Tamil seithigal Tamil seithi Tamil seithi vasantham nalaya seithi Tamil movie online Tamil cinema seithigal nalaya seithi Tamil movie Tamil news Tamil newspaper Tamil news online 4 Tamil news video Tamil news paper daily thanthi.Tamil seithigal Tamil seithi Tamil seithi vasantham nalaya seithi Tamil movie online Tamil cinema seithigal nalaya seithi Tamil movie Tamil news Tamil newspaper Tamil news online 4 Tamil news video Tamil news paper daily thanthi
Saturday 16 July 2011
வடமராட்சியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு தப்பியோட்டம்
வடமராட்சிப் பகுதியில் இரவு வேளையில் துப்பாக்கிகள் சகிதம் சென்ற படையினர் என நம்பப்படுகின்ற மூவர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை பதிலுக்கு இளைஞர் குழுக்கள் இணைந்து நடத்திய தாக்குதலில் அவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது.
வடமராட்சியின் வல்வெட்டிப் பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. அப்பகுதியைச் சேர்ந்த உள்ளுர் இளைஞர் ஒருவர் சகிதம் மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படுகின்ற படையினர் மூவர் மதுபோதையில்
பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். வீதியால் சென்ற பெண்கள் மீதும் அவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும் அவர்கள் கெடுபிடிகளைக் காட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஊர் மக்கள் திரண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக வந்த மோட்டார் சைக்கிள் என்பவற்றை விட்டு விட்டு இவர்கள் தப்பியோடியுள்ளனர்.
அவ்வேளையிலேயே அவர்களால் எடுத்து வரப்பட்டிருந்த ரீ. 56 ரகத் துப்பாக்கி, இராணுவக் காலணி என்பவை மீட்கப்பட்டிருக்கின்றன. பின்னர் இவை அப்பகுதி மக்களால் பொலிசாரிடம் ஒப்படைப்பக்கட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே தப்பியோடிய படையினர் மீது ஊர் மக்கள் துரத்தித் துரத்தி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
வடமராட்சியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு தப்பியோட்டம்
வடமராட்சிப் பகுதியில் இரவு வேளையில் துப்பாக்கிகள் சகிதம் சென்ற படையினர் என நம்பப்படுகின்ற மூவர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை பதிலுக்கு இளைஞர் குழுக்கள் இணைந்து நடத்திய தாக்குதலில் அவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது.
வடமராட்சியின் வல்வெட்டிப் பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. அப்பகுதியைச் சேர்ந்த உள்ளுர் இளைஞர் ஒருவர் சகிதம் மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படுகின்ற படையினர் மூவர் மதுபோதையில்
பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். வீதியால் சென்ற பெண்கள் மீதும் அவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும் அவர்கள் கெடுபிடிகளைக் காட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஊர் மக்கள் திரண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக வந்த மோட்டார் சைக்கிள் என்பவற்றை விட்டு விட்டு இவர்கள் தப்பியோடியுள்ளனர்.
அவ்வேளையிலேயே அவர்களால் எடுத்து வரப்பட்டிருந்த ரீ. 56 ரகத் துப்பாக்கி, இராணுவக் காலணி என்பவை மீட்கப்பட்டிருக்கின்றன. பின்னர் இவை அப்பகுதி மக்களால் பொலிசாரிடம் ஒப்படைப்பக்கட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே தப்பியோடிய படையினர் மீது ஊர் மக்கள் துரத்தித் துரத்தி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
வடமராட்சியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு தப்பியோட்டம்
வடமராட்சிப் பகுதியில் இரவு வேளையில் துப்பாக்கிகள் சகிதம் சென்ற படையினர் என நம்பப்படுகின்ற மூவர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை பதிலுக்கு இளைஞர் குழுக்கள் இணைந்து நடத்திய தாக்குதலில் அவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது.
வடமராட்சியின் வல்வெட்டிப் பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. அப்பகுதியைச் சேர்ந்த உள்ளுர் இளைஞர் ஒருவர் சகிதம் மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படுகின்ற படையினர் மூவர் மதுபோதையில்
பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். வீதியால் சென்ற பெண்கள் மீதும் அவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும் அவர்கள் கெடுபிடிகளைக் காட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஊர் மக்கள் திரண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக வந்த மோட்டார் சைக்கிள் என்பவற்றை விட்டு விட்டு இவர்கள் தப்பியோடியுள்ளனர்.
அவ்வேளையிலேயே அவர்களால் எடுத்து வரப்பட்டிருந்த ரீ. 56 ரகத் துப்பாக்கி, இராணுவக் காலணி என்பவை மீட்கப்பட்டிருக்கின்றன. பின்னர் இவை அப்பகுதி மக்களால் பொலிசாரிடம் ஒப்படைப்பக்கட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே தப்பியோடிய படையினர் மீது ஊர் மக்கள் துரத்தித் துரத்தி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
முதல்முறையாக மௌனம் கலைத்தது இந்தியா.போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் புதுடெல்லியில் நேற்று இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவின் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும்- சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் கடந்தவாரம் இந்தியாவின் ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருந்தது.
இதையடுத்து ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ தொலைக்காட்சி இதுபற்றிய இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தது.
அதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் நிருபமா ராவ் இதுபற்றித் தாம் கருத்து வெளியிடப் போவதில்லை என்று கூறியிருந்தார்.
போர்க்குற்ற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்ட எட்டு நாட்களின் பின்னர் இந்தியாவின் மௌனம் கலைந்துள்ளதாக ‘ஹெட்லைன்ஸ் ருடே‘யின் இணை ஊடகமான ‘இந்தியா ருடே‘ தெரிவித்துள்ளது.
இந்த ஆவணப்படம் உலகெங்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் சிறிலங்காப் படையினருக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பியுள்ளதாகவும் ‘இந்தியா ருடே‘ தெரிவித்துள்ளது.
ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து சிறிலங்கா முழுஅளவிலான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா முதல்முறையாக கருத்து வெளியிட்டுள்ளது.
‘ஹெட்லைன்ஸ் ருடே‘ தொலைக்காட்சிக்கு செவ்வி அளித்துள்ள இந்திய வெளிவிகார அமைச்சு பேச்சாளர், மனிதஉரிமை மீறல்கள் பற்றிய கவலைகள் குறித்து சிறிலங்கா பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிறுபான்மை இனங்களின் கவலைகளை தீர்க்க உண்மையானதும் அர்த்தபூர்வமானதுமான அரசியல்தீர்வு ஒன்றுக்கு சிறிலங்கா முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதுவரை சிறிலங்காவின் உள்விவகாரம் என்று கூறிவந்த இந்தியா முதல்முறையாக தனது மௌனத்தைக் கலைத்துள்ளதாக ‘இந்தியா ருடே‘ கருத்து வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதை அடுத்து எழுந்துள்ள நெருக்கடிகளால் தான் இந்தியா முழு அளவிலான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ‘இந்தியா ருடே‘ தெரிவித்துள்ளது.
முதல்முறையாக மௌனம் கலைத்தது இந்தியா.போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் புதுடெல்லியில் நேற்று இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவின் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும்- சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் கடந்தவாரம் இந்தியாவின் ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருந்தது.
இதையடுத்து ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ தொலைக்காட்சி இதுபற்றிய இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தது.
அதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் நிருபமா ராவ் இதுபற்றித் தாம் கருத்து வெளியிடப் போவதில்லை என்று கூறியிருந்தார்.
போர்க்குற்ற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்ட எட்டு நாட்களின் பின்னர் இந்தியாவின் மௌனம் கலைந்துள்ளதாக ‘ஹெட்லைன்ஸ் ருடே‘யின் இணை ஊடகமான ‘இந்தியா ருடே‘ தெரிவித்துள்ளது.
இந்த ஆவணப்படம் உலகெங்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் சிறிலங்காப் படையினருக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பியுள்ளதாகவும் ‘இந்தியா ருடே‘ தெரிவித்துள்ளது.
ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து சிறிலங்கா முழுஅளவிலான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா முதல்முறையாக கருத்து வெளியிட்டுள்ளது.
‘ஹெட்லைன்ஸ் ருடே‘ தொலைக்காட்சிக்கு செவ்வி அளித்துள்ள இந்திய வெளிவிகார அமைச்சு பேச்சாளர், மனிதஉரிமை மீறல்கள் பற்றிய கவலைகள் குறித்து சிறிலங்கா பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிறுபான்மை இனங்களின் கவலைகளை தீர்க்க உண்மையானதும் அர்த்தபூர்வமானதுமான அரசியல்தீர்வு ஒன்றுக்கு சிறிலங்கா முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதுவரை சிறிலங்காவின் உள்விவகாரம் என்று கூறிவந்த இந்தியா முதல்முறையாக தனது மௌனத்தைக் கலைத்துள்ளதாக ‘இந்தியா ருடே‘ கருத்து வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதை அடுத்து எழுந்துள்ள நெருக்கடிகளால் தான் இந்தியா முழு அளவிலான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ‘இந்தியா ருடே‘ தெரிவித்துள்ளது.
தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட குண்டர்களால் நிரம்பி வழியும் யாழ்ப்பாண விடுதிகள்
வடக்கில் எதிர்வரும் 23ம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிறிலங்கா அரசு குண்டர் குழுக்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிவதாகவும், அவற்றில் பெரும்பாலானவற்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பரப்புரைகளை மேற்கொள்வதற்கு என்ற பெயரில் தங்கியுள்ள இவர்கள் மூலம், உள்ளூராட்சித் தேர்தலில் குழப்பங்களை விளைவித்து வெற்றி பெறவே ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் தெரியாத ஓய்வுபெற்ற சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தனது குழுவினருடன் யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
தமிழ் தெரியாமல் எவ்வாறு பரப்புரை செய்கிறீர்கள் என்று அந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியிடம் கேட்ட போது, வீடு வீடாகச் சென்று “வணக்கம்“ என்று கூறிவிட்டு துண்டுப் பிரசுரங்களை வழங்கி வருவதாகக் கூறியுள்ளார்.
எப்படியும் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று கங்கணம் கட்டியே, சிறிலங்கா அரசாங்கம் தென்பகுதியில் இருந்து குண்டர் குழுக்களைக் கொண்டு வந்துள்ளதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட குண்டர்களால் நிரம்பி வழியும் யாழ்ப்பாண விடுதிகள்
வடக்கில் எதிர்வரும் 23ம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிறிலங்கா அரசு குண்டர் குழுக்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிவதாகவும், அவற்றில் பெரும்பாலானவற்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பரப்புரைகளை மேற்கொள்வதற்கு என்ற பெயரில் தங்கியுள்ள இவர்கள் மூலம், உள்ளூராட்சித் தேர்தலில் குழப்பங்களை விளைவித்து வெற்றி பெறவே ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் தெரியாத ஓய்வுபெற்ற சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தனது குழுவினருடன் யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
தமிழ் தெரியாமல் எவ்வாறு பரப்புரை செய்கிறீர்கள் என்று அந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியிடம் கேட்ட போது, வீடு வீடாகச் சென்று “வணக்கம்“ என்று கூறிவிட்டு துண்டுப் பிரசுரங்களை வழங்கி வருவதாகக் கூறியுள்ளார்.
எப்படியும் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று கங்கணம் கட்டியே, சிறிலங்கா அரசாங்கம் தென்பகுதியில் இருந்து குண்டர் குழுக்களைக் கொண்டு வந்துள்ளதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூய்மையான அரசியல்வாதியாக காட்டிக்கொள்ளும் மன்மோகன் சிங்
நாட்டின் பாதுகாப்பிலும், மக்கள் நலனிலும் மிகவும் அக்கறையுள்ளவர் போல் காட்டிக்கொள்வதில் இந்தியாவின் எந்த அரசியல்வாதியையும் விட திறமை வாய்ந்தவர் பிரதமர் மன்மோகன் சிங்.
அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து, அணு உலைகளை விற்க முனைந்த அயல் நாட்டு அணு உலை தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக ‘அணு விபத்து இழப்பீடு சட்ட’த்தை நிறைவேற்றுவதில் காட்டிய உத்வேகத்தை நன்றாக கவனித்த எவருக்கும், பிரதமரின் அக்கறை நாட்டின் மீதா அல்லது தன்னை பிரதமர் ஆக்க பின் சக்தியாகத் திகழ்ந்த அமெரிக்காவின் மீதா என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை.
அதே நேரத்தில் மக்களின் பிரச்சனைகள் என்று வரும்போதும், தனது அமைச்சரவை சகாக்களின் ஊழல் என்று வரும்போதும் அதற்கெல்லாம் தான் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது என்று காட்டிக்கொள்வதிலும் அபாரத் திறன் கொண்டவர் நமது பிரதமர். தூய்மையான அரசியல்வாதியாக காட்டிக்கொள்ளும் இந்த பிரதமரின் ஆட்சியில்தான் அதிகபட்ச ஊழல் நடந்துள்ளது என்பது மட்டுமின்றி, இந்தியாவின் வளங்கள் கொள்ளை போய்க்கொண்டிருப்பதும் தடையற்று நடந்துகொண்டிருக்கிறது. இவை யாவற்றையும் மறைக்க இவர் பயன்படுத்தும் ஒரே விடயம் ‘இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்துக் கொண்டிருக்கிறது’ என்று புள்ளி விவரத்தை வெளியிடுவதுதான்.
நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது என்கிறீர்கள், ஆனால் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டேயிருக்கிறது, அதனால் ரூபாயின் வாங்கும் சக்தி (பணவீக்கம்) குறைந்துகொண்டே போகிறதே என்று வினவினால், ‘இவற்றையெல்லாம் ஒரே நாளில் கட்டுப்படுத்தக் கூடிய மத்திரக்கோல் என்னிடம் இல்லை’ என்று சாமர்த்தியமான பதிலைக் கூறுவார். வார்த்தைகளைப் பயன்படுத்தி வாய்ப் பந்தல் போடுவதிலும், பேச வேண்டிய வேளையில் ஒரு வார்த்தை கூட பேசாமல் கமுக்க அமைதி காப்பதிலும் இவர் வெளிப்படுத்தும் இராஜதந்திரம் பொருள் நிறைந்தது.
இப்படிப்பட்ட பிரதமர்தான், இதற்குமேல் அடிக்கடி மக்களிடம் பேச ‘சில’ ஊடகவியலாளர்களை மட்டும் அழைத்துப் பேசியுள்ளார். அவர்கள் கேட்ட ஒரிரு வினாக்களுக்கும் பதிலளித்து தான் ‘செயல்படும்’ பிரதமர்தான் என்று நிரூபித்துள்ளார். இந்தச் சந்திப்பில் அவர் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும் பேசியுள்ளார். பிரதமரின் வாய் ஜாலத்தை அறிந்திராத தமிழர்கள் அதனை புரிந்துகொள்ள முடியாமல் தலை சுற்றி நிற்கின்றனர்.
“இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு நியாயமானதுதான். அந்நாட்டில் வாழும் அனைத்துப் பிரிவு மக்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதை இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்று கூறியுள்ளார். அப்படியானால் இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு அரசால் சம உரிமையுடன் நடத்தப்படவேண்டும் என்பதற்காக மன்மோகன் சிங் அரசு பொறுப்பேற்ற இந்த 7 ஆண்டுகளில் செய்தது என்ன?
FILEகடந்த மாதம் 10, 11ஆம் தேதிகளில் இலங்கை சென்ற தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையில் சென்றக் குழு அந்நாட்டு அதிபர் ராஜபக்சவை சந்தித்து ஒன்றரை மணி நேரம் பேசியது. இந்தச் சந்திப்பின்போது அந்நாட்டு அயலுறவு அமைச்சர் பெய்ரீஸ், இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரவீன் குமார் ஆகியோரும் இருந்தனர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவ்சங்கர் மேனன், “இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு அரசியல் ஏற்பாட்டை உடனடியாக உருவாக்க வேண்டும்” என்று ராஜபக்சவை வலியுறுத்தியதாகக் கூறினார். ஆனால், நேற்று முன் தினம் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய மகிந்த ராஜபக்ச, “சிறுபான்மைத் தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு இந்தியா தன்னை நிர்பந்திக்கவில்லை” என்று கூறினாரே! இதுதான் மன்மோகன் அரசு ‘தொடர்ந்து வலியுறுத்துவ’தன் இலட்சணமா?
“விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லது. ஆனால் அதற்குப் பிறகும் தமிழர் பிரச்சனை மறையவில்லை” என்று மன்மோகன் கூறுகிறார். அதாவது மன்மோகன் அரசு எதிர்பார்த்தது: விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால் தமிழர் பிரச்சனையும் அழிந்துவிடும் என்பதுதானே? அதற்காகத்தானே அந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை முத்திரைக்குத்த வைத்து, அதற்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு ‘எல்லா விதத்’திலும் உதவியது? ஆனால் புலிகள் அழிந்துவிட்டார்கள், பிரச்சனை அழியவில்லை! இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் நோக்கமென்றால், அதனை உறுதி செய்துக்கொண்டு பிறகு ராஜபக்ச நடத்திய போருக்கு உதவியிருக்க வேண்டும். ஆனால் இந்திய அரசின் நோக்கம் வேறு. ஈழத் தமிழர்கள் பிரச்சனையை ‘முடிக்க’ சிங்கள இனவெறி ராஜபக்ச அரசுக்கு உதவி, அதன் மூலம் அந்நாட்டின் ‘நட்பை’ (சீனாவை புறந்தள்ள வைத்து) உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
“நீங்கள் வேறு எந்த நாட்டையும் நாட வேண்டாம், எல்லா உதவிகளையும் நாங்கள் செய்கிறோம்” என்றல்லவா...
தூய்மையான அரசியல்வாதியாக காட்டிக்கொள்ளும் மன்மோகன் சிங்
நாட்டின் பாதுகாப்பிலும், மக்கள் நலனிலும் மிகவும் அக்கறையுள்ளவர் போல் காட்டிக்கொள்வதில் இந்தியாவின் எந்த அரசியல்வாதியையும் விட திறமை வாய்ந்தவர் பிரதமர் மன்மோகன் சிங்.
அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து, அணு உலைகளை விற்க முனைந்த அயல் நாட்டு அணு உலை தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக ‘அணு விபத்து இழப்பீடு சட்ட’த்தை நிறைவேற்றுவதில் காட்டிய உத்வேகத்தை நன்றாக கவனித்த எவருக்கும், பிரதமரின் அக்கறை நாட்டின் மீதா அல்லது தன்னை பிரதமர் ஆக்க பின் சக்தியாகத் திகழ்ந்த அமெரிக்காவின் மீதா என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை.
அதே நேரத்தில் மக்களின் பிரச்சனைகள் என்று வரும்போதும், தனது அமைச்சரவை சகாக்களின் ஊழல் என்று வரும்போதும் அதற்கெல்லாம் தான் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது என்று காட்டிக்கொள்வதிலும் அபாரத் திறன் கொண்டவர் நமது பிரதமர். தூய்மையான அரசியல்வாதியாக காட்டிக்கொள்ளும் இந்த பிரதமரின் ஆட்சியில்தான் அதிகபட்ச ஊழல் நடந்துள்ளது என்பது மட்டுமின்றி, இந்தியாவின் வளங்கள் கொள்ளை போய்க்கொண்டிருப்பதும் தடையற்று நடந்துகொண்டிருக்கிறது. இவை யாவற்றையும் மறைக்க இவர் பயன்படுத்தும் ஒரே விடயம் ‘இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்துக் கொண்டிருக்கிறது’ என்று புள்ளி விவரத்தை வெளியிடுவதுதான்.
நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது என்கிறீர்கள், ஆனால் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டேயிருக்கிறது, அதனால் ரூபாயின் வாங்கும் சக்தி (பணவீக்கம்) குறைந்துகொண்டே போகிறதே என்று வினவினால், ‘இவற்றையெல்லாம் ஒரே நாளில் கட்டுப்படுத்தக் கூடிய மத்திரக்கோல் என்னிடம் இல்லை’ என்று சாமர்த்தியமான பதிலைக் கூறுவார். வார்த்தைகளைப் பயன்படுத்தி வாய்ப் பந்தல் போடுவதிலும், பேச வேண்டிய வேளையில் ஒரு வார்த்தை கூட பேசாமல் கமுக்க அமைதி காப்பதிலும் இவர் வெளிப்படுத்தும் இராஜதந்திரம் பொருள் நிறைந்தது.
இப்படிப்பட்ட பிரதமர்தான், இதற்குமேல் அடிக்கடி மக்களிடம் பேச ‘சில’ ஊடகவியலாளர்களை மட்டும் அழைத்துப் பேசியுள்ளார். அவர்கள் கேட்ட ஒரிரு வினாக்களுக்கும் பதிலளித்து தான் ‘செயல்படும்’ பிரதமர்தான் என்று நிரூபித்துள்ளார். இந்தச் சந்திப்பில் அவர் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும் பேசியுள்ளார். பிரதமரின் வாய் ஜாலத்தை அறிந்திராத தமிழர்கள் அதனை புரிந்துகொள்ள முடியாமல் தலை சுற்றி நிற்கின்றனர்.
“இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு நியாயமானதுதான். அந்நாட்டில் வாழும் அனைத்துப் பிரிவு மக்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதை இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்று கூறியுள்ளார். அப்படியானால் இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு அரசால் சம உரிமையுடன் நடத்தப்படவேண்டும் என்பதற்காக மன்மோகன் சிங் அரசு பொறுப்பேற்ற இந்த 7 ஆண்டுகளில் செய்தது என்ன?
FILEகடந்த மாதம் 10, 11ஆம் தேதிகளில் இலங்கை சென்ற தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையில் சென்றக் குழு அந்நாட்டு அதிபர் ராஜபக்சவை சந்தித்து ஒன்றரை மணி நேரம் பேசியது. இந்தச் சந்திப்பின்போது அந்நாட்டு அயலுறவு அமைச்சர் பெய்ரீஸ், இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரவீன் குமார் ஆகியோரும் இருந்தனர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவ்சங்கர் மேனன், “இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு அரசியல் ஏற்பாட்டை உடனடியாக உருவாக்க வேண்டும்” என்று ராஜபக்சவை வலியுறுத்தியதாகக் கூறினார். ஆனால், நேற்று முன் தினம் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய மகிந்த ராஜபக்ச, “சிறுபான்மைத் தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு இந்தியா தன்னை நிர்பந்திக்கவில்லை” என்று கூறினாரே! இதுதான் மன்மோகன் அரசு ‘தொடர்ந்து வலியுறுத்துவ’தன் இலட்சணமா?
“விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லது. ஆனால் அதற்குப் பிறகும் தமிழர் பிரச்சனை மறையவில்லை” என்று மன்மோகன் கூறுகிறார். அதாவது மன்மோகன் அரசு எதிர்பார்த்தது: விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால் தமிழர் பிரச்சனையும் அழிந்துவிடும் என்பதுதானே? அதற்காகத்தானே அந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை முத்திரைக்குத்த வைத்து, அதற்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு ‘எல்லா விதத்’திலும் உதவியது? ஆனால் புலிகள் அழிந்துவிட்டார்கள், பிரச்சனை அழியவில்லை! இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் நோக்கமென்றால், அதனை உறுதி செய்துக்கொண்டு பிறகு ராஜபக்ச நடத்திய போருக்கு உதவியிருக்க வேண்டும். ஆனால் இந்திய அரசின் நோக்கம் வேறு. ஈழத் தமிழர்கள் பிரச்சனையை ‘முடிக்க’ சிங்கள இனவெறி ராஜபக்ச அரசுக்கு உதவி, அதன் மூலம் அந்நாட்டின் ‘நட்பை’ (சீனாவை புறந்தள்ள வைத்து) உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
“நீங்கள் வேறு எந்த நாட்டையும் நாட வேண்டாம், எல்லா உதவிகளையும் நாங்கள் செய்கிறோம்” என்றல்லவா...
இந்தியாவின் மெளனம் கலைந்தது - போர்க்குற்றம் குறித்த விசாரனை அவசியம்!
சனல் 4 வெளியிட்ட இறுதிப்போர் தொடர்பான காட்சிகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விஸ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து தெளிவில்லாத நிலையுள்ளது. இதுகுறித்து இலங்கை இன்னும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் .அது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்துஆராயப்படவேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ்பேசும் சிறுபான்மையினரின் நலன் மற்றும் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ளது. அவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக செயல்படுத்த வேண்டும் என இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியா வெளியுறவு அமைச்சகம். அந்த அறிக்கை தொடாபாக இன்னும் பல கேள்விகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் அது என்ன கேள்விகள் என்பதை அந்த அறிக்கை தெளிவுபடுத்தவில்லை.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையைப் பொறுத்தவரை இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்திருந்த நேரத்திலும் கடந்த மாதம் கொழும்பில் நடந்த ஒரு மாநாட்டின் போதும் இலங்கை அரசின் கருத்துக்களை இந்தியா கேட்டறிந் திருப்பதாக விஸ்ணு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சீமானுடன் குடும்பம் நடத்தியற்கு ஆதாரங்கள் :விஜயலட்சுமி வெளியிட்ட படங்கள்
தன்னை காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் சீமான் என்று போலீசில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் தற்போது, 3 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்துவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் தனது வீட்டில் சீமான் காதலர் தினம் கொண்டாடிய படங்களை வெளியிட்டுள்ளார்.
சீமானுடன் குடும்பம் நடத்தியற்கு ஆதாரங்கள் :விஜயலட்சுமி வெளியிட்ட படங்கள்
தன்னை காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் சீமான் என்று போலீசில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் தற்போது, 3 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்துவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் தனது வீட்டில் சீமான் காதலர் தினம் கொண்டாடிய படங்களை வெளியிட்டுள்ளார்.
விசா பெற்றுக்கொடுத்த காசைத் தராததால் மண்டையை உடைத்த சொலிசிட்டர்! (காணொளி)
ஈழத்தில் சொல்லமுடியாத இன்னல்களை அனுபவித்து உயிர் அச்சுறுத்தலால் கப்பலில் அல்லது விமானத்தில் ஏறி வெளிநாடுகளில் தஞ்சமடைகின்றனர் ஈழத் தமிழர்கள். கப்பலில் ஏறி உயிரைக் கையில் பிடித்து மரணபயம் தொடர ஒரு நாட்டில் இறங்கி அகதிகள் அந்தஸ்துக்கோரினால், அதுவும் கிடைப்பதில்லை பெரும்பாலான தமிழர்களுக்கு.
தச்சுத் தவறி விசாக் கிடைத்தால் அதனையும் பெற முடியாத நிலை காணப்படுகிறது என்றால், இந்த உலகில் பாவப்பட்ட இனங்களில் நாம் தான் முதலிடத்தில் உள்ளோம் என்று சொல்லலாம். ஆனால் சும்மா கிடைக்கும் விசாவுக்கு 11,000 பவுன்ஸுகளை அறவிடும் சட்ட நிறுவனங்களை நீங்கள் எங்கேயாவது பார்த்து உண்டா? இல்லை முழுக்காசைக் கட்டாதால் மண்டையை உடைக்கும் அளவுக்கு இவர்கள் செல்கிறார்கள் என்றாவது தெரியுமா?
தமிழர்கள் பிரித்தானியாவில் அகதிகள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும்போது, ஆங்கில மொழிப் பிரச்சனை காரணமாக, தமிழர்களால் நடாத்தப்படும் சட்ட நிலையங்களை அணுகுகின்றனர். இதனால் பணம் சம்பாதித்து கொழுத்த முதளைகளாகி, நீச்சல் தடாகங்களோடு லண்டனில் வீடுகளை வாங்கி செட்டிலான எத்தனையோ சட்ட வல்லுனர்களை நாம் பார்த்திருக்கிறோம். முன்னர் எல்லாம் கிரீன் பொஃம் என்பார்கள் (பச்சைப் படிவம்) இந்த பச்சைப் படிவத்தில் நாம் கையெழுத்துப் போட்டால் போதும், அதில் வேண்டிய தொகையை அவர்கள் நிரப்பிவிட்டு அரசாங்கத்திடம் மில்லியன் கணக்கில் பணத்தைக் கறந்துவந்தனர் சில தமிழ் சட்ட வல்லுனர்கள், ஏன் அவர்களின் நிறுவனங்களும் கூட. அவர்கள் சட்டம் படித்தவர்கள் அல்லவா அதனால் களவையும் நேர்த்தியாக மாட்டிக்கொள்ளாத வகையில் தான் செய்வார்கள். கண்டுபிடிப்பதே கஷ்டம். இருப்பினும் இதனை உணர்ந்த அரசாங்கம் இந்தப் பச்சைப் படிவத்தைப் பின்னர் நிறுத்தியது. ஆனாலும் காசு ஆசை ஆரைத்தான் விட்டது? மில்லியன் கணக்கில் கறந்த கைகள் சும்மா இருக்குமா? அப்படியே அதனை மக்களிடம் கறக்க ஆரம்பித்துவிட்டனர் சில தமிழ் சொலிசிட்டர்மார்!
இதன் உச்சக்கட்டம் தான் தற்போது அரங்கேறிவருகிறது. அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு, ஆனால் பல வருடங்களாக பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் சில தமிழர்களுக்கு தற்போது பிரித்தானிய அரசு விசாக்களை வழங்கிவருகிறது. நாம் ஒரு விடையத்தை இங்கே சரியாகக் கவனிக்கவேண்டும். அதாவது இது அரசாங்கத்தின் முடிவு.
அவர்கள் தாமாக முன்வந்து இதனை வழங்குகிறார்கள். இதற்கும் சட்ட வல்லுனர்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. இவ்வாறு அரசு விசாவை வழங்க அதனைத் தாம் கஷ்டப்பட்டுப் பெற்றுக்கொடுத்ததாக சில தமிழ் சட்ட வல்லுன நிலையங்கள் தமிழர்களுக்குச் சொல்லி அவர்கள் தலையில் மிளகாய் அரைப்பது மட்டுமல்லாது, 11,000 பவுன்ஸுகளை இதற்கு கட்டணமாக கட்டவும் சொல்கிறார்கள். ஒருவர் 8,000 ஒருவர் 9,000 ஒருவர் 11,000 என்று இஷ்டத்துக்கு தன் வசதிக்கு ஏற்றால் போல பணத்தைக் கேட்கிறார்கள். இவ்வளவு காலமாக விசா இல்லாமால் ஒழுங்கான வேலையும் இல்லாமால் 2 பவுன்ஸுக்கும் 3 பவுன்ஸுக்கும் வேலைசெய்யும் தமிழர்களிடம் எங்கே இவ்வளவு பணம் இருக்கப்போகிறது ?
பணத்தைக் கட்டவில்லை என்றால் விசாவைத் தரமாட்டோம் என்பதும், விசாவைத் திருப்பி அனுப்பிவிடுவோம் என்று மிரட்டுவதும் அவர்களின் வாடிக்கை. சமீபத்தில் நடந்த பல உண்மைச் சம்பவங்கள் இதற்கு சான்றாக உள்ளது. சமீபத்தில் 5,000 பவுன்ஸ் கட்டினால் விசா எடுத்துத் தருவதாகக் கூறிய தமிழ் சொலிசிட்டர் ஒருவர், விசா வந்ததும் 13,000 பவுண்டுகளைக் கேட்டுள்ளார். இப் பணத்தின் தொகை குறைவாக உள்ள காரணத்தால், தாம் கொடுத்த விசாப் பேப்பரை இழுத்து பறிக்க முற்பட்ட குறிப்பிட்ட சொலிசிட்டர் அது நிறைவேறாது போக, அங்கே ஏற்கனவே தான் வைத்திருந்த அடியாட்களை வைத்து இந்த நபர்களைத் தாக்கியுள்ளார். அத்தோடு நின்றுவிடாது தானே உள்ளே சென்று ஒரு இரும்புக் கம்பியை எடுத்துவந்து விசாப் பெறச் சென்ற நபர்களைத் தாக்கியும் உள்ளார்.
இதனால் விசாவைப் பெறச் சென்ற தமிழர் படுகாயம் அடைந்துள்ளார். அவர் கொடுத்த முறைப்பாட்டில் பொலிசார் குறிப்பிட்ட சொலிசிட்டரை கைதுசெய்துள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவைப் பொறுத்தவரை ஒரு தொழிலுக்கு செய்கூலி அல்லது விலை நிர்ணயம் உள்ளது ! அதனை ஒரு அளவுக்கு மேல் அறவிடமுடியாது என்ற கட்டுப்பாடுகளும் பல சட்ட வரைமுறைகளும் இருக்கின்றமை பல தமிழர்களுக்குத் தெரியாது. இதனைக் கண்காணிக்க சில நிறுவனங்களும் உள்ளது. ஆனால் ஏன் நாம் அங்கே செல்லவேண்டும், அவர்கள் கேட்கும் காசை எப்பாடுபட்டாவது கொடுத்துவிடலாம் என நினைக்கும் தமிழர்களின் மனப்பாங்கு இவர்கள் போன்ற பல சட்ட வல்லுனர்களின் அடாவடிக்கு வித்திட்டுள்ளன எனலாம்.
எனவே பிரித்தானிய வாழ் தமிழர்களே! நீங்களும் இதுபோல சிக்கலில் மாட்டி இருந்தால். அல்லது தேவைக்கு அதிகமாக பல மடங்கு காசை உங்கள் சட்ட வல்லுனர்கள் கேட்டால், அல்லது ஏமாற்றப்பட்டிருந்தால் நீங்கள் கீள் காணும் இலகத்தில் தொடர்புகொண்டு பேசுங்கள். ஆங்கிலம் தெரியாது என்று ஒரு நாளும் நினைத்து உங்களை நீங்களே தரம் தாழ்த்தவேண்டாம். முடிந்தவரை கதைத்து உங்கள் பிரச்சனைகளைச் சொன்னால் அவர்கள் உதவி உங்களுக்கு நிச்சயம் உண்டு.
இது பிரித்தானிய அரசின் உதவியோடு உங்களுக்காக நடத்தப்படும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்க விடையம். இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் பெரும் பணத்தை வாரி இறைத்து தமிழ் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்கிறார்கள். இவர்கள் யார் என்ன செய்கிறார்கள் என்று சற்றும் சிந்திக்காமல் தமிழ் தொலைக்காட்சிகளும் பணத்துக்காக இதுபோன்றவர்களின் விளம்பரங்களை போட்டுகின்றன. இதனை நம்பும் தமிழ் மக்கள் இறுதியில் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதனை எவரும் மறுப்பதற்கு இல்லை.
தொலைபேசி இலக்கங்கள்: 0844 477 2020
அதிர்வு
காசா மக்களின் துயர் துடைக்கும் பணிகள் முடக்கம்
காசாவை ஸ்ற்றிப் (Strip) என்று அழைப்பார்கள். அதாவது நீண்ட குறுகிய துண்டு நிலம் என்று பொருள். காசாவின் மக்கள் தொகை 1.5 மில்லியன். அனைவரும் பாலஸ்தீனியர்கள். உலகின் மக்கள் அடர்த்தி கூடிய நிலங்களில் ஒன்றாகக் காசா இடம்பெறுகிறது.
1948ல் இஸ்ரேயில் நாடு உருவாகியபோது காசாக் கீற்று தோன்றியது. இஸ்ரேயில் நாட்டிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் காசாவில் தஞ்சம் அடைந்தனர். அன்று தொட்டுக் காசாவில் அகதி முகாம்களும் அகதி முகாம் வாழ்க்கையும் தொடங்கிவிட்டன.
இன்று எட்டுப் (8) பாரிய அகதி முகாம்கள் காசாவில் இடம்பிடித்துள்ளன. வறுமையும், பசிப்பிணியும் நோய் நொடியும் காசாவில் கோர தாண்டவம் ஆடுகின்றன. மனித நேயம் பற்றித் தமது வசதிக்கேற்றப் பேசும் மேற்கு நாடுகள் காசாவை ஏறெடுத்துப் பார்க்க மறுக்கின்றன.
1948 தொடக்கம் 19 வருட காலம் காசாவை எகிப்து நிர்வாகஞ் செய்தது. 1967ல் நடந்த போரில் காசா இஸ்ரேயிலின் கட்டுப்பாட்டில் வந்தது. அன்று தொட்டு இன்றுவரை காசாவின் தலைவிதி இஸ்ரேயிலினால் தீர்மானிக்கப்படுகிறது.
2005ல் இஸ்ரேயில் பிரதமர் ஏறியல் ஷரோன் (Ariel Sharon) காசாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். யூதக் குடியேற்றங்கள் அகற்றப்பட்டன. யூத இராணுவம் வெளியேறியது. ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டதாக ஒப்புக்குச் சொல்லப்பட்டாலும் உலக சமுதாயமும் ஐநாவும் அதை ஏற்க மறுத்தன.
காசாவின் எல்லைகளை இஸ்ரேயில் படைகள் தமது இறுக்கமான பிடியில் வைத்திருக்கின்றன. காசாவின் மேற்கு எல்லைக் கடலை யூதக் கடற்படை கண்காணிக்கிறது. காசா மக்கள் கடற்கரையை அண்மிக்க அனுமதிக்கப்படுவதில்லை. காசாவின் தெற்கு எல்லை எகிப்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
காசாவின் வான்பரப்பில் இஸ்ரேயில் விமானங்கள் பறப்பில் ஈடுபடுகின்றன. காசாவைச் சுற்றி இரும்பு வேலிகளை இஸ்ரேயில் அமைத்துள்ளது. போக்குவரத்திற்காகச் கதவுகள் போடப்பட்டுள்ளன. கதவுப் பொறுப்பு யூதப் படைகள் வசம் இருக்கின்றன.
மனிதநேய சேவைகள் (Humanitarian Services), உதவிகளை ஐநா வழங்குகிறது. சுகாதாரம் மற்றும் கல்வி உதவிகளையும் அது வழங்குகிறது. ஐநா வழங்கும் உதவிகள் இஸ்ரேயில் அரசின் அனுமதியுடன் காசா மக்களைச் சென்றடைகின்றன.
உணவுத் தட்டுப்பாடு உச்சம் அடைந்துள்ளது. உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடையாது. இஸ்ரேயில் படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள இரும்புக் கதவுகள் ஊடாகச் செல்லும் மனிதநேய உதவிகள் காசா மக்களுக்கு எது விதத்திலும் போதுமானவையல்ல.
காசாவுக்கு வழங்கும் மனிதநேய உதவிகளின் தன்மையும் விவரமும் கிடைக்கவில்லை. ஐநா அதிகாரிகள் ‘மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மனித உணவுகள், விலங்கு உணவுகள், சுத்தகரிப்பு மற்றும் கழிப்பறைப் பொருள்கள், சில்லறைச் சாமான்கள், மருந்துகள்” வழங்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.
கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் கழிவு நீர் அகற்றப்படுவதில்லை, தெருக்களில் குப்பைகள் குவிந்துள்ளன, குழாய் நீர் வழங்கல் தடைபட்டுள்ளது, சுகாதாரச் சீர்கேடுகள் நிலவுகின்றன. எல்லாவற்றிலும் பார்க்க மருத்துவ வசதிகள் போதுமானவையல்ல.
2007 தொடக்கம் ஹாமாஸ் (Hamas) அமைப்பு காசாவின் ஆட்சிப் பொறுப்பை மக்கள் தெரிவு மூலம் பெற்றுள்ளது. இதன் பிறகு காசா முற்றுகையை இஸ்ரேயில் இறுக்கியுள்ளது. இந்தக்கொடிய முற்றுகையை ஐநா ‘கூட்டுத் தண்டனை” (Collective Punishment) என்று தீர்மானித்துள்ளது,
1990 பிற்பகுதியில் இஸ்ரேயில் சிறிது காலம் மென்போக்கைக் கடைப்பிடித்தது. காசாவில் சிறிய விமான நிலையம் அமைக்க அனுமதிக்கப்பட்டது. பின்பு அது விமானக் குண்டு வீச்சு மூலம் அழிக்கப்பட்டது. சிறிய துறைமுகம் அமைப்பதற்கும் பேருந்து சேவையைத் தொடங்குவதற்கும் அனமதிக்கப்போவதாக இஸ்ரேயில் கூறியது. ஆனால் இன்று வரை அனுமதிக்கவில்லை.
காசாவில் இருந்து ஹாமாஸ் போராளிகள் இஸ்ரேயில் மீது 40 கி.மீ தூரம் பாயும் றொக்கெற் தாக்குதல் நடத்துகின்றனர். யூத உயிரிழப்பு சொத்திழப்பு குறைவென்றாலும் இஸ்ரேயில் விமானப் படையின் பதிலடியில் பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். கட்டிடங்கள் சேதம் அடைகின்றன.
அரசுகள் தலையிட மறுத்தாலும் காசாப் பிரச்சனை உலகின் தனிமனிதர் மனச்சாட்சியைத் தொட்டுள்ளது. காசா மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களையும் மருந்துகளையும் இஸ்ரேயிலின் முற்றுகையை உடைத்துச் சென்று வழங்கும் தொண்டர் அமைப்புக்கள் எழுந்துள்ளன.
முதலாவது முயற்சி மே, 2010ல் மேற்கொள்ளப்பட்டது. பாலஸ்தீனர்களுக்குச் சார்பான தொண்டர் அமைப்புக்களும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஐஏச்ஏச் (IHH) என்ற துருக்கி நாட்டு என்ஜிஓவும் உதவிப் பொருள்களைக் கடல் மார்க்கமாகக் கொண்டு செல்லத் தீர்மானித்தன.
37 உலக நாடுகளைச் சேர்ந்த 800 தொண்டர்கள் இதில் பங்குபற்ற முன்வந்தனர். காசாப் பயணத்திற்குப் கப்பல் வாடகைக்குவிட ஒரு நிறுவனமும் முன்வராததால் எம்.வீ. மாவி மர்மரா (M.V.mavi marmara) என்ற கப்பலைப் பொது மக்களின் நிதிப் பங்களிப்புடன் ஐஏச்ஏச் கொள்வனவு செய்தது.
மாவி மர்மரா தலைமையிலான கப்பல் தொடரணி காசாவை நோக்கி சர்வதேசக் கடற்பரப்பில் சென்றபோது இஸ்ரேயில் கடற்படையின் தாக்குதல் பிரிவினர் தொடரணியைத் தடுத்து நிறுத்திக் கப்பல்களில் ஏறினார்கள் அவர்கள் நடத்திய துவக்குச் சூட்டில் 9தொண்டர்கள் உயிரிழந்தனர், பலர் காயமுற்றனர். இதை ஐநா உறுதி செய்துள்ளது.
மே 30, 2010ல் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து துருக்கிப் பிரதமர் றெசெப் தயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) இதுவரை இஸ்ரேயிலுடன் பேணிய இராணுவ உறவுகளை முறித்துக்கொண்டார். மாவி மர்மரா கப்பலில் மலேசியா வழங்கிய உதவிப் பொருள்களுடன் தொண்டர்களும் சென்றனர்.
மலேசியாவின் பாலஸ்தீனர்களுக்கு உதவும் பெர்தானா (Perdana) உலகளாவிய உதவி அமைப்பின் தலைவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மகதீர் முகம்மது ‘மூர்க்கத்தனமான காட்டுமிராண்டி நாடு” என்று இஸ்ரேயிலைக் கண்டித்தார். மாவி மர்மரா உட்பட மூன்று கப்பல்களை இஸ்ரேயில் கடற்படை பிடித்துச் சென்றது. அவை யூலை 23, 2010ம் நாள் விடுதலை செய்யப்பட்டன.
இதுவரை காசாவுக்கு உதவும் கடல் மார்க்கமான தனியார் முயற்சிகள் ஆரம்பகட்டத்திற்கு மேல் நகராமல் நிற்கின்றன. இஸ்ரேயில் சார்பு நாடுகள் முட்டுக்கட்டை போடுகின்றன. அமெரிக்காவின் எயிப்பாக் (Aipac) என்ற அமெரிக்க யூதர் அமைப்பு அமெரிக்க அரசைக் கட்டில் போட்டுள்ளது,
2009 மார்ச்சு மாதத்தில் ஐக்கிய இராச்சிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் வணங்காமண் என்ற கப்பல் மூலம் உலர் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை தாயகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். சேகரிப்பு மையங்களில் தமிழுறவுகளின் வழங்கல்கள் குவிந்தன.
‘கப்டன் அலி” என்ற சிறியா நாட்டுக் கப்பல் வணங்காமண் என்று மறு நாமம் செய்யப்பட்டு 894 மெ. தொன் நிவாரணப் பொருள்களுடன் அர்ச்சுனா எதிர் வீரசிங்கம் தலைமையில் ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினர் கிறிஸ்டன் வூச்சனன் உட்பட 15 பேர் சென்றனர். மாவி மர்மராவையும் கப்டன் அலி என்ற வணங்காமண்ணையும் ஒப்பு நோக்கினால் பல வரலாற்று உண்மைகள் வெளிப்படும்.
யூன் 04.2009ல் ஏஎப்பி செய்திச் சேவை வெளியிட்ட தகவலின் படி கொழும்பிலிருந்து 160 கடல் மைல் தொலைவில் சிறிலங்கா கடற்படையினர் இந்தக் கப்பலைக் கைப்பற்றினர். அது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கப்பலென்றும் முல்லைத்தீவுப் பகுதிக்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்டதாகவும் கடற்படை செய்தி வெளியிட்டது.
இக்கப்பல் இலங்கைக்;கு வரமுன்னர் முறையான அனுமதி பெறாது சட்டவிரோதமாக இலங்கைக் கடற்பரப்புக்குள் நுளைந்ததால் அது கைது செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டதாகத் தெரிவித்த கடற்படை அதிகாரிகள் நிவாரணப் பொருட்களை இறக்காமலே கப்பலை வெளியேறு மாறு உத்தரவிட்டனர்.
யூன் 12ம் திகதியளவில் வணங்காமண் கப்பல் சென்னைக் கடல் பகுதிக்கு அப்பால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணாவுக்கு கப்பலில் உள்ள பொருட்கள் வன்னி மக்களுக்கு கிடைக்க ஆவன செய்யுமாறு கடிதம் எழுதினார்.
இதன் பிறகு இலங்கை, இந்திய அதிகாரிகள் மட்டச் சந்திப்பு புது டில்லியில் நடைபெற்றது. பொருட்களை ஏற்று வன்னி தடுப்பு முகாம் அகதிகளுக்கு வழங்க இலங்கை சம்மதித்தது. இந்திய செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பேற்று வேறு கப்பலில் ஏற்றிப் பொருட்களைக் கொழும்புக்கு அனுப்பியது.
கொழும்புத் துறைமுகத்தில் பல மாதங்களாக நிவாரணப் பொருட்கள் தேங்கிக் கிடந்தன. சிங்களவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் பல சாக்குப் போக்குகளைச் சொல்லி இழுத்தடிப்பைச் செய்தது. நிவாரணப் பொருட்கள் வன்னி மக்களுக்குக் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
மூன்று மாதமாகச் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக் கிடந்த பிறகு 680 மெ. தொன் நிவாரணப் பொருள்கள் அடங்கிய 27 கொள்கலன்கள் பார ஊர்திகள் மூலம் 23 ஒக்டோபர் 2009ம் நாள் விநியோகத்திற்காக வன்னி இடம்பெயர்ந்தோர் முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
ஓபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு ஜெயலலிதாவிடம் வேண்டுகோள்!
இந்த வாய்ப்பை சிறப்பான முறையில் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்த வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் என்று ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்புப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஒபாமாவுக்கான தமிழர்களாகிய நாங்கள் எப்போதுமே உங்களை நேசித்து வருகின்றோம். ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை தொடர்பான விடயங்களை நீங்கள் ஹிலாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை எதிர்வரும் 19 ஆம் திகதி தமிழகம் வருகைதரவுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன், தமிழ்நாட்டிலிருக்கும்போது இலங்கை தொடர்பான எந்தவொரு விடயம் குறித்தும் பேசமாட்டார் என்று சிரேஷ்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு, சென்னைக்கு வரும் ஹிலாரி கிளிங்டன் அவர்களிடம் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை பற்றி பேசும் படி வேண்டுகோள்! தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு, சென்னைக்கு வரும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் திருமதி ஹிலாரி கிளிங்டன் அவர்களிடம் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை பற்றி பேசும் படி வேண்டிக்கொள்வதாகும்.
ராம்கி - நிரோஷா வீடுகள் அடுத்த மாதம் ஏலம்!
செந்தூரப்பூவே படத்தில் ஜோடியாக நடித்தனர் ராம்கியும் நிரோஷாவும். தொடர்ந்து பல படங்களில் இவர்கள் ஜோடியாக நடித்தனர். அதில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள ஜெமினி பார்சன் அபார்ட்மெண்ட் குடியிருப்பில் கணவன்- மனைவியாக வசித்து வருகிறார்கள்.
இந்த அபார்ட் மெண்டில் இவர்களுக்கு இரண்டு வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை அடமானம் வைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், கார்ப்பரேஷன் வங்கியிலும் பல லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றனர். ஆனால் அதற்கு வட்டி செலுத்தவில்லை. இதனால் பாங்கிக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை கோடியை தாண்டியது.
இதையடுத்து வீடுகளை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன அந்த வங்கிகள். நிரோஷா-ராம்கி வீடுகள் அடுத்த மாதம் 18-ந்தேதி பகல் 1 மணிக்கு பகிரங்க ஏலத்தில் விடப்படும் என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
குறைந்தபட்ச ஏல கேட்பு தொகை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஜெயமாலாவுக்கு கேரள நீதிமன்றம் நோட்டீஸ்!
சபரி மலை அய்யப்பன் கோயிலுக்குள் ஆண்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. 10 வயதுக்கு கீழான சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் செல்லலாம்.
இந்த நிலையில் இந்த கோவிலுக்குள் இளம் வயதில் சென்று சாமி கும்பிட்டதாகவும், சாமி சிலையை தொட்டதாகவும் கன்னட நடிகை ஜெயமாலா முன்பு கூறி இருந்தார்.
இது பெரிய பிரச்சினையாகி, இது தொடர்பான வழக்கு கேரள நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக ஜோதிடர் உன்னிகிருஷ்ணன், அவரது உதவியாளர் ரகுபதி, நடிகை ஜெயமாலா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், "ரன்னியில் உள்ள தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகி இருப்பதால், அந்த கோர்ட்டில்தான் விசாரணை நடைபெற வேண்டும்'' என்று அறிவித்தனர்.
இந்த நிலையில் ரன்னி தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி ரமேஷ் குமார் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி, "அக்டோபர் 18-ந் தேதி குற்றம் சாட்டப்பட்ட ஜெயமாலா உள்பட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும்'' என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
ஸ்டாலினுடன் கடும் வாக்குவாதம் வெளியேறிய கருணாநிதி!
டெல்லி: திமுக தலைவர் கருணாநிதிக்கும் அவரது மகன் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே சூடான வாக்குவாதம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது திமுக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததில் இருந்தே திமுகவிற்கு நேரம் சரியில்லாமல் உள்ளது. 2ஜி ஊழல் பூதாகரமாக வெடித்து ராசாவும் கனிமொழியும் திஹார் சிறையில் உள்ளனர். தயாநிதி மாறனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் கைதாகும் சூழல் உருவாகியுள்ளது.
சன்டிவி, கலைஞர் டிவி போன்றவையும் சிக்கலில் உள்ளன. இன்னொரு பக்கம் நில அபகரிப்பு வழக்கில் தினமும் ஒரு திமுக நிர்வாகி கைதாகி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை திமுக தலைமையகத்தில் கட்சித் தலைவர் கருணாநிதிக்கும், அவரது மகன் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே சூடான வாக்குவாதம் நடந்துள்ளது. இதில் கடுப்பான கருணாநிதி தலைமையகத்தைவிட்டு வெளியேறியதாக செய்தி வெளியாகியுள்ளது,
2ஜி விவகாரம் கையாளப்படும் விதம் குறித்து ஸ்டாலின் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எப்பொழுதும் கட்சியினர் புடைசூழச் செல்லும் கருணாநிதி நேற்று ஈசிஆர் ரோட்டில் உள்ள கடற்கரை வீட்டிற்கு தனியாகச் சென்றுள்ளார். அவரது செயலாளர் கே. சண்முகநாதனும், பாதுகாவலர்கள் சிலரும் மட்டுமே அவருடன் சென்றுள்ளனர்.
குடும்ப அரசியலால் தான் சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்தது என்று கட்சியினரே அதிருப்தியடைந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.
ஐந்தாம் கட்டப் ஈழப் போருக்கு தயாராகும் புலிகள்.பிரெஞ்சு சஞ்சிகை பரபரப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீண்டும் ஒரு போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பிரெஞ்சு மொழி சஞ்சிகைகளில் ஒன்றான ASIES தெரிவித்து உள்ளது. இச்சஞ்சிகை நடப்பு விவகாரங்களை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கின்றமை வழக்கம்.
இலங்கை தொடர்பாக பிரசுரித்து உள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றிலேயே புலிகள் மீண்டும் ஒரு போருக்காக ஒரணி சேர்ந்து வருகின்றனர் என்றும் ஐரோப்பிய நாடுகள், கனடா, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம் ஆகியவற்றை தளமாக கொண்டு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டு உள்ளது.
இதில் மேலும் கூறப்பட்டு இருப்பவை வருமாறு :-
புலிகள் ஓரணி சேர்ந்து வருகின்றனர் என்று பல நாடுகளின் புலனாய்வாளர்களும் தெரிவித்து உள்ளார்கள். புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பின் ஒரு பகுதி தொடர்ந்தும் பலமாக இருந்து வருகின்றது. புலம்பெயர் அமைப்புக்களுடன் சேர்ந்து வெளிநாடுகளில் புதிய வலையமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த வருடம் கப்பலில் கனடாவுக்குள் பிரவேசித்தபோது 500 பேர் வரையான தமிழர்கள் பிடிக்கப்பட்டனர். இவர்கள் புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. பிரான்ஸ், பிரிட்டன், நோர்வே மற்றும் தென்னாசிய நாடுகள் ஆகியவற்றில் புலி ஆதரவு சக்திகள் நிலை கொண்டு உள்ளார்கள்.
கொரில்லாக்கள் ஒரு போதும் சும்மா இருக்க மாட்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்தவர் குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் வைத்து 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இலங்கையிடம் கையளிக்கப்பட்டார்.
இவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் அரசுடன் அண்மைய காலங்களில் பேச்சு நடத்தி இருக்கின்றார்கள். பதிலுக்கு அரசியல் நீரோட்டத்தில் இணைவார்கள் என்று கூறி உள்ளனர்.
10,000 புலிகள் இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரி இருக்கின்றனர். புலிகள் வலை விரிக்கின்றார்களா? என்று பெரிதும் அஞ்சுகின்றது இலங்கை அரசு.
சுதந்திர தமிழீழத்தை அங்கீகரிக்க கோரும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இதுவே சரியான தருணம்.
இந்த உலகத்தில் விடுதலைக்காக,மிக அதிக விலை கொடுத்த இனம் தமிழ் இனம் ஒன்று மட்டும் தான் இருக்கமுடியும் ,சரி... கொடுத்த விலைகள்,உலகில் மனித உரிமை,ஜனநாயகம் பேசும் வல்லரசுக்கும்,ஐக்கிய நாடுகளின் சபைக்கும் போதாதா?எங்கள் தமிழீழத்தில் சுதந்திர போராட்டத்தில் எழவு விழுகாத வீடு என்று எதுவும் இருந்தால் அது பெரிய அதிசயம் தான்.
வெலிக்கடை சிறையில் தொடங்கிய 1983 ஆம் ஆண்டு கலவரமும் பலி கொடுத்த உயிர்களும் ஆவணப்படுத்த மறந்தோம், செம்மணி புதைகுழியை மறந்தோம்,......கண் முன்னே ஆவணப்படுத்திய போர்க்குற்றங்கள் மீதான நடவடிக்கைகள் எதுவும் நம்பிக்கை தருவதாக இல்லை...மனிதாபிமானம் பேசும் அரசுகளுக்கு என்னை வயல்களும்,வணிக முக்கியத்துவமும் இருந்தால் மட்டும் தான் கண் தெரியும் போல இருக்கிறது.அவர்கள் அன்னியர்கள் சற்று தாமதித்தாலும் தவறில்லை,அவர்கள் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறார்கள்.ஆனால் இங்கே தமிழீழத்தில் இருந்து தொட்டு விடும் தூரம் வெறும் 18 கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் என் தமிழ் தாயகமே தற்க்குரிகளின் பிடியிலும்,சுய நல பிசாசுகளின் பிடியிலும் நீ இருக்கிற காரணத்தால்,எங்கள் கண்ணீர் இன்றும் நின்ற பாடில்லை,தேர்தல் தோறும் எங்களது சாவுகள் தமிழ்நாட்டு அரசியலுக்கு உரமாகத்தானே பயன் பட்டது,இதோ இன்று இந்தோனேசிய கடலில் உன் பிள்ளைகள் 87 பெர்கடலில் நியுசிலாந்தில் அகதிகளாக வேண்டி போராடுகிற செய்தி உனக்கு தெரியுமா?தமிழ்நாட்டு பத்திரிக்கைகள்,ஏதாவது எழுதியதா?ஏன் எழுதவில்லை என்று யாராவது கேட்டீர்களா?கோதாவரி பஞ்சத்தில் வந்த தெலுங்கனுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்த தமிழ் இனம், கிருஷ்ணா தேவராயனின் படைக்கு பயந்து வந்த புலிகேசிகளுக்கும் ஆதரவு கொடுத்து வாழவைத்த தமிழ் இனம்,வெள்ளைக்காரனுக்கு முன்பே,ரோமாபுரியிலும் கிரேக்கத்திலும் வாணிபம் செய்த தமிழன்,கடாரம் வென்ற தமிழன்,ஜாவா சுமத்திராவை ஆண்ட தமிழன்,இன்று உயிருக்கு அகதியாய் வாழ தஞ்சம் கேட்டு போராடுகிறான்.
என்ன ஆனது அந்த மாட்சிமை பொங்கிய வரலாற்றின் செறிவுகள்,ஏன் தோற்றோம்,எதற்க்காக இந்த அவல நிலை,ஏ....எட்டு கோடி தமிழ் நாட்டு தமிழ் இனமே உன் பாராமுகம் நியாயம் தானா?உனக்கென்ன தமிழ் இனத்துரோகி திருடன் கருணாநிதியை பதவியை விட்டு துரத்தியவுடன் கடமை முடிந்தது என்று முடித்துவிட்டாயா,முள்ளிவாய்க்களில் கொடுக்க தொடங்கிய உயிர் பலிகள் இன்னும் முடியவில்லை என்பது உனக்கு தெரியுமா?இங்கே நடக்கின்ற வெள்ளை வேன் கடத்தல்கள் உனக்கு தெரியுமா,மர்ம சாவுகள் தெரியுமா,சரி விட்டு விடு இந்திய தீபகற்ப்பத்தின் ஒரே சர்வதேச இனம் நீ மட்டும் தான் என்ற உணர்வு,கொஞ்சமாவது உனக்கு இருக்கிறதா,விளைவுகளை பற்றி கொஞ்சமாவது சிந்தித்தாயா.
சர்வதேச அரசியலின் போக்கு சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் முறுகல் நிலையினை எதிர்கொள்கிறதே சிங்களன் மத அடிப்படையில் சீனனோடு கைகோர்க்கிறானே,கச்ச்சத்தீவிலே சீனன் உட்கார்ந்து விட்டானே.சிங்களன் இப்போது ஐக்கிய நாடுகளின் சபையில் வீடோ அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் சீனாவோடு இணைந்து செயல்படுவது தான் நல்லது என்று சீன சார்பு நிலை எடுத்து விட்டானே,சீனன் கச்சத்தீவில் அமைக்கும் தளத்தில் இருந்து ,தாக்குதலுக்கு இலக்காவது தமிழ்நாடுதானே,டில்லிக்காரனுக்கு தமிழனின் குரல் எப்போதும் பிடிக்காது இந்த உண்மை உனக்கு தெரியாதா?விழித்தெழு....தமிழா...விழித்தெழு தமிழ்நாட்டு தமிழா துயில் எழு......... கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் இன்றைய முதல் அமைச்சர்,செல்வி ஜெயலலிதா அவர்கள்,சொன்ன தேர்தல் வாக்குறுதியில் சுதந்திர தமிழீழம் ஒன்றே தமிழீழ மக்களுக்கு தீர்வு என்று சொன்னார்.அய்யா தமிழ்நாட்டு தமிழர்களே,உலகத்தமிழர்களே அம்மையார் ஜெயலலிதாவுக்கு அதை நினைவுபடுத்தி தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் சுதந்திர தமிழீழத்தை அங்கீகரிக்க கோரும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இதுவே சரியான நேரம்...செய்வீர்களா நண்பர்களே?
எம்மை பற்றி கவலை இல்லை எம்மை வழி நடத்த எங்கள் தலைவன் இருக்கிறான்,எங்களுக்குள்ளே இருந்த துரோகிகளும் ,புல்லுருவிகளும்,அடையாளம் கண்டுவிட்டோம்.இனி வரும் காலம் தமிழீழத்தின் காலம்,அது எங்கள் பொற்காலம்,ஓயாத அலைகள் நடவடிக்கையில் 30000 சிங்களராணுவத்துக்கு உயிர் பிச்சை கொடுத்த புலிகள்,உலகத்தில் அயோக்கியர்கள் எம்மை பயங்கரவாதிகள் என்று சொன்னபோதும்,ஐக்கிய நாடுகளின் சபையின் போர்க்குற்ற விசாரணை ஆணைய அறிக்கையில் குறிப்பிட்ட படி,உலகத்தின் தலை சிறந்த ,கட்டுப்பாடு மிகுந்த,ஒழுக்கமான இயக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள்,பாய்வதற்காக பதுங்கிக்கொண்டிருக்கும் தானைத் தலைவன் அறிவிப்புக்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.தலைவனின் அஞ்ஞான வாசம் முடியும் போது,தமிழீழ தமிழ் இனம்,துரோகிகள் இன்றி இருக்கும்,மவுனித்த ஆயுதங்கள் முழங்கும், ஓயாத அலைகள் 5 சுதந்திர தமிழீழம் அமைக்கும்,சுதந்திர தமிழீழம் தான் தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பு அரண் என்ற உண்மை தமிழ்நாட்டு தமிழனுக்கு அப்போது தான் புரியும்.
Friday 15 July 2011
முத்தையா முரளிதரன் அவர்கள் உங்கள் வேலையை மட்டும் பார்க்கலாமே!
இலங்கையின் கொலைக்களத்தைப் பார்க்கும் அமெரிக்க எம்.பிமார்!
வொஷிங்டனில் உள்ள காங்கிரஸ் அரங்கத்தின் கேட்போர் கூடத்தில் மாலை 3.00 மணிக்கு இப்படம் காண்பிக்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அமெரிக்க கிளை, நெருக்கடிகளுக்கான சர்வதேச குழு, வெளிப்படைச் சமூகத்துக்கான ஸ்தாபனம், Tom Lantos மனித உரிமைகள் ஆணைக் குழு ஆகியன மேற்கொண்டு உள்ளன.
பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களில் ஒருவரும், Tom Lantos ஆணைக்குழுவின் இணைத் தலைவருமான Jim McGovern படத்தை திரையிடுகின்றமைக்கு முன்பாக அறிமுக உரை ஆற்றுவார்.
போருக்கு பிந்திய இலங்கையின் தற்போதைய நிலைமைகள், இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களில் அமெரிக்காவின் நிலைப்பாடு ஆகியன குறித்து படக் காட்சி முடிவடைந்த பின்னர் பேராளர்கள் கலந்துரையாடுவார்கள்
சனல் 4 காணொளி தொடர்பில் இலங்கையில் விசாரணை அவசியம் : இந்தியா
இதுவரை இந்த விடயம் தொடர்பாக இந்திய கருத்தை எதனையும் வெளியிட்டிருக்கவில்லை.
அது இலங்கையின் பொறுப்பு என்று தட்டிக்கழிக்கும் போக்கை கடைப்பிடித்து வந்தது.
எனினும் நேற்று இந்திய இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்திகளின்படி இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தில் கேள்வி எழுப்பப்படுவதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது.
எனினும் அந்த நாட்டின் கருத்தை இந்திய பேச்சாளர் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் ஏ.எப்.பி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர், இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை விசாரணை நடத்தவேண்டும் என்று கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தீவிர அக்கறை காட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி குறிப்பி;ட்டுள்ளது.
Thursday 14 July 2011
தென் சூடானின் சுதந்திர விழாவில் தமிழீழ அரசாங்கம்!
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தென் சூடானின் சுதந்திர நிகழ்வுகளில் உத்தியோகபூர்வமாக பிரதிநிதித்துவப் படுத்தியிருந்தனர். புதியதொரு நாட்டின் பிறப்பிற்கு ஏனைய அரச பிரதிநிதிகளுடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் சாட்சிகளாக இணைந்திருந்தனர்.
தென் சூடான் சட்ட சபையின் சபாநாயகர் ஜேம்ஸ் வானி இக்கா அவர்களின் சுதந்திரப் பிரகடன உரையுடன் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து குழலிசையில் தேசியகீதம் ஒலிக்க, சூடானின் தேசியக்கொடி இறக்கப்பட்டு புதிய தென் சூடான் குடியரசின் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
குடியரசு தலைவர் சலிவா கீர் அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டு சத்தியப்பிரமாணத்தை செய்து தென் சூடான் குடியரசின் தலைவராக பதவியேற்று பேசுகையில்,
'எமது மாவீரர்கள் வீணாக தமது இன்னுயிர்களை அர்ப்பணிக்கவில்லை இந்த நாளுக்காக நாம் 56 ஆண்டுகளுக்கு மேலாக பொறுத்திருக்க வேண்டியிருந்து. இந்த நாள் நிரந்தரமாக என்றைக்கும் எமது மனங்களிலும் நினைவுகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும்' என்று கூறினார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்களின் வாழ்த்துச் செய்தியில்,
'தென் சூடான் மக்கள் சுதந்திரமான மக்களாகி அடையும் மகிழ்ச்சியை, தமிழீழ மக்களும் தெளிவாக புரிந்துகொண்டு அந்த மகிழ்வில் பங்குகொள்கிறார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழீழ மக்களும் தென் சூடான் மக்களுக்கு, அவர்களின் விடுதலைக்காக தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள். அவர்களின் தியாகத்துக்கு தலை வணங்கி அவர்களது உறுதியையும், வீரத்தையும் தமிழீழ மக்கள் பாராட்டுகிறார்கள்.' என்று தெரிவித்துள்ளார்.
தென் சூடான் வானொலி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனான நேர்காணலை ஒலிபரப்பியது. தென் சூடானின் சுதந்திரதின விழாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பங்குபற்றியது மட்டுமன்றி, அங்கு தொடர்ந்து தங்கிநின்று தென் சூடானின் அபிவிருத்திக்கு குறித்த துறைகளில் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் துறைசார் வல்லுனர்கள், உதவக்கூடிய சந்தர்ப்பங்கள் பற்றி தென் சூடான் அரசாங்கத்துடன் கலந்துரையாடினர்.
மேலும், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் சுதந்திரதின விழாவில் பங்குகொள்ள வந்திருந்த பல வெளிநாட்டு அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்து, ஈழத்தமிழரின் நிலைக்கும், தென் சூடானின் கடந்தகாலத்துக்கும் இடையேயான பொதுவான தன்மைகளை விளக்கினர். மேலும் அவர்கள் சிறிலங்கா அரசு புரிந்துவரும் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விபரங்களையும் வழங்கினர்.
சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்குமான உறவு புதியதல்ல. மே 2009ல் பிலடெல்பியாவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வில் உரையாற்றுவதற்காக, ஐக்கிய அமெரிக்காவிற்கான தமது செயலாளர் நாயகம் திரு டோமாக் வால் றுயாக் அவர்களை, சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அனுப்பி வைத்திருந்தது.
தென்சூடானின் விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி அவர் பேசினார். மேலும் விடுதலைப் போராட்டங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும் ஈழமக்களுடனான தமது உறுதிப்பாட்டை குறிப்பிட்டும் அவர் உரையாற்றியிருந்தார்.
தென் சூடானில் இடம்பெற்றது போல ஈழத்திலும் சர்வதேச கண்காணிப்புடனான சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பை நடத்துமாறு சர்வதேச சமுகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
2009 இறுதிப்போரின் போது இடம்பெற்ற தமிழின படுகொலையால் தமிழர்களுக்கு தனியான நாடு ஒன்றே அவர்கள் உயிருடன் வாழ்வதற்கான ஒரே தீர்வு என்ற வகையில் தமிழரின் தனிநாட்டு கோரிக்கை மேலும் நியாயமானது என்பது இங்கு குறிப்பிட்டு காட்டப்படுள்ளது.
சென்று வாருங்கள் பேராசானே...!: ச.ச.முத்து
அதுவரையும் புத்திசீவிகளைப்பற்றியும், பேராசிரியர்கள் பற்றியும் எங்கள் மனங்களுக்குள் இருந்த விம்பங்களையும் கற்பிதங்களையும் தகர்த்து எறிந்து தவிடு பொடியாக்கியவர் பேராசிரியர் சிவத்தம்பி ஆவார். அவருடன் கதைப்பதற்கு முன்னர் பேராசிரியர்கள், புத்திசீவிகள் என்றால் தங்களுடன் கதைப்பவர்களைவிடவும் ஓர் அடி மேலாக நின்று அந்தரத்தில் உலாவிக்கொண்டே கருத்துச் சொல்பவர்கள், சாதாரணமக்களுக்கு புரியாமலேயே ஏதேதோ வார்த்தைகளை பேசும்போது புகுத்துவார்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தோம். முதலாவது சந்திப்பிலேயே மிக அந்நியோன்னியமாக நட்பாக,தோழமையுடன் கருத்துச்சொல்லவும், கருத்துகளை கேட்கவும் அவரால் முடிந்ததை பார்த்தபோது இருந்த மலைப்பு இன்றளவும் தொடர்கிறது.
அவரைப்போல நவீன இலக்கியம், சமூகஆய்வறிவு, ஆங்கில புலமை, நுண்கலைகள் பற்றிய ஆழ்ந்த பேரறிவு, நடப்பு அரசியல் பற்றிய துல்லியமான பார்வை, என்பனவற்றுடன் மரபு இலக்கியங்களிலும் மிகமிக விரிந்த தேடலும், ஆற்றலும் கொண்டவராக இன்னுமொருவர் வந்துவிடமுடியாது என்று சொல்லுமளவுக்கு அவர்அனைத்து தளங்களிலும் மிகுந்தபரந்து விரிந்த புலமை கொண்டவராக இருந்திருக்கிறார்.
அவரால் மட்டுமே பல்கலைக்கழகங்களில் துறைசார் பேரறிஞர்களுடன் தரவுகளை எடுத்துப்போட்டு மிக ஆழமாக விவாதங்களில் ஈடுபடவும் அதே நேரத்தில் முதன் முதலாக எழுதவேண்டும் என்ற ஆவலில் உள்ளவர்களுடனும் அதே ஈடுபாட்டுடன் கதைக்கவும் முடிகிறது. எல்லோருக்கும் அவரை எட்ட இருந்து பார்க்கும்போது ஒரு தமிழ்பேராசிரியராகவோ, நுண்கலை அறிஞராகவோதான் தெரியும். ஆனால் அவருடன் கதைத்துக்கொண்டு இருக்கும; பொழுதுகளில் எந்த துறையானாலும் அவர்தனது ஆளுமையை அந்த துறையில் தனக்கு இருக்கும் அறிவாற்றலை, தேடலை மிகவும் தெளிவாக புரியவைத்துவிடுவார்.
அவருடைய புத்தகங்கள் அனைத்தும் வாசகனுடன் மிகநெருக்கமான உறவை வாசிக்கும்போது கொண்டுவிடுகின்றன. நவீன இலக்கியம் முதல் தொல்பொருளியல் வரைக்கும் அவருடைய புத்தகங்கள் விலாவாரியாக பேசுகின்றன. அதிலும் அவர் எழுதிய தமிழ்இலக்கியத்தில் மதமும் மானுடமும் என்ற புத்தகம் மிகவும் ஆழமாகவும் சுவாரசியமாகவும் மொழியில் மதங்களின் பங்களிப்பையும் பாதிப்பையும் சொல்லியது.இன்றுஅந்த புத்தகம் நான்காவது பதிப்புகூட வருமளவுக்கு நிறைந்தஒரு வாசகப்பரப்பை கொண்டிருக்கிறது.
இதுவரை கண்டடையப்பட்ட எந்த சமூகமும் மதம் இல்லததாக இல்லை என்ற வரைபுடன் ஆரம்பிக்கும் அவரது ஆய்வு மதத்தை நிராகரிப்பது ஆதரிப்பது என்பதற்கு அப்பால் விலகி மதத்தின் வரலாற்றுப்பாத்திரத்தை மிகஅழகா,மிகஎளிமையாக விளக்குகிறார். இதே புத்தகத்தின் 130ம் பக்கங்களில் பேராசிரியர் அவர்கள் திருக்குறளை தமிழில் ஒலித்த முதலாவது மானுட விடுதலைக்கான குரலாக பார்ப்பதை காணலாம். இந்த கருத்து இந்த புத்தகம் எழுதப்பட்டு (1984) பத்துஆண்டுகளுக்கு பின்னர் அவர் டென்மார்க்நாட்டுக்கு வநதிருந்தபோதும் அப்படியே மாறாமல் இருந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
உலகத்தின் வட முனையில் இருக்கும் சுவீடன் ஊப்சலா பல்கலைக்கழகம் முதல் அமெரிக்க, ஆபிரிக்க, ஆசிய, அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் அவரை தமது பல்கலைக்கழகங்களுக்கு மரியாதைக்குரிய பேராசிரியராக, வருகைதரும் பேராசிரியாராக அழைத்து கவுரவித்தன. அத்தனை பல்கலைக்கழகங்கள் ஏறினாலும் அவர் ஏதோ ஒரு பொழுதில் அந்த நிகழ்வுமுடிந்ததும் தனது மண்ணுக்கே திரும்பும் ஒரு யாத்திரையை மேற்கொண்டு இருந்தார். அவர் அந்த மண்ணையும் அதன் மக்களையும் ஆழமாக நேசித்தவர்.
நாம்வாழும் காலத்தின் மிகப்பெரும் அறிஞர்அவர் என்ற மதிப்பும் மரியாதையும் அவரிடத்தில் இன்றும் இனிவரும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.தமிழில் ஆய்வுகளையும், விமர்சனங்களையும் ஒரு கருத்து இயக்கம்போலவே நடாத்திக்கொண்டு இருந்தவர் பேராசிரியர் சிவதம்பியாவார்.
இன்று அந்த அறிவுஅமைப்பு கண்ணை மூடிவிட்டது. அவருக்கு மரணம் வரும் நெருத்தில்கூட எங்காவது சங்ககாலப்பாடல்களில்,அல்லது சைவசித்தாந்த பாடல்களில்மரணநேரம் பற்றிய பாடல்கள் இருக்கின்றதா என்றே நினைத்திருப்பார்.அல்லது மார்க்சிம் கோர்க்கியோ,டால்ஸ்டாயோ மரணத்தை பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றே இறுதிக்கணத்திலும் யோசித்திருப்பார்.அவரின் மனம்,மூளை,ரத்தம்,செல்கள்,எங்கும் இலக்கியம்தான் புகுந்து இருக்கிறது. அவரே அவரின் ஒரு புத்தகமான இலக்கியமும் கருத்துநிலையும் என்பதில் சொல்லி இருக்கிறார்.
இலக்கியம் என்பது ஒரு சமூகஅழகியல் நிகழ்வு (பக்கம்28) என்று. ஆனால் தமிழ்சமூகம் இப்போது சிவத்தம்பி என்ற இலக்கிய பிதாமகரை இழந்து தனது அழகு அற்று நிற்கிறது. பேராசான் சிவத்தம்பி அவர்களின் தமிழில் இலக்கியவரலாறு என்ற நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையின் இறுதியில் சொல்லியிருப்பதுபோல நிகழ்வுகள் நினைவுகளாகி,அந்த நினைவுகளின் நினைப்பிலே வாழ்வது மனிதனின் மானுடத் தன்மைக்கு வலுவும் ஆழமும் வழங்குகிறது என்பதைப்போலவே பேராசானின் நினைவுகள் வலுவும் ஆழமும் வழங்கும் சென்றுவாருங்கள் பேராசானே..!.
உலக கம்யூனிஸ்டுகளிடம் ஈழத் தமிழருக்கு ஆதரவு இந்திய கம்யூனிஸ்ட்
இலங்கையில் நிகழ்த்தப்பட்டது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அல்ல. அது மனித குலத்துக்கு எதிரான போர் என்பதை உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு விளக்கி வருகிறோம் என்று உதயனுக்கு வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்தார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் தா.பாண்டியன்.இலங்கையில் நடை பெற்ற போரின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதை இந்தியாவில் உள்ள எல்லா மாநில மக்களுக்கும் விளக்கும் பணியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு கட்டமாக கடந்த 8ஆம் திகதி இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தரும் தினம் என்று பிரகடனப்படுத்தி இந்தியா முழுவதும் நிகழ்வுகளை நடத்தியது கட்சி.
ஆந்திரா, தமிழகம், கேரளா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்தத் தினம் கடைப் பிடிக்கப்பட்டது. கட்சி யின் இந்தச் செயற்றிட் டத்தின் ஒரு பகுதியாக இலங்கைப் போரின் உண்மையை உலகக்கம் யூனிஸ்டுகளுக்கு விளக்கும் திட்டத்தையும் அது ஆரம்பித்துள்ளது.
சென்னையில் உள்ள அலுவலகத்தில் வைத்து உதயன் பிரதிநிதிக்கு வழங்கிய பேட்டியில் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் மேலும் தெரிவித்தாவது:
உண்மையான தகவல்கள் உலக கம்யூனிஸ்டுகளுக்குப் போய்ச் சேரவில்லை. நடந்தது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று இலங்கை அரசு செய்த பிரசாரத்தின் அடிப்படையிலேயே பல கம்யூனிஸ்ட் அரசுகளும் கட்சிகளும் இதுவரை முடிவுகளை எடுத்து வந்தன. இப்பொழுது அந்தந்த நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உண்மை என்ன என்பதை நாம் எடுத்து விளக்கி வருகிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான போரிலா லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் மற்றும் பல லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டும் உள்ளார்கள் என்ற யதார்த்தத்தை அவர்களுக்குப் புரிய வைக்கிறோம்.
இது தொடர்பான தரவுகள், ஆவணங்களுடன் 49 நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நாம் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளோம். அவற்றில் 10 நாடுகளில் இருந்து, இப்போதுதான் உண்மை தெரிந்தது. உங்கள் முயற்சியை வரவேற்கிறோம் என்று பதில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 5 நாடுகளில் இருந்து எமது கடிதம் கிடைத்து விட்டது என்ற பதில் அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் எமது கடிதத்தை ஆங்கிலத்திலேயே அனுப்பி வைத்தோம் என்பதால், அவற்றை அந்தந்த நாட்டு மொழிகளில் பெயர்த்து எடுப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் ஏனைய நாடுகளிடம் இருந்து பதில் கிடைப்பது தாமதமாகிறது.
எப்படி இருந்த போதும், உலகிலுள்ள முற்போக்கு சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கப் போராடுவோம். பாலஸ்தீனப் பிரச்சினையில் செயற்பட்டது போன்ற அதேயளவு வேகத்துடனும் உணர்வுடனும் உலக முற்போக்கு சக்திகள் அனைத்தையும் நாம் அணி திரட்டுவோம்.இந்த முயற்சியில் நாம் வெற்றிபெறுவோம் என்று திடமாக நம்புகின்றேன். குறிப்பிட்டளவு முன்னேறி இருக்கிறோம் என்றும் கருதுகின்றேன். இப்படி தனது பேட்டியில் தா. பாண்டியன் தெரிவித்தார்.
சன் ரீவி. கலாநிதி சுவிஸ் ஓட்டம்
ஒப்பந்தப்படி, வினியோக உரிமையை தனக்கு கொடுக்காமல், தியேட்டர் உரிமையாளர்களுக்கு வினியோகித்து விட்டார். பணத்தை கேட்ட போது, அதில், 82.53 லட்ச ரூபாயை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்தார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். புகாரை அடுத்து, கடந்த 3ம் தேதி, சக்சேனா கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் தள்ளப்பட்டார். கோர்ட் உத்தரவின்படி, சக்சேனாவை இரண்டு நாட்கள், “கஸ்டடி’யில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையின் போது, சக்சேனா, “நான், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஊழியன் மட்டுமே. என் முதலாளி (கலாநிதி) சொன்னதைத் தான் செய்தேன். வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சக்சேனா மீது, சேலத்தைச் சேர்ந்த சண்முகவேல் மற்றும், “மாப்பிள்ளை’ படத் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் புகார் அளித்ததையடுத்து, அந்த வழக்குகளிலும் சக்சேனா, ஐயப்பன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். சக்சேனா அளித்த தகவலின் அடிப்படையில், சன் குழும நிர்வாக இயக்குனரான கலாநிதியை, நேற்று(புதன் கிழமை) காலை 10 மணிக்கு ஆஜராகக் கூறி, கே.கே.நகர் போலீசார், கடந்த திங்களன்று சம்மன் அனுப்பினர். கலாநிதி, போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை வந்தாக வேண்டும் என்பதால், பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர்.
பரபரப்பான சூழலில், காலை 10:15 மணிக்கு, பாட்சா என்பவர் தலைமையில் ஏழு வக்கீல்கள், கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில், விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகி, கலாநிதி சார்பில் மனு ஒன்றை அளித்தனர். அதில், கலாநிதி, சொந்த விஷயமாக தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், வரும், 26ம் தேதி சென்னை திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய ஐயப்பன், விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதால், தானும் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில், கலாநிதி திடீரென வெளிநாடு பயணம் சென்றதாக தெரிகிறது. எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் கலாநிதி சம்பந்தப்பட்டிருப்பதால், அவருக்கு கால அவகாசம் கொடுப்பதா அல்லது அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் கைது செய்வதா என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கலாநிதி எங்கே?: திங்களன்று சம்மனை பெற்ற கலாநிதி, நேற்று முன்தினம் பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி சென்று, அங்கிருந்து, “சுவிஸ்’ விமானம் மூலம், சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்று விட்டார். எப்போதும், விமானத்தில் முதல் வகுப்பிலேயே பயணம் செய்யும் கலாநிதிக்கு, அந்த வகுப்பில், அப்போது, “சீட்’ இல்லை எனக் கூறி விட்டனர். “பிசினஸ் வகுப்பில்’ பயணம் செய்வதை தவிர்க்கும் கலாநிதி, வேறு வழியில்லாமல், “பிசினஸ்’ வகுப்பிலேயே, அவரது கன்னடத்து மனைவி காவிரியுடன், “ஜூரிச்’ நகரத்துக்கு பறந்து விட்டார்.
இந்தியில் ரீமேக்காகும் கோ: கே.வி. ஆனந்த் தீவிர ஆலோசனை
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா-கார்த்திகா, பியா நடிப்பில் வெளியான படம் “கோ” . திரையரங்குளுக்கு வரும் தமிழ் படங்கள் எல்லாம் ஒரு வாரத்தில் வெளியேறிய நேரத்தில் கோ வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஜீவாவுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.
கார்த்திகாவுக்கும் இதுதான் பெயர் வாங்கிக் கொடுத்த படம். இதில் நடித்த பியா பாஜ்பாயின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
இத்தனை சிறப்புகள் வாயந்த கோ படத்தை இந்தியில் எடுப்பது குறித்து கே. வி. ஆனந்த் ஆலோசித்து வருவதாக அந்த படத்தில் வில்லனாக நடித்த அஜ்மல் தெரிவித்தார்.
இந்தியில் ஜீவா கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் அல்லது ஷாகித் கபூரை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முதலில் ஜீவா கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிப்பார் என்று கூறப்பட்டது. தற்போது ரன்பீர் அல்லது ஷாகித் நடிக்கக்கூடும் என்று தெரிகிறது.
இந்திக்குப் போகும் 'மகாலட்சுமி'!
தெலுங்கில் வெளியான அம்மா நானா தமிழ் அம்மாயி படத்தை ஜெயம் ரவி, ஆசின் நடிக்க தமிழில் ரீமேக் செய்தார் ஜெயம் ராஜா. படம் சூப்பர் ஹிட். ஆசினுக்கு இந்தப் படம்தான் முதல் தமிழ்ப் படம். இப்படத்துக்குப் பின்னர் திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லாமல் தமிழை பெரிய ரவுண்டு அடித்து முடித்தார் ஆசின்.
இப்போது இந்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். முதல் படமான கஜினி பெரும் ஹிட் ஆகி ஆசினுக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகி பின்னர் சித்தெறும்பு ஆன கதையாக இப்போது ஆசினுக்கான இந்தி வாய்ப்புகள் பிரகாசமாக இல்லாத நிலை.
இந்த நேரம் பார்த்து அவரது வயிற்றில் பாலை ஊற்றும் விதமாக தனது அம்மா நானாவை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார் பூரி ஜெகன்னாத் என்ற தகவல் ஆசினை வந்து சேர்ந்தது. அவரை அணுகி நான்தானே ஹீரோயின் என்று கேட்க, அவரும் ஆமாமா என்று வேகமாக மண்டையை ஆட்டி வைத்துள்ளாராம். இதனால் ஆசின் படு குஷியாக காணப்படுகிறார்.
இந்தி ரீமேக்கில் ஆசின் நடிப்பதாக இருந்தால், பூரியுடன் ஆசின் இணைவது இது மூன்றாவது முறையாகும். அம்மா நானா தவிர பூரி இயக்கி சிவமணி என்ற படத்திலும் ஆசின் நடித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, தான் அமிதாப் பச்சனை வைத்து இந்தியில் இயக்கி புத்தா ஹோகா தேரா பாப் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வருவது குறித்து பூரி கவலைப்படவில்லையாம். மாறாக அமிதாப்பச்சனை வைத்து இயக்கியதே தனது பெருமை என்கிறார்.
இந்தப் படத்தை முடித்து விட்டு தி பிசினஸ்மேன் என்ற படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் இயக்கப் போகிறாராம். அதன் பின்னர்தான் ஆசினுடன் அம்மா நானாவுக்காக இணையப் போகிறாராம்.
பூரியின் ‘அம்மா நானா’ விளையாட்டு ஆசினுக்கு இந்தியில் பிரேக் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…!
'ராணா'வுக்காக கேளம்பாக்கத்திலேயே தனி அலுவலகம் அமைக்கும் ரஜினி!
அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதில் அவர்கள் கவனம் திரும்பிவிட்டது.
ரஜினியின் இப்போதைய உடனடி கவனம் ராணாதான். அதற்கு முன் ஒரு மாதம் தன்னை முழுமையான ஃபிட்னஸுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்குகிறார்.
காரணம் இந்தப் படத்தின் கதை ரஜினியுடையது. திரைக்கதையை இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்து செதுக்கியிருப்பவரும் அவரே.
பெரிய பட்ஜெட் படம் என்பதால், எந்திரனை விட மிகப் பிரமாண்ட வெற்றியை ராணா பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்கேற்ப முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராணாவுக்கான எதிர்ப்பார்ப்பு பெருகியுள்ளது.
இதையெல்லாம் மனதில் கொண்டு, ராணாவில் புதிய அம்சங்களைச் சேர்ப்பது, இருக்கிற காட்சியமைப்புகளை சரி செய்வது என ரஜினியின் ஒரு மாத கால ஓய்வு கழியப்போகிறது.
தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டிலேயே புது அலுவலகம் திறந்து இயக்குநர் ரவிக்குமார் மற்றும் முக்கிய கலைஞர்களுடன் படத்தை சிறப்பாக உருவாக்க ஆலோசனைகள் மேற்கொள்ளவிருக்கிறார்.
இன்னும் சில தினங்களில் ரஜினியைச் சந்தித்து உடல் நலம் விசாரிக்க தீபிகா படுகோனேயும் இங்குவர இருக்கிறார்.
குருவாயூர் கோயிலுக்கு நயன்தாராவுடன் பிரபுதேவா வருகை!
7/14/2011 12:54:59 PM
நடிகை நயன்தாராவுடன் குருவாயூர் கோயிலுக்கு வந்து பிரபுதேவா தரிசனம் செய்தார். நடிகர் பிரபுதேவாவும், நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர். இதற்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். இருவரும் விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கில், கடந்த வாரம் விவாகரத்து வழங்கப்பட்டது. இதையடுத்து, பிரபுதேவாவும் நயன்தாராவும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். இதற்காக நயன்தாரா சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இந்த நிலையில், பிரபு தேவா – நயன்தாரா ஜோடி நேற்று காலை குருவாயூர் கோயிலுக்கு வந்தது. பிரபுதேவா மட்டும் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். நயன்தாரா கிறிஸ்தவர் என்பதால், கோயிலுக்கு செல்லாமல் காரில் அமர்ந்திருந்தார். பிரபுதேவா சாமி கும்பிட்ட பிறகு, கோயிலுக்கு வாழைக்குலை காணிக்கை செலுத்தினார். பின்னர், நயன்தாராவுடன் காரில் புறப்பட்டு சென்றார்.
மும்பை குண்டுவெடிப்பு: விருது நிகழ்ச்சியை நிறுத்திய ஐஸ்வர்யா
7/14/2011 12:53:49 PM
மும்பை தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார். நேற்று மாலை மும்பையின் முக்கியப் பகுதிகளில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களால் பாலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது. தாயாகப்போகும் ஐஸ்வர்யா ராயும் பேரதிர்ச்சி அடைந்துள்ளார். ஐஸ்வர்யா கணவர் அபிஷேக்குடன் நேற்று டெல்லிக்கு சென்றிருந்தார். அங்கு ஐஸ்வர்யாவுக்கு பிரெஞ்சு அரசு நேற்று விருது வழங்குவதாக இருந்தது. இந்த தாக்குதல் சம்பவம் பற்றி கேட்டவுடன் இந்த நிகழ்ச்சியை தள்ளிவைக்குமாறு ஐஸ்வர்யா கேட்டுக் கொண்டார். இது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறியதாவது, நான் விருது வாங்குவதற்காக டெல்லிக்கு வந்தேன். ஆனால் அதற்கு இது சரியான நேரம் அல்ல. இந்த விழாவை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரெஞ்சு தூதரை கேட்டுக் கொள்வது தான் சரி என்று நானும், என் குடும்பத்தாரும் நினைத்தோம் என்றார். இந்த விழாவில் கலந்து கொள்ள அமிதாப்பும் டெல்லிக்குச் சென்றிருந்தார். ஆனால் மும்பை சம்பவம் பற்றி கேட்டதும் அவர் விழாவிற்கு செல்லவில்லை.
Labels
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா