ஆங்கிலப்படங்களில் காட்டு மிராண்டிகளிடம் சிக்குப்பட்ட ஒருவர் பலியெடுக்கப்படுவதைப்போல மோசமாக அவர் பலியெடுக்கப்படுகிறார். 42 வருடங்களாக தன்னிடம் அகப்பட்டவர்களை எப்படி மிருகத்தனமாக சித்திரவதை செய்தாரோ அதே வடிவத்தில் இப்போது தானே சித்திரவதையைச் சந்தித்துள்ளார்.
தனது தலையில் வழியும் இரத்தத்தை அவர் தடவிப் பார்த்து அதிர்ச்சியடையும் காட்சியும் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு சர்வாதிகாரிக்கும் காலம் கொடுக்கும் சிறந்த பரிசு இதுவாகும். மேலும் இவருடைய மரணம் குறித்து குழப்பமான செய்திகள் எதையும் வெளியிட முடியாதவாறு இந்த ஒளிப்படம் தெளிவான பதிலை தருகிறது.
அரசியல் அதிகாரத்தின் உச்சக்கட்ட பரிசை ஒரு சர்வாதிகாரி பெற்று விழும் கடைசிக் காட்சி இதுவாகும். இக்காட்சி இப்போது உலகில் உள்ள சர்வாதிகாரிகளுக்கும் இதுவே கதி என்பதைக் காட்டுகிறது. அதுபோல புதிய சர்வாதிகாரிகள் உருவாகாமல் தடுப்பதற்கு உதவக்கூடிய காணொளியாகவும் இருக்கிறது.
No comments:
Post a Comment