Saturday 30 July 2011

'கொழுக் மொழுக்' மதுஸ்ரீ... வழிவிடு கண்ணே வழிவிடு!


கோலிவுட் ரசிகர்களுக்குப் பிடித்த கொழுக் மொழுக் நாயகிகள் பட்டியலில் லேட்டஸ்ட் வரவு மதுஸ்ரீ.

வழிவிடு கண்ணே வழிவிடு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். தமிழ் என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குகிறார்கள் அலிகான் -கௌரிசங்கர் என்ற இரட்டையர். சார்லி, டி.பி. கஜேந்திரன் என உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

என்ன படம் இது.... எதற்காக இந்த டைட்டில்?

"மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் முக்கியமானது தான். ஆனால் அதைவிட முக்கியமானது அன்பு. அந்த அன்பை நமக்கு முதலில் காட்டுபவள் தாய். அத்தகைய அன்பின் உருவமான தாயை வயதான காலத்தில் முதியோர் இல்லத்திற்கு அனுப்புபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். அது தான் கதைக் களம்.

தாயை மதிக்காமல் திரிபவனின் கதி என்ன ஆகிறது என்பதை சுவாரஸ்யமாக கூறியுள்ளோம். திரைக்கதை முற்றிலும் புதிய பாணியில் இருக்கும்," என்கிறார்கள் இயக்குநர்கள்.

சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. விழாவுக்கு வந்தவர்கள் இசையை கேட்டார்களோ இல்லையோ... புது நாயகி மதுஸ்ரீயின் கவர்ச்சி விருந்தை கண்களால் பருகத் தவறவில்லை!

'சீப் பப்ளிசிட்டி'.... அடங்காத சோனா!


நமீதாவை கிண்டல் செய்வது போலவும், இரட்டை அர்த்த ஆபாச வசனம் பேசியும் நடித்ததால், சமீபத்தில் நமீதாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட சோனா, மீண்டும் அவரைச் சீண்ட ஆரம்பித்துள்ளார்.

பப்ளிசிட்டி மோகம் எனக்கல்ல, நமீதாவுக்குதான் என்று அவர் கூறியுள்ளார்.

கோ படத்தில் நமீதாவை கிண்டலடிப்பது போலவும் மிக ஆபாசமாகவும் நடித்திருந்தார் குத்தாட்ட நடிகை சோனா.

இதுகுறித்து பின்னர் நமீதாவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும், அவர் தன்மீது கோபமாக இருப்பதாகவும் தினமும் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து விளம்பரம் தேடி வந்தார்.

ஆரம்பத்தில் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்த நமீதா, சமீபத்தில் ஒரு முன்னணி நாளிதழில் சோனாவின் பேட்டியைப் படித்து மிகவும் கோபமடைந்தார். அந்தப் பேட்டியில் தன்னைப் பற்றி தேவையில்லாமல் சோனா அடித்த கமெண்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காரசாரமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில், இதுதான் நேரம் பப்ளிசிட்டி தேட என முடிவு செய்துவிட்ட சோனா, முன்னைக் காட்டிலும் வேகமாக நமீதா பற்றி பேச ஆரம்பித்துள்ளார்.

‘நமிதாவைப் பற்றி நான் சொன்ன அந்த எஸ்எம்எஸ் விவகாரம் ரொம்ப பழசு. அதுக்கு இத்தனை நாள் கழிச்சி, இப்போ ஏன் அவர் பதில் சொல்லணும். நமீதாவுக்குதான் பப்ளிசிட்டி ஆசை,' என்றெல்லாம் கூறியுள்ளார்.

இதுகுறித்து நமீதாவிடம் கேட்டபோது, "சோனா வேண்டுமென்றே இப்படிச் செய்து வருவதை மீடியாக்கள் புரிந்து கொண்டால் போதும். போயும் போயும் சோனாவை வைத்தா நான் பப்ளிசிட்டி தேடுவேன். இதைவிட ஜோக் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட நிலையிலும் நான் இல்லை என்பதை தமிழ் ரசிகர்கள் அறிவார்கள். இனி இதுபற்றிப் பேசவே வேண்டாம். அருவருப்பாக உள்ளது," என்றார்.

செக் மோசடி வழக்கில் நடிகர் விவேக் ஓபராய்க்கு பிடிவாராண்ட்!


மும்பை: ரூ.3கோடி செக்மோசடி செய்த வழக்கில், இந்தி நடிகர் விவேக் ஓபராய் உட்பட 6 பேருக்கு கோர்ட் பிடிவாராண்ட் பிறப்பித்துள்ளது மும்பை நீதிமன்றம்.

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மற்றும் குடும்பத்தினர் இணைந்து ஓபராய் மல்டிமீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். நிறுவனத்தை உள் மற்றும் வெளிநாடுகளில் விரிவுப்படுத்துவதற்காக, மும்பைச் சேர்ந்த ஜவகர்லால் அகிச்சா என்ற பைனான்சியாரிடம் 3 கோடி ரூபாய் கடன் பெற்றனர்.

பணத்தை திரும்ப செலுத்த கொடுக்கபட்ட செக் பணமில்லாமல் திரும்ப வந்தது. இதையடுத்து, விவேக் ஓபராய், அவரது தந்தை சுரேஷ் ஓபராய் உட்பட 6 பேர் மீது செக்மோசடி வழக்கு தொடுத்தார்.

மும்பை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் விசாரணைக்கு பின், குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் பெயில் இல்லாத பிடிவாராண்ட் பிறக்கப்பட்டது.

ஈழத் தமிழர்கள் சிறிலங்கா அரசுக்கு கொடுத்த அடி

வடக்கு,கிழக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கு நடைபெற்ற தேர்தல் மூலம், சர்வதேச சமூகத்துக்கும் சிறிலங்கா அரசுக்கும் தெளிவானதொரு செய்தியை தமிழ்மக்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

இத்தகையதொரு தேர்தல் முடிவை சிறிலங்கா அரசாங்கம் நிச்சயம் எதிர்பார்த்திருக்காது.

ஏனென்றால் அரசாங்க வளங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து பலத்த நம்பிக்கையோடு தேர்தல் பிரசாரத்தில் இறங்கியிருந்தது மகிந்த ராஜபக்ஸவின் பட்டாளம்.

மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ச யாழ்ப்பாணத்தையும், அவரது மகன் நாமல் ராஜபக்ச வன்னியையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு முழுநேரமாக பிரசாரத்தைக் கவனித்துக் கொள்ள, கடைசி நேரத்தில் மகிந்தவே வந்து நேரடியாக களமிறங்கினார்.

கடைசி மூன்று நாட்களும் மகிந்த ராஜபக்ஸ வடக்கிலேயே தங்கியிருந்து பிரசாரங்களை மேற்கொண்டார்.

உள்ளூராட்சித் தேர்தல் ஒன்றுக்கு இந்தளவுக்கு பிரசாரம் மேற்கொள்ளப்பட்ட வரலாறு முன்னெப்போதும் இல்லை என்றளவுக்கு பிரசாரங்களை அரசாங்கத் தரப்பு மேற்கொண்டிருந்தது.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று வடக்கிலே குவிந்து நின்று பிரசாரங்களை செய்தனர்.

அவை அத்தனையுமே மலினத்தனமானவை.

தேர்தல் பிரசாரம் என்று அழைத்தால் மக்கள் வரமாட்டார்கள் என்று திறப்பு விழாக்கள் என்ற போர்வையிலும், நலத்திட்டங்கள்- அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரிலும் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

அத்தனையிலுமே அரசியல்வாடை தான் வீசியது. தமிழ்மக்களுக்கு சலுகைகள் அள்ளி வீசப்பட்டன.

இவையெல்லாவற்றையும் பார்த்தபோது தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டது உண்மை.

அபிவிருத்தி என்ற மாயைக்குள் தமிழ்மக்களின் அரசியல் உரி்மைகள் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு விடுமோ என்ற அச்சம் மேலோங்கியது.

என்றாலும் தேர்தல் முடிவு அத்தகைய அச்சத்தைப் போக்கி விட்டது.

அதுமட்டுமன்றி அரசாங்கத்தின் வாயை முற்றிலும் அடைக்கச் செய்து விட்டது.

குறிப்பாக மகிந்த ராஜபக்ஸவையும், அவரது சகோதரர் பசில், மகன் நாமல் போன்றோரின் வாய்களுக்குப் பூட்டுப் போட்டு விட்டதென்றே கூறலாம்.

அந்தளவுக்கு தேர்தல் முடிவு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அமைச்சர்கள் சிலர் தேர்தல் முடிவுகளுக்குப் புதுப்புது வியாக்கியானம் கொடுக்க முனைந்துள்ளனர்.

அரசுடன் இணைந்து செயற்படவே மக்கள் ஆணை கொடுத்துள்ளனர் என்கிறார் ஒரு அமைச்சர்.

இதை வைத்துக் கொண்டு அதிகமாக துள்ளக் கூடாது என்று எச்சரிக்கிறார் மற்றொருவர்.

மகிந்தவோடு சேர்ந்து கொண்டு தேர்தலில் நின்ற டக்ளஸ் தேவானந்தாவோ தேர்தல் முடிவு எல்லோருடைய கண்களையும் திறக்கச் செய்துள்ளது என்கிறார்.

கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட ஆணை தெருவிளக்குகளைப் பராமரிக்கவே என்கிறார் பசில்.

ஆக மொத்தத்தில் அமைச்சர்கள் அனைவருமே இந்தத் தேர்தல் முடிவை சரியாகப் புரிந்து கொள்ள முடியாதளவுக்குக் கலங்கிப் போயுள்ளனர் என்பதே உண்மை.

தெற்கிலே தமக்கு வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு ஒரு விதமாக கற்பிதம் கூறும் சிறிலங்கா அரசாங்கம் வடக்கிலே தமிழ் மக்கள் கொடுத்துள்ள ஆணைக்கு மற்றொரு வகையான விதண்டாவாதக் கற்பிதம் கொடுக்கிறது.

இந்தத் தேர்தலில் சிறிலங்கா அரசுக்கு ஏற்பட்ட தோல்வி தனியே உள்ளூர் அரசியல் பரிமாணம் ஒன்றைக் கொண்டதல்ல.

அதற்கும் அப்பால் இதற்கு சர்வதேச முக்கியத்துவம் உள்ளது.

இது வெறும் உள்ளூராட்சித் தேர்தல் தான் என்று இப்போது சிறிலங்கா அரசினால் கூறிவிட முடியாது.

ஏனென்றால் தேர்தலுக்கு முன்னரே சிறிலங்கா அரசின் அமைச்சர்கள் இந்தத் தேர்தல் மூலம் வடக்கிலுள்ள தமிழ் மக்கள் சர்வதேசத்தின் வாயை அடைத்து விடுவார்கள் என்று கூறியிருந்தனர்.

போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் சர்வதேசத்தின் வாயை அடைப்பதற்கான ஒரு கருவியாக இந்தத் தேர்தலை மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பயன்படுத்த முனைந்தது.

ஆனால் இப்போது தமிழ் மக்கள் சிறிலங்கா அரசினது வாயை அடைத்து விட்டுள்ளனர்.

போர்க்குற்ற விசாரணைகள் தேவையென்பதையும், அபிவிருத்தியல்ல உரிமைகளே அவசியம் என்ற உண்மையையும் அவர்கள் உறுதியாக எடுத்துக் கூறியுள்ளனர்.

இது சிறிலங்கா அரசு எதிர்பாராத ஒரு அதிர்ச்சி.

ஏனென்றால் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய நரபலி வேட்டையை தமிழ் மக்கள் இலகுவில் மறந்து போய் விடுவார்கள் என்று சிங்கள அரசு பகல்கனவு கண்டிருந்தது.

வேட்டியும், சேலையும், நிவாரணப் பொருட்களும், அபிவிருத்தி என்ற மாயையும் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தையும் அவர்களின் கடந்தகால அனுபவங்களையும் அழித்து விடும் என்று மகிந்த அரசு கனவு கண்டது.

ஆனால் அந்தக் கனவு வெறும் பகல் கனவாகிப் போயுள்ளது.

தமிழ்மக்கள் அபிவிருத்தி அரசியல் மாயைக்குள் விழுந்து விடப் போவதில்லை என்ற உண்மையை எடுத்துக் கூறியுள்ளனர்.

தனை இனியாவது சிறிலங்கா அரசு உணர்ந்து கொண்டால் தான் இதுபோன்ற மூக்குடைபடுதலில் இருந்து தப்பிக் கொள்ள முடியும்.

இல்லையேல் இதுபோன்று அவ்வப்போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிறிலங்கா அரசு மூக்குடைபட்டு தலைகுனிவுகளை சந்திப்பது தொடர்கதையாகவே அமைந்து விடும்.

முகிலன்
ஈழநேசன்

நோர்வே படுகொலைகளும் முள்ளிவாய்க்காலும் ஊர் உளவியல் ஒப்பீடு!

கண்டவர்களை எல்லாம் சுடும்படி உத்தரவிட்ட கோத்தபாயவின் மனோநிலைக்கும் ஆனர்ஸ் பிரீவிக்கிற்கும் என்ன வேறுபாடு...

நோர்வேயில் படுகொலைகளை செய்த ஆனர்ஸ் பிரீவிக் மண்டை பிழைத்த ஒருவன் என்று நோஸ்க் உளவியலாளர் அறிவித்துள்ளனர். ஆனால் படுகொலைகளை செய்த கொலையாளி போலீசார் தன்னை நெருங்கியவுடன் தனது ஆயுதங்களை வீசி கைகளை உயர்த்தி சரணடைந்துள்ளார்.

இரசாயன பாதிப்புக்கு தப்பிவிடும் ஆடைகள், உயர் போலீஸ் அதிகாரிபோல தோற்றம், உயிர்தப்புவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் யாவற்றுடனும் கொலையாளி களமிறங்கியுள்ளார். மற்றவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று நினைத்த இந்த நபர் தான் தப்பி வாழ வேண்டும் என்பதில் தெளிவான ஒருவராக இருந்துள்ளார், இவர் பைத்தியமா…?

இப்போது நடைபெறும் விசாரணைகள் இவருக்கு சிறைத்தண்டனையே வழங்க முடியாது என்று கூறுகின்றன. ஆனால் உலகப் பயங்கரவாதம்பற்றி வாய் கிழிய கத்திய மேலைத்தேய ஊடகங்கள் ஆனர்ஸ் பிரீவிக் பற்றி எப்படிக் கதைப்பது, தமது விவாதத்தை எந்தக் கோணத்தில் ஆரம்பிப்பது என்று தெரியாமல் குழம்பிக்கிடக்கின்றன. இவர்கள் வெறும் ஞான சூனியங்களா? என்ற கேள்வியை இவர்களுடைய தடுமாற்றம் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கேள்வியை நாம் எழுப்பவில்லை இன்றைய இன்பர்மேசன் பத்திரிகை எழுப்பியுள்ளது.

கொலைஞன் ஆனர்ஸ் பிறீவிக்கிற்கின் செயலுக்கு முன்மாதிரியாக இருந்தவர்கள் யார் என்ற பட்டியலையும் அது வெளியீடு செய்துள்ளது. 1995ம் ஆண்டு அமெரிக்காவின் ரிமொற்றி மக்வெயின் என்ற கடும்போக்கு தீவிரவாதி ஒக்கலகாமா சிற்றியில் குண்டு வைத்து 168 பேரை கொன்றொழித்த நிகழ்வு, 1999 அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள உயர்நிலை பள்ளியில் 12 மாணவரையும் ஓர் ஆசிரியரையும் கொன்ற நிகழ்வு, 2005 இஸ்லாமிய தீவிரவாதிகள் பிரிட்டனில் 56 பேரை கொன்ற நிகழ்வு, 2007ம் ஆண்டு வேர்ஜீனியாவில் 30 மாணவரை கொன்ற கொலைஞனின் எண்ணங்கள், 2008 பின்லாந்தில் நடைபெற்ற நிகழ்வு ஆகியன ஆனர்ஸ் பிரீவிக்கின் எண்ணங்களுக்கு நல்ல உதாரணங்களாக உள்ளதாகவும் கூறியுள்ளது. சனல் – 4 ஐ பார்த்திருந்தால் அவர்கள் கோத்தபாய ராஜபக்ஷவையும் அதில் சேர்த்திருப்பர்.

இத்தகைய கடும்போக்கு தீவிரவாதம் வெறுமனே முஸ்லீம்களிடமிருந்து மட்டும் வரும், இலங்கையானால் புலிகளிடமிருந்து மட்டும் வரும் என்று மேலைநாடுகள் கருதின. அவர்கள் அறிவித்த பயங்கரவாத பட்டியலில் ஆனர்ஸ் பிறீவிக் போன்றவர்களுடைய தீவிரவாதம் வசதியாக சேர்க்கப்படவில்லை. ஆனால் இப்போது நடைபெற்றுள்ள நிகழ்வு மேலை நாடுகளின் பயங்கரவாத பட்டியல் மீது எங்கோ ஒரு ஓட்டை இருப்பதை வெளிப்படையாக்கியுள்ளது.

இவ்வாரம் வெளியான சனல் 4 தொலைக்காட்சி மறுபடியும் சிறீலங்காவின் கொலைக்களம் ஒளிபரப்பின் மூன்றாவது பகுதியை வெளியிட்டது. அப்போது ஆனர்ஸ் பிறீவிக்போல அகப்பட்டவர்களை எல்லாம் கொன்று தள்ள வேண்டும் என்ற ஒருவரின் பெயர் வெளியானது, அவர்தான் சிறீலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ.

அகப்படுவோரை எல்லாம் சுடும்படி இவர் உத்தரவிட்டதாக அந்தச் செய்தி தெரிவித்தது. அங்கே பொது மக்கள், போராளிகள் என்ற பேதம் பார்க்கப்படவில்லை. இது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற சிங்கள அரசின் வாதங்கள் முற்றாக பொய்த்துப் போய்விட்டதையும் அது சுட்டிக்காட்டியது.

உளவியல் ரீதியாக சிறீலங்கா புதுமாத்தளனில் நடைபெற்ற படுகொலைகளுக்கும், நோர்வே உற்றாயா தீவில் நடைபெற்ற படுகொலைகளுக்கும் பேதமில்லை என்பதை தெட்டத்தெளிவாக உணர சனல் 4 வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்தது. புதுமாத்தளனில் நடைபெற்ற படுகொலைகளுக்கும் நோர்வேக்கும் தொடர்பிருக்கிறது. இந்த நிகழ்வு நோர்வேக்கு சில செய்திகளை சொல்லியிருக்கும் என்பதை மறுக்க முடியாது.

இனவாதமும், நிறவாதமும், கடும்போக்கு வாதமும் வெள்ளையரிடமிருந்து வந்தாலும் அது குற்றமே, கறுப்பரிடமிருந்து வந்தாலும் அது குற்றமே என்று கூறியவர் நெல்சன் மண்டேலா. அதுபோல கடும்போக்கு தீவிரவாதம் வெள்ளையரிடமிருந்து வந்தாலும், கறுப்பரிடமிருந்து வந்தாலும், சிங்களவரிடமிருந்து வந்தாலும் அது குற்றச் செயலே என்பதை உலகம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

சிறீலங்கா போர்க்குற்ற நீதிமன்றில் பதிவு செய்யாத காரணத்தால் விசாரணைகள் சாத்தியமில்லை என்று ரணில் கூறியுள்ளார். நான் பைத்தியக்காரன் எனக்கு சிறை கிடையாது என்று ஆனர்ஸ் பிரீவிக் சொல்வதற்கும், ரணில் சொல்வதற்கும் பேதங்கள் எதுவும் கிடையாது. கொலை செய்தவன் குற்றவாளி அதை மறைக்க பைத்தியக்காரன் வேடமணிந்தவன் மாபெரும் குற்றவாளி. ஆகவே ரணிலின் பைத்திய வேடம் அவதானிக்கப்பட வேண்டிய வேடமாகிறது.

நோர்வேயின் ஆனர்ஸ் பிறீவிக்கின் செயல் சிறீலங்காவின் இராணுவத்தின் மனோநிலையோடு ஒப்பிட்டு நோக்கப்பட்டால் இரண்டும் ஒன்றே என்பதை எளிதாக விளங்கலாம். இதுவரை விளங்க முடியாதது போல நடித்த நோர்வேக்கு காலம் ஒரு கொலைஞன் மூலம் விளக்கம் கொடுத்திருக்கிறது.

தீவிரவாதம் ஆயுதமேந்தி சர்வாதிகார வடிவில் வந்தாலும், வாக்குச்சீட்டு பெற்று ஜனநாயக வடிவில் வந்தாலும் அது தீவிரவாதமே. துப்பாக்கியால் நட்போடு சுட்டாலும் மரணமே கோபத்தோடு சுட்டாலும் மரணமே.

மேலை நாடுகள் இதற்காக என்ன விதி செய்யப்போகின்றன..

அலைகள் பயங்கரவாத ஒப்பீட்டு ஆய்வுப் பிரிவுக்காக.. 30.07.2011

இமெல்டாவின் காட்டிக்கொடுப்பு: அம்பலமாகும் செய்திகள்!

உள்ளுராட்சித் தேர்தலை அடுத்து வடபகுதியில் உள்ள தமிழ் அரச ஊழியர்கள் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியினால் பழிவாங்கப்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகிறது. அரசுக்கு எதிராக தபால் மூலம் வாக்குகளை அளித்த தமிழ் அரச ஊழியர்களையும், சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்களையும் பழிவாங்குவதில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஈடுபட்டிருப்பதாகவும், யாழ்.மாவட்டத்தில் உள்ள ஆசிரிய தொழிற்சங்கம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் துணைபோவதாகவும், தபால் மூல வாக்களிப்பு விபரங்களை அவர் ஆளுநரிடம் கையளித்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணாக இந்த ஆவணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஆளுநரிடம் கையளித்துள்ளார் என மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆவணங்கள் கையளிக்கப்பட்டதையடுத்து அரச அதிகாரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் வடக்கு மாகாண ஆளுனர் ஈடுபடுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தலில் தாம் அடைந்த தோல்விக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக வடமாகாண கல்விப்பணிப்பாளர் விக்னேஸ்வரன் கட்டாய ஓய்வில் அனுப்பட்டுள்ளார். வடமாகான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய சம்மேளனத்தினருமே அதிகமாக அரசுக்கு எதிராக தபால் மூலம் வாக்களித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பல கல்வி வலய அதிகாரிகளை இடமாற்றம் செய்துவிட்டு, இதனால் ஏற்படும் வெற்றிடங்களுக்கு யாழ்ப்பாணத்திற்கு பயிற்சி நடவடிக்கைகளுக்காக வந்துள்ள தென்னிலங்கை சிங்களவர்களைக் கொண்டு நிர்வாக சேவை வெற்றிடங்கள் நிரப்பலாம் என்ற யோசனைகளும் இமெல்டாவால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.

அதிர்வு

சனல்4க்கு எதிராக பிரித்தானியா சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோத்தபாய

சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை கடந்த புதன்கிழமை இரவு ஒளிபரப்பிய வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். இத்தகைய பொறுப்பற்ற வீடியோக்களை ஒளிபரப்பியமைக்காக சனல் 4 அலை வரிசைக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்லுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டதாக இலங்கை இராணுவ வீரர்கள் என்று கூறப்பட்ட இருவர், சனல் 4 வீடியோவில் கூறினர்.

இது தொடர்பாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ கூறுகையில்:

சவேந்திர சில்வா தான் என்ன செய்கிறார் என்ன செய்யப் போகிறார் என்பதை அனைவருக்கும் கூறிக்கொண்டிருப்பாரா? மேற்படி கொலைகள் எம்மால் செய்யப்பட்டதாக இலங்கை இராணுவ வீரர்கள் என்று கூறப்பட்ட இருவர் கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அவை போலிப் பிரசாரங்களாகும் என்றார். சரணடையும் நபர்கள் குறித்து அப்போது ஐ. நா வதிவிட பிரதிநிதியாக இருந்த நீல் புஹ்னே எமக்கு ஒருபோதும் தெரிவிக்கவில்லை. யுத்தத்தின் இறுதிநாட்களில் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மதிப்பிட்டதாக அவர்கள் எப்படி கூறமுடியும்?

முல்லைதீவு அரசாங்க அதிபர் 300,000 பொதுமக்களின் பதிவுகளை கொண்டிருந்தார். யுத்தத்தின் முடிவில் 294 000 பேர் இருந்தனர். ஏனையோரில் பெரும்பாலானோர் பாதுகாப்பு படையினருடனான மோதல்களில் கொல்லப்பட்ட எல். ரி. ரி ஈ யினர் அவர்களில் சிலர், கனடா மற்றும் இந்தியாவுக்கு தப்பிச் சென்று விட்டனர் என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவத்தார்.

நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சூசை, தமிழ்ச்செல்வன் ஆகியோரின் குடும்பத்தினரை நாம் பாதுகாத்து வருகின்றோம். கடற்படையினர் அனைவரின் மரணத்திற்கும் சூசை காரணமானவர் என்ற நிலையில் நாம் அவர்களை கொன்றிருக்கலாம். ஆனால் நாம் அவர்களைப் பாராமரித்து வருகிறோம். பிரபாகரனின் பெற்றோரையும் நாம் பராமரித்தோம்.

கொலையாளிகளாகவும் தற்கொலை போராளிகளாகவும் இருந்த 11,000 முன்னாள் போராளிகள் படையினரிடம் சரணடைந்தனர். அவர்களுக்கு நாம் புனர்வாழ்வளித்து கல்வியளித்து மீண்டும் சமூகத்தில் இணைத்துள்ளோம்.

முந்தைய வீடியோவில் தோன்றிய பெண் முன்னாள் எல். ரி. ரி. ஈ அங்கத்தவர் என்பதற்கு எம்மிடம் ஆதாரம் உள்ளது. அவர் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்ட 200,000 பொது மக்களுடன் இருந்தவர் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறினார்.

பாமகவில் விடுதலை சிறுத்தைகள் சேருவது பற்றி பொதுக்குழுவில் முடிவு: ராமதாஸ்

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘’தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய அணியை ஏற்படுத்தும் பா.ம.க. அறிவிப்புக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. சென்னையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பா.ம.க.வின் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.

பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒருமித்த கருத்துள்ள கட்சிகள். இந்த 2 கட்சிகளும் கட்டாய, கட்டணமில்லாத தரமான சமச்சீர் கல்வி மற்றும் தரமான மருத்துவ சிகிச்சையை வலியுறுத்தி வருகின்றன. பா.ம.க. அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேருவது குறித்து ஆகஸ்டு 27-ந் தேதி நடைபெறும் பா.ம.க. பொதுக்குழுவில் விவாதிக்கப்படும்.

இது பற்றி திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ரவிக்குமார் ஆகியோரிடம் 2 முறை பேசியுள்ளேன். பா.ம.க. அணியில் சேர்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள பல இயக்கத்தினர் மற்றும் தமிழ் ஆர்வலர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க. அணியில் சேரும் வாய்ப்புள்ளது. இந்த 2 கட்சிகளும் தொண்டர்கள் அதிகமுள்ளவை. பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரே அணியாக உருவானால் உள்ளாட்சி தேர்தலில் 3-வது அணியாக போட்டியிடுவோம்’’ என்று கூறினார்.

கோத்தாபயவின் கோரிக்கையை நிராகரித்தது பிரித்தானியா


ஊடகங்களின் உள்ளடக்கங்களை பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை என்று கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

பொறுப்பற்ற காணொலியை ஒளிபரப்பிய சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே பிரித்தானியத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சனல் 4 ஒரு சுதந்திரமான ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு ஊடகம். ஒவ்வொரு ஜனநாயகத்திலும் சுதந்திர ஊடகம் முக்கியமானது என்று பிரித்தானியா நம்புகிறது.

ஊடக நிறுவனங்கள் பொருத்தமான ஒழுக்க மற்றும் சட்ட ரீதியான தராதரங்களை பேணுவதை உறுதிப்படுத்துவதற்கான வலுவான பொறிமுறையை பிரித்தானியா கொண்டுள்ளது.

ஆனால் ஊடகங்களின் உள்ளடக்கங்களை பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை" என்றும் பிரித்தானியத் தூதரகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோத்தாபயவின் கோரிக்கையை நிராகரித்தது பிரித்தானியா


ஊடகங்களின் உள்ளடக்கங்களை பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை என்று கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

பொறுப்பற்ற காணொலியை ஒளிபரப்பிய சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே பிரித்தானியத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சனல் 4 ஒரு சுதந்திரமான ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு ஊடகம். ஒவ்வொரு ஜனநாயகத்திலும் சுதந்திர ஊடகம் முக்கியமானது என்று பிரித்தானியா நம்புகிறது.

ஊடக நிறுவனங்கள் பொருத்தமான ஒழுக்க மற்றும் சட்ட ரீதியான தராதரங்களை பேணுவதை உறுதிப்படுத்துவதற்கான வலுவான பொறிமுறையை பிரித்தானியா கொண்டுள்ளது.

ஆனால் ஊடகங்களின் உள்ளடக்கங்களை பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை" என்றும் பிரித்தானியத் தூதரகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலை பெற்ற தெற்கு சூடானும் தமிழீழ விடுதலையும் .கருத்தரங்கம்


விடுதலை பெற்ற தெற்கு சூடானும் தமிழீழ விடுதலையும் .இன உணர்வாளர் துரைமுருகன் உரை (காணொளி இணைப்பு)

விடுதலை பெற்ற தெற்கு சூடானும் தமிழீழ விடுதலையும் .கருத்தரங்கம்


விடுதலை பெற்ற தெற்கு சூடானும் தமிழீழ விடுதலையும் .இன உணர்வாளர் துரைமுருகன் உரை (காணொளி இணைப்பு)

Friday 29 July 2011

ஈழத் தமிழனைப்போல் புலம்பெயர் தமிழன் ஒன்றுபட வேண்டும்


வருடா வருடம் வருகின்ற எத்தனை சோக நாட்களை ஈழத் தமிழன் மனதில் சுமக்கின்றான்? நமது மக்களையும், மாவீரர்களையும், மாமனிதர்களையும் பறிகொடுத்த நாட்களெல்லாம் நினைவு தினங்களாகி ஈழத் தமிழனின் நாட்காட்டிகள் நிறைத்துவிட்டன.சுனாமி போன்ற இயற்கையின் கொடூரங்கள்கூட எமக்கு அழிவுகளைத் தந்து அதன் சோக நினைவுகளை பதிவு செய்துவிட்டு சென்றுள்ளன. அதுவும் ஆடி மாதம் என்றாலே 1983 இல் இலங்கை அரசினால் அன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட அதிஉச்ச பயங்கரவாதக் ‘கொலைக்களமே’ அனைவருக்கும் நினைவில் வரும்.

அதிக உயிர் உடமைகளை ஈழத் தமிழன் ஆரம்ப காலகட்டத்தில் பலிகொடுத்த ‘கறுப்பு ஜூலை’ என்பது ஈழத் தமிழன் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒன்று. அறுபது ஆண்டு உரிமைப் போராட்டம் இன்றுவரை தொடரவே செய்கிறது. இடையில் வந்த ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்தபோதும், அதனால் ஆயிரக்கணக்கில் நம் உறவுகளை இழந்தபோதும், சொந்த மண்ணில் தமக்கிருக்கும் உரிமைகளை பெற்று வாழவேண்டும் என்ற தமிழனின் உணர்வு இன்னும் சாகவில்லை என்பதை இவ்வருட ஆடிமாத நினைவு நாட்களில் இடம்பெற்ற உள்ள+ர் தேர்தலின் முடிவுகள் சுட்டி நிற்கிறன.

கோடிக்கணக்கில் செலவு செய்து, வடகிழக்கில் தேவையில்லாத ஒரு தேர்தலை நடாத்தி மூக்குடைபட்டு நிற்கிறது இலங்கை அரசு. என்ன நோக்கத்துக்காக இந்தத் தேர்தல் இலங்கை அரசால் நடாத்தப் பட்டதோ, அதன் நோக்கம் நிறைவு பெறவில்லை. அதி உச்சமான கொடுமைகள் நடந்தேறி இரண்டு வருடங்கள் கடந்துவிட்டதால், ஏற்பட்ட அழிவுகளை தமிழன் மறந்திருப்பான் என்று தப்புக் கணக்குப் போட்டது அரச தரப்பு.

அழிவுகளால் வாடி வதங்கி நிற்கும் தமிழன் அற்ப சலுகைகளுக்கும், பெய்யான வாக்குறுதிகளுக்கும், சாராயப் போத்தலுக்கும் அடிமையாகிவிடுவான் என்று நினைத்து அரச பரிவாரங்களை களத்தில் இறக்கியிருந்தார் இலங்கை அதிபர். கூடவே ஒட்டுக் குழுக்கள் புடைசூழ, அபிவிருத்திக்கு அடிக்கல் நாட்டும் போர்வையில் வடக்கை வலம்வந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனாலும் எதையுமே சாதிக்க முடியவில்லை. ஈழத் தமிழர்கள் தங்கள் உணர்வில் உறுதியாக இருந்தது தேர்தல் முடிவில் வெளிவந்தது.

‘அபிவிருத்தி...!’ என்ற சொல்லுக்கு தங்க முலாம் பூசி தேர்தலில் குதித்தது இலங்கை அரசு. ‘அரசியல் தீர்வு!’ என்ற அறுபது வருடகால அடிப்படைப் பிரச்சனையை முன்வைத்தது தமிழர் தரப்பு. முப்பது வருடகாலம் தொடர் இழப்புகளை சந்தித்தும், இன்னமும் மரத்தின் கீழும் குடிசைகளிலும் முகாம்களிலும் வாழும் நிலையிலும்கூட, பட்டினி வாழ்வு வாழ்ந்தாலும் தமது சொந்த மண்ணில் உரிமையுள்ள மனிதராய் வாழவேண்டும் என்பதே தங்கள் முடிவு என்பதை மக்கள் முதன்மைப் படுத்தியதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன

நாடி பிடித்துப் பார்த்த இந்த ஆடி மாதத் தேர்தல் முடிவுகள் சம்பந்தப்பட்ட சிலரை ஆடி அடங்க வைத்திருக்கிறது. அனியாயமாக பணத்தை கொட்டிக் கொடுத்து தோற்று விட்டோமே என்று குமுறுவது அவர்களது வார்த்தைகளில் தெரிகிறது. அவர்கள் ஒன்றை புரிந்தகொள் வேண்டும்!

எங்களது மக்களை கடந்த முப்பது ஆண்டுகளாக பட்டினியோடும், குடிசை வாழ்வோடும் வாழப் பழக்கிவிட்டவர்கள் இலங்கை அரசுகள்தான் என்பதும், அவற்றுக்கு பழக்கப் பட்டதனால்தான் அபிவிருத்தியை விடவும், தமது மண்ணில் நிம்மதியோடு தலை சாய்க்கும் உரிமை தமக்கு வேண்டும் என்பதை முதன்மைப் படுத்தி இலங்கை அரசுக்கு புரியவைத்திருக்கிறார்கள்.

முப்பது ஆண்டுகளாக பொரளாதார தடை போட்டு, வெளிநாடுகள் கொடுத்த மாவையும் சீனியையும் மட்டுமே பிச்சையாகப் போட்டு மக்களை வாட்டி வதைத்து அவர்களது உயிர்களையே துச்சமாக மதித்தவர்கள்,

சுனாமியால் தமிழினம் இழப்புகளை சந்தித்தபோது கூட, வெளிநாட்டு உதவிகள் வவுனியாவை நெருங்க முதலே பறித்து திசை திருப்பியவர்கள்,

இப்போது வடகிழக்கின் அபிவிருத்தி என்ற பெயரில் வெளிநாட்டு உதவிகளை பெற்று தேர்தலில் வெல்ல நினைத்தார்கள். எதுவுமே பலிக்கவில்லை ஈழத் தமிழனிடம்.

அரசியல் தீர்வின் மூலம் அன்னியப் படைகளின் ஆதிக்கம் இல்லாத, சம உரிமையுள்ள தீர்வைத் தந்தால், நாட்டின் அபிவிருத்தியை தமிழன் தானாகவே உயர வைப்பான் என்பது ஏனோ சிங்களவனுக்கு புரியவில்லை.

அதேவேளை, தாயகத் தமிழனிடம் கற்றுக்கொள்ள வெண்டிய பாடம் நிறையவே புலம்பெயர் தமிழனுக்கு இருக்கிறது. ஒற்றுமைப் படவேண்டும் என்ற உணர்வு மட்டுமே தமிழனை வாழவைக்கும்.

ஈழத் தமிழனைப்போல் புலம்பெயர் தமிழன் ஒன்றுபட வேண்டும்


வருடா வருடம் வருகின்ற எத்தனை சோக நாட்களை ஈழத் தமிழன் மனதில் சுமக்கின்றான்? நமது மக்களையும், மாவீரர்களையும், மாமனிதர்களையும் பறிகொடுத்த நாட்களெல்லாம் நினைவு தினங்களாகி ஈழத் தமிழனின் நாட்காட்டிகள் நிறைத்துவிட்டன.சுனாமி போன்ற இயற்கையின் கொடூரங்கள்கூட எமக்கு அழிவுகளைத் தந்து அதன் சோக நினைவுகளை பதிவு செய்துவிட்டு சென்றுள்ளன. அதுவும் ஆடி மாதம் என்றாலே 1983 இல் இலங்கை அரசினால் அன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட அதிஉச்ச பயங்கரவாதக் ‘கொலைக்களமே’ அனைவருக்கும் நினைவில் வரும்.

அதிக உயிர் உடமைகளை ஈழத் தமிழன் ஆரம்ப காலகட்டத்தில் பலிகொடுத்த ‘கறுப்பு ஜூலை’ என்பது ஈழத் தமிழன் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒன்று. அறுபது ஆண்டு உரிமைப் போராட்டம் இன்றுவரை தொடரவே செய்கிறது. இடையில் வந்த ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்தபோதும், அதனால் ஆயிரக்கணக்கில் நம் உறவுகளை இழந்தபோதும், சொந்த மண்ணில் தமக்கிருக்கும் உரிமைகளை பெற்று வாழவேண்டும் என்ற தமிழனின் உணர்வு இன்னும் சாகவில்லை என்பதை இவ்வருட ஆடிமாத நினைவு நாட்களில் இடம்பெற்ற உள்ள+ர் தேர்தலின் முடிவுகள் சுட்டி நிற்கிறன.

கோடிக்கணக்கில் செலவு செய்து, வடகிழக்கில் தேவையில்லாத ஒரு தேர்தலை நடாத்தி மூக்குடைபட்டு நிற்கிறது இலங்கை அரசு. என்ன நோக்கத்துக்காக இந்தத் தேர்தல் இலங்கை அரசால் நடாத்தப் பட்டதோ, அதன் நோக்கம் நிறைவு பெறவில்லை. அதி உச்சமான கொடுமைகள் நடந்தேறி இரண்டு வருடங்கள் கடந்துவிட்டதால், ஏற்பட்ட அழிவுகளை தமிழன் மறந்திருப்பான் என்று தப்புக் கணக்குப் போட்டது அரச தரப்பு.

அழிவுகளால் வாடி வதங்கி நிற்கும் தமிழன் அற்ப சலுகைகளுக்கும், பெய்யான வாக்குறுதிகளுக்கும், சாராயப் போத்தலுக்கும் அடிமையாகிவிடுவான் என்று நினைத்து அரச பரிவாரங்களை களத்தில் இறக்கியிருந்தார் இலங்கை அதிபர். கூடவே ஒட்டுக் குழுக்கள் புடைசூழ, அபிவிருத்திக்கு அடிக்கல் நாட்டும் போர்வையில் வடக்கை வலம்வந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனாலும் எதையுமே சாதிக்க முடியவில்லை. ஈழத் தமிழர்கள் தங்கள் உணர்வில் உறுதியாக இருந்தது தேர்தல் முடிவில் வெளிவந்தது.

‘அபிவிருத்தி...!’ என்ற சொல்லுக்கு தங்க முலாம் பூசி தேர்தலில் குதித்தது இலங்கை அரசு. ‘அரசியல் தீர்வு!’ என்ற அறுபது வருடகால அடிப்படைப் பிரச்சனையை முன்வைத்தது தமிழர் தரப்பு. முப்பது வருடகாலம் தொடர் இழப்புகளை சந்தித்தும், இன்னமும் மரத்தின் கீழும் குடிசைகளிலும் முகாம்களிலும் வாழும் நிலையிலும்கூட, பட்டினி வாழ்வு வாழ்ந்தாலும் தமது சொந்த மண்ணில் உரிமையுள்ள மனிதராய் வாழவேண்டும் என்பதே தங்கள் முடிவு என்பதை மக்கள் முதன்மைப் படுத்தியதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன

நாடி பிடித்துப் பார்த்த இந்த ஆடி மாதத் தேர்தல் முடிவுகள் சம்பந்தப்பட்ட சிலரை ஆடி அடங்க வைத்திருக்கிறது. அனியாயமாக பணத்தை கொட்டிக் கொடுத்து தோற்று விட்டோமே என்று குமுறுவது அவர்களது வார்த்தைகளில் தெரிகிறது. அவர்கள் ஒன்றை புரிந்தகொள் வேண்டும்!

எங்களது மக்களை கடந்த முப்பது ஆண்டுகளாக பட்டினியோடும், குடிசை வாழ்வோடும் வாழப் பழக்கிவிட்டவர்கள் இலங்கை அரசுகள்தான் என்பதும், அவற்றுக்கு பழக்கப் பட்டதனால்தான் அபிவிருத்தியை விடவும், தமது மண்ணில் நிம்மதியோடு தலை சாய்க்கும் உரிமை தமக்கு வேண்டும் என்பதை முதன்மைப் படுத்தி இலங்கை அரசுக்கு புரியவைத்திருக்கிறார்கள்.

முப்பது ஆண்டுகளாக பொரளாதார தடை போட்டு, வெளிநாடுகள் கொடுத்த மாவையும் சீனியையும் மட்டுமே பிச்சையாகப் போட்டு மக்களை வாட்டி வதைத்து அவர்களது உயிர்களையே துச்சமாக மதித்தவர்கள்,

சுனாமியால் தமிழினம் இழப்புகளை சந்தித்தபோது கூட, வெளிநாட்டு உதவிகள் வவுனியாவை நெருங்க முதலே பறித்து திசை திருப்பியவர்கள்,

இப்போது வடகிழக்கின் அபிவிருத்தி என்ற பெயரில் வெளிநாட்டு உதவிகளை பெற்று தேர்தலில் வெல்ல நினைத்தார்கள். எதுவுமே பலிக்கவில்லை ஈழத் தமிழனிடம்.

அரசியல் தீர்வின் மூலம் அன்னியப் படைகளின் ஆதிக்கம் இல்லாத, சம உரிமையுள்ள தீர்வைத் தந்தால், நாட்டின் அபிவிருத்தியை தமிழன் தானாகவே உயர வைப்பான் என்பது ஏனோ சிங்களவனுக்கு புரியவில்லை.

அதேவேளை, தாயகத் தமிழனிடம் கற்றுக்கொள்ள வெண்டிய பாடம் நிறையவே புலம்பெயர் தமிழனுக்கு இருக்கிறது. ஒற்றுமைப் படவேண்டும் என்ற உணர்வு மட்டுமே தமிழனை வாழவைக்கும்.

தமிழர்கள் வாழும் பகுதிகள் அறிவிக்கப்படாத தமிழீழம்.தினமணி நாளேடு


இந்த வெற்றி சொல்லும் அறிவிப்புகள் பல. இலங்கையில் தமிழர்களுக்கு தமிழீழம் அளிக்கப்படாவிட்டாலும், தமிழர்கள் வாழும் பகுதிகள் அறிவிக்கப்படாத தமிழீழமாகத்தான் நீடிக்கும். இதை யாராலும் மாற்றிவிட முடியாது என்பது அதில் முதன்மையானது.

இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்த வெளியாகும் 'தினமணி' நாளேடு 28-07-11ம் நாள் இதழின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

அதன் முழுவிபரமாவது,

வாக்குப் புரட்சி!

மக்களாட்சியில் வாக்குச் சீட்டுகள் மக்களின் மனசாட்சியாக இருக்கின்றன என்பதற்கு இலங்கை உள்ளாட்சித் தேர்தல் மற்றொருமுறை உலகுக்குக் கட்டியம் கூறியுள்ளது.


இலங்கை உள்ளாட்சித் தேர்தலில், அந்தத் தீவு முழுவதிலும் 65 மாகாணங்களில் போட்டியிட்ட ராஜபட்ச சார்ந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தம் 45 இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும், தமிழர்கள் வசிப்பிடமாகிய இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள 6 மாகாணங்களில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு 18 இடங்களில் வெற்றிபெற்றிருப்பதும், புலிகள் இயக்கத்துக்குக் கொள்கையளவில் மாறுபட்டிருந்த தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 2 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதும், ராஜபட்ச மீதான கோபத்தை, இலங்கைத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக உலகுக்கு அறிவித்துவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது.


தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குங்கள் என்று ராஜபட்சவுக்கு அறிவுரைகூறும் வகையில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, என்னுடைய தகப்பனார் பண்டாரநாயக தலைமையிலான அரசு உள்பட அனைத்து அரசுகளுமே தமிழர்களின் கோரிக்கைகளை முறையாகப் பரிசீலித்து அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால்தான் இந்தப் பிரச்னை இப்படிப் பூதாகரமாக வளர்ந்து இலங்கையை 30 ஆண்டுகளுக்கு நெருக்கடியில் தள்ளியது என்று கூறியிருப்பது, இலங்கைவாழ் தமிழர்களின் பலத்தையும் தமிழர் அரசியலையும் புரிந்துகொள்ளும் சூழலை இத் தேர்தல் வெற்றி உருவாக்கியுள்ளது என்பதை உணர்த்துகிறது.


தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதால், நம் வலிமை குறைந்துவிடாது. மாறாக, அவர்களது உழைப்பு, திறமை, அறிவாற்றலால் இலங்கைக்கு எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்படும் என்று சந்திரிகா இன்று கூறுவதை, தமிழருக்கு ஆதரவுத் தெரிவித்துவரும் சிங்களர்களும் கூறிவருகிறார்கள்.


அற்றை நாள் முதலாக இலங்கையின் வளர்ச்சி, தமிழர்கள் சார்ந்ததாகவே இருந்துவந்தது. தமிழரின் இந்த ஆற்றல் மீதும், அறிவுப்புலத்தின் மீதும் சிங்களர்கள் கொண்ட பொறாமையின் விதைகள்தான் கடந்த 30 ஆண்டுகளாக சிங்கள பேரினவாதக் கொள்கைக்கு இடமளித்து, இலங்கையின் பொருளாதாரத்தைச் சிதைத்தது. இப்போதுதான் அவர்களுக்குப் புரிகிறது, தமிழர்கள் நம்முடன் இருந்திருந்தால் பெரும் வளர்ச்சியைப் பெற்றிருப்போம் என்று!


இந்த வெற்றி சொல்லும் அறிவிப்புகள் பல. இலங்கையில் தமிழர்களுக்கு தமிழீழம் அளிக்கப்படாவிட்டாலும், தமிழர்கள் வாழும் பகுதிகள் அறிவிக்கப்படாத தமிழீழமாகத்தான் நீடிக்கும். இதை யாராலும் மாற்றிவிட முடியாது என்பது அதில் முதன்மையானது.


இலங்கை அரசியலில் தமிழர்களின் பங்கு இல்லாமல், தமிழர்களைத் தவிர்த்துவிட்டு எந்தவோர் ஆட்சியாளரும் எதையும் செய்துவிட முடியாது. எந்தவொரு கட்சியும் இலங்கையில் முழுமையான ஆட்சி அதிகாரத்தைப் பெறவேண்டுமானால் தமிழர் ஆதரவு கட்டாயமாகத் தேவை.


அரசியல் சக்தியாக மாறும் முடிவை, தேர்தல் மூலம் ஆளும்கட்சிக்கு நெருக்கடிதரும் அரசியல் தீர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது இறுக்கத்தைத் தளர்த்தி, நிலைப்பாட்டை மாற்றியமைத்துக்கொண்டிருந்தால் ஒருவேளை பல இழப்புகளையும், பின்னடைவையும் தமிழீழப் போராளிகள் தவிர்த்திருக்கக் கூடும் என்கிற சிந்தனைக்கு இடமளித்திருக்கிறது இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள். இலங்கைத் தமிழர் இன்று அரசியல் களத்தில் கொள்கையளவில் ஒன்றுபட்டு நின்றபோதிலும் அவர்களை வழிநடத்த பலமான இயக்கமோ, தலைமையோ இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறதே என்கிற ஆதங்கம் மேலெழுகிறது.


தமிழர் பகுதியில் சிங்களர்களைக் குடியமர்த்தி, சிங்களத் தமிழர் கலப்பினத்தை உருவாக்கி, தமிழர் குரலை ஒடுக்கிவிட முடியும் என்கிற இலங்கை அரசின் எண்ணத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் மண் விழுந்திருக்கிறது என்பது திண்ணம். இருபது ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு, துன்பப்பட்டு மடிந்து மடிந்து ஒரு தஞ்சமும் இல்லாமல் மடியும் நிலைமைக்குத் தள்ளப்பட்டபோதும், மீண்டும் எழுந்துநிற்கும் தமிழர்கள் மத்தியில் ஊடுருவிகளாகக் குடியேற சிங்களர்கள் இனிமேல் ஒரு முறைக்கு நான்கு முறை யோசிப்பார்கள். இனிமேல் சிங்களர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கைகளைத் தொடர இலங்கை அரசும் துணிவு கொள்ளுமா என்பதேகூட சந்தேகம்தான்.


இந்த வெற்றியை இலங்கையின் ஆளும்கட்சியோ அல்லது எதிர்க்கட்சியும்கூட தாங்கிக் கொள்ளாது. இந்த வெற்றியைச் சிதைப்பதற்கு தமிழர் மத்தியில் புதிய புதிய கட்சிகளை உருவாக்கி, வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளும் வாய்ப்பும் அதிகம். இதற்காக எத்தனை கோடி கொடுத்தும், புதிய தமிழர் அமைப்புகளை உருவாக்க சிங்கள அமைப்புகளும் உதவக்கூடும்.


இத்தனை காலம் சிந்திய ரத்தத்தின் நிறம் மாறாத மண்ணுக்காகவும், தாங்கள் இழக்க நேர்ந்த தமிழர் உயிர்களுக்காகவும், இப்போதும்கூட காணாதோர் பட்டியலில் உள்ள 1.40 லட்சம் தமிழர்களைக் கருத்தில் கொண்டும், அந்த மண்ணில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சி மட்டுமே தனித்து நிற்கவும், அந்த அரசியல் பலத்தின் மூலம் இலங்கைவாழ் தமிழர்கள் தங்களது நியாயமான சம உரிமையைப் பெறவும் உறுதிபூண வேண்டும்.


இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்த கட்சிகளுக்கு அதைப்பற்றி யோசிக்கவே நேரமில்லாதபடி காராகிரகக் கவலைகள் இருக்கின்றன. அதற்குப் பதிலாக இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கையின் வடபகுதியில் குடியமரச் செய்து, தமிழர்களின் வாக்கு வங்கியை மேலும் வலுப்படுத்த முயற்சிப்பதைப் பற்றி ஏன் யோசிக்கக் கூடாது?


இலங்கையில் குடியரசுத் தலைவர் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சிமுறை அமலில் இருக்கும்வரை, சிறுபான்மைத் தமிழர்களின் நலன் பேணப்படாது. மீண்டும் நாடாளுமன்ற ஆட்சிமுறைக்கு இலங்கையின் அரசியல் சட்டம் மாற்றப்பட்டால் மட்டுமே, தமிழர்களுக்கு மரியாதையும், ஆட்சியில் உரிய பங்கும், தமிழர்கள் வாழும் பகுதியில் வளர்ச்சியும் உறுதிப்படுத்தப்படும். அதற்கு யார் குரல் கொடுக்கப் போவது என்பதுதான் கேள்வி.

பெண்களை வைத்தியசாலையில் வைத்து கற்பழித்த இராணுவம்: அதிர்ச்சி ஆதாரம் ! (video in)


இலங்கை ராணுவத்தின் 58 வது பிரிவில் கடமையாற்றிய உயரதிகாரியான பெனாண்டோ ஏன்பவர் தறோது ஒரு வெளிநட்டில் சரணடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிற்து. இறுதி நேரத்தில் நடந்த போரில் இரணுவம் செய்த அட்டூளியங்களை அவர் புட்டுப் புட்டு வைக்கிறர். இராணுவத்தின் தேசிய அடையள அட்டையோடு தன்னை நிரூபிக்கும் அவர், சமீபத்தில் சனல் 4 தொலைக்காட்சிக்கு முகம் மறைக்கப்பட்ட நிலையில் நேர்கணல் ஒன்றையும் வழங்கியிருந்தார். காயப்பட்டு வைத்தியசலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்கள் பலரை இலங்கை இராணுவம் கற்பழித்ததாக அவர் தெரிவித்துள்ளார். தான் சொந்தக் கண்களால் கண்டதாகக் கூறும் இவர் புதுமாத்தளான் பிடிபடும்போது அன்றய தினம் மட்டும் சுமார் 1,500 பொதுமக்கள் இறந்ததாகத் தெரிவித்துள்ளார்.

போரில் ஈடுபட்ட 58 வது படைப்பிரிவில் உள்ள படையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்ததாகவும், பெண்களைக் கெடுத்து வல்லுறவில் ஈடுபட்டது மட்டுமல்லாது, அவர்களின் மார்பகங்களை வெட்டி எறிந்ததாகவும், பல சிறுவர்களைச் சுட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். காட்டு மிராண்டிகள் பொலச் செயல்பட்ட இவர்கள் காணும் இடத்தில் பெற்றொர்களுக்கு முன்னர் அவர்களின் பிள்ளைகளிக் கற்பழித்ததாகவும் தெரிவித்துள்ளர். பல இடங்களில் கணப்பட்ட உடலங்களில் தலை துண்டிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கான சரியான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும் பல நூற்றுக்கணக்கான உடலங்கள் தலையின்றி முண்டமாக நிலத்தில் கிடந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இறுதியாகப் புலிகள் 1 கிலேமீட்டர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டவேளை, 58 வது படைபிரிவின் கட்டளைத் தளபதி ஷர்வேந்திர சில்வாவுடன் தொடர்புகோண்ட கோத்தபாய, அந்தச் சின்னத் துண்டு இடத்தைப் பிடிக்க என்னவேண்டும் என்றாலும் செய்யுங்கள் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சரணடையும் புலிகளின் உறுப்பினர்களில் எவர் எவரை இராணுவம் சுடவேண்டும் என்பதன் பட்டியல் கூட கோத்தபாயவால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிற்து. புலிகளின் சில சிரேஷ்ட தலைவர்களின் புதுத் தோற்றப் படங்களும் 58 வது படைப்பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. போரில் சுமார் 50,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த பெனாண்டோ என்ற அதிகாரி, பலரது உடலங்களை அடகம் செய்ய முடியாத இராணுவத்தினர், அதன் மேல் மண்போட்டு மூடியதை தான் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பிணங்களை அப்படியே நிலத்தில்போட்டு, அதன்மேல் புள்டோசர் கொண்டு மண்னை வாரி, அணைபோலப் போட்டு மூடியதாகவும் தெரிவித்த அவர், அவ்விடமே பிண வாடையோடு இருந்தாகவும். அவ்விடத்துக்கு யாரும் செல்லமுடியாத அளவு பிண வாடை காணப்பட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். புலிகளின் அரசியல் தலைவர்கள் சரணடைவது மகிந்தருக்கு அறிவிக்கப்பட்டதாகவும், இருந்தாலும் கோத்தபாய உத்தரவின் பேரில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதகவும் அவர் தெரிவித்துள்ளார். அக் கால கட்டத்தில் எவரையும் சுடும் அதிகாரம் தமக்கு இருப்பதா இலங்கை இராணுவம் எண்ணி காட்டுமிராண்டித்தனமகச் செயல்பட்டதாக சொல்லியுள்ள அவர், இரணுவம் ஒரு மனிதநேயம் அற்ற காட்டுவாசிகள் போலச் செயல்பட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். இவரது பதிவுகள் ஆங்கிலத்தில் பகுதி 1 மற்றும் பகுதி 2 என வெளியாகியுள்ளது.

பிரித்தானியா கோத்தாபயவின் கோரிக்கையை நிராகரித்தது


ஊடகங்களின் உள்ளடக்கங்களை பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை என்று கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் தெரிவித்துள்ளது. பொறுப்பற்ற காணொளியை ஒளிபரப்பிய சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே பிரித்தானியத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சனல் 4 ஒரு சுதந்திரமான ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு ஊடகம். ஒவ்வொரு ஜனநாயகத்திலும் சுதந்திர ஊடகம் முக்கியமானது என்று பிரித்தானியா நம்புகிறது.

ஊடக நிறுவனங்கள் பொருத்தமான ஒழுக்க மற்றும் சட்ட ரீதியான தராதரங்களை பேணுவதை உறுதிப்படுத்துவதற்கான வலுவான பொறிமுறையை பிரித்தானியா கொண்டுள்ளது.

ஆனால் ஊடகங்களின் உள்ளடக்கங்களை பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை" என்றும் பிரித்தானியத் தூதரகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இறுதி நாட்களும் எனது பயணமும் – 12

என் தலைமாட்டில் அமர்க்களப்படுத்திக்கொண்டிருந்தவர்கள் தண்ணீரையும் உணவையும் பற்றியே கதைத்தார்கள்.

‘அதை இதுக்க வை. மற்றதை என்ர பேக்குக்குள வை. போத்தில் தெரியாமல் மறைச்சு வையப்பா. பிறகு கண்டதுகளும் வந்து தண்ணி கேக்குங்கள்’

‘அன்ரி அந்த போத்தில என்னட்ட தாங்க அன்ரி. நான் என்ர பேக்குக்குள்ள வைக்கிறன்’ என்றெல்லாம் கதைகள். தண்ணீருக்கு மணம் குணமெல்லாம் இல்லைத்தான் என்றாலும் தான் போத்தில் போத்திலாக அருகில் இருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்திவிட்டது.

எனக்கு தாகம் தாகமாய் தவித்தது. தண்ணீரும் உணவும் சேகரித்துக்கொண்டு வந்தவனாகத்தான் இருக்கவேண்டும். அவன் பையொன்றின்மீது சரிந்தபோது அவனது தலை என் தலையில் இடித்தது.

‘ஓ யாரோ தெரியேல்லை’ என்று முணுமுணுத்தபடி எழுந்திருந்து உற்றுப் பார்த்தான். பின்பு சற்று தள்ளிச் சரிந்தான். எனினும் எங்களது தலைகளுக்கு இடையே ஒரு சாண் இடைவெளிதான் இருந்தது. அவன் வயிறுமுட்ட தின்றிருக்கிறான் என்பதை அவனது ஏப்பம் பறைசாற்றியது.

‘அந்த தண்ணி போத்தலை ஒருக்கா தாப்பா’ என்றான். அவன் நீர் அருந்தும் ஒலி தொண்டையில் கடகடத்தது. மீண்டும் சரிந்துகொண்டான்.

என்னருகே இன்னமும்தான் அந்த வயோதிப தம்பதி இருந்துகொண்டிருந்தது. இருட்டிவிட்ட போதும், பொழுது இரவின் நடுப்பகுதியாக இருந்தபோதும், ஏன் குந்திக்கொண்டு இருக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.

‘அப்பா நான் உங்கட பாக்கில தலைய வைச்சு படுக்கட்டுமா அப்பா’ என்றேன் நயமாக.

‘ஓம் பிள்ள படு படு’ என்றார் அந்த வயோதிபரும் ஆதரவாக. என் பையை தூக்கி பிடறிக்கு மறைப்பாக வைத்துக்கொண்டு அப்பாவும் அம்மாவும் இருந்த பக்கமாக சரிந்து கண்களை மூடிக்கொண்டேன்.

அந்தநேரம் எனக்கொரு சிறிய பாதுகாப்பு உணர்வு ஏற்பட்டது. மனதுக்கு சற்று ஆறுதலாகவும் இருந்தது. இதே அப்பாவையும் அம்மாவையும் இன்னொரு தடவை கண்டால்கூட இவர்கள்தான் என்று இனங்கண்டு கொள்வேனா? இல்லை. ஏனெனில் அவர்கள் தோற்றத்தால் என்னில் எந்த நினைவுப் பதிவையும் ஏற்படுத்தவில்லை. மிகமிக மங்கலாகத்தான் என் நினைவில் அவர்களது தோற்றம் பதிந்துள்ளது. என்றாலும் அவர்கள் தந்த இந்த ஆதரவு உணர்வை என்றைக்குமே என்னால் மறக்க முடியாது.

அவர்கள் யாருக்காக காத்திருக்கிறார்களோ? அவர்கள் யாரை நம்பி வந்தார்களோ? அந்த வயோதிபர்களை தாங்குவதற்கு போகுமிடத்தில் யாராவது இருப்பார்களோ என்னவோ? என்றெல்லாம் விடைதேட முயாத வினாக்களுடன் அப்படியே அயர்ந்து உறங்கிவிட்டேன்.

எவ்வளவுநேரம் உறங்கினேன் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் நல்ல உறக்கம். நீண்ட நாட்களுக்குப்பின்பு வெடியோசைகள் உலுப்பியெழுப்பாத ஒரு உறக்கம்.

விழிப்பு நிலையை அடைந்தபோதும் முகங்களை அடையாளம்காணும் அளவுக்கு வெளிச்சம் போதவில்லை.நள்ளிரவு தாண்டிய பொழுதா அல்லது அதிகாலையா என்று எனக்கு இனங்காணத் தெரியவில்லை.

வயிறு பயங்கரமாய் பிராண்டியது. நாக்கு மடமடப்பது போன்ற உணர்வு. தண்ணீர் குடித்தே தீரவேண்டும் என்றிருந்தது. என் தலைமாட்டில் இருந்த குடும்பம் இன்னமும் கலகலத்துக்கொண்டுதான் இருந்தது. அவர்களது பேச்சில் எந்த கவலையுமே தென்படவில்லை.

‘அண்ண, தண்ணி கொஞ்சம் தாறிங்களா?’ என்று எழுந்தமானத்தில் கேட்டுவிட்டேன். தருவான் என்ற நப்பாசையில்தான் கேட்டேன். அவனோ தன்பாட்டில் இருந்தான் ஒன்றுமே விளங்காதவனைப்போல அல்லது நான் அவனை கேட்கவில்லை என்பதைப்போல. எனக்கு சங்கடமாகத்தான் இருந்தது. முன்பின் அறியாத அவர்கள் எனக்கு உதவுவார்கள் என்று நான் எப்படி எதிர்பார்க்க முடியும்?

‘நீ யார்? உனக்கு எதுக்காக நான் தண்ணி தரணும்?’ என்று நாகரீகமோ மனச்சாட்சியோ இல்லாமல் அவன் தாறுமாறாக சத்தம்போட்டுவிட்டால்? அப்படி நடந்துகொள்ளக்கூடியவர்களும் இருக்கிறார்கள்தானே. இவர்களும் அப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தால்? சுயநலம்மிக்கவர்களாகத்தான் இருப்பார்கள் என்று அவர்களது பேச்சே சொல்கிறதே.

சாமத்தில்கூட தாகம் ஏற்படுமா? அதுவும் இத்தனை தவிப்பாய்? உச்சிவெய்யிலில் நிற்பதைப்போல அந்த இரவிலும் தண்ணீருக்காக ஏங்கினேன். மெதுவாக எழுந்து அமர்ந்துகொண்டேன். தலைமாட்டில் கிடந்த அவன் கேட்டான்,

‘அக்கா நீங்க இயக்கமோ?’

‘தண்ணி கொஞ்சம் தாறிங்களா? என்றேன்.

‘உந்த பொம்பிளயள் நித்திரையா போகட்டும். இப்ப கேட்டால் தறாளவை.’ என்றான்.

‘ஒரு மூடித்தண்ணி காணும். நாக்கை மட்டும் நனைக்கத்தான்’ என்றேன் என்னையும் அறியாத கெஞ்சலாய்.

‘ம். பிறகு எடுத்து தாறன். அதுசரி நீங்க இயக்கமோ?’

‘ம்’ என்றேன்.

‘இயக்கம்விட்ட பெரிய பிழை என்னெண்டால் கட்டாயமாய் ஆக்களை பிடிச்சதுதான். கடைசில படுமோசமாய் நடந்துகொண்டார்கள்’ என்று அவன் பிரசங்கமே பண்ண தொடங்கிவிட்டான்.

இலட்சக்கணக்கான மக்கள் பசியோடும் தாகத்தோடும் கிடக்கும்போது இவன் என்னடா என்றால் ஒரு சொல்லுக்குக்கூட அர்த்தம்கெட்ட பிரசங்கம் செய்கிறானே.

எனக்கு அந்த தடியன்மீது எரிச்சலாய் இருந்தது. போத்தில் போத்திலாய் தண்ணீரை வைத்துக்கொண்டு ஒரு மூடியில் தரக்கூடியளவு சொட்டுத்தண்ணீரைக்கூட தாகத்தோடு தவிப்பவனுக்கு ஈய விரும்பாத இவனெல்லாம் போராட்டத்திற்கு எப்படிப்பட்ட பங்களிப்பை செய்திருப்பான்.

மனிதநேயம் அற்றவன்தான் இவனென்று சில கணங்களிலேயே புரிந்துவிட முடிகிறது. தாய்நாட்டுக்காக தம்மை தேய்த்தவர்களிடம்போய் போராளிகளைப்பற்றி வசைபாடி கொண்டிருக்கிறானே. விமர்சிப்பது மட்டுமா?

‘அப்ப உங்கட ஊர் எது?’

‘வீட்டுக்காரர் போட்டினமோ?’

‘நீங்க எத்தினையாம் ஆண்டு காயப்பட்டிங்க? எத்தினபேருக்கு இப்ப கைகால் இல்லாமல் போட்டுது. கை கால் எல்லாம் இல்லாட்டி கஸ்ரம்தான் என்ன?’

என்ற அவனுடைய தொடர்ச்சியான கேள்விகளாலும் விளக்கங்களாலும் என்னுள் எழுந்த கோபத்திற்கு அவனை அறைந்தால் என்ன என்றிருந்தது.

‘எனக்கு ஏலாமல் கிடக்கண்ண. என்னட்ட கதை கேட்காதிங்க’ என்றேன் பொறுமையாக.

‘என்னப்பா அங்க யாரோட அலட்டிக்கொண்டு கிடக்கிறியள். ஆமிக்காரர் தண்ணிப்போத்தல் குடுக்கிறாங்களாம். போய் அஞ்சாறு வாங்கி வாங்களன்’ என்று கட்டளை இட்டது பெண் குரல்.

அது அவனுடைய மனைவியாகத்தான் இருக்கவேண்டும். அவளின் குரல் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.

‘சும்மா இரப்பா. இருக்கிறது நமக்கு காணும்தானே.’ என்று குரலை தாழ்த்தி இரைந்தான் அவன்.

‘நீங்கள் என்னப்பா. சும்மாதானே குடுக்கிறான். நாலைஞ்ச வாங்கியந்தால் நூறு நூற்றைம்பதுக்கு விக்கலாமெல்லே’ என்று அவள் நியாயம் சொன்னாள்.

‘அப்ப நீ போய் வாங்கி வா. என்னைய கொஞ்சநேரம் கிடக்கவிடு’ என்று அவன் உறுமினான். பின்பு புறுபுறுக்கத் தொடங்கினான்.

‘இருக்கிற இடத்துக்கு எல்லாம் வருகிதுதானே. போய் அடிபட்டு விழுந்தடிச்சு வாங்கிறவனுக்குதானே அதில உள்ள கஸ்ரம் தெரியும்.’ என்று அவனும்

‘இந்த மனுசனுக்கு ஒண்டும் தெரியாது. பிழைக்கத்தெரியாத மனுசன்’ என்றெல்லாம் ஏதேதோ சொல்லி அவளும் இரைந்தாள்.

எனக்கு சிரிப்பும் அழுகையும் சேர்ந்து வந்தது. என்ன மனிதர்களோ என்ன குணங்களோ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன். ஒரு போத்தில் தண்ணீர் ஐந்நூறு ரூபா என்றாலும் நான் வாங்கத் தயாராகத்தான் இருந்தேன். ஆனால் அவனிடம் பேச எனக்கு துளியும் விருப்பமில்லை. அவனிடம் வாய் திறப்பதில்லை என்ற முடிவோடு இருந்து விட்டேன்.

தாகம் என்னை பயங்கரமாய் இம்சித்தது. இப்படித்தானே அந்தப்பையன்களுக்கும் இருக்கும். அவர்கள் அன்மையில் காயமடைந்தவர்கள் என்பதால் என்னைவிட அதிகமாக துன்பப்படுவார்கள்.

இப்போது என்னிடம் ஒரு போத்தில் தண்ணீர் இருந்தால் அவர்களுக்கும் கொடுப்பேனே என்று வெறும் நினைவுகளோடு ஏங்கினேன்.

சற்று நேரத்தின் பின் தலை மாட்டில் கிடந்த குண்டன் கதை கேட்டான். நான் செவிடு போல இருந்து விட்டேன். எனக்குள் ஒரே எரிச்சலும் குமைச்சலுமாக இருந்தது. அவ்விடத்தில் இருக்கவே பிடிக்கவில்லை. எழுந்து குந்திக்கொண்டேன்.

“என்னக்கா நித்திரை வரேல்லயோ?’ என்று கதையை வளர்க்க எத்தனித்தவனுக்கு இடமளிக்காமல் எழுந்து நின்றேன். சுற்றயலை பார்த்தேன். மிக மங்கலாய் தான் வெளிச்சமிருந்தது.

மின் விளக்குகள் ஒளிர்ந்த இடங்கள் மட்டும் பளீரென தெரிந்தன. பலியிடப்பட்ட பிணங்களைப்போல மக்கள் தாறுமாறாக கிடந்தார்கள். இந்த வேளையில் தண்ணீர் தொட்டிக்குச் சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும். எப்படியாவது வயிறு நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். குடித்தேதீர வேண்டும். பையை தூக்கி தோளில் மாட்டிக்கொண்டேன்.

‘என்னக்கா போகப்போறிங்களோ?’ என்று அந்த குண்டன் மீண்டும் கேட்டான். நான் அருகிருந்த அந்த வயோதிப தம்பதியரிடம் சொன்னேன்

“அம்மா அப்பா போயிட்டு வாறன். நான் தண்ணி தேடப்போறன். எனக்கு ஆறுதலாய் இருந்ததுக்கு உங்களுக்கு நன்றி’ என்று சொல்லி விட்டு மெதுவாக நடக்கமுற்பட்டேன்.

கால்கள் பாரமாய் கனத்தன. என் கால்களே எனக்கு அத்தனை பாரமாய் இருக்கும் என்று எனக்கு அதுவரை தெரியாது. என்னால் சீராக நடக்க முடியவில்லை. இலேசாக தலை சுற்றியது.

குறுக்குமறுக்காக மக்கள் படுத்துக்கிடந்தார்கள். கால் வைத்து நடக்க இடமே போதவில்லை. நினைவு வந்தவளாய் திரும்பிப் பார்த்தேன். என் கால்மாட்டில் கிடந்த பையன்களையும் கானவில்லை. போய்விட்டார்கள் போலும்.

மிககவனத்துடன் மற்றவர்களின் கால்களிளோ தலைகளிலோ இடறுப்பட்டு விடாமல் நடந்தேன். எங்கே செல்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. தன்ணீர் எங்கே கிடைக்குமென்றும் தெரியாது.

வரிசையாய் மின்குமிழ்கள் எரிந்த இடத்தை நோக்கி நடந்தேன். அருகே சென்றபோதுதான் அந்த மின்குமிழ் வரிசை கம்பி வேலி என்பதை அறிந்தேன். அடடா வேலியருகே வந்து விட்டேனே. அப்புறத்தில் படையினர் அல்லவா நிற்பார்கள் என்ற உண்மை அப்போதுதான் உரைத்தது. விர்ரெனக் கிளம்பிய எச்சரிக்கை உணர்வு என் கால்களை வேகமாக திரும்பவைத்தன.

பயணம் தொடரும்…

இறுதி நாட்களும் எனது பயணமும் – 11

ஆனதி
ஈழநேசன்

உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி தொடரும்: தா.பா

உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி தொடரும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:

தமிழகம் முழுவதும், 48 லட்சம் குடும்பங்கள், சொந்த நிலமின்றி, அரசு புறம்போக்கு நிலங்கள், சாலையோரங்கள், நீர்நிலை பகுதிகளில் குடியிருப்புகள் அமைத்து குடியிருந்து வருகின்றன. இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும், அதில் வீடுகள் கட்டிக் கொடுக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழக மீனவர்கள், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி, உயிரையும், உடைமைகளையும் இழந்து வருகின்றனர். இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்பதன் மூலம் மட்டுமே, இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும். இதற்கான நடவடிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலிலும், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி தொடரும். தேர்தலுக்குப் பின், உள்ளாட்சி அமைப்புகளில், வளர்ச்சிப் பணிகளுக்காக செலவிடும் முழு அதிகாரத்தையும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மட்டுமே வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சூசையின் குடும்பத்தினரை கொன்றிருக்க முடியும் கோத்தாபய ராஜபக்ச


பொறுப்பற்ற காணொலிகளை வெளியிடும் சனல்-4 தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

சரணடைய வரும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு, கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்ததாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொலி குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.

புதன்கிழமை இரவு சனல்-4 ஒளிபரப்பிய புதிய காணொலியில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இருவர், சரணடையும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு கோத்தாபய ராஜபக்சவும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும், சிறிலங்காப் படையினருக்கு உத்தரவிட்டிருந்ததாக கூறியிருந்தனர்.

இது ஒரு பொய்யான பரப்புரை என்று கூறியு்ள்ள கோத்தாபய ராஜபக்ச, புலிகள் சரணடைவது தொடர்பாக ஐ.நாவின் பிரதிநிதி நீல் புனே தகவல் எதையும் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போரின் இறுதிநாட்களில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மதிப்பீடு செய்துள்ளதாக அவரால் எவ்வாறு கூற முடியும் என்றும் கோத்தாபய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் பதிவுகளின் படி 300,000 பேரே அங்கிருந்தனர். ஆனால் போரின் முடிவில 294,000 பேர் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏனையவர் புலிகள் என்றும் அவர்கள் போரில் கொல்லப்பட்டு விட்டனர் என்றும் சிலர் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் தப்பிவிட்டனர் என்றும் கூறியுள்ள கோத்தாபய ராஜபக்ச, சூசை, தமிழ்ச்செல்வன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தாம் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்ற போது சூசையின் குடும்பத்தினர் பிடிபட்டனர் என்றும், கடற்படையினர் அனைவரினதும் மரணங்களுக்கு காரணமான சூசையின் குடும்பத்தினரை தம்மால் கொன்றிருக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை இந்த காணொலியில் தோன்றும் இருவரும் சிறிலங்கா படையினர் அல்ல என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல கூறியுள்ளார்.

சனல்- தொலைக்காட்சி முன்னைய தமது காணொலிகளை நியாயப்படுத்தவே இதை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது அதிகாரிகளோ படையினரோ வெளிநாட்டு ஊடகம் எதற்கும் செவ்வியோ அல்லது குரல் பதிவையோ வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள மேஜர் ஜெனரல் மெடவெல, சனல்- 4 தொலைக்காட்சியில் தோன்றும் இருவரும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவர்களே அல்ல என்றும் கூறியுள்ளார்.

சிறிலங்கா படையினருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் புலம்பெயர்ந்தவர்கள் மேற்கொள்ளும் பொய்யான பரப்புரை இது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பிளேபாய் தந்த ரூ 7.5 கோடி 'டாப்லஸ் ஆஃபர்': மறுத்தார் தீபிகா


பாலிவுட் பிரபலங்களுக்கு அடிக்கடி மெகா ஆஃபர்கள் வரும்... எதற்காக தெரியுமா... அரை நிர்வாணம் அல்லது முக்கால் நிர்வாணத்துடன் ஆட்டம் போட / போஸ் கொடுக்க. இதற்கு பல கோடிகளை அள்ளித் தரவும் வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் தயாராக இருப்பார்கள்.

ஏற்கெனவே ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், ப்ரியங்கா சோப்ரா போன்றவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு வந்ததும் அவர்கள் மறுப்பு தெரிவித்து அது செய்தியாக வந்ததும் தெரிந்திருக்கும்.

இப்போது அப்படியொரு வாய்ப்பு ராணா நாயகி தீபிகா படுகோனுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த முறை தொழிலதிபர்ளிடமிருந்தல்ல... உலகப் புகழ்பெற்ற பிளேபா.் பத்திரிகையிடமிருந்து. ரூ 7.5 கோடி வரை தருகிறோம், பிளேபாய் செப்டம்பர் மாத இதழுக்கு அரை நிர்வாணமாக... அதாவது டாப்லெஸ்ஸாக போஸ் தர வேண்டும் என்று கேட்டார்களாம்.

ஆனால் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம் தீபிகா. பிளேபாய்க்கு விளம்பர படங்கள் எடுத்துத் தரும் அந்த சர்வதேச நிறுவனம் எவ்வளவோ முயன்றும் இந்த ஆஃபரை ஒப்புக் கொள்ளவே இல்லையாம் தீபிகா.

பிளேபாய் வாய்ப்புக்காக ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள் தவம் கிடக்கையில், தீபிகா உறுதியாக மறுப்புத் தெரிவித்திருப்பது அவரை ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்துள்ளது சக பாலிவுட் நடிகைகளை.

சன் பிக்சர்ஸ் சக்சேனாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஆக. 1க்கு ஒத்திவைப்பு


சென்னை: சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வல்லக்கோட்டை என்ற திரைப்படத்தைத் தயாரித்த ராஜா என்பவர் சக்சேனா மீது பண மோசடிப் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இது நீதிபதி தேவதாஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சக்சேனாவின் வக்கீல் கால அவகாசம் கேட்டார். இதையடுத்து ஆகஸ்ட் 1ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

பிரபாகரன் படபிடிப்பு-பிரபுதேவாவுடன் கொல்கத்தாவில் சமீரா ரெட்டி முகாம்!


டான்ஸ் டைரக்டர் பிரபுதேவாவின் பிரபாகரன் படபிடிப்பு கொல்கத்தாவில் நடந்து வருகிறதாம். இதற்காக நடிகை சமீரா ரெட்டி கொல்கத்தா சென்றுள்ளாராம். இதை அவரே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் விஷால், சமீரா ரெட்டி நடிக்கும் படம் பிரபாகரன். தெலுங்கில் சூப்பர்ஹிட்டான சவுரியம் படத்தின் ரீமேக் தான் பிரபாகரன்.

இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி கொல்கத்தாவில் படமாக்கப்பட்டு வருகிறது. இது குறித்து படத்தின் நாயகி சமீரா ரெட்டி டுவிட்டரில் கூறியுள்ளதாவது,

கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பாலத்தில் பாடல் படபிடிப்பு. அருமையான தட்ப வெட்பம். இயக்குனர் பிரபுதேவாவின் படத்திற்காக டான்ஸ் ஆடுகிறேன் என்றார்.

நல்லா ஆடுங்க!

தனுஷ் நாயகி: ஸ்ருதிக்கு பதில் அமலா பால்?


ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க அமலா பாலுடன் பேச்சு நடக்கிறது.

கணவர் தனுஷை ஹீரோவாக வைத்து புதிய படம் இயக்குறார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா. இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் படம் குறித்த செய்திகள் காற்றுவாக்கில் பரவி வருகின்றன.

இந்தப் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் கமல் மகள் ஸ்ருதி ஹாஸன்தான். அவர் தேதி கொடுத்ததை சில ஆங்கில பத்திரிகைகளுக்கு தெரிவித்துமிருந்தார் ஐஸ்வர்யா.

ஆனால் தெலுங்கில் நிறைய கமிட்மெண்டுகள் இருப்பதால் இப்போதைக்கு இந்தப் படத்தை ஒப்புக் கொள்ள முடியாது என இப்போது கூறிவிட்டாராம் ஸ்ருதி.

இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் இப்போதைய சென்சேஷனான அமலா பாலிடம் ஐஸ்வர்யா பேசி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமலா பால் கூறுகையில், "தனுஷ் படத்துக்கு என்னிடம் பேசப்பட்டது உண்மைதான். ஆனால் இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை. உறுதியானதும் நானே பேசுவேன்," என்றார்.

யோஹன் - அத்தியாயம் ஒன்று: விஜய் நடிக்கும் கவுதம் மேனன் படம் அறிவிப்பு!


நண்பன் படம் முடிந்ததும் விஜய் நடிக்கும் அடுத்த படம் அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்தப் படத்தை இயக்குபவர்... கவுதம் மேனன்! படத்துக்குப் பெயர் யோஹன்- அத்தியாயம் ஒன்று!!

இந்தப் படத்தை கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழே டேக்லைனாக 'மிஷன் -1 நியூயார்க் சிட்டி' என குறிப்பிட்டுள்ளனர். வரும் 2012 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும் என்றும், 2013 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கவுதம் மேனன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைக்கு ஏ ஆர் ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு மனோஜ் பரமஹம்ஸா, பாடலுக்கு தாமரை, கலை இயக்கத்துக்கு ராஜீவன் என கவுதம் மேனனின் பரிவாரம் பட்டையைக் கிளப்ப தயாராகி வருகிறது.

பக்கா ஆக்ஷன் படமான யோஹா, முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாகிறது!

சிம்பு.... 'நற நறக்கும்' பரத்!


இரண்டு நாயகர்கள் நடிக்கும் படங்களின் ஆரம்பம் இனிப்பாக இருக்கும்... முடியும்போது மகா கசப்பான அனுபவங்கள் மிஞ்சும் என்பார்கள்.

அதனால்தான் ரஜினி - கமலுக்குப் பிறகு இரட்டை நாயகர்கள் நடிக்கும் படங்கள் அதிகமாக வராமலே போயின. அவ்வளவு பெரிய நடிகர்களே எந்த ஈகோவுமில்லாமல் நடித்து வெற்றிப் படங்களாகக் கொடுத்தனர்.

ஆனால் இன்று பெரிதாக வாய்ப்பில்லாத சில நடிகர்கள்கூட ஒரு படத்தில் சேர்ந்து நடித்ததும், பிணக்கு வந்து மீடியாவிடம் முணக ஆரம்பிக்கிறார்கள்.

சமீபத்தில் சிம்பு நடிக்கும் வானம் படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்தார் பரத். படத்தின் அறிமுக பிரஸ் மீட்டில் இருவரும் கட்டிப்பிடித்து போஸ் கொடுத்தார்கள். சிம்புவுக்கு இணையான ரோல் பரத்துக்கு என்று இயக்குநர் வேறு கூறினார்.

படம் வந்தது. பரத்துக்கு என்ன ரோல் என்பது தெரிந்தும் போனது.

இப்போது பரத் புலம்ப ஆரம்பித்துள்ளார்.

"இந்தப் படத்தில் எனக்கும் சிம்புவுக்கும் சரிக்கு சரியான வேடம் என்று ஒப்பந்தம் செய்தனர். ஆனால் படம் முடியும் நேரத்தில் எனக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. ரிலீஸின்போது, நான் படத்தில் இருப்பதே தெரியாத அளவுக்கு என்னை மறைத்து, ஒருவருக்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். எவ்வளவு பெரிய அவமானம், கொடுமை இதெல்லாம். இனி இந்தமாதிரி வாய்ப்புகளை ஏற்கும் முன் யோசிப்பேன்," என்கிறார் பரத்.

இது குறித்து விசாரித்தபோது, "அட போங்க... 'ரோலை'க் குறைத்தாலும் 'பே ரோலில்' கரெக்டாக இருந்தார்களல்லவா.... அதற்காக பரத் சந்தோஷப்பட வேண்டும். இன்றைய மார்க்கெட்டில் அவர் நிலை அதுதான்," என்கிறார் வானம் யூனிட் கலைஞர் ஒருவர்!

எனக்கு பயமில்லை... சினிமாவில் தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டினேன்! - அஜீத்


எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளது. அதனால்தான், சினிமாவில் இருக்கிற சிலர் தவறு செய்த போது பயமின்றி சுட்டிக் காட்டினேன், என்கிறார் அஜீத்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேட்டிகள் தர ஆரம்பித்துள்ளார் நடிகர் அஜீத் குமார்.

சமீபதில் அவர் அளித்த ஒரு பேட்டியில் மங்காத்தா சிக்கலில் இருக்கிறது என்ற உண்மையை வெளியிட்டார்.

இப்போது இன்னொரு பேட்டியில், சினிமாவில் இருக்கிற சிலர் தவறு செய்தனர். அதை பயமின்றி சுட்டிக் காட்டினேன். காரணம் ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த ஆட்சியில் நடந்த திரையுலக விழாயொன்றில், அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில், முதல்வர் விழாவுக்கு மிரட்டி அழைக்கிறார்கள், இது நியாயமா என்று கேட்டார். உடனே ரஜினி எழுந்து நின்று கைதட்டி ஆதரவைத் தெரிவித்தார்.

இதற்கு பிறகு, அப்படி பேசியதற்காக முதல்வரிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தார் என்பது வேறுவிஷயம்.

ஆனால் அவரது இந்த பேச்சுக்காக சினிமா உலகைச் சேர்ந்தவர்களே அஜீத்தை தாறுமாறாக விமர்சித்தனர். இதனால் அவர் அதிமுக பக்கம் சாய்ந்தார். ஜெயலலிதாவைவும் சந்தித்தார்.

இப்போது ஆட்சிமாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், ஆளும் கட்சி ஆதரவாளரான அஜீத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது.

இந்த நிலையில்தான் அஜீத்தின் பேட்டி வெளியாகியுள்ளது.

அதில் அஜீத் கூறியிருப்பதாவது:

நம்முடைய அரசியல் முறை மற்றும் ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. சினிமாவில் இருக்கும் சிலரின் செயல்பாடுகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. அதனால் அப்போது சில கருத்துக்களை வெளியிட்டேன்.

என்னை எதிர்க்கும் அந்த சில நபர்கள் திரையுலகில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்தவோ அல்லது எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவதற்காகவோ இது போன்ற ஸ்டண்ட்களில் இறங்குகின்றனர். என் பெயரை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சினிமாவில் அரசியல் வேண்டாம்

நான் வெளியாட்களைப் பற்றி பேசவில்லை. சினிமாவில் இருக்கும் சிலர் செய்கின்ற காரியங்களைத்தான் சுட்டிக் காட்டினேன். சினிமாவில் அரசியலை கலக்கக்கூடாது. எனது கருத்தை ஆதரித்தால் பாதிக்கப்படுவோம் என அப்போது பயந்தனர். அதனால் பேசாமல் இருந்தார்கள்.

நடிகர்களுக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது. இனம், மொழியை கடந்து அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்களாக இருக்கிறார்கள். சினிமா மூலம் மக்களை சந்தோஷப்படுத்துவதே நடிகர்கள் இலக்காக இருக்க வேண்டும்.

மற்ற நடிகர்கள் போல் நான் அதிக படங்களில் நடிக்காத காரணம் என் வாழ்க்கையை நான் சந்தோஷமாக வாழ விரும்புகிறேன்."

துபாயில் இருந்து சென்னை வந்த துணை நடிகை மாயம்: கேரள தொழில் அதிபருடன் ஓட்டம்?


துபாயில் இருந்து சென்னை வந்த துணை நடிகை மாயமாகி விட்டார். கேரள தொழில் அதிபருடன் அவர் ஓடிவிட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய போலீசில் நாகர்கோவில் ராமன் புதூரைச் சேர்ந்த ராஜா ஒரு புகார் மனு அளித்தார். அதில், "என்னுடைய மனைவி மீனா (வயது 27). துணை நடிகையாக படங்களில் நடித்து வருகிறார்.

அவர் கடந்த 24-4-2011 அன்று துபாயில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றார். கடந்த 3 மாதங்களாக துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் கடந்த 23-ந் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். அவரை அழைத்து செல்ல விமான நிலையத்தில் காத்திருந்தேன்.

அப்போது என் மனைவியுடன் செல்போனில் பேசியபோது விமான நிலையத்திற்கு வெளியே சிறிது நேரத்தில் வந்து விடுவதாகத் தெரிவித்தார் நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவளுடன் சென்றவர்கள் வெளியே வந்தனர். அவர்களிடம் எனது மனைவியை பற்றி விசாரித்தபோது அவர் நீண்ட நேரத்திற்கு முன்பே சென்று விட்டதாக தெரிவித்தனர். என் மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

போலீஸ் விசாரணையில், கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் துபாயில் நடந்த கலை நிகழ்ச்சியில் மீனாவுடன் பழகி உள்ளார். அவரும் மீனாவுடன் சென்னை வந்தாராம். இதனால் மீனா கேரளா தொழில் அதிபருடன் சென்று விட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

நயனதாராவின் உதட்டோர மச்சத்தை கிராபிக்ஸ் போர்வை போட்டு மூடிய இயக்குநர்


தெலுங்கில் தான் நடித்த ஸ்ரீராம ராஜ்யம் படத்தோடு சினிமாவுக்கு குட்பை சொல்லியுள்ள நயனதாராவுக்கு அந்தப் படத்தில் நடித்தபோது பல வித்தியாசமான, சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்ததாம்.

பிரபுதேவாவை கள்ளத்தனமாக காதலித்து, அவரை அவரது மனைவியிடமிருந்து வெற்றிகரமாக, சட்டப்பூர்வமாக பிரித்து விட்ட நயனதாரா விரைவில் பிரபுதேவாவைக் கல்யாணம் செய்யவுள்ளார்.

இந்தநிலையில் அவர் கடைசியாக நடித்த படம் ஸ்ரீராம ராஜ்ஜியம். கடும் எதிர்ப்புகளையும் மீறி இப்படத்தில் நடித்தார் நயனதாரா. இப்படத்தில் சீதை வேடத்தில் நயனதாரா நடித்துள்ளார் என்பதுதான் வேடிக்கையாகும்.

இப்படத்தில் நடித்த காலத்தில் அசைவ உணவுகளை தொடாமல் சைவப் பட்சியாக இருந்தாராம் நயனதாரா. இயக்குநர் பாபு கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த விரதத்தை அவர் கடைப்பிடித்தாராம்.

ராமர் வேடத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். லவ குசா என்ற என்.டி.ராமாராவ் நடித்த படத்தின் ரீமேக்தான் இது.

படப்பிடிப்பின்போது அவர் காட்டிய ஒத்துழைப்பும், சின்சியாரிட்டியும் அனைவரையும் கவர்ந்து விட்டதாம். இருப்பினும் இயக்குநர் பாபுவுக்கு ஒரு விஷயம் மட்டும் இடித்துள்ளது. அது நயனதாராவின் உதட்டோர மச்சம். கீழ் உதட்டில் உள்ள அந்த மச்சம், நயனதாராவின் முகத்தை படு கவர்ச்சியாக, செக்ஸ் அப்பீலுடன் காட்டுவதாக இருப்பதாக அவர் உணர்ந்தார்.

சீதை வேடத்தில் நயனதாரா கன கச்சிதமாக பொருந்தியிருந்தபோதிலும், அவரது உதட்டு மச்சம் கவர்ச்சியை தூக்கலாக காட்டுவதாக உணர்ந்த அவர், அதை மறைத்துக் கொண்டு நடிக்க முடியுமா என்று நயனதாராவிடம் கேட்டார்.

ஆனால் அதற்கு நயனதாரா மறுத்துள்ளார். அது எனக்கு சென்டிமென்ட்டான மச்சம். எனவே அதை தயவு செய்து மறைக்க வேண்டும் என்று கேட்காதீ்ர்கள் என்று கேட்டுக் கொண்டாராம். இதையடுத்து மச்சத்துடன் படத்தை எடுத்து முடித்த பாபு, தற்போது கிராபிக்ஸ் உதவியுடன் மச்சத்தை மறைத்து விட்டாராம்.

என்னா ஒரு டெக்னாலஜி!

சக்சேனாவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!


சென்னை: சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனாவின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர் தமிழக போலீசார்.

சேலத்தைச் சேர்ந்த வினியோகஸ்தர்கள் செல்வராஜ், சண்முகவேல் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார் சக்சேனா. தொடர்ந்து அவர் மீது மேலும் மேலும் வழக்குகள் போடப்பட்டன. இவற்றில் சேலம் விநியோகஸ்தர்கள் கொடுத்த வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

மீதி 4 வழக்குகளில் அவர் மீது விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், சக்சேனா மீது நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனியாக ஒரு நிறுவனம் நடத்தி வந்ததும், அந்த நிறுவன கணக்கில் லட்சக் கணக்கில் பணம் டெபாசிட் செய்திருந்ததும் தெரிய வந்துள்ளது. வங்கியில் மனைவி, மகள் பெயரில் டெபாசிட் செய்து இருப்பதும் தெரியவந்துள்ளதாம். மொத்தம் ரூ 50 லட்சம் வரகை இப்படி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக்த தெரிகிறது.

இந்த வங்கி கணக்கை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சக்சேனா வேறு எந்த நிறுவனத்திலாவது பணம் முதலீடு செய்துள்ளாரா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

சிங்கள அரசால் குறிவைக்கப்படும் மாவீரர் தின நிகழ்வுகள்!


அண்மையில், மேற்குலக நாடொன்றைச் சேர்ந்த ஊடகவியலாளர் ‘சிறிலங்காவை நெருக்கிவரும் போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து உங்களால் எப்படி விடுபட முடியும்?’ என்ற கேள்வியை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தொடுத்திருந்தார். அதற்கு, அவர் சிரித்துக்கொண்டே ‘தமிழர்களைக் கொண்டே தமிழர்களது போராட்டத்தை அடக்கிய எனக்கு, தமிழர்களைக் கொண்டே அதிலிருந்து விடுபடத் தெரியாதா?’ என்று பதிலளித்தார்.

ஆம், சிங்கள தேசம் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலைக்கான மிகப் பெரிய போராயுதமாகத் தமிழர்கள் சிலர் பயன்பட்டுள்ளார்கள். அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே சிங்கள இராணுவம் பாரிய தாக்குதல்களை நிகழ்த்தி, தமிழீழ மண்ணைக் கைப்பற்றிக் கொண்டது.

அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே சிங்கள தேசம் எங்கும் பரவிப் படர்ந்திருந்த தமிழ் உளவாளிகள் படுகொலை செய்யப்பட்டு, ஆறுகளிலும், வீதிகளிலும் போடப்பட்டார்கள். அவர்கள் வழங்கிய தகவல்களைக் கொண்டே முற்றுகை மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் உயர் தளபதிகள் முற்றாக அழிக்கப்பட்டர்கள். அந்த ஈவிரக்கமற்ற கொலைக்களம் இப்போது புலம்பெயர் நாடுகளுக்கும் நகர்த்தப்பட்டுள்ளது புலப்பட ஆரம்பித்துள்ளது.

இதுவரை காலமும், விடுதலைப் புலிகளது புலம்பெயர் தளங்களை நோக்கி ஏவப்பட்ட அதே கொலைக் கரங்கள், எதிர்வரும் மாவீரர் தினத்தைக் குறிபார்க்க ஆரம்பித்துவிட்டது. போட்டி, பொறாமைகள், பதவி ஆசை கொண்டு அலையும் எம்மவர்கள் சலரும் அதற்கு உடந்தையாகிவிட்ட கொடுமைகள் மனதை உலுக்குகின்றது.

இதுவரை காலமும், தேசியத் தலைவரது ஆணையுடன் புலம்பெயர் தேசங்களில் தேசிய விடுதலைக் கட்டமைப்புக்களே மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்தியுள்ளன. விடுதலைப் புலிகளது கிளைகளாக இயங்கிய இந்தக் கட்டமைப்புக்கள் முள்ளிவாய்க்காலின் பின்னரும் தேசியத் தலைவரி ஆணைப்படி, வரலாற்றுக் கடமையாக மாவீரர் நிகழ்வுகளை நடாத்தி முடித்தன. அந்தத் தேசிய எழுச்சி நிகழ்வின் தொடர்ச்சி, சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குச் சவாலாக இருந்ததனால், அதன்மீது கடந்த வருடத்திலேயே குறி வைக்கப்பட்ட போதும், அது வெற்றியளிக்கவில்லை.

இதனால், புலம்பெயர் தேசங்களில் கே.பி. குழுவினர் களத்தில் இறக்கப்பட்டு, அதற்கான வழங்கல்களும் வாரி இறைக்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்கள் தங்களது மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செய்ய முடியாது தவிக்கும் நிலையில், மாவீரர் துயிலும் இல்லங்கள் முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் தமிழர்களது எழுச்சியை நிர்மூலமாக்கும் இந்த நிகழ்ச்சி நிரலில் நம்மவர் சிலரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஊடாக, மாவீரர் தின நிகழ்வைக் குழப்புவதற்கும், மக்களது பங்குபற்றலைச் சிதறடிப்பதற்கும் சிங்கள தேசம் முயற்சி செய்து வருகின்றது. உலகின் அனைத்து இனங்களையும், சமூகத்தையும் ஒன்றிணைக்கும் சக்தியாக, அந்த மக்கள் குழாமின் சமயங்களே செயற்படுகின்றன. கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும், பௌத்தர்களையும், யூதர்களையும் பலம் பெறச் செய்ததும், அணி திரள வைத்து அவர்களுக்கான தேசத்தை வென்றெடுத்ததிலும் அவர்களது சமயத்தின் பங்கு அளப்பரியது. இந்து மதத்தில் அவ்வாறான அணுகு முறையோ, அக்கறையோ இல்லாதது மட்டுமல்ல, இந்து மதம் தனது மக்கள் கூட்டத்தையும் சாதிகளாக்கிப் பிளவு படுத்தியதன் மூலம் ஒருங்கிணைந்த எழுச்சி பெறுதல் ஒன்றிற்கான சாத்தியத்தை இல்லாமலே ஆக்கிவிட்டது.

ஆரம்ப காலத்தில் நடைபெற்ற ஆரியப் படையெடுப்பின்போது, ஆட்சியுரிமையுடன் திகழ்ந்த திராவிடர்களைத் தோற்கடிப்பதற்கான தந்திரமாக, ஆரியர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட சாதி முறைமையின் தொடர்ச்சியே இந்து மதம் சார்ந்த பல இனக் குழுமங்களால் ஆட்சி அதிகாரங்களுக்குட்பட்ட நிலப்பரப்புக்களைத் தமதாகத் தக்க வைத்துக்கொள்ள முடியாது போய்விட்டது. அதுவே, தமிழர்களது தலைவிதியாகவும் நிச்சயிக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாகவே, ஈழப் போரில் இந்து மதம் சார்ந்த மக்கள் கொன்றொழிக்கப்பட்ட போதும், தமிழர்களுக்குச் சொந்தமான இந்துக் கோவில்கள் தரைமட்டமாக்கப்படும்போதும் இந்துமத பீடங்கள் மௌனமாகவே தங்கள் வரலாற்றைத் தக்க வைத்துக்கொண்டனர்.

இவற்றை எல்லாம் மீறி, ஈழத் தமிழர்களது ஒன்றிணைதலும், எழுச்சியும் விடுதலைப் புலிகளால் சாத்தியமாக்கப்பட்டது. தாய் மண்ணுக்காகத் தமது இன்னுயிரை ஈந்து, காவிய நாயகர்களான மாவீரர் தினம் இந்த ஒன்றிணைதலின் உச்சக் கட்டமாக உள்ளது. தாயகக் கனவுகளுடன் கண்ணுறங்கும் மாவீரர்களது நினைவுகளைச் சுமந்து, தமிழீழ விடுதலைக்கான மீளுறுதியைக் கொள்ளும் அந்தத் தேசிய தினத்தைச் சிதைக்கும் நோக்கில் முதலில் லண்டனை மையப்படுத்தி ஒரு குழு அமைக்கப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த பலர், தங்களது சம்மதமில்லாமலேயே தங்களது பெயர்கள் அதில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துத் தம்மை அசுத்தப்படுத்தலிலிருந்து விடுவித்துக்கொண்டர்கள். தற்போது, பிரான்சை மையப்படுத்தி மாவீரர் தினத்தை சிதைக்கும் நிகழ்ச்சி நிரலுடன் 12 பேர் கொண்டதொரு குழு ‘ஈழநாதம்’ இணையத்தளம் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையாகவே, சிங்கள தேசத்தின் சதி வலைக்குள் இந்த 12 நபர்களும் சிக்கிக்கொண்டார்களா? அல்லது லண்டனில் நடைபெற்றதுபோல் வலிந்து இணைக்கப்பட்டார்களா? என்பதை அறிய முடியவில்லை.

இதில், வெளிப்படுத்தப்பட்ட 12 பேர்களில், ஏற்கனவே தமிழ்த் தேசிய சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சிலரும் அடங்கியுள்ளார்கள். மாவீரர் தினத்தைச் சிதைக்கும் நோக்கோடு, சிங்கள தேசத்தால் விதைக்கப்படும் விஷ விதைகள் முளைக்கு முன்னர் களை எடுப்பதன் அவசியத்தைப் புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி, மாவீரர் கனவுகளைச் சிதைக்கும் தேசிய விரோத செயல்களில் சிங்கள தேசத்தின் கையாட்களாகச் செயற்பட வேண்டாம் என்ற கோரிக்கையினை வலியுறுத்த வேண்டும்.


இசைப்பிரியா

சிங்கள அரசால் குறிவைக்கப்படும் மாவீரர் தின நிகழ்வுகள்!


அண்மையில், மேற்குலக நாடொன்றைச் சேர்ந்த ஊடகவியலாளர் ‘சிறிலங்காவை நெருக்கிவரும் போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து உங்களால் எப்படி விடுபட முடியும்?’ என்ற கேள்வியை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தொடுத்திருந்தார். அதற்கு, அவர் சிரித்துக்கொண்டே ‘தமிழர்களைக் கொண்டே தமிழர்களது போராட்டத்தை அடக்கிய எனக்கு, தமிழர்களைக் கொண்டே அதிலிருந்து விடுபடத் தெரியாதா?’ என்று பதிலளித்தார்.

ஆம், சிங்கள தேசம் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலைக்கான மிகப் பெரிய போராயுதமாகத் தமிழர்கள் சிலர் பயன்பட்டுள்ளார்கள். அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே சிங்கள இராணுவம் பாரிய தாக்குதல்களை நிகழ்த்தி, தமிழீழ மண்ணைக் கைப்பற்றிக் கொண்டது.

அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே சிங்கள தேசம் எங்கும் பரவிப் படர்ந்திருந்த தமிழ் உளவாளிகள் படுகொலை செய்யப்பட்டு, ஆறுகளிலும், வீதிகளிலும் போடப்பட்டார்கள். அவர்கள் வழங்கிய தகவல்களைக் கொண்டே முற்றுகை மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் உயர் தளபதிகள் முற்றாக அழிக்கப்பட்டர்கள். அந்த ஈவிரக்கமற்ற கொலைக்களம் இப்போது புலம்பெயர் நாடுகளுக்கும் நகர்த்தப்பட்டுள்ளது புலப்பட ஆரம்பித்துள்ளது.

இதுவரை காலமும், விடுதலைப் புலிகளது புலம்பெயர் தளங்களை நோக்கி ஏவப்பட்ட அதே கொலைக் கரங்கள், எதிர்வரும் மாவீரர் தினத்தைக் குறிபார்க்க ஆரம்பித்துவிட்டது. போட்டி, பொறாமைகள், பதவி ஆசை கொண்டு அலையும் எம்மவர்கள் சலரும் அதற்கு உடந்தையாகிவிட்ட கொடுமைகள் மனதை உலுக்குகின்றது.

இதுவரை காலமும், தேசியத் தலைவரது ஆணையுடன் புலம்பெயர் தேசங்களில் தேசிய விடுதலைக் கட்டமைப்புக்களே மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்தியுள்ளன. விடுதலைப் புலிகளது கிளைகளாக இயங்கிய இந்தக் கட்டமைப்புக்கள் முள்ளிவாய்க்காலின் பின்னரும் தேசியத் தலைவரி ஆணைப்படி, வரலாற்றுக் கடமையாக மாவீரர் நிகழ்வுகளை நடாத்தி முடித்தன. அந்தத் தேசிய எழுச்சி நிகழ்வின் தொடர்ச்சி, சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குச் சவாலாக இருந்ததனால், அதன்மீது கடந்த வருடத்திலேயே குறி வைக்கப்பட்ட போதும், அது வெற்றியளிக்கவில்லை.

இதனால், புலம்பெயர் தேசங்களில் கே.பி. குழுவினர் களத்தில் இறக்கப்பட்டு, அதற்கான வழங்கல்களும் வாரி இறைக்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்கள் தங்களது மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செய்ய முடியாது தவிக்கும் நிலையில், மாவீரர் துயிலும் இல்லங்கள் முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் தமிழர்களது எழுச்சியை நிர்மூலமாக்கும் இந்த நிகழ்ச்சி நிரலில் நம்மவர் சிலரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஊடாக, மாவீரர் தின நிகழ்வைக் குழப்புவதற்கும், மக்களது பங்குபற்றலைச் சிதறடிப்பதற்கும் சிங்கள தேசம் முயற்சி செய்து வருகின்றது. உலகின் அனைத்து இனங்களையும், சமூகத்தையும் ஒன்றிணைக்கும் சக்தியாக, அந்த மக்கள் குழாமின் சமயங்களே செயற்படுகின்றன. கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும், பௌத்தர்களையும், யூதர்களையும் பலம் பெறச் செய்ததும், அணி திரள வைத்து அவர்களுக்கான தேசத்தை வென்றெடுத்ததிலும் அவர்களது சமயத்தின் பங்கு அளப்பரியது. இந்து மதத்தில் அவ்வாறான அணுகு முறையோ, அக்கறையோ இல்லாதது மட்டுமல்ல, இந்து மதம் தனது மக்கள் கூட்டத்தையும் சாதிகளாக்கிப் பிளவு படுத்தியதன் மூலம் ஒருங்கிணைந்த எழுச்சி பெறுதல் ஒன்றிற்கான சாத்தியத்தை இல்லாமலே ஆக்கிவிட்டது.

ஆரம்ப காலத்தில் நடைபெற்ற ஆரியப் படையெடுப்பின்போது, ஆட்சியுரிமையுடன் திகழ்ந்த திராவிடர்களைத் தோற்கடிப்பதற்கான தந்திரமாக, ஆரியர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட சாதி முறைமையின் தொடர்ச்சியே இந்து மதம் சார்ந்த பல இனக் குழுமங்களால் ஆட்சி அதிகாரங்களுக்குட்பட்ட நிலப்பரப்புக்களைத் தமதாகத் தக்க வைத்துக்கொள்ள முடியாது போய்விட்டது. அதுவே, தமிழர்களது தலைவிதியாகவும் நிச்சயிக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாகவே, ஈழப் போரில் இந்து மதம் சார்ந்த மக்கள் கொன்றொழிக்கப்பட்ட போதும், தமிழர்களுக்குச் சொந்தமான இந்துக் கோவில்கள் தரைமட்டமாக்கப்படும்போதும் இந்துமத பீடங்கள் மௌனமாகவே தங்கள் வரலாற்றைத் தக்க வைத்துக்கொண்டனர்.

இவற்றை எல்லாம் மீறி, ஈழத் தமிழர்களது ஒன்றிணைதலும், எழுச்சியும் விடுதலைப் புலிகளால் சாத்தியமாக்கப்பட்டது. தாய் மண்ணுக்காகத் தமது இன்னுயிரை ஈந்து, காவிய நாயகர்களான மாவீரர் தினம் இந்த ஒன்றிணைதலின் உச்சக் கட்டமாக உள்ளது. தாயகக் கனவுகளுடன் கண்ணுறங்கும் மாவீரர்களது நினைவுகளைச் சுமந்து, தமிழீழ விடுதலைக்கான மீளுறுதியைக் கொள்ளும் அந்தத் தேசிய தினத்தைச் சிதைக்கும் நோக்கில் முதலில் லண்டனை மையப்படுத்தி ஒரு குழு அமைக்கப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த பலர், தங்களது சம்மதமில்லாமலேயே தங்களது பெயர்கள் அதில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துத் தம்மை அசுத்தப்படுத்தலிலிருந்து விடுவித்துக்கொண்டர்கள். தற்போது, பிரான்சை மையப்படுத்தி மாவீரர் தினத்தை சிதைக்கும் நிகழ்ச்சி நிரலுடன் 12 பேர் கொண்டதொரு குழு ‘ஈழநாதம்’ இணையத்தளம் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையாகவே, சிங்கள தேசத்தின் சதி வலைக்குள் இந்த 12 நபர்களும் சிக்கிக்கொண்டார்களா? அல்லது லண்டனில் நடைபெற்றதுபோல் வலிந்து இணைக்கப்பட்டார்களா? என்பதை அறிய முடியவில்லை.

இதில், வெளிப்படுத்தப்பட்ட 12 பேர்களில், ஏற்கனவே தமிழ்த் தேசிய சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சிலரும் அடங்கியுள்ளார்கள். மாவீரர் தினத்தைச் சிதைக்கும் நோக்கோடு, சிங்கள தேசத்தால் விதைக்கப்படும் விஷ விதைகள் முளைக்கு முன்னர் களை எடுப்பதன் அவசியத்தைப் புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி, மாவீரர் கனவுகளைச் சிதைக்கும் தேசிய விரோத செயல்களில் சிங்கள தேசத்தின் கையாட்களாகச் செயற்பட வேண்டாம் என்ற கோரிக்கையினை வலியுறுத்த வேண்டும்.


இசைப்பிரியா

சுவிஸில் நேற்றைய தினம் கறுப்பு யூலை நிகழ்வு (படங்கள்இணைப்பு)


சுவிஸ் ஈழத்தமிழரவை மற்றும் சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸின் தலைநகரமான பேர்ண் பாராளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள Waisenhausplatz என்னுமிடத்தில் 28 ம் ஆண்டு கறுப்பு யூலை நினைவுகூரப்பட்டது.

நேற்று 28.07.11 பிற்பகல் 15.00 மணிக்கு கறுப்பு யூலை நினைவுகூரல் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர் வணக்கமும் செலுத்தப்பட்டு நிகழ்வு தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து, சுவிஸ் ஈழத்தமிழரவையின் பிரதிநிதிகள், சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சமூக உணர்வாளர்களின் நினைவுரைகள் இடம்பெற்றன.

நிகழ்வை சிறப்பிக்கும் விதமாக ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதுடன் இன்றைய தாயகத்தின் நிலைமைகளை விளக்கிய துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. பார்வையாளர்களாக சமூகமளித்த பல்லின மக்கள் ஒவியங்களைப் பார்வையிட்டதுடன் எம் உறவுகள் படும் துயர்களை அறிந்து சென்றனர். இறுதியாக வலிகளிலிருந்து 'மீள் எழுச்சி கொள்வோம்' என்ற உறுதிமொழியுடன் தாரக மந்திரம் உரைக்கப்பட்டு கறுப்பு யூலை நிகழ்வு நிறைவடைந்தது. சுவிஸ் ஈழத்தமிழரவை மற்றும் சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பு


சுவிஸில் நேற்றைய தினம் கறுப்பு யூலை நிகழ்வு (படங்கள்இணைப்பு)


சுவிஸ் ஈழத்தமிழரவை மற்றும் சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸின் தலைநகரமான பேர்ண் பாராளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள Waisenhausplatz என்னுமிடத்தில் 28 ம் ஆண்டு கறுப்பு யூலை நினைவுகூரப்பட்டது.

நேற்று 28.07.11 பிற்பகல் 15.00 மணிக்கு கறுப்பு யூலை நினைவுகூரல் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர் வணக்கமும் செலுத்தப்பட்டு நிகழ்வு தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து, சுவிஸ் ஈழத்தமிழரவையின் பிரதிநிதிகள், சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சமூக உணர்வாளர்களின் நினைவுரைகள் இடம்பெற்றன.

நிகழ்வை சிறப்பிக்கும் விதமாக ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதுடன் இன்றைய தாயகத்தின் நிலைமைகளை விளக்கிய துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. பார்வையாளர்களாக சமூகமளித்த பல்லின மக்கள் ஒவியங்களைப் பார்வையிட்டதுடன் எம் உறவுகள் படும் துயர்களை அறிந்து சென்றனர். இறுதியாக வலிகளிலிருந்து 'மீள் எழுச்சி கொள்வோம்' என்ற உறுதிமொழியுடன் தாரக மந்திரம் உரைக்கப்பட்டு கறுப்பு யூலை நிகழ்வு நிறைவடைந்தது. சுவிஸ் ஈழத்தமிழரவை மற்றும் சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பு


Thursday 28 July 2011

கடவுளிடம் தஞ்சம் புகுந்துள்ள டக்ளஸ் தேவானந்தா


நடைபெற்று முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா தற்போது கடவுளிடம் தஞ்சம் புகுந்துள்ளார். தன்னைக் காப்பாற்றுமாறு இந்து ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளதுடன் அவ் ஆலய கடவுள்களைத் தம் தோல் மீது தாங்கி வீதியுலாவும் வருகின்றார்.

அத்துடன் அவரது பரிவாரங்களும் அரோகரா அரோகரா எங்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று அவர் பின் கோசம் எழுப்பி வருகின்றனர்.

என்ன செய்வது தமிழ் மக்களை ஏமாற்றி, அரசியல் பிழைப்பு நடத்தி வந்த அமைச்சர் டக்ளஸைக் கடவுள் மன்னிப்பானா?

அரசன் அன்றறுப்பான்! தெய்வம் நின்றறுக்கும் என்ற பழமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ, ஆனால் அமைச்சருக்குத் தற்போது நன்றாக பொருந்தியிருக்கு.



கடவுளிடம் தஞ்சம் புகுந்துள்ள டக்ளஸ் தேவானந்தா


நடைபெற்று முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா தற்போது கடவுளிடம் தஞ்சம் புகுந்துள்ளார். தன்னைக் காப்பாற்றுமாறு இந்து ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளதுடன் அவ் ஆலய கடவுள்களைத் தம் தோல் மீது தாங்கி வீதியுலாவும் வருகின்றார்.

அத்துடன் அவரது பரிவாரங்களும் அரோகரா அரோகரா எங்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று அவர் பின் கோசம் எழுப்பி வருகின்றனர்.

என்ன செய்வது தமிழ் மக்களை ஏமாற்றி, அரசியல் பிழைப்பு நடத்தி வந்த அமைச்சர் டக்ளஸைக் கடவுள் மன்னிப்பானா?

அரசன் அன்றறுப்பான்! தெய்வம் நின்றறுக்கும் என்ற பழமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ, ஆனால் அமைச்சருக்குத் தற்போது நன்றாக பொருந்தியிருக்கு.



இளம்பெண்ணை ஆறு படையினர் வல்லுறவு! சனல் 4 இற்கு படைவீரர்கள் சாட்சியம்!! (காணொளி)

இளம்பெண்ணை ஆறு படையினர் வல்லுறவு! சனல் 4 இற்கு படைவீரர்கள் சாட்சியம்!! (காணொளி இணைப்பு).

சனல் 4 இனால் நேற்று புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட ஆவணத்தில் சிறிலங்கா போர்க்குற்றங்கள் சம்பந்தமான படைவீரர்களின் சாட்சியம் மற்றும் முன்னாள் சிறிலங்கா அரசதலைவர் சந்திரிகா கருத்து ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

உள்ளுராட்சி தேர்தல் வெற்றிக்குப் பின் என்ன..?

இன்றைய தென்னாசிய அரசியலில் இந்தியா குளவிக்கூடு சிறீலங்கா தீப்பந்தம்.. இலங்கையை இனியும் இந்தியா எரிக்கக்கூடாது..

சிறீலங்காவின் உள்ளுராட்சித் தேர்தலில் வழமைபோல வடக்குக் கிழக்கில் சிங்கள இனவாத அரசும், அதன் அடிவருடிகளும் மக்களால் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வளவு காலமும் புலிகள் பின்னால் இருந்து செயற்படுகிறார்கள், சரியான பிரச்சாரங்களை செய்ய முடியவில்லை என்று ஒப்பாரி வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மிதிவண்டியில் சென்று வாக்குக் கேட்குமளவிற்கு அவருக்கு சுதந்திரம் இருந்தது. ஆனாலும் மக்கள் அவருடைய கட்சியும் தூக்கி வீசப்பட்டிருக்கிறது. மக்கள் தீர்ப்பை மதிக்கத் தெரியாது மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் டக்ளஸ்.

தமிழர் கூட்டமைப்பு ஓர் ஆற்றலுள்ள கட்சி என்ற அடிப்படையில் இந்த வெற்றி அமைந்ததாக மார்தட்ட முடியாது. சிங்கள இனவாதத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள தாங்கொணா வெறுப்பே கூட்டமைப்பை வெற்றிக்குள் தள்ளியுள்ளது. தமிழகத்தில் மு.கருணாநிதியும் அவர் குடும்பத்தினரும் செய்த அருவருக்கத் தக்க செயல்கள் எப்படி ஜெயலலிதாவுக்கு அமோக வெற்றியை கொடுத்ததோ அதுபோலவே மகிந்த அன் கொம்பனி செய்த அருவருக்கத்தக்க செயல்களே இந்த வெறுப்பை இரட்டைக்குழல் துப்பாக்கியாகக் கக்கியுள்ளது.

குடாநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் 5000 ரூபாவை வழங்கினால் அந்த இடத்திற்கு இராணுவம் விசாரிக்க வந்துவிடுகிறது. சிறீலங்காவின் உள்ளுர் உளவுப் பிரிவினரே இங்கிலாந்தில் உள்ள சில தமிழர்களோடு பேசி தகவல் எடுக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

யாழ்.மாவட்ட கல்வி அதிகாரி ஒரே இரவில் தூக்கி வீசப்பட்டுவிட்டார். குடாநாட்டின் பிரதான வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர் 24 மணி நேரத்தில் ஓடிவிடு என்று தொலைபேசி வழியாக எச்சரிக்கப்பட்டு, ஓடிவிட்டார். யாழ். சென்று வரும் மக்கள் செவிவழியாக சுமந்து வரும் தகவல்கள் ஏராளம் தாராளம். அவை மகிந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்பதற்கு அழகிய உதாரணங்களாக உள்ளன.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்குங்கள் என்று கேட்டபோது முதலில் இயல்பு வாழ்க்கையை வழங்குங்கள் என்று பிரபாகரன் அன்று கேட்டார். ஒரு தடவையல்ல பல நூறு தடவைகள் கேட்டார். அதை வழங்க சிங்கள அரசு ஒருபோதும் முன்வரவில்லை.

ஒரு சிறிய விழாவை நடாத்துவதானாலும் இராணுவத்திற்கு அவிப்பாகம் கொடுத்து அவ்விடத்துக்கு மாலை போட்டு வரவழைக்கப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. ஓர் உதைபந்தாட்டப் போட்டியை நடாத்தக்கூட முடியாத அவலம் நிகழ்வதாக கூறப்படுகிறது. இந்த இலட்சணத்தில் எதற்கு அரசியல் தீர்வு முதலில் இயல்பு வாழ்வை வாழ மக்களை அனுமதிக்க வேண்டும். பிரபாகரன் தெளிவாகத்தான் பேசியுள்ளார் என்பதை இன்று சரியாக உணர முடிகிறது.

அதேவேளை உலகப் பந்தில் இப்படியான இனவாத நாடுகள் இருக்க முடியாது என்ற புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது கவனிக்கப்பட வேண்டியது. எகிப்து, ரூனிசியா, லிபியா, சிரியாவில் ஆட்சி மாற்றங்களை நடாத்தியது இந்தக் கொள்கைதான். இந்த அலை ஆசியாவிற்குள் வரப்போகிறது, இந்தியாவால் இதை நிறுத்த முடியாது என்பதும் நிதர்சனமாக தெரிகிறது.

இன்றுள்ள தென்னாசிய அரசியல் நிலையில் இந்தியா என்ற நாடு மரத்தில் தொங்கும் குளவிக்கூடுபோல தெரிகிறது, அதன் கீழே தீப்பந்தம் எரிவதுபோல சிங்கள நாடு தெரிகிறது. சிறீலங்காவை இனியும் எரிய வைத்தால் இந்தியக் குளவிக்கூட்டுக்கே ஆபத்து என்பதை வடஇந்திய தலைவர்கள் பெரிதாக புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் மந்தமான அறிவுள்ளவர்கள் என்று ப.சிதம்பரம் கூறியது கவனிக்கத்தக்கது.

இந்த இடத்தில் முன்னாள் சமாதானப்புறா சந்திரிகா அம்மையார் துணிச்சலாக ஒரு கருத்தை முன் வைத்துள்ளார். போரில் வென்றாலும் சிறீலங்கா என்ற நாடு தோற்றுப்போன நாடு என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.

சனல் 4 கொலைக்களத்தைப் பார்த்த தனது மகன் சிங்களவன் என்று சொல்லவே வெட்கப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

சுமார் 5200 தமிழர்கள் மர்ம முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாக நேற்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளை வானில் கடத்தப்பட்டு சுவடு தெரியாமல் போன இந்த இளைஞர்கள் அமெரிக்காவின் குவாண்டனோமா சிறைக்கூடத்தைவிட மோசமான தகவல் தெரியாத பாதாள உலகத்தில் கிடக்கிறார்கள்.

என்ன செய்யப்போகிறது நாகரிக உலகம்…?

இந்த நாசகார செயல்களை சிங்கள இனவாதம் எப்போது நிறுத்திக் கொண்டு தன்னை திருத்தப்போகிறது..?

சீனாவும் ரஸ்யாவும் நண்பர்கள் அல்ல சதாம்உசேனை காலை வாரிய கதை தெரிந்தால், சலபொடான் மிலேசெவிச்சை காலை வாரிய கதை தெரிந்தால் இந்த நாடுகளை மகிந்த நம்பமாட்டார், அவருக்கு அதுவும் தெரியவில்லை.

இயல்பு வாழ்க்கையை கேட்டு தமிழ் மக்கள் வீதிக்கு இறங்கினால் பான் கீ மூன் போன்ற புண்ணுக்கு புனுகு தடவும் பேர்வழிகளை தாண்டி உலகம் திரும்பும். வெள்ளம் உள்ளுராட்சி தேர்தல்களால் சிங்களத்தை எச்சரித்துள்ளது. உணரத் தவறினால் உள்ளுருக்கள் இருந்தே அது ஊற்றெடுக்கும்.

அலைகளுக்காக இளவாலை தெற்கு க.புவனசுந்தரம் 28.07.2011

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா