Tamil seithigal Tamil seithi Tamil seithi vasantham nalaya seithi Tamil movie online Tamil cinema seithigal nalaya seithi Tamil movie Tamil news Tamil newspaper Tamil news online 4 Tamil news video Tamil news paper daily thanthi.Tamil seithigal Tamil seithi Tamil seithi vasantham nalaya seithi Tamil movie online Tamil cinema seithigal nalaya seithi Tamil movie Tamil news Tamil newspaper Tamil news online 4 Tamil news video Tamil news paper daily thanthi
Saturday 18 June 2011
என்னைக் கைது செய்ய வேண்டும் என காங்கிரசார் சுவரொட்டிகள் ஒட்டுகின்றனர்: சீமான்
பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான்,
ஒரு நடிகை என் மீது புகார் கொடுத்ததை வைத்து, என்னைக் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டுகின்றனர். தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளான முல்லைப் பெரியார், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரி நீர் பிரச்னை என எந்தப் பிரச்னைக்காவது காங்கிரஸ் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனரா? என்றார்.
என்னைக் கைது செய்ய வேண்டும் என காங்கிரசார் சுவரொட்டிகள் ஒட்டுகின்றனர்: சீமான்
பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான்,
ஒரு நடிகை என் மீது புகார் கொடுத்ததை வைத்து, என்னைக் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டுகின்றனர். தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளான முல்லைப் பெரியார், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரி நீர் பிரச்னை என எந்தப் பிரச்னைக்காவது காங்கிரஸ் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனரா? என்றார்.
ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் எந்த மேடையிலும் நான் இருப்பேன் : சத்யராஜ்
இதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் வகையில் நாம்தமிழர் கட்சி சார்பில் இன்று (18-ந்தேதி) இரவு சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடந்தது.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் சத்யராஜ், டைரக்டர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் பேராசிரியர் தீரன், தமிழ் முழக்கம் சாகுல்அமீது, கலைக்கோட்டுதயம், டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, தடா சந்திரசேகர், கோட்டை குமார் அய்யநாதன், பால்நியூமன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்கள்.
நடிகர் சத்யராஜ் பேசும்போது, ’’நான் இந்த நாம் தமிழர் மேடையில் ஏன் ஏறியிருக்கிறேன் என்று நினைப்பீர்கள். நாம் தமிழர் மேடை மட்டுமல்ல. ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் எந்த மேடையிலும் நான் இருப்பேன்.
ஈழப்பிரச்சனையைக்கு மட்டும் ஏன் தொடர்ந்து குரல் கொடுக்கிறீர்கள் என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கு சொல்கிறேன். மற்ற பிரச்சனைகளை பேச நிறைய அமைப்புகள் இருக்கின்றன.
ஆனால் ஈழ மக்களுக்கு குரல் கொடுக்க சில அமைப்புகள் தான் இருக்கின்றன. அதனால்தான் அந்த சில அமைப்புகளோடு கைகோர்த்திருக்கிறேன்’’ என்று பேசினார்.
ராஜபக்சேவை இனக்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும்: திருமாவளவன்
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,
ஐக்கிய நாடுகள் சபை குழு வெளியிட்ட அறிக்கையில இலங்கை அதிபரை மட்டும் போர்க்குற்றவாளியாகக் கூறவில்லை. இருதரப்பையும் குற்றம் சாட்டிதான் அவர்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபை திரும்பப் பெற வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கம் மக்களுக்காக, மக்களின் விடுதலைக்காகப் போராடிய இயக்கமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள சிலர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அவரை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கூடாது. லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவை இனக் குற்றவாளியாக அறிவித்து, சர்வதேச நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி அவருக்குரியதண்டனையை பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ள வேண்டும்.
நாடு கடந்த தமிழீழ அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழீழ விடுதலைக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் விரைவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் தொடங்கப்படும் என்றார்.
யாழ்ப்பாண பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்: இமெல்டா சுகுமார்!
யாழ்ப்பாணத்தில் பெண்களிடமும் ஒழுக்கம் கிடையாது என அவர் தெரிவித்தார். கடந்த எட்டு வருடங்களாக நான் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச அதிபராக கடமையாற்றியிருந்தேன். நான் அங்கு கடமையாற்றிய காலத்தில் இப்படி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எதுவும் காணப்படவில்லை. வன்னியில் காணப்பட்ட ஒழுக்கம் தற்போது யாழ்ப்பாணத்தில் இல்லை என அவர் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் செயலில் மட்டுமல்ல பேச்சிலும் தொடர்கின்றன. எத்தனையோ இளம் சிறுவர்கள் இந்த துஷ்பிரயோகங்களால் தினமும் மரணித்துக் கொண்டிருக்கின்றனர். யாழ். மாவட்டத்தில் 500 சிறுவர்கள் வரையில் கல்வி கற்காமல் இருக்கின்றனர். இவர்கள் கற்காமல் விட்டமைக்கான காரணங்கள், வறுமை, சகபாடிகளின் தொல்லை, தீராத நோய்கள் எனக் கூறலாம்.
இவையனைத்தையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைப் பிரச்சினைகளுக்குரிய மிகப் பிரதானமாக இருக்கும் இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினை நீக்கப்பட வேண்டும் என்று யாழ். மாவட்ட அரச அதிபர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளை அதிகம் குற்றஞ்சாட்டி வரும் இமெல்டா சுகுமார் தன்னை மறந்து இங்கே ஒரு உண்மையைக் கூறிவிட்டார். வன்னி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காணப்படவில்லை என அவரே கூறியுள்ளார். இவர் வன்னி மாவட்டத்தில் இருந்த காலகட்டத்தில் புலிகள் கட்டுப்பாட்டில் வன்னி இருந்தது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. அக் கால கட்டத்தில் ஒழுக்கம் எவ்வாறு இருந்தது என்பத்னை இவரே தற்போது தன் வாயால் கூறும் நிலை வந்துள்ளது!
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க ஐ.நா முயற்சி: லக்பிம
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ம் திகதி முதல் 30 ம் திகதி வரை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இடம்பெறும் போது இதற்கான பிரேரணை நிறைவேற்றப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதனை எதிர்க்கும் வகையில் ஏனைய நாடுகளின் உதவியை பெற இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 17 வது அமர்வு அண்மையில் நடைபெற்றபோது அதில் பங்கேற்ற இலங்கையின் தூதுக்குழுவினால், இலங்கைக்கு ஆதரவான நாடுகளை திரட்டுவதற்கு முடியவில்லை.
எனினும் 9 நாடுகள் மாத்திரம் இலங்கைக்கு ஆதரவளிக்க உறுதியளித்துள்ளன.
பெரும்பாலும் அமெரிக்காவே இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் ஏனைய நாடுகளுடன் இணைந்து நடவடிக்கைகளை பான் கீ மூன் மேற்கொண்டு வருவதாக அவரின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையிடமிருந்து கச்சதீவு மீளப் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது: மத்திய அரசாங்கம்
கச்சதீவை மீளப் பெற வேண்டுமென்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பது குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கத்துக்கு கச்சதீவை திரும்ப பெற்றுக் கொள்வது குறித்து எதுவித நோக்கங்களும் கிடையாதென அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
1974ம் ஆண்டு இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவை திரும்பப் பெற்று அங்கு தமிழக மீனவர்களுக்கு மட்டுமே மீன்பிடிப்பதற்கான அனுமதியைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமொன்றின் மூலம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லை. .ஏற்றுக்கொள்ளூம் இமெல்டா சுகுமார்
யாழ். மாவட்டத்தில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்வதாக யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் கவலை தெரிவித்துள்ளார். இதற்குப் பிரதான காரணம் இளைஞர்கள் வேலைவெட்டி இல்லாமல் திரிவதுதான் என அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பெண்களிடமும் ஒழுக்கம் கிடையாது என அவர் தெரிவித்தார். �கடந்த எட்டு வருடங்களாக நான் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச அதிபராக கடமையாற்றியிருந்தேன். நான் அங்கு கடமையாற்றிய காலத்தில் இப்படி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எதுவும் காணப்படவில்லை. வன்னியில் காணப்பட்ட ஒழுக்கம் தற்போது யாழ்ப்பாணத்தில் இல்லை என அவர் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் செயலில் மட்டுமல்ல பேச்சிலும் தொடர்கின்றன. எத்தனையோ இளம் சிறுவர்கள் இந்த துஷ்பிரயோகங்களால் தினமும் மரணித்துக் கொண்டிருக்கின்றனர். யாழ். மாவட்டத்தில் 500 சிறுவர்கள் வரையில் கல்வி கற்காமல் இருக்கின்றனர். இவர்கள் கற்காமல் விட்டமைக்கான காரணங்கள், வறுமை, சகபாடிகளின் தொல்லை, தீராத நோய்கள் எனக் கூறலாம். இவையனைத்தையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைப் பிரச்சினைகளுக்குரிய மிகப் பிரதானமாக இருக்கும் இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினை நீக்கப்பட வேண்டும்� � என்று யாழ். மாவட்ட அரச அதிபர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளை அதிகம் குற்றஞ்சாட்டி வரும் இமெல்டா சுகுமார் தன்னை மறந்து இங்கே ஒரு உண்மையைக் கூறிவிட்டார். வன்னி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காணப்படவில்லை என அவரே கூறியுள்ளார். இவர் வன்னி மாவட்டத்தில் இருந்த காலகட்டத்தில் புலிகள் கட்டுப்பாட்டில் வன்னி இருந்தது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. அக் கால கட்டத்தில் ஒழுக்கம் எவ்வாறு இருந்தது என்பத்னை இவரே தற்போது தன் வாயால் கூறும் நிலை வந்துள்ளது !
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லை. .ஏற்றுக்கொள்ளூம் இமெல்டா சுகுமார்
யாழ். மாவட்டத்தில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்வதாக யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் கவலை தெரிவித்துள்ளார். இதற்குப் பிரதான காரணம் இளைஞர்கள் வேலைவெட்டி இல்லாமல் திரிவதுதான் என அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பெண்களிடமும் ஒழுக்கம் கிடையாது என அவர் தெரிவித்தார். �கடந்த எட்டு வருடங்களாக நான் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச அதிபராக கடமையாற்றியிருந்தேன். நான் அங்கு கடமையாற்றிய காலத்தில் இப்படி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எதுவும் காணப்படவில்லை. வன்னியில் காணப்பட்ட ஒழுக்கம் தற்போது யாழ்ப்பாணத்தில் இல்லை என அவர் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் செயலில் மட்டுமல்ல பேச்சிலும் தொடர்கின்றன. எத்தனையோ இளம் சிறுவர்கள் இந்த துஷ்பிரயோகங்களால் தினமும் மரணித்துக் கொண்டிருக்கின்றனர். யாழ். மாவட்டத்தில் 500 சிறுவர்கள் வரையில் கல்வி கற்காமல் இருக்கின்றனர். இவர்கள் கற்காமல் விட்டமைக்கான காரணங்கள், வறுமை, சகபாடிகளின் தொல்லை, தீராத நோய்கள் எனக் கூறலாம். இவையனைத்தையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைப் பிரச்சினைகளுக்குரிய மிகப் பிரதானமாக இருக்கும் இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினை நீக்கப்பட வேண்டும்� � என்று யாழ். மாவட்ட அரச அதிபர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளை அதிகம் குற்றஞ்சாட்டி வரும் இமெல்டா சுகுமார் தன்னை மறந்து இங்கே ஒரு உண்மையைக் கூறிவிட்டார். வன்னி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காணப்படவில்லை என அவரே கூறியுள்ளார். இவர் வன்னி மாவட்டத்தில் இருந்த காலகட்டத்தில் புலிகள் கட்டுப்பாட்டில் வன்னி இருந்தது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. அக் கால கட்டத்தில் ஒழுக்கம் எவ்வாறு இருந்தது என்பத்னை இவரே தற்போது தன் வாயால் கூறும் நிலை வந்துள்ளது !
இலங்கைக்கு எதிராக ஐ.நா பொருளாதாரத் தடை விதிக்கும் சாத்தியம் : லக்பிம
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதிக்க ஐக்கிய நாடுகள் சபை முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்த தகவலை லக்பிம செய்திதாள் வெளியிட்டுள்ளது.எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ம் திகதி முதல் 30 ம் திகதி வரை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இடம்பெறும் போது இதற்கான பிரேரணை நிறைவேற்றப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதனை எதிர்க்கும் வகையில் ஏனைய நாடுகளின் உதவியை பெற இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 17 வது அமர்வு அண்மையில் நடைபெற்றபோது அதில் பங்கேற்ற இலங்கையின் தூதுக்குழுவினால், இலங்கைக்கு ஆதரவான நாடுகளை திரட்டுவதற்கு முடியவில்லை.
எனினும் 9 நாடுகள் மாத்திரம் இலங்கைக்கு ஆதரவளிக்க உறுதியளித்துள்ளன.
பெரும்பாலும் அமெரிக்காவே இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் ஏனைய நாடுகளுடன் இணைந்து நடவடிக்கைகளை பான் கீ மூன் மேற்கொண்டு வருவதாக அவரின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிராக ஐ.நா பொருளாதாரத் தடை விதிக்கும் சாத்தியம் : லக்பிம
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதிக்க ஐக்கிய நாடுகள் சபை முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்த தகவலை லக்பிம செய்திதாள் வெளியிட்டுள்ளது.எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ம் திகதி முதல் 30 ம் திகதி வரை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இடம்பெறும் போது இதற்கான பிரேரணை நிறைவேற்றப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதனை எதிர்க்கும் வகையில் ஏனைய நாடுகளின் உதவியை பெற இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 17 வது அமர்வு அண்மையில் நடைபெற்றபோது அதில் பங்கேற்ற இலங்கையின் தூதுக்குழுவினால், இலங்கைக்கு ஆதரவான நாடுகளை திரட்டுவதற்கு முடியவில்லை.
எனினும் 9 நாடுகள் மாத்திரம் இலங்கைக்கு ஆதரவளிக்க உறுதியளித்துள்ளன.
பெரும்பாலும் அமெரிக்காவே இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் ஏனைய நாடுகளுடன் இணைந்து நடவடிக்கைகளை பான் கீ மூன் மேற்கொண்டு வருவதாக அவரின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ். அளவெட்டி தாக்குதல் விடுதலையான முன்னாள் புலிகள் மீதும் சந்தேகமாம் ,யாழ் கட்டளைத்தளபதி
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இராணுவத்தினரிடமிருந்து சரணடைந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று இராணுவத்தின் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
யாழ். இராணுவ சிவில் தொடர்பு அலுவலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே யாழ். கட்டளைத் தளபதி இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நிலவுகின்ற அமைதியான சூழலைக் குழப்புவதற்கான நடவடிக்கைகளில் தீய சக்திகள் செயற்பட்டு வருவதாகவும், அத்தகைய சக்தியினால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இராணுவத்தினரும், பொலிசாரும் வெவ்வேறாக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வருகின்ற தீய சக்திகளில் இராணுவத்தினரோ அல்லது வெளியாட்களோ இருக்கலாம்.
சிலவேளைகளில் இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் விடுதலையாகியுள்ள முன்னாள் விடுதலைப்புலிகளும் இருக்கலாம் என்றும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் இராணுவத்தினர் சம்பந்தப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்கள் இராணுவத்தில் இருந்து விலக்கப்படுவார்கள் எனவும் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க செய்தியளார்களிடம் தெரிவித்துள்ளார்.
யாழ். அளவெட்டி தாக்குதல் விடுதலையான முன்னாள் புலிகள் மீதும் சந்தேகமாம் ,யாழ் கட்டளைத்தளபதி
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இராணுவத்தினரிடமிருந்து சரணடைந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று இராணுவத்தின் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
யாழ். இராணுவ சிவில் தொடர்பு அலுவலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே யாழ். கட்டளைத் தளபதி இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நிலவுகின்ற அமைதியான சூழலைக் குழப்புவதற்கான நடவடிக்கைகளில் தீய சக்திகள் செயற்பட்டு வருவதாகவும், அத்தகைய சக்தியினால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இராணுவத்தினரும், பொலிசாரும் வெவ்வேறாக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வருகின்ற தீய சக்திகளில் இராணுவத்தினரோ அல்லது வெளியாட்களோ இருக்கலாம்.
சிலவேளைகளில் இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் விடுதலையாகியுள்ள முன்னாள் விடுதலைப்புலிகளும் இருக்கலாம் என்றும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் இராணுவத்தினர் சம்பந்தப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்கள் இராணுவத்தில் இருந்து விலக்கப்படுவார்கள் எனவும் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க செய்தியளார்களிடம் தெரிவித்துள்ளார்.
அடக்குமுறைகள்,இனவெறியாட்டங்கள் தொடருமானால் இன்னும் பல பிரபாகரன்கள் தோன்றுவர்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்திருக்கின்றது. எது நடக்கவிருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்பதை நாங்கள் இப்போது நம்பத் தலைப்பட்டிருக்கின்றோம். தமிழர்களைப் பொறுத்தவரைக்கும் இதுதான் என்றும் மாற்றமில்லாத உண்மையும் கூட..!கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டியில் நடந்த காட்டுமிராண்டித்தனம் எமக்கு இந்த யதார்த்தத்தை மீள ஒரு முறை உணர்த்தியிருக்கின்றது.
தமிழர்கள் ஆயதம் ஏந்தியது தவறு என்றார்கள் அது தவறாகவேயிருக்கலாம். ஆனால் எதற்காக ஏந்தினார்கள் என்ற கேள்விக்கு பதில் தேடினால் காலத்தில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவரும் என்பதே இன்றும் தமிழ்த் தேசியவாதிகளின் வாதமாகவிருக்கின்றது. அதுதான் நியாயமானது நிஜமானது.
தமிழர்கள் என்றைக்கு தமது உரிமைகளுக்காக போராடத் தலைப்பட்டார்களோ அன்று தொட்டு இன்று வரைக்கும் போராட்ட வடிவங்கள் பல தடவை மாற்றம் கண்டன. போராட்டம் மட்டும் நிலையாக இப்போதும் இருக்கின்றது.
இதற்குக் காரணம் தமிழர்கள் போரியல் மனோபாவத்துடன் இருந்தபோதெல்லாம் சிங்களம் தமிழர்களுக்கு முன்னாலும் சர்வதேசத்தின் முன்னாலும் தன்னையொரு அப்பாவிபோல் காட்டிக்கொண்டது தான்.
தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முதல் முப்பது வருடங்கள் ஈழத்தமிழர் ஜனநாயக ரீதியாக போராடியபோது தனது அரக்கக் கரங்களின் துணையுடனும் இந்திய மேலாதிக்க துரோகிகளின் ஆதரவுடனும் அந்தப் போராட்டத்தை கசக்கிப் பிய்த்தெறிந்த கதையை யாரும் மறக்கமுடியாது.
தமது உரிமைக்காக தமிழர்கள் கிளர்ந்தெழுந்தபோதெல்லாம் சிங்களத் தலைமைகள் தமது காடைத்தனத்தை காட்டினார்கள். இதற்கு சாட்சியாக தமிழாராட்சி மாநாட்டில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவிடம் இன்றைக்கும் இருக்கின்றது.
இதுபோக பல அழிக்கப்பட்டு விட்டன. பலவற்றுக்கு நிலைவாலயங்கள் அமைக்கப்படவில்லை. இந்த நிலைமையின் தொடர்ச்சியில்தான் தமிழர் விடுதலைப் போராட்டம் ஆயுதரீதியாக மாற்றம் கண்டது.
அது நடந்து வந்த கடந்த முப்பது வருடங்களில் சிங்களம் நடந்து கொண்டவிதம் சர்வதேசத்தின் முன்னால் போட்டுக் கொண்ட நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதனை யாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
காலத்திற்க்குக் காலம் சமாதான உடன்படிக்கைகள் என்றவொன்றை போட்டுக்கொண்டு தமிழர்களின் போரியல் மனோபாவத்தை சிதைக்க முற்பட்டது. ஆனால் அவற்றின் மூலம் தமிழர்கள் தமது எதிர்பார்ப்பை கேட்டபோது அவை சிங்களத் தலைமைகளால் கிழித்தெறியப்பட்டது.
அல்லது அப்பாவிப் பொதுமக்கள் மீது இடைவிடாத கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுத்து தமிழர்களிடமுள்ள போரின்பால் அல்லது போரிடும் மனோபாவத்தில் சிதைப்பை ஏற்படுத்த சிங்களம் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டது. இந்த விடயத்தையும் தோண்டிப் பார்த்தால் முள்ளிவாய்க்காலைப்போல் இன்னும் பல இனப்படுகொலைகள் பற்றிய உண்மைக்கதைகள் வெளிக்கொணரப்படும்.
ஆக தமிழர்கள் எப்போதெல்லாம் கிளர்ந்தெழுந்த தமது உரிமைகளுக்காக போராட எத்தனித்தார்களோ அப்போதெல்லாம் தன்னையொரு அப்பாவிபோலக் காட்டிக்கொண்ட சிங்களம் அதை எத்தகைய கொடுரங்களைச் செய்தும் அடக்கிவிடவேண்டும் என்று நினைத்தது. இதுதான் சர்வதேசத்தின் மத்தியில் சிங்களம் கடந்த காலத்தில் பெற்றுக்கொண்டிருந்த நல்ல பிள்ளை என்ற பெயருக்குக் காரணமாக இருக்கலாம்.
எனவே நாமிங்கு கூறத்தலைப்படுவது என்னவென்றால் சிங்களம் ஒருபோதும் தமிழர்கள் விரும்பும் தீர்வைப் பெற்றுக்கொடுக்கப் போவது கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டத்தில் சமபலம் பெற்றிருந்தபோது அதனை எப்படியாவது தீர்த்துக் கட்டவேண்டும் என்று நினைத்து தனக்கு ஆதரவான தமிழ் அடிவருடிகளோடு சர்வதேசத்திடம் பிச்சை ஏற்கத் தீர்மானித்தது.
இனப்பிரச்சினைத் தீர்வு என்ற பிச்சைப்பாத்திரத்தை தெரிவு செய்யவும் சர்வதேசத்திற்கு விடுதலைப்புலிகள் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் அல்ல எனவும் இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் விடுதலைப்புலிகள் தடையாகவுள்ளனர் என்பதைக் காட்டவுமே தமிழ் அடிவருடிகளை சிங்களத்தலைமை சாமர்த்தியமாக தன்னோடு இணைத்துக் கொண்டது. ஈற்றில் இந்த முயற்சியில் சிங்களம் வெற்றிபெற்றும் கொண்டது.
ஆனால் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக கூறி இரண்டாண்டுகள் கடக்கின்றது. விடுலைப்புலிகளுக்கானது என்ற போரில் தமிழர்கள் இனிமேல் ஆயுதம் ஏந்தும் எண்ணத்தையே கைவிடவேண்டும் என்னுமளவில் சுதந்திரமான வாழ்வை நேசித்த இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கடக்கின்றது.
இருந்தும் இனப்பிரச்சினைத் தீர்வு என்பதை மட்டும் சிங்களம் இன்றும் பேச வில்லை.
இதிலிருந்து இங்கிருந்து நாம் தீர்மானித்துக் கொண்டாகவேண்டும் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய தீர்வொன்றினை சிங்களம் ஒருபோதும் தர மாட்டாது என்பதை. தமிழர்கள் நலிந்து தங்களுடைய ஏவல் செய்து வாழ்ந்தால் அதனை சிங்களம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும். ஏப்போதாவது எங்கேயாவது போராடத் தலைப்பட்டால் அது பயங்கரவாதம் என்ற போர்வையில் அழித்தொழிக்க முனையும்.
இதுதான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டியில் நடந்த சம்பவத்தின் பின்னாலுள்ள கதை. யுத்தத்தின் பின்னர் தமிழர்கள் தோற்றுப்போனதொரு சமுகம் என்ற தோற்றுவாயை விதைக்க சிங்களத்தலைமை முற்பட்டது. ஆனால் அது எடுபடாத சூழலில் ஜனநாயக ரீதியாக வடக்குக் கிழக்கில் மீண்டும் தமது உரிமைப்போரைத் தொடர தமிழர்கள் தயார் என்ற சமிக்ஞையை அண்மைக்காலத் தேர்தல்கள் மூலம் சிங்களதேசம் விளங்கிக் கொண்டிருக்கின்றது.
எங்கே தமக்கான உரிமைகளைக் கேட்டு தமிழர்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்து விடுவார்களோ என்ற பயத்தில் இன்று சிங்களம் அதிர்ந்து போயிருக்கின்றது. அதனாலேயேதான் பாடசாலை தொடக்கம் கச்சேரி வரைக்கும் எல்லா இடங்களிலும் இராணுவமும் சி.ஜ.டியும் இருக்கிறார்கள். மக்களுக்காக பேசுகிறவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள், குண்டுவீசி தாக்கப்படுகிறார்கள், தடியடி பொல்லடிபோட்டு துரத்தப்படுகிறார்கள்.
யுத்தம் முடிந்து விட்டது நாட்டில் ஜனநாயகம் மலர்ந்து விட்டது என்று யாரும் நினைக்கவேண்டாம். செப்பனிடப்படும் எங்கள் வீதிகளிற்குக் கீழே சிங்களத்தின் ஆதிக்கவெறியிருக்கின்றது.
வீதிப் புனரமைப்புக்குக் கொண்டுவரப்படும் கல்லுடன் சேர்த்து புத்தவிகாரை கட்டுவதற்கான கல்லும் வருகின்றது. எதுவும் மாற்றமடையவில்லை என்பது மட்டும்தான் என்றுமுள்ள நிஜம்.
எனவே எமக்கான சுதந்திரத்தை யாரும் பெற்றுக்கொடுக்க முடியாது. தமிழர்கள் எந்த அடக்குமுறைகளையும் நீண்டகாலம் பொறுத்திருக்க மாட்டார்கள்.
பிரபாகரன் வானத்திலிருந்து வந்த மனிதனல்ல! அடக்கப்பட்ட ஒரு சமுகத்தில் சிங்கள இனவெறியர்களால் சிதைக்கப்பட்ட ஒரு சமுகத்தில் பிறந்தவர்.
அடக்குமுறைகளும், சிங்கள இனவெறியாட்டங்களும் தொடருமானால் இன்னுமொரு பிரபாகரனுக்கிங்கே பஞ்சமில்லை.
இழப்புக்கள் எங்கள் போராட்டத்தை சிதைக்குமென்றால் முள்ளிவாய்க்காலோடு நாங்கள் முடிந்துபோயிருக்க வேண்டும். போராட்ட வடிவங்கள் சிதைக்கப்பட்டனவேயொழிய காலத்திற்குக் காலம் போராட்டம் சிதைக்கப்படவில்லை.
சுதந்திரன்.
அடக்குமுறைகள்,இனவெறியாட்டங்கள் தொடருமானால் இன்னும் பல பிரபாகரன்கள் தோன்றுவர்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்திருக்கின்றது. எது நடக்கவிருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்பதை நாங்கள் இப்போது நம்பத் தலைப்பட்டிருக்கின்றோம். தமிழர்களைப் பொறுத்தவரைக்கும் இதுதான் என்றும் மாற்றமில்லாத உண்மையும் கூட..!கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டியில் நடந்த காட்டுமிராண்டித்தனம் எமக்கு இந்த யதார்த்தத்தை மீள ஒரு முறை உணர்த்தியிருக்கின்றது.
தமிழர்கள் ஆயதம் ஏந்தியது தவறு என்றார்கள் அது தவறாகவேயிருக்கலாம். ஆனால் எதற்காக ஏந்தினார்கள் என்ற கேள்விக்கு பதில் தேடினால் காலத்தில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவரும் என்பதே இன்றும் தமிழ்த் தேசியவாதிகளின் வாதமாகவிருக்கின்றது. அதுதான் நியாயமானது நிஜமானது.
தமிழர்கள் என்றைக்கு தமது உரிமைகளுக்காக போராடத் தலைப்பட்டார்களோ அன்று தொட்டு இன்று வரைக்கும் போராட்ட வடிவங்கள் பல தடவை மாற்றம் கண்டன. போராட்டம் மட்டும் நிலையாக இப்போதும் இருக்கின்றது.
இதற்குக் காரணம் தமிழர்கள் போரியல் மனோபாவத்துடன் இருந்தபோதெல்லாம் சிங்களம் தமிழர்களுக்கு முன்னாலும் சர்வதேசத்தின் முன்னாலும் தன்னையொரு அப்பாவிபோல் காட்டிக்கொண்டது தான்.
தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முதல் முப்பது வருடங்கள் ஈழத்தமிழர் ஜனநாயக ரீதியாக போராடியபோது தனது அரக்கக் கரங்களின் துணையுடனும் இந்திய மேலாதிக்க துரோகிகளின் ஆதரவுடனும் அந்தப் போராட்டத்தை கசக்கிப் பிய்த்தெறிந்த கதையை யாரும் மறக்கமுடியாது.
தமது உரிமைக்காக தமிழர்கள் கிளர்ந்தெழுந்தபோதெல்லாம் சிங்களத் தலைமைகள் தமது காடைத்தனத்தை காட்டினார்கள். இதற்கு சாட்சியாக தமிழாராட்சி மாநாட்டில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவிடம் இன்றைக்கும் இருக்கின்றது.
இதுபோக பல அழிக்கப்பட்டு விட்டன. பலவற்றுக்கு நிலைவாலயங்கள் அமைக்கப்படவில்லை. இந்த நிலைமையின் தொடர்ச்சியில்தான் தமிழர் விடுதலைப் போராட்டம் ஆயுதரீதியாக மாற்றம் கண்டது.
அது நடந்து வந்த கடந்த முப்பது வருடங்களில் சிங்களம் நடந்து கொண்டவிதம் சர்வதேசத்தின் முன்னால் போட்டுக் கொண்ட நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதனை யாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
காலத்திற்க்குக் காலம் சமாதான உடன்படிக்கைகள் என்றவொன்றை போட்டுக்கொண்டு தமிழர்களின் போரியல் மனோபாவத்தை சிதைக்க முற்பட்டது. ஆனால் அவற்றின் மூலம் தமிழர்கள் தமது எதிர்பார்ப்பை கேட்டபோது அவை சிங்களத் தலைமைகளால் கிழித்தெறியப்பட்டது.
அல்லது அப்பாவிப் பொதுமக்கள் மீது இடைவிடாத கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுத்து தமிழர்களிடமுள்ள போரின்பால் அல்லது போரிடும் மனோபாவத்தில் சிதைப்பை ஏற்படுத்த சிங்களம் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டது. இந்த விடயத்தையும் தோண்டிப் பார்த்தால் முள்ளிவாய்க்காலைப்போல் இன்னும் பல இனப்படுகொலைகள் பற்றிய உண்மைக்கதைகள் வெளிக்கொணரப்படும்.
ஆக தமிழர்கள் எப்போதெல்லாம் கிளர்ந்தெழுந்த தமது உரிமைகளுக்காக போராட எத்தனித்தார்களோ அப்போதெல்லாம் தன்னையொரு அப்பாவிபோலக் காட்டிக்கொண்ட சிங்களம் அதை எத்தகைய கொடுரங்களைச் செய்தும் அடக்கிவிடவேண்டும் என்று நினைத்தது. இதுதான் சர்வதேசத்தின் மத்தியில் சிங்களம் கடந்த காலத்தில் பெற்றுக்கொண்டிருந்த நல்ல பிள்ளை என்ற பெயருக்குக் காரணமாக இருக்கலாம்.
எனவே நாமிங்கு கூறத்தலைப்படுவது என்னவென்றால் சிங்களம் ஒருபோதும் தமிழர்கள் விரும்பும் தீர்வைப் பெற்றுக்கொடுக்கப் போவது கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டத்தில் சமபலம் பெற்றிருந்தபோது அதனை எப்படியாவது தீர்த்துக் கட்டவேண்டும் என்று நினைத்து தனக்கு ஆதரவான தமிழ் அடிவருடிகளோடு சர்வதேசத்திடம் பிச்சை ஏற்கத் தீர்மானித்தது.
இனப்பிரச்சினைத் தீர்வு என்ற பிச்சைப்பாத்திரத்தை தெரிவு செய்யவும் சர்வதேசத்திற்கு விடுதலைப்புலிகள் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் அல்ல எனவும் இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் விடுதலைப்புலிகள் தடையாகவுள்ளனர் என்பதைக் காட்டவுமே தமிழ் அடிவருடிகளை சிங்களத்தலைமை சாமர்த்தியமாக தன்னோடு இணைத்துக் கொண்டது. ஈற்றில் இந்த முயற்சியில் சிங்களம் வெற்றிபெற்றும் கொண்டது.
ஆனால் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக கூறி இரண்டாண்டுகள் கடக்கின்றது. விடுலைப்புலிகளுக்கானது என்ற போரில் தமிழர்கள் இனிமேல் ஆயுதம் ஏந்தும் எண்ணத்தையே கைவிடவேண்டும் என்னுமளவில் சுதந்திரமான வாழ்வை நேசித்த இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கடக்கின்றது.
இருந்தும் இனப்பிரச்சினைத் தீர்வு என்பதை மட்டும் சிங்களம் இன்றும் பேச வில்லை.
இதிலிருந்து இங்கிருந்து நாம் தீர்மானித்துக் கொண்டாகவேண்டும் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய தீர்வொன்றினை சிங்களம் ஒருபோதும் தர மாட்டாது என்பதை. தமிழர்கள் நலிந்து தங்களுடைய ஏவல் செய்து வாழ்ந்தால் அதனை சிங்களம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும். ஏப்போதாவது எங்கேயாவது போராடத் தலைப்பட்டால் அது பயங்கரவாதம் என்ற போர்வையில் அழித்தொழிக்க முனையும்.
இதுதான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டியில் நடந்த சம்பவத்தின் பின்னாலுள்ள கதை. யுத்தத்தின் பின்னர் தமிழர்கள் தோற்றுப்போனதொரு சமுகம் என்ற தோற்றுவாயை விதைக்க சிங்களத்தலைமை முற்பட்டது. ஆனால் அது எடுபடாத சூழலில் ஜனநாயக ரீதியாக வடக்குக் கிழக்கில் மீண்டும் தமது உரிமைப்போரைத் தொடர தமிழர்கள் தயார் என்ற சமிக்ஞையை அண்மைக்காலத் தேர்தல்கள் மூலம் சிங்களதேசம் விளங்கிக் கொண்டிருக்கின்றது.
எங்கே தமக்கான உரிமைகளைக் கேட்டு தமிழர்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்து விடுவார்களோ என்ற பயத்தில் இன்று சிங்களம் அதிர்ந்து போயிருக்கின்றது. அதனாலேயேதான் பாடசாலை தொடக்கம் கச்சேரி வரைக்கும் எல்லா இடங்களிலும் இராணுவமும் சி.ஜ.டியும் இருக்கிறார்கள். மக்களுக்காக பேசுகிறவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள், குண்டுவீசி தாக்கப்படுகிறார்கள், தடியடி பொல்லடிபோட்டு துரத்தப்படுகிறார்கள்.
யுத்தம் முடிந்து விட்டது நாட்டில் ஜனநாயகம் மலர்ந்து விட்டது என்று யாரும் நினைக்கவேண்டாம். செப்பனிடப்படும் எங்கள் வீதிகளிற்குக் கீழே சிங்களத்தின் ஆதிக்கவெறியிருக்கின்றது.
வீதிப் புனரமைப்புக்குக் கொண்டுவரப்படும் கல்லுடன் சேர்த்து புத்தவிகாரை கட்டுவதற்கான கல்லும் வருகின்றது. எதுவும் மாற்றமடையவில்லை என்பது மட்டும்தான் என்றுமுள்ள நிஜம்.
எனவே எமக்கான சுதந்திரத்தை யாரும் பெற்றுக்கொடுக்க முடியாது. தமிழர்கள் எந்த அடக்குமுறைகளையும் நீண்டகாலம் பொறுத்திருக்க மாட்டார்கள்.
பிரபாகரன் வானத்திலிருந்து வந்த மனிதனல்ல! அடக்கப்பட்ட ஒரு சமுகத்தில் சிங்கள இனவெறியர்களால் சிதைக்கப்பட்ட ஒரு சமுகத்தில் பிறந்தவர்.
அடக்குமுறைகளும், சிங்கள இனவெறியாட்டங்களும் தொடருமானால் இன்னுமொரு பிரபாகரனுக்கிங்கே பஞ்சமில்லை.
இழப்புக்கள் எங்கள் போராட்டத்தை சிதைக்குமென்றால் முள்ளிவாய்க்காலோடு நாங்கள் முடிந்துபோயிருக்க வேண்டும். போராட்ட வடிவங்கள் சிதைக்கப்பட்டனவேயொழிய காலத்திற்குக் காலம் போராட்டம் சிதைக்கப்படவில்லை.
சுதந்திரன்.
என்னை கேலி செய்தவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்..: சீமான் பேச்சு
ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் வகையில் நாம்தமிழர் கட்சி சார்பில் இன்று (18-ந்தேதி) இரவு சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடந்தது.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் சத்யராஜ், டைரக்டர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
சீமான் பேசும்போது, ‘’காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தேன். அதே நேரத்தில் இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுங்கள் என்று வாக்கு சேகரித்தேன். இதனால் என்னை நிறைய பேர் கேலி செய்தார்கள்.
அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்... இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்ததற்காக இப்போது பெருமைப்படுகிறேன்.
ஈழப்பிரச்சனைக்கு குரல் கொடுப்பார் புரட்சித்தலைவி என்று எதிர்ப்பார்த்திருந்தோம். எங்கே செய்யாமல் விட்டுவிடுவாரோ என்று பயமும் இருந்தது. ஆனால் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது மட்டுமல்லலாமல் பிரதமரிடம் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
இனி அதிமுக எந்த காலத்திலும் காங்கிரசுடன் இணையக்கூடாது. காங்கிரசுடன் இணையவேண்டிய அவசசியமும் இல்லை அதிமுகவுக்கு. தனி செல்வாக்குடன் இருக்கிறது அதிமுக’’ என்று பேசினார்.
கருணா மீது யுத்த குற்ற விசாரணை செய்ய வேண்டும்- அல்ஜசீரா
இலங்கையில் 600 பொலிசாரை கொலை செய்த குற்றச்சாட்டில் பாரிய அழுத்ததை எதிர் நோக்கி வரும் கருணா மீது புலிகளுக்காக சிறுவர்களை கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொண்டமைக்காக விசாரணை செய்ய வேண்டும் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
தற்போது, கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆளும் அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியில் உள்ளார் எனவும் அது தெரிவித்துள்ளது
புலிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்ய வேண்டும் என தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அல்ஜசீரா மேலும் தெரிவிக்கின்றது.
புலிகள் இயக்கத்தின் எஞ்சிய முக்கிய பிரமுகர்கள் இன்று ஆளும் மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சராகவும் முதலமைச்சராகவும் மற்றும் முக்கியஸ்தர்களாகவும் உள்ளனர் எனச் சுட்டிக் காட்டியுள்ளது.
எம் தேசத்து உறவுகளே சிந்தித்து செயற்படுங்கள்
யாழ்ப்பணத்தில் அண்மைக்காலமாக நடந்துவரும் சம்பவங்கள் கற்பழிப்பு,பகுடிவதை,சேட்டைகள் என்பன நாம் அறிந்த விடையம் ஆனால் தற்போது எப்போதும் நடக்காத ஒன்று விபச்சாரம் நடத்தி வருகிறார்கள்.
யாழ்ப்பாணம் ரவுண் பகுதியில் பெரிய வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடத்தி வருகிறார்கள்.இவர்கள் தமது தொலைபேசி இலக்கத்தை இரகசியமாக இளைஞர்களுக்கு கொடுத்து தம்மிடம் அழைக்கிறார்கள். இவர்கள் இலங்கையின் தென் பகுதியில் இருந்து வந்து இங்கே விபச்சாரத்தை நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் தமிழ்,முஸ்லீம்,சிங்களம் ஆகியோர்களை வைத்து விபச்சாரத்தை நடத்தி வருகிறார்கள்.இது தொடர்பாக மக்கள் போலீசாரிடம் முறையிட்டபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இலங்கை அரசாங்கம் எப்படி எப்படி தமிழ் மக்களை சீரளிக்கலாமோ அப்படிஎல்லாம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி கொடுத்துள்ளது.எம்இனிய இளைஞர் யுவதிகளே அவர்களின் இன அழிப்புக்கு ஆள் ஆகிவிடாதீர்கள்.
இதுகும் ஒருவகை இன அழிப்பு திட்டமே.
விரைவில் உங்களை மகிழ்விக்க வருவேன்: ரஜினிகாந்த்
சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகி அந்த நாட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டுள்ள ரஜினி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் அன்பார்ந்த ரசிகர்களுக்கு, பேனா, பேப்பர் எடுத்து எழுதும் போது வார்த்தைகள் வரவில்லை. எனக்கு, தமிழக அரசு எந்த நேரத்திலும் எந்த உதவியையும் செய்ய, எனக்கு உறுதிமொழி கொடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும், என்றுமே என் மீது பாசத்தை வைத்திருக்கும் மதிப்பிற்குரிய என்னுடைய அருமை நண்பர் கலைஞர் அவர்களுடன் பேசிய பிறகு உங்களுடன் பேசுகிறேன்.
முதலில், உங்களிடம் பேசாமல் இருந்ததற்கு மன்னிக்கவும். இந்த விஞ்ஞான உலகத்தில் கூட, எந்த விளையாட்டை விளையாடினாலும், காசை மேலே தூக்கிப் போட்டு ஆட்டத்தை யார் முதலில் விளையாடுவது என்று முடிவு செய்கிறார்கள். காசை மேலே தூக்கிப் போடுவதான் மனிதனுடைய வேலை.
பூவாக விழுவதா, தலையாக விழுவதா என்பது ஆண்டவனுடைய செயல். என்னுடைய இந்த விளையாட்டில் ஒரு பக்கம் பணம், விஞ்ஞானம் மருத்துவம், உலகத்திலேயே மிகச்சிறந்த மருத்துவர்கள் இருக்க…. இன்னொரு பக்கம், நான் நலம் அடைய கடவுள் பிரார்த்தனை, பூஜைகள், ஹோமங்கள், விரதங்கள்தான் என்னை காப்பாற்றியது என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நான் நம்புகிறேன்.
ரஜினிக்கு எவ்வளவு மக்கள் அன்பு இருக்கிறது என்று உலகத்திற்கு காட்டி விட்டீர்கள். நான் இப்பொழுது குணம் அடைந்து கொண்டு இருக்கிறேன் என்றால் நீங்கள் எல்லோரும் என் மீது வைத்திருக்கின்ற அன்பு தான் காரணம். என்னை ஒரு அண்ணனாக, தம்பியாக, நண்பனாக, உங்கள் வீட்டு ஒரு பிள்ளையாக நினைத்து எனக்கு செய்த பூஜைகள் தான் காரணம்.
ஜென்ம ஜென்மத்திற்கும் உங்களுடைய அன்பை என்றும் மறக்க மாட்டேன். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இனிமேல், உங்களை மகிழ வைப்பது தான் என்னுடைய லட்சியம். கூடிய விரைவில், ராணாவில் உங்களை மகிழ வைக்க தோன்றுகிறேன். நான் உங்களுடைய எல்லா நன்மைக்காக ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளர்.
இரண்டாவது மகாத்மா மண்டேலாவா... மகிந்தாவா? - பாலாவின் கிண்டல்
உலகமே போர்க்குற்றவாளி என்று கூறி ஒதுக்க முயலும் ஒரு ஆட்சியாளரை, இந்தியா மட்டும் எந்த அளவு தாங்கிப் பிடிக்கிறது என்பதைக் காட்ட பாலா என்ற படைப்பாளி ஒரு காட்சி வைத்திருக்கிறார் அவன் இவனில்.
டுடோரியல் கல்லூரி வகுப்பறையில் மாணவர்களுக்கு டிக்டேஷன் வைக்கும் ஆசிரியர் இப்படிக் கேட்பார்:
"உலகில் இரண்டாம் மகாத்மா எனப்படுவர்... அ) நெல்சன் மண்டேலா ஆ) மகிந்தா ராஜபக்சே" என்று கூறிவிட்டு, எது சரியான விடை என்று கேட்பார்.
மாணவர்கள் சற்று நேரம் யோசித்துவிட்டு, அ) நெல்சன் மண்டேலா என்பார்கள்.
உடனே அந்த ஆசிரியர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு, "ஏசப்பா... கோடானுகோடி நன்றிகள் ஏசப்பா... கோடானு கோடி நன்றிகள்", என்பார். கொஞ்சம் விட்டால், மகிந்தாவையும் மகாத்மாவுக்கும் முயற்சி நடப்பதை இத்தனை நாசூக்காக பாலாவால் மட்டும்தான் சொல்ல முடியும்.
அவன் இவன் படம் பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் மவுனித்து, ஆர்ப்பரித்த காட்சிகளில் இதுவும் ஒன்று.
விஜய் படத் தயாரிப்பாளருக்கு ரூ 5 லட்சம் அபராதம்!
கோத்ரேஜ் சாரா லீ என்ற நிறுவனம், ஹிட் என்ற பூச்சி மருந்தை தயாரிக்கிறது. இது கொசு, கரப்பான் பூச்சிகளை ஒழிப்பதற்காக தயாரிக்கப்படுவது.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் டித்து பேரரசு இயக்கிய திருப்பாச்சி படம் 2005-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து சில நாட்களில் சூப்பர் குட் பிலிம்ஸ் மீது கோத்ரேஜ் சாரா லீ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதில், "கொசு, கரப்பான் பூச்சி போன்றவற்றை தடுப்பதற்காக ஹிட் மருந்தை நாங்கள் தயாரிக்கிறோம். இந்த நிலையில் `திருப்பாச்சி' படத்தை பார்த்தோம். அதில் இந்த பூச்சி மருந்தைப் பற்றி 2 காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த காட்சிகள் அதிர்ச்சி அளித்தன.
கர்ப்பிணியைக் கூட கொல்லும்...
ஒரு காட்சியில், 'இந்த மருந்து, கருவில் உள்ள குழந்தையைக் கூட கொல்லும்' என்று ஒரு கர்ப்பிணியிடம் ஒருவர் கூறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.
மற்றொரு காட்சியில், வில்லனின் வாயில் ஹிட் மருந்தை அடித்து அவரை ஹீரோ கொலை செய்வதுபோல் காட்டப்படுகிறது. இப்படி இந்த மருந்தை சித்தரித்திருப்பது தவறானது.
ரூ.25 லட்சம் நஷ்டஈடு
மனித உயிர்களுக்கு இந்த மருந்தால் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் `திருப்பாச்சி' படத்தில் விதாண்டாவாதமாக கூறப்படும் கருத்தை ஏற்க முடியாது.
எனவே இந்த மருந்தை பற்றி 'திருப்பாச்சி' படத்தில் வரும் காட்சிகளை தியேட்டரிலோ, சி.டி.களிலோ, டி.வி.களிலோ, கேபிள்களிலோ ஒளிபரப்பப் தடை விதிக்க வேண்டும். இந்த காட்சிகளால் மருந்து வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்புக்கான நஷ்ட ஈடாக ரூ.25 லட்சம் தர சூப்பர் குட் பிலிம்ஸ்-க்கு உத்தரவிட வேண்டும்.
இது போன்ற காட்சிகளை வேறு யாரும் பின்பற்றக்கூடாது என்பதற்கு முன்னெச்சரிக்கையாக நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இடைக்கால உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.பழனிவேல் பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கு விசாரணையின் போது அந்த காட்சிகளுக்கு ஏற்கனவே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு தமிழகத்தில் சில தியேட்டர்களில் மட்டும் அந்த காட்சியை நீக்கி படத்தை திரையிட்டனர். ஆனால் பெரும்பாலான தியேட்டர்களில் அந்த காட்சி நீக்கப்படாமல் திரையிடப்பட்டது.
ரூ.5 லட்சம் கொடுங்கள்
இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகும் தொடர்ந்து அந்த காட்சிகளை காட்டியது, மனுதாரரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாய் அமைந்திருந்தது. எனவே மனுதாரருக்கு நஷ்டஈடாக ரூ.5 லட்சத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் வழங்க வேண்டும்.
மனுதாரரின் தயாரிப்பான இந்த மருந்துக்கு, மத்திய அரசின் தரச்சான்று தரப்பட்டுள்ளது. மனித உயிருக்கு பாதுகாப்பானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்தக் காட்சிகள், அந்த மருந்தின் புகழை கெடுப்பதுபோல் அமைந்து விட்டது.," என்று கூறப்பட்டுள்ளது.
மக்கள் இயக்கம் துவங்கும் சூர்யா!!
பிலிம் சேம்பரில் நடந்த இந்த விழாவில் அவர் பேசுகையில், "சமூக சேவை பணிகள் செய்வதற்கு என் தந்தை சிவகுமார் தூண்டு கோலாக உள்ளார். 32 வருடங்களாக ஏழைகளுக்கு அவர் உதவிகள் வழங்கி வருகிறார். 25 வருடங்களுக்கு முன்பு அப்பொறுப்பை நான் ஏற்றேன்.
எதிர்காலத்தில் இது மேலும் விரிவுபடுத்தப்படும். அடித் தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு முடிந்த பணிகளை செய்வோம்.
எங்கள் அறக்கட்டளை மூலம் பண உதவி மட்டுமின்றி மாணவர்கள் சமூகத்தை தன்னம்பிக்கையோடு எதிர் கொள்ள தேவையான பயிற்சிகளையும் நிபுணர்கள் உதவியோடு செய்து வருகிறது.
இதை எதிர்காலத்தில் தன்னார்வலர்களின் உதவியோடு மக்கள் இயக்கமாக மாற்றும் எண்ணமிருக்கிறது," என்றார்.
ஏற்கெனவே நிதி உதவி என்று ஆரம்பித்து, இப்போது மக்கள் இயக்கம், அடுத்து அரசியல் இயக்கம் என்று வந்து நிற்கிறார் நடிகர் விஜய். இப்போது கிட்டத்தட்ட இதே பாணியில் மக்கள் இயக்கம் துவங்கத் தயாராகிவருகிறார் சூர்யா.
அருண் விஜய்யின் 'மானப் பிரச்சனை'-பிராச்சி தேசாய்க்கு நோட்டீஸ்!!
'அதிலும் அருண் விஜய் 'ராசி' காரணமாகத்தான் பிய்ச்சிக்கிட்டு ஓடிட்டார்' என மீடியாவில் செய்தி பரவ, உடனடியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அருண்.
தடையற தாக்க என்ற படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இதில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை பிராச்சி தேசாயை ஒப்பந்தம் செய்தனர். இதற்காக அட்வான்ஸும் கொடுக்கப்பட்டது. படப்பிடிப்புக்காக சென்னை வந்த அவர் ஒருநாள் தங்கி இருந்தார். மறுநாள் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி விட்டு மும்பை பறந்து விட்டாராம்.
இதனால் படப்பிடிப்பு நின்று போனது. தயாரிப்பாளரும், இயக்குனரும் பலதடவை அவரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. நேரில் சென்றும் சந்திக்க முடியவில்லை. இதையடுத்து பிராச்சி தேசாய்க்கு அருண்விஜய் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
படத்தில் நடிக்காததற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து அருண்விஜய் கூறும்போது, பிராச்சி தேசாயால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போட்ட செட்களை எல்லாம் கலைத்தோம் (வேறு நடிகையை வைத்து எடுப்பதுதானே... இதற்காக ஏன் செட்களைக் கலைத்தார்?!). இதர நடிகர், நடிகைகளின் கால்ஷீட்களிலும் பிரச்சினைகள் ஏற்பட்டன.
இந்த நஷ்டத்துக்கு அவர் பொறுப்பு ஏற்க வேண்டும்," என்றார்.
ஜூன் 30ஆம் நாள் மேலும பலர் சிறீலங்காவிற்கு நாடு கடத்தப்பட இருக்கின்றனர்
அரசியல் தஞ்சம் கோருவோர் கொழும்பிற்கு திருப்பி அனுப்பினால் அவர்கள் அங்கு வதைகளுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படும் நிலையில் (16-06-2011) ஒரு தொகுதி அடைக்கல தஞ்சவாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மற்றொரு தொகுதியினர் எதிர்வரும் 30ஆம் நாள் திருப்பி அனுப்பி வைக்கப்பட இருப்பதாக இந்த அமைப்பு எச்சரிக்கை செய்திருக்கின்றது.
சிறீலங்காவில் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு பிரித்தானியாவில் அடைக்கலத் தஞ்சம் கோரிய பல நூற்றுக் கணக்கானவர்களுக்கு மருத்துவ ஆலோசனையும், அடிப்படை மருத்துவ வசதிகளையும் செய்துகொடுத்துவரும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள இத்தகவல் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.
கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் இலங்கையில் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அடைக்கலம் கோரியிருந்த 334 பேருக்கு இந்த அமைப்பு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி இருக்கின்றது.
இதேவேளை, நேற்று லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களிள் எண்ணிக்கை தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருவதுடன்;, கட்டுநாயக்க கொண்டு செல்லப்பட்ட இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்களா என்பதை இன்று இரவுவரை உறுதிப்படுத்த முடியாமல் இருக்கின்றது.
வானூர்தியில் பலவந்தமாக ஏற்றப்பட்டு பின்னர் தடுப்பு முகாம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞன் ஒருவரது தகவலின் அடிப்படையில், ஆண்கள் 48 பேரும், பெண்கள் 6 பேரும் இந்த வானூர்தியில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால் 40 இற்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் கூறுகின்றன.
இதேவேளை, 27 மட்டுமே லண்டனில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, கட்டுநாயக்க வானூர்தி நிலைய காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். தன்னுடன் சேர்ந்து 29 பேர் வானூர்தியில் வந்ததாக திருகோணமலையைச் சேர்ந்த சஞ்சீவன் என்ற இளைஞன் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
சரியான எண்ணிக்கையை வெளியிட பிரித்தானிய எல்லைக்கட்டுப்பாட்டு முகவர் அமைப்பும், கொழும்பின் புலனாய்வு மற்றும் காவல்துறையினரும் மறுத்துவரும் பின்புலத்தில், கொழும்பு சென்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக, சிறீலங்கா காவல்துறைப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இருந்த போதிலும், 20 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டதாகவும், ஏரனயவர்கள் மீகமுவ தடுப்பு முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.
(16-06-2011) திருப்பி அனுப்பி வைக்கப்பட இருந்தவர்களில் சிலர் இங்குள்ள அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தனி நபர்களின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதேபோன்று, எதிர்வரும் 30ஆம் நாள் திருப்பி அனுப்பி வைக்கப்பட இருப்பவர்களைத் தடுத்து நிறுத்தவும், அரசியல் தஞ்சம் கோரியவர்களை திருப்பி அனுப்பாது இருக்கவும், மேலும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காதல் கதைகள்தான் எடுபடும் : டி.ராஜேந்தர்
6/18/2011 10:39:18 AM
'சென்டிமென்ட் கதைகள் எடுபடாது. இனி, காதல் கதைகள்தான் ஹிட்டாகும்' என்று டி.ராஜேந்தர் பேசினார். ஏ.ஜி என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆர்.குணசேகரன், கே.என்.ஆதிநாராயணன் தயாரிக்கும் படம், 'டூ'. சஞ்சய் ஹீரோ. சுமித்ரா மகள் நட்சத்திரா ஹீரோயின். ஒளிப்பதிவு, சி.ஆர்.மாறவர்மன். இசை, அபிஷேக்-லாரன்ஸ். பாடல்கள்: நா.முத்துக்குமார், யுகபாரதி, ஜி.குமார். ஸ்ரீராம் பத்மநாபன் இயக்குகிறார். இப்படத்தின் பாடலை வெளியிட்டு, டி.ராஜேந்தர் பேசியதாவது: நான் கோடியை நம்பி படம் எடுக்க வந்தவன் அல்ல. தாடியை நம்பி படம் எடுத்தவன். 'ஒருதலை ராகம்' படத்துக்கு 108 பாட்டுகள் போட்டேன். ஒரு பாடலில் 9 குரல்கள் தேவைப்பட்டது. நானே குரல் மாற்றி பாடினேன். யாருக்காவது அது தெரியுமா? 10 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட அப்படம், 15 கோடி வரை வசூல் செய்தது. 'ரயில் பயணங்களில்' படத்தை 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் எடுத்தேன். அது, அப்போதைய ரஜினி படத்தின் கலெக்ஷனை தாண்டி வசூல் செய்தது. 'நெஞ்சில் ஒரு ராகம்' படத்தையும் குறைந்த செலவில் உருவாக்கினோம்.
இப்போது சினிமாவின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அப்போது என் படங்களுக்கு பிரமாண்ட செட்கள் போட்டேன். 500 கார்பென்டர்கள் பணியாற்றினார்கள். இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. கோடம்பாக்கத்தில் இருந்த சினிமா, இப்போது தேனிக்கும், ஆண்டிப்பட்டிக்கும் சென்றுவிட்டது. தொழில்நுட்பங்கள் அதிவேகமாக மாறியதற்கு ஏற்ப நாமும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். சின்சியாரிட்டியும், கடின உழைப்பும் இருந்தால் சினிமாவில் ஜெயிக்கலாம். சப்ஜெக்ட் வித்தியாசமாக இருந்தால் மட்டுமே படம் வெற்றிபெறும்.
இதற்கு 'களவாணி', 'மைனா' படங்களை உதாரணம் சொல்லலாம். இப்போது வயதானவர்களும், பெண்களும் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பது இல்லை. இந்நிலையில் 'என் தங்கை கல்யாணி'யையோ, 'தங்கைக்கோர் கீதம்' படத்தையோ என்னால் தர முடியாது.
தியேட்டருக்கு வரும் இளைஞர்களின் மனதைக் கவர வேண்டும் என்றால், காதலை நக்கலாகவும், லொள்ளாகவும் சொல்லும் படத்தை தர வேண்டும். இப்போது நான் இயக்கும் 'ஒருதலைக் காதல்', இளைஞர்களுக்கான காதல் கதையாக உருவாகிறது. இனி, சென்டிமென்ட் கதைகளை படமாக்க மாட்டேன். இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார். விழாவில் கே.ஆர்.ஜி., ஆர்.பி.சவுத்ரி, கேயார், பட்டியல் சேகர், ஆர்.கே.செல்வமணி, வசந்த், தனஞ்செயன், சுமித்ரா, கிருஷ்ணா, சோனியா அகர்வால், சற்குணம், யுகபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
என் நடிப்பை கண்டு வியப்பார்கள்
6/18/2011 10:34:38 AM
தீபா மேத்தா இயக்கும், 'மிட்நைட் சில்ரன்' படத்தில் என் நடிப்பை கண்டு எல்லாரும் வியப்பார்கள் என்றார் ஸ்ரேயா. சல்மான் ருஷ்டியின் 'மிட்நைட் சில்ரன்' நாவலை படமாக இயக்குகிறார் தீபா மேத்தா. இந்த ஆங்கிலப் படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா கூறியதாவது: இந்த படத்தில் குடிசைப் பகுதிப் பெண்ணாக நடித்துள்ளேன். என் உடை, மேனரிசம் நடிப்பு எல்லாமே இதுவரை பார்த்திராததாக இருக்கும். வழக்கமாக கிளாமர் ஸ்ரேயாவைதான் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இதில் என் நடிப்பை பார்த்துக் கண்டிப்பாக வியப்பார்கள். என்னாலும் கேரக்டராக மாறி நடிக்க முடியும் என்பதற்கு இந்தப் படம் உதாரணமாக இருக்கும். எந்த படத்தில் நடித்தாலும் அதில் நூறு சதவிகித உழைப்பை கொடுக்கிறேன். ஆனால், என்ன கேரக்டர் வருகிறது என்பதை பொறுத்துதான் நடிப்பு பேசப்படும். தமிழில் சிறந்த இயக்குனர்களோடு பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். என்னாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபிக்க ஆவலாக உள்ளேன். அதற்கான சந்தர்ப்பத்துக்கு காத்திருக்கிறேன். இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.
காதலுக்காக மல்லுக்கட்டும் ஹீரோ!
6/18/2011 10:29:21 AM
தி பிலிம் கம்பெனி சார்பில் டி.டி.பிரதாபன், எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம், 'மல்லுக்கட்டு'. தனுஷின் சித்தப்பா மகன் வருண் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜோடி, ஹனிரோஸ். மற்றும் பரத் ரெட்டி, சபேஷ் கார்த்திக், செவ்வாழை, சாதிகா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சி.பிரேம்குமார். இசை, தாஜ்நூர். பாடல்கள்: வாலி, கபிலன், சினேகன், ஆண்டாள் பிரியதர்ஷினி. த.முருகானந்தம் இயக்குகிறார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தங்களது திறமைகளை, அடையாளங்களை பதிய வைக்கவும் மற்றும் எண்ணங்களை, லட்சியங்களை செயல்படுத்தவும் கடுமையாகப் போராடுகின்றனர். போராட்டம் என்பதன் இன்னொரு அர்த்தம், மல்லுக்கட்டு. காதலுக்காக, அதனுடைய வெற்றிக்காகப் போராடும் இளைஞனின் கதையாக இப்படம் உருவாகிறது.
நான் அதிர்ஷ்டக்காரி : அசின்!
6/18/2011 10:27:25 AM
சினிமாவில் எனக்கு கிடைத்திருக்கிற வாய்ப்புகளும் இடமும் நான் அதிர்ஷ்டக்காரி என்பதையே காட்டுகிறது என அசின் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: அமீர்கானுடன் இந்தியில் அறிமுகமானேன். அடுத்து சல்மான் கானுடன் நடித்தேன். இப்போது அக்ஷய் குமாருடன் நடிக்க இருக்கிறேன். இதையடுத்து ஷாரூக் கானுடன் நடிக்க உள்ளேன். இந்தி பட உலகின் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு, திறமைக்கானது. திறமை, ஒழுக்கம் இருந்தாலும் சினிமாவில் இன்னொன்றும் தேவைப்படுகிறது. அதை அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம். அல்லது நம்மை சுற்றி இருக்கிற நல்லவர்களின் ஆசி என எடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் இப்படியொரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்காது என்றே நினைக்கிறேன். அந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரி. இவ்வாறு அசின் கூறினார்.
180ல் போர்ச்சுக்கீசிய பாடல்
6/18/2011 10:26:15 AM
சித்தார்த், பிரியா ஆனந்த், நித்யா மேனன் நடிக்கும் '180' படத்தில் போர்ச்சுக்கீசிய பாடல் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தப் படத்தின் இயக்குனர் ஜெயேந்திரா கூறியதாவது: படத்தின் கதை ஒரு பகுதி பிரேசிலில் நடக்கிறது. அங்கு ஹீரோ பிரேசில் இளைஞர்களோடு உற்சாகமாக ஆடிப்பாடுவது மாதிரியான காட்சி வருகிறது. இதில் புதிய முயற்சியாக அந்நாட்டு மொழியில் பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தோம். பிரேசில் நாட்டு மக்கள் போர்ச்சுக்கீசிய மொழி பேசுவதால் அந்த மொழியில் பாடல் அமைக்க முடிவு செய்தோம். பாடலாசிரியர் கார்க்கி கூகுள் டிரான்ஸ்லேட்டர் உதவியுடன் பாடலை எழுதினார். எலியப் டி ப்ரைட்டாஸ் என்பவர் பாடியுள்ளார். இந்த பாடல் 5 நிமிடங்கள் இடம்பெறுகிறது.
கன்னட மைனாவில் சனுஷா
6/18/2011 10:25:00 AM
பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த், அமலா பால் நடித்த படம் 'மைனா'. தமிழில் ஹிட்டான இந்தப் படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. கே.மஞ்சு தயாரிக்கும் இந்தப் படத்தை எஸ்.நாராயண் இயக்குகிறார். கணேஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக அமலா பால் நடிப்பதாக இருந்தது. இப்போது அவருக்கு பதில் 'ரேனிகுண்டா' சனுஷா நடிக்கிறார். அமலா பால் நீக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. கன்னடத்தில் 'ஷைலு' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங், வரும் 24-ம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.
தமிழர்கள் மீதான தாக்குதல் இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: தங்கபாலு
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய தடியடி தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரிய செயலாகும்.
அங்கு 26 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இந்நேரத்தில் தமிழர்கள் வாழும் முக்கிய பகுதியான யாழ்ப்பாணத்தில் தமிழர்களை அச்சுறுத்தவே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக அஞ்சப்படுகிறது.
ஜனநாயக முறைப்படி நடைபெறும் உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலை சீர்குலைக்க எத்தனிக்கும் இலங்கை அரசின் இப்போக்கு ஜனநாயகத்திற்கு விடும் சவாலாகும். அமைதியாக நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது சீருடை அணிந்த இராணுவத்தினர் காரணமின்றி தடியடி நடத்தி விரட்டியுள்ள செயல் மனிதாபிமானமற்ற சர்வாதிகாரத்தனமாகும்.
பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பதால் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்கே பாதுகாப்பில்லை என்ற நிலை இருக்கிறபோது பொதுமக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது.
எனவே இலங்கை தமிழர்களுக்கு எதிராக சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்து விடும் இலங்கை ராஜபக்சே அரசின் போக்கை இந்திய அரசு தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று பிரதமர் மன்மோகன் சிங்கை பெரிதும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரைவில் உங்களை மகிழ்விக்க வருவேன்: ரஜினிகாந்த் கடிதம்
சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகி அந்த நாட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டுள்ள ரஜினி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் அன்பார்ந்த ரசிகர்களுக்கு, பேனா, பேப்பர் எடுத்து எழுதும் போது வார்த்தைகள் வரவில்லை. எனக்கு, தமிழக அரசு எந்த நேரத்திலும் எந்த உதவியையும் செய்ய, எனக்கு உறுதிமொழி கொடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும், என்றுமே என் மீது பாசத்தை வைத்திருக்கும் மதிப்பிற்குரிய என்னுடைய அருமை நண்பர் கலைஞர் அவர்களுடன் பேசிய பிறகு உங்களுடன் பேசுகிறேன்.
முதலில், உங்களிடம் பேசாமல் இருந்ததற்கு மன்னிக்கவும். இந்த விஞ்ஞான உலகத்தில் கூட, எந்த விளையாட்டை விளையாடினாலும், காசை மேலே தூக்கிப் போட்டு ஆட்டத்தை யார் முதலில் விளையாடுவது என்று முடிவு செய்கிறார்கள். காசை மேலே தூக்கிப் போடுவதான் மனிதனுடைய வேலை.
பூவாக விழுவதா, தலையாக விழுவதா என்பது ஆண்டவனுடைய செயல். என்னுடைய இந்த விளையாட்டில் ஒரு பக்கம் பணம், விஞ்ஞானம் மருத்துவம், உலகத்திலேயே மிகச்சிறந்த மருத்துவர்கள் இருக்க.... இன்னொரு பக்கம், நான் நலம் அடைய கடவுள் பிரார்த்தனை, பூஜைகள், ஹோமங்கள், விரதங்கள்தான் என்னை காப்பாற்றியது என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நான் நம்புகிறேன்.
ரஜினிக்கு எவ்வளவு மக்கள் அன்பு இருக்கிறது என்று உலகத்திற்கு காட்டி விட்டீர்கள். நான் இப்பொழுது குணம் அடைந்து கொண்டு இருக்கிறேன் என்றால் நீங்கள் எல்லோரும் என் மீது வைத்திருக்கின்ற அன்பு தான் காரணம். என்னை ஒரு அண்ணனாக, தம்பியாக, நண்பனாக, உங்கள் வீட்டு ஒரு பிள்ளையாக நினைத்து எனக்கு செய்த பூஜைகள் தான் காரணம்.
ஜென்ம ஜென்மத்திற்கும் உங்களுடைய அன்பை என்றும் மறக்க மாட்டேன். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இனிமேல், உங்களை மகிழ வைப்பது தான் என்னுடைய லட்சியம். கூடிய விரைவில், ராணாவில் உங்களை மகிழ வைக்க தோன்றுகிறேன். நான் உங்களுடைய எல்லா நன்மைக்காக ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளர்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழீழ அரசாங்கம்!
சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம், பிரித்தானிய அரசியல் மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை நா.த.அரசாங்கம் உத்தியோகபூவர்மாக அழைத்திருந்தது.
பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த உயர்மட்டக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயலர்கள் பலர் பங்கெடுத்திருந்தனர்.
ஐ.நா நிபுணர் குழு அறிக்கை, தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படும் விவாகாரம் ஆகியன முதன்மை விடயங்களாக விவாதிக்கப்பட்டன.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துரைகள் :
Labour கட்சியின் Mitcham - Morden தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh அவர்கள், சிறிலங்காவில் போர் குற்றங்கள் இடம்பெற்றமை வெட்டவெளிச்சமாகியுள்ள நிலையில், தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுகின்றமை, பிரித்தானியா அரசு எடுத்துள்ள தவறான முடிவென சுட்டிக்காட்டினார்.
Conservative கட்சியின் Ilford North தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Lee Scott கருத்துரைக்கையில், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களுக்கு, போதுமான ஆதாரமாக சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் உள்ளதென்றார்.
Labour கட்சியின் Ealing Southall தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Virendra Sharma கருத்துரைக்கையில், சனநாயகரீதியாக நிறுவப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை, ஒரு அரசாங்கத்துக்குரிய மரபுகளுடனேயே தான் நோக்குவதாகவும் ,இன்றைய கூட்டம் ஒரு அரசாங்க மட்டத்திலான கூட்டமாகவே தான் எண்ணுவதாகவும் தெரிவித்தார்.
Conservative கட்சியின் Croydon Central தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Gavin barwell கருத்துரைத்த போது, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற விவாகர குழுவின் ஊடாக, நாடாளுமன்றத்தில் தமிழர்களுடைய இனப்பிரச்னை குறித்து காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
நா.த.அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களின் கருத்துரைகள் :
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோற்றம் - செயற்பாடுகள் குறித்து விளக்கவுரை அளித்த, அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன் அவர்கள், தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்ட மௌனிப்புக்கு பின், போராட்டத்தின் நீட்சியாக சனநாயகவழி தோற்றம் பெற்றதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என தெரிவித்தார்.
தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதுடன், ஈழவிடுதலைப் போராட்டத்துக்கான சர்வதேச சட்ட அங்கீகாரத்தை பெறுவதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நோக்கமென தெரிவித்தார்.
போர் குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் விவகார அமைச்சர் டிலக்சன் மொறிஸ் உரையாற்றுகையில், தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருவது தி;ட்டமிட்ட இனக்சுத்திகரிப்பே என்றும் இதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளதெனவும் எடுத்துரைத்தார்.
தமிழினத்தின் பல்வேறு கூறுகளை அழித்துவரும் சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் ஒன்றின் சாட்சியமாகவே, சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் உள்ளதென சுட்டிக்காட்டினார்.
ஓரு சுயாதீனமான அனைத்துலக பொறிமுறையூடாக, தமிழர்களுடைய சுதந்திரத்துக்கு உலகம் உதவவேண்டுமென கேட்டுக் கொண்ட அமைச்சர், ஐ.நா நிபுணர் குழுவின் பரி;ந்துரையை நடைமுறைப்படுத்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
தமிழ்அதிகள் திருப்பி அனுப்பப்படும் விவாகாரம் குறித்து உரையாற்றிய உள்துறை அமைச்சின், பிரித்தானிய செயலர் வாசுகி முருகதாஸ் அவர்கள், இலங்கையில் மனிதர்களை, தனிநபர்களாக சிறிலங்கா அரசு அணுகுவதில்லை எனவும், இனரீதியாக அணுகும் சிங்கள அரசு, தமிழர்கள் என்ற அடிப்படையிலேயே அணுகுவதாக சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், தமிழர்களுக்கு தொடர்சியான உயிர் அச்சுறுத்தல்கள் உள்ள நிலையில், தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பப்படுதல் குறித்து பிரித்தானிய அரசு மீளாய்வு செய்யவேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் பங்கெடுத்திருந்த, உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் நாதம் ஊடகசேவைக்கு கருத்துரைக்கையில், தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை சனநாயகபூர்வ பிரதிபலித்து நிற்கின்ற ஓர் அரசாங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசினை, நாங்கள் பிரகடனப்படுத்தியிருக்கும் நிலையில், பிரித்தானிய நாடாளுமன்றத்துக்குள், இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கூட்டம் நடாத்துவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பு என்பது தமிழர்களுடைய அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள மறைமுக அங்கீகாரமாகவே கருத்தில் கொள்ளவேண்டுமென தெரிவித்தார்.
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
பான் கி மூன் பதவி காலம் 2016 வரை நீட்டிப்பு
ஐ.நா. சபை பொதுச் செயலராக இருந்து வரும் பான் கி மூன், தென் கொரியாவின் முன்னாள் அயலுறவுத்துறை அமைச்சராக இவரது பதவி காலம் வரும் டிசம்பர் மாதம் முடிகிறது.
இந்த நிலையில் 2012 ஜனவரி முதல் இவரது பதவிக் காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்க ஐ.நா. பாதுகாப்பு சபை முடிவு செய்து, ஐ.நா. பொதுச் சபைக்கு பரிந்துரை செய்துள்ளது.
192 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா. பொதுச் சபை பான் கி மூனை முறைப்படி மீண்டும் பொதுச் செயலாளராக தேர்ந்து எடுக்க ஏற்கனவே முடிவு செய்து இருந்ததாக ஐ.நா. சபை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி 2012 ஜனவரி 1ஆம் தேதி முதல் 2016 டிசம்பர் 31ஆம் தேதி வரை பான் கி மூன் ஐ.நா. சபை பொதுச் செயலர் பதவியில் நீடிப்பார்.
கிளிநொச்சிப் பகுதியில் இரவில் கேட்க்கும் பெண்கள் அவலக்குரல்!
இது குறித்து தெரியவருவதாவது:
சம்பவ இரவு 8.30 மணியளவில் கிளிநொச்சி நகரப் பகுதியில் இருந்து பரந்தன் பகுதி நோக்கி வேறு ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்த 26 வயது மதிக்கத்தக்க பெண் இரு இளைஞர்கள் தன்னை மறித்ததாகக் கூறிக் கூச்சலிட்டார். சம்பவத்தைக் கேட்டு அந்த இடத்துக்கு வந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் விசாரணை செய்தனர். குறித்த பெண் யாழ்.அச்சுவேலியைச் சேர்ந்தவர் என்றும், அக்கராயன் குளத்தில் இருந்து தனது இடத்துக்குச் செல்வதாகவும் கூறியுள்ளார்.
பஸ்ஸுக்காக கிளிநொச்சி டிப்போவில் நின்றதாகவும் அங்கு சில இளைஞர்கள் தொல்லை கொடுத்ததால் தான் வீதியால் நடந்து சென்றதாகவும் அப்போது ஒருவரின் மோட்டார் சைக்கிளை மறித்து ஏறிப் பரந்தன் நோக்கிச் சென்றதாகவும் தெரிவித்தார். இதன்போது கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்திக்கு அண்மையாக இரு இளைஞர்கள் தன்னை மறித்ததாகவும் அவர்களைக் கண்டு அச்சத்திலேயே தான் கூச்சலிட்டதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். அந்தப் பெண் தன்னை வழி மறித்ததாகக் கூறிய இரு இளைஞர்களும் தாம் குறித்த பெண்ணை மறிக்கவில்லை என்றும் வீதியால் வந்த நண்பர்களையே மறித்ததாகவும் தெரிவித்தனர்.
இவர்கள் நால்வரையும் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுவே இன்றைய கிளிநொச்சியின் நிலையாக உள்ளது.
மமஹிந்த ராஜபக்ஷ்வுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை!
பலாலி விமானத்தளத்தில் நீளமான ஓடுபாதை அமைக்க இந்தியா திட்டம்
பலாலி விமானத்தளத்தில் சரக்கு விமானங்களும் வந்திறங்கக்கூடியதகா 150 மீற்றர் நீளமான ஓடுபாதை அமைக்கப்படும் என்று யாழ் இந்தியத் துணைத்தூதரக தலைமை அதிகாரி வி.மகாலிங்கம் தெரிவித்தார்.
காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் காணப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிதைந்த கப்பலின் பாகங்கள் அகற்றப்பட்டதும் துறைமுக அபிவிருத்தியும் துரிதமாக முன்னெடுக்கப்படும் என்றும், அதுபோல் வட பகுதிக்கான ரயில் பாதையும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் துரிதமாக அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் புதிய விமானப் பயண முகவர் நிலையமொன்றின் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மிகவும் முக்கியமானது என்று இங்கு குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாணத்தை சுற்றுலாத்துறையில் பிரகாசிக்கும் பிரதேசமாக மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்திய அரசாங்கமும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
சனல் 4 காணொளிகள் கேரளாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டனவாம்
சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி இந்தியாவின் கேரளாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதென அரசாங்கத்துக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதென இன்றை திவயின சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளவை,
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிரஸ்தாப காணொளி போலியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட பின் சனல்4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து தெரிய வந்துள்ளது.
இந்தக் காணொளி வெளியாவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு முள்ளிவாய்க்கால் என்ற பெயரிலான திரைப்படமொன்று கேரளாவில் திரையிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, இத்திரைப்படம் தொடர்பில் இந்திய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்ததும் அத்திரைப்படம் மாயமாகி விட்டது.
செல்லிடத் தொலைபேசிகள் மூலமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் சனல் 4 காணொளிகள் வீடியோ கமெரா ஒன்றினாலேயே ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அதன் மூலப்பிரதி இருக்குமாயின் தங்களுக்கு வழங்குமாறு அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை நிறைவேற்றவோ, பதிலளிக்கவோ சனல் 4 தொலைக்காட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
தொலைக்காட்சி நிர்வாகத்தினர் அதனை இணையத்தளத்தில் தரவேற்றியுள்ளனர். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் பரிசோதனைக்கு உட்படுத்த அதனை வழங்காமலிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Friday 17 June 2011
திமுக ஆட்சியில் மூடப்பட்ட திரைப்பட நகரை மீண்டும் உருவாக்க வேண்டும் - கேயார்
சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த ஒரு பட விழாவில் பங்கேற்ற கேயார் பேசுகையில், “தமிழ்பட உலகில், 200-க்கும் மேற்பட்ட படங்கள் தயாராகி, திரைக்கு வராமல் முடங்கி கிடக்கின்றன. மேலும் 200 படங்கள் தயாராகி முடிவடையும் நிலையில் உள்ளன.
உற்பத்தியாளர்கள் பெருகி இருக்கிறார்கள். நுகர்வோர் குறைந்து விட்டார்கள். அதாவது பட தயாரிப்பாளர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். படங்களை திரையிடும் தியேட்டர்கள் குறைந்து விட்டன.
தமிழ்நாட்டில் முன்பு 2,800 தியேட்டர்கள் இருந்தன. இப்போது, 1,200 தியேட்டர்கள்தான் உள்ளன. மொழி மாற்று படங்களின் ஆதிக்கம் காரணமாக அசல் தமிழ் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை.
சிறு தியேட்டர்கள்…
சினிமா தியேட்டர்களுக்கு ‘லைசென்சு’ கொடுக்கும் முறையை எளிமைப்படுத்தினால், 100 பேர் அல்லது 150 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய தியேட்டர்கள் பெருகும். ‘கார் பார்க்கிங்’ வசதி உள்ள கட்டிடங்களில் எல்லாம் தியேட்டர்கள் உருவாகும் சூழ்நிலை ஏற்படும்.
எனவே தியேட்டர்களுக்கு எளிமையான முறையில் ‘லைசென்சு’ கிடைக்க அரசாங்கம் வழி வகை செய்ய வேண்டும். அப்படி செய்தால், தமிழ்நாட்டில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் தியேட்டர்கள் வரை உருவாகும்.
மீண்டும் திரைப்பட நகரம்
கடந்த ஆட்சியில் மூடப்பட்ட திரைப்பட நகரை மீண்டும் உருவாக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் முதலீடு செய்ய தேவையில்லை. முதலீடு செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இதன் மூலம் அரசாங்கத்துக்கும் வருமானம் வரும். தனியார் நிறுவனங்களுக்கும் வருமானம் வரும்,” என்றார்.
அவன் இவன்... திரண்டு வந்த நட்சத்திரங்கள்!
பொதுவாக இம்மாதிரி சிறப்புக் காட்சிகள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்குத்தான் பெரிய அளவில் நடக்கும்.
ஆனால் பாலா என்ற படைப்பாளிக்காக மட்டுமே, ரஜினி படத்துக்கு இணையான முக்கியத்துவம் அவன் இவனுக்குத் தரப்பட்டது. சென்னை ஏஜிஎஸ் மல்டிப்ளெக்ஸில் நடந்த இந்தப் படத்தின் பிரிமியர் ஷோவில், ஒட்டுமொத்த சினிமா உலகமே பங்கேற்றது என்றால் மிகையல்ல.
இயக்குநர் பாலா, கல்பாத்தி எஸ் அகோரம், அவன் இவன் நாயகிகள் மதுஷாலினி, ஜனனி, இயக்குநர்கள் வெற்றி மாறன், ராஜேஷ், ஹரி, சசி, மனோபாலா, பாண்டியராஜன், ‘எத்தன்’ சுரேஷ், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, ஜெயம் ரவி, பிரசன்னா, சினேகா, விவேக், பரத், திஷா பாண்டே, விதார்த், நாசர், சரண்யா பொன்வண்ணன், கவிஞர் நா முத்துக்குமார், அருண்விஜய் உள்பட ஏராளமானோர் வந்திருந்தனர்.
அனைவரையும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம் வரவேற்றார்.
அவதூறு வழக்கு: மோகன் லாலுக்கு ஜாமீன்
மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கம் கடந்த ஆண்டு மூத்த நடிகர் திலகனை சங்கத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்தது. அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு அளிக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.
மிகவும் பரபரப்பான இந்த சர்ச்சையில், நடிகர் திலகனுக்கு ஆதரவாக பிரபல எழுத்தாளர் சுகுமார் அழிகோடு செயல்பட்டார். அப்போது சுகுமார் அழிக்கோடை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவதூறாக விமர்சித்ததாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து மோகன்லால் மீது சுகுமார் அழிக்கோடு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் வருகிற 22-ந் தேதி மோகன்லால் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று திருச்சூர் தலைமை நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு பி.எஸ்.அந்தோணி உத்தரவிட்டு இருந்தார்.
ஆனால், முன்னதாகவே மோகன்லால் நேற்று கோர்ட்டில் ஆஜராகி, 22-ந் தேதி விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படியும், தனக்கு ஜாமீன் வழங்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு இரு நபர் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
நடிகை ஸ்வேதா மேனன் திருமணம்: காதலரை இன்று மணக்கிறார்!
மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சுவேதா மேனன். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வளாஞ்சேரி ஆகும். இவர் நடித்த ரதி நிர்வேதம் என்ற புதிய மலையாள திரைப்படம் கேரளாவில் சக்கைப் போடு போடுகிறது.
தற்போது மும்பையில் வசித்து வரும் இவருக்கும், மும்பையில், ஒரு வார இதழில் பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிவரும் ஸ்ரீவத்சன் மேனனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
அதன்படி, இன்று, வளாஞ்சேரி வடக்கும்புறத்தில் உள்ள இந்திரா சதன் என்ற வீட்டில் திருமண நிகழ்ச்சிகள் நடக்கின்றன. காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள் ஸ்ரீவத்சன் மேனன், நடிகை ஸ்வேதா கழுத்தில் தாலி கட்டுகிறார்.
மணமகன் ஸ்ரீவத்சனும், நடிகை சுவேதா மேனனும், பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் திருமணம் பற்றி சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த ஸ்வேதா, யாருடன் திருமணம் என்பதை இரண்டு ஆண்டு கழித்துதான் முடிவு செய்வேன் என்று கூறி வந்தது நினைவிருக்கலாம்!
கூட்டமைப்பின் மீதான தாக்குதல் 83 ஆம் ஆண்டு நிகழ்வை ஞாபகம் ஊட்டுகின்றது: சிறிதரன் எம்.பி
யாழ்ப்பாணம் அளவெட்டி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் கூட்டத்தின் போது கூட்டத்தில் புகுந்த சீருடை தரித்த குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே சிறிதரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
போர்க்குற்றங்களை மறைப்பதற்காக இவ்வாறான இராணுவக் கெடுபிடிகள் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இருந்து கருணாநிதியுடன் ரஜினிகாந்த் பேச்சு
சனல் 4 வகுத்துள்ள வியூகத்தின் மீதான துல்லியமான பார்வை!
சனல் 4 காட்சிகளைவிட அதன் கருத்தாக்கம் 21 ம் நூற்றாண்டின் நவீன ஜனநாயகக் கொள்கைகள் சார்ந்திருப்பதை அடையாளம் காணவேண்டியது தமிழர்களின் கடமை. ஐ.நாவின் தடைகளுக்கு அப்பால், நேட்டோவின் எல்லைகளை தாண்டி, புதிய ஜனநாயக உலகம் ஒன்றைத் தேடி 21ம் நூற்றாண்டின் அரசியல் விஞ்ஞானம் நடக்கத் தொடங்கியிருக்கிறது. அரசியல் கருங்காலிகளையும், கட்டாக்காலிகளையும் கழுவிச் செல்லப்போகும் தூரத்து அலையோசை சனல் 4ன் குரலில் கேட்கிறது. இனி அதனுடைய நோக்கங்களையும், கருத்தாக்கங்களையும் படிப்படியாகப் பார்ப்போம்.
அரசியலில் இருப்போர் பொய் பேசுவது மன்னிக்க முடியாத குற்றம்!
சிறீலங்காவின் அமைச்சர் ஒருவர் போர் முடிந்துவிட்டதாகவும், தமிழ்ப் பொது மக்களை சிங்கள இராணுவம் காப்பாற்றிவிட்டதாகவும் கருத்துரைக்கிறார். இவருடைய கருத்தை முன் வைக்கும் சனல் 4 அதன் பிறகு அவருடைய இராணுவம் நடாத்திய காட்டுமிராண்டித் தனங்களை வரன் முறையாகக் காட்டுகிறது. சிறீலங்கா அரசு சொல்வது ஒன்று செய்வது வேறொன்று என்பதை அது சிங்கள அமைச்சரின் செயல் மூலமாகவே நிறுவுகிறது.
சொந்த மக்கள் மீது குண்டு வீசுவது போர்க் குற்றம்!
ஒரு தடவையல்ல பல தடவைகள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது சிறீலங்கா படைகள் ஷெல் தாக்குதல் நடாத்தி காயப்பட்ட மக்களை கொன்று கொலை வெறியாடுகிறது. இராணுவத்தின் தாக்குதல் புலிகள் மீது மட்டுமல்ல, இராணுவம் பொது மக்கள்பற்றி யாதொரு கவலையும் கொள்ளவில்லை. தன்னுடைய இனம் இல்லை என்ற இன வெறுப்பை படையினரின் நடவடிக்கை தெளிவாகக் காட்டுகிறது. இது ஹிட்லரின் யூத இன அழிப்பு போன்ற செயல் என்பதை அப்பட்டமாக முன் வைக்கிறது காணொளி.
வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களைக் கொன்றது போர்க்குற்றம்!
நடேசன், புலித்தேவன் இருவரும் சிறீலங்கா அதிபரின் சம்மதத்துடன், ஐ.நாவின் அனுமதியுடன் சரணடைகிறார்கள். அதன் பின்னர் அவர்கள் கொன்று எரிக்கப்பட்டுள்ளார்கள். சிங்களப் படை அதிகாரி ஒருவர் கூறும்போது, அரச அதி உயர்மட்டத்தில் இருந்து கிடைத்த தகவலின்படியே அவர்களைத் தாம் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கிறார். ஐ.நாவின் சார்பில் செயற்பட்ட விஜய் நம்பியார் சிக்குப்படும் பொறிக் கிடங்கு இதுதான். கட்டுப்படுத்த முடியாத ஒரு நாட்டுக்கு உதவியது இந்தியா செய்த குற்றம்.
ஐ.நாவின் மெத்தனப் போக்கு மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம்!
இப்படியொரு போர்க் குற்றத்தை யார் செய்தார்கள்.. நாடற்ற பயங்கரவாதிகளா இல்லை.. ஐ.நாவில் அங்கத்துவம் வகிக்கும் ஒரு நாட்டின் படைகள் செய்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாட்டை ஐ.நா தனது அங்கத்துவ நாடாக கருத என்ன முகாந்திரம் இருக்கிறது. போர் நடந்தபோது ஐ.நா என்ன செய்தது.. ஒன்றுமே செய்யவில்லை.. போர் முடிந்து இரண்டு வருடங்கள் போய்விட்டன ஐ.நா என்ன செய்தது.. ஒன்றுமே செய்யவில்லை.. ஐ.நா என்ற தாபனத்தால் செய்ய முடியாத கருமங்களை செய்வதற்கு புதிதாக பிரான்ஸ் – இங்கிலாந்து தலைமையில் உருவான புதிய அணி நியாயமானது என்பதை அது மறைமுகமாக ஊர்ஜிதம் செய்கிறது.
பான் கி மூனின் இமாலயத்தவறு!
ஐ.நா செயலர் பான் கி மூன் இவ்வளவு பெரிய அவலம் நடக்க அந்த இடத்தை வெறும் 15 நிமிடங்கள் மட்டும் பார்த்து செல்கிறார். அந்த இடத்தில் ஒரு குறியீடு வருகிறது. இரத்தக் கடலிலும், பிணக்குவியலிலும் நின்று அவர் மாலைகளை ஏற்றுக் கொள்கிறார். அது போர்க்குற்றம் ஐ.நாவிற்குக் கிடைத்த வெற்றி என்ற இரட்டை அர்த்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இரத்தம் படிந்த கரங்களால் சிங்களம் போடும் மாலையை ஏற்கும் கேவலமான இடத்தில் ஐ.நா செயலர் இருந்தார் என்ற காட்சியை விவரித்து, ஐ.நாவிற்கு மாற்றீடு வேண்டும் என்ற உண்மையை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறது.
யுத்ததிற்கு துணைபோன நாடுகளின் சர்வதேச குற்றம்!
இன்றைய உலகில் விஞ்ஞானம் அமோகமாக வளர்ந்திருக்கிறது. பேரிடும் ஒரு பக்கத்திற்கு மட்டும் அளவுக்கு அதிகமான உதவிகளை வழங்குவது குற்றம். சீனாவின் விமானம், இஸ்ரேலின் விமானங்கள் இங்கே காட்டப்படுகின்றன. புலிகளும், அரசும் போரிடும்போது யுத்த சமநிலை குலைந்துள்ளது. இப்படிப்பட்ட சமநிலை குலைந்த யுத்தத்தை நடாத்துவது எப்படிப்பட்டது..? ஜப்பானில் அணுகுண்டு வீசியதற்கு இணையான குற்றம். இதற்கு உதவி புரிந்த அத்தனை நாடுகளும் இந்த குற்றத்திற்க்குள் வருகின்றன. யுத்தத்தை நிறுத்த விரும்பாத அவர்களுடைய செயல் போர்க் குற்றத்திற்கு துணைபோன செயலே.
கைகளை கட்டி கொலை செய்வது போர்க்குற்றம்!
சரணடையாமல்: தோல்வியடையாமல்: போர் புரிந்த, ஒருவருடைய கைகளை கட்ட முடியாது. போராளிகள் அனைவரும் கைகளைக் கட்டப்பட்ட பின்னர் சுடப்படுகிறார்கள். சரணடைந்த மனிதர்கள் மீது மரணதண்டனைத் தீர்ப்பளிக்க உலகில் எந்த நாட்டு இராணுவத்திற்கும் உரிமை கிடையாது. அத்தகைய செயல் செய்வோர் போர்க் குற்றவாளிகளே. இதற்கு ஏராளம் உதாரணங்களை அந்த ஒளிநாடா தருகிறது.
பொய்யான இராணுவத் தகவல் ஊர்ஜிதமாகிறது.
மட்டக்களப்பு தளபதி கேணல் ரமேஸ் போரில் கொல்லப்பட்டதாக சிறீலங்கா இராணுவ இணையம் கூறுகிறது. ஆனால் அவர் சிங்கள இராணுவத்தால் விசாரிக்கப்படுகிறார், பின் சித்திரவதை செய்து கொல்லப்பட்டு வீசப்படுகிறார். ஆகவே அரசு மட்டுமல்ல இராணுவமும் பொய்யான தகவல்களையே தந்துள்ளது.
கற்பழிப்பதும் போரும் ஒன்றல்ல.. அது மாபெரும் போர்க்குற்றம்!
இசைப்பிரியா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட புகைப்படங்களைக் காண முடிகிறது. மேலும் அங்கு ஒரு தாய் சாட்சியமளிக்கிறார், தானும் மகளும் ஒன்றாக பாலியல் வன்புணர்ச்சி கொள்ளப்பட்டதாகக் கூறுகிறார். தம்மோடு கைதான அத்தனை பெண்களும் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். ஆகவே பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றால் பாலியல் பலாத்காரமும் செய்யலாமென நினைக்கப்பட்டுள்ளது. அப்படியொரு அனுமதியை இராணுவத்திற்கு வழங்கிய உயர் பீடம் குற்றவாளியாகிறது. சிறீலங்கா இராணுவத்தின் ஒழுக்கக் கேடான பார்வையும், செயலும் தெளிவாகச் சித்தரிக்கப்படுகிறது.
இறந்தவர்களை மதிக்கத் தவறுவது மானிட விரோத செயல்
இறந்த சடலங்களை நிர்வாணமாக்கி அவை பற்றிய தூஷண வார்த்தைகளை பேசுவது மானிட குலத்திற்கே விரோதமான செயல். அதை சிங்கள இராணுவம் செய்துள்ளது. சடலங்களையே மதிக்கத் தெரியாத ஓர் அரசு எப்படி உயிருடன் இருக்கும் மனிதர்களுக்கு உரிமையை கொடுக்கும் என்பது அடுத்த கேள்வி. ( சிறீலங்கா அரசு தமிழருக்கான உரிமைகளை வழங்கினால் இதிலிருந்து தப்பலாம் என்று கூறிய தமிழர் கூட்டமைப்பு அக்கருத்தானது தனது அரசியல் எதிர் காலத்திற்கான சாவு மணி என்பதை உணரவில்லை )
சர்வதேச தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காதது குற்றம்.!
சர்வதேச தொண்டு நிறுவனங்களையும், ஊடகங்களையும் அப்பகுதியில் இருந்து விரட்டியடித்து, இருண்ட பிசாசு, பிணம் தின்னும் பேய்கள் நடாத்துவது போன்ற -டெவில் ஸ்ரேற்- போரை நடாத்தியது குற்றம். இதனால்தான் இதற்கு போர் என்று பெயரிடவில்லை, சிறீலங்காவின் கொலைக்களம் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு நாடு தனது சொந்த மக்களை இப்படி வகை தொகையின்றி அழிப்பது சந்தேகத்திற்கு இடமின்றி சர்வதேச போர்க் குற்றமே.
விடுதலைப் புலிகளையும் குற்றம் சுமத்துகிறது.
பொதுமக்களை கேடயமாக வைத்திருந்தது புலிகள் செய்த குற்றம். சிறுவர்களை கட்டாயமாக படையணியில் சேர்த்தது அவர்கள் செய்த மன்னிக்க முடியாத குற்றம். தப்பியோட முயன்ற தன் இன மக்கள் மீதே கரும்புலி தாக்குதலை நடாத்தியது மாபெரும் குற்றம். பெண்கள், குழந்தைகள் உட்பட பெருந்தொகை மக்களை புலிகளும் கொன்றொழித்திருக்கிறார்கள். இம்மக்கள் அனைவரும் சூரியக்கதிரின்போது புலிகளை நம்பி வன்னிக்கு வந்த மக்களே. தம்மை நம்பிய மக்களை கொன்றது குறைந்த குற்றமல்ல என்றும் அது தெளிவாகக் காட்டுகிறது. மக்களுக்காக மரணித்த மாவீரர்களின் தியாகங்களை இந்தச் செயலோடு பொதுமைப்படுத்த மனது பெரும் சங்கடப்படுவது உண்மை. ஆனால் புலிகளில் எல்லோரும் நல்லவரோ தியாகிகளோ அல்ல என்பதை தமிழர் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டிய நிலையை அது உருவாக்குகிறது. மக்கள் அழிந்தாலும் தாம் வாழ்ந்தால் சரியென புலிகளில் யாரோ ஒரு சிலர் நினைத்துள்ளார்கள்.
பறவைப் பார்வை..!
அ. இந்த ஒளி நாடவை பறவைப் பார்வையாக மேலிருந்து பார்த்தால் மகிந்தராஜபக்ஷ அன் கொம்பனி அரசியல் அரங்கில் இருந்து துடைத்து வீசப்படப் போகும் நாட்கள் தொலைவில் இல்லை என்பது தெரிகிறது.
ஆ. இனவாத சிங்களத்தைப் போலவே போர்க் குற்றத்திற்கு உள்ளான புலிகளும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாரிய சிக்கல்களை சந்திக்க நேரும் என்றும் தெரிகிறது. ( இது கொலன்ட்டில் ஆரம்பித்துள்ளது.)
இ. தமிழர் கூட்டமைப்பு தமிழருக்கு தலைமை தாங்க முடியாத நிலை வரும்.
ஈ. புலம் பெயர் தமிழர் இழைத்த தவறுகளுக்கும் பரிசு பெற வேண்டிய நிலை வரலாம்.
முற்றுமுழுதான ஜனநாயகத் தீவாக இலங்கையை மாற்றி, சட்டவாட்சியை நிலை நிறுத்தி, அனைத்து இனங்களும் சமமாக வாழும் நாடாக அதை மாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டதை ஒளி நாடா தெளிவாக உணர்த்துகிறது. எதிர் காலத்தில் சிறீலங்காவில் வரும் மாற்றம் இந்தியாவிலும் பிரதிபலிக்கும்.
ஈழத்தில் தமிழருக்கு நாடு வந்தால் அது இந்தியாவை பாதிக்கும் என்ற கருத்து இப்போது புது வடிவம் பெறப்போகிறது. ஒட்டுமொத்த சிறீலங்காவில் வரும் மாற்றம் இந்தியாவை எப்படிப் பாதிக்கும் என்பதை இதுவரை இந்திய இராஜதந்திரம் கணக்கிடவில்லை. அதை உணரும் நாட்கள் நெருங்குவதை இந்த ஒளிநாடா சொல்லாமலே போகிறது.
எவ்வாறாயினும்:
இந்த மாற்றங்கள் இன்று மாலைக்குள் நடக்காது, ஆனால் நடக்கப் போவது தெரிகிறது. சனல் 4 ஐ ஆழமாகப் பார்த்து, பிரான்சில் நடைபெற்ற உலக நாடுகளின் இந்த நூற்றாண்டுக்கான புதிய நிகழ்ச்சி நிரலையும் ஒப்பிட்டால் இதன் உண்மைகள் தெரியவரும்.
அலைகள் சனல் 4 மீதான நேர்மையான பார்வைகள் 17.06.2011
Labels
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா