத்தில் ஏழாம் அறிவு என்ற படத்தின் உலகத்தரத்துக்கு ஒரு அசத்தல் முன்னோட்டமாக அமைந்தது இந்த இசை வெளியீட்டு விழா என்றால் மிகையல்ல!

காதலர் சைப் அலியின் தந்தை மன்சூர் அலிகான் பட்டோடி மரணம்- சோகத்தில் கரீனா


மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியின் மரணத்தை தொடர்ந்து, இந்தி நடிகை கரீனா கபூர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தார். தனது திருமணத்திற்கு முன்பே மன்சூர் அலிகான் இறந்து விட்டதால் அவர் பெரும் சோகத்துடன் காணப்படுகிறார்.

இந்திய ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இந்தி நடிகை கரீனா கபூர் செப்டம்பர் 21 தேதி தனது 31 வயதை கடந்தார். ஆண்டுதோறும் தனது பிறந்தநாளை மிக விமரிசையாக கொண்டாடும் கரீனா, அன்று எல்லா பணிகளுக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு தனது உயிர் நண்பரும், நடிகருமான சயீப் அலிகான் மற்றும் தனது குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடுவார்.

சயீப் அலிகான் மற்றும் கரீனா கபூரின் திருமணம் விரைவில் நடைபெறும் என்ற செய்திகள் பரவி வரும் நிலையில், இந்தாண்டு கரீனாவின் பிறந்தநாள் விழா படுவிமரிசையாக கொண்டாட கரீனா திட்டமிட்டு இருந்தார். கரீனாவிற்கு கூடுதல் மகிழ்ச்சியாக கடைசியாக வெளியான அவரது திரைப்படமான 'பாடிகாட்' சூப்பர் ஹிட்டாகி உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சயீப் அலிகானின் தந்தையும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான பட்டோடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் தனது நண்பர் சயீப்பின் வேண்டுகோளை ஏற்று தனது இந்தாண்டு பிறந்தநாள் கொண்டாடத்தை கரீனா ரத்து செய்தார்.

இந்த நிலையில், நேற்று பட்டோடி உயிரிழந்தால், கரீனா கபூர் பெரும் சோகமடைந்தார். மன்சூர் அலிகான் பட்டோடியின் குடும்பத்தினருடன் அவர் ஆறுதலாக தங்கியுள்ளார்..

அஜீத்தை ராஜா இயக்கவில்லை! - ஜெயம் ரவி மறுப்பு


அஜித்தை வைத்து ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்தை இயக்கப் போகிறவர்கள் என்று பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.

சமீபத்தில் ஜெயம் ராஜாதான் இந்தப் படத்தை இயக்குவார் என எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு செய்தி வெளியானது. இருவரும் மகேஷ்பாபுவின் 'தூக்குடு' படத்தை ரீமேக்குகிறார்கள் என்றும் கூறியிருந்தனர்.

அதுபற்றி இன்டஸ்ட்ரியிலும் வாய்வழி பேச்சு பரவியதால், உடனடியாக இதற்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்தார்கள் ஜெயம் ராஜா தரப்பில்.

உடனே ஜெயம் ரவி தனது ட்விட்டரில், “ராஜா அஜித் படத்தை இயக்கவில்லை. அந்த செய்தி தப்பானது,” எனக் குறிப்பிட்டுள்ளார். அஜித்தின் தரப்பிலும், ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்திற்கு தேதிகள் மட்டுமே கொடுத்திருப்பதாகவும், வேறு எதுவும் உறுதி செய்யப்படவில்லை எனவும், ஜனவரி மாதம் வரை பில்லா 2 படப்பிடிப்பு இருக்கும் அதுவரை எதுவும் உறுதி படுத்த நேரம் இருக்கப்போவதில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே அஜீத்துக்கு பெரும் தொகையை இந்தப் படத்துக்கு அட்வான்ஸாகக் கொடுத்துவிட்டார் ஏ எம் ரத்னம்!

இப்போதைய நிலவரப்படி இந்தப் படத்தை ஒன்று ஷங்கர் இயக்குவார் அல்லது விஷ்ணுவர்தன் இயக்கக்கூடும் என்கிறார்கள்.

13+ தீர்வை எதிர்க்கும் அமைச்சர்களை சமாளிக்க மூத்தவர்கள் கடும் முயற்சி

news
13ஆவது அரசமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு வழங்கப்படுவதை ஆட்சேபிக்கும் முக்கியமான அமைச்சர்களைச் சமாளிப்பதற்கு அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் பலர் தயாராகியுள்ளதாகத் தெரியவருகிறது.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியல் தீர்வு யோசனைகளைத் தயாரிக்கும் போது 13ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் சென்று சில விடயங்களில் உடன்பாடு காண்பதென்று அரசு யோசித்து வருகிறது. இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கான சர்வதேச அழுத்தமும் அரசுக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால், 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வை வழங்கும் விடயத்தை அரசின் கடும் போக்கு அமைச்சர்கள் ஆட்சேபித்து வருகின்றனர். குறிப்பிட்ட சில அமைச்சர்கள் இவ்வாறான ஆட்சேபனைகளைத் தெரிவித்து வருவது குறித்தான தமது அதிருப்தியை தமிழ் அரசியல்வாதிகள் பலர் மூத்த அமைச்சர்களிடம் சுட்டிக்காட்டியிருப்பதாகத் தெரிகிறது.
அமைச்சரவைக்குள்ளேயே இவ்வாறான எதிர்ப்பு வருமாயின் அரசியல் தீர்வு குறித்தான பேச்சுகளை எப்படி நம்பிக்கையுடன் முன்னெடுக்கமுடியும் என்று மேற்படி தமிழ் அரசியல்வாதிகள் எடுத்துக்கூறியிருக்கின்றனர்.தமிழ் அரசியல் பிரமுகர்களின் இந்தக் கவலையை நன்கு செவிமடுத்த மூத்த அமைச்சர்கள் சிலர் மேற்படி கடும் போக்கு அமைச்சருடன் இதுபற்றிப் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்குத் தம்மால் முடியுமென உறுதியளித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இதன்படி கடும்போக்கு அமைச்சர்களாகக் கருதப்படும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ஸ ஆகியோருடன்  பேசுவதென்றும், 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு வழங்குவது தொடர்பாக அவர்களின் சிபார்சுகளை உள்ளடக்குவது பற்றி ஆராய்வதென்றும் இந்த மூத்த அமைச்சர்கள் தீர்மானித்துள்ளரெனத் தெரிகிறது.        

ஜனாதிபதி மாளிகையும் நாடாளுமன்றும் எதிர்காலத்தில் அரசினால் விற்கப்படும் சபையில் தயாசிறி ஜயசேகர கிண்டல்

news
அரச காணிகளையும் தேசிய சொத்துக்களையும் வெளிநாட்டுக் கம்பனிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும்  இந்த அரசின் நடவடிக்கையினால் எதிர் காலத்தில் ஜனாதிபதி மாளிகையும் நாடளுமன்றத்தையும் விற்பனை செய்யும் நிலைமையே உருவாகும்.மஹிந்த ராஜபக்ஷ பிளஸ் பசில் ராஜபக்ஷ சிந்தனையே இன்று நாட்டில் செயற்படுகிறது.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று கூறினார்.
அரச காணிகளும் தேசிய சொத்துக்களும் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றமை தொடர்பில் ஜே.வி.பியின் எம்.பி அநுர குமார திஸாநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
முதலாவது தாய்நாடு இரண்டாவதும் தாய்நாடு  மூன்றாவதும் தாய்நாடு  என்று கூறிய அரசு இன்று முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதும் நாட்டை விற்பனை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. யுத்தத்தின் பின்னர் இந்த சுமுகமான நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்வது அவசியமாகும். நாமும் அவற்றையே எதிர்பார்த்தோம்.

அன்று பொது ஆட்சிக்காலத்தில் காணிகளை குத்தகைக்கு வழங்கினோம். ஆனால் ஐக்கிய தேசிய கட்சி காலிகோட்டை சிகிரியா ஆகியவற்றை விற்பனை செய்கிறது என்று அரசு வதந்தி கிளப்பியது.

இந்த அரசு ஆட்சிக்கு வந்த காலத்தில் வெள்ளையர்களை முறைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இன்று வெள்ளையர்களுடனையே வாழ்கின்றது. அவர்களுடனே கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்கிறது.
அது தமது தேவைகளுக்காக அரசு சொத்துக்களை விற்பதை ஒரு கொள்ளையாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தையும் ஜனாதிபதி மாளிகையையும் வெளிநாடுகளுக்கு அரசு விற்பனை செய்யும் சூழ் நிலையும் உருவாகிவிடும்.

கற்பிட்டியில்  காணிகள் கொள்ளையிடப் படுகின்றன. ஆலங்குடா கடற்கரைப் பிரதேசத்தில் பெறுமதிமிக்க 160 ஏக்கர் காணி வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதன்படி கற்பிட்டியிலுள்ள 81 தீவுகளும் விற்பனை செய்ய முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மஹிந்த சிந்தனை பிளஸ் பசில் ராஜபக்ஷ சிந்தனையே செயற்படுகிறது. இதனுடன் எதிர்காலத்தில் மிலிந்த சிந்தனையும் இணையும்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட காணிகளை அரசு துண்டாடி 20 மில்லியன் ரூபாப் படி விற்பனை செய்யப்படுகிறது. தமிழ் மக்களின் காணிகளே இப்படி விற்கப்படுகின்றன.

வேலணையில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

news
வேலணை பெருங்குளம் 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

பத்துப் பிள்ளைகளின் தந்தையான சவரிமுத்து யேசுராசா (வயது 58) என்பவரே நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாதவர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது இண்டாவது மனைவி சஞ்சனாதேவி (வயது 43) கையிலும் முகத்திலும், மகன் முகுந்தன் (வயது 18) கழுத்துப் பகுதியிலும் வெட்டுக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் கூறப்படுவதாவது:

நேற்று மாலை 6 மணிக்கு தனது சீவல் தொழிலை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய யேசுராஜா இரவு படுக்கைக்குச் சென்றார். அவரது மனைவி, பிள்ளைகளும் படுத்து உறங்கி விட்டனர். பின்னர் நள்ளிரவில் திடீரென தாயார் அலறும் சத்தம் கேட்டுத் தாங்கள் எழும்பியதாகவும் அப்போது தமது தந்தையார் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டதாகவும் தாயாரும் சகோதரரும் காயங்களுடன் அழுது கொண்டு வீட்டுக்குள் இருந்து வெளியில் வந்ததாகவும் இறந்தவரின் மகளான முகுந்தினி (வயது 13), மகனான சயந்தன் (வயது 11) ஆகியோர் தெரிவித்தனர்.

பின்னர் சத்தங்கேட்டு அயலில் உள்ளவர்கள் வந்ததைத் தொடர்ந்து தாயாரையும் சகோதரரையும் ஓட்டோ ஒன்றில் வேலணை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பின்னர் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர்கள் மேலும் கூறினார்.

இறந்த யேசுராஜாவின் முதல் மனைவி பிரான்சிஸ்கா (வயது 56) விசாரணைகளின் போது தமது கணவருடன் தான் மட்டும் கதைப்பதில்லை எனவும், பிள்ளைகள் அடிக்கடி அவரைச் சென்று பார்த்து வருவதாகவும் அவரும் தமது வீட்டுக்கு வந்து பிள்ளைகளைப் பார்த்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்து நிலைமைகளைப் பார்வையிட்ட ஊர்காவற்றுறை மாவட்ட நீதிவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவா சம்பவம் நடைபெற்ற இடத்தையும் அயலில் உள்ள வளவில் காணப்பட்ட கள் வைக்கும் பாத்திரம் இருந்த பகுதிகளையும் பார்வையிட்டார்.

சம்பவம் குறித்து விசாரணைகளை செய்த நீதிவான் பிரேதப் பரிசோதனைக்காக இறந்தவரின் உடலையும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லுமாறும், பூரண விசாரணைகளை நடத்துமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் ஊர்காவற்றுறை பொலிஸ் பரிசோதகர் டீ.த.சில்வா குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சார்ஜன் வெ.நந்தகுமார் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

பதவியை ராஜினாமா செய்ய முன் வந்தார் சிதம்பரம் - தடுத்து நிறுத்தினார் பிரதமர்!


2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் நிதியமைச்சகம் குற்றம் சாட்டியதையடுத்து நேற்று முன் தினமே தனது பதவியை ராஜினாமா செய்ய சிதம்பரம் முன் வந்தார். ஆனால், அவரை பிரதமர் மன்மோகன் சிங் தடுத்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன.
இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் துணை இயக்குனர் பி.ஜி.எஸ். ராவ், பிரதமர் அலுவலகத்தின் இணை இயக்குனர் வினி மகாஜனுக்கு கடந்த மார்ச் மாதம் இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்குப் பிறகே இந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்தக் கடிதத்தை ஆர்டிஐ சட்டப்படி பெற்று, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவுடன், அமெரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்த பிரதமரை சிதம்பரம் தொடர்பு கொண்டு, தனது நேர்மை சந்தேகிக்கப்படுவதால் பதவி விலக விரும்புவதாகக் கூறினார்.
அப்போது பிராங்பர்ட்டில் இருந்த பிரதமர், இந்த விவகாரத்தில் நான் நாடு திரும்பும் வரை அமைதி காத்திடுங்கள். எந்த அவசர முடிவும் எடுக்க வேண்டாம். உங்களது நேர்மையை நான் உள்பட யாரும் சந்தேகிக்க முடியாது என்று கூறியதோடு, இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் பேசுவதாக உறுதியளித்தார்.
மேலும் நான் டெல்லிக்குத் திரும்பும்வரை இது தொடர்பாக உங்களது கருத்து எதையும் தெரிவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். இதனால் தான் இதுவரை சிதம்பரம் இது குறித்து எந்த விளக்கமும் தர மறுத்து வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் சிதம்பரத்தின் பெயரைக் கெடுக்க நடந்துள்ள இந்த முயற்சிக்கு காங்கிரஸ் பணியக் கூடாது என்று சோனியா காந்தியும் கூறிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் சிதம்பரத்துக்குப் பின்னால் அந்தக் கட்சி அணி திரண்டு வருகிறது.
இது குறித்து தன்னுடன் விமானத்தில் அமெரிக்கா பயணித்த நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், 2ஜி விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அது குறித்து விரிவாக பேச முடியாது. ஆனால், ப.சிதம்பரத்தின் நேர்மையை யாரும் சந்தேகிக்க முடியாது. அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. அவருக்கு எனது முழு ஆதரவும் உண்டு.
இந்தக் கடிதத்தை வைத்துக் கொண்டு மத்திய அமைச்சர்களிடையே மோதல் நடப்பதாக நீங்களாக யூகித்துக் கொள்வதும் தவறு என்றார்.
சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், அரசுத் துறைகளின் நடைமுறைகளை திசை திருப்பி ஊழல் போல காட்ட எதிர்க் கட்சிகள் காட்ட முயல்வது அபாயகரமானது என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், பல்வேறு அரசியலமைப்பு அமைப்புகளுக்கிடையே பிளவை உண்டாக்கும் மோசமான முயற்சி நடந்து வருவது நல்லதல்ல என்றார்.

வன்னியில் அவுஸ்திரேலிய அரசினது வீடமைப்பில் 100 வீடுகள் மக்களிடம் கையளிப்பு:


முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கான அவுஸ்திரேலிய அரசின் வீடமைப்புத் திட்டத்தின் முதல்கட்டமாக கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட நூறு வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நூறு வீடுகளும் கல்லாறு குளம் பிரதேசத்திலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
ஆஸி. அரசின் நிதி உதவியுடன் ஐ.நா. வீடமைப்புத் திட்ட அனுசரணையுடன் கட்டி முடிக்கப்பட்ட இந்த வீடுகளைக் கையளிக்கும் வைபவத்தில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவரும் கலந்து கொண்டிருந்தார்
வன்னியில் யுத்தத்ததால் பாதிக்கப்பட்டுத் தமது இருப்பிடங்களை இழந்த மக்களுக்காக கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களில் சுமார் 3,800 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு ஆஸி அரசு தீர்மானித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது. இதன் ஒரு தொகுதி இந்த நூறு வீடுகளுமாகும்.

இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவிற்கு வற்புறுத்திய கணவனை கொன்ற மனைவி

இயற்கைக்கு மாறான முறையில் செக்ஸ் உறவு கொள்ள மனைவியை வற்புறுத்திய கணவனின் தலையில் கல்லால் அடித்து கொலை செய்த பெண் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.மத்திய பிரதேச மாநிலம் பித்தல் மாவட்டத்தில் உள்ள சார்னி நகரில் வசித்து வந்தவர் ராம்சந்திரன். இவரது மனைவி அனிதா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராம்சந்திரன் விகாரமான செக்ஸ் உறவு கொள்வதில் அதிக விருப்பம் கொண்டவர். ராம்சந்திரனின் மொபைல்போனில் இருந்த சில இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவு முறை காட்சிகளை காட்டி அதை போல உறவு கொள்ள மனைவியை வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு சம்மதிக்காத அனிதாவை அடித்த துன்புறுத்தி உள்ளார். இந்நிலையில் நேற்றும் இயற்கைக்கு மாறாக உறவு கொள்ள வருமாறு அனிதாவை, ராம்சந்திரன் வற்புறுத்தி உள்ளார்.

வழக்கம் போல அதற்கு அனிதா சம்மதிக்கவில்லை. இதையடுத்து அனிதாவை அடித்து துன்புறுத்திய போது அவரிடமிருந்து தப்ப அருகில் கிடைத்த கல்லால் ராம்சந்திரன் தலையில் கோபம் தீர தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராம்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதன்பின் கணவனை கொலை செய்ததாக கூறி, அருகில் உள்ள பத்தக்ஹீடா போலீஸ் நிலையத்தில் குழந்தைகளுடன் சென்ற அனிதா சரணடைந்தார். ராம்சந்திரன் தன்னை துன்புறுத்திய முறைகளை விளக்கும் மொபைல் படங்களையும் அனிதா, போலீசாரிடம் சாட்சிக்காக ஒப்படைத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராம்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இலங்கையுடன் போர்ப் பயிற்சியை இடையில் கைவிட்டது இந்தியா


இந்திய இலங்கைக் கடற்படைகளின் ஆறு நாள் கூட்டுப் போர்ப்பயிற்சி நான்காவது நாளான நேற்றுடன் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றுடன் இந்தப் போர்ப்பயிற்சி முடிவுக்கு வருவதாக இலங்கையின் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது. திருகோணமலையில் துறைமுக, கடல்சார், மற்றும் கடற்கொள்ளை முறியடிப்பு சார்ந்த நடவடிக்கைளில் ஈடுபடுவது குறித்து இருநாட்டுக் கடற்படைகளும் இணைந்து கடந்த 19ஆம் திகதி தொடக்கம் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.இருநாடுகளினது கடற்படைகளையும் சேர்ந்த 16 போர்க்கப்பல்கள் மற்றும் படகுகள் இந்தப் பாரிய போர்ப்பயிற்சி நாளை சனிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
திடீரென நான்காவது நாளுடன் இந்தப் பயிற்சி நிறைவடைவதாக இலங்கை அதிகாரி கூறியுள்ள போதும், அதற்கான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை.இலங்கைக் கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள பாமக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

அத்துடன் இராமேஸ்வரம் மீனவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உடனடியாகப் போர்ப்பயிற்சியை நிறுத்தக் கோரியும் கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த எதிர்ப்புகள் காரணமாக போர்ப்பயிற்சி இடைநடுவில் கைவிடப்படுகிறதா அல்லது வேறேதும் காரணங்கள் உள்ளதா என்பது பற்றிய விவரங்கள் ஏதும் இன்னமும் தெரியவரவில்லை.

சோனா பாலியல் பலாத்கார வழக்கு: எஸ்.பி.பி.சரணுக்கு 2 வாரம் இடைக்கால முன்ஜாமீன்


சென்னை: மது விருந்தின்போது நடிகை சோனாவை பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கு இரு வார இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்த வழக்கை நீதிபதி ராஜசூர்யா விசாரித்தார். வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதால், முன்ஜாமீன் அளிக்கக்கூடாது என்றும் அவர் சாட்சியை கலைத்துவிடக்கூடும் என்றும் அரசு வக்கீல் சி.பாலசுப்பிரமணியம் வாதிட்டார்.

இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "சரணுக்கு 2 வாரத்துக்கு இடைக்கால முன்ஜாமீன் அளிக்கப்படுகிறது. வழக்கின் சாட்சிகளை கலைப்பதற்கு முயற்சிக்கக்கூடாது. மறுஉத்தரவு வரும்வரை தினமும் காலை 8 மணிக்கு பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி சரண் கையெழுத்திட வேண்டும்.

ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீன் தொகையும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் அளித்து சரண் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்," என்றார்.

முன்னதாக, எஸ்பிபி சரண் தன்னிடம் தவறாக நடந்ததற்கு வீடியோ ஆதாரம் இருப்பதாகக் கூறி அவற்றை போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தார் சோனா.

மேலும் இன்று (வெள்ளிக்கிழமைக்குள்) சரண் தன்னிடம் மன்னிப்புக் கேட்டால் வழக்கை வாபஸ் வாங்குவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் சரண் இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை. இதற்கிடையே அவருக்கு முன்ஜாமீனும் கிடைத்துள்ளது.

Thursday 22 September 2011

ஷங்கர் இயக்கத்தில் அஜீத்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஷங்கர் இயக்கத்தில் அஜீத்?

9/22/2011 12:20:07 PM

மாங்காத்தா வெற்றி பிறகு தல அஜீத்தை பற்றி நாளுக்கு நாள் ஒரு புது தகவல் வந்த கொண்டே இருக்கிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத் அடுத்து நடிக்கும் மெகா பட்ஜெட் படத்தை இயக்குவதில் புது ரேஸ் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் பில்லா 2 முடிந்த பிறகு அஜீத்தின் அடுத்த படத்தை ஜெயம் ராஜா இயக்கலாம் என செய்திகள் வெளியாகின. மேலும், நண்பன் படத்தை முடித்த கையோடு, இயக்குநர் ஷங்கர் அடுத்த படத்திற்கான வேலையை உடனடியாக தொடங்க உள்ளதாக தெரிகிறது. காரணம் ஏற்கெனவே ஏஎம் ரத்னத்துக்கு ஒரு படம் செய்து தருவதாகக் கூறியுள்ளாராம் ஷங்கர். இந்தப் படம் மூலம் அந்த வாக்குறுதி நிறைவேறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி நிறைவேறினால் ஷங்கர் இயக்கத்தில் அஜீத் நடிப்பது கிட்டதட்ட உறுதியாகிவிடும். இந்த செய்தி ‘உண்மையா’ இல்லை ‘பொய்யா’ என்பதை ஷங்கர் வாய் திறந்தால் மட்டுமே நிஜமாகும்.

என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ

சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் இராஜா அண்ணாமலை மன்றம் அரங்கில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த, 'இன்னுயிர் ஈந்து மூன்று தமிழர் உயிர் காத்த வீரமங்கை தோழர். செங்கொடி வீரவணக்க நினைவேந்தல் மற்றும் மூன்று தமிழரின் மரண தண்டனையை முற்றிலும் நீக்கக்கோரி கூட்டம்' 21.09.2011 அன்று மாலை நடைபெற்ற்றது.

இந்த கூட்டதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

இனியும் செங்கொடிகள் தங்களை தீக்கரையாக்கிக் கொள்கிற நிலை உருவாகிவிடக்கூடாது என்று கொளத்தூர் மணி சொன்னார். இந்த வீரமங்கை செங்கொடி தீட்சண்யமான கண்கள். வசீகரம் என்று நான் சொல்ல மாட்டேன். அந்தப் புகைப்படத்தை பார்க்கின்றபோதே, நமது நெஞ்சை ஏதோ ஈர்க்கிறது. நான் சுமந்து செல்கின்ற கைப்பெட்டியில் அந்த அழகான படத்தை வைத்திருக்கிறேன்.

எம்ஜிஆர் நகரில், கட்சி வேறுபாடு இல்லாமல் ஒருசேர எழுவோம். தமிழ் ஈழத்தை காக்கின்ற உணர்ச்சி தீயை நெஞ்சில் ஏந்தி எழுவோம். முவர் உயிரை காக்கவும், மரண தண்டனை முற்றாக அழித்து ஒழிக்கவும் சங்கநாதம் புரிவோம். தோள் கொடுத்து நிற்போம் என்று அந்த கூட்டத்திற்கு செல்லும் வழியில் மல்லை சத்யா, இதோ இந்த தங்கை தான் செங்கொடி.

நாளை வேலூருக்கு புறப்படுகின்ற, பேரறிவாளன், சாந்தன், முருகன் உயிரை காப்பதற்கு புறப்படுகின்ற அந்தப் பயணத்தைப் பற்றிய துண்டு பிரசுரத்தை இதோ உங்களிடம் தருகிறார் என்றார்.

26ஆம் தேதி தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு பேரறிவாளனிடம், சாந்தனிடம், முருகனிடம் 9ஆம் தேதி அன்று உங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்து அவர்கள் கையெழுத்துக்களை அவர்களிடமே பெற்றுக்கொண்ட ஒன்றரை மணி நேரத்தில், பிற்பகல் 3 மணிக்கு தனித்தனி கொட்டடிகளில் பூட்டப்பட்ட அவர்களை சந்திக்க சென்றபோது, அந்த கொட்டடிகள் இருக்கிற இடத்துக்கு செல்ல என்னால் இயலவில்லை. என் கால்களில் இனம்புரியாத ஒரு நடுக்கம். திரும்பவும் இவர்களை நாம் காண்போமா.

அவர்கள் கலகலப்பாக இருந்தார்கள். மனதில், முகத்தில் எந்த சஞ்சலத்தின் ரேகையும் காணவில்லை. வீரர்கள் அல்லவா. மானம் உணர்வு உள்ள வீரர்கள் அல்லவா. ஏன்னே பயப்படரீங்க. ஒண்ணுமில்லண்ணே. தமிழகம் எங்களை காப்பாற்றும். தமிழர்கள் எங்களை காப்பாற்றுவார்கள்.

சிறை வாசலில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்தபோது, 9ஆம் தேதி தூக்கு என்று சொல்லுவதற்கு என் நாக்குக்கு துணிச்சல் இல்லை. நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் செய்தி மின்னல் வேகத்தில் பரவத்தானே செய்யும். தொலைக்காட்சிகளிலே 9ஆம் தேதி தூக்கு தண்டனை என்ற செய்தி கோடிக்கணக்கா மக்களின் நெஞ்சில் ஈட்டியாக பாய்ந்தது. அங்கிருந்து அவசர அவசரமாக நாம் ஏற்கனவே எடுத்திருக்கின்ற முடிவின்படி, மூன்று தமிழர்களின் உயிர்காக்கும் இயக்கத்தின் சார்பிலே எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி, மனித சங்கிலியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அண்ணாவை தந்த காஞ்சி நகரத்துக்கு ஓடோடி வந்தேன்.

தொடர்வண்டி செல்லுகின்ற பாதையை வழிமறிக்கின்ற கதவுகள் பூட்டப்பட்டிருந்த காரணத்தினால் குறித்த நேரத்தில் நான் செல்ல முடியவில்லை. தாமதமாகிவிட்டதே என்று விரைந்து சென்றேன். முழுக்கம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள் மேடையில் காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள்.

அப்போது கரம் கோர்த்து பல்லாயிரக்கணக்கானவர்கள் நிற்கின்ற காஞ்சி நகர வீதிகளில் நின்றபோது, எனக்கு தெரியாது. வீரமங்கை செங்கொடிக்கு பக்கத்தில் நிற்கின்ற பாக்கியம் எனக்கும் கிடைத்தது என்று எனக்கு தெரியாது.

சேலத்துக்கு பக்கத்தில் ஆத்தூர் என்ற நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்ற மேடையேற போகிறேன். காஞ்சிபுரத்தில் இளம்தளிர் செங்கொடி நெருப்பிலே பாய்ந்தாள். முடிந்துவிட்டது அவள் வாழ்வு. கருகி சாம்பல் ஆகிப்போனாள் என்ற செய்தி, அதற்கு பிறகு அந்த மேடையில் உரையாற்ற என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.

மகேஷ் (காஞ்சி மக்கள் மன்றம்) சொன்னார். சின்ன வயதில் என்னிடம் வந்தாள். நான் வளர்த்தேன். இசையில், பாடல் பாடுவதில், அந்த குயிலின் ஓசை அந்த கானக் குரலோடு கலந்திருந்ததாமே, தப்பாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதிலே அற்புதமான கலை அவளிடம் வளர்ந்திருந்ததாமே, போராட்ட களங்களுக்கு முதல் ஆளாக வந்து நிற்பாளாமே. காஞ்சி மக்கள் மன்றம் நடத்திய போராட்டத்தில் துணிச்சலாக முதல் ஆளாக நின்று நாயகியாக நின்றாளாமே.

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அங்கையற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதாவும் நாங்களும் எங்களை மாய்த்துக்கொள்ள தயாராகிவிட்டோம். உயிர் முடிந்தாலும் பரவாயில்லை. உண்ணா நோன்பு இருப்போம் என்று அறப்போர் நடத்துகின்ற களத்துக்கு செல்வோம் வா என்று அழைத்த மகேஷிடம், நான் வரவில்லை. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வர இன்று எனக்கு விருப்பமில்லை என்று சொன்னாளாம்.

சொன்னதற்கு பிறகு மகேஷ் சொல்லுகிறார், நான் புறப்பட்டுச் சென்றேன். திருப்பி பார்த்தேன். என்னாளும் இல்லாத விசித்திரமான புன்னகை ஒன்று அவள் உதடுகளில் தவழ்ந்தது. எதற்கு இந்த புன்னகையை நெளிய விடுகிறார் என்று அப்பொழுது புரியவில்லை. கடைசியாக பார்க்றோம் என்று தான் சிரித்தாள் போலும்.

முத்துக்குமார் தன்னைத்தானே அழித்துக்கொண்ட விளைவாகத்தானே தமிழக்ததில் பிரளயம் ஏற்பட்டது அதுபோல யாராவது ஒருவர் மாய்த்துக்கொண்டால், எரிமலை சீறுமா என்று கேட்டபோது, இதெல்லாம் எதற்காக கேட்கிறாய். அதெல்லாம் இப்பொழுது அவசியமில்லை. அதுபற்றி ஏன் சிந்திக்கிறாய் என்று சொல்லிவிட்டு நான் சென்னைக்கு வந்துவிட்டேன் என்றார்.

செங்கொடி அதன் பிறகு துரிதமாக செல்லக்கூடிய இருசக்கர வாகனத்திலே புறப்பட்டுச் செல்கிறாள். அவளுக்கு அத்தனை பயிற்சிகளும் உண்டு. ஏன் போர்ப் பயிச்சிக் கூட பெற்றிருப்பாள். வாகனத்திலே சென்று, அந்த இடத்தில் வானத்தை நிறுத்திவிட்டு, அங்கிருக்கும் கடைக்காரரிடம் சாவியை கொடுத்து வருவார்கள் சாவியை கொடுத்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறாள்.

பெட்ரோல் வாங்கிக்கொண்டு, வாகனத்துக்கு என்று வாங்கிக்கொண்டு, அந்த பெட்ரோல் தன் மீது ஊற்றுக்கின்றபோதே, தன்னை கொண்டுபோய் மருத்துவமனையிலே காப்பாற்றிவிடக்கூடாது என்று நனைய நனைய அந்த பெட்ரோலை மேனி மீது இருக்கிற உடை மீது கொட்டிவிட்டு, அதன்பிறகு நெருப்புக் குச்சியை எடுத்து மேலே போட்டவுடனேயே பனை மர உயரத்துக்கு தழல் எழுந்ததள்ளவா. தழல் எழுகிற வேளையிலேயே முழக்கமிடுகிறாள். பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள். முழக்கம் எழுப்புகிறாள். நெருப்பு எரிவதை பார்த்து பலர் ஓடி வருகிறார்கள். மருத்துவமனைக்கு கொண்டுபோகிறார்கள். பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள் என்று சொல்லிக்கொண்டே வருகிறபோது, அந்த உயிர் விளக்கு கொஞ்சம் கொஞ்சமாக அணைகிறபோது, சுவாசம் நிற்கப்போகிறது. அந்தக் கட்டத்தில், குரல் எழுப்புற அந்த சக்தி கொஞ்சம் கொஞ்சமாக உயிர் கரைந்துகொண்டே இருக்கிற காரணத்தினாலே, பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள். என்று சொல்லி வந்தவள், அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மூவரை காப்பாற்றுங்கள்... முவரை காப்பாற்றுங்கள்... முவரை காப்பாற்றுங்கள்... முடிந்துவிட்டது செங்கொடியின் உயிர்.

தற்கொலையை நியாயப்படுத்தவில்லை. தீக்குளிப்பதை எவரும் ஊக்கப்படுத்துவல்லை. தீக்குளிப்பை ஊக்கப்படுத்துவதாக தயவு செய்து எண்ணி விடாதீர்கள். கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தச் சுடர் இங்கே எரிகிறது.

நெஞ்சில் எவ்வளவு தியாக உணர்வு இருந்திருந்தால், பற்றுமே தழல், படீர் படீர் என்று வெடிக்குமே, தசை கருகுமே, நரம்புகள் கருகுமே, அந்த வலி தாங்க முடியாதே என்று எண்ணினாளா. இல்லை. அவள் எழுதி வைத்துவிட்டு போனாள். முத்துக்குமார் உடல் தமிழகத்தை எழுப்பியது. என்னுடைய உடல் மூன்று பேரின் உயிரை காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு செல்லுகிறேன் என்று அவள் எழுதி வைத்துவிட்டு போனாள். தமிழினத்தின் ஒரு பொக்கிஷம் அல்லவா செங்கொடி. இவ்வாறு வைகோ பேசினார்.

துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் (படங்கள் இணைப்பு)

துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் (படங்கள் இணைப்பு)

பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல். தமிழ் உறவுகளின் பாதிப்புகளை கேட்டறிந்து அவர்களின் மருத்துவ செலவுக்கு நாம் தமிழர் சார்பான பங்கை உறவுகளுக்கு கையளித்தார்..





அணு மின் நிலையங்கள் மக்கள் உயிரினும் முக்கியமான​தல்ல: நாம் தமிழர் கட்சி (படங்கள்)

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுவரும் அணு மின் நிலையங்களை மூடக்கோரி இடிந்தகரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அணு மின் நிலையங்களை விட, மக்கள் உயிர் வாழ்விற்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்றும் கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், இரஷ்ய நாட்டு உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் அணு மின் நிலையங்களை அகற்றக்கோரி, இடிந்தகரையில் அப்பகுதி தமிழ் மக்கள் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. உண்ணாவிரதமிருந்த பலரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்கிற செய்தி வருத்தத்தை அளித்தாலும், போராட்டத்தின் நியாயத்தை உணர்த்த வேறு வழியில்லாத நிலையில் அப்போராட்டம் தொடர்வது அவசியமாகிறது. தமிழர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் போராடிவரும் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துககொள்கிறது. கடந்த வாரம் நாம் நேரில் சென்று போராடும் தமிழர்களோடு என்னை இணைத்துக்கொண்டு என் ஆதரவை தெரிவித்து வந்தேன்.

நமது நாட்டின் மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, எனவே அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நாட்டிற்கு அவசியமானது என்பது மத்தியில் ஆள்வோரின் வாதமாய் இருக்கிறது. அதுமட்டுமின்றி, இது சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத ஒரு தொழில்நுட்பம் என்று கூறித்தான் மத்திய அரசு அமெரிக்க அரசுடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்குப் பின்னர், பல நாடுகளுடன் இதேபோன்று ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ள மத்திய அரசு, முதல் கட்டமாக, மராட்டிய மாநிலம், இரத்தினகிரியில் 1,650 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 6 அணு உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பிரான்ஸ் நாட்டின் அரேவா நிறுவனத்திற்கு அளித்தது. அதற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து இன்று வரை போராடி வருகின்றனர். இவர்களுக்கு மராட்டிய மாநிலத்தின் பல்வேறு மனித உரிமை, பொது நல அமைப்புகளும் துணை நின்று போராடி வருகின்றன. எந்த அடிப்படையில் மராட்டிய மாநில மக்கள் அணு மின் நிலையங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனரோ, அதே அடிப்படையில்தான் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். தமிழர்களின் எந்த ஒரு நியாயமான கோரிக்கையையும் பொருட்படுத்தாத மத்திய காங்கிரஸ் அரசு இந்த அறப்போராட்டதையும் கண்டும் காணாமல் இருக்கிறது.

அணு உலைகளில் இருந்து வெளியேரும் சாதாரண கதிர்வீச்சால் சுற்றுச் சூழலிற்கும், உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்பும், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படும் உயிர்ப் பேரழிவு குறித்த அச்சமே, கூடங்குளம் மக்கள் இந்த அளவிற்கு கடுமையாக எதிர்ப்பதற்குக் காரணங்களாகும். அணுத் தொழில் நுட்பம் என்பது ஒருபோதும் பாதுகாப்பானதல்ல என்பதுதான் உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும். அதனை நிரூபிப்பதுபோன்று நடந்ததுதான், கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி ஜப்பான் நாட்டை உலுக்கிய கடுமையாக பூகம்பத்தினால் உருவான ஆழிப்பேரலைத் தாக்குதலில், புகுஷிமா மாகாணத்தில் இயங்கிவந்த டாய்ச்சி அணு உலைகளில் ஏற்பட்ட பாதிப்பும், அதன் விளைவாக உருவான கதிர் வீச்சுப் பரவலுமாகும். பூகம்பத்தால் பாதிக்கப்படாதது, எப்படிப்பட்ட விபத்து ஏற்பட்டாலும், சுற்றுச்சூழலிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்ட நவீன அணு உலைகள் என்றுதான் ஜப்பான் அரசு உறுதியளித்தது. ஆனால், பூகம்பத்தால் அல்ல, அது உருவாக்கிய ஆழிப்பேரலையால் அணு உலைகளின் குளிரூட்டிகளுக்குச் செல்லும் மின்சாரம் தடைபட்டதால், அணு உலை செயலிழக்கச்செய்யப்பட்ட பின்பும், அணு உலையில் இருந்து கதிர் வீச்சு வெளிப்பட்டது. அதன் தாக்கம் 8,600 கி.மீ. தூரத்திலுள்ள அமெரிக்காவை எட்டியது.

அயோடின், சீசியம் போன்ற கதிர் வீச்சுத் துகள்கள் காற்றில் கலந்தன. இப்படிப்பட்ட கதிர் வீச்சுகள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு என்பது மிகப் பயங்கரமானது. அது திசுக்களின் உற்பத்தியில் ஏற்படுத்தும் பாதிப்பு எதிர்கால தலைமுறைகளை முடமாக்கக் கூடியவையாகும். எனவேதான், புகுஷிமா அணு உலைகள் ஜப்பானுக்கு மட்டுமின்றி, உலகிற்கே மிகப் பெரிய அச்சுறுத்தலை உருவாக்கின. இன்றைக்கு அந்த அணு உலைகளின் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் அணு உலைகள் தேவையா? என்ற கேள்வி அந்நாட்டில் பலமாக விவாதிக்கப்படுகிறது.

ஜப்பான் போன்ற உலகின் தலைசிறந்த தொழில் நுட்ப முன்னேற்றம் கண்ட நாட்டிலேயே அணு உலை விபத்து நடந்தால் இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுமென்றால், நெருக்கமாக மக்கள் வாழும் நமது நாட்டில் ஏற்பட்டால் என்ன ஆகும்? ஜப்பான் கடற்பகுதியில் ஏற்பட்டதுபோல், நமது நாட்டில் அந்த அளவிற்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்படாது, எனவே அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இந்தோனிசியாவை ஒட்டிய கடற்பகுதியில் 2004ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மிகக் கடுமையான பூகம்பமும், அதன் காரணமாக ஏற்பட்ட ஆழிப்பேரலைத் தாக்குதலில் தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் மறந்துவிடக் கூடியதா?

எதிர்காலத்தில் இதேபோன்றதொரு கடுமையான பூகம்பம் (அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதென புவியாளர்கள் கூறுகின்றனர்) ஏற்பட்டு, அதனால் உருவாகும் ஆழிப்பேரலைத் தாக்குதலுக்கு கூடங்குளம் அணு மின் நிலையங்கள் உள்ளாகும்போது அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். ஏனெனில் கூடங்குளத்தில் இருந்து 28 சதுர கி.மீ. சுற்றளவில் – நாகர்கோயில் நகரத்தையும் உள்ளடக்கி – இரண்டரை இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

அணு சக்தியினால் பெறும் மின்சாரத்தை அதிக அளவிற்கு பயன்படுத்தும் நாடான பிரான்சில் சில நாட்களுக்கு முன்னர், அணுக் கழிவுகள் உருக்குக் கூடத்தில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இது உலக அளவில் அணு உலைகள் தொடர்பான அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, உலகின் மிகவும் முன்னேறிய நாடான ஜெர்மனி, புகுஷிமா விபத்திற்குப் பிறகு, தனது அணு உலைகள் அனைத்தையும் அடுத்த 22 ஆண்டுகளுக்குள் படிப்படியாய் மூடிவிட முடிவு செய்துள்ளது.

அணு உலை மறுப்பு இயக்கம் உலக அளவில் வலுப்பெற்று வருகிறது.இப்படிப்பட்ட பின்னணியில், இன்று நாம் பதில் காண வேண்டிய வினா யாதெனில், மக்கள் உயிர் முக்கியமா? அல்லது நாட்டின் மின் தேவை நிறைவு செய்ய அணு உலைகள் முக்கியமா? அணு உலைகளைத் தவிர்த்து மின்சாரம் தயாரிக்க அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலைகள், மரபு சாரா எரிசக்திகள் ஆகியன மட்டுமின்றி, என்றென்றும் கிடைக்கும் சூரிய சக்தி பெரும் அளவு மின் தயாரிப்பிற்கு ஆதாரமானதாகும். ஆகவே, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அணு மின் உலைகளுக்கு மறுப்பு தெரிவிப்போம், மக்களின் உயிர் காக்கும் தொழில் நுட்பங்களுக்கு கதவைத் திறப்போம்.


Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா