Saturday 27 August 2011

அரசரகால சட்ட நீக்கம் விடுதலைப்புலிகள் மீதான தடை இயல்பாகவே நீங்கும்!சாலிய எதிரிசிங்க



அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளமையால் இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை இயல்பாகவே இல்லாது போகும். அத்துடன், அதியுயர் பாதுகாப்பு வலயங்களையும் வைத்திருக்கமுடியாது என்று பொது உரிமை இயக்கத்தின் பணிப்பாளர் சாலிய எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.அவசரகால சட்டத்தின் கீழேயே தமிழீழ விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்டனர். அத்துடன் அதியுயர் பாதுகாப்பு வலயங்களும் ஏற்படுத்தப்பட்டன.



எனினும் பொதுமக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளின்படி, படையினருக்கு தடுத்து வைக்கும் அதிகாரம் உள்ளதாக எதிரிசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னாபிரிக்க அதிபருடன் புலிகளின் நெருக்கம்:இலங்கை அதிர்ச்சி



விடுதலைப் புலிகள் தென்னாபிரிக்க அரசுடனும் அங்கே இருக்கும் பல நாடுகளோடும் கொண்டுள்ள நெருக்கமான தொடர்புகள் தொடர்பாக இலங்கை பெரும் அதிர்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புலிகள் சமாதான காலத்தில் அதன் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனூடாகவும் மற்றும் இதர சிரேஷ்ட உறுப்பினர்களூடாகவும் தென்னாபிரிக்காவில் உள்ள பல நாடுகளிடம் நட்புறவை வளர்த்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரித்திரியா நைஜீரியா மற்றும் சூடான் போன்ற நாடுகளில் அவர்கள் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை அரசு கவலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான புகைப்படம் தொடர்பாகவும் இலங்கை அரசு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.



தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜக்கொப் ஸுமா சு.ப.தமிழ்ச்செல்வனுடன் தனது வீட்டில் வைத்து உரையாடும் இப் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பல நாடுகளை உள்ளடக்கிய ஒன்றுபட்ட தென்னாபிரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜக்கொப் ஸுமா அவர்கள் உலகில் உள்ள பலம்பெருந்திய தலைவர்களில் ஒருவர் ஆவார். விடுதலைப் புலிகள் தென்னாபிரிக்க அதிபருடன் கொண்டுள்ள உற்வுகள் குறித்து இலங்கை அரசு தற்போது தனது கவனத்தை திருப்பியுள்ளது. புலம்பெயர் மக்களின் போராட்டம் ஒரு புறம் இருக்க, மேற்குலகின் போர் குற்ற அழுத்தங்கள் மறு முனையில் இருக்க ஏக காலத்தில் புலிகளின் மறை முகப் பலம் தொடர்பாக இலங்கை அரசு தற்போது தனது கவனத்தை திருப்பியுள்ளது எனக் கொழும்பில் இருந்து கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன.



விடுதலைப் புலிகளிடன் மொத்தமாக 3 விமானங்கள் இருந்ததாகவும், அவற்றில் 2 விமானங்கள் கொழும்பு நோக்கிப் புறப்பட்டு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 3விமானம் எங்கே சென்றது என்பது தொடர்பாக இலங்கைப் புலனாய்வு இன்னும் ஆராய்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாது புலிகளிடம் கிளைடர் எனப்படும் சிறிய ரக விமானம் ஒன்றும் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்விமானமும் மாயமாக மறைந்துள்ளது. இலங்கை அரசானது தனது தரைப்படையின் கட்டமைப்பை மாற்றாது, வான்படை மற்றும் கடற்படைகள் கட்டமைப்பை பலப்படுத்தி வருவதன் பின்னணி தான் என்ன எனப் பலர் கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இலங்கை அரசானது எதற்கு இவ்விரு கட்டமைப்புகளையும் பலப்படுத்தி வருகின்றது என்பதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது எனலாம்.







குண்டு போட்டு எமை அழித்தவன். ஹெலியில் நல்லூரானுக்கு பூ போட்டன் (கணொளி)



சில தினங்களுக்கு முன்னர் நாவாந்துறையில் தனது இராணுவ காடையர் குழுவைக் கொண்டு பொதுமக்கள் மீது காட்டுத் தாக்குதல் நடத்தி மீண்டும் ஒருமுறை சிங்கள வல்லாதிக்கத்துக்கு தமிழர்கள் என்றும் அடிமைகளே என்று நிரூபித்தார் யாழ் மாவட்ட இராணுவத் தளபதியான மஹிந்த ஹத்துருசிங்க.

இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில் படுகாயமடைந்து இரத்தம் சொட்ட சொட்டக் கிடந்த தமிழ்மக்களை இராணுவக் காடையர்கள் உடனடியாக மருத்துவமனையிலும் சேர்க்காமல் தடை விதித்து சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட துப்பாக்கிய நிலைமை யாவரும் அறிந்ததே.

இன்றைய தினம் அதற்கு பிராயச் சித்தம் தேடும் முகமாக ஒருநாள் முன்னதாகவே அவசரப்பட்டு நல்லூர் கந்தனின் கந்தனின் தேர்த் திருவிழாவில் தனது அதே இராணுவ காடையர் குழுவைக் கொண்டு ஹெலி கொப்டரில் பூமாரி பொழிந்தார்.



வழமையாக தீர்த்த உற்சவம் அன்று தீர்த்தக் கேணியில் பூமாரி பொழிவது தான் இந்த காடையர்களின் வழக்கம்.



ஆனால் ஒருநாள் முன்னதாகவே இன்றைய தினம் ஹெலியில் பூமாரி பொழிந்தபோது அங்கிருந்த பொதுமக்கள் உண்மையில் கடுப்பாகி தங்களுக்குள் பேசிக் கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது.



நாவாந்துறையில் தாக்கப்பட்டவர்களின் காயம் கூட ஆறாத நிலையில் பூமாரி பொழிந்து மக்களை என்ன ஏமாற்றுகிறார்களா? என்று கோபத்துடன் பேசிக் கொண்டனர்.



முன்னர் குண்டுமழை பொழிந்து எத்தனை தமிழ் குடும்பங்களையே வேரோடு கருவறுத்தவர்கள் இப்பவும் அதே ஹெலியில் பூமழை பொழிவது மீளவும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற அவஸ்தையை ஏற்படுத்துகிறது.



இன்னமும் தங்களது இராணுவ வல்லாதிக்க அடக்கு முறைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளாதவர்கள் எத்தனை ஹெலியில் வந்து பூப் போட்டாலும் பிரயோசனம் எதுவும் ஏற்படப் போவதில்லை.



புலிகள் இல்லை என்ற நினைப்பில் நிராயுதபாணிகளாக உள்ள தமிழ் மக்களுடன் சண்டைபோட்டு உங்களின் வீர சாகசங்களை நிரூபிக்காதீர்கள்.



முதலில் தமிழர்களின் சொந்த மண்ணில் அவர்களை மரியாதையோடு நடத்துங்கள் அல்லது அந்த மண்ணை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்.. அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிப்பார்கள்.



தொடர்ந்து தமிழர்களை முட்டாளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள்.

வேலூர் சிறையில் கமாண்டே படை பாதுகாப்பு



முருகன், சாந்தன், பேரறிவாளன் 3 பேருக்கு தூக்கு தண்டனை 9-ந் தேதி நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







இதனையடுத்து வேலூர் ஜெயில் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காமாண்டோ படை வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபு, டி.ஐ.ஜி. சேஷசாயி போலீஸ் சூப்பிரண்டு பாபு ஆகியோர் ஜெயிலுக்கு சென்றனர்.









ஐ.ஜி.சைலேந்திர பாபு தூக்கு மேடையை பார்வையிட்டார். மேலும் ஜெயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து ஜெயில் வளாகத்தில் நவீன துப்பாக்கிகள் ஏந்திய கமாண்டோ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.



இது தவிர அதிரடிபடை போலீசார் மற்றும் லோக்கல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜெயில் வளாகத்துக்குள் வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.







ஜெயில் முன்பகுதி கேட் மூடப்பட்டுள்ளது. ஜெயிலுக்கு வருபவர்கள் யார் என்ற விவரம் பதிவு செய்யப்படுகிறது. அவர்களது உடமைகள் பலத்த சோதனை செய்யப்படுகிறது. மேலும் அவர்களை வீடியோ காமிரா மூலம் பதிவு செய்த பின்னர் ஜெயில் வளாகத்துக்குள் அனுமதிக்கின்றனர்.



வேலூர் ஜெயிலில் இருந்து சுமார் 200அடி தூரத்தில் சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை செய்து வருகின்றனர்.



இது தவிர வேலூர் நகர் பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து 300 போலீசார் வேலூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.







பஸ் நிலையங்கள் வழிபாட்டு தலங்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எமது தேசியத்தலைவரின் வீட்டை அழித்தவர்கள் அந்த மண்ணை என்ன செய்யப் போகிறார்கள்?



தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டை இடித்து அந்த இடத்தில் ஒரு வீடு இருந்ததற்கான அடையாளமே தெரியாது அழித்தவர்கள் அந்த வீடு இருந்த இடத்தில் உள்ள மண்ணை என்னசெய்யப் போகிறார்கள்? என்று வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.வீட்டை இடித்து அழித்து நினைவுச் சின்னங்களை அகற்றுகின்ற ஈனச் செயல்கள் இன நல்லிணக்கத்துக்கு ஒரு போதும் உதவாது. இத்தகைய செயல்கள் தமிழ் மக்கள் மனதில் என்றுமே ஆறாத காயங்களையே ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீடு படையினரைக் குவித்து, பெக்கோ பாரந்தூக்கிகள் மூலம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முற்றாக அகற்றப்பட்டுள்ளது.



கட்டடச் சிதைவுகளை டிப்பர் வாகனங்கள் மூலம் அள்ளி சென்றனர். இது எங்கே கொண்டுசெல்லப்பட்டது என்பது தெரியவில்லை.



இப்படியான நடவடிக்கைகள் தேசிய நல்லினக்கத்துக்கு ஒரு போதும் உதவாது. தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத காயமே இத்தகைய செயல்கள் மூலம் ஏற்படும்.



மீண்டும் இனங்களும் ஒட்ட முடியாது நிலைமையை நோக்கி அரசு சென்று கொண்டிருக்கின்றது'' என்றார் சிவாஜிலிங்கம்.



வீட்டின் சிதைவுகளை எடுத்துச் சென்றவர்கள் அங்கு இருக்கும் எம் வல்வெட்டித்துறை மண்ணை என்னசெய்யப் போகிறார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Friday 26 August 2011

சிங்கப்பூரில் 7-ஆம் அறிவு இசை வெளியீடு... சன் டிவியில் ஒளிபரப்பு!


சூர்யா – ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 7-ஆம் அறிவு படத்தின் இசை வெளியீடு சிங்கப்பூரில் நடக்கிறது.

செப்டம்பர் 10-ம் தேதி பிரமாண்டமாக நடக்கும் இந்த இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்புகிறது சன் டிவி.

ரஜினி நடித்த எந்திரன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்த அரங்கிலேயே ஏழாம் அறிவு பாடல்களையும் வெளியிடுகிறார்கள்.

படத்தின் வெளியீட்டு உரிமையையும் சன் பிக்சர்ஸ்தான் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஈழத் தமிழர்களுக்காக அர்ப்பணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சரித்திர பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடு முழுக்க ஹஸாரே கதிர்வீச்சு! - விவேக் பேச்சு


சென்னை: நாடு முழுக்க இன்று அன்னா ஹஸாரே எனும் கதிர்வீச்சு பரவியுள்ளது என்றார் நடிகர் விவேக்.

பன்னாட்டு அரிமா சங்கம், சென்னை அரிமா மாவட்டம், அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவற்றின் சார்பில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுக்கான ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. மரம் நடுவிழாவை தொடங்கி வைத்து விவேக் பேசுகையில், “பசுமை கலாம் திட்டத்தில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளேன். இந்த திட்டத்திற்கு அரிமா மணிலால் ஒரு லட்சம் மரக்கன்றுகள் தருவதாக கூறினார்.

இன்று நாடு முழுவதும் ஒரு கதிர்வீச்சு பரவுகிறது. அது அன்னா ஹசாரே என்ற கதிர்வீச்சு தான்.

அன்னா ஹசாரே ஊழலை ஓழிக்க பாடுபடுகிறார். இங்கு உள்ள மாணவ தம்பிகளை தம்பி ஹசாரேவாக பார்க்கிறேன். இந்தியாவில் 100 கோடி மரங்களை நடவேண்டும் என்று அப்துல்கலாம் விரும்புகிறார்.

தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்திற்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை பசுமை கலாம் திட்டத்தில் நட உள்ளோம். இதில் எக்ஸ்னோரா உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்புகள் சேர்ந்துள்ளன.

மரம் வளர்க்கும் விழிப்புணர்வை மாணவர்கள் கிராமத்து மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். விவசாயம் வளர மழைநீர் தேவை. அதற்கு மரங்கள் தேவை. மரத்தை வளர்த்து வளத்தை பெருக்குவீர்,” என்றார்.

பன்னாட்டு அரிமா இயக்குனர் கிருஷ்ணாரெட்டி, போலீஸ் ஐ.ஜி.ஆறுமுகம், அரிமா மாவட்ட கவர்னர் பி.ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் வரவேற்றார். அரிமா டி.சேகர் நன்றி கூறினார்.

அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது!


அஜீத்தின் 50 வது படமான மங்காத்தா அமெரிக்காவில் மட்டும் 70 திரையரங்குகளில் வெளியாகிறது.

அஜீத்தின் படம் ஒன்று அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மங்காத்தாவில் அர்ஜூன், த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, ப்ரேம்ஜி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் ‘மல்டி ஸ்டாரர்’ படம் இது என வெங்கட் பிரபு கூறி வருகிறார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இடையில் படம் வெளியிடுவதில் ஸ்டுடியோ கிரீன், சன் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் என தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையே ஒரு ‘மங்காத்தாவே’ நடந்து வந்த நிலையில், இப்போது புதிதாக ராதிகாவின் ராடான் நிறுவனமும் மங்காத்தா வெளியீட்டில் களமிறங்கியுள்ளது.

படம் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாவது உறுதி என தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி திரும்ப திரும்ப உறுதி கூறினாலும், இன்னும் நிச்சயமற்ற நிலைதான் நிலவுகிறது.

யுவன் யுவதி - சினிமா விமர்சனம்


நடிப்பு: பரத், சந்தானம், ரீமா கல்லிங்கல், சம்பத்
இசை: விஜய் ஆன்டனி
ஒளிப்பதிவு: கோவி ஜெகதீஸ்வரன்
கதை வசனம்: எஸ் ராமகிருஷ்ணன்
இயக்கம்: ஜிஎன்ஆர் குமரவேலன்
தயாரிப்பு: பைஜா
பிஆர்ஓ: மவுனம் ரவி

இந்தியாவே வேண்டாம், எப்படியாவது அமெரிக்கா போய் செட்டிலாகிவிட வேண்டும் என்பது பரத்தின் கனவு. ஆனால் அவரது கோடீஸ்வர கிராமத்து அப்பா சம்பத்தோ உள்ளூர் ஜட்ஜ் மகளுடன் திருமணத்துக்கு நாள் குறித்துவிடுகிறார்.

அமெரிக்க விசா பெறுவதற்காக தூதரக வாசலில் காத்திருக்கும்போது ரீமா கல்லிங்காலை சந்திக்கிறார் பரத். முதல் சந்திப்பில் முட்டிக் கொள்கிறார்கள். அந்த மோதல், அவர்கள் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் தொடர்கிறது. அதுவே பரத்துக்குள் காதலாக உருவெடுக்கிறது. பாஸ்போர்ட்டைத் தொலைத்துவிட்ட ரீமாவுக்கு ஒருகட்டத்தில் பரத் உதவ, அப்போதுதான் ரீமா பரத்துடன் நட்பாகிறார்.

ரீமா மீதான தன் காதலைச் சொல்லிவிட பரத் முயலும்போதுதான், ரீமா விசா பெற்றதே அமெரிக்க மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாகத்தான் என்ற உண்மை தெரிகிறது.

அப்பா பார்த்த பெண்ணை பரத் கட்டினாரா? அமெரிக்க மாப்பிள்ளையை ரீமா மணம் முடித்தாரா? என்பதெல்லாம் இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகள்.

ரொம்ப சிம்பிளான காதல் கதை. அதன் பெரும்பகுதியை சீஷெல்ஸ் தீவின் அழகிய லொக்கேஷன்களில் படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் நச்சென்று சொல்லத் தவறியிருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய ஆறுதல் சந்தானம். பின்னி பெடலெடுத்துவிட்டார் மனிதர். அவர் தோன்றும் காட்சிகளில் அப்படியொரு அதிர்வெடி சிரிப்பு. ஆனால் சீஷெல்ஸில் அந்த நீக்ரோக்களைப் பார்த்து அவர் பேசும் வசனம் கொஞ்சம் ஓவர்தான். “மச்சான் போதைல பாத்ரூம்னு நெனச்சி ப்ரிஜ்ஜுக்குள்ள ஒண்ணுக்குப் போயிட்டேன்,” எனும் போது அக்மார்க் குடிகாரன் தோற்றான்!

பரத் ரொமான்டிக்காக நடிக்க ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். பாஸ்போர்ட்டுக்காக வரும் ரீமாவை வேண்டுமென்றே அவர் ஈசிஆரில் இழுத்தடிக்கும் காட்சிகள் சுவாரஸ்யமானவை.

ஆனால் பிள்ளைப் பாசத்தில் நல்ல விஷயங்களைச் செய்யும் தந்தையுடன் பரத் முறைத்துக் கொண்டு நிற்கும் காட்சிகளில் பரத் மீது எரிச்சல்தான் வருகிறது.

கோதுமை நிற அழகி ரீமா கல்லிங்கால் மிகையில்லாத நடிப்பைத் தந்துள்ளார்.

ஒரேயொரு காட்சியில் வரும் சத்யன் கலகலக்க வைக்கிறார்.

எந்த வேடமென்றாலும் அப்படியே 100 சதவீதம் பொருந்திப் போகிறார் சம்பத். அந்த கிராமத்து தாதா வேடத்தை இவரைவிட சிறப்பாக செய்ய முடியாது.

கோவி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில், சீஷெல்ஸுக்கே போய் வந்த உணர்வு. அதேபோல, உசிலம்பட்டி என படத்தில் காட்டப்படும் இடங்களும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல அத்தனை அழகு.

விஜய் ஆன்டனி இசையில் ஓ மை ஏஞ்சல், மயக்க ஊசி பாடல்கள் கேட்க வைக்கின்றன. வசனங்களில் எஸ் ராமகிருஷ்ணனை ஓரிரு இடங்களில் பார்க்க முடிகிறது. குறிப்பாக கிராமத்தில் மகனிடம் சம்பத் பேசும் காட்சிகள்.

படத்தின் பின்பாதியில் நிறைய சம்பவங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கின்றன. க்ளைமாக்ஸ் நெருங்கும்போது கூட புதுப்புது பாத்திரங்கள். அதேபோல க்ளைமாக்ஸ் உள்ளிட்ட பல காட்சிகளை எளிதாக யூகிக்க முடிகிறது. இதைத் தவிர்த்திருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்கும் யுவன் யுவதி!

சினிமா துறையின் நலன் பாதுகாக்கப்படும்! - அமைச்சர் செந்தமிழன்


சென்னை: தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் திரைப்பட துறையினருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. முதல்வர் ஜெயலலிதா திரைத்துறையினரின் நலன் காப்பார் என்று செய்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் உறுதியளித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று கடந்த திமுக ஆட்சியினரால் திரைப்படத் துறைக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்தும், தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட இயலாத நிலை இருப்பது குறித்தும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் மீது சிபிஐ உறுப்பினர் ஆறுமுகம், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் பேசினார்கள்.

கடந்த ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட குடும்பமே சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தியது. மற்ற தயாரிப்பாளர்கள் படங்களை திரையிட முடியவில்லை.

தமிழ் பெயருக்கு வரி விலக்கு என்று அறிவித்து விட்டு அவர்கள் குடும்பம் தயாரித்த தமிழக்கு எந்த சம்பந்தமே இல்லாத எந்திரன் என்ற படத்திற்கு பல கோடி ரூபாய் வரி விலக்கு பெற்றவர்கள்.

புதிய ஆட்சி அமைந்த பிறகு அந்த நிலைமை இல்லை. சிறிய படத்தயாரிப்பாளர்கள் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும். திரைவுலகின் நலன் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் உறுதி

இதற்கு பதிலளித்து செய்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் கூறியதாவது:

திரைப்படத்தை தயாரிப்பதோ, வெளியிடுவதோ தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லை. திரைப்படங்களை தயாரித்து அதனை வெளியிட முடியாத நிலை இருப்பதாக இந்த துறைக்கு புகார் எதுவும் வரவில்லை.

எவ்வளவு தொகையில் படங்கள் தயாரிக்கப்படுகிறது, அதை எப்படி வெளியிடுவது என்பதெல்லாம் தனியார் தயாரிப்பாளர்களின் பொறுப்பாகவே இருந்து வந்துள்ளது. தமிழக அரசை பொறுத்தவரை தரமான திரைப்படங்களை தயாரிப்பவர்களுக்கு 7 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

சின்னத்திரை கலைஞர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. சிறந்த திரைப்படங்கள் நடிகர், நடிகைகளுக்கு இந்த துறையின் சார்பாக விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் திரைப்பட நகரில் பயிற்சி பெறும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சின்னத்திரையினரையும் சேர்த்து திரைப்படத் துறையினருக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வுத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் குறிப்பிட்டது போல கடந்த ஐந்தாண்டு காலமாக திரைப்படத் துறை அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டது நூற்றுக்கு நூறு உண்மை.

இந்த துறையை கைப்பற்றிக் கொண்டு மற்றவர்களை வளர விடாமல் அவர்கள் நசுக்கினார்கள். தங்களுக்கு தெரியாமல் யாருமே திரைப்படம் தயாரிக்கவோ, வெளியிடவோ கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடியை கடைப்பிடித்து வந்தனர்.

தமிழ் தமிழ் என பேசும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் ரெட் ஜெயன்ட் கிளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொண்டு இவர்களுடைய படம் ஓடுவதற்காகவே தியேட்டர் அதிபர்களை மிரட்டி ஏற்கனவே ஓடிய படங்களை எடுக்க சொல்லும் நிலைமை எல்லாம் நடந்திருக்கிறது.

இது பற்றி நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே பேசினோம். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது; எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 100 நாட்களில் நூறாண்டு சாதனைகளை புரிந்த முதல்வர் இனி திரைப்படத் துறையினரின் நலன்களையும் காப்பாற்றுவார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ராஜீவ் கொலை வழக்கு மூவருக்கு தூக்கு தண்டனை 7 நாளில் நிறைவேற்ற வேலூர் ஜெயிலுக்கு உத்தரவு. உலக தமிழர் அதிர்ச்சி



நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து தமிழக தலைமை செயலாளருக்கு ஆணை ஒன்று வந்துள்ளது. அதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டணையை வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தேர்தல் பிரசாரத்துக்கு வந்தார். அப்போது ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.



ராஜீவ் காந்தியை கொலை செய்த விடுதலைப்புலிகள் மற்றும் உதவி செய்தவர்கள் என பலர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு 1992-ம் ஆண்டு பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் 26 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து 1998-ல் பூந்தமல்லி சிறப்புக்கோர்ட்டு தீர்ப்பளித்தது.



இதை எதிர்த்து 26 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். 1999-ம் ஆண்டு மே மாதம் அந்த அப்பீல் மனுக்கள் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 22 பேரின் தண்டனை குறைக்கப்பட்டது. அதில் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆயுள் தண்டனை கைதிகளாக வேலூர் ஜெயிலில் உள்ளனர்.



இதற்கிடையே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினி தனக்கு மகள் இருப்பதால் கருணை காட்ட வேண்டும் என்று மனு அனுப்பினார். முருகன்- நளினி தம்பதிக்கு ஆருத்ரா என்ற மகள் இருக்கிறார். தற்போது அவர் முருகன் உறவினர்கள் அரவணைப்பில் இங்கிலாந்தில் படித்து வருகிறார். தன் மகளுக்காக தனது உயிருக்கு விலக்கு அளிக்க அவர் கோரிக்கை விடுத்தார்.



காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், நளினிக்கு தண்டனையை குறைக்கலாம் என்று கடிதம் கொடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2000-ம் ஆண்டு நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அறிவித்தது.



இந்த நிலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரையும் தூக்கில் போட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அனுப்பினார்கள். அந்த கருணை மனுக்கள் ஜனாதிபதி மாளிகை அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன.



தற்போது அந்த கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்து விட்டார். கருணை மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். போராட்டங்களும் நடத்தப்பட்டது.



இந்த நிலையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த தமிழக தலைமை செயலாளருக்கு ஆணை ஒன்று வந்துள்ளது. அதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டணையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.



இந்த ஆணை தமிழக சிறைதுறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து வேலூர் ஜெயில் சூப்பிரண்டு அறிவுடை நம்பிக்கு தூக்கு தண்டணையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு நகல் அனுப்பி வைக்கப்பட்டது.



ஜனாதிபதி அலுவலக உத்தரவு நகல் வந்த 7 நாட்களுக்குள் வேலூர் ஜெயிலில் தூக்கு தண்டணை நிறைவேற்றப்படும் என்று சிறைதுறை ஏடி.ஜி.பி. டோக்ரா கூறியுள்ளார். அதன்படி இன்று முதல் 7



நம் வீர வரலாற்றில் நாமம் பதியும் நாவாந்துறை மண்



இன்றைக்கு சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் மண்ணில் சாதி அடக்கு முறைகளுக்கு எதிராக, அவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினர் கிளர்ந்து எழுந்து சரியான அரசியல் தலைமையின் கீழ் போராடினார்கள்.

அப்போதும் கூட தற்போது இருக்கும் சார்புத் தன்மைபோல சாதி வெறியர்களின் பக்கம் நின்றார்கள் பொலிஸார். பொலிஸார் அவ்வாறு நின்றபடியால் அரசாங்கமும் சாதி வெறியர்களின் பக்கமே சாமரை வீசியது.



அன்றைய கவிஞர் அமரர் சுபத்திரன் பல கவிதைகளை எழுதி அப்போது அரசியல் ரீதியாக போராடிக்கொண்டிருந்த மக்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார்.



அன்றைய போராட்ட காலத்தில் சங்கானைப் பிரதேசம் சாதிவெறியர்களின் அட்டகாசத்தால் அலறியது. ஆனாலும் அதற்கெதிராக சங்கானை மக்கள் வீதிக்கு வந்து நின்று போராடினார்கள்.



அன்றைய சுபத்திரன் எழுதிய கவிதை ஒன்றில் இவ்வாறு இரண்டு வரிகள்



“சங்கானை மண்ணே சரித்திரத்தில் உன் நாமம் மங்காது. மங்காது” என்றிருந்தன அந்த உற்சாகமான வரிகள். சங்கானை மண்ணின் மகத்துவத்தை பாராட்டி எழுதினார் அந்தக் கவிஞர்.



இதேபோன்று எமது கண்களுக்கு நாவாந்துறை மண் தெரிகின்றது. நாவாந்துறை மண்ணா? அல்லது கரையா? என்று பிரித்துப் பார்க்க முடியாத அந்த கிராமத்தின் மக்கள் அடக்கு முறைகளுக்கு எதிராக ஆயுதங்கள் எதுவுமின்றி போராடினார்கள். இது நடந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை.



தங்கள் மண்ணில் வந்து நின்று அராஜகம் புரிந்த கொடியவர்களை எதிர்த்து நின்றார்கள் அந்த மண்ணின் மைந்தர்கள். அவர்கள் கைகளில் ஆயுதங்கள் எதுவுமில்லை. ஆனால் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் உச்சத்து உத்வேகம் தெரிந்தது..



துணிச்சலாக எதிர்ப்புக் குரல் காட்டியவர்களை கொடியவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு வந்து கடுமையாகத் தாக்கினார்கள். காயப்படுத்தினார்கள். இதனால் படுகாயம் அடைந்த நாவாந்துறை மண்ணின் மைந்தர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டார்களாம்.



நாவாந்துறையில் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட நமது உறவுகள் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் 24ம், 27ம் விடுதிகள் யுத்தகால நிலைமை போன்று கடந்த சில நாட்களில் காட்சியளித்ததாகக் கூறப்படுகின்றது.



நோயாளர் பார்வை நேரத்தில் சுமார் 500 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள், தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களைப் பார்வையிடுவதற்காக கூடியிருந்தார்களாம். இதனால் மேற்படி இரண்டு நோயாளர் விடுதிகளிலும் மக்கள் நகர முடியாத அளவிற்கு சன நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.



இதேபோல் நோயாளர்களுக்கான கட்டில்கள் போதாமல் 27ம் விடுதியில் காயமடைந்தவர்கள், விடுதியின் நடைபாதையில் தங்கவைக்கப்பட்டிருந்தார்களாம். இந்நிலைமை சிறிது காலத்திற்க்கு முன்னர் இருந்த யுத்தகால நிலைமை போன்றிருந்ததை உணரக் கூடியதாக இருந்ததாக பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.



இதைப்பார்க்கும் போது எமக்கு அந்த நாவாந்துறை மண்ணின் மைந்தர்களைப் பாராட்ட வேண்டும் போல உள்ளது.



இராணுவக் கொடியவர்கள் ஆபத்தானவர்கள் என்பதை நன்கு அறிந்திருந்தும் கூட அவர்களை எதிர்த்து நின்ற அந்த மைந்தர்களை பாராட்டுவோம்.



அவர்களை இந்த பூமிக்கு அளித்த நாவாந்துறை மண்ணை வாழ்த்திடுவோம். நாவாந்துறை மண்ணே!.. நம் வீர வரலாற்றில் உன் நாமம் பதியும்!...





தலைவர் பிரபாகரன் இறுதிப் போரில் ஐரோப்பிய நாடொன்றிற்கு தப்பிச் செல்லவிருந்தாராம்.பேரினவாதி சம்பிக்க



தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட 47 முக்கிய சிரேஷ்ட உறுப்பினர்கள் இறுதிக் கட்ட போரின் போது ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பிச் செல்லவிருந்ததாக பேரினவாத அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.



கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிற்கு செய்தது போன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் கொலை செய்ய சில சக்திகள் முயற்சிப்பதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.



அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:-



1970 மற்றும் 80களில் காணப்பட்ட சூழ்நிலைகளை வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் ஏற்படுத்தும் முயற்சியாகவே கிறீஸ் பூதத்தை ஏற்பாடு செய்துள்ளனர். அன்று நந்திக்கடல் களப்பில் செயற்பட்ட விடுதலைப்புலிகள் குழுவினரே இதன் பின்னணியில் உள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.



பிரபாகரன் தோற்கடிக்க முடியாதவர், பிரபாகரன் ஒருபோதும் அடிபணியாதவர், பிரபாகரனுடைய இராணுவம் உயிர் தியாகம் செய்யும் குழு என்றெல்லாம் வதந்திகளைப் பரப்பி எம்மை அச்சமூட்டி அடிபணியச் செய்தனர். ஆனால் அவர்களுடைய வெட்கமற்ற செயல் இறுதிக் கட்ட யுத்தத்தில் அம்பலமானது.



இறுதிக் கட்டப் போரின் போது மேற்குலக நாடுகளின் உதவியுடன் கிழக்கு ஐரோப்பிய இராணுவ முகாம் ஒன்றுக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னுடைய 47 தளபதிகளுடனும் குடும்பத்தினருடனும் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார்.



கிறீஸ் பூதம் தொடர்பில் ஏற்படுத்தியுள்ள பீதியை அன்று பிரபாகரன் தொடர்பிலும் ஏற்படுத்தினர். எனினும் அந்த மாயையை எமது தேசிய அரசியல் செயற்பாடுகளின் மூலம் இராணுவத்தினரும் இரண்டு துண்டாக்கினர்.



அதேபோன்று கிறீஸ் பூதம் எனும் வதந்தி பரப்புபவர்கள் அன்று ரணசிங்க பிரேமதாஸவிற்கு செய்தது பேன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சுபாவத்தை கொலை செய்து அவரை அழிக்கப் பார்க்கின்றனர். என்றார் பேரினவாத ஜாதிக ஹெல உறுமய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இனவாத அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க.



விக்கிலீக்ஸ் சிறிலங்கா தொடர்பான ஆயிரத்துக்கும் மேலான இரகசிய ஆவணங்களை அம்பலபடுத்தியுள்ளது



அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான இரகசியத்தகவல் ஆவணங்களை விக்கிலீக்ஸ் நேற்றிரவு வெளியிட்டுள்ளது.1986ம் ஆண்டு தொடக்கம் 2010 ஜனவரி வரையிலான காலப்பகுதியில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு பரிமாறிக் கொள்ளப்பட்ட 1646 ஆவணங்களையே விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இவற்றில் விடுதலைப் புலிகள் தொடர்பாக ஆவணங்களும், சிறிலங்கா அரசு வெளிநாடுகளுடன் கொண்டுள்ள இரகசியத் தொடர்புகள் தொடர்பான ஆவணங்களும் அடங்கியுள்ளன.



சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கத் தூதரகத்தினால் பரிமாற்றப்பட்ட ஆவணங்கள் சிலவற்றை விக்கிலீக்ஸ் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.



இந்தநிலையில் சிறிலங்கா தொடர்பான ஆயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளதானது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம்: சீனா லஞ்சம் கொடுத்தே பெற்றது - விக்கிலீக்ஸ்



அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தைத்தைப் பெறுவதற்கு சிறிலங்கா அதிகாரிகளுக்கு சீனா பெருந்தொகைப் பணத்தை லஞ்சமாக வழங்கியதாக அமெரிக்கா நம்புவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.



நேற்றிரவு வெளியிடப்பட்ட சிறிலங்கா தொடர்பான 1646 ஆவணங்களில் ஒன்றிலேயே, இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.



அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தத்தை சீன நிறுவனங்கள் பெறுவதற்கு லஞ்சமும், அரசியல் செல்வாக்குமே காரணமாக அமைந்தது என்றும் அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய இரகசிய ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.



அத்துடன் அம்பாந்தோட்டைத் துறைமுகம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாகவும், அதற்கருகில் கைத்தொழில், வர்த்தக கட்டமைப்புகள் ஏதும் இல்லை என்றும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரகசிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



உள்நாட்டு ஏற்றுமதி இறக்குமதியாளர்களுக்கு இந்தத் துறைமுகத்தினால் எந்தப் பயனும் கிடைக்காது என்றும், அம்பாந்தோட்டையில் அமைக்கப்படும் அனைத்துலக விமான நிலையமும் கூட வாடகை விமானங்களை தரையிறக்கவே பயன்படும் என்றும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



கடற்புலி பெண்கள் பயிற்சி முகாம் சிறிலங்கா கடற்படைத் தளமாக மாற்றம்



மன்னார், நாச்சிக்குடா கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிப் பெண்கள் பயிற்சி முகாம் அமைந்திருந்த இடத்தில் தற்போது சிறிலங்காவின் பாரிய நிரந்தரக் கடற்படைத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாரிய கடற்படைத்தளத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார்.



கடற்புலிகளின் தளம் முன்னர் அமைந்திருந்த பகுதியிலேயே புதிய நிரந்தர கடற்படைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மன்னார், பூநகரி வீதியின் ஓரமாக அமைந்துள்ள இந்தத் தளம் கடற்படையின் வடமத்திய கட்டளைத் தலைமையின் கீழ் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



கடற்படைத் தளமாக மட்டும் இல்லாமல் கடற்படையின் ஈரூடகப் பிரிவாக (மரைன் யூனிட் தரையிலும் தாக்குதல்களை நடத்தக்கூடிய கடற்படை) இது செயற்படும் என்று கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.



பொறுப்பு வாய்ந்த தந்திரோபாய பகுதியில் இந்த கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கடற்படைத் தளபதி, மேற்குக் கரை ஊடாக ஆயுதங்களும் ஏனைய பொருள்களும் கடத்தப்படுவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.



இந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கடற்புலிப் பெண்கள் பயிற்சி முகாம் ஒன்று அமைந்திருந்தாக கடற்படை தெரிவிக்கிறது.

Thursday 25 August 2011

நளினி வேலூர் சிறைக்கு கொண்டு வரப்படுகிறாரா?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டருந்தனர். நளினி, முருகன் ஆகிய இருவரும் கணவன் மனைவி ஆவர்.



நளினி சிறைக்கு செல்லும்போது, கர்ப்பமாக இருந்தார். சிறையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. கணவன் மனைவியான முருகன் நளினி ஆகியோர், 15 தினங்களுக்கு ஒருமுறை சந்திக்க வேண்டும் என நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி அனுமதி பெற்றனர். அதன்படி 15 தினங்களுக்கு ஒருமுறை சந்தித்து வந்தனர்.



இந்நிலையில் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. 2011 ஜனவரி வரை வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அதன்பின்னர் கடந்த 8 மாதங்களாக முருகன் நளினி இருவரும் சந்திக்கவில்லை.



இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்கான கடிதமும் சிறைத்துறைக்கு வந்துவிட்டது. இதுபற்றிய தகவல் சம்பந்தப்பட்டவர்களிடம் சிறைத்துறை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.



கணவர் உள்பட மூன்று பேருக்கு தூக்கு தண்டனை என்றதும், நளினி அவர்களை சந்திக்க விருப்பப்படுவதாக மீண்டும் சிறைத்துறையிடம் கடிதம் தந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் என்ன மாதிரியான முடிவினை அரசு எடுக்கப்போகிறது என்பது இதுவரை தெரியவில்லை.

3 பேரின் தூக்கு உத்தரவு: சீமான் தலைமையிலான அவசர ஆலோசனை முடிவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்குத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனு நிராகரிப்பட்டது.



இதை எதிர்த்து தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் மூவரையும் செப்டம்பர் 7ம் தேதிக்குள் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.



இதனை அறிந்து தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இன்று இரவு( 25.8.2011) 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் உணர்வாளர்கள் ஒன்று கூடி இதை தடுப்பது எப்படி என்று சீமான் இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.



ஆலோசனையில் வெள்ளிக்கிழமை (26.8.2011) அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்குத்தண்டனையை தடுத்து நிறுத்தக்கோரி மனு தாக்கல் செய்ய உள்ளனர்.



இவ்வழகில் ஆஜராக இந்தியாவின் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானியை களம் இறக்க முடிவு செய்துள்ளனர்.

பேரறிவாளன், முருகன், சாந்தனை செப்டம்பர் 7ம் தேதிக்குள் தூக்கிலிட சிறை அதிகாரிக்கு கடிதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மூவருக்கும் தூத்குத்தண்டனை தீர்ப்பு வழங்கியது கோர்ட். தண்டனை பெற்ற இவர்கள் 21 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



இவர்கள் மூவரும் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். இந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டது.



கருணை மனு நிராகரிப்பு பற்றிய குடியரசுத்தலைவரின் முடிவு பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசு மூலம் வேலூர் சிறை அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.



அந்த கடிதத்தில் செப்டம்பர் 7ம் தேதிக்குள் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.



முருகன், சாந்தன், பேரறிவாளனிடம் இன்று (26.08.2011)

சிறை நிர்வாகம் இந்த தகவலை தெரிவிக்கும்.

"என்னை அழித்து விட்டு போகலாம், ஆனால் என் உணர்வுகளை அழிக்க முடியாது" (காணொளி)

சிங்கள இனவெறி அரசின் முள்ளிவாய்க்கால் மரண பொறியில் தனது அனைத்து உறவுகளையும் இழந்து தனது மகனோடு தப்பி தமிழகத்தில் அகதியாகி வாழும் ஒரு தமிழீழப் பெண்ணின் உள்ளக் குமுறலை கண்டு கண்ணீர் சிந்தி அழுதாலும் மறுகணம் தன்மான உணர்வுடன் தாயக விடுதலை தாகத்துடன் தலை நிமிர்ந்து போராடுவோம் .



இக் காணொளியில் பேசும் சகோதரியின் தன்னம்பிக்கையும் , தன்மானத்தையும் துணிவையும் புலத்தில் வாழும் நாம் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு எத்தனை தடைகள் எத்தனை இழப்புக்கள் எமக்கு நேர்ந்தாலும் ,எம் தாயக மக்களுக்கு கரம் கொடுத்து எம் விடுதலைப் பாதையை பலம் ஆக்குவோம்.



மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்காவிட்டால் சர்வதேசம் தலையிடும்: அமெரிக்கா

28 வருடங்களாக இலங்கைத் தீவில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் தடைச் சட்ட நீக்கத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்கா இந் நடவடிக்கை ஒரு சாதக மனப்பாண்மையை வளர்க்கும் செயலென பாராட்டியுள்ளது.



இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரான திருவாட்டி விக்ரோறியா நுலாண்ட் “நாங்கள் ராஜபக்ச பாராளுமன்றில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவது குறித்து பரிந்துரைத்ததை வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.



இது ஒரு ஆரோக்கியமான நடவடிக்கை. எங்களின் தென்னாசியாவிற்கான இராஜதந்திரச் செயலரான றொபேட் ஈ. பிளேக் அவர்களை ஆகஸ்ட் 29 முதல் ஆகஸ்ட் 31 வரை இலங்கை செல்லவும் வைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.



இந்த நாட்களில் அவர் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் தொடர்பாகக் பேசுவதற்கு தமிழ்க் கட்சிகளுடன் சந்திப்பை மேற்கொள்வார் என்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வார் என்றும் தெரிவித்தார்.



அரச, அரச சார்பற்ற மற்றும் கட்சிகளுடன் விரிவான பேச்சுக்களில் ஈடுபடுவார் என்றும் நாங்கள் சிறீலங்கா அரசை மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மதிப்பது தொடர்பாகவும் கடந்த காலத்தில் அது தொடர்பாக நடைபெற்றவை தொடர்பாகவும் தேசிய ரீதியாக விசாரிக்கச் சொல்வோம் எனவும் தெரிவித்தார்.



அவர்கள் அவ்வாறு தங்களால் அதைச் செய்ய முடியாவிட்டால் இந்த விவகாரத்தில் சர்வதேசம் தலையிடும் என்பதை றொபேட் பிளேக் அவர்கள் ராஜபக்சவின் ஆட்சிக்குத் தெரிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



ராஜபக்சாவின் இந்நடவடிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்த சர்வதேச ஊடகமொன்று தமிழர்களுடான இறுதிப்போரில் சிறீலங்கா மேற்கொண்ட நடைமுறைகள் குறித்து அமெரிக்கா கொடுத்த அழுத்தமே அவரை இச்சட்ட நீக்கத்திற்கு இட்டுச் சென்றுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இழந்தவர்களாய் அல்லோகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் - பாராளுமன்றில் ஸ்ரீதரன் (வீடியோ இணைப்பு)



மர்ம மனிதன் என்ற அச்சத்தினால் தமிழ் மக்கள் தமது நிம்மதியையும் நித்திரையையும் இழந்தவர்களாய் அல்லோகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் - பாராளுமன்றில் ஸ்ரீதரன்







சின்னத்திரையில் நவ்யா நாயர்

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial

சின்னத்திரையில் நவ்யா நாயர்

8/25/2011 3:51:38 PM

கேமரா வெளிச்சத்தில் இருந்தவர்களுக்கு அதை நீங்குவதென்பது கஷ்டம். திருமணம் செய்து திரையுலகிலிருந்து முற்றிலுமாக விலகிய பல நடிகைகள் போpளம் பெண்ணாக சினிமாவுக்கே திரும்பி வருகிறார்கள். அவர்கள் வழியில் இப்போது நவ்யா நாயர். மாறுதலாக இவர் திரும்பியிருப்பது சின்னத்திரைக்கு. தொழிலதிபரை திருமணம் செய்து குட்பை சொன்ன நவ்யா தற்போது மலையாள சேனலான ஏசியாநெட்டில் நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக பொறுப்பேற்றிருக்கிறார். டான்ஸ் டான்ஸ் என்ற அந்த நிகழ்ச்சி நமது மானாட மயிலாட நிகழ்ச்சியை ஒத்தது. இதற்கு நவ்யா நடுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சின்னத் திரைக்கு வந்துவிட்டார். விரைவில் நவ்யாவை பெ‌ரிய திரையிலும் பார்க்கலாம்.

க‌ரிகாலன் - சோழர் கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

க‌ரிகாலன் – சோழர் கதை

8/25/2011 3:50:07 PM

ரொம்ப யோசித்துதான் புதியவர்களின் படத்தில் நடிக்கிறார் விக்ரம். அதிலும் சமீபகால தோல்விகள் அவரை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளன. இருந்தும் அறிமுக இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றால், கதைதான் காரணம். சுசீந்திரன் இயக்கத்தில் ராஜபாட்டை படத்தில் நடித்து வரும் விக்ரம், கண்ணன் இயக்கத்தில் க‌ரிகாலன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மெகா பட்ஜெட் படம். கிளாடியேட்டர் மாதி‌ரியான ச‌ரித்திரப் படம். இதில் சோழர்கால கதையை சொல்லவிருக்கிறாராம் இயக்குனர் கண்ணன். நேற்று படத்தின் விளம்பரத்தை வெளியிட்டாலும் பட வேலைகள் பல மாதங்களாக நடந்து வருகின்றன. படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. ம்… ஒரே நேரத்தில் விக்ரம் இரண்டு படங்களில் நடித்து எவ்வளவு நாளாகிறது.

படுவேகத்தில் வேட்டை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

படுவேகத்தில் வேட்டை!

8/25/2011 3:47:02 PM

லிங்குசாமியின் வேட்டை பற்றிய தகவல்கள் படத்தின் மீதான ஆவலை‌த் தூண்டும்படி உள்ளன. மாதவனும், ஆர்யாவும் அண்ணன், தம்பிகள். இவர்களின் ஜோடிகளான சமீரா ரெட்டியும், அமலா பாலும் அக்கா, தங்கைகள். இந்தியாவின் பல பகுதிகளில் படப்பிடிப்பை நடத்திய லிங்குசாமி தற்போது லேண்ட் ஆகியிருப்பது ஆந்திராவின் சித்தூர் மாவட்டம். இங்குள்ள மதனபள்ளியில் முக்கியமான சில காட்சிகளை படமாக்கியுள்ளார். வேட்டை ஆக்சன் படம். இதில் ரயில் குண்டுவெடிப்பு காட்சி பிரதானமாக வருகிறது. இந்தக் காட்சியை அவர் மதனபள்ளியில் படமாக்கியிருக்கிறார். வேட்டை தீபாவளிக்கு வெளிவருகிறது.

மர்மமனிதர் பற்றி காவல்நிலையத்தில் முறையிடச் சென்ற தமிழர் புத்தளத்தில் வெட்டிக்கொலை



மர்மமனிதர் பற்றி சிறிலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற தமிழர் ஒருவர் புத்தளத்தில் இராணுவச் சீருடையணிந்த நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.



ஐதேகவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பெரேரா இந்தத் தகவலை நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.



நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும்,பெருமாள் சிவகுமார் என்பவரே இராணுவ சீருடையணிந்தோரால் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.



புனித ரமழான் மாதத்தில் புத்தளத்தில் முஸ்லிம்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



மர்மமனிதர்கள் பற்றிய செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் விரைவில் தடைவிதிக்கக் கூடும் என்று அச்சம் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பெரேரா, இதுகுறித்து முறையான விசாரணைகளை நடத்தி பின்னணியைக் கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு பாட்டுக்கு ஆடினால் ஒரு கோடி சம்பளம் : சிம்பு தகவல்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒரு பாட்டுக்கு ஆடினால் ஒரு கோடி சம்பளம் : சிம்பு தகவல்?

8/25/2011 3:44:51 PM

தபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. ஒஸ்தியில் ஒரு குத்துப் பாடல் இருக்கிறது. தபாங்கில் இந்தப் பாடல்தான் மிகப் பிரபலம். இதில் சிம்புவுடன் ஆட இந்தியின் முன்னணி ஹீரோயினுக்கு வலை வீசியிருக்கிறார்கள். காஸ்ட்லி வலை. ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ளது. கத்‌ரினா கைஃபில் இருந்து பிபாசா பாசு, தீபிகா படுகோன் என்று அனைவரையும் அப்ரோச் செய்ய தீர்மானித்திருக்கிறார்கள் சிம்புவும், தரணியும். ஆட சம்மதம் தருகிறவர்களுக்கு ஒரு கோடி வரை கொடுக்க தீர்மானித்திருக்கிறார்களாம்.

மங்காத்தாவுக்கு யு/ஏ சான்றிதழ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மங்காத்தாவுக்கு யு/ஏ சான்றிதழ்

8/25/2011 3:42:23 PM

அ‌‌ஜீத்தின் 50வது படமான மங்காத்தாவுக்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதில் மிக கெட்டவராக நடித்திருக்கிறார். தவிர இது வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் படம். நேற்று படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கினர்.

முதல் இடம் - சினிமா விமர்சனம்


நடிப்பு: விசார்த், கவிதா, இளவரசு, மயில்சாமி, கிஷோர், 'யோகி' தேவராஜ்
இசை: டி இமான்
இயக்கம்: ஆர் குமரன்
தயாரிப்பு: எம் சரவணன், எம் எஸ் குகன்

ஏவிஎம் தயாரிப்பில் வந்திருக்கும் 175 வது படம் முதல் இடம். தலைப்புக்கேற்ற இடத்தைப் பிடித்திருக்கிறதா என்பதை கடைசியில் பார்ப்போம்!

மகேஷ் என்கிற எமகுஞ்சுக்கு (விதார்த்) வாழ்க்கையில் ஒரே லட்சியம் தஞ்சை காவல் நிலையத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள தன் பெயர் முதலிடத்துக்கு வரவேண்டும் என்பது.

இதற்காக அல்லும் பகலும் 'அயராது உழைக்கிறார்', தனது நண்பர்கள் மயில்சாமி, அப்புக்குட்டி துணையுடன். ஒருநாள் ப்ளஸ்டூ மாணவியான மைதிலி (கவிதா)யைச் சந்திக்கிறார். அடுத்த இரு சந்திப்புகளில் இருவரும் காதலர்களாகிவிடுகிறார்கள்.

இதற்கிடையில் உள்ளூர் தாதா கிஷோர் (இவர் பெயர்தான் காவல் நிலையத்தில் முதலிடத்தில் உள்ளது. இந்த இடத்துக்கு வரத்தான் ஹீரோ விரும்புவதாக கதை) ஜெயிலிலிருந்து வெளியாகிறார். அரசியலில் எம்எல்ஏவாகத் துடிக்கும் இவரது தம்பி திருமுருகனுக்கும் நமோ நாராயணனுக்கும் கட்சிக்குள் கோஷ்டித் தகராறு. இந்த தகராறில் விதார்த் சிக்கிக் கொள்கிறார்.

இந்த சிக்கலிலிருந்து அவர் எப்படி மீள்கிறார், வெறும் ரவுடியாக இருக்கும் அவர் எப்படி காதலியை கைப்பிடித்து முதல் இடத்தை அடைகிறார் என்பது மீதிக் கதை.

கதையில் புதுமை என்று எதுவும் இல்லை. எத்தனையோ படங்களில் பார்த்த ரவுடிகள், அதில் ஒருவர் நல்லவர், உள்ளூர் அரசியல் தகராறு, இடையில் ஹீரோவுக்கு மிடில் கிளாஸ் பெண் மீது காதல்...

நாயகன் விதார்த்துக்கு இதில் ஆல்ரவுண்டர் வேடம். அசப்பில் விக்ரமின் க்ளோன் மாதிரி தெரிகிறார். நகைச்சுவை, ஆக்ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என நடிப்பில் அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கிறார். நடிப்பைப் பொறுத்தவரை அவருக்கே இந்தப் படத்தில் முதலிடம்.

நாயகி கவிதா சில காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். சில காட்சிகளில் அவரிடம் விதார்த்தை விட முதிர்ச்சி... முகத்தில்தான். இயக்குநர் கவனித்திருக்க வேண்டும்.

மயில்சாமி, அப்புக்குட்டி காமெடி படத்துக்கு ஒன்றல்ல... டபுள் ப்ளஸ்.

கிஷோர், யோகி தேவராஜ், திருமுருகன், நமோ நாராயணன் என அனைவரும் கதைக்குத் தேவையான நடிப்பை கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார்கள். இளவரசு கைதட்டல்களை அள்ளுகிறார், பெண்ணைப் பெற்ற அப்பாக்கள் சார்பில் ஒரு வசனம் பேசுவாரே, அந்த காட்சியில்!

பார்ப்பவர்களுக்கு படம் ஜாலியாக இருந்தால் மட்டும் போதும் என முடிவு செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். நோக்கம் சரிதான். ஆனால், இன்னும் திருத்தமாக காட்சிகளை அமைத்திருக்கலாம். நகைச்சுவைதான் படத்தின் பிரதானம் என்றாகிவிட்ட பிறகு, அதற்குத் தோதாக காட்சிகளை அமைத்திருந்தால் நிச்சயம் முதலிடம் கிடைத்திருக்கும்!

மயங்கினேன் தயங்கினேன்... திகட்ட திகட்ட திஷா பாண்டேயின் கவர்ச்சி!


தமிழ்ப்படம் பெரிய வெற்றிப்படமாகியும்கூட அந்தப் படத்தின் நாயகி திஷா பாண்டேக்கு நிறைய வாய்ப்புகள் அமையவில்லை. அந்தக் குறையை தீர்த்துவிடும் என அவர் பெரிதும் நம்புவது மயங்கினேன் தயங்கினேன் படத்தைத்தான்.

திருமாவளவனின் ஆசியுடன் தாய்மண் திரையகம் வழங்கும் படம் என கடந்த ஆண்டு பூஜை போடப்பட்ட இந்தப் படத்தின் நாயகன் நிதின் சத்யா.

எஸ்டி வேந்தன் இயக்கும் இந்தப் படத்தில் திஷா பாண்டேயின் கவர்ச்சிதான் ஹைலைட் என்கிறார்கள். போதாக்குறைக்கு தேஜாஸ்ரீயும் படத்தில் உண்டு. போதும் போதும் எனும் அளவுக்கு கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார்களாம்.

கால் டாக்ஸி டிரைவரான நிதின் சத்யா, டெலிபோன் ஆபரேட்டரான திஷா மீது காதலாவதுதான் கதை. இதில் தமிழ் சினிமாவுக்கே உரிய அத்தனை மசாவலா சமாச்சாரங்களையும் சேர்த்து படமாக்கியிருக்கிறாராம் வேந்தன்.

தமிழ்ப்படம் படத்துக்கு இசையமைத்த கண்ணன்தான் இந்தப் படத்துக்கும் இசை. ஜான் மக்கள் தொடர்பை கவனிக்க சுடர் முருகையா, ராணி ஜீவானந்தனம், எஸ்டி வேந்தன் மற்றும் மகாதேவன் தயாரிக்கிறார்கள்.

படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

சூப்பர் ஸ்டார்கள் பாணியில் ஷேர் கேட்ட ஹீரோயின்!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

சூப்பர் ஸ்டார்கள் பாணியில் ஷேர் கேட்ட ஹீரோயின்!

8/25/2011 3:27:43 PM

பாலிவுட்டில் சல்மான் கான், ஷாருக் கான், ஆமிர் கான் ஆகியோர் லாபத்தில் பங்கு என்ற முறையில் தங்களது சம்பளத்தை பெறுகின்றனர். இந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் பாலிவுட் ஹீரோயின் கரீனா கபூர். 'ஹீரோயின்’ என்ற படத்தில் கரீனாவின் கால்ஷீட் கேட்ட பாலிவுட் தயாரிப்பாளர்கள், 'தனக்கு சம்பளமாக 8 கோடி தர வேண்டும்Õ என்றதும் அதிர்ந்துபோனார்கள். சம்பளத்தை குறைத்துக்கொள்ளச் சொல்லி எவ்வளவோ கேட்டும் மறுத்துவிட்டார். வேறுவழியே இல்லையா என்றபோது மற்றொரு யோசனைக்கு ஒப்புக்கொண்டார். சம்பளமே வாங்காமல் நடிக்கிறேன். பிறகு படம் எவ்வளவு கோடிக்கு விற்கிறதோ அதற்கு ஏற்ப பங்கு கொடுத்தால்போதும் என்றார். இந்த டீலுக்கு தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதில் 8 கோடிக்கு மேலும் சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறது பாலிவுட் வட்டாரம். நம்பர் ஒன் ஹீரோயினாக கரீனா இருக்கிறார். 'ஹீரோயின்Õ படத்தில் தலைப்புக்கான கேரக்டரில் அவர் நடிக்கிறார். இதனால் அவருக்காகவே படம் பிசினஸ் ஆகும் என்கிறார்கள். இதுவரை சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மட்டுமே பட விற்பனையில் ஷேர் பெற்றுவந்த நிலையில் முதன்முறையாக இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கும் சூப்பர் ஹீரோயின் என்ற பெயரை தட்டிச் சென்றிருக்கிறார் கரீனா கபூர்.

ஈழ பெண்களிடம் பாலியல் வன்முறை தொடர்கிறது: சீமான்

இலங்கையில் தமிழ்ப் பெண்களிடம் மர்ம மனிதர்கள் உடல் முழுவதும் கிரீஸை தடவிக்கொண்டு பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது தொடர்கிறது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.



இதுகுறித்து அவர் கூறியதாவது:



இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்கிளப்பில் உடல் முழுவதும் கிரீஸை தடவிக்கொண்டு தமிழ்ப் பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட மர்ம மனிதர்களின் நடமாட்டம் இப்போது தொடர்ந்து தமிழர் வாழும் பகுதிகளில் பரவி வருகிறது.



வடக்கு மாவட்டமான யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை மர்ம மனிதரின் நடமாட்டம் காணப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்துள்ளனர். யாழ்ப்பாணம் நகரில் இருந்து 2 கி.மீ. தூரத்திலுள்ள நாவாந்துறை எனும் மீனவ கிராமத்தில் திங்கட்கிழமை இரவு இப்படிப்பட்ட மர்ம மனிதர்கள் 3 பேர் நுழைந்துள்ளனர்.



அவர்களை கண்ட அங்கிருந்த மக்கள் துரத்திப்பிடிக்க முயன்றுள்ளனர். அந்த மூன்று பேரும் அங்கிருந்த ராணுவ முகாம்களுக்குள் நுழைந்து தப்பித்துள்ளனர். இதைக்கண்ட மக்கள் ராணுவ முகாமை முற்றுகையிட்டுள்ளனர். மர்ம மனிதர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். அதற்கு சிங்கள ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.



இதனால் கோபமுற்ற மக்கள் அங்கிருந்த ராணுவ வாகனங்கள் சிலவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். மக்களை கலைக்க ராணுவமும், காவல் துறையினரும் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.



மக்கள் அனைவரும் கலைந்து சென்ற பின்னர், நள்ளிரவில் அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் நிலையங்களுக்கு இழுத்து சென்று விசாரணை என்ற பெயரில் அடைத்து வைத்து துன்புறுத்தி வருகின்றனர்.



இந்த விவரங்கள் அனைத்தும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து எமக்கு தெரிவிக்கப்பட்ட செய்தியாகும். இதனை சில இலங்கை ஊடகங்களும் செய்திகளாக வெளியிட்டுள்ளன.

இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், இப்படிப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக மக்கள் போராடினால் அவர்களை பயங்கரவாதிகள் என்று முடிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு ராணுவ செயலாளர் கோத்தபய மிரட்டியுள்ளார்.

ஆனால், ஒரு மாத காலத்திற்கும் மேலாக இப்படி கிரீஸை தடவிக் கொண்டு, தமிழ் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை செய்பவர்கள் யார் என்பதை தெளிவுபடுத்தவில்லை.

இதிலிருந்து இந்த குற்றப் பின்னணியில் சிங்கள ராணுவமே ஈடுபட்டு வருகிறது என்பது தெரிகிறது.



இலங்கையில் போர் முடிந்து அங்கு அமைதி நிலவுவதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால், அங்கு தமிழ்ப் பெண்களை குறிவைத்து தொடர்ந்து பாலியல் வன்முறை நடத்தப்படுகிறது. இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இந்திய அரசு இதையெல்லாம் தெரிந்தும் கண்டுகொள்வதில்லை.



இப்படிப்பட்ட நிகழ்வுகள் தொடருமானால், இங்குள்ள தமிழர்கள் மத்தியிலும் கொந்தளிப்பு ஏற்படும். ஒவ்வொரு நாளும் ஈழத்தில் தமிழினம் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட கொடூரமான வன்முறைகளை ஐ.நா.அவையின் பார்வைக்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளிடமும் தமிழக முதல்வர் கொண்டு செல்ல வேண்டும் என்று சீமான் கூறினார்.

கோத்தபயா ராஜபக்சேவை அமெரிக்காவில் வைத்து விசாரிக்க வேண்டும்

தனி நாடு கேட்டார்கள் என்பதற்காக தமிழர்களை இலங்கை அரசு கொல்லவில்லை. மாறாக, தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இனவெறியுடன் கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்றும், பெண்களை மொத்தமாக பாலியல் பலாத்காரம் செய்தும் இனவெறி படுகொலையை நடத்தியுள்ளனர் என்று திருச்சி சிவா எம்.பி இன்று ராஜ்யசபாவில் கடுமையாக சாடினார்.



ராஜ்யசபாவில் இன்று பெரும் இழுபறிக்குப் பின்னர் அரை மனதாக இலங்கைப் பிரச்சினை குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் கலந்து கொண்டு பாஜக, அதிமுக, திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் பேசினர்.



திருச்சி சிவா பேசுகையில், தமிழர்கள் தனி நாடு கேட்டார்கள் என்பதற்காக அவர்களைக் கொல்லவில்லை இலங்கை. மாறாக அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்று குவித்தனர். கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தமிழர்கள் மீது துவேஷம் காரணமாக, தமிழ் நூல் நிலையத்தை தீவைத்து எரித்தனர். பெண்கள் மொத்தமாக மானபங்கப்படுத்தப்பட்டனர். தமிழ் இளைஞர்களே இல்லாத நிலையை இலங்கை அரசு உருவாக்கி விட்டது.



உள்நாட்டுப் போர் என்ற பெயரில் தமிழர்களைக் கொன்று குவித்தது இலங்கை இனவெறி ஆட்சி.



இலங்கைக்கு ரூ. 500 கோடி நிவாரண நிதியை அளித்தது இந்தியா. அந்த நிதி எப்படி செலவழிக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும். எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி ஆய்வு நடத்த வேண்டும்.



அமெரிக்கப் பிரஜையாகவும் உள்ள கோத்தபயா ராஜபக்சேவை அமெரிக்காவில் வைத்து விசாரிக்க வேண்டும். அதேபோல முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் விசாரிக்க வேண்டும் என்றார் சிவா.

இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் அரசு துரோகம்: கம்யூனிஸ்ட்

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலங்களவையில் இன்று கோரிக்கை விடுத்தது. மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.



நெருக்கடியான தருணங்களில் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது. போர்க்குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு இந்தியா ஏன் வற்புறுத்தவில்லை. 2009 மே மாதத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மாபெரும் இனப்படுகொலை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி டி.ராஜா தெரிவித்தார்.



இலங்கைத் தமிழர்கள் பிரச்னை குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தை ராஜா தொடங்கிவைத்துப் பேசுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்திராகாந்தி இருந்தவரை இந்தியாவை உலகம் கவனித்தது. இப்போது யார் இந்தியாவை கண்டுகொள்கிறார்கள் என்றார் அவர்.

கிறீஸ்மனிதன் வந்தால் அடிக்கவேண்டாம், அடித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம்



கிறீஸ்மனிதன் வந்தால் அடிக்கவேண்டாம், அடித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம், உடனடியாக இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்துங்கள், சட்டத்தைக் கையில் எடுக்கும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை என இராணுவத்தினர் தம்மை அச்சுறுத்தியதாக வடமராட்சி கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளார்.

மேற்கண்டவாறு தினக்குரல்; பத்திரிகை நிறுவனத்திற்க்கு நேரடியாகத் தொடர்பு கொண்ட மக்கள் சிலர் தெரிவித்துள்ளார்.



இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர்கள் தெரிவிக்கையில். நேற்று(புதன்கிழமை) காலை 8மணிதொடக்கம் வடமராட்சி கிழக்கில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் வீடுகளிற்க்குள் நுழைந்த படையினர் கிறீஸ் மனிதன் வந்தால் அது தொடர்பாக அருகிலுள்ள இராணுவ முகாமுக்குத் தெரியப்படுத்துங்கள்,



நீங்களாக அவர்களைப் பிடித்து அடிக்கவேண்டாம். அப்படி எதுவும் நடந்தால் உங்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தினர்.



எமது பகுதியில் நாளுக்கு நாள் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில் இராணுவத்தினரின் இந்த அறிவித்தல் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.



காலை தொடக்கம் ஒவ்வொரு வீடுகளிற்க்கும் சுமார் 5வரையான இராணுவத்தினர் வந்து மேற்படி அறிவித்தலைக் கொடுத்துள்ளனர். இராணுவத்தினர் அறிவித்தல் கொடுத்தபோது எங்களுடைய பாதுகாப்புக்காக நாங்கள் கிறீஸ் மனிதர்களைத் திருப்பித்தாக்கவேண்டும்தானே என சிலர் வினவியதற்க்கு அவ்வாறு சம்பவம் நடந்தால் உடனடியாக துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்படும் என இராணுவத்தினர் பதிலளித்தனர்.



வடமராட்சி கிழக்கில் தாளையடிப்பிரதேசத்தில் மட்டுமே பொலிஸார் உள்ளனர். எனினும் பொலிஸாரின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே உள்ளது.



இதனால் இராணுவத்தினரின் கட்டுப்பாடு அதிகம் காணப்படுகின்றது. இது மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தைத் தோற்று வித்திருக்கின்றது.



இந்நிலையில் உடுத்துறைப் பிரதேசத்தில் நேற்று மாலை 5.45மணியளவில் பிக்கப் வாகனத்தில் வந்த இராணுவத்தினர் பூவரசம் மரத்திலிருந்து பொல்லுக்கள் உருவாக்கக்கூடிய தடிகளை வெட்டிச் சென்றதை பிரதேச இளைஞர்கள் சிலர் நேரடியாக கண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள மக்கள் உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவ வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

கடாபி குடும்பத்தின் ஆடம்பர வாழ்வு அம்பலம்! (பட இணைப்பு)



லிபிய கிளர்ச்சியாளர்கள் கடாபியின் 'பாப் அல் அஷீசியா' வளாகத்தினுள் நுழைந்து அவ்விடத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் அவரது வாசஸ்தலம் மற்றும் அதனுள் காணப்பட்ட வசதிகள் தொடர்பில் வெளியுலகுக்குத் தெரியவர ஆரம்பித்துள்ளது.



கடாபியின் வளாகத்தினுள் சிறார்களுக்கான பூங்கா, சிறிய மிருகக்காட்சிசாலை என்பன காணப்படுகின்றன.



கடாபியின் வாசஸ்தலத்தினுள் பெரிய நீச்சல் தடாகமொன்றும் காணப்படுகின்றது. மேலும் அங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களால் வாசஸ்தலத்தின் பெரும்பாலான பகுதி மற்றும் தளபாடங்கள் ஆகியன சிதைவடைந்துள்ளன.



கடந்த சில தினங்களாக அங்கு நடைபெற்றுவரும் உக்கிர மோதல்களில் சிக்கி 400 பேர் வரை கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



நன்றி: டெய்லி மெயில்

















3200 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்ட பின்னணியில் உருவாகும் தனுஷின் மாரீசன்!


தனுஷை வைத்து சிம்புதேவன் ஒரு படம் இயக்குவதாக முன்பே தெரிவித்திருந்தோம். அதற்கான வேலைகள் துவங்கிவிட்டன.

இந்தப் படத்துக்கு 'மாரீசன்' என்று தலைப்பிட்டுள்ளனர். யுடிவி நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கும் படம் இது. ரூ 30 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். இது உண்மையாக இருந்தால் தனுஷ் இதுவரை நடித்ததிலேயே அதிக பட்ஜெட் இந்தப் படத்துக்குதான்!

கிமு 12-ம் நூற்றாண்டில் (அதாவது 3200 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டம்) நடக்கும் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம் என்பதால்தான் இந்த அளவு பட்ஜெட்டாம்.

சிம்பு தேவனின் கதையைக் கேட்ட யுடிவியின் இப்போதைய உரிமையாளர்களான வால்ட் டிஸ்னி நிறுவனத்தினர், இந்தக் கதை ஆங்கிலப் படங்களின் பாணியில் கச்சிதமாக உள்ளது. தாராளமாக படமெடுங்கள் என பாராட்டினார்களாம்.

டிசம்பரில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் மாரீசனுக்கு இசை ஜி வி பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு கதிர்.

'வேட்டை'யில் காயமடைந்த சமீரா!


லிங்குசாமியின் வேட்டை பட ஷூட்டிங்கில் எதிர்பாராத விதமாக காயமடைந்தார் நடிகை சமீரா ரெட்டி.

லிங்குசாமி இயக்கும் வேட்டை படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்து வருகிறது. சமீரா ரெட்டி – அமலா பால் சகோதரிகளாக நடிக்கிறார்கள் இந்தப் படத்தில்.

இருவரும் பாவாடை தாவணியில் ஆடிப் பாடுவது போன்ற பாடல் காட்சியை இங்கு படமாக்கினார் லிங்குசாமி. ஒரு காட்சியில் இருவரும் மொபட்டுகளில் வருவது போல எடுத்தனர். அப்போது தடுமாறி விழுந்துவிட்டார் சமீரா ரெட்டி. இதில் அவருக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துப் போய் முதலுதவி செய்தனர் யூனிட்டிலுள்ளவர்கள். இதனால் சில மணி நேரம் பாதிக்கப்பட்ட ஷூட்டி பின்னர் தொடர்ந்தது.

வேட்டை படத்தில் மாதவன் – ஆர்யா ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

'ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு கூடிட்டாய்ங்க!'


சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என பிரிந்து நின்று திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த மூன்று நிறுவனங்களும், பிரச்சினை என்று வந்ததும் ஒன்றுக்கொன்று கரம் கோர்த்து நிற்கின்றன.

இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்துதான் அஜீத்தின் மங்காத்தாவை வெளியிடுகிறார்கள் என்பது இன்றைய ஸ்பெஷல் செய்தி.

மங்காத்தா திரையரங்குகளைத் தொடுவதே சிரமம் என்று கடந்த சில தினங்கள் முன்பு வரை செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில்தான் ஞானவேல் ராஜா உள்ளே வந்தார். அவர் படத்தின் தயாரிப்பாளரான க்ளவுட் நைன் பெயரையே அவர் சுத்தமாக மறைத்துவிட, போங்கப்பா நீங்களும் உங்க டீலும் என கடுப்பானார் தயாநிதி அழகிரி.

இந்த நேரத்தில் அவரது க்ளவுட் நைன் பேனரையும் சன் பிக்சர்ஸையும் இணைத்து வைத்தவர் கருணாநிதியின் மற்றொரு வாரிசான உதயநிதி ஸ்டாலின்.

தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் உதவியுடன் சன் பிக்சர்ஸ் வழங்கும் அஜீத்தின் மங்காத்தா என இப்போது நிலைமை மாறியிருக்கிறது.

விளம்பரங்களில் ‘க்ளவுட் நைன் – சன் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்’ என்றே குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தயாநிதி அழகிரி, “அண்ணன் உதயநிதிக்கு நன்றி. அவர்தான் இந்தப் படம் சன் பிக்சர்ஸ் மூலம் வெளியிட ஏற்பாடு செய்து கொடுத்தார்” என்று கூறியுள்ளார்.

பொதுவாக ஒரு படத்துக்கு 25 நாட்களுக்கு மேல் விளம்பரம் செய்து வெளியிடுவது சன் பிக்சர்ஸ் பாணி. ஆனால் தயாநிதிக்காக இந்தப் படத்தை ஒரு வாரத்துக்குள் விளம்பரம் செய்து வெளியிடுகிறார்கள்.

படம் வரும் 31-ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என உறுதியளித்துள்ளார் தயாநிதி அழகிரி.

வில்லன் அரவிந்தசாமி!


ஒரு காலத்தில் சாக்லேட் ஹீரோவாக கருதப்பட்ட அரவிந்தசாமி, இப்போது மீண்டும் தனது நடிப்பைத் தொடர்கிறார்… ஆனால் வில்லனாக!

விஷால் – த்ரிஷா நடிக்கும் புதிய படத்தில் இவர்தான் வில்லன் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஜினியின் தளபதி படத்தில் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் அரவிந்த சாமி. தொடர்ந்து ரோஜா படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு நிறைய படங்களில் அரவிந்தசாமி நடித்தார். இந்தியிலும் ஒரு படம் பண்ணார்.

உயர்நடுத்தட்டு ரசிகர்கள் இவரை தங்களது அபிமான நாயகனாக வரித்துக் கொண்டனர். மீடியாவும் அப்படியே இவர் போகஸ் செய்ய கொஞ்ச நாட்கள் வண்டி ஓடியது. இடையில் அவரும் ஆக்ஷன், காமெடி அவதாரம் எடுத்துப் பார்த்தார். எதுவும் சரிவரவில்லை. பின்னர் வியாபாரத்தை கவனிக்கப் போய்விட்டார்.

1994-ல் காதலியை கைப்பிடித்த அரவிந்தசாமி, சமீபத்தில்தான் விவாகரத்து பெற்று பிரிந்தார். ஆனாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.

இப்போது திரு இயக்கும் விஷால் படத்தில் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன.

தொப்பி கொடுக்கச் சென்ற அன்னா ஆதரவாளர்களை தாக்கிய சல்மான் பாடிகார்ட்ஸ்


கான்பூர்: அன்னா ஆதரவாளர்களை தாக்கியதற்காக நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது மெய்க்காப்பாளர்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சல்மான் கான் கான்பூரில் உள்ள ககதியோவில் நடந்த விழா ஒன்றில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னாவுடன் சேருமாறு சல்மானை அழைக்க அன்னா ஆதரவாளர்கள் அங்கு வந்தனர்.

அன்னாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பிக் கொண்டு, கைகளில் கொடியுடன் வந்தவர்கள் சல்மான் காரை நோக்கிச் சென்றனர். உடனே சல்மானின் மெய்க்காப்பாளர்கள் அன்னா ஆதரவாளர்கள் மீது பாய்ந்து விட்டனர். அவர்கள் தாக்கியதில் ஜன் ராஜ்ய கட்சியின் பொதுச் செயலாளர் ஓமேந்திரா பாரத் அதே இடத்தில் மயக்கம்போட்டு விழுந்தார்.

இது குறித்து ஜன் ராஜ்ய கட்சித் தலைவர் தீபக் பாரத் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு கூறுகையில்,

சல்மானின் கார் அருகே சென்றவுடன் அவரது மெய்க்காப்பாளர்கள் எங்களை தாக்கத் துவங்கிவிட்டனர். அவருக்கு அன்னா தொப்பியும், ஊழலுக்கு எதிரான வாசனங்கள் அடங்கிய பேப்பரில் ஆட்டோகிராப் வாங்கவும் தான் சென்றோம். வேறு எந்த தூண்டுதலின்பேரிலும் நாங்கள் செல்லவில்லை என்றார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு சிலர் சல்மானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அன்னா தொப்பியை பரிசளிக்க சென்ற ஆதராவளர்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து சல்மான் மீதும், அவரது மெய்க்காப்பாளர்கள் மீது ஓமேந்திரா போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம். இது உண்மை என்று தெரிய வந்தால் உடனே நடவடிக்கை எடுப்போம் என்று இன்ஸ்பெக்டர் உபேந்திரா சிங் ரத்தி தெரிவித்தார்.

விழாவில் இருந்து வெளியே வந்த சல்மானைப் பார்ப்பதற்காக மக்கள் முந்தியடித்துக் கொண்டு வந்தனர் என்று அன்னா ஆதரவாளரான உபன்ஷு ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா?- விஜயகாந்த்


சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு ரூ. 3 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தேமுதிக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் இன்று ( 25-ம் தேதி) தனது 59-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளையும், ஆதரவற்ற பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கினார்.

அவர் வழங்கிய நலத்திட்ட உதவித் தொகை விவரம் வருமாறு,

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தேமுதிக தொண்டர்கள் 55 பேருக்கு தலா ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை பட்டாக்கள்

விரும்பாக்கம் பகுதிக்கு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ்

படுகொலை செய்யப்பட்ட தென்சென்னை மாவட்ட 138-வது வட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ. 1.25 லட்சம் நிதியுதவி

எம். ஜி. ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ரூ. 25 ஆயிரம் நன்கொடை

விபத்தில் பலியான ஆரணி சட்டசபை தொகுதி தேமுதிக தொண்டர் நாராயணசாமி குடும்பத்துக்கு ரூ. 40 ஆயிரம் நிதியுதவி

மொத்தம் ரூ. 3 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்த சாரதி, மாவட்ட தலைவர்கள் யுவராஜ், செந்தாமரைக்கண்ணன் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது:

முன்னதாக தேமுதிக தலைமை அலுவலகத்தில் நிருபர்களை அவர் சந்தித்தார். அப்போது தேமுதிக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்று புகார் எழுந்துள்ளதே என்று கேட்டதற்கு,

புதிதாக திருமணம் ஆனவர்கள் குழந்தை பிறக்க சிறிது காலம் காத்திருக்க வேண்டும். உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. திருமணமாகி, குழந்தை பிறப்பதற்கு 10 மாதங்கள் ஆகிறது. அந்தக் குழந்தை எழுந்து நடப்பதற்கு 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. அதுபோல் எதற்கும் ஒரு கால அவகாசம் உண்டு.

குறைந்தது 6 மாதங்கள் வரையாவது அரசின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். அடுத்த ஆண்டு பட்ஜெட்டின் போது, இந்த அரசின் செயல்பாடுகள் குறித்து தெளிவாக கருத்து சொல்கிறேன் என்றார்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்று கேட்டதற்கு, அந்தத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால், கூட்டணி குறித்தும் இப்போது கருத்து சொல்ல முடியாது என்றார்.

ஊழல் ஒழிப்பு: ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்


ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்தக் கோரி சோளிங்கர் ரஜினி ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

லோக்பால் மசோதா கோரி கடந்த ஏப்ரல் மாதம் முதல்முறையாக அன்னா ஹஸாரே உண்ணாவிரதமிருந்தபோது தென்னகத்திலிருந்து அவருக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த்.

அதன் பிறகு உடல்நிலை சரியில்லாமல் போய், சிகிச்சைப் பெற்று நலமுடன் திரும்பி வந்த ரஜினி, இந்த முறை வலுவான லோக்பால் கோரி ஹஸாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக கடிதம் எழுதினார். அன்னா ஹஸாரே மூலம் ரத்தமற்ற புரட்சி நாட்டில் உருவாகியுள்ளதாகவும், ஊழலை ஒழித்தே தீர வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ரஜினியின் தீவிர ரசிகர்களும் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர்.

முதல் உண்ணாவிரதம் சோளிங்கர் நகரில் ஆரம்பித்துள்ளது. வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடந்து வருகிறது.

ஏராளமான ரஜினி ரசிகர்கள் திரண்டு வந்து இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். ரஜினி ரசிகர்களுக்கு ஆதரவாக மற்ற நடிகர்களின் ரசிகர்களும், அரசியல் கட்சியினரும் பொது மக்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து சேளிங்கர் ரவி கூறுகையில், "எங்கள் தலைவர் ரஜினிகாந்த் தனது படங்களில் தொடர்ந்து லஞ்சம், ஊழல் ஆகியவை எதிர்த்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'சிவாஜி' திரைப்படத்தில் லஞ்சம் லாவண்யத்தால் நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி கூறினார். சொல்வது மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையில் எப்போதும் நேர்மையை கடைப்பிடித்து வருபவர் அவர்.

ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும் என்பதே அவரின் நீண்ட நாள் கனவு. அந்த கனவை நிறைவேற்றக்கூடிய ஜன் லோக்பால் சட்டமசோதவை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கும் சமூக சேவகர் அன்னா ஹசாரே அவர்களுக்கு ரஜினி ஆதரவு தெரிவித்த 24 மணி நேரத்தில் நாங்கள் உண்ணா விரதம் மேற்கொண்டுள்ளோம்.

எங்களுடன் 200 பேர் ரசிகர்கள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்," என்றார்.

என் கணவர் மீது பொய் நில அபகரிப்பு புகார்: நடிகர் விக்னேஷ் மனைவி மனு


சென்னை:  என் கணவர் மீது வீரம்மாள் வேண்டும் என்றே பொய் நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார் என்று நடிகர் விக்னேஷின் மனைவி உமா மகேஸ்வரி கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

கடந்த 22-ம் தேதி ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த வீரம்மாள் என்ற 80 வயது மூதாட்டி நடிகர் விக்னேஷ் மீது நில அபகரிப்பு புகார் கொடுத்தார். அந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து விக்னேஷின் மனைவி உமா மகேஸ்வரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

ஆலந்தூரில் திருவிக இன்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட் என்ற பெயரில், எனக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை எனது அம்மா சுதா எனக்கு எழுதி வைத்தார்.

இந்நிலையில் வீரம்மாள் என்பவர் என் மீதும், எனது கணவர் விக்னேஷ் மீதும் நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார். இந்த இடம் வீரம்மாளின் மூத்த மகனான சின்னதம்பிக்கு சொந்தமானது. கடந்த 2001-ம் ஆண்டு அவர் இறந்துவிட்டார்.

பல்வேறு வங்கிகளில் சின்னதம்பி கடன் வாங்கியிருந்தார். இதனை அடைக்க முடியாமல் அவரது மனைவி கீதா கஷ்டப்பட்டார்.

இந்நிலையில் கீதாவின் அக்காள் என்ற முறையில் எனது தாய் சுதா அக்கடன்களை அடைத்தார். இதற்கு பிரதிபலனாக அந்த சொத்தை கீதாவும், அவரது மகன்களும் சேர்ந்து எனது தாயின் பெயருக்கு எழுதி வைத்தனர்.

இந்த சொத்தை எனது தாய் என் பெயருக்கு மாற்றிக் கொடுத்துள்ளார். இந்த சொத்து சம்பந்தமாக எனக்கும், வீரம்மாளுக்கும் இடையே வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வீரம்மாளும், அவரது மகன்களான ராஜு, தங்கராஜ் ஆகியோர் சொத்து தொடர்பாக புகார் அளித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். எனது கணவர் மீது வேண்டுமென்றே பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, வீரம்மாள் மற்றும் அவரது மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

டெல்லியில் இன்று அன்னாவை சந்திக்கிறார் நடிகர் விஜய்-உண்ணாவிரதத்தில் பங்கேற்பு


டெல்லி: டெல்லியில் இன்று காலை அன்னா ஹஸாரேவை நடிகர் விஜய் சந்தித்து அவருக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கிறார். பின்னர் மாலை வரை அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருக்கிறார்.

சமீபத்தில் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் திரையுலகம் சார்பில் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. வழக்கம் போல சினிமாக்காரர்களின் பாலிட்டிக்ஸ் இதில் குறுக்கிட்டது. நான் வர மாட்டேன், நீ வர மாட்டேன் என்று கூறி பலரும் ஆப்சென்ட் ஆனார்கள். நடிகர்கள் தரப்பில் சூர்யா மட்டுமே ஆஜராகியிருந்தார்.

இந்த உண்ணாவிரதம் சரியாக திட்டமிடப்படவில்லை, யாரிடமும் ஆலோசனை கேட்கப்படவில்லை, எனவே இதில் பங்கேற்க மாட்டேன் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் கூறி கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் இன்று டெல்லி போய் அங்கு அன்னாவை சந்தித்து ஆதரவு தெரிவிக்கப் போவதாக விஜய் கூறியுள்ளார். மேலும், அங்கேயே இன்று மாலை வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Wednesday 24 August 2011

கேணல் ராயுவின் 8ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் (25.08.2002) (காணொளி இணைப்பு)





கேணல் ராயு [குயிலன்]

(அம்பலவாணர் நேமிநாதன்)

ஏழாலை, யாழ்.



வீரப்பிறப்பு: 30.05.1961



வீரமரணம்: 25.08.2002



தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் உடனிருந்து தலைவரின் போரியல் நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தவர் கேணல் ராயு.



முதலாவது சிறப்புக் கொமாண்டோ படையணியை உருவாக்கியவர்.



விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர்.



விடுதலைப் போரின் முதலாவது கனரக ஆட்லறிப் பீரங்கிப் படையணியின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மாவீரன் கேணல் ராயு.



அன்று சுகயீனம் காரணமாக சாவைத் தழுவிக்கொண்டார்.



கேணல் ராயுவின் இறுதி வணக்க நிகழ்வு. தமிழீழத் தேசியத் தலைவரும், தளபதிகளும், போராளிகளும் பெரும்தொகையான மக்களும் அஞ்சலி செலுத்திய கேணல் ராயுவின் வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது.



கேணல் ராயுவின் 8ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் (25.08.2002) (காணொளி இணைப்பு)

கேணல் ராயு [குயிலன்]

(அம்பலவாணர் நேமிநாதன்)

ஏழாலை, யாழ்.



வீரப்பிறப்பு: 30.05.1961



வீரமரணம்: 25.08.2002



தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் உடனிருந்து தலைவரின் போரியல் நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தவர் கேணல் ராயு.



முதலாவது சிறப்புக் கொமாண்டோ படையணியை உருவாக்கியவர்.



விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர்.



விடுதலைப் போரின் முதலாவது கனரக ஆட்லறிப் பீரங்கிப் படையணியின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மாவீரன் கேணல் ராயு.



அன்று சுகயீனம் காரணமாக சாவைத் தழுவிக்கொண்டார்.



கேணல் ராயுவின் இறுதி வணக்க நிகழ்வு. தமிழீழத் தேசியத் தலைவரும், தளபதிகளும், போராளிகளும் பெரும்தொகையான மக்களும் அஞ்சலி செலுத்திய கேணல் ராயுவின் வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது.



மாவீரர் மகுடம்: கேணல் ராயு





தொடு வானம்: கேணல் ராயு





Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா