Saturday 23 July 2011

நிறைய கஷ்டங்களைப் பார்த்துட்டேன்! - கண்கலங்கும் சோனியா


தினமும் ஷூட்டிங், விசேஷங்களில் பார்ட்டி, நண்பர்களுடன் விருந்துகள் என நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார் சோனியா அகர்வால்.

நேற்று முன்தினம் அவர் தனது தாயின் பிறந்தநாளை மெகா விருந்துடன் கொண்டாடினார். இந்த விருந்துக்கு ஏராளமான நண்பர்களையும் அவர் அழைத்திருந்தாராம்.

விருந்தின் போது அவர் நண்பர்களுடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாராம் மனம்விட்டு.

அவர் கூறுகையில், "நான் இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டுவிட்டேன்.

முன்பை விட இப்போது நல்ல கேரக்டர்கள் வருகின்றன. தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இளம் வயதிலேயே நிறைய பிரச்சினைகளைப் பார்த்துவிட்டேன். என்னை இன்னும் உறுதியாக்க இந்த சோதனைகள் உதவியிருக்கின்றன. கடவுள் என்னோடு இருப்பதாக உணர்கிறேன்," என்றார்.

இப்போது ஒரு நடிகையின் வாக்கு மூலம், மாதா பிதா குரு மற்றும் இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினியுடன் யாரையும் ஒப்பிடாதீர்கள், ப்ளீஸ்! - சல்மான்கான்


மனதில் தோன்றியதை பட்டென்று யாரைப் பற்றியும் யோசிக்காமல் பேசி விடுபவர் சல்மான்கான். அதனால்தான் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர், சக நடிகர்கள் மத்தியில் கொஞ்சம் கெட்ட பெயர்.

சமீபத்தில் சல்மான் கானை நமது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒப்பிட்டு சக நடிகர் நடிகைகள் சிலர் பேசினர்.

பாடிகார்ட் படத்தில் சல்மான்கானுடன் நடிக்கும் கரீனா கபூர் கூறுகையில், "இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இணை யாருமில்லை. அவர் ஒரு பிறவி நடிகர். அவர் என்ன செய்தாலும் அது புதிய ட்ரெண்ட். அவரைப் போல மக்கள் மனம் கவர்ந்தவர், ஈர்ப்பு மிக்கவர் யாருமில்லை. என்னைப் பொருத்தவரை பாலிவுட்டின் ரஜினிகாந்த் என்றால் அது சல்மான்கான்தான்," என்று கூறியிருந்தார்.

ஆனால் இதனை மறுத்துள்ளார் சல்மான்கான். இந்திய சினிமாவில் ரஜினிக்குள்ள இடம் தனி. இங்கு எனக்கென ஒரு இடம் உள்ளது. எனக்கான இடத்தை நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். ரஜினியுடன் யாரையும் ஒப்பிட வேண்டாம் ப்ளீஸ்," என்று கூறியிருந்தார்.

இதை அவர் தன்னடக்கத்தில் கூறினாரா... அல்லது ரஜினி பெயரைச் சொல்லி நாம் வளர வேண்டிய நிலையில் இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளன பாலிவுட் பத்திரிகைகள்.

எப்படியோ... ரஜினி பெயரை இழுத்ததால்தான் இந்த விஷயம் கூட செய்தியாக மாறியது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரிந்தால் சரி, என இன்னொரு பத்திரிகை கமெண்ட் அடித்துள்ளது!

கத்ரீனாவை குத்திக்காட்டிய தீபிகா!


பாலிவுட்டில் எந்த முன்னணி நடிகைக்கும் சக நடிகையைப் பிடிப்பதே இல்லை. பட்டியல் இட்டால் அது நீண்டு கொண்டே போகும். தீபிகா படுகோனேவுக்கும், கத்ரீனாவுக்கும் லடாயாக இருந்தது.

இந்நிலையில் அவர்கள் சமாதானமாகி தோழிகளாகிவிட்டதாக செய்திகள் வந்தன. தப்பு, தப்பு நாங்கள் ஒன்றும் தோழிகள் எல்லாம் கிடையாது என்று கூறுவது போல் தீபிகா படுகோன் ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் கத்ரீனா வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பாதி இந்தியர், பாதி இத்தாலியர் என்று கூறி கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் பிரச்சனை பெரிதாவதை உணர்ந்து மன்னிப்பும் கேட்டார்.

தீபிகா தனது 'ஆரக்ஷன்' பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் படத்தின் கதை பற்றி அவருடைய கருத்து கேட்கப்பட்டது. அதற்கு தீபிகா 'இது அரசியல் விவகாரம்... நான் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள விரும்பவில்லை' என்று கூறிவிட்டார்.

இப்பொது புரிகிறதா அவர் யாரை மனதில் வைத்து இவ்வாறு கூறியிருக்கிறார் என்று. வேறு யாரு ராகுலைப் பற்றி பேசி மன்னிப்புக் கேட்ட கத்ரீனாவைத் தான்.

குத்திக்காட்டுவதி்ல் அப்படி என்னதான் அலாதி சந்தோஷமோ....

காஜல் அகர்வாலுடன் பிறந்த நாள் கொண்டாடிய சூர்யா!


நடிகர் சூர்யா தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு ஹீரோயின் காஜல் அகர்வால் வாழ்த்துக் கூறினார்.

கல்பாத்தி அகோரம் வழங்கும் ஏஜிஎஸ் மூவீஸின் மாற்றான் படப்பிடிப்பில் குழுவினருடன் இந்த பிறந்த நாளை அவர் கொண்டாடினார்.

இயக்குநர் கேவி ஆனந்த், படத்தின் வசனகர்த்தாக்கள் சுபா மற்றும் படக்குழுவினர் சூர்யாவுக்கு கேக் ஊட்டி வாழ்த்துக் கூறினர்.

மாற்றான் படம் வித்தியாசமான கதையமைப்புடன் உருவாகிறது. ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சவுந்தரராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங்கை ஆன்டனி கவனிக்கிறார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மாற்றான் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிறது.

2011 சினிமா... ஜூன் வரை ரிலீஸ் 65... தேறியவை வெறும் எட்டு!


பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மெண்ட் வீக் என்பாரே வடிவேலு... அதற்கு சரியான உதாரணம் தமிழ் சினிமாதான்!

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் மார்க்கெட் பரந்து விரிந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் இந்திய சினிமாவின் அடையாளமாகப் பார்க்கப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் அவரது படங்களை பார்த்துப் பார்த்து செதுக்கும் கமர்ஷியல் விற்பன்னர்களும்தான்.

இந்த மார்க்கெட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பு மட்டுமே இன்றைய ஹீரோக்கள், இயக்குநர்களுக்கு உள்ளதே தவிர, படங்களில் நல்ல கதை, செறிவான காட்சிகளை அமைப்பதில் இல்லை என்பதே வருத்தம் தரும் உண்மை.

மாஸ் படம் என்ற பெயரில் அரைவேக்காட்டுத்தனமாக படங்களை எடுத்து மக்களை வெறுப்பேற்றுவது அதிகரித்து வருகிறது. உதாரணம் தனுஷ் நடித்த மாப்பிள்ளை, வேங்கை!

இதன் காரணமாக, தமிழ் சினிமா வளர்ந்த வேகத்திலேயே பெரும் வீழ்ச்சி கண்டு தயாரிப்பாளர்களின் தலையில் துண்டு போட வைக்கிறது.

2011 தமிழ் சினிமாவின் முதல் அரையாண்டுக்கான லாப நஷ்டக் கணக்கு என்று பார்த்தால், நாம் மேலே சொன்னது எந்த அளவு உண்மை என்பது புரிய வரும்.

இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை வெளியான நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை (ஆங்கில, தெலுங்கு, இந்தி டப்பிங் படங்கள் சேர்க்கப்படவில்லை) 65.

இவற்றில் சூப்பர் ஹிட் என்று பார்த்தால் இரண்டு படங்கள்தான். ஒன்று ஜீவாவின் கோ. இரண்டாவது கார்த்தி நடித்த சிறுத்தை.

ஹிட் ரகம் என்றால், பாலாவின் அவன் இவன், சிம்பு நடித்த வானம், விஜய்யின் காவலன் போன்றவற்றைச் சொல்லலாம்.

6 தேசிய விருதுகளை வென்றாலும், சன் பிக்சர்ஸின் மெகா விளம்பரங்களை கழித்துவிட்டுப் பார்த்தால் ஆடுகளம் பாக்ஸ் ஆபீஸில் மகா சுமார் படம்தான். ஆரண்ய காண்டம் பெரிதாக பாராட்டப்பட்டாலும் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியைத் தழுவியது.

சுசீந்திரனின் அழகர்சாமியின் குதிரை குறிப்பிடத்தக்க படமாக நின்றது. ஓரளவு நன்றாகவும் போனது.

விமல் நடித்த எத்தன், விஷ்ணு நடித்த குள்ளநரிக் கூட்டம் போன்றவை முதலுக்கு மோசமில்லாமல் ஓடின.

வேறு எந்தப் படமும் இந்த 6 மாதங்களில் முதல் இரு வாரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை. இன்றைய நிலவரப்படி 100 நாட்கள் ஓடினால்தான் வெற்றி என்று சொல்ல முடியாது. முதல் இரண்டு வாரங்கள் நல்ல வசூல், போட்ட முதலுக்கு மேல் லாபம் வந்தால் போதும் என்பதுதான் மார்க்கெட் நிலவரம். அந்த கணக்கின்படிதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள படங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் படங்கள் ஓடாமல் போக ஏதாவது ஒரு காரணத்தை கண்டுபிடிப்பது சினிமாக்காரர்கள் வழக்கம். அதன்படி கடந்த காலங்களில் குறிப்பிட்ட குடும்ப ஆதிக்கத்தை சொல்லி வந்தார்கள். ஆனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து இத்தனை நாட்களில் வெளியான படங்களில் ஒரே ஒரு படம்... தெய்வ திருமகள் மட்டுமே தேறியுள்ளது.

இப்போது யாருடைய ஆதிக்கமும் இல்லாத நிலையில், வெளியாகும் படங்கள் ஓரளவு வசூலையாவது எடுத்திருக்க வேண்டும் அல்லவா? ஏன் முடியவில்லை?

"குடும்ப ஆதிக்கம், டிவி ஆதிக்கம்... இப்படி ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், நல்ல சரக்குள்ள படம் சந்தையில் யார் தயவும் இல்லாமல் ஓஹோவென்று ஓடும். அதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே இயக்குநர்கள் நல்ல படங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்ட வேண்டும். ஆனால் அவர்களோ ஆயிரம் அரசியல் பண்ணிக்கொண்டு படைப்பாற்றலை இழந்து விடும் போக்கு உள்ளது. தோல்விக்கு அடுத்தவரை நோக்கி விரல் நீட்டாமல், தங்கள் தவறை உணர்ந்து கதைகளை உருவாக்க வேண்டும்," என்கிறார் விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர்.

தயாரிப்பாளர் ஒருவரிடம் இதுகுறித்து பேசினோம்.

2011-ல் இதுவரை வெளியான எந்தப் படமும் ஹீரோக்களுக்காகவோ, ஹீரோயிசத்துக்காகவோ ஓடவில்லை. ஆனால் இன்னும் கூட ஹீரோயிசத்தோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தனுஷ் போன்ற ஹீரோக்கள். தமிழ் சினிமா சாண் ஏறினால் முழம் சறுக்கக் காரணம் இதுவே. இந்த நிலை மாற வேண்டும். அது இயக்குநர்கள் கையில்தான் இருக்கிறது. பலர் அவன் இவன் படத்தை விமர்சித்தாலும் அந்தப் படம் வெகுஜன ரசனையைத் திருப்திப்படுத்தியது. ஓரளவு லாபமும் கிடைத்தது. இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு தமிழை விட நன்றாக சம்பாதித்துக் கொடுத்துவிட்டது. வித்தியாசம் மற்றும் ரசனைக்குத் தீனிபோடும் சமாச்சாரங்கள் நிறைய வேண்டும்," என்றார்.

இயக்குநர்கள் யோசிப்பார்களா?

விஷால் படப் பெயர் மாற்றம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஷால் படப் பெயர் மாற்றம்

7/23/2011 12:30:56 PM

விஷால் நடிக்கும் 'பிரபாகரன்' படத்தின் பெயர் 'வெடி' என்று மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி விஷால் கூறியதாவது: 'பிரபாகரன்' என்ற பெயர் மாற்றப்பட இருப்பது உண்மை. ஒரு சென்சிட்டிவான பெயரை வைத்து மற்றவர்களுக்கு தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம் என்பதால் பெயரை மாற்ற முடிவு செய்திருக்கிறோம். படத்தில் என் கேரக்டர் பெயர் பிரபாகரன். அதனால் அந்த பெயரை வைக்க முடிவு செய்திருந்தோம். புதிய பெயரை இயக்குனர் பிரபுதேவா முடிவு செய்வார். அது 'வெடி'யா என்பது பற்றி முடிவு செய்யவில்லை. தற்போது கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 'அவன் இவன்' படத்துக்குப் பிறகு இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டுகளில் நடிக்க நிறைய வாய்ப்பு வந்தது. இப்போதைக்கு ஒப்புக் கொள்ளவில்லை. இரண்டு ஹீரோக்கள் படங்கள் வருவது சினிமாவுக்கு ஆரோக்கியமானது. ஒரே டிக்கெட்டில் இரண்டு ஹீரோக்கள் படம் பார்த்த திருப்தி ரசிகனுக்கு கிடைக்கும். ஆனால் இரண்டு ஹீரோ கதைகளை நல்ல இயக்குனர்களால் மட்டுமே கையாள முடியும்.




பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் பிந்து மாதவி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் பிந்து மாதவி

7/23/2011 12:07:04 PM

போட்டோன் கதாஸ் நிறுவனத்துக்காக கவுதம் வாசுதேவ் மேனன், ரேஷ்மா, வெங்கி, மதன் தயாரிக்கும் படம், 'வெப்பம்'. கார்த்திக் குமார், நானி, நித்யா மேனன், பிந்து மாதவி, முத்துக்குமார் நடிக்கின்றனர். வசனம், பிரபு. கதை, திரைக்கதை எழுதி அஞ்சனா இயக்குகிறார். வரும் 29-ம் தேதி ரிலீசாகும் இப்படம் பற்றி பிந்து மாதவி கூறியதாவது: இதில் விஜி என்ற கேரக்டராக வருகிறேன். சென்னை குடிசை பகுதியில் தங்கியிருந்து நடித்தது வித்தியாசமான அனுபவம். இதில் பாலியல் தொழிலாளி வேடமேற்றுள்ளேன். முதல் படத்திலேயே இதுபோன்ற கேரக்டரில் நடிப்பது குறித்து சிலர் பயமுறுத்தினர். ஸ்கிரிப்ட் மீது நம்பிக்கை வைத்து நடித்தேன். உண்மையில், இந்த வேடத்தில் நடித்தது சவாலாக இருந்தது.  பெண் இயக்குனர் என்பதால், அவரது படத்தில் நடிப்பது சவுகரியமாக இருந்தது. படுக்கையறை காட்சி, முத்தக்காட்சி என்ற வலுக்கட்டாயமான திணிப்புகள் கிடையாது. இது சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லர் படம். இவ்வாறு பிந்து மாதவி கூறினார். அஞ்சனா கூறுகையில், 'மெக்கானிக் கார்த்திக் குமார், விளம்பர போர்டு எழுதும் முத்துக்குமார், மாணவர் நானி, பாலியல் தொழிலாளி பிந்து மாதவி, ஜெராக்ஸ் கடையில் பணிபுரியும் நித்யா மேனன் ஆகியோரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும், தீர்வுகளும்தான் கதை' என்றார்.




பிரீத்தி ஜிந்தாவை விட டாப்ஸி ரொம்ப அழகு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிரீத்தி ஜிந்தாவை விட டாப்ஸி ரொம்ப அழகு!

7/23/2011 11:45:15 AM

வாசன்ஸ் விஷூவல் வெஞ்சர் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்கும் படம், 'வந்தான் வென்றான்'. ஜீவா, டாப்ஸி ஜோடி. முக்கிய வேடங்களில் நந்தா, சந்தானம், ரகுமான். ஒளிப்பதிவு, பி.ஜி.முத்தையா. இசை, தமன். பாடல்கள்: நா.முத்துக்குமார், கார்க்கி, தாமரை. வசனம், பட்டுக்கோட்டை பிரபாகர். ஆர்.கண்ணன் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கே.எஸ்.சீனிவாசன் வரவேற்றார். எஸ்.ஏ.சந்திரசேகரன், பாலா இணைந்து வெளியிட்டனர். ஜெயம் ரவி பெற்றுக்கொண்டு பேசியதாவது:

இந்த விழாவில்தான் டாப்ஸியை பார்க்கிறேன். அவரை, பாலிவுட் ஹீரோயின் பிரீத்தி ஜிந்தா மாதிரி இருப்பார் என்று வர்ணிப்பார்கள். நேரில் பார்த்த பிறகு கருத்தை மாற்றிக்கொண்டேன். பிரீத்தி ஜிந்தாவை விட, ரொம்ப அழகாக இருக்கிறார். ஜீவாவும், நானும் நண்பர்கள். எட்டு வருடங்களுக்கு முன் எப்படி பழகினாரோ, இப்போதும் அதுபோல்தான் பழகுகிறார். எந்த நிலையிலும் ஒரேமாதிரி இருக்க வேண்டும் என்ற குணத்தை அவரிடம் கற்றுக்கொண்டேன். ஜீவாவுக்கு 'கோ' படம் வெற்றி. அடுத்து 'ரவுத்திரம்', 'வந்தான் வென்றான்' படங்களும் வெற்றிபெற வாழ்த்துகிறேன். இவ்வாறு ஜெயம் ரவி பேசினார். விழாவில் எடிட்டர் மோகன், பிரமிட் நடராஜன், சத்யஜோதி தியாகராஜன், கே.முரளிதரன், டி.சிவா, கே.ராஜன், எல்.சுரேஷ், சுசீந்திரன், சீனு ராமசாமி, தம்பி ராமய்யா, சமுத்திரக்கனி, ராஜேஷ்.எம் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்.கண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை சின்மயி தொகுத்து வழங்கினார்.

விஐய் ஒரு பிரம்மாண்டம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விஐய் ஒரு பிரம்மாண்டம்

7/23/2011 11:44:12 AM

'வேலாயுதம்' படத்தில் விஜய்யின் பிரம்மாண்டம், பேசப்படுவதாக இருக்கும் என்று இயக்குனர் ஜெயம் ராஜா கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: 'வேலாயுதம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இது கிராமம், நகரம் என மாறி மாறி வரும் கதையை கொண்டது. ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி, சரண்யா மோகன் மற்றும் 15 வில்லன்கள் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். வழக்கமான விஜய்யின் படங்களில் என்ன இருக்குமோ, அதைவிட பத்து மடங்கு கமர்சியல் அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கிறது. பொதுவாகவே விஜய்யை பிரம்மாண்டம் என்பார்கள்.

இதில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமாக இருக்கும். இந்தப் படத்துக்காக விஜய் கொடுத்த ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்து மிரண்டு போனேன். அவரால் 5 நிமிடம் கூட ஷூட்டிங் தாமதமானதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். படப்பிடிப்பின்போது பல்வேறு பிறந்தநாள்கள் கொண்டாடப்பட்டன. சம்பந்தபட்டவர்களுக்கு தெரியாமலேயே சொந்த செலவில் 'கேக்' வாங்கி வந்து ஷாக் கொடுப்பார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கை மறக்கவே முடியாது. விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே காமெடி காட்சிகள் அதிகம் உள்ள படமாகவும் இது இருக்கும். விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. விரைவில் பாடல் வெளியீடு இருக்கும். இவ்வாறு ஜெயம் ராஜா கூறினார்.

நாகார்ஜுனா மகனை அடிக்கவில்லை! - காஜல்


நாகார்ஜுனா மகனை நான் அடித்ததாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று கூறியுள்ளார் காஜல் அகர்வால்.

நாகார்ஜுனா மகன் நாகசைதன்யாவும், காஜல் அகர்வாலும் தெலுங்கு படமொன்றில் இணைந்து நடிக்கின்றனர். படப்பிடிப்பில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும்,

இந்த மோதலில் நாக சைதன்யாவை காஜல் அகர்வால் அடித்ததாகவும் கூறப்பட்டது.

இது தெலுங்கு, தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யா ஜோடியாக 'மாற்றான்' தமிழ் படத்தில் காஜல் நடித்து வருகிறார்.

நாக சைதன்யாவுடனான மோதல் பற்றி காஜலிடம் நிருபர்கள் கேட்டனர்.

அவர் பதிலளிக்கையில், "நாகசைதன்யாவை நான் அடித்ததாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. இதுபோன்று ஆதாரமில்லாத தகவல்கள் எப்படி பரவுகின்றன என்று எனக்கு புரியவில்லை. படப்பிடிப்பில் நானும், நாகசைதன்யாவும் மிக அந்நியோன்னியமாகப் பழகினோம். எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை," என்றார்.

வீர மகன் ஒன்று வித்தாகிய நாள்


சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் கொடுரமான கரங்களில் தமிழினம் அவலத்தை அனுபவித்த மிகத் துயரமான நாள் யூலை 23 இன்றோடு 28 ஆண்டுகள் ஆகின்றது யூலைக் கலவரம் நிகழ்ந்தேறி..

மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் நினைவு நாள் இன்று (23-07-1983)

மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி
(சதாசிவம் செல்வநாயகம்)
கல்வியங்காடு, யாழ்
15.06.1953 - 23.07.1983

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்ற திருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்க வளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர்.

----------------------------------------------------------------------------------

1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள்.

நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர்.

முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை. வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும். என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.

எமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில், கண்ணிவெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும்.

விக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான். துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான்.

தம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை கூப்பிடுகின்றது.

செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான். அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்.

வெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் ''அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ"" என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும் அலறியது.

"அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப், பின்னால் ட்ரக்" என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

ஜீப்பை எம்மிடம் வரவிட்டு, பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புபவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன.

நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது? சிந்திக்க நேரமில்லை. உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.

சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை எடக'கும' எமக்குத் தெரியவில்லை. எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம்.

ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உன்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் அருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான். அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்டது. விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தான். அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும், ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை இறுக அமத்தினான். ஏன் பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம்.

ட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்.

தம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க, இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது. சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத்தொடங்கியது.

ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது. G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத்தொடங்கியது.

சற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.

ஆனால், இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்னமயாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது.

ட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது. வெடியன் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்டே நிற்கிறார். எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதுரியமான இராணுவத்தினர் ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு, மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. இத்துடன் ட்றக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது.

இதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜுப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கி திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான்.

அப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.

விக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து '"பசீர் காக்கா"" றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார். றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி செல்லி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார் காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை. அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான். 'சுடு" என்ற அப்பையா அண்ணை உடனே 'கவனம் எங்கட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு" என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின.

இதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் ''தம்பியிடம் ஓடு" என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர்.

ஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்துவிட்டது.

சாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி.

மதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து ''யாரது"" என்று முன்னே வந்தனர்.

''அது நான்ராப்பா"" என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கடை பக்கம் எப்படி என்றார். ''அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை"" என்றார் ரஞ்சன்.

''இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது, ஆனால், எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை, வா பார்ப்போம்"" என்றவாறு தன் பிரியத்திற்குரிய பG3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி.

மதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது.

இதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தையடைந்தான். அங்கு புலேந்திரன் சந்தோசத்தைக் காணவில்லை. 'எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்" எனக் கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து ''அண்ணா அவன் அனுங்குகிறான்." மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் அனுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். Gயின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது.

இதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோர் போரளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும் நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம்.

''கரையால் வாருங்கள்"" என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம். இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான்.

இத் தாக்குதல் இரவு நேரமாதலால் எம்மையும் இராணுவத்தினரையும் பேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து ''யாரது'' என்று வினவ அம்மான் ''அது நான் தம்பி" என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார்.

பொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க ''அம்மானைக் காணவில்லை"" என்று விக்ரர் கத்தினான். விக்ரரும் புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். ''டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது" என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரேலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன்.

வானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது.

லிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.

வான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது.


அன்புடன் கிட்டு

சிங்கள இனவெறி இராணுவ பயிற்சி - நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

படங்கள் – சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து 350 கட்சியினர் கைது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி்க் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளிக்கப்படுவதை எதிர்த்து இன்று ஆர்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.

நேற்று குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் முன்பு ஊட்டி, கோவை,திருப்பூர்,ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் இலங்கையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இனவெறி ராணுவத்தினருக்கு தமிழர்களின் உணர்வுகளை சிறிதும் மதிக்காமல் தமிழகத்திலேயே பயிற்சி அளிக்கும் இந்திய ராணுவத்தையும், இந்திய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்திலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 350 நாம் தமிழர் கட்சியினரை கைது செய்து குன்னூர் ஜெயின் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த ராசு, பென்சமின் (கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), இளைஞர் பாசறை ஒருங்கினைப்பாளர் பேரசிரியர் கல்யாண சுந்தரம், கோவை மாவட்ட வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த விஜய ராகவன், திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் சமரன் பாலா, ஒருங்கிணைப்பாளர் செல்வம், மற்றும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை தமிழ்செல்வன், வீர முருகன், பெரியநாயக்கன் பாளையம் ஆனந்தராஜ், மதுக்கரை ஆனந்த உள்ளிட்ட 350 நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.










2011 யூலை விடிவைத் தருமா? வரலாற்றுப் பதிவுகளின் மீள்பார்வை (காணொளி இணைப்பு)

தமிழர்களின் வரலாற்றில் யூலை மாதம் என்பது கனத்த ஒரு மாதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஐந்து ஆண்டுகளின் யூலை மாதங்கள் முக்கியமானவை. 1983ம் ஆண்டிற்கு முன்பே யூலை மாதம் தமிழர்களுடன் பின்னிப் பிணைந்து விட்டது.

1975ம் ஆண்டு யூலை மாதமே தமிழர்களின் துரோகியாகக் கருதப்பட்ட அல்பிரட் துரையப்பா பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலில் வைத்துச் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் விடுதலை இயக்கங்களின் ஆரம்பத்திற்கு, வளர்ச்சிக்கு வித்திட்டு தனித்தியங்கிய விடுதலை அபிமானம் கொண்ட நபர்களையெல்லாம் ஒன்று சேர வைத்தது.

அதன் பின்பு 1983ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு கண்ணிவெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதைச் சாட்டாக வைத்து சிறீலங்கா தேசம் தமிழர்களின் மீதான இனச் சுத்திகரிப்பு யுத்தத்தை அரச மயப்படுத்தி செய்திருந்தது. எனவே இதுவே விடுதலைப் போரிற்கு உரமேற்றிய மாதமாகவும் வரலாறு நினைவுகூரும் ஒரு மாதமாகவும் அமைந்து விட்டது

1983ம் ஆண்டு யூலை மாதத்தையே நாங்கள் கறுப்பு யூலையாக நினைவு கூர்ந்தாலும் இந்த மாதமே 1975ல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பேரெழுச்சிக்கு வித்திட்ட மாதமாகவும் அமையப் பெற்றது.

இவ்வாறு வளர்ந்த ஒரு விடுதலைப் போராட்டத்தில் 1996ம் ஆண்டு யூலை விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என மேற்குலக நாடுகள் அறிவிக்கும் ஒரு கரும்புலித் தாக்குதலிற்கு வழிவகுத்திருந்தது. 1987ம் ஆண்டு மேஜர் மில்லர் நெல்லியடியில் ஆரம்பித்து வைத்த கரும்புலித் தாக்குதலிருந்து தொடர்ந்து பல பாரிய தாக்குதல்கள் தென்னிலங்கையில் கூட நிகழ்த்த பெற்றிருந்தாலும் 1996ம் ஆண்டு யூலையில் இடம்பெற்ற தாக்குதல் மேற்குலக நாடுகளை விடுதலைப்புலிகள் பற்றிய வித்தியாசமான கண்ணோட்டத்திற்கு இட்டுச் சென்றது.

யாழ்ப்பாண இடம்பெயர்வு 1995ல் இடம் பெற்று வன்னிநிலப்பரப்பிற்கு விடுதலைப் போராட்டம் நகர்த்தப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் கட்டடப் பொருட்கள் திணைக்களத்தை திறப்பதற்காக வருகை தந்த வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சரான நிமால் டி சிறீபாலாவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் தப்ப சுமார் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டு பலர் படுகாயமடைந்தனர்.

இதனை அப்போதைய பிரித்தானியப் தூதர் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்தார். “இதுவரை விடுதலைப் போராட்டம் என்ற ஒரு சிறிய நியாயப்பாடு இருந்தது. ஆனால் இத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் இதுவரை நாளும் விடுதலைப்புலிகளிற்கு அடைக்கலம் தந்து அவர்களுடனே வாழ்ந்த மக்கள். இவர்களைக் கொல்லத் துணிந்ததானது பச்சைப் பயங்கரவாதம்” என எழுதியிருந்ததோடு,

கொழும்பிலுள்ள மேற்குலகத் தூதர்கள் பெரும்பாலானோர் தன்னைப் போன்றே இந்தக் கருத்தை ஏற்றுள்ளதோடு இந்தப் போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் போராட்டமாகவே பார்க்க வேண்டிய தேவையை விடுதலைப்புலிகள் ஏற்படுத்தி விட்டார்கள் எனத் தெரிவித்திருந்தார். உண்மையிலேயே உலகம் விடுதலைப்புலிகளை ஒடுக்க திராணி கொண்ட ஒரு துர்ப்பாக்கிய மாதமாக 1995ம் ஆண்டு யூலை அமைந்த போதும் அந்தத் தாக்குதலிற்கு காரணம் யார் என்பது இன்றுவரைத் தெரியவரவில்லை.

அதன்பிறகு கனத்த யூலையாக அமைந்தது கடந்த வருடம். ஆம் 2010ம் ஆண்டு யூலையும் தமிழர்களிற்கு ஒரு கனத்த யூலையாக “வேறு விதமாக” அமைந்து விட்டது. 2009 மே 19ம் திகதி ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் அமெரிக்காவானது தமிழ்மக்களின் தீர்வு குறித்து புலம்பெயர்ந்த தமிழர்களுடன் சிறீலங்கா அரசு பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.

அதுவே புலம்பெயர்ந்த தமிழர்களுடன் சிறீலங்கா பேசவேண்டும் என்ற நிலைப்பாடாக அமெரிக்காவால் தெரிவிக்கப்பட்டு வந்தபோதும், கடந்த வருடம் யூலை மாதமே திடீரென இலங்கைக்குச் சென்ற அமெரிக்கத் தென்னாசியப் பிரதிநிதி றொபேட் பிளாக் “இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரதிநிதிகளுடன்” இலங்கையரசு ஒரு ஒற்றுமைப்பாட்டிற்கு வர வேண்டும் என்று கூறி, இனி விடுதலைப்புலிகள் சார்பான புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுக்கான தேவையில்லை என்ற மறைமுக சமிக்ஞ்சையை வெளியிட்டுச் சென்றிருந்தார்.

இதுவே இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகளிடையே ஏற்படுத்தப்படும் கூட்டின், ஒற்றுமைக்கான தேடலின் கருவாகக் கூட அமைந்திருந்தது. ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், சிவாஜிலிங்கம், சிறீஸ்காந்தா என அனைவருமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உருப்பெற அதற்கு ஆதரவளிக்க எம்முடன் திரண்டது மனோ கணேசன் என்ற தென்னகத்து வேங்கை.

என்ன அதிசயம் ஈழத்தமிழரின் தலைமை இவ்வாறு இறுக்கம் பெற, தமிழர்களுடன் பேசுங்கள் என்று அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் சென்னையில் வைத்து நேரடியாகச் சொல்லும் மாதமாகவும், தமிழர்களின் தலைமை யார் என்பதை ஒரு சிறிய உள்ளாட்சித் தேர்தலில் தீர்மானிக்கிற மாதமாகவும் 2011ம் ஆண்டின் இன்றைய யூலை அமைந்து விட்டது. அதுவும் 1983ல் இனவாதம் உச்சக் கட்டத்தில் நின்ற அதே 23ம் திகதியில் இந்த நெருப்புப் பரீட்சை இன்று நடக்கிறது.

இருந்த போதும் 2011ம் ஆண்டு யூலை நிட்சயம் விடிவைத் தரும் என்பதற்கான கட்டியங்களையும் காட்டி நிற்கிறது. உலகத்தின் பால் உள்ள தமிழர்கள் அமைப்புக்கள் யாவும் ஒருமித்த குரலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரியுங்கள் என்று விடுக்கும் குரல் இதுவரை தமிழர் வரலாற்றில் இடம்பெற்றதில்லை. ஆனால் இதற்காகவே காத்திருந்தோம். இது ஈழத்தமிழர்களின் வரலாற்றில் புதிது. புதிது என்பதை விட அரிதிலும் அரிது என்பதே இதனை வர்ணிக்க சிறந்த சொல்லாடல்.

வரலாறு ஒருபோதும் ஒரு சாராருக்கு தொடர்ந்தும் இண்ணல்களைத் தந்து கொண்டேயிருக்கப் போவதில்லை. இண்ணல்களின் முடிவில் கூட இனியதொரு திருப்பம் பிறக்கும். ஏனென்றால் இது காலம் இட்ட கட்டளை. களங்கண்ட தமிழரின் வாழ்வியலின் தீர்விற்காக பேசு என்கிறது சர்வதேசம். பேசுவோம் என்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இனி சர்வதேசம் சங்கடப்படப்போவது சிறீலங்காவால். சிறீலங்கா முரண்டாலும் தமிழருக்கே வெற்றி! சிறீலங்கா பணிந்தாலும் தமிழருக்கே வெற்றி. புரியாத சமன்பாடு காலத்தால் காட்டப்படுகிறது. வெல்வதைத் தவிர மாற்றுவழியே இல்லாத ஒரு சமரசத்திற்கு தமிழினம் தன்னை இந்த யூலையில் தயார்ப்படுத்திக் கொள்கிறது.

vannan.kugendra@gmail.com



போர்க்குற்றவாளி ராஜபக்சவைக் காப்பாற்றுகிறது மத்திய அரசு!: பழ. நெடுமாறன்

ஐ.நா. நிபுணர் குழு ராஜபக்சவை ஒரு போர்க் குற்றவாளி என்று அறிவித்த பின்னரும், அவரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாது, ராஜபக்சவைக் காப்பாற்றத் தேவையான அனைத்தையும் செய்து வருகிறது என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர், தலித் கிறிஸ்தவர், தமிழக மீனவர் மற்றும் கச்சத்தீவு மீட்பு போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மதுரையில் கிறிஸ்தவ மனித உரிமை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கலந்துகொண்டு பேசினார்.

அவர், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்து ஐ.நா. சார்பில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அக்குழு ராஜபக்சவை ஒரு போர்க் குற்றவாளி என்று அறிவித்தது.

அதன் பின்னரும் ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியவில்லை. இது குறித்து மத்திய அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், ராஜபக்சவைக் காப்பாற்றத் தேவையான அனைத்தையும் மத்திய அரசு செய்து வருகிறது என்றார்.

முதல்வர் ஜெயலலிதாவை இலங்கை வருமாறு போர்க்குற்றவாளி மஹிந்த அழைப்பு!

தமிழர் பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல்தீர்வுக்கு வகை செய்யும் 13-வது பிளஸ் திருத்தம் குறித்து நாடாளுமன்றக் குழு இறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்னைகள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ஷே, 'த ஹிந்து' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அரசியல் தீர்வு எப்போது?

அரசியலமைப்பு சட்டத்தின்படி, அரசியல் தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றைப் பரிந்துரைக்குமாறு எனது கட்சியையும், இதர கட்சிகளையும் கேட்டுக்கொண்டுள்ளேன். அவ்வாறு அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் பரிந்துரைகளை அப்படியே நான் ஏற்றுக் கொள்வேன். இறுதியில், நாடாளுமன்றத்துக்கு அந்தத் தீர்வு கொண்டு செல்லப்படும்.

மும்பையே உதாரணம்!

பாதுகாப்பு விவகாரங்கள் அனைத்தும் அரசிடம் தான் இருக்க வேண்டும். இந்தியாவையே எடுத்துக்கொள்ளுங்கள்... மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல்களில் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையின் நடவடிக்கைகள் மெதுவாகவே இருக்கின்றன. ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசிடம் சென்று உத்தரவைப் பெற வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே தான் பாதுகாப்பு விவகாரங்களை அரசிடமே (இலங்கை அரசு) வைத்துள்ளோம்.

இராணுவமயமாகும் வடக்குப் பகுதிகள்!

வடக்குப் பகுதிகள் இராணுவமயமாகிறது என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. ஈராக்கில் என்ன நடக்கிறது? இவ்வளவு நாட்கள் ஆகியும் அங்கு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. இங்கு, போர் முடிந்தவுடன் 'கற்ற பாடங்கள் மற்றும் மறுவாழ்வுக்கான ஆணையம்' அமைப்பை அமைத்தேன்.

தெற்குப் பகுதியிலும் இராணுவ முகாம்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் இராணுவ முகாம்கள் உள்ளன. அந்த வகையில் தான் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் இராணுவ முகாம்கள் இயங்கி வருகின்றன. இது, இராணுவ ஆக்கிரமிப்பு இல்லை என்பதை உணர வேண்டும்.

சனல் 4 வீடியோ

சனல் 4 வெளியிட்டது ஒரு திரைப்படம். நிர்வாண கோலத்தில் உள்ளவர்களைக் கட்டி வைத்து பின்னால் இருந்து சுட்டுக் கொல்வது போன்ற காட்சிகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதில் கட்டி வைக்கப்பட்டிருப்பது தமிழர்கள் அல்ல. அவ்வாறு கட்டி வைக்கப்பட்டு சுடப்படுவது இலங்கை இராணுவத்தினர். அவர்களைச் சுட்டுக் கொல்பவர்கள் தான் விடுதலைப்புலிகள். சுடும் நபர்கள் அணிந்திருக்கும் பெல்ட், புலிகளுடையது. அதுபோல் இராணுவத்தினர் அணிந்திருக்க மாட்டார்கள். எனவே, அது திரைப்படம் தானே தவிர உண்மையான ஆவணப் படம் அல்ல. இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறோம்.

அந்தப் படத்தின் அசல் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்வதற்கு கேட்டிருக்கிறோம். இராணுவத்துக்கு எதிராக எந்தவித ஆதாரங்கள் இருந்தாலும், யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் அளிக்கலாம். நாங்கள் அவற்றின் மீது முழுமையாக விசாரிக்க காத்திருக்கிறோம்.

ஜெயலலிதாவுக்கு அழைப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இலங்கை வருமாறு, அவரைச் சந்தித்த இலங்கைத் தூதர் மூலம் அழைப்பு விடுத்திருந்தேன். அவர்கள் அதற்கு தயாராக இல்லாத பட்சத்தில் அல்லது நேரமின்மையாக இருக்கும் பட்சத்தில், அவர் இந்திய நாடாளுமன்றக் குழுவை அனுப்பலாம்.

இந்திய மத்திய அரசுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சு நடத்தி, அவரே நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி வைக்கலாம். தமிழ்நாடு மட்டுமின்றி, இதர மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களும் இங்கு வரலாம். அவர்கள் வடக்குப் பகுதியில் உள்ள நிலவரத்தை நேரடியாக ஆய்வு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த பேட்டியில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

என் அண்ணன் அழகிரிக்கு... : மதுரை போலீஸ் சோதனையில் சிக்கிய பரபரப்பு கடிதம்

மதுரை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ளார்.

இவரது வீடு- தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை புறநகர் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கின என்று தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சோதனையில் ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் எஸ்ஸார். கோபி குறிப்பிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில்,

’’என் உயிராக நினைத்து கொண்டிருக்கும் என் அண்ணன் அழகிரிக்கு... என் குடும்பமே கவுன்சிலர் லீலாவதி கொலையில் சம்பந்தப்படாமலேயே சிக்கியதால் மருதுவையும்,

மாமா முத்துராமலிங்கத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். அதனால் தான் ஒரு வெறியுடன் தங்களின் கட்டளையை செய்ய முடிந்தது.

அருப்புக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றிபெற செய்தோம். நான் பதவி கேட்கும் போதெல்லாம் நண்பர் சுரேஷ் (பொட்டு சுரேஷ்) “உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு பதவி கொடுத்தாகி விட்டது என்று திரும்ப திரும்ப சொல்வார்.

அப்படி பார்த்தால் தளபதியின் தங்கைக்கு நகராட்சி தலைவர் பதவி, தளபதிக்கு எம்.எல்.ஏ. சீட், மாநகர் மாவட்ட செயலாளர் பதவி, துணைமேயராக இருந்த கவுஸ்பாட்சாவுக்கு எம். எல்.ஏ. சீட் அவர்களெல்லாம் உங்களுக்கு என்ன தியாகம் செய்தார்கள்.

நான் செய்த தியாகத்தில் ஒரு சதவீதமாவது விசுவாசமாக நடந்திருப்பார்களா? நான் கவுன்சிலர் சீட் கேட்டேன். ஆவின் சேர்மன் பதவி கேட்டேன். எதையாவது கொடுத்தீர்களா? எனக்கு மட்டும் பதவியில் அமர ஆசை இருக்காதா? யாரையோ திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் நிறுத்தப்போகிறீர்கள். என்னை ஏன் மறந்தீர்கள்? ’’என்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில் பஸ் எரிப்பு, இடைத்தேர்தல் வன்முறை, அக்னி ராஜ், பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் வீடுகளில் நடந்த தாக்குதல், தா. கிருஷ்ணன் கொலை ஆகியவை பற்றி அவர் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்கள் மற்றும் அதில் தொடர் புடையவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அழகிரி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

எஸ்ஸார்.கோபி எனக்கு எந்த கடிதமும் எழுதவில்லை. போலீசார் போலியாக ஒரு கடிதத்தை தயார் செய்து அவதூறு பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றார். இதைத்தொடர்ந்து அந்த கடிதம் உண்மையா? என்று கண்டறிய தடயவியல் சோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கறுப்பு யூலையில் எரியுண்டுபோன ஒற்றை ஆட்சி: ச.ச.முத்து

ஈழத்து மனமெங்கும் துடைத்து எறிந்து

மறக்க முடியாவண்ணம் நிறைந்திருக்கும்

கறுப்புயூலை நினைவுகள்.

ஓற்றைஆட்சிக்குள் வாழும்

தேசியக்கனவு அன்றை நாட்களில்

தென்னிலங்கை தெருக்களின்

நடுவிலே வீசப்பட்டுக் கிடந்தன.

ஒன்றாகச் சேர்ந்து ஒருமித்தெழுந்து

வர்க்கப்புரட்சி செய்யும்

பொதுவுடமைப் புரட்சியின்

வெட்டரிவாள் அவர்கள் கையிலும்

சுத்தியல் எங்கள் கையிலுமாக

நிரந்தரமாக பிரிந்தநாட்கள் அவை.

சிங்களதேசக் கொடியில் நின்ற சிங்கம்

நீட்டிய வாளுடன் தமிழரின்

உயிர்குடிக்க சிங்களதெருக்கள்

ஒவ்வொன்றிலும் உலா வந்த நாட்கள் இவை.


காலம் காலமாக சிங்களதேசத்தின்

வேருக்கு நீர் பாய்ச்சிய தமிழரின்

உடமைகள் உல்லாம் உருவப்பட்டு

ஆணிவேரும் அறுக்கப்பட்டு

துரத்தப்பட்ட நன்றிகொன்ற தினங்கள் அவை.

கொழும்புத்துறைமுகத்தில் இருந்து

தமிழரை ஏற்றிக்கொண்டு கப்பல்

காங்கேசன்துறை வந்து நின்றபோதே

இலங்கைத்தீவு ஒரு தேசம் என்ற

வார்த்தை பாக்குநீரிணைக்குள் அமிழ்ந்துபோனது காண்.

எரித்தும் அடித்தும் குதறப்பட்ட

தமிழர்களின் சடலங்களின் மீதும்

தென்னிலங்கை அகதிமுகாம்களில்

கட்டியிருந்த ஒற்றை ஆடைகளுடன்

உணவுக்கு வரிசையில் நின்ற

தமிழர்களின் நெஞ்சுக்குள்ளும்

போர் என்றால் போர் என்ற

பேரின சனாதிபதியின் பிரகடனம்தான்

சிங்களத்தின் ஒரே செய்தியாக

அழிக்கமுடியாமல் எழுதப்பட்டது அப்போது.

தென்னிலங்கைத் தெருக்களில் தமிழர்

உயிர்குடித்து வழிந்துஓடிய ஆதிக்கவெறி

வெலிக்கடையின் மதில்கடந்து உள்நுழைந்தும்

உயிர்பறித்தும் கண்அகழ்ந்தும்

புத்தருக்கு படையலிட்டு வெறியாடியது.

அன்றைக்கு புத்தன் நினைத்திருப்பான்

வெறும் சித்தார்த்தனாகவே இருந்திருக்கலாம் என்று.

அரசமரத்துக்கு கீழிருந்த நாட்களுக்காக

நிச்சயம் ரத்தக் கண்ணீர் வடித்துமிருப்பான்.

இன்றைக்கு இருபத்திஎட்டு ஆண்டுகள்

ஓடியும் உருண்டும் கடந்தும் போனதுதான்.

அந்த நாட்களில் சிங்கள தெருக்களில்

கோடுபோட்ட பியாமா சாரத்துடன்

வெறியாட்டமாடிய தெருக்கோடி சண்டியரும்,

தென்னிலங்கை அலுவலகங்களில்

ஒன்றாய் உண்டுகழித்து வேலை செய்த

ரை கட்டிய சிங்கள லொக்குமாத்தையாக்களும்

ஒரே செய்தியையே தமிழருக்கு சொல்லினர்.

இது உங்கள் தேசமல்ல.

இது உங்கள் நாடும் அல்ல.

இன்றைக்கும் தொடரும் சிங்களத்தின்

செய்தியும் பிரகடனமும் இதுதான்.


கடந்துபோகும் ஒவ்வொரு கறுப்புயூலையும்

இன்னும் இன்னும் அழுத்தமாக

சொல்லிக் கொண்டு போகிறது.

சிறீலங்கா தமிழரின் தேசமல்ல.

தமிழரின் தாயகம் தமிழீழம் என்றே!

இந்த கறுப்புயூலையிலும்

இந்த முடிவே இன்னும் ஆழமாக மனதுக்குள்.!

எங்களுக்கென்றொரு தாயகம் வேண்டும்.!


ஈழமுரசு:19-25 யூலை 2011

2ம் இணைப்பு: நோர்வேயில் பாரிய குண்டு வெடிப்பு - இருவர் பலி (படங்கள், காணொளி இணைப்பு)

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பிரதமர் அலுவலகம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொலன்பெர்க்கின் காரியாலயம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இதுவரைக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

எனினும், கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து ஒஸ்லோ நகரின் முக்கிய வீதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் பிரதமருக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ ஆபத்து ஏற்படவில்லை என நம்புவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தங்கியிருக்கும் இடம் பற்றிய விபரங்களை வெளியிட வேண்டாம் என காவல்துறையினர் கோரியதாகவும், இதனால் தங்கியிருக்கும் இடம் பற்றிய தகவல்களை வழங்க முடியாது எனவும் பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொலன்பெர்க் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை தினம் பொது விடுமுறை என்பதனால் சன நெரிசல் குறைவாகக் காணப்பட்டதாகவும், இல்லையெனில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் எனவும் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குண்டுத் தாக்குதல் சம்பவம் நோர்வே முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.













நோர்வே குண்டுத் தாக்குதலுக்கு தமிழீழ அரசாங்கம் கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது

நோர்வேயில் இடம்பெற்ற கொடூர குண்டுத்தாக்குதலை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டித்திருப்பதுடன், நோர்வேயின் அரசுக்கும், மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக, நா.த.அரசாங்கத்தின் பிரதமர் விசுநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

உலகில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக அயராது பாடுபட்டு வந்துள்ள நோர்வேயிய மண்ணில், இடம்பெற்றுள்ள இக்கொடூரத் தாக்குதலினால், நாங்கள் மிகவும் கவலை அடைகின்றோம்.

இலங்கைத் தீவினில் அமைதியை நிலைநாட்டும் நோக்குடன், சிறிலங்கா அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில், சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதில் நோர்வே அயராது உழைத்ததை இச் சந்தர்ப்பத்தில் நாங்கம் நினைவு கூருகின்றோம்.

இன்றைய கடினமான இத்தருணத்தில், தமிழீழ மக்களாகிய நாங்கள், நோர்வே மக்களுடன் நிற்கின்றோம் என்பதை இவ்வேளை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலகில் சமாதானத்தை வேண்டி நிற்கும் நோர்வேயிய மண்ணில், நடந்தேறியுள்ள இத்தகையை தாக்குதல், உலகெங்கும் சமாதனத்தை விரும்பும் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே கருதப்பட வேண்டியதொன்றாகும்.

அனைத்துலக மட்டத்தில் சமாதானத்தை விரும்பும் அனைவரும் இந்தத் தாக்குதலை ஒருங்கே கண்டிக்க வேண்டும் எனவும் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் வேண்டியுள்ளார்.

நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

எமது மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்றால் எமது மண் விடுதலை பெற வேண்டும்: நக்கீரன்

இந்த ஆண்டு 28 ஆவது கருப்பு யூலை நினைவு ஆண்டாகும். தமிழ் மக்களைப் பொறுத்தளவில் கருப்பு யூலை தமிழர்களைப் பூண்டோடு அழிக்கச் சிங்கள – பௌத்த பேரினவாதிகள் திட்டமிட்டு மேற்கொண்ட இனப் படுகொலை (genocide) ஆகும்.

இனப்படுகொலைக்கு பன்னாட்டு சட்டத்தில் சொல்லப்பட்ட வரைவிலக்கணம் 1983 கருப்பு யூலைக்கு முற்றிலும் பொருந்தும். கறுப்பு யூலை தமிழ்மக்களின் ஆழ்மனதில் ஆணி அடித்தது போல் மாறாத காயத்தையும் தீராத வடுவையும் ஏற்படுத்தியுள்ளது. அதனை எத்தனை ஊழி சென்றாலும் யாராலும் அழிக்க முடியாது. ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் நாடு முழுதும் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அதிவுயர் பாதுகாப்பு வெலிக்கடைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையைச் செய்த எவரும் இதுவரையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படுகொலை நிகழ்வானது ஒரே வாரத்தில் ஆனால் வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. முதலாவது படுகொலை யூலை 23, 1983 அன்று 35 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டனர். இரண்டாவது படுகொலை இரண்டு நாட்களின் பின்னர் யூலை 28 ல் இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். கறுப்பு யூலை சிங்கள இனத்தையும் தமிழ் இனத்தையும் மனத்தினால், காயத்தினால், வாக்கினால் ஒன்று சேராதபடி நிரந்தரமாகப் பிரித்து வைத்து விட்டது.

1983 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது சிங்கள இனத்துக்கும் தமிழ் இனத்துக்கும் இடையில் உள்ள இடைவெளி – குறிப்பாக முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் - ஆழ்கடல் போல் இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது.

யூலை, 1983 இனப்படுகொலை மூலம் தமிழர்களை நாட்டைவிட்டுத் துரத்த வேண்டும் என்பது அன்றைய ஜெயவர்த்தன அரசின் குறிக்கோளாக இருந்தது. தமிழர்களை நாட்டை விட்டுத் துரத்துவதன் மூலம் அவர்களது எண்ணிக்கையைக் குறைத்துத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என ஜெயவர்த்தனா கணக்குப் போட்டார்.

ஆன காரணத்தினால் தமிழர்கள் தொகை தொகையாக இலங்கையை விட்டு வெளியேறுவதை அவர் உள்ளுர வரவேற்றார். அன்றைய சிங்கள – பவுத்த இனவாதிகளது எண்ணமும் அதுவாகவே இருந்தது.நல்ல காலமாகத் தமிழ்மக்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டுத் தப்பி ஓடவில்லை.

ஓடியிருந்தால் ஜெயவர்த்தனாவின் குறிக்கோள் தன்பாட்டில் நிறைவேறியிருக்கும். இனச் சிக்கல் தானாகவே தீர்ந்திருக்கும்.ஜெயவர்த்தனா போட்ட கணக்குக்கு எதிர்மாறாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வெளியில் இருந்தவாறு விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்தார்கள்.

இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் சிங்கள – பவுத்த இனவாதிகளுக்குத் தொண்டையில் சிக்கிய முள்போல் இருக்கிறார்கள்.முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்கள் பற்றிய சிங்கள அரசின் அச்சம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் இன்றைய ஆட்சியாளர்களது தூக்கத்தை கலைத்துவருகின்றன. அதனால் இந்த அமைப்புளுக்கு எதிரான பரப்புரையை சிறிலங்கா அரசு முடுக்கிவிட்டுள்ளது.

கோடிக் கணக்கான பணத்தைப் பொதுமக்கள் தொடர்பு அமைப்புக்களுக்குக் (Public Relations firms) கொடுத்து புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான பரப்புரையை சிறிலங்கா அரசு செய்கிறது.

வி.புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களை ஆதரிக்கும் தமிழர் அமைப்புக்களையும் தடைசெய்ய வேண்டும் அல்லது அவர்களது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா இனவாத அரசு மேற்குலக நாடுகளின் காலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு இருக்கிறது.

அதில் அவர்கள் பேரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். வி.புலி ஆதரவாள ஆதரவாளர்கள் புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பல நாடுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோருமே தமிழ்த் தேசியத்தை நேசிக்கிறார்கள் வெளியில் இருந்து கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குத் தோள் கொடுக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. கணிசமான தொகையினர் தாயக மண்ணையும் அங்கு அல்லல்பட்டு அழுது கண்ணீர் விடும் மக்களையும் மறந்துவிட்டார்கள்.

புலி பிடித்துக்கொண்டு போய் கட்டி வைத்துப் பணம் கேட்டு சித்திரவதை செய்தார்கள். அதற்குப் பயந்து ஓடி வந்துவிட்டேன் என்று ‘கதை” எழுதிக் குடியுரிமை பெற்றவர்களும் நாட்டை மறந்துவிட்டார்கள்.

நாங்கள் தமிழ்க் கனேடியர்கள் அல்ல. நாங்கள் கனேடியர்கள். கனடிய எல்லையிலேயே போராட்டம், விடுதலை, தாயகம், தேசியம், தன்னுரிமை எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு வந்துவிட்டோம்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்னும் சிலர் “நாங்கள் நாட்டை விட்டு ஓடிவந்திராவிட்டால் இத்தறுதி செத்துப் புதைத்த இடத்திலும் புல்லும் முளைத்திருக்கும், நல்ல காலம் தப்பி வந்துவிட்டோம். புதிய வாழ்வு ஒன்றைத் தொடங்க வாய்ப்பளித்த கனடாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்” எனக் கூறுகிறார்கள். இதனை மனதுக்குள் சொல்லிக் கொண்டால் பருவாயில்லை. வெட்கமோ துக்கமோ இல்லாது காற்றலையில் வந்து சொல்கிறார்கள்.

ஜெயவர்த்தனாவின் பின் ஆட்சிக் கட்டில் ஏறிய சிங்கள – பவுத்த இனவாதிகளின் குறிக்கோளும் தமிழர்களைக் கொல்வதின் மூலம் அவர்களது எண்ணிக்கையை குறைப்பதுதான். பல விதத்தில் அவரையும் இவர்கள் மிஞ்சிவிட்டார்கள். அமைதிக்கான போர் என்ற முழக்கத்தோடு சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா 1995 இல் வடக்கில் பாரிய படை நடவஎக்கைகளை மேற்கொண்டார். தமிழ்மக்களுக்கு எதிராகக் கொடிய போரை முடுக்கிவிட்டார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றி சிங்கக் கொடியை சந்திரிகா குமாரதுங்கா பறக்கவிட்டார். தமிழ்மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். இலட்சக் கணக்கில் வீடு வாசல்களை இழந்து இடம் பெயர்ந்து ஏதிலியானார்கள்.

இப்போது ஆட்சித்தலைவர் மகிந்தா இராசபக்சே ஜே.ஆர். ஜெயவர்த்தனாவையே “நல்லவன்” ஆக்கிவிட்டார். “ஜே.ஆர். ஜெயவர்த்தனா பருவாயில்லை” என்று சொல்ல வைத்துவிட்டார்.
1983 யூலை மாத இனப் படுகொலையில் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். இன்று முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்கு முன்னும் பின்னும் சிங்களப் படையினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 70,000 இருக்கும் என்று சொல்கிறார்கள். வெள்ளை வானுக்குப் பயந்து நூற்றுக் கணக்கான தமிழ் வணிகர்கள், ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டே வெளியேறி விட்டார்கள். 2005 - 2010 காலப்பகுதியில் 34 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் தமிழர்கள் 30, சிங்களவர் 3, முஸ்லிம் ஒருவர்.

கருப்பு யூலை இனப் படுகொலைக்கு இரண்டு கிழமைகளுக்கு முன்னர் இலண்டனில் இருந்து வெளியாகும் Daily TelegraphDaily (யூலை 11, 1983) ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை நேர்காணல்கண்டு ஒரு செய்தியை வெளியிட்டது.

"I am not worried about the opinion of the Tamil people.. now we cannot think of them, not about their lives or their opinion ... Really if I starve the Tamils out, the Sinhala people will be happy.”

“நான் தமிழ்மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப் படவில்லை. அவர்கள் பற்றி நாம் இப்போது சிந்திதுப் பார்க்க முடியாது. அவர்களது உயிர்கள் பற்றியோ நினைப்புப் பற்றியோ……… சொல்லப்போனால் நான் தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.”கருப்பு யூலை இனப் படுகொலை தொடங்கி 5 நாள்கள் மட்டும் ஆட்சித் தலைவர் ஜெயவர்த்தனா வெளியில் தலைகாட்டவே இல்லை. பின்னர் தொலைக்காட்சியில் தோன்றிய போது அவர் தமிழ் மக்களை விளித்து ஒரு ஆறுதல் வார்த்தை கூடச் சொல்லவில்லை. மாறாக வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் பேசினார். “சிங்கள மக்களது கோரிக்கைகளையும் அவர்களது தேசிய மரியாதையையும் ஏற்றுக் கொள்ளும் காலம் வந்து விட்டது” ("the time had come to accede to the clamour and the national respect of the Sinhalese people" ) என ஜெயவர்த்தனா மார் தட்டினார்.

ஜெயவர்த்தனாவின் மனப்பான்மை இன்றும் தொடர்கிறது. மகிந்தா இராசபக்சே ஜெயவர்த்னாவைப் போலவே தமிழ்மக்களுக்குத் தாயகம் என்று ஒன்றில்லை, தமிழர்கள் ஒரு தேசிய இனம் அல்ல, தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை கிடையாது, அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தின் கீழ்த்தானும் தீர்வு இல்லை என்கிறார். அனைத்துக் கட்சிக் குழுவின் அறிக்கையைக் குப்பைக் கூடைக்குள் எறிந்துவிட்ட மகிந்த இராசபக்சே இப்போது பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில ஏறியது போல இனச் சிக்கலைத் தீர்க்க நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது காலத்தை இழுத்தடிக்கும் முயற்சியாகும்.

இன்று யாழ்ப்பாணக் குடாநாடு இனவாத வெறிபிடித்த இராணுவத்தின் இரும்புப் பிடியில் சிக்குண்டு இருக்கிறது. அங்கு நிரந்திரமாக நிறுத்தப்பட்டுள்ள 50,000 ராணுவத்தினரின் ஆட்சியே நடைபெறுகிறது. தமிழ் அரச ஊழியர்களுக்கு இராணுவதளபதியே கட்டளை பிறப்பிக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களை சாதாரண இராணுவ சிப்பாய்கள் தாக்குகிறார்கள். இராணுவத்தின் விருப்பு வெறுப்பின் படியே அங்கு யாரும் எதையும் செய்ய முடியும். அங்கு சனநாயகம், சுதந்திரம், இயல்பு வாழ்க்கை என்பதெல்லாம் மருந்துக்கும் கிடையாது.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் மட்டுமல்ல அதற்குப் பின்னரும் சரண் அடைந்த வி.புலித் தளபதிகளும் போராளிகளும் இராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இராணுவ புலனாய்வுப் பிரிவு மக்களது ஒவ்வொரு அசைவையும் வேவு பார்க்கிறது. இராணுவ விதானைமார் எல்லா ஊர்களுக்கும் நியமிக்கப் பட்டுள்ளார்கள். விளையாட்டுப் போட்டியா? கோயில் திருவிழாவா? திருமண வீடா? எதுவானாலும் இராணுவத்திடம் முன் அனுமதி பெறவேண்டும். இராணுவ தளபதிகளுக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டும். வருகிற இராணுவ தளபதிகளுக்கு பூரண கும்ப மாலை மரியாதை செய்யப்பட வேண்டும்.

நக்கீரன்
athangav@sympatico.ca

நடிகை ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைப்பார் என்று இந்தியாவில் பங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் சுவாமி நித்தியானந்தா நடத்திக் காட்டிய வித்தை (வீடியோ இ


கடந்த 15 ஆம் திகதி படுதோல்வி அடைந்தது. வெளிநாட்டு சீடர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

மக்களை ஏமாற்றுகின்றார் நித்தியானந்தா என்று ஊடகவியலாளர் ஒருவர் ஆவேசமாக கூச்சல் போட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் உலகம் முழுவதும் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியானதால் நித்தியானந்தாவின் உண்மையான முகம் மக்களிடம் அம்பலம் ஆகி இருந்தது.



நித்தியானந்தா கர்நாடக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்து இருக்கிறார். ரஞ்சிதா அது வரை காலமும் தலை மறைவாகி இருந்தார். மக்களிடம் மதிப்பிழந்த நித்தியானந்தா அண்மையில் சென்னை வந்து ரஞ்சிதாவுடன் ஊடகவியலாளர் மாநாடு நடத்தினார். செய்தி நிறுவனங்கள் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார்.

இவரது ஆசிரமத்தில் கடந்த 15 ஆம் திகதி குரு பூர்ணிமா பூஜை நடந்தது. வெகு விமரிசையாக கொண்டாடினார் நித்தியானந்தா. ரஞ்சிதா உட்பட ஏராளமான பக்தர்கள், வெளிநாட்டு சீடர்கள் அவரை சுற்றி அமர்ந்து இருந்தனர். ஒரு வித்தை புரியப் போகின்றார் என்று அப்போது நித்தியானந்தா அறிவித்தார். குண்டலினி சக்தி மூலம் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக பக்தர்களை அந்தரத்தில் மிதக்க வைக்க போகிறார் என்றார்.

அந்தரத்தில் மிதக்கின்றமை சிறிய விடயம், வெற்றுக் காசோலை கொடுத்து ஏழையை பணக்காரனாக்குகின்றமை போன்றதுதான் அது, குண்டலினியில் ஈடுபட்டு இச்சக்தியை பக்தர்கள் அடைகின்றமைக்குள் வயதாகி விடும். அதனால் பக்தர்களின் குண்டலினி சக்தியை உடனடியாக எழுப்பிக் காட்டப் போகின்றார் என்றார். சவால் விடும் தோரணையில் அறிவித்தார்.

இதை அடுத்து ரஞ்சிதா உட்பட பக்தர்கள் அனைவரும் அந்தரத்தில் மிதக்க தயாராயினர். சிம்மாசனத்தில் அமர்ந்து கையில் வாள், கேடயம் போன்றவற்றை வைத்துக் கொண்டு நித்தியானந்தா ஏதோ மந்திரம் முணுமுணுத்தார். பிறகு வாயை குவித்து காற்றை ஊதினார். நடக்கட்டும் என்பது போல் கைகளை அசைத்தார். எல்லோரையும் குதிக்க சொன்னார்.

குதித்து கொண்டே இருக்கின்றபோது ஒரு கட்டத்தில் சர்ரென மேலே எழும்பி அந்தரத்தில் மிதக்கலாம் என்றார். இதை அடுத்து எல்லோரும் சப்பாணி கொட்டி உட்கார்ந்தபடியே குதிக்க தொடங்கினர். விநோத ஒலிகளை எழுப்பிய வண்ணம் குதித்தனர். இக்காட்சி ஒரே நேரத்தில் ஏராளமான தவளைகள் தாவி குதிப்பதை போலிருந்தது.

எங்கே அந்தரத்தில் பறந்து போய் கீழே விழுந்தால் அடிபட்டு விடுமோ? என்கிற அச்சத்தில் சிலர் தலைக் கவசம் அணிந்து இருந்தனர். சன்னி வந்தது போல எல்லோரும் குதித்தமைதான் மிச்சம். யாரும் மிதக்கவில்லை. சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் நித்யானந்தா. ரஞ்சிதாவை பார்த்து, ம்...நீயும் குதி...ம் என்பது போல சைகை காட்டினார்.

அடுத்த நிமிடம் டிசைனர் சேலையை இடுப்பில் செருகிக் கொண்டு உட்கார்ந்தபடியே சர்வாங்கமும் அதிர குதி குதியெனக் குதித்தார் ரஞ்சிதா. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவருக்கும் மேலே மிதக்கின்ற ஆசை வந்தது. மிதக்க வைக்க சொல்லி நித்தியானந்தாவிடம் கேட்டார். நித்தியானந்தா சளைக்கவில்லை.

ஊடகவியலாளரையும் குதிக்க சொன்னார். தலைக் கவசம் மாட்டிக்கொண்டு ஊடகவியலாளரும் உட்கார்ந்த படியே துள்ளி குதித்தார். ஆசிரமம் முழுக்க இப்படி ஒரே துள்ளலாக இருந்ததே தவிர யாரும் அந்தரத்தில் மிதக்கவில்லை. தீவிரமாக குதித்த ரஞ்சிதா மல்லாந்து விழுந்தார். ஆனாலும் சிரித்தபடி எழுந்து உட்கார்ந்தார்.

கடைசி வரை யாரும் மேலே மிதக்கவில்லை என்பதால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. வேடம் மீண்டும் கலைந்து விட்டதை மறைக்க அசட்டு சிரிப்புடன் விளக்கம் கூற முயன்றார் நித்தியானந்தா. ஆனால் சும்மா குதித்து ஆத்திரப்பட்ட ஊடகவியலாளரோ நித்தியானந்தாவுடன் வாக்குவாதம் செய்தார்.

மக்களை முட்டாளாக்கும் விதத்தில் இன்னும் எத்தனை காலம்தான் இப்படி வித்தை காட்டப் போகின்றார்? என்று கோபமாக கேட்டார். வெளிநாட்டு சீடர்கள் சிலரும் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினர். அவர்களை உள்நாட்டு சீடர்கள் சமாதானப்படுத்தி உட்கார வைத்தனர்.

கனத்த யூலைகள் – 2011 யூலை விடிவைத் தருமா? வரலாற்றுப் பதிவுகளின் மீள்பார்வை


தமிழர்களின் வரலாற்றில் யூலை மாதம் என்பது கனத்த ஒரு மாதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஐந்து ஆண்டுகளின் யூலை மாதங்கள் முக்கியமானவை. 1983ம் ஆண்டிற்கு முன்பே யூலை மாதம் தமிழர்களுடன் பின்னிப் பிணைந்து விட்டது.



1975ம் ஆண்டு யூலை மாதமே தமிழர்களின் துரோகியாகக் கருதப்பட்ட அல்பிரட் துரையப்பா பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலில் வைத்துச் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் விடுதலை இயக்கங்களின் ஆரம்பத்திற்கு, வளர்ச்சிக்கு வித்திட்டு தனித்தியங்கிய விடுதலை அபிமானம் கொண்ட நபர்களையெல்லாம் ஒன்று சேர வைத்தது.

அதன் பின்பு 1983ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு கண்ணிவெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதைச் சாட்டாக வைத்து சிறீலங்கா தேசம் தமிழர்களின் மீதான இனச் சுத்திகரிப்பு யுத்தத்தை அரச மயப்படுத்தி செய்திருந்தது. எனவே இதுவே விடுதலைப் போரிற்கு உரமேற்றிய மாதமாகவும் வரலாறு நினைவுகூரும் ஒரு மாதமாகவும் அமைந்து விட்டது

1983ம் ஆண்டு யூலை மாதத்தையே நாங்கள் கறுப்பு யூலையாக நினைவு கூர்ந்தாலும் இந்த மாதமே 1975ல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பேரெழுச்சிக்கு வித்திட்ட மாதமாகவும் அமையப் பெற்றது.

இவ்வாறு வளர்ந்த ஒரு விடுதலைப் போராட்டத்தில் 1996ம் ஆண்டு யூலை விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என மேற்குலக நாடுகள் அறிவிக்கும் ஒரு கரும்புலித் தாக்குதலிற்கு வழிவகுத்திருந்தது. 1987ம் ஆண்டு மேஜர் மில்லர் நெல்லியடியில் ஆரம்பித்து வைத்த கரும்புலித் தாக்குதலிருந்து தொடர்ந்து பல பாரிய தாக்குதல்கள் தென்னிலங்கையில் கூட நிகழ்த்த பெற்றிருந்தாலும் 1996ம் ஆண்டு யூலையில் இடம்பெற்ற தாக்குதல் மேற்குலக நாடுகளை விடுதலைப்புலிகள் பற்றிய வித்தியாசமான கண்ணோட்டத்திற்கு இட்டுச் சென்றது.

யாழ்ப்பாண இடம்பெயர்வு 1995ல் இடம் பெற்று வன்னிநிலப்பரப்பிற்கு விடுதலைப் போராட்டம் நகர்த்தப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் கட்டடப் பொருட்கள் திணைக்களத்தை திறப்பதற்காக வருகை தந்த வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சரான நிமால் டி சிறீபாலாவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் தப்ப சுமார் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டு பலர் படுகாயமடைந்தனர்.

இதனை அப்போதைய பிரித்தானியப் தூதர் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்தார். “இதுவரை விடுதலைப் போராட்டம் என்ற ஒரு சிறிய நியாயப்பாடு இருந்தது. ஆனால் இத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் இதுவரை நாளும் விடுதலைப்புலிகளிற்கு அடைக்கலம் தந்து அவர்களுடனே வாழ்ந்த மக்கள். இவர்களைக் கொல்லத் துணிந்ததானது பச்சைப் பயங்கரவாதம்” என எழுதியிருந்ததோடு,

கொழும்பிலுள்ள மேற்குலகத் தூதர்கள் பெரும்பாலானோர் தன்னைப் போன்றே இந்தக் கருத்தை ஏற்றுள்ளதோடு இந்தப் போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் போராட்டமாகவே பார்க்க வேண்டிய தேவையை விடுதலைப்புலிகள் ஏற்படுத்தி விட்டார்கள் எனத் தெரிவித்திருந்தார். உண்மையிலேயே உலகம் விடுதலைப்புலிகளை ஒடுக்க திராணி கொண்ட ஒரு துர்ப்பாக்கிய மாதமாக 1995ம் ஆண்டு யூலை அமைந்த போதும் அந்தத் தாக்குதலிற்கு காரணம் யார் என்பது இன்றுவரைத் தெரியவரவில்லை.

அதன்பிறகு கனத்த யூலையாக அமைந்தது கடந்த வருடம். ஆம் 2010ம் ஆண்டு யூலையும் தமிழர்களிற்கு ஒரு கனத்த யூலையாக “வேறு விதமாக” அமைந்து விட்டது. 2009 மே 19ம் திகதி ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் அமெரிக்காவானது தமிழ்மக்களின் தீர்வு குறித்து புலம்பெயர்ந்த தமிழர்களுடன் சிறீலங்கா அரசு பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.

அதுவே புலம்பெயர்ந்த தமிழர்களுடன் சிறீலங்கா பேசவேண்டும் என்ற நிலைப்பாடாக அமெரிக்காவால் தெரிவிக்கப்பட்டு வந்தபோதும், கடந்த வருடம் யூலை மாதமே திடீரென இலங்கைக்குச் சென்ற அமெரிக்கத் தென்னாசியப் பிரதிநிதி றொபேட் பிளாக் “இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரதிநிதிகளுடன்” இலங்கையரசு ஒரு ஒற்றுமைப்பாட்டிற்கு வர வேண்டும் என்று கூறி, இனி விடுதலைப்புலிகள் சார்பான புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுக்கான தேவையில்லை என்ற மறைமுக சமிக்ஞ்சையை வெளியிட்டுச் சென்றிருந்தார்.

இதுவே இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகளிடையே ஏற்படுத்தப்படும் கூட்டின், ஒற்றுமைக்கான தேடலின் கருவாகக் கூட அமைந்திருந்தது. ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், சிவாஜிலிங்கம், சிறீஸ்காந்தா என அனைவருமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உருப்பெற அதற்கு ஆதரவளிக்க எம்முடன் திரண்டது மனோ கணேசன் என்ற தென்னகத்து வேங்கை.

என்ன அதிசயம் ஈழத்தமிழரின் தலைமை இவ்வாறு இறுக்கம் பெற, தமிழர்களுடன் பேசுங்கள் என்று அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் சென்னையில் வைத்து நேரடியாகச் சொல்லும் மாதமாகவும், தமிழர்களின் தலைமை யார் என்பதை ஒரு சிறிய உள்ளாட்சித் தேர்தலில் தீர்மானிக்கிற மாதமாகவும் 2011ம் ஆண்டின் இன்றைய யூலை அமைந்து விட்டது. அதுவும் 1983ல் இனவாதம் உச்சக் கட்டத்தில் நின்ற அதே 23ம் திகதியில் இந்த நெருப்புப் பரீட்சை இன்று நடக்கிறது.

இருந்த போதும் 2011ம் ஆண்டு யூலை நிட்சயம் விடிவைத் தரும் என்பதற்கான கட்டியங்களையும் காட்டி நிற்கிறது. உலகத்தின் பால் உள்ள தமிழர்கள் அமைப்புக்கள் யாவும் ஒருமித்த குரலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரியுங்கள் என்று விடுக்கும் குரல் இதுவரை தமிழர் வரலாற்றில் இடம்பெற்றதில்லை. ஆனால் இதற்காகவே காத்திருந்தோம். இது ஈழத்தமிழர்களின் வரலாற்றில் புதிது. புதிது என்பதை விட அரிதிலும் அரிது என்பதே இதனை வர்ணிக்க சிறந்த சொல்லாடல்.

வரலாறு ஒருபோதும் ஒரு சாராருக்கு தொடர்ந்தும் இண்ணல்களைத் தந்து கொண்டேயிருக்கப் போவதில்லை. இண்ணல்களின் முடிவில் கூட இனியதொரு திருப்பம் பிறக்கும். ஏனென்றால் இது காலம் இட்ட கட்டளை. களங்கண்ட தமிழரின் வாழ்வியலின் தீர்விற்காக பேசு என்கிறது சர்வதேசம். பேசுவோம் என்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இனி சர்வதேசம் சங்கடப்படப்போவது சிறீலங்காவால். சிறீலங்கா முரண்டாலும் தமிழருக்கே வெற்றி! சிறீலங்கா பணிந்தாலும் தமிழருக்கே வெற்றி. புரியாத சமன்பாடு காலத்தால் காட்டப்படுகிறது. வெல்வதைத் தவிர மாற்றுவழியே இல்லாத ஒரு சமரசத்திற்கு தமிழினம் தன்னை இந்த யூலையில் தயார்ப்படுத்திக் கொள்கிறது.

Friday 22 July 2011

கறுப்பு யூலை தினத்தில் அடக்குமுறையாளர் முகத்தில் கரிபூசுவோம்! வல்வெட்டித்துறை மண்ணில் இருந்து அவசர வேண்டுகோள்! (ஓடியோ இணைப்பு)











வடக்குக் கிழக்கில் நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இன்று பேசப்படுகின்றது. இந்தத் தேர்தல் முடிவுகளை சர்வதேசம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொணடிருக்கின்றது.பல இலட்சக் கணக்கான தமிழ் உறவுகளை வயது, பால் வேறுபாடின்றிக் கொத்துக் கொத்தாகக் கொன்றழித்து, எமது வாழ்விடங்களை நாசம் செய்து பல இலட்சம் மக்களை ஏதிலிகளாக்கி புலம் பெயரச்செய்தும், பல்லாயிரம் பெண்களை விதவைகளாக்கியும், பலரை மானபங்கப்படுத்தியும் எமது மண்ணிலே வெறியாட்டம் நடத்தி, ஈழத் தமிழரின் துயரத்தில் சிங்கள தேசமெங்கும் வெற்றி விழாக் கொண்டாடியவர்கள் இப்பொழுது யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் முகாமிட்டு வாக்குகளைக கபளீகரம் செய்வதற்குக் காத்திருக்கின்றனர்.

சிங்கள தேசத்திற்கும், தமிழீழ தேசத்திற்கும் இடையிலான மாபெரும் போராகவே இது நோக்கப்படுகின்றது. கொழும்பில் நாட்டை நிர்வகித்து சமமாக நல்லாட்சி செய்யவேண்டியவர்கள், சிங்களப்படைகளுடனும், பல்லாயிரம் சிங்களவர்களுடனும் எமது மண்ணில் வந்து முகாமிட்டு எமது மக்களை இன்னுமொரு போருக்குள் இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வெட்கம் கெட்டவிடயம், அற்ப சலுகைகளுக்காக எமது மக்களின் தன்மானத்தை விலை பேசுவதற்காக ஜனாதிபதி தொடக்கம், அமைச்சர்கள், சிற்றமைச்சர்கள், ஆளுனர் என படையெடுத்து வந்திருக்கின்றார்கள். தமிழ் தேசியத்தை நிலைநாட்டுவதற்காக உறுதியுடன் எமது மக்கள் இருக்கின்றார்கள். வாழ்வா சாவா என்ற நிலையில் சிங்கள தேசத்தின் முற்றுகையை முறியடிப்பதற்கு எமது மக்கள் தயாராகிவிட்டார்கள்.

நேற்று, இன்று, நாளை என எமது மக்களை நயவஞ்சகமாக ஏமாற்றி வாக்குகளைப் பறிப்பதற்காக வந்திருக்கும் கொலைகார அரசுக்குத் தகுந்த பாடம் புகட்டுவதற்காக எமது உறவுகள் களத்தில் இறங்கியுள்ள நிலையில் எமது புலம் பெயர் உறவுகள் ஈழத்தில் உள்ள உறவுகளின் வெற்றிக்குப் பலம் சேர்க்கவேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி உலகத் தமிழர்களின் வெற்றி. அந்த வெற்றி எமது தேசத்தினதும் மக்களினதும் எதிர்காலத்தை மாற்றியமைக்கும். இதற்கு உலகத் தமிழ் உறவுகள் தாயகத்தில் வாழ்கின்ற தமது உறவுகளுக்குத் தகவல்களை உடனடியாக அனுப்பி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு அனைவரும் சென்று நேரத்துடன் வாக்களிக்கச் செல்ல உற்சாகப்படுத்தவேண்டும்.

ஒரு நூறு மீன்பிடி வலைகளையும், துவிச்சக்கர வண்டிகளையும், நீர் இறைக்கும் இயந்திரங்களையும் கொடுத்து பல லட்சம் மக்களை ஏமாற்றி சர்வதேசத்திற்குத் தமது போர்க்குற்றங்களை மறைத்து தமிழ் மக்கள் சிங்கள தேசத்துடன் இணைந்து விட்டனர் என்று காட்டுவதற்கான கபட நாடகத்தை முறியடித்து, தமிழ் தேசிய உணர்வு இன்னும் சாகவில்லை என்பதை உலகுக்குக் காட்டவும்,

தாயகத்தை மீட்டெடுத்து சுதந்திரமான நாட்டில் தன்மானத்துடன் வாழ இந்தத் தேர்தலில் வீட்டுச் சின்னத்திற்கும், ஆற்றலுள்ள தலைமைத்துவத்தையும் தமிழ் தேசிய உணர்வுள்ளவர்களையும், ஒரே கொள்கையுடன் செயற்படும் ஆற்றல் மிக்கவர்களையும் தெரிவு செய்யும் வகையில் அவர்களது விருப்பு இலக்கத்திற்கும் வாக்களித்து நூறு வீதமான வாக்குகளும் தமிழ் தேசியத்தை நோக்கியே அளிக்கப்படவேண்டும்.

எனது அன்பான உறவுகளே விரைந்த செயற்பட்டு குறுந் தகவல்கள் மூலமாகவோ, தொலைபேசி தொடர்பாடல் மூலமோ, மின்னஞ்கல் மூலமோ வீட்டுச் சின்னத்திறகு வாக்களிக்கத் தூணடுங்கள்.

யூலை 24 ம் திகதி வடக்குக் கிழக்கின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது என்ற அந்தச் செய்தி சர்வதேசத்தின் கண்களைத் திறக்கவேண்டும்.

அனபுடன்
உங்கள்
வல்வை.ந.அனந்தராஜ்
வல்வெட்டித்துறை நகரசபைக்கான வேட்பாளர்.

எமது மக்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழவேண்டும் என்றால் எமது மண் விடுதலை பெற வேண்டும் - நக்கீரன்


இந்த ஆண்டு 28 ஆவது கருப்பு யூலை நினைவு ஆண்டாகும். தமிழ் மக்களைப் பொறுத்தளவில் கருப்பு யூலை தமிழர்களைப் பூண்டோடு அழிக்கச் சிங்கள – பௌத்த பேரினவாதிகள் திட்டமிட்டு மேற்கொண்ட இனப் படுகொலை (genocide) ஆகும்.

இனப்படுகொலைக்கு பன்னாட்டு சட்டத்தில் சொல்லப்பட்ட வரைவிலக்கணம் 1983 கருப்பு யூலைக்கு முற்றிலும் பொருந்தும். கறுப்பு யூலை தமிழ்மக்களின் ஆழ்மனதில் ஆணி அடித்தது போல் மாறாத காயத்தையும் தீராத வடுவையும் ஏற்படுத்தியுள்ளது. அதனை எத்தனை ஊழி சென்றாலும் யாராலும் அழிக்க முடியாது. ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் நாடு முழுதும் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அதிவுயர் பாதுகாப்பு வெலிக்கடைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையைச் செய்த எவரும் இதுவரையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படுகொலை நிகழ்வானது ஒரே வாரத்தில் ஆனால் வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. முதலாவது படுகொலை யூலை 23, 1983 அன்று 35 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டனர். இரண்டாவது படுகொலை இரண்டு நாட்களின் பின்னர் யூலை 28 ல் இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். கறுப்பு யூலை சிங்கள இனத்தையும் தமிழ் இனத்தையும் மனத்தினால், காயத்தினால், வாக்கினால் ஒன்று சேராதபடி நிரந்தரமாகப் பிரித்து வைத்து விட்டது.

1983 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது சிங்கள இனத்துக்கும் தமிழ் இனத்துக்கும் இடையில் உள்ள இடைவெளி – குறிப்பாக முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் - ஆழ்கடல் போல் இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது.

யூலை, 1983 இனப்படுகொலை மூலம் தமிழர்களை நாட்டைவிட்டுத் துரத்த வேண்டும் என்பது அன்றைய ஜெயவர்த்தன அரசின் குறிக்கோளாக இருந்தது. தமிழர்களை நாட்டை விட்டுத் துரத்துவதன் மூலம் அவர்களது எண்ணிக்கையைக் குறைத்துத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என ஜெயவர்த்தனா கணக்குப் போட்டார்.

ஆன காரணத்தினால் தமிழர்கள் தொகை தொகையாக இலங்கையை விட்டு வெளியேறுவதை அவர் உள்ளுர வரவேற்றார். அன்றைய சிங்கள – பவுத்த இனவாதிகளது எண்ணமும் அதுவாகவே இருந்தது.நல்ல காலமாகத் தமிழ்மக்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டுத் தப்பி ஓடவில்லை.

ஓடியிருந்தால் ஜெயவர்த்தனாவின் குறிக்கோள் தன்பாட்டில் நிறைவேறியிருக்கும். இனச் சிக்கல் தானாகவே தீர்ந்திருக்கும்.ஜெயவர்த்தனா போட்ட கணக்குக்கு எதிர்மாறாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வெளியில் இருந்தவாறு விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்தார்கள்.

இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் சிங்கள – பவுத்த இனவாதிகளுக்குத் தொண்டையில் சிக்கிய முள்போல் இருக்கிறார்கள்.முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்கள் பற்றிய சிங்கள அரசின் அச்சம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் இன்றைய ஆட்சியாளர்களது தூக்கத்தை கலைத்துவருகின்றன. அதனால் இந்த அமைப்புளுக்கு எதிரான பரப்புரையை சிறிலங்கா அரசு முடுக்கிவிட்டுள்ளது.

கோடிக் கணக்கான பணத்தைப் பொதுமக்கள் தொடர்பு அமைப்புக்களுக்குக் (Public Relations firms) கொடுத்து புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான பரப்புரையை சிறிலங்கா அரசு செய்கிறது.

வி.புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களை ஆதரிக்கும் தமிழர் அமைப்புக்களையும் தடைசெய்ய வேண்டும் அல்லது அவர்களது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா இனவாத அரசு மேற்குலக நாடுகளின் காலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு இருக்கிறது.

அதில் அவர்கள் பேரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். வி.புலி ஆதரவாள ஆதரவாளர்கள் புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பல நாடுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோருமே தமிழ்த் தேசியத்தை நேசிக்கிறார்கள் வெளியில் இருந்து கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குத் தோள் கொடுக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. கணிசமான தொகையினர் தாயக மண்ணையும் அங்கு அல்லல்பட்டு அழுது கண்ணீர் விடும் மக்களையும் மறந்துவிட்டார்கள்.

புலி பிடித்துக்கொண்டு போய் கட்டி வைத்துப் பணம் கேட்டு சித்திரவதை செய்தார்கள். அதற்குப் பயந்து ஓடி வந்துவிட்டேன் என்று ‘கதை” எழுதிக் குடியுரிமை பெற்றவர்களும் நாட்டை மறந்துவிட்டார்கள்.

நாங்கள் தமிழ்க் கனேடியர்கள் அல்ல. நாங்கள் கனேடியர்கள். கனடிய எல்லையிலேயே போராட்டம், விடுதலை, தாயகம், தேசியம், தன்னுரிமை எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு வந்துவிட்டோம்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்னும் சிலர் “நாங்கள் நாட்டை விட்டு ஓடிவந்திராவிட்டால் இத்தறுதி செத்துப் புதைத்த இடத்திலும் புல்லும் முளைத்திருக்கும், நல்ல காலம் தப்பி வந்துவிட்டோம். புதிய வாழ்வு ஒன்றைத் தொடங்க வாய்ப்பளித்த கனடாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்” எனக் கூறுகிறார்கள். இதனை மனதுக்குள் சொல்லிக் கொண்டால் பருவாயில்லை. வெட்கமோ துக்கமோ இல்லாது காற்றலையில் வந்து சொல்கிறார்கள்.

ஜெயவர்த்தனாவின் பின் ஆட்சிக் கட்டில் ஏறிய சிங்கள – பவுத்த இனவாதிகளின் குறிக்கோளும் தமிழர்களைக் கொல்வதின் மூலம் அவர்களது எண்ணிக்கையை குறைப்பதுதான். பல விதத்தில் அவரையும் இவர்கள் மிஞ்சிவிட்டார்கள். அமைதிக்கான போர் என்ற முழக்கத்தோடு சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா 1995 இல் வடக்கில் பாரிய படை நடவஎக்கைகளை மேற்கொண்டார். தமிழ்மக்களுக்கு எதிராகக் கொடிய போரை முடுக்கிவிட்டார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றி சிங்கக் கொடியை சந்திரிகா குமாரதுங்கா பறக்கவிட்டார். தமிழ்மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். இலட்சக் கணக்கில் வீடு வாசல்களை இழந்து இடம் பெயர்ந்து ஏதிலியானார்கள்.

இப்போது ஆட்சித்தலைவர் மகிந்தா இராசபக்சே ஜே.ஆர். ஜெயவர்த்தனாவையே “நல்லவன்” ஆக்கிவிட்டார். “ஜே.ஆர். ஜெயவர்த்தனா பருவாயில்லை” என்று சொல்ல வைத்துவிட்டார்.
1983 யூலை மாத இனப் படுகொலையில் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். இன்று முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்கு முன்னும் பின்னும் சிங்களப் படையினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 70,000 இருக்கும் என்று சொல்கிறார்கள். வெள்ளை வானுக்குப் பயந்து நூற்றுக் கணக்கான தமிழ் வணிகர்கள், ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டே வெளியேறி விட்டார்கள். 2005 - 2010 காலப்பகுதியில் 34 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் தமிழர்கள் 30, சிங்களவர் 3, முஸ்லிம் ஒருவர்.

கருப்பு யூலை இனப் படுகொலைக்கு இரண்டு கிழமைகளுக்கு முன்னர் இலண்டனில் இருந்து வெளியாகும் Daily TelegraphDaily (யூலை 11, 1983) ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை நேர்காணல்கண்டு ஒரு செய்தியை வெளியிட்டது.

"I am not worried about the opinion of the Tamil people.. now we cannot think of them, not about their lives or their opinion ... Really if I starve the Tamils out, the Sinhala people will be happy.”

“நான் தமிழ்மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப் படவில்லை. அவர்கள் பற்றி நாம் இப்போது சிந்திதுப் பார்க்க முடியாது. அவர்களது உயிர்கள் பற்றியோ நினைப்புப் பற்றியோ……… சொல்லப்போனால் நான் தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.”கருப்பு யூலை இனப் படுகொலை தொடங்கி 5 நாள்கள் மட்டும் ஆட்சித் தலைவர் ஜெயவர்த்தனா வெளியில் தலைகாட்டவே இல்லை. பின்னர் தொலைக்காட்சியில் தோன்றிய போது அவர் தமிழ் மக்களை விளித்து ஒரு ஆறுதல் வார்த்தை கூடச் சொல்லவில்லை. மாறாக வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் பேசினார். “சிங்கள மக்களது கோரிக்கைகளையும் அவர்களது தேசிய மரியாதையையும் ஏற்றுக் கொள்ளும் காலம் வந்து விட்டது” ("the time had come to accede to the clamour and the national respect of the Sinhalese people" ) என ஜெயவர்த்தனா மார் தட்டினார்.

ஜெயவர்த்தனாவின் மனப்பான்மை இன்றும் தொடர்கிறது. மகிந்தா இராசபக்சே ஜெயவர்த்னாவைப் போலவே தமிழ்மக்களுக்குத் தாயகம் என்று ஒன்றில்லை, தமிழர்கள் ஒரு தேசிய இனம் அல்ல, தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை கிடையாது, அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தின் கீழ்த்தானும் தீர்வு இல்லை என்கிறார். அனைத்துக் கட்சிக் குழுவின் அறிக்கையைக் குப்பைக் கூடைக்குள் எறிந்துவிட்ட மகிந்த இராசபக்சே இப்போது பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில ஏறியது போல இனச் சிக்கலைத் தீர்க்க நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது காலத்தை இழுத்தடிக்கும் முயற்சியாகும்.

இன்று யாழ்ப்பாணக் குடாநாடு இனவாத வெறிபிடித்த இராணுவத்தின் இரும்புப் பிடியில் சிக்குண்டு இருக்கிறது. அங்கு நிரந்திரமாக நிறுத்தப்பட்டுள்ள 50,000 ராணுவத்தினரின் ஆட்சியே நடைபெறுகிறது. தமிழ் அரச ஊழியர்களுக்கு இராணுவதளபதியே கட்டளை பிறப்பிக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களை சாதாரண இராணுவ சிப்பாய்கள் தாக்குகிறார்கள். இராணுவத்தின் விருப்பு வெறுப்பின் படியே அங்கு யாரும் எதையும் செய்ய முடியும். அங்கு சனநாயகம், சுதந்திரம், இயல்பு வாழ்க்கை என்பதெல்லாம் மருந்துக்கும் கிடையாது.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் மட்டுமல்ல அதற்குப் பின்னரும் சரண் அடைந்த வி.புலித் தளபதிகளும் போராளிகளும் இராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இராணுவ புலனாய்வுப் பிரிவு மக்களது ஒவ்வொரு அசைவையும் வேவு பார்க்கிறது. இராணுவ விதானைமார் எல்லா ஊர்களுக்கும் நியமிக்கப் பட்டுள்ளார்கள். விளையாட்டுப் போட்டியா? கோயில் திருவிழாவா? திருமண வீடா? எதுவானாலும் இராணுவத்திடம் முன் அனுமதி பெறவேண்டும். இராணுவ தளபதிகளுக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டும். வருகிற இராணுவ தளபதிகளுக்கு பூரண கும்ப மாலை மரியாதை செய்யப்பட வேண்டும்.

நக்கீரன்

அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் : சனல்-4


இலங்கையில் இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ‘அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை’ நடத்தப்பட வேண்டும் என, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருவதாக, சனல்-4 (Channel-4) தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் அவலங்களை பன்னாட்டு சமூகத்திடம் கொண்டு சென்ற பெருமைக்குரிய பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி, அடிக்கடி ஈழத்தமிழர் பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றது.

சனல்-4 முன்னர் வெளியிட்ட காணொளிகள் மற்றும் இலங்கையின் படுகொலைக்களம் போன்ற காட்சிச் சாட்சிகளால் ‘அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான’ அழுத்தம் அதிகரித்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் மக்களிற்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் லீ ஸ்கொட் முன்மொழிந்த நாடாளுமன்ற விவாதத்திற்கு அழைப்பு விடுக்கும் பிரேரணையில் (EDM – Early Daily Motion) இதுவரை 62 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் தமது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகி இதில் கையெழுத்திடுமாறு கோரிக்கை விடுக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.


மன்னார் மூர்வீதியில் தனியார் பேருந்து எரிப்பு (படங்கள் இணைப்பு)


மன்னார் மூர்வீதியில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியாருக்குச் சொந்தமான பேருந்து இன்று அதிகாலை இனம்தெரியாத காடையர்களினால் தீ வைத்து எறியூட்டப்பட்டுள்ளது.
எறியூட்டப்பட்ட பேருந்து முழுமையாக எறிந்துள்ளது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா