Saturday 3 September 2011

தமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது



தமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக செந்தமிழ்செல்வி(32) கைது செய்யப்பட்டார்.



திருவல்லிக்கேணி கஸ்தூர்பாய் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறைக்கு வியாழக்கிழமை மாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.



தொலைபேசியில் பேசிய நபர் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையிலும், தமிழக முதல்வர் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டாராம்.



இதைக் கேட்ட 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் பெருநகர காவல்துறையிடம் புகார் செய்தனர். அதையடுத்து போயஸ்கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வீடு, 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு பொலிசார் தீவிர சோதனை செய்தனர். ஆனால் அங்கு வெடிப்பொருள்கள் எதுவும் சிக்கவில்லை.



இது குறித்து திருவல்லிக்கேணி பொலிசார் வழக்குப்பதிவு செய்து தொலைபேசியில் பேசிய மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த தொலைபேசி அழைப்பில் பேசியவர் சென்னை மறைமலைநகரைச் சேர்ந்த செந்தமிழ்செல்வி என்பது பொலிசாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பொலிசார் செந்தமிழ்செல்வியை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.



அவரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், தன்னை விட்டு பிரிந்த கணவரை பழிவாங்குவதற்காக அவர் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம்கார்டு மூலம் பேசியதாகவும், இதனால் காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்ற எண்ணத்தில் தான் இவ்வாறு செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தாராம்.



பல பரிணாமத்துடன் நடித்த கமல்! புது கெட்டப்பில் !!



மலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாக இருக்கும் திப்புவும் உன்னியார்ச்சாயும் என்ற படத்தில் திப்பு சுல்தானாக நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன்.



மலையாளத்தில் கடந்த ஆண்டு மம்முட்டியை வைத்து பழசிராஜா என்ற வரலாற்று ஹிட் படத்தை எடுத்தவர் கோகுலம் கோபாலன். இவர் அடுத்து மெகா பட்ஜெட்டில், திப்புவும் உன்னியார்ச்சாயும் என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்தபடமும் வரலாற்று சம்பந்தப்பட்ட படம்தான். மன்னர் திப்புசுல்தானின் வாழ்க்கையை மையமாக மைத்து இப்படம் உருவாக இருக்கிறது.



இதில் திப்பு சுல்தான் வேடத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் கதையை ஜான்பால் எழுதியுள்ளார். வயலார் மாதவன் இயக்குகிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம், இப்படத்தின் சூட்டிங் துவங்குகிறது. இதற்காக கமலிடம் நான்கு மாதம் கால்ஷீட் கேட்டுள்ளனர்.



இது குறித்து ஜான்பால் கூறும்போது, கதையை எழுதும்போதே திப்பு சுல்தான் கேரக்டருக்கு கமல்தான் பொருத்தமானவர் என உணர்ந்தோம். அவர் தோற்றம் கம்பீரமாக இருக்கும். வேறு யாரும் அந்த கேரக்டரில் நடிக்க முடியாது. கமலுடன் நடிக்கும் இதர கேரக்டர்களுக்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. யுத்தம், சுதந்திரப் போராட்டம், காதல் போன்ற அம்சங்கள் படத்தில் இருக்கும் என்றார்.

என்ன நடந்தாலும் நீங்கதான் பொறுப்பு! - தயாரிப்பாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை


சென்னை: "திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் நடந்தால், நீங்களே பொறுப்பு'' என்று பட அதிபர்கள் சங்க தலைவருக்கும், செயலாளருக்கும் சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பிலிம்சேம்பர் தியேட்டரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தியேட்டரில் 200 பேர் மட்டுமே அமரக்கூடிய வசதி இருப்பதாகவும், ஆனால் 1900 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே அந்த தியேட்டரில் பொதுக்குழு கூட்டம் நடத்த முடியாது என்றும், மீறி நடத்தினால், அதனால் ஏற்படும் விபரீதங்களுக்கு நீங்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், செயலாளர் ஆகிய இருவருக்கும் ஆயிரம் விளக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பிரச்சினை எழுப்பும் நோக்கத்தில் இரு குழுக்கள் முயன்று வருவதாக போலீசாருக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிலர் தகவல் அளித்திருப்பதால், இந்த எச்சரிக்கையை போலீசார் விடுத்துள்ளனர்.

இதனால் நாளைய கூட்டத்தில் ரசாபாசமான நிகழ்வுகள் அரங்கேறக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திப்பு சுல்தான் வேடத்தில் கமல் ஹாஸன்!


இந்திய சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்ற வரலாற்று நாயகனான திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார் கமல் ஹாஸன்.

18-ம் நூற்றாண்டில் இந்தியாவின் முக்கிய சமஸ்தானமாகத் திகழ்ந்த மைசூரின் மன்னராகத் திகழ்ந்தவர் திப்பு சுல்தான். போர்க் கலை, ஆட்சித் திறன், பொருளியல் நிர்வாகம் என பலவற்றில் மிகச் சிறந்தவராகத் திகழ்ந்தவர் திப்பு.

பிரெஞ்சுப் பேரரசன் நெப்போலியனின் இந்திய பிரதிநிதியாகக் கருதப்பட்டவர்.

திப்பு சுல்தானின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புதிய படம் ஒன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகிறது.

இந்தப் படத்தில் திப்பு சுல்தானாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் கமல் ஹாஸன். ஜான் பால் இந்தப் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதுகிறார். வயலார் மாதவன் இயக்குகிறார்.

'திப்புவும் உன்னியர்ச்சயும்' என இந்தப் படத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழ் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.

பழஸ்ஸி ராஜா படத்தைத் தயாரித்த கோகுலம் கோபாலன், இந்தப் படத்தை பிரமாண்ட செலவில் தயாரிக்கிறார். உன்னியர்ச்சா என்பது ராணியின் பெயர். வடக்கு மலபார் பகுதியை ஆட்சி செலுத்திய உன்னியர்ச்சா பெரிய வீராங்கனையாவார். திப்பு மற்றும் உன்னியர்ச்சா சம்பந்தப்பட்ட பகுதியை மட்டும் படமாக்குகிறார்கள்.

இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, கோகுலம் கோபாலன் நேற்று திருவனந்தபுரத்தில் அறிவித்தார்.

சினிமா திரையரங்குகளில் கட்டணம் குறையுமா?


திரையரங்குகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்துமாறு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதால், விரைவில் கட்டணங்கள் ஓரளவு குறைக்கப்படும் எனத் தெரிகிறது.

தற்போது மல்டி பிளக்ஸ் அரங்குகளில் அதிகபட்சமாக ரூ.120 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சென்னை நகரம் தவிர்த்த பிற நகரங்களில் இந்த அளவு கட்டணம் வசூலிக்கக் கூடாது. அனைத்து வசதிகளும் நிறைந்த நவீன பல்திரை அரங்குகளுக்கு மட்டுமே இந்த அதிகபட்ச கட்டணம் பொருந்தும்.

ஆனால் சென்னைக்கு வெளியில் உள்ள பல திரையரங்குகளும் தாறுமாறாக கட்டணங்களை உயர்த்தி வசூலிக்கின்றன.

எனவே டிக்கெட் கட்டணத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். குளிர்சாதன தியேட்டர்களுக்கும் குளிர் சாதன வசதியில்லாத தியேட்டர்களுக்கும் தனித்தனி கட்டணங்கள் நிர்ணயிக்க வேண்டும் என்றும், தியேட்டர்களில் குறிப்பிட்ட காட்சிகள்தான் திரையிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.

"இப்போது தியேட்டர்களில் 4 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் 5 காட்சிகளுக்கு அனுமதிக்கப்படுகிறது. இதைத் தவிர்த்து, எத்தனை காட்சிகள் வேண்டுமானாலும் வசதிப்படி திரையிட்டுக் கொள்ள அரசு உத்தரவிட வேண்டும். தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றுதான் கேட்கிறோம்," என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பேரவை தலைவர், அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டணம் முறைப்படுத்தப்பட்டால், ஒற்றைத் திரை கொண்ட அரங்குகளின் கட்டணங்கள் குறையும் எனத் தெரிகிறது. அதேபோல மல்டிப்ளெக்ஸ் என்ற பெயரில், டப்பா திரையரங்குகளில் தாறுமாறாக வசூலிக்கப்படும் கட்டணத்திலும் மாறுதல் வரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

உலக பயணம் போகும் ஹாரிஸ்... 3டி இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்!


இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் உலக நாடுகளில் இசைப்பயணம் மேற்கொண்டு மேடை இசை கச்சேரிகள் நடத்துகிறார். 3 டி முறையில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதாக அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து ஹாரீஸ் ஜெயராஜ் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:

நான் இசை அமைப்பாளராகி 10 வருடங்கள் ஆகி விட்டன. கவுதம்மேனன் என்னை அறிமுகப்படுத்தினார். மேடை இசை நிகழ்ச்சிகள் நடத்தும்படி ரசிகர்களிடம் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்தன. அதை ஏற்று உலக இசைப்பயணம் செல்கிறேன்.

முதல் இசை நிகழ்ச்சி சென்னை மாயாஜாலில் அக்டோபர் 2-ந்தேதி நடைபெறும். கோவையில் அக்டோபர் 16-ந்தேதியும் ஹைதராபாத்தில் 22-ந்தேதியும், துபாயில் நவம்பர் 18-ந்தேதியும், மலேசியாவில் டிசம்பர் 3-ந்தேதியும் நடைபெறும்.

3 டி இசை நிகழ்ச்சிகள்

3டி தொழில் நுட்பத்தில் ரசிகர்களை கவரும் வண்ணம் இசை நிகழ்ச்சி இருக்கும். வெளிநாட்டு கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் இசை கச்சேரியில் இடம் பெறும். பிரபல பாடகர்கள் ஹரிகரன், கார்த்திக், திப்பு, கிரிஷ், ஹரிணி, ஆண்ட்ரியா, சின்மயி, பென்னிதயாள், நரேஷ் அய்யர், ஹரீஷ் ராக வேந்திரா உள்பட 17 பேர் மேடையில் தோன்றிப் பாடுவார்கள்.

உலகத் தரத்தில், மைக்கேல் ஜாக்ஸன் போன்றோரின் இசை நிகழ்ச்சி மாதிரி தரமானதாக இந்த கச்சேரிகள் அமைய வேண்டும். சாதாரண மக்களும் உயர்ந்த தரத்திலான துல்லிய சவுண்டில் இந்த நிகழ்ச்சிகளைக் கேட்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

டெக்பிரண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக தரத்தில் புது அனுபவமாக இது இருக்கும்.

இயக்குனர் விஜய் மேற்பார்வையில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்காக 4 மாதங்கள் படங்களுக்கு இசை அமைப்பதை நிறுத்தி வைத்துள்ளேன்," என்றார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு மிரட்டல்: பெண் கைது

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.



முதல்வர் ஜெயலலிதா வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று 108 தொலைபேசிக்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து முதல்வரின் வீடு முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.



வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சோதனை முடிவில் மறைமலை நகரைச்சேர்ந்த பெண் மிரட்டலை விடுத்ததாக தெரியவந்தது.



இதையடுத்து அந்தப்பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

ஈழத்துக்கு எம்.ஜி.ஆர். எப்படி உதவினாரோ, அந்த அளவுக்கு முதல்வர் அம்மாவும் உதவுறாங்க!

வடுக்களையும் வருத்தங்களையும் மட்டுமே சுமந்தவர்களின் முகங்களில் சட்டென வசந்தக் காற்று வீசினால் எப்படி இருக்கும்? சென்னை உயர் நீதிமன்றம், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தபோது அப்படித்தான் இருந்தது.



நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணா இருவரும் எட்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடை என அறிவித்ததும், நீதிமன்ற வளாகமே ஆரவாரித்தது. சீனியர் வழக்கறிஞர்கள் சிலர், ''இது நீதிமன்றம் என்பதை மறந்துவிட வேண்டாம்!'' எனக் கோபம் காட்ட, நீதிபதிகளே 'இது மக்களின் உணர்வு’ எனக் கை காட்டி அந்த ஆரவாரத்தை ரசித்தார்கள்.



வெற்றி முழக்கம், இனிப்புப் பகிர்வு, நன்றி அறிவிப்புகள் எனத் தமிழகம் முழுக்க ஆனந்தக் கொண்டாட்டம்.



இந்த இடைக்காலத் தடை உத்தரவு, மரண வாசலில் திக்திக் இதயத்தோடு நிற்கும் பேரறிவாளன்,முருகன், சாந்தன் மூவருக்கும் மறுஜென்ம நிறைவைக் கொடுத்திருக்கிறது. சிறைக் கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி, இந்த இடைக்காலத் தீர்ப்பு அறிவிப்பை முதலில் பேரறிவாளனிடம் சொல்லி இருக்கிறார். 'நிச்சயம் தடை கிடைச்சிடும்னு நம்பிக்கை இருந்துச்சு. உடனே, இதை முருகன், சாந்தன்கிட்டயும் சொல்லுங்க சார்!’ எனத் துள்ளி இருக்கிறார் அறிவு.



9-ம் தேதி தூக்கு என நாள் குறிக்கப்பட்டதுமே, மூன்று பேரும் உயர் பாதுகாப்புத் தொகுதியில் தனித் தனியாக அடைக்கப்பட்டார்கள். 50-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்கள். திடீரென 'ஏ கிளாஸ்’ உணவு மூவருக்கும் வழங்கப்பட்டது. மெடிக்கல் செக்கப், ஒயிட் அண்ட் ஒயிட் உடை எனத் தூக்குத் தண்டனையை நினைவுபடுத்தும் அனைத்து வேலைகளும் நடந்தபடியே இருந்தன.



''நீங்கள் இறந்த பிறகு, உங்கள் உடலை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?'' என்கிற கேள்வியும் சிறைத் துறை வழக்கப்படி கேட்கப்பட்டது.



பேரறிவாளன் தனது தாய் அற்புதத்தம்மாளிடம் உடலை ஒப்படைக்கச் சொல்லி எழுதிக் கொடுத்தார்.



முருகனும் சாந்தனும் 'எங்களுக்காக எல்லாவிதப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் சீமான் அண்ணனிடம் ஒப்படையுங்கள்’ என எழுதிக் கொடுத்தார்கள்.




போர்க் குற்றத்தைக் கண்டித்து சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றிய முதல்வர் நிச்சயம் நம் விஷயத்தில் தலையிட்டு, நல்ல தீர்வைக் கொடுப்பார்!'' என தூக்குத் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பேரறிவாளன் சொல்லி வந்தாராம்.



இடைக்காலத் தடையோடு சட்டமன்றத்தில் தூக்குத் தண்டனையைக் குறைக்க வலியுறுத்தும் தீர்மானமும் இயற்றப்பட, ''ஈழத்துக்கு எம்.ஜி.ஆர். எப்படி உதவினாரோ, அந்த அளவுக்கு முதல்வர் அம்மாவும் உதவுறாங்க. இன்னொரு எம்.ஜி.ஆர்-னா அது அம்மாதான்!'' எனக் கொண்டாடி இருக்கிறார் முருகன். சட்ட மன்றத் தீர்மானம், இடைக்காலத் தடை குறித்து சொல்லப்பட்ட பிறகுதான், சாந்தனின் முகத்தில் கொஞ்சம் புன்னகை.



நீதிமன்றத்தில் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர் வாதாடி முடித்த பிறகு வைகோ எழுந்தார். ''மூன்று பேரையும் தனிமைச் சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்!'' எனச் சொல்ல, அதற்கும் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம். ம.தி.மு.க. சட்டப் பிரிவுச் செயலாளர் தேவதாஸ் மூலமாக, வழக்கறிஞர்கள் காலின் கான்சிவேல்ஸ், சபரீசன் ஆகியோரை வேலூர் சிறைக்கு அனுப்பிவைத்தார் வைகோ.



திருவள்ளூர் மாவட்டச் செயலாளரான செங்குட்டுவன், வழக்கறிஞர்கள் மொகித் சவுத்ரி, பாரி, மலர் ஆகியோரை சிறைக்கு அழைத்துப் போனார். பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் சந்தித்த வழக்கறிஞர்கள், ''தூக்குத் தண்டனைக்கு எதிரான விஷயமாகத்தான் இந்த வழக்கைக் கையில் எடுத்தோம். ஆனால், நீதிமன்றத்திலும் சாலைகளிலும் திரண்டு இருந்த மக்களின் ஏகோபித்த உணர்வைப் பார்த்து சிலிர்த்துப்போனோம்.



இந்த மூவருடைய தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு மாநிலமே கைகோத்து நிற்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த வழக்கில் ஆஜரானதற்காகப் பெருமிதப்படுகிறோம்!'' எனச் சொல்ல, மூவருக்கும் கண் கலங்கிவிட்டது.



சிறைக்குள் மூவருடைய மனநிலையும் எப்படி இருந்தது என்பது குறித்து அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.



தூக்கு நாள் நெருங்கியதை நினைத்து, அவர்கள் பயப்படவில்லை. ஆனாலும், தூக்குத் தண்டனைக்கான சம்பிரதாயங்களை நாங்கள் நடத்தியபோது, பதற்றமானார்கள். இதேபோன்ற சம்பிரதாயங்கள் இந்த மூவருக்கும் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டபோதே ஒரு முறை நடத்தப்பட்டது.



இதற்கிடையில் செங்கொடி தீக்குளித்து இறந்த செய்தி கேட்டு மூவரும் உடைந்துபோனார்கள். அந்தக் குடும்பத்துக்கு நாங்க என்ன செய்யப்போறோம் எனக் கலங்கிய பேரறிவாளனைத் தேற்றவே முடியவில்லை.



முருகனும் சாந்தனும், எங்களுக்காக இனியும் யாரும் சாக வேண்டாம். சீக்கிரமே எங்க கதையை முடிச்சிடுங்க சார்... எங்களுக்காக தீக்குளிச்ச தங்கச்சியோட முகத்தைக்கூட பார்க்க முடியாமப்போச்சே எனப் புலம்பினார்கள்.




இடைக்காலத் தீர்ப்பு, சட்டமன்றத் தீர்மானம் என இரட்டிப்பு சந்தோஷம் கிடைத்தும், செங்கொடி மரணத்தால் அந்த மூவரும் பெரிதாக மகிழவில்லை. பேரறிவாளனும் முருகனும் 'நன்றி தாயே’ என உரக்கக் குரல் எழுப்பினார்கள்.



மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். திங்கட்கிழமை தங்களை சந்திக்க வரும் சீமான் மூலமாக கடிதத்தை முதல்வர் கையில் சேர்க்கப்போகிறார்கள். நன்றிகளால் அந்தக் கடிதம் நிரம்பி இருக்கிறது! என்றார்கள் சிறைத் துறை அதிகாரிகள் சிலர்.



மூவரையும் சந்தித்துவிட்டுத் திரும்பிய வழக்கறிஞர்கள் சிலர், ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்கள் 20 வருடங்களாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். தனிமைச் சிறையின் கொடுமையை முன்னுதாரணமாகக் காட்டியே குற்றவாளிகளுக்குத் தண்டனை குறைப்பு செய்யப்பட்ட சம்பவங்கள் நிறைய இருக்கின்றன.



எட்டு வார காலத் தடைக்குப் பிறகு, நீதிமன்றத்தில் இந்த வாதத்தை வலியுறுத்துவோம். அதேபோல், ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கும் ரொபர்ட் பயஸ், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் 20 வருடங்களாக உள்ளே இருக்கிறார்கள். அப்படி என்றால், ஆயுள் தண்டனையின் கால அளவு எத்தனை வருடங்கள்? அடுத்த கட்ட சட்டப் போராட்டங்களில் இத்தகைய வாதங்களையும் எடுத்துவைப்போம்! என்கிறார்கள்.



இதற்கிடையில் இன்னும் சில உணர்வாளர்களோ, ''செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில், சிறைகளில் இருந்து யார் யாரை எல்லாம் விடுவிக்கலாம் என்கிற ஆய்வு நடக்கிறது.



ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்களின் பெயர்களும் பரிசீலனைப் பட்டியலில் இருக்கின்றன.



போர்க் குற்றத்தை எதிர்த்தும், தூக்குத் தண்டனையைக் குறைக்கச் சொல்லியும் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதா, ஆயுள் தண்டனையைக் கடந்தும் சிறையில் வாடுபவர்களை மீட்டால், அது காலத்துக்கும் மறவாத சாதனையாக இருக்கும்! என்கிறார்கள் நம்பிக்கையோடு.



ஆச்சரிய மாற்றங்கள் தொடரும் என நம்புவோம்!



ஜூனியர் விகடன்

மூவர் தூக்கு தண்டனை - சில சக்திகள் எதிர்க்கின்றன - அதை முறியடிப்பது எங்கள் கடமை:வைகோ

நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு (02.09.2011) வருகை தந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:



தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கோடான கோடி மக்களின் பேராதரவுடன், தமிழக சட்டமன்றத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.



உச்சநீதி மன்றத்தால் 9 ந் தேதி நிறைவேற்றப்பட வேண்டிய தூக்கு தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் 8 வாரம் தடைவிதித்துள்ளது. இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவுகள், சகோதரிகள், தாய்மார்கள் ஆகியோரை ஈவு, இரக்கமின்றி கொடுமைப்படுத்தி கொலை செய்த காட்சிகளை வெளிநாட்டு சேனல்கள் மூலம் ஒளிப்பரப்பப்பட்டது. நானும் அதனை ஆயிரக்கணக்கான சி.டி.களை தந்துள்ளேன். இந்த கொடுமைகளுக்கெல்லாம் இந்தியாதான் உதவி செய்தது என்பது வேதனைக்குரியது.



ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்கிலிடப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வந்தபோது இதயத்தில் ரத்தம் கசிந்து வழிந்தது. 3 தமிழர்களின் உயிரை காக்க தமிழக முதல் அமைச்சர் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் கொண்டு வந்ததை அரசியலுக்கு அப்பாற்பட்டு அவருக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். தமிழக சட்டமன்றத்திற்கும், சட்டசபை உறுப்பினர்களுக்கும் நன்றி கடன்பட்டுள்ளதை அரசியல் தாண்டி பேசுகிறேன். உச்சநீதிமன்ற உத்தரவை எப்படி ஐகோர்ட்டு தடை செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.



ஏற்கனவே இதற்கு முன் உதாரணங்கள் உள்ளன. 13 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 1999 ம் ஆண்டு மே மாதம் 19 ந் தேதி 23 பேருக்கு தூக்குத் தண்டனை ரத்து செய்தது. 3 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு மேல் தூக்கு தண்டனை நிலுவையில் இருந்தால் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. முதல் அமைச்சர் தகுந்த முறையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இதனை சில சக்திகள் எதிர்க்கின்றன. அதை முறியடிப்பது எங்கள் கடமை. இவ்வாறு வைகோ பேசினார்.

தமிழரைப் பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை



தமிழரைப் பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை. கிறீஸ் பூத நடமாட்டத்துக்கும், அரச படையினருக்கும் சம்பந்தம் இல்லையெனில் இதுவரை இந்த அட்டகாசங்கள் ஏன் கட்டுப்படுத்தப்படவில்லை? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி தொடுத்துள்ளது.கிறீஸ் பூத விவகாரத்தைக் கட்டுப்படுத்த இயலாத பொலிஸும், இராணுவமும் தேவைதானாவென்றும் அது தெரிவித்துள்ளது.



கிறீஸ் பூத விவகாரம் குறித்து கூட்டமைப்பு நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டது.



அதில் கூறப்பட்டுள்ளதாவது:



ஒரு மாதத்துக்கு முன்பாக மலையகத்தில் ஆரம்பித்த கிறீஸ் பூதப் பயங்கரம் பின்பு அம்பாறை, மட்டக்களப்பு எனப் பரவி இப்பொழுது வட மாகாணத்தையும் வந்து சேர்ந்துள்ளது.



தமிழ் பேசும் மக்களை மையமாக வைத்தே அதிலும் குறிப்பாகப் பெண்களின் மீதே கிறீஸ் பூதம் அல்லது மர்ம மனிதன் என்ற இரத்தக் காட்டேறி அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.



மக்கள் ஒன்று திரண்டு சில இடங்களில் கிறீஸ் பூதங்கள் சிலவற்றைப் பிடித்திருக்கின்றனர். அவற்றைப் பொலிஸாரிடமும் இராணுவத்தினரிடமும் கையளித்தும் உள்ளனர். ஆனால், இவைகள் எல்லாம் கட்டுக்கதைகள் என்றும், வெறும் வதந்திகள் என்றும் நகைப்புக்கிடமாகக் பொலிஸாரும், இராணுவத்தினரும் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறது.



பாதுகாப்புச் செயலாளர் இதில் 25 விழுக்காடு உண்மை! மீதி 75 விழுக்காடு வதந்தி என இஸ்லாமியப் பெரியார்களிடம் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த 25 விழுக்காடு உண்மை என்ன? என்பது பற்றி இதுவரையில் மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை.



வடக்கில் பொதுமக்களால் பிடித்து ஒப்படைக்கப்படும் மர்ம மனிதர்கள் எல்லோரும் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இறுதியாக இவர்கள் மனநோயாளிகளாகச் சொல்லப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.



எங்கெங்கு கிறீஸ் மனிதனுக்கும், மக்களுக்கும் இடையில் கைகலப்புகள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஆபத்பாந்தவன் போல் இராணுவத்தினர் உடனடியாகவே வந்து சந்தேகநபர்களைக் காப்பாற்றி விடுகின்றனர்.



ஆனால், இவர்களைப் பிடிக்க முயலும் அல்லது இவர்களைப் பிடித்து ஒப்படைக்கும் அப்பாவிப் பொதுமக்கள் பொலிஸாரினாலும், இராணுவத்தினராலும் மிருகத்தனமாகத் தாக்கப்படுகின்றனர். கிழக்கில் இருந்து வடக்கு வரை மக்களைக் கிலி கொள்ள வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இருண்டால் எல்லோரும் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



கிறீஸ் பூதப் பயங்கரம் ஆங்காங்கே நிகழும் தற்செயல்களல்ல. இது நன்கு பயிற்றப்பட்டவர்களினால் திட்டமிடப்பட்ட முறையில் அரங்கேற்றப்பட்டுவரும் ஒரு நிகழ்ச்சி நிரலாகும்.



இதன் மூலம் தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களை கோபம் கொள்ளச் செய்து, வீதிக்கு இழுத்து, அழித்தொழிப்பதுதான் இந்தத் திட்டத்தின் பின்னணியோ என்று ஐயங்கொள்ள வேண்டியுள்ளது.



இல்லையேல் படையினர் வீடு வீடாகச் சென்று மக்களை இழுத்துப்போட்டுத் தாக்கவேண்டிய தேவை எதுவும் இல்லை. தமிழரைப் பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை என்பது அப்பாவிகள் மீது அவர்கள் நடத்தும் மிருகத்தனமான தாக்குதல்களில் இருந்து புலனாகிறது.



அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பிரதிபலிப்பு இதுதானா என்ற கேள்வியும் எழுகின்றது.



முப்படைகளுக்கும் தளபதியாக இருக்கும் ஜனாதிபதி இவற்றை உடனடியாக நிறுத்தி தமிழ் மக்களை அச்சத்தின் பிடியில் இருந்து விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கின்றது.



இவ்வாறு அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் பெற்ற மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டம்! பலத்த கைதட்டல் வாங்கிய செ.கணபதி!

சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் (02.09.2011) சேலத்தில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டம் பலவகையிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.



ஆரம்பம் முதலே, மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் வீரபாண்டி ஆறுமுகம், ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களை சேலம் மாவட்ட அரசியலில் கட்சியில் ஓரம் கட்டியே வந்தார்.



மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது, சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த ஒரு அரசு நிகழ்ச்சிக்கு வந்தார். அவரை வரவேற்க செல்லாமல் கடைசி நேரத்தில், உடல்நிலை சரியில்லை என்று கோகுலம் மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டர் வீரபாண்டி ஆறுமுகம்.



இதனால், மு.க.ஸ்டாலின்தான் மருத்துவ மனைக்கு போனாரே தவிர, வீரபாண்டி ஆறுமுகம் மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு போகவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, சேலம் தெற்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளரான கிச்சிப்பாளையம் குணசேகரனுக்கு தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.



குணசேகரனுக்கு சீட்டு கொடுத்தால் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கலைஞரிடம் அடம் பிடித்து, ஸ்டாலின் ஆதரவாளருக்கு சீட்டு கிடைக்காமல் செய்தார் என்று குற்றச்சாட்டுக்கு உள்ளானார் வீரபாண்டி ஆறுமுகம்.



அதற்கு மாற்றாக தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பணம் கூட கட்டாத மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை இந்த தொகுதியில் போட்டியிட வைத்து, மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.கவை தோல்வியடைய வைத்தார்.



நில மோசடி வழக்குகளில் வீரபாண்டி ஆறுமுகம் கைதாகி, கோவை சிறையில் இருக்கும் இந்த நிலையில் கூட்டம் நடத்தக்கூடாது என்று சிலர் அடம பிடித்தபோதும், முடியாது என்று கூட்டத்தை நடத்தியுள்ளார்கள் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள்.



வீரபாண்டி ஆறுமுகத்தின் மிக நெருக்கமான சகாவாக இருந்து, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஊடல் கொண்டு அவரிடமிருந்து, விலகிய பனமரத்துப்பட்டி ராஜேந்திரந்திரன் தான் இப்போது மு.க.ஸ்டாலின் அணியில் முன்னாள் நிற்பவர். அவருக்கு பின்னால், டி.எம்.செல்வகணபதி எம்.பி, முன்னாள் மேயர் சூடாமணி, முன்னாள் துணை மேயர் சுபாஷ் போன்றவர்கள் இருக்கிறார்கள்.



நீன்ட நாள்களாக வீரபாண்டி ஆறுமுகத்தின் விசுவாசிகளாக இருந்த பலர், வீரபாண்டி ஆறுமுகத்தின் நெருங்கிய அல்லக்கைகளாக இருந்து கொண்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கட்சிக்கரகளை நெருங்கவிடாமல், தாங்கள் விருப்பம் போல விளையாடிய பூலாவாரி சேகர், பாரப்பட்டி சுரேஸ்குமார், கவுசிகபூபதி, மற்றும் போலிஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் போன்றோரின் நடவடிக்கையால் வெறுப்புற்ற மாவட்டத்தின் பெரும்பாலான பொறுப்பாளர்கள், மற்றும் கட்சிக்காரர்கள் தற்போது சத்தமில்லாமல் மு.க.ஸ்டாலின் பக்கம் திரும்பி விட்டனர்.



அதனால், (02.09.2011) சேலம் கோட்டை மைதானம் எதிர்பார்த்ததை காட்டிலும் பலமடங்கு கூட்டம் கூடிவிட்டது. மாலை நான்கு மணி முதல் மழை விட்டு விட்டு வந்து பயம் காட்டியபோதும் ஆறு மணிக்கு கட்டுக்கடங்காது கூட்டம் கூடிவிட்டது.



வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசு ராஜேந்திரன் பேசும்போது, எங்களின் உயிருள்ளவரையில் தலைவர் கலைஞர் அவர்கள்தான் எங்களின் “உயிர், ஸ்டாலின் அவர்கள் தான் “உயிர்மூச்சு இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.



தற்போததைய சட்டமன்றம் சட்டமன்றம் போல நடக்கவில்லை சிங்கு ஜா போடும் மன்றமாகத்தான் உள்ளது. அம்மா அம்மா என்பதைத் தவிர அங்கு வேறு எந்த வார்த்தையும் கேட்டக முடிவதில்லை. என் நண்பர் ஒருவர் வேடிக்கையாக சொன்னார், ஜெயலலிதா ஏன்...? ஆடு மாடுகளை மக்களுக்கு இலவசமாக கொடுக்கிறார் தெரியுமா...? என்று கேட்டார்.



எனக்கு தெரிய வில்லை என்று சொன்னேன். அந்த விலங்குகள் எல்லாம் “அம்மா என்று மட்டும் சொல்லுவதால் தான் அதை தமிழக மக்களுக்கு இலவசமாக கொடுக்கிறார் என்று சொன்னார். தன் கட்சிகாரர்கள் மட்டுமல்ல தமிழகமே “அம்மா புராணம் பாடவேண்டியுள்ளது இந்த ஆட்சியில், என்ற செல்வகணபதி கூட்டத்தின் பலமான கைதட்டலை பெற்றார்.



வழ..வழ....வென்று பலரையும் பேச விடாமல், 7.45 மணிக்கு மு.க.ஸ்டாலின் பேசவந்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வீரபாண்டியார் இல்லை, அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாலும், இந்த நேரம், இங்கு நடத்து கொண்டிருக்கும் இந்த கூட்டம் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருப்பார். அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது நமக்கு வருத்தமானது தான். ஆனாலும் அவர் இங்குள்ள அத்துனை பேரின் உள்ளங்களிலும் நிறைந்துள்ளார்.



சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் கேள்விகளை கேட்கலாம், அதற்க்கு அமைச்சர் பெருமக்கள் பதில் சொல்வார்கள் இதுதான் மரபு. கேள்வி நேரத்தில் யாரும், யாரைப்பற்றியும் விமர்சிக்க கூடாது என்பது மரபு. ஆனால் இந்த சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில், ஒரு அமைச்சர் நம் கட்சி உறுப்பினர் துரைமுருகனை பார்த்து இவர் பாடி லாங்வேஜில் கிண்டல் செய்கிறார் என்கிறார்.



அதற்கு இன்னொரு சட்டமன்ற உறுப்பினர் இவர் 1989ம் வருடம், நம் தலைவியை சட்டமன்றத்திலேயே அடித்து அவமானப்படுத்தியவர் என்று பேசுகிறார். இதையெல்லாம் சபாநாயகர் அணுமதிக்கிறார், எதிர்க்கட்சி தலைவரும் கண்டுகொள்வதில்லை.... எதிர்க்கட்சி என்று ஒருவர் இருப்பதாகவே தெரியவில்லை.



சட்டமன்றத்தில் ஒரு சம்பவம் பற்றி பேசும்போது, ஒரு கட்சியின் உறுப்பினர்கள் தாங்கள் சந்தேகங்களை தீர்க்கவும், தலைவர்களுடன் பெசிக்கொள்ளவும் ஒரே பகுதியில் உட்கார இடம் கொடுக்கவேண்டும் அல்லது ஒருவர் பின் ஒருவராக அமர இடம் கொடுக்கவேண்டும்.



ஆனால் இப்போது சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது. நம் கட்சி உருப்பினகளுக்கு ஆளுக்கு ஒருபக்கமாக இடம் கொடுத்துள்ளார்கள். நாங்கள் யாரு யாரோடும் பேசிக்கொள்ளமுடியாத் நிலையில் சட்டமன்றத்தில் இருக்கிறோம். சட்டமன்றத்துக்கு என்று ஒரு மரபு உள்ளது. அந்த மரபு இங்கே மீறப்படுகிறது.



ஒருமுறை எதிர்க்கட்சி வரிசையில் உறுப்பினராக இருந்த டாக்டர் ஹண்டே அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து நீங்கள் மூன்றாம் தரமான ஆட்சி நடத்திக் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்று பேசினார்.



அதற்கு பதிலைத்த தலைவர் கலைஞர் அவர்கள், உறுப்பினர் சொல்லுவது போல நான் மூன்றாம் தரமான ஆட்சி நடத்தவில்லை.... நான்காம் தரமான ஆட்சி நடத்திக்கொண்டுள்ளேன். ஆமாம்... பிராமணன், வைசியன், சத்திரியன், சூத்திரன் என்கிற அடிப்படையில் நான் நான்காம் தரமான ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிரேன் என்றார். இப்படி நாகரீகமாக நடந்த மன்றத்தில் இப்போது என்ன நடக்கிறது.



தாங்கள் நினைத்ததை செய்து முடிக்க துடிகிறார் ஜெயலலிதா. சமச்சீர் கல்வியில் உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது. சட்டமன்ற கூட்டம் கூட்டப்படுவதர்க்கு முன்பே, இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளீர்கள். நான்கு மாதம் முன்பு சமச்சீர் கல்வி தரமானது என்று சொல்லி பாடப்புத்தகங்களை அச்சடிக்கசொன்ன கல்வித்துறை செயலாளர் இப்போது சமச்சீர் கல்வி சரியில்லை என்று சொல்லியுள்ளார் இப்படி பல காரணங்களை சொல்லிய உச்சநீதிமன்றம் ஜெயலலிதா அரசை கண்டனம் செய்துள்ளது.



அதுபோலவே ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் இன்னும் ஒரு அடி கொடுக்கப்போகிறது... அது புதிய தலைமை செயலகத்தை தரமில்லாத்து என்று சொல்லி இழுத்து மூடிஇருப்பதற்கு.



2002 வருடம் ஜெயலலிதா அவர்கள் முதல்வராக வந்ததும் இப்போது இருக்கும் இந்த ஜெயின்ஜார்ஜ் கோட்டை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கட்டிடம் மிகவும் பழையது, பல இடங்களில் ஒழுகுகிறது.. அந்த ஓட்டையை சரிசெய்ய மத்திய அரசிடம் அனுமதி வாங்கவேண்டியுள்ளது.



ஏன்... இந்த தலைமைச்செயலகத்தை சுற்றிலும் முளைக்கும் புல், பூண்டுகளை புடுங்குவதற்கு கூட நாம் மத்திய அரசிடமும், பாதுகாப்பு துறையிடமும் அனுமதி வாங்கவேண்டியுள்ளது, எனவே நாமக்கு ஒரு புதிய தலைமை செயலகம் காட்டவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார் அதை தி.மு.கவும் ஆதரித்தது.



முதலில் மகாபலிபுராம் சாலையில் இடம் பார்த்தார், பின்னர் ராணிமேரி கல்லூரியை இடித்துவிட்டு அங்கு தான் கட்டவேண்டும் என்றார். பின்னர் கோட்டூர்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நூலக ஆய்வுமையம் உள்ள இடத்தில் கட்டவேண்டும் என்றார்.



அவரது ஆட்சிகாலத்தில் எந்த இடத்திலும் புதிய தலைமைச்செயலகம் கட்டவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானத்தை நிறைவேற்றும் விதமாக, ஓமந்தூரார் தோட்டத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் ஒரு பகுதியை சட்ட மன்றமாகவும் ஒருபகுதியை தலைமைச் செயலகமாகவும் காட்ட முடிவு செய்யப்பட்டு அந்த பணிகள் முடிவடையும் நிலையில், இப்போது அந்த கட்டிடம் தரமானது இல்லை என்று விசாரணை கமிசன் போட்டுள்ளார்.



ஏற்கனவே மேம்பாலம் கட்டியதில் ஊழல் என்று என்மீது போடப்பட்ட விசாரனை கமிசன் என்ன ஆனாது என்று தெரியவில்லை. இப்போது போட்டப்பட்ட விசாரணை கமிஷனும் அப்படித்தான் இருக்கும்.



தலைமை செயலகத்தை எப்படி மருத்துவமனையாக மாற்ற முடியும். அரசு அலுவலகம் இருக்கும் அமைப்பு வேறுமாதிரியானது, நோயாளிகள் போகவும் வரவும் வசதிகள் உள்ளபடி கட்டப்படும் மருத்துவமணை கட்டமைப்பு வேறுமாதிரியானது இதிலும் நாங்கள் நீதிமன்றத்துக்கு போயுள்ளோம். நீதிமன்றம் விசாரணை நடத்தி ஜெயலலிதாவிற்கு சரியான பாடம் புகட்டும் என்றார் ஸ்டாலின்.

பேரறிஞர் அண்ணாவின் 103வது பிறந்தநாள் விழா கூட்டம்: முதல்வர் அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:



பேரறிஞர் அண்ணாவின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு, 15 ந்தேதி முதல் 17 ந்தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடை பெறும். அ.தி.மு.க. அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.



அ.தி.மு.க. பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், அதில் கலந்து கொள்வோர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆங்காங்கே நடைபெறும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற கேட்டுக் கொள்கிறேன்.



மாவட்ட கழக செயலாளர்களும், நிர்வாகிகளும் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளை எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, அணிகள், அண்ணா தொழிற் சங்கம் உள்ளிட்ட அ.தி.மு.க. அமைப்பு நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகளுடனும் சேர்ந்து அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும்.



தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத இடங்களிலும் மற்ற மாநிலங்களிலும் அண்ணா சிலை அல்லது படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகரைக் கண்காணிக்க காணொலிப் பதிவுக் கருவிகள்

யாழ்ப்பாண நகரின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் கண்காணிப்பு காணொலிப் பதிவுக் கருவிகளைப் பொருத்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



கொழும்பு நகரில் பாதுகாப்பு சோதனைச்சாவடிகளை அகற்றிய பின்னர், முக்கிய இடங்களில் கண்காணிப்பு காணொலிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.



இதேபோன்று யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களிலும், படை முகாம்களின் முன்பாகவும் கண்காணிப்பு காணொலிப் பதிவுக் கருவிகளைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.



உயர் தொழில்நுட்ப காணொலிப் பதிவுக் கருவிகளைப் பொருத்துவதன் இரகசியமாக கண்காணிக்க முடிவதுடன், பாதுகாப்பையும் பலப்படுத்த முடியும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கருதுவதாகத் தெரியவந்துள்ளது.



இத்தகைய உயர் தொழில்நுட்பக் கருவிகளை கொள்வனவு செய்வதால் அடுத்த ஆண்டுக்கான சிறிலங்காவின் பாதுகாப்புச் செலவினம் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவினம் 1300 கோடி ரூபாவினால் அதிகரிக்கும் என்று சிறிலங்கா நிதியமைச்சு மதிப்பிடு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூவர் விடுதலை மற்றும் தூக்குத்தண்டனை மறுப்புக் கருத்தரங்கம்

குவைத்தில் பல்வேறு அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் கூடி மூன்றுத் தமிழர்களின் விடுதலையை முன்வைத்து “மூன்று தமிழர்கள் விடுதலைக் கூட்டமைப்பு” என்ற இயக்கத்தை தொடங்கினர். அதன் தொடக்கமாக தோழர்களின் விடுதலையை கோரும் எழுச்சிப்பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டது. தோழர் யுகபாரதி அவர்கள் இயற்றிய அந்தப்பாடலுக்கு தோழர்.ஆதி அவர்கள் சிறந்தமுறையில் இசையமைத்துத் தந்தார்கள்.



தொடர்ந்து, இந்திய குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுனர், முதல்வர் உள்ளிட்ட இந்திய அரசிலமைப்புத் தலைவர்களுக்கு ”மூன்றுத்தமிழர்கள்” உள்ளிட்ட தூக்குத்தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யவேண்டியும், இந்தியாவில் தூக்குத்தண்டனையை முற்றிலும் ஒழித்திட வேண்டியும் கையெழுத்து இயக்கம் தொடங்கி நடத்தப்பெற்று வருகின்றது.



இந்நிலையில், மூன்று தமிழர்களையும் தூக்கிலிட ஆணை பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பும், தொடர் போராட்டங்களும் வலுப்பெற்றது. பல்வேறு அமைப்புக்களும் தனித்தனியே ஏற்பாடு செய்த போராட்டங்களால் அதன் பயன் முழுமையடையாது எனக் கருதிய கூட்டமைப்பு, தமிழகத்தின் பல்வேறு தலைவர்களையும் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் பட்டினிப் போராட்டமும், தமிழக முதல்வரைச் சந்தித்து மூன்றுதமிழர்களின் தூக்கினை இரத்துச் செய்ய வலியுறுத்தவும் கோரும் கடிதங்கள் மின்னஞ்சல் வழியாகவும், தொலைநகல் வழியாகவும் அனுப்பப்பட்டது.



இதனைத்தொடர்ந்து, தமிழக முதல்வருக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் தொலைநகலில் மூன்றுதமிழர்களை விடுவிக்க் கோரும் மனு அளிக்கும் இயக்கம் தொடங்கப்பெற்று குவைத் வாழ் தமிழர்கள் பலரிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு தொலைநகல் அனுப்பப்பட்டது.



தொடர்ந்து, மூன்றுதமிழர்கள் விடுதலைக் கூட்டமைப்பின் சார்பில் “மூவர் விடுதலை மற்றும் தூக்குத்தண்டனை மறுப்புக் கருத்தரங்கம்” 31.08.2011 அன்று வீரப்பெண் செங்கொடி நினைவரங்கத்தில் நடைபெற்றது.



இயக்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட தோழர்களின் விடுதலைப்பாடல் கருத்தரங்கத்தின் தொடக்கமாக காணொளியாக ஒளிபரப்பப்பட்டு ஒலிக்க, தோழர்.அமானுல்லா அவர்கள் கருத்தரங்கத்தின் வரவேற்புரையும் நோக்கவுரையும் நிகழ்த்தினார்.



தொடர்ந்து, “தமிழர் மூவரை விடுதலை செய்க” என்ற முழகத்துடன், அம்மூவரும் நிரபராதிகள் என்ற உண்மையை கூறி, அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டியதன் அவசியத்தை விளக்கி உரையாற்றிய தோழர்.முனு.சிவசங்கரன் அவர்கள், கருத்தரங்கத்தின் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார், இதனை தோழர்.தமிழ்நாடன் வழிமொழிந்தார்.



அடுத்து, “மரணதண்டனை ஒழிப்போம், மனிதநேயம் காப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றிய தோழர்.அறிவழகன் அவர்கள், மரணதண்டனையின் கொடிய முகத்தை விவரித்து, அது ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை விளக்கி கருத்தரங்கத்தின் இரண்டாம் தீர்மானத்தை முன்மொழிய, தோழர்.பிரபாகரன் அவர்கள் வழிமொழிந்தார்கள்.



மூன்று தமிழர்களின் விடுதலையை முன்வைத்து போராடி, இறுதியில் இப்போராட்டம் வலுப்பெற்று இறுதித் தீர்வை அடைய வேண்டுமெனற நோக்கில் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தோழர். செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்ட்து. இந்நேரத்தில் தோழர்.செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தும் காணொளி திரையிடப்பட்டது. ஒருநிமிட மௌன அஞ்சலிக்குப்பிறகு, “வீரப்பெண் தோழர்.செங்கொடிக்கு எங்கள் வீரவணக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றி கருத்தரங்கத்தின் தீர்மானத்தை தோழர்.செந்தில் முன்மொழிய தோழர்.கருணாநிதி அதனை வழிமொழிந்தார்கள்.



தொடர்ந்து, “மூன்று தமிழரைக்காப்போம், மரண தண்டனை ஒழிப்போம்” என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.



தமிழர்களுக்கெதிராக தொடர்ந்து போர்த்தொடுத்துவரும் எதிரிகள், இம்மூவர் தூக்குத்தண்டனையிலும் முனைப்பாக செயல்பட்டுவரும் வேளையில் அந்த எதிர்களை அடையாளப்படுத்தி எச்சரிக்கும்விதமாக “விரோதிகளை வேரறுப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றி நான்காம் தீர்மானத்தை முன்மொழிந்தார் தோழர்.நெறியாளன், தோழர். விருதைபாரி இத்தீர்மானத்தை வழிமொழிந்தார்.



தொடர்ந்து, இதுபோன்ற காலங்களில் தமிழர்கள் ஒற்றுமையாக போராடி ஒருமித்தகுரலில் ஒலித்தால் மட்டுமே இறுதி வெற்றிசாத்தியப்படும், அதற்கான தேவைகள் எப்பொழுதும் உள்ளது என்ற கருத்தை மையப்படுத்தி, ”உலகத்தமிழராய் ஒன்றிணைவோம்” என்ற தலைப்பில் தோழர்.தமிழ்நாடன் உரையாற்றி அய்ந்தாவது தீர்மானத்தை முன்மொழிய தோழர்.விருதைபாரி அவர்கள் வழிமொழிந்தார்கள்.

மூன்று பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்ட செய்தியை அறிந்தவுடன் தமிழகமெங்கும் பொதுமக்களும், மாணவர்களும், வழக்கறிஞர்களும் மற்றும் பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் தன்னெழுச்சியாகப் போராடி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும், உயர்நீதிமன்றத்தில் 8 வாரகால தடையானையையும் பெற்றிருக்கிறார்கள். இக்கருத்தரங்கத்தில் அப்போராளிகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக “போராளிகளைப் போற்றுவோம்” என்ற தலைப்பில் தோழர்.சிவமணி அவர்கள் தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களை விளக்கி அதில் பங்குகொண்டவர்களை அறிமுகப்படுத்தியதோடு கருத்தரங்கத்தின் ஆறாம் தீரமானத்தை முன்மொழிய தோழர்.தமிழ்வளன் அவர்கள் வழிமொழிந்தார்கள்.



கருத்தரங்கத்தின் இறுதி தீர்மானத்தை தோழர்.அன்பரசன் முன்மொழிந்து, “குவைத் தமிழர்கள் கூட்டாய்ச் செயல்படுவோம்” என்றத் தலைப்பிலும் உரையாற்றி, வரும் காலங்களில் குவைத்தில் இயங்கும் அனைத்து அமைப்புக்களும் தமிழர்களின் பொதுப்பிரச்சனைகளிலும் மொழி இனம் சார்ந்த பிரச்சனைகளிலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும், அதற்கான அமைப்பினை தொடங்கவேண்டிய அவசியத்தையும் விளக்கினார்கள். இத்தீர்மானம் தோழர்.செந்தில் அவர்களால் வழிமொழியப்பட்டது.



தொடர்ந்து, தோழர்.சேதுமாதவன், நிலவன், தமிழ்வளன், பகலவன், விதயாசாகர், இலதாராணி, மணிகண்டன், செல்லப்பெருமாள், கவிசேய் சேகர் ஆகியோர் கருத்தரங்கத்தின் தீர்மான்ங்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மூன்று பேரின் தூக்குத்தண்டனையை இரத்து செய்யக்கோரியும், மரணதண்டனையை முற்றாக ஒழித்திட வலியுறுத்தியும் உரையாற்றினார்கள்.



கருத்தரங்கத்தின் நிகழ்வுகளை தமது கருத்துக்களையும் இணைத்து தோழர். விருதைபாரி அவர்கள் தொகுத்துவழங்கிட, தோழர்.தமிழ்நாடன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.



அரங்கு நிறைந்த அளவில் குவைத் வாழ்தமிழர்கள் வருகைதந்து தமது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள, அனைவருக்கும் இப்பிரச்சனைகுறித்து தலைவர்கள் உரையடங்கிய குறுந்தகடும், “மூவரின் தூக்கு நம் இனத்தின் மீதான சுருக்கு” என்ற கட்டுரைத்தொகுப்பும் வழங்கப்பட்டது.



குவைத்தில் இயங்கும் பல்வேறு தமிழ் இயக்கங்களின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்கிய வேளையில் தொழிலதிபர்கள் சாமி, இராசேந்திரன், பொறியாளர் இராமன், சுரேசு, இராசேந்திரன், இராச்சேகர், ஓவியர் கொண்டல்ராசு, பத்திரிக்கையாளர் கனி, பாவலர் வளநாடன், பாவலர் தமிழமுதன், பாவலர் அகிலோதயன், பாவலர் பட்டுக்கோட்டை சத்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



மிகுந்த எழுச்சியுடனும் உணர்வுப்பூர்வமாகவும் நடைபெற்ற இக்கருத்தரங்கத்தின் இறுதியில், இவ்வியக்கம் மூன்று தமிழர்களையும் விடுதலை செய்யும் வரையிலும் இந்தியாவில் மரணதண்டனை முற்றாக ஒழிக்கப்படும் வரையிலும் தொடர்ந்து செயல்படும் என்ற உறுதிமொழியுடன் நிறைவுற்றது.



மரணதண்டனை ஒழிப்போம்! மனிதநேயம் காப்போம்!



தொகுப்பு: தமிழ்நாடன்

எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!

தமிழரைப் பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை. கிறீஸ் பூத நடமாட்டத்துக்கும், அரச படையினருக்கும் சம்பந்தம் இல்லையெனில் இதுவரை இந்த அட்டகாசங்கள் ஏன் கட்டுப்படுத்தப்படவில்லை? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி தொடுத்துள்ளது.



கிறீஸ் பூத விவகாரத்தைக் கட்டுப்படுத்த இயலாத பொலிஸும், இராணுவமும் தேவைதானாவென்றும் அது தெரிவித்துள்ளது.



கிறீஸ் பூத விவகாரம் குறித்து கூட்டமைப்பு நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டது.



அதில் கூறப்பட்டுள்ளதாவது:



ஒரு மாதத்துக்கு முன்பாக மலையகத்தில் ஆரம்பித்த கிறீஸ் பூதப் பயங்கரம் பின்பு அம்பாறை, மட்டக்களப்பு எனப் பரவி இப்பொழுது வட மாகாணத்தையும் வந்து சேர்ந்துள்ளது.



தமிழ் பேசும் மக்களை மையமாக வைத்தே அதிலும் குறிப்பாகப் பெண்களின் மீதே கிறீஸ் பூதம் அல்லது மர்ம மனிதன் என்ற இரத்தக் காட்டேறி அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.



மக்கள் ஒன்று திரண்டு சில இடங்களில் கிறீஸ் பூதங்கள் சிலவற்றைப் பிடித்திருக்கின்றனர். அவற்றைப் பொலிஸாரிடமும் இராணுவத்தினரிடமும் கையளித்தும் உள்ளனர். ஆனால், இவைகள் எல்லாம் கட்டுக்கதைகள் என்றும், வெறும் வதந்திகள் என்றும் நகைப்புக்கிடமாகக் பொலிஸாரும், இராணுவத்தினரும் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறது.



பாதுகாப்புச் செயலாளர் இதில் 25 விழுக்காடு உண்மை! மீதி 75 விழுக்காடு வதந்தி என இஸ்லாமியப் பெரியார்களிடம் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த 25 விழுக்காடு உண்மை என்ன? என்பது பற்றி இதுவரையில் மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை.



வடக்கில் பொதுமக்களால் பிடித்து ஒப்படைக்கப்படும் மர்ம மனிதர்கள் எல்லோரும் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இறுதியாக இவர்கள் மனநோயாளிகளாகச் சொல்லப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.



எங்கெங்கு கிறீஸ் மனிதனுக்கும், மக்களுக்கும் இடையில் கைகலப்புகள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஆபத்பாந்தவன் போல் இராணுவத்தினர் உடனடியாகவே வந்து சந்தேகநபர்களைக் காப்பாற்றி விடுகின்றனர்.



ஆனால், இவர்களைப் பிடிக்க முயலும் அல்லது இவர்களைப் பிடித்து ஒப்படைக்கும் அப்பாவிப் பொதுமக்கள் பொலிஸாரினாலும், இராணுவத்தினராலும் மிருகத்தனமாகத் தாக்கப்படுகின்றனர். கிழக்கில் இருந்து வடக்கு வரை மக்களைக் கிலி கொள்ள வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இருண்டால் எல்லோரும் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



கிறீஸ் பூதப் பயங்கரம் ஆங்காங்கே நிகழும் தற்செயல்களல்ல. இது நன்கு பயிற்றப்பட்டவர்களினால் திட்டமிடப்பட்ட முறையில் அரங்கேற்றப்பட்டுவரும் ஒரு நிகழ்ச்சி நிரலாகும்.



இதன் மூலம் தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களை கோபம் கொள்ளச் செய்து, வீதிக்கு இழுத்து, அழித்தொழிப்பதுதான் இந்தத் திட்டத்தின் பின்னணியோ என்று ஐயங்கொள்ள வேண்டியுள்ளது.



இல்லையேல் படையினர் வீடு வீடாகச் சென்று மக்களை இழுத்துப்போட்டுத் தாக்கவேண்டிய தேவை எதுவும் இல்லை. தமிழரைப் பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை என்பது அப்பாவிகள் மீது அவர்கள் நடத்தும் மிருகத்தனமான தாக்குதல்களில் இருந்து புலனாகிறது.



அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பிரதிபலிப்பு இதுதானா என்ற கேள்வியும் எழுகின்றது.



முப்படைகளுக்கும் தளபதியாக இருக்கும் ஜனாதிபதி இவற்றை உடனடியாக நிறுத்தி தமிழ் மக்களை அச்சத்தின் பிடியில் இருந்து விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கின்றது.



இவ்வாறு அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்ட தடை விதிக்க வேண்டும் - கமிஷனரிடம் பாபுகணேஷ் புகார்


சென்னை: தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவை கூட்ட தடைவிதிக்க வேண்டும் என்று நடிகர் பாபுகணேஷ், போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான பாபுகணேஷ் நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நான், 'பாலவிக்னேஷ் கிரியேஷன்ஸ்' என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். 10 படங்களை தயாரித்துள்ளேன். 10 படங்களை டைரக்டு செய்துள்ளேன். 25 படங்களுக்கும் மேல் நடித்துள்ளேன்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 4-ந் தேதி அன்று (நாளை) நடைபெறும் என்று அதன் தலைவராக தன்னை பிரகடனம் செய்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக சென்னை 5-வது சிட்டிசிவில் கோர்ட்டில் வழக்கு உள்ளது. 5-ந் தேதி அன்று அந்த வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது.

அதற்குள்ளாக எஸ்.ஏ.சந்திரசேகரன் 4-ந் தேதி அன்று பொதுக்குழுவை கூட்டியிருக்கிறார். பொதுக்குழு கூட்டம் ஆயிரம் விளக்கில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கத்தில் 200 பேர்தான் உட்கார முடியும். ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் 1900 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

கண்டிப்பாக அந்த கூட்டத்தில் தகராறு நடைபெற வாய்ப்புள்ளது. எனவே அதை தடை செய்யவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். ஒருவேளை தடை செய்யமுடியாவிட்டால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும் என்று கேட்டுள்ளேன்.

இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனரை விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்," என்றார்.

தலைமைச் செயலக வழக்கிலும் நீதிமன்றத்திடம் கொட்டு வாங்குவார் ஜெயலலிதா: மு.க.ஸ்டாலின்

சேலம் கோட்டை மைதானத்தில் 02.09.2011 அன்று மாலை சேலம் மாநகர தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.



மு.க.ஸ்டாலின் பேசுகையில்:



ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களால் வழிநடத்தப்படுவதுதான் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் ஜெயலலிதாவுக்காக, ஜெயலலிதாவால் நடத்தப்படுகின்ற ஜெயலலிதா அரசாகத்தான் இந்த ஆட்சி உள்ளது.



சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட விஷயத்தில் ஜெயலலிதா சரியாக நடந்துகொள்ளவில்லை என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2002ல் இப்போது உள்ள தலைமைச் செயலகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடம். இந்த இடத்தில் புல் பூண்டுகளை புடுங்குவதற்குக் கூட, மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. எனவே, புதிய தலைமைச் செயலகத்தை சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில் அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் அந்த இடத்தை விட்டுவிட்டு ராணிமேரி கல்லூரியில் அமைக்க வேண்டும் என்று சொன்னார்.



மக்கள் எதிர்ப்பு கிளம்பியவுடன் அந்த இடத்தையும் விட்டுவிட்டு, கோட்டூர்புரத்தில் இப்போது அறிஞர் அண்ணா நூல் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் தலைமைச் செயலகத்தை கட்ட வேண்டும் என்று சொன்னார். அதையெல்லாம் அவர் செய்யவில்லை.



ஜெயலலதா கொண்டு வந்த தீர்மானத்தை கலைஞர் அரசு பொறுப்பேற்றவுடன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டி முடித்தோம். இப்போது அந்த கட்டிடம் சரியில்லை என்கிறார். நாங்கள் நீதிமன்றத்திற்கு போன பிறகு, அந்த கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவோம் என்கிறார். உண்மையைச் சொல்லப்போனால் ஜெயலலிதா தீர்மானத்தை கலைஞர் அரசுதான் நடைமுறைப்படுத்தியது. அதை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். சமச்சீர் கல்வியில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததைப்போல் தலைமைச் செயலக வழக்கிலும் ஒரு பெரிய போராட்டத்தை நடத்தி கடைசியில் நீதிமன்றத்திடம் கொட்டு வாங்குவார்.



திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் கைது செய்யப்பட்டபோது, ஒரு மாணவனின் எதிர்காலத்தை வீணடித்து விட்டார் என்று சொன்ன ஜெயலடிலதா, சமச்சீர் கல்வியை தடை செய்து பல லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை வீணடித்துவிட்டார்.



சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கிய போது, இந்த இயக்கம் பதவிக்கு வரவேண்டும். ஆட்சியைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்படவில்லை. மக்களுக்காக பணியாற்றுவதற்காகத்தான் தொடங்குகிறேன் என்று அண்ணா அவர்கள் சொன்னார். அதைத்தான் கலைஞர் அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.



நாளையும் அதுபோலத்தான் நடக்கும். எங்களுக்கு பதவி முக்கியம் அல்ல. தமிழ் நாட்டு மகக்ளின் நலன் தான் முக்கியம். நாங்கள் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டு மக்களுக்கு பாடுபடுவோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Friday 2 September 2011

நேற்று இரவு குடாநாடு அல்லோலகல்லோலம்; மர்ம நபர்களால் எங்கும் பீதி



சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டம் நேற்று இரவு கட்டுக்கடங்காமல் அதிகரித்தமையால் பெரும் அல்லோலகல்லோலப்பட்டது குடாநாடு. மக்கள் நித்திரையின்றிப் பீதியில் உறைந்தனர்.யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டங்கள் அதிகமாகக் காணப்பட்டமையால் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் விடியும் வரை நித்திரை இன்றி விழித்திருந்தனர் என எமது பிரதேச செய்தியாளர்கள் உறுதிப்படுத்தினார்கள்.





சில இடங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியவர்களைத் துரத்திச் சென்ற இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே முறுகல் நிலையும் ஏற்பட்டது. இந்த இடங்களில் இளைஞர்களை அச்சுறுத்துவதற்காகப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்ததாகவும் சில இடங்களில் சந்தேகத்துக்கிடமான நபர்களைக் கலைத்துப் பிடிக்க முற்பட்ட இளைஞர் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.



கடந்த சில நாள்களாக ஆங்காங்கே இடம்பெற்று வந்த சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டம் நேற்று இரவு கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. நகரப் பகுதி முதல் கிராமப்புறங்கள் வரை பரவலாகப் பல இடங்களிலும் இவர்களின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டதாகவும் இதனால் அந்தப் பகுதிகளில் பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும் செய்தியாளர்களும் மக்களும் தெரிவித்தனர்.பதற்றமான நிலை ஏற்பட்டதை அடுத்து அந்தப் பகுதிகளில் இருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு வீடுகளில் ஐந்து, ஆறு குடும்பங்களாகச் சேர்ந்து இருந்தனர். பெண்கள் வீடுகளுக்குள் இவ்வாறு இருக்க ஆண்கள் வீடுகளுக்கு வெளியே காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பலருக்கு நேற்றைய இரவு நித்திரை இன்றிக் கழிந்தது.சில இடங்களில் வீடுகளுக்கு இந்த சந்தேகத்துக் கிடமானவர்கள் நுழைய முற்பட்டமையால் வீடுகளில் இருந்தவர்கள் பெரும் கூக்குரல் எழுப்பினார்கள். இவர்கள் கூக்குரல் எழுப்புவதை கேட்டு அயலில் இருந்தவர்களும் கூக்குரலிட்டனர். இதனால் அந்தப் பகுதிகளில் பெரும் அல்லோலகல்லோல நிலை ஏற்பட்டது.



சில பகுதிகளில் இந்தச் சந்தேகத்துக்கிடமானவர்களைப் பிடிப்பதற்கு இளைஞர்கள் மேற்கொண்ட முயற்சிகள் படையினரால் தடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.பதற்ற நிலை ஏற்படும் இடங்களுக்கு உடனடியாகச் சென்ற படையினர் வீதிகளில் குவிந்திருந்த மக்களை உடன் வீடுகளுக்குள் செல்லுமாறு கடும் தொனியில் தெரிவித்தனர். அத்துடன் இராணுவத்தினர் சிவில் உடையிலும் சீருடையிலும் கையில் கொட்டன்களைத் தாங்கியவாறு வலம் வந்தனர். இரு இடங்களில் மக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்ட சந்தேகத்துக்கிடமான நபர்கள் மூவர் அந்தப் பகுதிக்கு வந்த படையினரால் ஏற்றிச் செல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.



நேற்று நள்ளிரவு கடந்த பின்னரும் இந்த சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டம் பல இடங்களிலும் தொடர்ந்ததாக பொதுமக்கள் பலர் உதயனுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.கடந்த சில தினங்களை விட நிலைமை இன்று இரவு மிக மோசமாகவுள்ளது. எமது வீட்டுக்கு முன்னால் உள்ள வீடொன்றுக்குள் நுழைய முயன்றவர்களை அந்தப் பகுதியில் நின்ற இளைஞர்கள் துரத்தினார்கள். எனினும் சிறிது நேரத்தில் அங்கு அந்த சீருடையினர் அவர்களை எச்சரித்து வீடுகளுக்குச் செல்லுமாறு கூறினார்கள் என்றார் வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலை அதிபர் ஒருவர்.



குடாநாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவங்களின் விவரம் வருமாறு:



சுழிபுரத்தில் ஒருவர் பிடிபட்டார்

சுழிபுரம் வறுத் தோலைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரைக் கலைத்துப் பிடித்து மக்கள் அவரை வட்டுக்கோட்டைப் பொலிஸ்நிலையத்தில் நேற்று ஒப்படைத்துள்ளனர். அந்த நபர் சித்த சுவாதீனம் அற்றவர் எனப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்ட போதும் வலிமேற்கு பிரதேசசபையின் தலைவர் அந்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதை அடுத்து பொலிஸார் குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலை செய்யவுள்ளதாகத் தெரிவித்தனர்.சுழிபுரம் வறுத்தோலை பகுதியில் நேற்று மாலை சந்தேகத்துக்கிடமான முறையில் நபர் ஒருவர் நடமாடியுள்ளார். மக்கள் அவரை அணுகி விசாரிக்க முற்பட்டபோது எந்தவித பதிலையும் அவர் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து அந்த நபரை மக்கள் பின் தொடர்ந்தனர். இதன் போது ஒரு திருமண வீட்டுக்குள் சென்ற அவர் சாப்பாடு தருமாறு சிங்களத்தில் கேட்டிருக்கின்றார்.



பின்னர் அந்த நபரை மக்கள் விசாரிக்க முற்பட்டபோது அவர் தான் அணிந்திருந்த சாரத்தைக் கழற்றி எறிந்துவிட்டுச் சென்றுள்ளார். அவர் மிக இறுக்கமான காற்சட்டை அணிந்திருந்தாக பொதுமக்கள் தெரிவித்தனர்.இறுதியில் அந்த நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் அவரை வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் கையளித்துள்ளனர். பொலிஸார் குறித்த நபர் சித்த சுவாதீனமற்றவர் எனத் தெரிவித்தனர். பொலிஸ் நிலையத்துக்கு நேரடியாகச் சென்ற வலிமேற்கு பிரதேச சபையின் தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.மக்களால் பிடித்து ஒப்படைக்கப்படுகின்றவர்கள் அனைவரும் சித்தசுவாதீனம் அற்றவர்களா? இந்த நபரை மக்கள்தான் பிடித்து உங்களிடம் ஒப்படைத்துள்ளனர். நீங்கள் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துங்கள் என்று அவர் பிடிவாதமாக நின்றதால் அவரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் கூறியதாக வலிமேற்குப் பிரதேச சபைத் தலைவர் உதயனுக்குத் தெரிவித்தார்.



குருநகரில் பதற்றம்

நேற்று இரவு குருநகர் அண்ணாசாலையடிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக ஓருவரின் நடமாட்டத்தை அவதானித்த அந்தப்பகுதி மக்கள் அவர்களை சுற்றி வளைத்து மடக்கிப் பிடிக்க முற்பட்டனர். இந்த நேரத்தில் தடிகள், பொல்லுகளுடன் அங்கு கும்பல் கும்பலாக வந்து இறங்கிய இராணுவத்தினர் அங்கு நின்றவர்களை அடித்து வீடுகளுக்குள் விரட்டினார்கள். இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தப்பகுதி மயான அமைதியாக நிலவியதுடன் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் என்பனவும் இழுத்து மூடப்பட்டன. அனைத்து வீதிகளிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.





சுன்னாகத்தில் முறுகல்

சுன்னாகம் கலைவாணி சனசமூக நிலையத்துக்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் சந்தேகத்துக்கிடமான முறையில் மூவர் நுழைய முயன்றுள்ளனர். இதனை அவதானித்த அந்தப்பகுதி இளைஞர்கள் அந்த நபர்களை விரட்டிச் சென்று சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றனர். எனினும் அந்தப்பகுதிக்கு உடனடியாக இராணுவத்தினர் வந்தனர். இதனால் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது. அங்குநின்ற இளைஞர்கள் சிலரைப் படையினர் தாக்கியதுடன் வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களையும் தீர்த்தனர். இதையடுத்து அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. படையினர் குவிக்கப்பட்டனர்.





மட்டுவிலில் வாகனம்

மட்டுவில் பகுதியில் நேற்று இரவு 9.15 மணியளவில் வாகனம் ஒன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த நபர்களை அப்பகுதி இளைஞர்கள் கலைத்துச் சென்று மடக்கிப்பிடிக்க முயன்றனர். அங்குள்ள தரவைப் பாதை ஒன்றின் ஊடாக இந்த வாகனம் தப்பிச் செல்ல முற்பட்டது. இளைஞர்கள் அதனைச் சுற்றி வளைத்தனர். உடனடியாக அங்குவந்த படையினர் அதனைத் தாம் பார்த்துக் கொள்வதாகவும் இளைஞர்களைக் கலைந்து செல்லுமாறும் எச்சரித்து அனுப்பினார்கள்.





கைதடியில்

கைதடி தச்சன்தோப்புப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று இரவு 8.15 மணியளவில் நுழைய முயன்ற நபர் ஒருவர் வீட்டுக் காரக் கூக்குரல் எழுப்பியதை அடுத்துத் தப்பி ஓடிவிட்டார். இவரை அங்கு கூடியவர்கள் கலைத்துப் பிடிக்க முயன்றவேளை மின்சாரம் தடைப்பட்டது. இதனால் சந்தேகத்துக்கிடமானவர்கள் தப்பிச் செல்ல மின்சார சபையும் உதவுகிறதா என அங்கு நின்றவர்கள் கடிந்து கொண்டனர்.





நல்லூரில்

நல்லூர் மடத்தடிப் பகுதியிலும் நேற்று இரவு சந்தேகத்துக்கிடமான ஒருவரின் நடமாட்டத்தால் பதற்ற நிலை ஏற்பட்டதாக அங்கிருந்து மக்கள் தொலைபேசி மூலும் தெரிவித்தனர்.இதேபோன்று வட்டுக்கோட்டை, பண்டத்தரிப்பு, இளவாலை, மானிப்பாய், நீர்வேலி, புத்தூர், கொக்குவில், சாவகச்சேரி, கொழும்புத்துறை, சண்டிலிப்பாய், கட்டுடை, அராலி, உரும்பிராய், திருநெல்வேலி, சங்கானை, கோப்பாய், ஆனைக்கோட்டை, இணுவில் பகுதிகளிலும் நேற்று இரவு சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டத்தால் அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டதாகவும் தாம் பெரும் அச்சத்துடன் உள்ளதாகவும், வீதிகளில் படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் உதயனுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இந்தத் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.



இதேவேளை

யாழ்ப்பாணம், கோண்டாவில் பிரதேசத்தில் வைத்து நேற்றுமுன்தினம் மாலை பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட நபர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபரின் பெயர் ரி.டி.தனஞ்சே (வயது 20). இவரை விசாரணை செய்த நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்ததுடன் மனநோயாளியாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டார்.இது தொடர்பான மீள் விசாரணைகள் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Thursday 1 September 2011

தியாகச்சுடர் செங்கொடிக்கு சுவிஸ்.ஜேர்மனி நாடுகளில் வணக்க நிகழ்வு



மூவர் உயிர்காக்க தன்னுயிரைக் கொடுத்த தியாகச்சுடர். தோழர் செங்கொடிக்கு, சுவிஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் வணக்க நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.நாடுகடந்த தமிழீழ அரசாங்க மக்கள் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில், சுவிசில் சூரிச்சிலும், ஜேர்மனியில் கனோவர் மற்றம் பிறீமன் ஆகிய இடங்களிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.



சுவிஸ் :

சூரிச் சிவன் கோவில் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (02-09-2011) மாலை 19:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



ஜேர்மனி :



கனோவரில் சனிக்கிழமை (03-09-2011) Peine Str, 30519 HANNOVER எனும் இடத்தில் காலை 11:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



பிறீமனில் ஞாயிற்றுக்கிழமை (04-09-2011) Wir Wollen, Keine, TODESSTRAFE எனும் இடத்தில் மாலை 15:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



தமிழினத்தின் விடியலை நெஞ்சினில் சுமந்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது உயிர்காக்க, தற்கொடையாக தன்னுயிரைக் கொடுத்த தோழர்.செங்கொடிக்கு வணக்கம் செலுத்த, அனைவரையும் அழைக்கிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்க மக்கள் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.



விபரங்களுக்கு :



ஜெயம் (சுவிஸ்) : (00 41) 078 684 74 94

ஜெயச்சந்திரன் (ஜேர்மனி) : (00 49) 01 77 360 66 37

நாதம் ஊடகசேவை



Wednesday 31 August 2011

உணர்வெழுர்ச்சியுடன் நடைபெற்ற செங்கொடியின் இறுதி வணக்க நிகழ்வு!(காணொளி,படங்கள் இணைப்பு)



'வீர வணக்கம் வீர வணக்கம்' என்ற கொட்டொலி முழங்க தோழர் செங்கொடியின் இறுதி வணக்க நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.



கட்சிப்பிரதிநிதிகள் இயக்க பிரதிநிதிகள் கலைஞர்கள் தோழர்கள் தொண்டர்கள் என பன்முகதளங்களில் இருந்து பெருந்திரளானவர்கள் பங்கெடுத்திருந்தனர்.



உணர்வெழுர்ச்சியுடன் இடம்பெற்ற இந்த இறுதிவணக்க நிகழ்வரங்கில் தோழர் செங்கொடியின் திருவுருவச்சிலையினை பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் திறந்து வைத்தார்.



ஏழு மணி நேர தொடர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட தோழர் செங்கொடியின் உடலம் அரங்கில் வைக்கப்பட்டது.



பிரதிநிதிகளின் உணர்வெழுர்ச்சி உரைகளைத் தொடர்ந்து தோழா செங்கொடியின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.



'எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வௌ;வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வௌ;வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, முடிச்சுட்டு போயிடறோம். இதனால யாருக்கு என்ன பயன்? வேற போராட்ட வழிமுறைகளை நாம யோசிச்சா, செயல்படுத்தினா என்ன?'





மரண தண்டனைக்கு எதிராக காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பங்கெடுத்துவிட்டு வீடு திரும்பும் போது தனது சித்தப்பாவிடம் செங்கொடி கேட்ட கேள்வியிது.



செங்கொடியின் கேள்விக்கு பதில் என்ன சொல்வதென்று தெரியாது சித்தப்பா தவித்திருக்க தீக்கு தன்னைக் கொடுப்பதே இதற்கான பதிலாக இருக்குமென தன்னளவில் தீர்மானித்த செங்கொடி....



'தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.



இப்படிக்கு தோழர் செங்கொடி' என ஒப்பமிட்டு மூவா உயிர்காக்க மூண்ட தமிழின உணர்வின் உச்சக்குறியீடாக தன்னை கொடையாக கொடுத்துச் சென்றுள்ளாள்.



சிறுவயது முதலே மக்கள் இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு சமூக விடுதலைக்கும் மக்களின் உரிமைகளுக்குமான போராட்டங்களில் முழக்கமிட்டு சிறைவரைச் சென்ற ஒரு களப்போராளியாகவும் விளங்கியுள்ளார்.



தான் சார்ந்த இருளர் சமூகத்தின் விடிவுக்காக மட்டுமல்லாது அதற்கு அப்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகங்களில் விடிவுக்காக இளம்வயதிலையே துடிப்புடன் மக்களுக்காக முழக்கமிடும் பெண்ணாக இருந்தாள்.



படிப்பாற்றலில் - அறிவாற்றலில் - கலையாற்றலில் என ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக தன்னை முழு அர்பணிப்புடன் ஈடுபாடுகாட்டியவள்.



சேகுவேரா, நெல்சன் மண்டேலா, தந்தை பெரியார், பகத்சிங் ஆகியோரது வரலாறுகளை கற்றுணர்ந்து களப்பணியாற்றியவள்.



குரல்வளமும் பேச்சுவல்லமையும் கொண்ட செங்கொடி பல சமூகவிவதாங்களில் துணிசலுடன் கருத்துரைப்பவள்.



முள்ளிவாய்கால் பொழுத்தில் முத்துக்குமார் மூட்டிய எழுர்ச்சித்தீயை நெஞ்சினில் சுமந்த நின்ற செங்கொடி - தன் நெஞ்சினில் சுமந்த தீயை மூவரின் விடுதலைக்காக உலகத் தமிழர் நெஞ்சங்களில் இறக்கிவைத்துள்ளாள்.















யாழில் விடுவிக்கப்பட்ட போராளிகள் மீது இராணுவத்தினர் கெடுபிடி



யாழ். மாவட்டத்தில் வசிக்கும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக செயற்பட்டவர்கள் கடுமையான அச்சுறுதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வசித்து வரும் புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்டு, இராணுவ முகாம்களில் ஒப்பமிட்டு வரும் போராளிகள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளுக்குச் செல்லும் படையினர் தேவையற்ற கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் போராளிகளைத் துருவித்துருவி விசாரணை செய்யும் புலனாய்வுப் பிரிவினர், அவர்களது குடும்பத்தினருக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அத்துடன் இரவு வேளைகளில் வீட்டிற்கு வந்து இடைஞ்சல் தருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் அச்சமடைந்துள்ளனர்.



மர்ம மனிதனின் பிரச்சினையால் அந்தப் பகுதியில் இடம் பெற்ற சம்பவங்களோடு முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தி திசை திருப்பும் முயற்சியில் படையினர் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அதே வேளை, சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டாலும் இந்த நாட்டில் இருக்கும் வரை நாம் நிம்மதியாக இருக்கவே முடியாமலிருக்கின்றது என முன்னாள் போராளி ஒருவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

தியாகச்சுடர் செங்கொடிக்கு வீரவணக்கம் (காணொளி, படங்கள் இணைப்பு)

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி கடந்த ஞாயிறன்று தீக்குளித்து உயிர் துறந்த காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தை சேர்ந்த செங்கொடி உடல் இன்று (31.8.2011) மாலை அடக்கம் செய்யப்பட்டது



காஞ்சிபுரம் அருகே மங்கல்பாடியில் நடந்த இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.



செங்கொடியின் நினைவை போற்றும் வகையில் மங்கல்பாடியில் உருவச் சிலையும் திறக்கப்பட்டது.



வைகோ, பழ.நெடுமாறன், திருமாவளவன், கிருஷ்ணசாமி, சத்யராஜ், கொளத்தூர் மணி, சேரன்,ஜான்பாண்டியன், ஜி.கே, மணி, சீமான், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், நளினி தாயார் பத்மாவதியம்மா, உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.



பல முக்கிய பிரமுர்கள் இறுதிச்சடங்கில் எழுச்சி உரையாற்றினர்.



























கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன்



கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலயப் பகுதியில உள்ள வீடொன்றில் பிற்பகல் வேளையில் சந்தேகத்துக்கிடமான முறையில் பதுங்கியிருந்த இரு மர்மமனிதர்களை வீட்டிலிருந்தவர்கள் கண்டதைத் தொடர்ந்து தப்பி ஓடிய நிலையில், அவர்களில் ஒருவர் அந்தப் பகுதி இளைஞர்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டதும், மற்றவர் தப்பி ஓடிவிட்டனர்.







இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இசம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக இராணுவத்தினர் விரைந்து வந்து மர்ம நபரைக் கொண்டு செல்ல எடுக்கப்பட்ட முயற்சி அந்தப் பகுதயில் கூடிய பொது மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து கோண்டாவில் பகுதி பெரும் பதட்டமான நிலையில் காணப்பட்டது.



சந்தேகத்துக்கிடமான முறையில் பதுங்கியிருந்தவர்களில் மாட்டிக்கொண்ட இளைஞரை அப் பகுதி இளைஞர்கள் வாசிகசாலையினும் அடைத;துப் பூட்டி விட்டனர். நேரம் செல்லச் செல்ல அதனைப்பார்வையிட வந்த பொது மக்களுக்கும் இராணுவத்தினருக்கம் இடையே வாக்கு வாதங்கள் ஏற்படத்தொடங்கியது. இந் நிலையில் அந்தப் பகுதிக்கு அழைக்கப்படட மேலதிக இராணுவத்தினர் துப்பாக்கிகள் பொல்லுகளுடன் வந்து பொது தாக்கத் தொடங்கினர். அங்கு நின்ற மேஜர் தர அதிகாரி ஒருவரின் தலையீட்டினால் படையினர் கட்டுப்படுத்தப்பட்டதுடன் வன் முறைகள் மேலும் தொடரா வண்ணம் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.







கோப்பாய் பொலிஸ் நிலைய சப் இன்ஸ்பெக்கரர் வந்துதபோதிலும் கைகூடாத நிலையில் ஊரெழுவில் நிலை கொண்டுள்ள 511 வது படையணியின் கட்டளை அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து பொது மக்கள் முன்னிலையில் பொலிசாரிடம் ஒப்படைத்தார்.







குறிப்பிட்ட மர்ம நபர் மிகவும் இளையவராகக் காணப்பட்டார். பொதுமக்கள் இவரைக் கடுமையாகத் தாக்கிய போதும் அவர் வாய் திறக்கவேயில்லை. பொலிசார், இராணுவத்தினர் ஏதாவது கேட்டால் மட்டும் பதிலளித்துக் கொண்டிருந்தார். அங்கு கூடிய மக்களில் பலரும் அவரைப் படமெடுக்க முயன்ற போது முகத்தைக் காட்டிக்கொள்ளாமல் திரும்பி விட்டார்.





பொலிசாரும் , இராணுவத்தினரும் கூட இவரைபடம் எடுக்க அனுமதிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும். சம்பவத்தின் போது பொல்லுகளுடன் மக்களை படையினர் துரத்திய வேளையில் ஏற்றபட்ட பதற்றத்தினால் பல மோட்டார் சைக்கிள்களும், சைக்கிள்களும் சிதறிப் போயிருக்கின்றன







தூக்குத் தண்டனையை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி லண்டனில் ஆர்ப்பாட்டம் (காணொளி, படங்கள் இணைப்பு)

இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது தண்டனையை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி நேற்று (30-08-2011) லண்டனில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.



தமிழ் ஒருங்கமைப்புக்குழு (Tamil Solidarity) குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்து, மாலை 3:30 மணி முதல் 7:00 மணிவரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.



முன்னதாக தூக்குத் தண்டனை பெற்றுள்ள கைதிகளில் ஒருவரான முருகனின் சகோதரி, சகோதரன் உட்பட்ட குழுவினர் தூதரகத்திற்குள் சென்று தூக்குத் தண்டனையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவைக் கையளித்தனர்.



இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட தூதரக அதிகாரி, இவ்வாறு மனு கையளிக்க வரும்போது, மனுதாரரை வரவேற்று அந்த மனுவைப் பெற்றுக்கொள்ளுமாறு இந்திய அரசாங்க மேல்மட்டத்தில் இருந்து தமக்கு முன்னரே அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும், குறித்த மனுவை இந்திய அரசாங்கத்திற்கு சமர்ப்பிப்போம் எனவும் தூதரக அதிகாரி கூறினார்.



மனுக் கையளிப்பைத் தொடர்ந்து மூன்று உறவுகளின் விடுதலைக்காக தனது உயிரை ஈகம் செய்த தியாகச்சுடர் செங்கொடி அவர்களுக்கான அக வணக்கமும், மலர் வணக்கமும் இடம்பெற்றது.







இதனையடுத்து முருகனின் சகோதரி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் செயலாளர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தூக்குத் தண்டனைக் கைதிகளுடன் சிறையில் இருந்த குணா உட்பட பலர் உரையாற்றினர்.



ஏற்கனவே பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் அடங்கிய மனு இந்தியத் தூதரகத்திடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மக்களிடமும் மனுவுக்கான கையொப்பங்கள் பெற்றப்பட்டதுடன், மக்கள் தொடர்ச்சியாக மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.



மூன்று மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த ஆர்ப்பாடத்தில் கலந்துகொண்டவர்கள் தூக்குத் தண்டனைக்கு எதிராகவும், இந்திய அரசாங்கும் தூக்குத் தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர்.



ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது படங்கள் அடங்கிய பதாகைகளுடன், ஈகச்சுடர் வீரமங்கை செங்கொடி அவர்களின் திருவுருவப் படத்தையும் தாங்கி நின்றதை அவதானிக்க முடிந்தது.



தூக்குத் தண்டனை, மரண தண்டனைக்கு எதிரான வேற்றின மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த அதேவேளை, வீதியால் சென்ற வேற்றின மக்கள் பலர் இந்தத் போராட்டம் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டதுடன், அவர்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களும் வழங்கல் செய்யப்பட்டன.











Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா